Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் புலிகளை ஆதரிக்கத் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு தமிழக அரசாங்கம் தடை

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு, தமிழக மாநில அரசாங்கம் அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மாநில பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட இந்தியாவில் தடை செய்யப்பட்ட சகல அமைபப்புக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கருத்து வெளியிடுவதற்கு, 1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் இன்று முதல் தமது அரசாங்கம் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

மாநில முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் தலைமையில், இன்று இடம்பெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தமிழக பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரைக் கூட்டங்களை ஒழுங்கு செய்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தல், உண்ணா நிலைப் போராட்டங்களில் ஈடுபடுதல் போன்றவை, தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்றும், தமிழக பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்கூறுவது சட்டவிரோதமானது அல்ல என்றும், எனினும் இது விடயத்தில் புதிய சட்ட நடைமுறைகளை கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாகவும், நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் கூறியிருந்த நிலையில், நேற்று இருபத்து நான்கு மணிநேரத்திற்குள், தமிழகத்தில் இதற்கான சட்ட நடைமுறைகளை கலைஞரின் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

நீதியை மதிக்காத காங்கிரஸ் கட்சியின் ஆணவப் போக்கிற்கு அடிபணிந்து, கருத்துரிமையை மறுக்கும் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் முற்படுவது, ஜனநாயக விரோதச் செயல் என்றும், இவ்வாறான நடவடிக்கைகளில் கலைஞர் ஈடுபடும் பட்சத்தில் சகல சனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து அதனை முறியடிப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி..! ஈழத்தமிழர்கள் செய்நன்றி மறக்க மாட்டார்கள்...!! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு திருமலை முல்லைத்தீவு கிளிநொச்சி மடு வன்னி யாழ்ப்பாணம் மலையகம் என்று தமிழ் மக்கள் சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால படுகொலை செய்யப்படேக்க ஒரு கண்டன அறிக்கை விடத் தைரியமில்லாதவை எல்லாம் எப்படி உலகத் தமிழினத்தின் தலைவர் ஆவினம். அவையா கற்பனை பண்ணிட்டு.. இருக்கிறதுக்கு நாங்க ஒன்றும் செய்ய ஏலாது..! :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

சில சர்ச்சைக்குரிய சொற்களைப் பாவிக்காமல் தமிழீழப் போராளிகளுக்கான ஆதரவைத் தொடர்ந்து கொடுக்கலாம். அதே நேரம் தடையை நீக்கக்கோரி ஜனநாயக ரீதியில ஆர்ப்பாட்டங்களைச் செய்யலாம். அதிலேயே ஆதரவைக் காட்டிப்போடலாம் எல்லாத்துக்கும் லொஜிக் இருக்குது. ஆனபடியால் கவலைப்படத்தேவையில்லை.

சில சர்ச்சைக்குரிய சொற்களைப் பாவிக்காமல் தமிழீழப் போராளிகளுக்கான ஆதரவைத் தொடர்ந்து கொடுக்கலாம். அதே நேரம் தடையை நீக்கக்கோரி ஜனநாயக ரீதியில ஆர்ப்பாட்டங்களைச் செய்யலாம். அதிலேயே ஆதரவைக் காட்டிப்போடலாம் எல்லாத்துக்கும் லொஜிக் இருக்குது. ஆனபடியால் கவலைப்படத்தேவையில்லை.

உப்பிடியே காலத்தை இழுத்தடிக்கலாம் அப்ப கொஞ்சம் இருக்கிற தமிழ் சனமும் செத்துப் போயிடும் அப்படியே பிரச்சனையும் தீர்ந்து போயிடும்!

பிறகு இலங்கை அரசாங்கத்தேடை ஒப்பந்த அடிப்படையில யாழ்ப்பாணத்திற்கு தமிழக கூலித்தொழிலாளர்களை அனுப்பி லாபமும் ஈட்டலாம்!

எனக்கெண்டா இந்த முறை கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் போலத்தான் தெரியுது!

