Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியது கேட்கின் எழில் நீர்க்கரையே - வாசுதேவன்.

Featured Replies

இனியது கேட்கின்.

------------------------------------------------------------

நிதானமாக நடந்து வந்த குளிர்காலம்

மரங்களைத் துகிலுரித்து அவற்றின் கிளைகளெங்கும்

தன் நிர்வாண சர்வாதிகாரத்தை நிலைநாட்டியிருந்தது.

நகரின் சந்தடிகளையும்

வாகன இரைச்சல்களையும் விட்டொதுங்கி

நீ நகர்ந்து கொண்டிருந்து கொண்டிருந்தபோது

மனித முகங்கள் உன்னிலிந்து தொலைவில்

உலர்ந்து ஆவியாகின.

புனித மார்ட்டீன் ஓடையின் கரைகளை

ஒளித்துவைத்திருந்தது மண்டிக்கிடந்த பனிமூட்டம்

புறப்படுவதற்காகவோ அல்லது தரித்து நிற்பதற்காகவோ

ஒரு உல்லாசக் கப்பல் அங்கு

தனியனாக மிதந்துகொண்டிருந்தது.

ஒரு பூனையும் வெளியே புறப்படாத குளிரிரவில்

நீ ஓடைக்கரையில் நடந்துகொண்டிருந்தாய்.

மறுகரையின் உயர்கட்டடத்தின்

பதின்நான்காவது மாடியில் வசிக்கும்

சிகையலங்காரி பேர்ணாட் இப்போது

தூங்கிக் கொண்டிருப்பான் என நீ எண்ணினாய்.

கட்டடங்களையும் அதன் அறைகளையும்

அங்குள்ள மனிதர்களின் கட்டில்களையும்

ஒரு முறை கற்பனையில் நிறுத்திப்பார்த்தாய்

ஓடை நீரின் உறக்கநிலை உனக்கு

மிகவும் உவப்பாக இருந்தது.

கொதிநிலையில் ஆவிபறப்பது போல்

நீரின் எல்லைகளை கலைத்துவிட்டிருந்தது

அடர்ந்த பனிமூட்டம்.

அனைத்துக் காட்சியும்

ஒரு நாவலின் தொடர்ச்சியாக

உன்னுள் தரிசனமாகியபோது

நீ மட்டுமே அதன் உயிருள்ள பாத்திரமாகவும்

அதைத் தொடர்ந்து எழுதிமுடிக்க

அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளனாகவும்

இருப்பதாக உனக்குப்பட்டது.

வந்தடைய வேண்டிய இடம் வந்தபோதும்

இடங்களை இடங்களெனப்பார்க்கும் இயல்பொழிந்து

அதைப்பார்க்காமலே தாண்டி நடந்துகொண்டிருந்தாய்

உன் உடல் திரவமயப்பட்டிருந்ததையும்

நீ ஒரு ஆறுபோல் நடந்ததையும்

யாரும் நம்ப மறுப்பார்கள் என்பதும்

உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது

"நாளைக்காலை நீங்கள் விழித்தெழும்

வேளை பரிஸ் நகரம்

ஒரு பாலைவனமாகிவிட்டிருக்கும்"

என ஒரு குறுஞ்செய்தியை

உன் செல்லிடத் தொலைபேசியிலிருந்து

பலருக்கு அனுப்பவிட்டு

"இன்று இரவு எனக்கு மரணம் வாய்த்தால்

என் துணைவன் சொர்க்கத்தில் கலைந்து போனான்

என எல்லோருக்கும் அறிவித்து விடு"

என்று ஒரு சிறிய காகிதத்துண்டில் குறித்து

உனது சட்டைப்பையில் திணித்து விட்டு

நீ நடந்துகொண்டேயிருந்தாய்.

குளிரின் உக்கிரத்தில்

உன்னுடல் திரவநிலையிலிருந்து

வாயுநிலைக்குச் செல்லுவதாக உனக்குப் பட்டது

மண்டிக்கிடந்த பனிமூட்டத்துடன்

பனிமூட்டமானாய்.

"இனியது கேட்கின் எழில் நீர்க்கரையே, இனிது இனிது..."

என ஆரம்பித்தன உன்னுதடுகளின் உச்சாடனங்கள்.

நீ நடந்துகொண்டேயிருந்தாய்.

