Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 சிங்களவர்களுக்கு சௌதி ஆரேபியா மரண தண்டனை

Featured Replies

4 இலங்கை வாலிபர்களுக்கு சௌதி மரண தண்டனை

பிப்ரவரி 19, 2007

ரியாத்: வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு கைதான இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர், சௌதி அரேபியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர்.

விக்டர் கொரியா, ரஞ்சித் சில்வா, சந்தோஷ்ய குமார், ஷர்மீளா குமாரா ஆகிய நான்கு பேருக்கும் ரியாத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நால்வரும், சௌதியில் பல இடங்களில் ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். சௌதியைச் சேர்ந்த ஒருவரின் காரைப் பறித்துக் கொண்டு அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சௌதி நீதிமன்றம், நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நான்கு பேரும் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு சௌதியில் 34 பேரும், 2005ல் 36 பேரும், 2004ல் 86 பேரும் மரண தண்டனைக்கு ஆளானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/02/19/youth.html

அரேபியாவில் மரண தண்டனையை நிறைவாற்றும் முறை மிகவும் கேவலமானது.

நீங்கள் கெளரவமானது எனக் கருதும் முறை எது?

கருநாய்க் கும்பலின் உறுப்பினர் ஒருவரைக் கொன்றதற்காக நான்கு தமிழருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தியை எங்கோ வாசித்தோம்.

சிங்களவரோ, தமிழரோ, இந்தியனோ, பாகிஸ்தானியோ Middle East பக்கம் கூலிக்கு மாறடித்து தொழிலுக்காய் செல்லும் போது தமது தலைகளைப் பாதுகாக்க பிரயாசைப்பட வேண்டாமோ? உப்படி Cheapஆகத் தலையை இழப்பானேன்? :icon_idea::rolleyes:<_<

நீங்கள் கெளரவமானது எனக் கருதும் முறை எது?

மரண தண்டனை கொடுப்பதி கௌரவமான முறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

தெருவிலே மக்கள் கூடியிருக்க வாளால் கழுத்தை வெட்டுவார்கள். தண்டனை பெறப்போகிறவரை இம்மக்கள் திட்டித் தீர்ப்பார்கள். அந்த அவமானத்திலேயே பாதி உயிர் போய்விடும். ஒரே வெட்டில் கழுத்து துண்டாடப் பட்டால் கூடியிருக்கும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். துடிக்கும் முண்டத்தை பார்த்து ரசிப்பார்கள். இல்லாவிட்டால் தண்டனை நிறைவேற்றுபவனை கேலி செய்வார்கள். இது என் நண்பன் ஒருவன் நேரில் கண்ட காட்சி. இது எனக்கு கேவலமாகத் தெரிந்தது. உங்களுக்கு எப்படி ?

பிழைக்கப் போகுமிடத்தில் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு மதிப்பாய் திரும்பி வரலாமே. ஏன் தேவையில்லாத சொறி வேலைகள். அவர்கள் தமது நாட்டு சட்டத்தைப் பாதுகாக்க ஏற்படுத்திய வழி முறையது. தவறு சொல்ல என்ன உரிமையிருக்கின்றது. இப்படியான பாரதூரமான சட்டமில்லாவிட்டால் அந்த நாட்டில் மனிதன் மனிதனையே கடித்து உண்பார்கள். அதிகமாக கழுத்தறுபடுகின்றவர்கள் வரிசையில் பாகிஸ்தானியர் தான் முதலிடம் வகிக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் பாலியல் வல்லுறவு, ஆபாசப் படம் எடுப்பது என்பவைகளால். சரியோ தவறோ அந்தச் சட்டம் அந்த நாட்டில் குற்றச் செயல்களை குறைத்துள்ளது.

ஈழத்திலிருந்து

ஜானா

யாரிடமாவது இது வீடியோவில் இருக்கின்றதா?

யாரிடமாவது இது வீடியோவில் இருக்கின்றதா?

ஏன் கத்தியால கத்தியால கழுத்தை எப்படி அறுக்கிறான் என்று பார்க்க ஆசையா இருக்கோ? சவுதிக்கு ஒருக்கால் போனா நேரிலேயே இந்தக் கண்றாவிகளை பார்க்கலாமே?