Edited by சாணக்கியன்

சரி விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக கத்துவதை விட்டு விட்டு

ஈழபோரை ஆதரியுங்கள்.

ஈழத்தை அங்கீகரியுங்கள்.

ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள்..

ஈழத்தில் போராடுபவர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுங்கள்

என்று பல வகையில் ஆதரவு கோசங்களை மாற்றி தமிழக மக்களை எங்களோடு சேர்த்துக்கொள்ளலாம்.

தமிழக கட்சிகளே கோசங்களை மாற்றுங்கள்.

தடைகளை உடையுங்கள்.

தமிழீழம் என்ற பெயரை தமிழக மக்களிடம் அடிக்கடி வரும் சொல்லாக மாற்றுங்கள்..

வெற்றி கிடைக்கும்

எமது சுயநலங்களை மட்டும் முன்வைத்து தமிழக அரசையோ தமிழக முதலமைச்சரையோ விமர்சிப்பது தேவையில்லாதது. ஏற்கனவே புலிகள் விடயத்தால்த்தான் திமுக அரசு 2 தடவைகள் கலைக்கப்பட்டது. தற்போது கூட அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் அழுத்தங்களினால்த் தான் சில நிலைப்பாடுகளை திமுக எடுக்க வேண்டி வந்துள்ளது. இப்போது கூட ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து பிரைச்சியாக்க கையாண்டது இந்த விடுதலைப்புலிகள் விவகாரத்தையே. சில இலட்சங்கள் கொண்ட எமது பிரைச்சினையையே எம்மால் இலகுவாகத் தீர்க்க முடியாமல் நாம் இருக்கும் போது; 8 கோடிக்கு மேல் சனத்தொகை கொண்ட தமிழ் நாட்டின் பிரைச்சினையை திமுக அரசு கையாள்வதிலுள்ள சிரமங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். எனவே தான் தோன்றித்தனமாக கருத்துக்களை எழுதாமல் மற்றவர்களின் பிரைச்சினைகளையும் அவர்கள் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்ப்பதே சிறந்தது. புரிய முடிந்தவர்கள் புரிந்து கொண்டால்ச் சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது சுயநலங்களை மட்டும் முன்வைத்து தமிழக அரசையோ தமிழக முதலமைச்சரையோ விமர்சிப்பது தேவையில்லாதது. ஏற்கனவே புலிகள் விடயத்தால்த்தான் திமுக அரசு 2 தடவைகள் கலைக்கப்பட்டது. தற்போது கூட அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் அழுத்தங்களினால்த் தான் சில நிலைப்பாடுகளை திமுக எடுக்க வேண்டி வந்துள்ளது. இப்போது கூட ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து பிரைச்சியாக்க கையாண்டது இந்த விடுதலைப்புலிகள் விவகாரத்தையே. சில இலட்சங்கள் கொண்ட எமது பிரைச்சினையையே எம்மால் இலகுவாகத் தீர்க்க முடியாமல் நாம் இருக்கும் போது; 8 கோடிக்கு மேல் சனத்தொகை கொண்ட தமிழ் நாட்டின் பிரைச்சினையை திமுக அரசு கையாள்வதிலுள்ள சிரமங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். எனவே தான் தோன்றித்தனமாக கருத்துக்களை எழுதாமல் மற்றவர்களின் பிரைச்சினைகளையும் அவர்கள் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்ப்பதே சிறந்தது. புரிய முடிந்தவர்கள் புரிந்து கொண்டால்ச் சரி.

உங்களின் இந்த நிலைப்பாட்டை என்னால் ஏற்க முடிவில்லை. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவின் போதும் தமிழ்செல்வனின் மறைவின் போதும் தான் அஞ்சலிக் கவிதை எழுதி தன்னை ஈழ ஆதரவாளன் என்று காட்டிக் கொண்டவர் சமீபத்திய ஈழத்தமிழ் மக்களின் படுகொலைகள் எதனையும் கண்டிக்கவோ.. அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவோ.. உதவிகளை அனுப்பவோ முயற்சிக்கவில்லை.