காலம் அழிந்திருந்தது.

----

  • கருத்துக்கள உறவுகள்

ஓடை நீரின் உறக்கநிலை உனக்கு

மிகவும் உவப்பாக இருந்தது.

கொதிநிலையில் ஆவிபறப்பது போல்

நீரின் எல்லைகளை கலைத்துவிட்டிருந்தது

அடர்ந்த பனிமூட்டம்.

அழகான வரிகள்.

உங்க கவிதை அழகு

  • கருத்துக்கள உறவுகள்

நகரின் சந்தடிகளையும்

வாகன இரைச்சல்களையும் விட்டொதுங்கி

நீ நகர்ந்து கொண்டிருந்து கொண்டிருந்தபோது

மனித முகங்கள் உன்னிலிந்து தொலைவில்

உலர்ந்து ஆவியாகின.

சந்தத்துக்கும் விட்டுக்கொடுக்காத உருவத்தில் விட்டேர்த்தியான மனநிலையை ஒத்தி எடுத்த்ருக்கிறீர்கள். கவிதைக்கு நன்றி. பயணமும் உரையாடலும் கவிதையுமாக கூடிப் பிரான்சை அளந்து எழுதப்போகிற நாளை காத்திருக்கிறேன்.

  • தொடங்கியவர்

கறுப்பிக்கும் கவிஞருக்கும் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றி. படைப்பாளிக்கு வழங்கும் ஊக்கங்கள் படைப்புணர்வை மேலும் அதிகரிக்க வழிகோலும்.

மீண்டும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஆக்கங்கள் வெளிப்படும்போது கருத்துப்பகிர்வுகள் குறைவாகவே இருக்கின்றது இங்கே(யாழ்களத்தில்)

  • கருத்துக்கள உறவுகள்

அரிது அரிது

அரிய கவிதைகள்

படிக்க கிடைப்பதரிது

அதனினுமரிது.... சே என்னது நான் ஓளவையார் மாதிரி எழுத தொடங்கிட்டன்.சரி அரியது சொன்ன அழகிய வரிகள். அனாலும் கொஞ்சம் எல்லாருக்கும் விழங்கிற மாதிரி எழுதினால் எனக்கும் விளங்கும். நான் சொல்லறது உங்களுக்கும் விளங்கும் எண்டு நினைக்கிறன் நன்றிகள்.விழங்குமா என்ன ள.. வையும் ழ.. வையும் குழப்பிட்டனோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை வாசுதேவன். உங்கள் கவிதைகளில் வைத்தீஸ்வரனின் நடை தெரிகிறது. ஆழமாக இருக்கிறது.

சாத்திரி: வாசுதேவன் கவிதை இப்படி இருப்பது அவர் வேண்டுமென்றே சிக்கலாக எழுதுவதால் அல்ல. மனக் கிடக்கைகளை அல்லது சம்பவங்களை அவர் இயலுமான வரை வார்த்தை ஜாலம் கலக்காமல் எழுதுவதால் இப்படி விளக்கம் குறைவான கவிதைகள் பிறக்கின்றன. அதே மாதிரியான அனுபவம் கொண்ட வாசகன் இதை வாசிக்கையில் கவிஞனும் வாசகனும் ஒரே "அலைவரிசையில்" நின்று கவிதை துல்லியமாக விளங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வாசுதேவன்.

  • கருத்துக்கள உறவுகள்

அரிது அரிது

அரிய கவிதைகள்

படிக்க கிடைப்பதரிது

அதனினுமரிது.... சே என்னது நான் ஓளவையார் மாதிரி எழுத தொடங்கிட்டன்.சரி அரியது சொன்ன அழகிய வரிகள். அனாலும் கொஞ்சம் எல்லாருக்கும் விழங்கிற மாதிரி எழுதினால் எனக்கும் விளங்கும். நான் சொல்லறது உங்களுக்கும் விளங்கும் எண்டு நினைக்கிறன் நன்றிகள்.விழங்குமா என்ன ள.. வையும் ழ.. வையும் குழப்பிட்டனோ :lol:

சின்ன வயசுல்ல யிருந்தே உங்களுக்கு இந்த ள ழ பிரச்சனை இருக்குத்தானே சாத்திரி சார்.

கதைக்கும் போது இந்த பிரச்சனை இல்லையே உங்களிடம் அதையிட்டு :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.