ஏன் கத்தியால கத்தியால கழுத்தை எப்படி அறுக்கிறான் என்று பார்க்க ஆசையா இருக்கோ?

ஆசை இல்லிங்க... வற்புறுத்தலுங்க!

சவுதிக்கு ஒருக்கால் போனா நேரிலேயே இந்தக் கண்றாவிகளை பார்க்கலாமே?

அது செலவுங்க....... வீடியொ இலவசமுங்க........

Edited by Panangkai

உலகில் ஒரு இயல்பு நிலைச் சமுதாயத்தில் மனிதனின் உயிரைப் பறிப்பதற்கு இன்னொரு மனிதனுக்கு உரிமையில்லை. எந்த ஒரு குற்றத்திற்கும் உயிரைப் பலியெடுப்பது தண்டனையாகாது. ஆனால் ஒரு குற்றவாளி மீண்டும் அதே குற்றத்தை அல்லது வேறு எந்தக் குற்றத்தையுமே செய்யாமல் இருக்கவேண்டுமானால் அந்தக் குற்றவாளியை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. சில வேளைகளில் ஒரு குற்றவாளியை 20 வருடங்கள் சிறையில் வைத்து காப்பாற்றுவதிலும் பார்க்க அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது செலவு குறைந்த மார்க்கமாயிருப்பதாலோ என்னவோ பல நாடுகள் இன்னும் மரண தண்டனை வழங்குவதைக் கைக்கொண்டு வருகின்றன. அதுவும் பொது இடத்தில் சனங்களுக்கு மத்தியில் வைத்து கழுத்தை வெட்டுவதால் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதென்பது பொது சனங்களுக்கு மத்தியில் ஒரு பய உணர்ச்சியை உருவாக்குவதற்காகவே கைக்கொள்ளப்படுகிறது.

பிழைக்கப் போகுமிடத்தில் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு மதிப்பாய் திரும்பி வரலாமே. ஏன் தேவையில்லாத சொறி வேலைகள். அவர்கள் தமது நாட்டு சட்டத்தைப் பாதுகாக்க ஏற்படுத்திய வழி முறையது. தவறு சொல்ல என்ன உரிமையிருக்கின்றது. இப்படியான பாரதூரமான சட்டமில்லாவிட்டால் அந்த நாட்டில் மனிதன் மனிதனையே கடித்து உண்பார்கள். அதிகமாக கழுத்தறுபடுகின்றவர்கள் வரிசையில் பாகிஸ்தானியர் தான் முதலிடம் வகிக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் பாலியல் வல்லுறவு, ஆபாசப் படம் எடுப்பது என்பவைகளால். சரியோ தவறோ அந்தச் சட்டம் அந்த நாட்டில் குற்றச் செயல்களை குறைத்துள்ளது.

ஈழத்திலிருந்து

ஜானா

சரியாகச் சொன்னீங்கள் ஜானா ஏன் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கூட சட்டமுறைகள் இறுக்கமாக உள்ளதால் தவறி செய்பவர்கள் விகிதம் மிகமிகமிக குறைவாக உள்ளது சட்டங்கள் மிகவும் முக்கியமானவை ... நான் வசிக்கும் சுவிற்சலாந்து நாடு ஒரு உதாரணம் ....சட்டத்திற்க்கு எல்லாரும் பயம் (இப்போ குறைவு ) என்றாலும் நாடு ஒழுங்கா இருக்கு...

எனவே அவர்கள் நாட்டு சட்டத்தின் பிரகாரம் அம்மான் மாரை போட்டது சரியே

அந்தநாட்டு சட்டத்திற்க்கு உட்பட்டு இருக்கவிரும்பினால் இருக்கலாம் அல்லது வெளியேற வேண்டியது தானே.....

யாரிடமாவது இது வீடியோவில் இருக்கின்றதா?