இந்திய அரசின் சிறீலங்காவுக்கான இராணுவ உதவிகளை தான் கண்டிக்கமாட்டன் என்று அறிக்கை விட்டும் கொண்டார். ஏன் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போது கூட சிறீலங்கா அவர்களை தடுத்து வைத்திருக்கும் வரை சும்மா தானே இருந்தார். தமிழக மீனவர்களை பாதிக்கக் கூடிய வகையில் கடற்கண்ணிகளை விதைத்து விட்டு.. புலிகள் ஆயுதம் கடத்திறதைத் தடுக்கினமாம் என்றதை நம்புறார் தானே..!

ஈழத்தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்று இந்தியாவும் சிறீலங்காவும் தீர்மானித்து விட்டன என்றால் அதை வெளிப்படையாகச் சொன்னால் சர்வதேசமானவது உண்மையை உணருமே.

இப்படி பதவிக்குப் பயந்து பச்சோந்திகளாக.. அரசியல் செய்வதற்கு ஈழத்தமிழர்களின் ஆதரவாளனாக போலி வேடம் போடுவதும் பின்னர் அரசியல் அழுத்தம் என்று காரணம் காட்டி தமிழக மக்களின் உணர்வுகளை அடக்கிறதும் அவசியமா..??! :wub:

நெடுக்கு

எவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக எனது கருத்தை நான் இங்கே பதியவில்லை. உண்மைகளை மறந்து எமது சுயநலங்களுக்காக எதை எழுதினாலும் அவை எடுபடப்போவதில்லை.

கலைஞரின் அரசை விடுதலைப்புலிகளின் விடயத்தை வைத்து 2 முறை மத்திய அரசு கலைத்தபோது நம்மவர் எத்தனை பேர் அதனைக் கண்டித்தார்கள்?? ஒரு அறிக்கையாவது விட்டார்களா?? அப்போது கலைஞரும் மத்திய அரசின் எதிர்பார்ப்புகளுக்காக வளைந்து கொடுத்து இருந்திருப்பாரேயானால் அவரது அரசும் கலைக்கப்பட்டிருக்காது. ஆனால் அவர் அதைச் செய்யாமல் எமது போராட்டத்திற்கு எவரது மிரட்டலுக்கும் பயப்படாது எவ்வளவோ செய்தார். அதே போல் இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டதற்கும் பெரும் பங்கு கலைஞருடையது. இந்திய இராணுவம் நாடு திரும்பிய போது சம்பிரதாய வரவேற்பைக் கூட கலைஞர் செய்யாது பலராலும் விமர்சிக்கப் பட்டார். பல விடயங்களிலும் இந்தியாவின் நிலைப்பாட்டையே மாற்றியமைத்தது தமிழக மண்ணில் இடம்பெற்ற இராஜீவ்காந்தியின் படுகொலைதான்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம் எவர் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை என்ற மனப்பான்மையோடு நன்றி மறந்து எல்லோரையும் விமர்சிக்கின்றோம். இதனால் நாம் அடைந்த நன்மை என்ன என்று உங்களால்ச் சொல்ல முடியுமா?? எம்மை ஆதரித்தவர்களையும் எதிரிகளாக்கி எம்மைச் சுற்றி எல்லோரையும் எதிரிகளாக்கியது தான் மிச்சம். இன்று எமக்கு ஆதரவு நாடாக ஒரு நாட்டையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?? எல்லோரும் நம்மை எதிர்க்கின்றார்கள் என்றால் எம்மிலும் ஏதோ குறையுள்ளது என்று தானே அர்த்தம். முதலில் நாம் அடுத்தவர்களின் குறைகளை விமர்சிப்பதை விடுத்து எம் குறைகளை கண்டுபிடித்து அவற்றைக் களைவதுதான் முக்கியம். அதற்கு நம்மை நாமே சுயபரிசோதனை செய்வதே சாலச்சிறந்தது. அதைவிடுத்து அடுத்தவர்களை மட்டுமே விமர்சித்து எழுவது வெறும் பக்கங்களை மட்டுமே நிரப்ப உதவும்.

Edited by Vasampu

தவறாக இரு தடவைகள் பதியப்பட்டதால் ஒன்றை நீக்கியுள்ளேன்.

Edited by Vasampu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாம் என்ன செய்கின்றோம் எவர் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை என்ற மனப்பான்மையோடு நன்றி மறந்து எல்லோரையும் விமர்சிக்கின்றோம். இதனால் நாம் அடைந்த நன்மை என்ன என்று உங்களால்ச் சொல்ல முடியுமா?? எம்மை ஆதரித்தவர்களையும் எதிரிகளாக்கி எம்மைச் சுற்றி எல்லோரையும் எதிரிகளாக்கியது தான் மிச்சம். இன்று எமக்கு ஆதரவு நாடாக ஒரு நாட்டையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?? எல்லோரும் நம்மை எதிர்க்கின்றார்கள் என்றால் எம்மிலும் ஏதோ குறையுள்ளது என்று தானே அர்த்தம். முதலில் நாம் அடுத்தவர்களின் குறைகளை விமர்சிப்பதை விடுத்து எம் குறைகளை கண்டுபிடித்து அவற்றைக் களைவதுதான் முக்கியம். அதற்கு நம்மை நாமே சுயபரிசோதனை செய்வதே சாலச்சிறந்தது. அதைவிடுத்து அடுத்தவர்களை மட்டுமே விமர்சித்து எழுவது வெறும் பக்கங்களை மட்டுமே நிரப்ப உதவும்.

எந்த நாடு எமது விடுதலையை கருத்தில் கொண்டு எமது போராட்டத்தை ஆரம்பிச்சு வைச்சது. எந்த நாடும் இல்லை. அப்படி இருக்க எப்படி எந்த நாடு எமக்கு நேரடி ஆதரவளிக்கிறது என்று நீங்கள் கேள்வி எழுப்ப முடியும்..??!

கருணாநிதி அவர்களின் இரண்டு ஆட்சி அவர் விடுதலைப்புலிகளுக்காக குரல் கொடுத்ததுக்காகத்தான் பறிக்கப்பட்டதா இல்ல அதை காரணம் காட்டி வேறு அரசியல் தேவைகள் வேண்டிச் செய்யப்பட்டதா என்பதை ஆராய்ந்திருக்கிறீர்களா..??!

கருணாநிதி மட்டும் விடுதலைப்புலிகள் பெயரைப் பயன்படுத்தி வைகோவின் அரசியல் வாழ்க்கையையே சூனியத்துக்குள் தள்ள நினைக்கவில்லையா..???! இருந்தும் வைகோ எப்போதும் போல ஆதரவளிக்கிறார் தானே..??!

கருணாநிதி விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக வெளியில் காட்டிக் கொள்ளவே தேவையில்லையே. அவர் ஈழத்தமிழர்களின் துயரில் தனது கவலையை ஈடுபாட்டை வெளிப்படுத்துவதால் அவரின் ஆட்சிக்கு என்ன தீமை ஏற்பட்டு விடும்..??! அவர் ஈழ மக்கள் மீது அக்கறை செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டவில்லையே.

இவர் ஏன் விடுதலைப்புலிகளை இதற்குள் இழுக்கிறார். விடுதலைப்புலிகள் ஆதரிச்சு கவிதை எழுதினா தனக்கு மட்டுமல்ல விடுதலைப்புலிகளுக்கும் பிரச்சனை என்று அறியாதவரா அவர். இருந்தும் எழுதினார். அந்தத் துணிச்சல் உள்ளவர் , ஈழத்தமிழர் மீது அக்கறையுள்ள ஒருவர் வெளிப்படையாக இன்றி எத்தனையோ விசயங்களை அந்த மக்களுக்காகச் செய்யலாம் தானே. வெளிப்படையாச் சொன்னா பிரச்சனை வரும் என்றால் ரகசியமாகச் செய்து கொள்வதில் தப்பில்லையே..!