குத்தியனிட்டை இருக்கு தனிமடல் போட்டுக்கேளும் தருவார்

;)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஆராவது உப்பிடி தண்டனை பெற்றால் உடனே சிங்கள ஊடகங்களும், அரசாங்க ஊடகங்களும்(டெயிலி நியூஸ்), எட்டப்ப ஊடகங்களும் புலிகள் உறுப்பினர்களுக்கு தண்டனை என்று பொய்யான செய்தியினை தலைப்புச்செய்திகளாக இடுவார்கள். உப்பிடித்தான் அவுஸ்திரெலியாவில் வசித்த சிங்கப்பூரில் பிறந்த ஈழவம்சாவளித்தமிழனும்(இவர் ஈழம் என்றால் என்ன என்று கேப்பார்), வெள்ளைக்காரர்களும் ,சீனர்களும் போதைவஸ்து கடத்தும் போது இந்தோனேசியாவில் பிடிபட உந்த சிங்கள எட்டப்ப அரசாங்க ஊடகங்களில் புலிகள் உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் பிடிபட்டார்கள் என்று செய்தியினை தலைப்புச் செய்தியாக போட்டார்கள்.இதில் வேடிக்கை என்ன வென்றால் வெள்ளைக்காரர்களையும் சீனர்களையும் புலிகள் உறுப்பினராக சேர்த்துள்ளமைதான். லண்டன், கனடாவில் நடக்கும் கோஸ்டி மோதல்களில் ஈடுபடுபவர்களையும் புலிகள் உறுப்பினர்களாகவே இவ்வூடகங்கள் செய்தியாக வெளியிட்டுவந்தன. இதனைப் பார்த்தவுடன் தமிழகத்தில் தினமலர், தமிழன் எக்பிரஸ், இந்துப்பத்திரிகை. துக்ளக் போன்ற ஊடகங்களிலும் உடனே புலிகள் செய்ததாக செய்திகள் போடுவார்கள்.

:lol: என்னதான் நடக்குது?

சவுதியில் இப்படி சட்டம் இருக்கிறபடியால்தான் எத்தினை நாட்டு கள்வரை(பொருட்கள் மீது ஆசை கொண்டவர்களை)கட்டியாளுகிறார்

:lol: என்னதான் நடக்குது?

:angry: :angry: :angry:

கந்தருக்கு பார்ட்டி வைக்கிறம் ளொள்ளா பிச்சுப்போடுவன் பிச்சு

:angry: :angry: :angry: :angry:

ஐயோ ஐயோ றோயல் பமிலியின்ர மரியாதை கப்லேறுது

:lol:

Edited by sinnappu

  • கருத்துக்கள உறவுகள்

கந்தருக்கு பார்ட்டி வைக்கிறம் ளொள்ளா பிச்சுப்போடுவன் பிச்சு

:angry: :angry: :angry: :angry:

ஐயோ ஐயோ றோயல் பமிலியின்ர மரியாதை கப்லேறுது

:(

எனக்கு ஒரு டவுட்! எத்தனை காலமாக, ரசிகை, டண், எண்டு எல்லோரும் சேர்த்து மானத்தைப் பல தடவை கப்பலேத்தியும், என்னும் ஏத்துறதற்கு இருக்குதா? கணக்கில் எங்கோ, பிசகு! :lol::lol:

எனக்கு ஒரு டவுட்! எத்தனை காலமாக, ரசிகை, டண், எண்டு எல்லோரும் சேர்த்து மானத்தைப் பல தடவை கப்பலேத்தியும், என்னும் ஏத்துறதற்கு இருக்குதா? கணக்கில் எங்கோ, பிசகு! :lol::lol:

என்னை எப்பிடியும் மருதானையில இளனி விக்க வச்சிடுங்கோ

:angry: :angry: :angry: :angry: :angry:

குறுக்காலை போவார்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

என்ன உள் வீட்டு சதியா ??? கணக்குக் கேள்வி எல்லாம் வருது :angry:

:angry: :angry: :angry:

Edited by sinnappu

  • கருத்துக்கள உறவுகள்

என்னை எப்பிடியும் மருதானையில இளனி விக்க வச்சிடுங்கோ

:angry: :angry: :angry: :angry: :angry:

குறுக்காலை போவார்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

என்ன உள் வீட்டு சதியா ??? கணக்குக் கேள்வி எல்லாம் வருது :angry:

:angry: :angry: :angry:

உள்வீட்டுச் சதி ஒண்டுமில்லை. என்னும் மானம் இருக்குதோ எண்டு பார்த்தால் தானே, கப்பல் ஏத்துறதைப் பற்றி, நாங்கள் டிஸ்கஸ் பண்ணலாம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.