அப்படி ரகசியமாகச் செய்கிறார் என்றால் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் ஈழத்தமிழ் மக்களை பகிரங்கமாக ஆதரித்து நிற்பதை இது தடுக்காதே. ஈழத்தமிழர்கள் தமிழீழத்தை முன்னர் பல தடவைகள் சட்டமன்றத்தில் கூட்டம் போட்டு அங்கீகரித்தவர்கள் இன்று அதைப் பற்றிப் பேசவே மறுக்கின்றரே ஏன்..??! விடுதலைப்புலிகள் நேரடியாக உச்சரிக்காமல் ஈழத்தமிழர்களுக்கு பல வழிகளிலும் வெளிப்படையாகவே உதவலாம் தானே. ஏன் அதைச் செய்கிறார்கள் இல்லை. அதற்கும் தடையா இந்திய மத்திய அரசால். அப்படியென்றால் அதை நேரடியாகச் சொல்லி விட வேண்டியதுதானே.

ஈழத்தமிழர்களை ஆதரிப்பதை இந்தியா விரும்பவில்லை என்று..! அது இந்திய மத்திய அரசின் உண்மை முகத்தை தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உலகுக்கும் காட்ட உதவும் தானே. இவற்றை ஏன் செய்கிறார்கள் இல்லை. விடுதலைப்புலிகளின் பெயரை வைச்சு ஏன் தமிழக மக்களின் ஈழத்தமிழர் ஆதரவுக் குரலை உணர்வை அடக்க வேண்டும்..??! இங்கு தான் நீங்களும் கருணாநிதியின் தவறை உணராமல் கேள்வி கேட்கிறீர்கள்..! :wub:

Edited by nedukkalapoovan

தமிழ் நாடு என்று ஒன்றே இல்லை அங்கு தமிழர்கள் என்று எவரும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். தமிழர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இலங்கைத் தீவில் சிறுபான்மையினமாக இருந்து சிங்களவர்களிடம் இருந்து அடக்குமுறைகளை சந்திக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் நடந்திருக்குமா இல்லை தமிழ்நாடு இல்லை என்பதால் நடக்காது விட்டிருக்குமா?

தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழீழ மக்களை நம்பித்தானே ஆரம்பித்தது?

எனவே தமிழ்நாடு என்று ஒன்று இல்லை என்று வைத்துக் கொண்டால் இந்தியாவில் இருந்து வரும் சவால்களை எப்படி எதிர் கொள்ளுவோம் என்று சிந்திப்போம் செயற்படுவோம். அப்படி நாம் இயங்குவதற்கு தயாரானால் தமிழ்நாடு தரக் கூடிய எந்தவொரு ஆதரவும் மேலதிகமாக மகிழ்ச்சியான அதிர்ச்சியாக இருக்கும்.

இந்தியா மாத்திரமல்ல சீனா பாக்கிஸ்தான் அமெரிக்கா கனடா ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா ரஸ்யா யப்பான் என்று எல்லாரும் தான் சிறீலங்காவிற்கு உதவுகிறார்கள். ஆனால் இந்த நாடுகளில் எல்லாம் தமிழ்நாடு கலைஞர் நெடுமாறன் வைகோ என்று குற்றம் சாட்ட ஒரு தரப்பும் இல்லை. வாயை ஒரு கைய்யால் *த்தை ஒரு கைய்யால் பொத்திக் கொண்டு இருக்கினம் பனங்கொட்டையள்.

ஆனா இந்தியா ஏதாவது செய்தவுடன் பனங்கொட்டையள் திண்டது செமிக்க புலம்பிறதுக்கு தமிழ்நாடு கலைஞர் நெடுமாறன் வைகோ எண்டு கனபேர் இருக்கினம். இது வந்து இந்தியர்களையும் இந்தியத் தமிழர்களையும் இழக்காரமாக (தரக்குறைவாக) பார்க்கும் ஈழத்தமிழரின் கொழுப்பின் வெளிப்பாடே அன்றி உண்மையான ஆதங்கம் அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இந்தியா ஏதாவது செய்தவுடன் பனங்கொட்டையள் திண்டது செமிக்க புலம்பிறதுக்கு தமிழ்நாடு கலைஞர் நெடுமாறன் வைகோ எண்டு கனபேர் இருக்கினம். இது வந்து இந்தியர்களையும் இந்தியத் தமிழர்களையும் இழக்காரமாக (தரக்குறைவாக) பார்க்கும் ஈழத்தமிழரின் கொழுப்பின் வெளிப்பாடே அன்றி உண்மையான ஆதங்கம் அல்ல.

இவர் சந்தடி சாக்கில் ஈழத்தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் பிரிச்சுக் காட்டி சீண்டு முடியுற -நாசகார வேலையைப் பார்க்க முற்படுறார்.

ஒரு விடயம் மட்டும் தெளிவானது. தமிழகத்தில் ஈழத்தமிழருக்கான ஆதரவுத்தளம் எப்பவும் இருந்திட்டுத்தான் இருக்கிறது. ஆனால் அது குறித்த ஒரு காலத்தில் வெளிப்படையாக இருக்க அனுமதிக்கப்பட்டதும் இன்று அனுமதிக்கப்பாடததற்கும் இந்திய மத்திய அரசின் போக்குத்தான் காரணம். அதை இந்திய மத்திய அரசோடு அரசியல் கூட்டணி வைச்சிருப்பவர்கள் தமிழகத்திலும் செயற்படுத்துகின்றனர்.

ஈழத்தமிழர் விவகாரத்தையே 100% அரசியல் முதலீடாக்கி 80களின் பிற்பகுதியில் தமிழகம் அரசியல் செய்ததை பலர் மறந்து விட்டார்கள் போல. எதற்கும் வரலாற்றை திரும்பப் படிப்பது நல்லம். தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் தன்னாலான பங்களிப்பை ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு வழங்கியது மட்டுமன்றி மத்திய அரசுக்கு சவால் விடும் வகையில் தனது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்.

அமெரிக்கா என்ற நாட்டின் அமைதிக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும அரசியல் உறுதிக்கும் கனடா மெக்சிக்கோ போன்ற நாடுகளின் ஆதரவு அவசியமா ஈரானின் ஆதரவு அவசியமா..??!

சிலர் பனங்கொட்டையள் என்று அடுத்தவையை திட்டிக் கொண்டு தங்கள் களிமண்ணை இறுக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழக ஆதரவுத்தளம் என்பது எமது போராட்டம் கூர்மை பெற்றிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவசியமானது. இது ஈழத்தமிழரின் எதிர்பார்ப்பு. தமிழகம் மெளனமாக இருப்பதிலும் ஈழத்தமிழர் மீது ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முக்கியமானது.. காரணம் ஈழத்தமிழர்களுக்கு நெருங்கியது தமிழகமே அன்றி.. அமெரிக்காவோ.. பாகிஸ்தானோ .. புதுடெல்லியோ.. ஐரோப்பிய யூனியனோ அல்ல..!

கருணாநிதி இச்சந்தர்ப்பத்தில் இதைத் தெளிவுபடுத்துவதை விடுத்து.. விடுதலைப்புலிகளை சாட்டு வைத்து இந்திய மத்திய அரசின் கொள்கைகளை தமிழக மக்களிடம் திணிப்பது சரியான நடவடிக்கையா..??! என்பதுதான் இங்கு கேள்விக்கு உரியதாக்கப்படுகிறது.

உலகத்தமிழினத் தலைவர் என்று தன்னைத்தானே உச்சரிச்சுக் கொள்பவரிடம் உலகில் அடக்கப்படும் தமிழ் மக்களான ஈழத்தமிழர்கள் நியாயம் கேட்பது பனங்கொட்டைத்தனமென்றால் அது அப்படியே இருந்தாலும் உபயோகமானது. கருணாநிதி அவர்களும் ஈழத்தமிழரின் ஆதங்கத்தைப் புரிஞ்சு கொள்ள வேண்டும். இதைப் போய் பனங்கொட்டைக் குமுறல் என்பது களிமண் இறுக்கின குண்டானைக் காட்டிலும் உபயோகமானது என்பதை கூறிக்கொள்ளலாம். :lol::wub:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.