Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் நலமாக இருக்கிறார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் நலமாக இருக்கிறார்: கொழும்பு ஊடகம் பரபரப்பு தகவல்.

[sunday, 2010-11-14 04:47:53]

கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதமளவில் சாலை பகுதியில் நிலைகொண்டிருந்த 55 ஆவது படையணியினர் மீதான ஊடறுப்பு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கடற்புலிகளின் துணைத்தளபதி கேணல் விநாயகம் தற்போது வெளிநாடு ஒன்றில் நலமாக இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் கொல்லப்பட்டதாக சிறீலங்கா படைத்தரப்பு பல தடவைகள் உறுதிப்படுத்தியபோதும், அவரின் சடலம் கைப்பற்றப்படவில்லை. கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தமது கொல்லப்பட்ட தளபதிகளையோ அல்லது போரளிகளையோ விடுதலைப்புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதையும் நிறுத்திவிட்டனர்.

எனவே குழப்பமான நிலையே போரின் இறுதி நாட்களில் ஏற்பட்டன. சாலைப் பகுதியை 55 ஆவது படையணியினர் கைப்பற்ற முன்னரே விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் விநாயகம் தலமையில் வெளிநாடு ஒன்றிற்கு சென்றுவிட்டனர். அதற்கான உத்தரவை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மானுமே மேற்கொண்டிருந்தனர்.

ஆனால் விநாயகத்தின் சங்கேதப் பெயரான மைல் போஃர் எனப்படும் தொலைதொடர்பு உரையாடலை தொடர்ந்த வண்ணம் விடுதலைப்புலிகள் படையினரை ஏமாற்றியிருக்கின்றனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithy.com

கொழும்பு ஊடகம் பரபரப்பு தகவல்.

seithy.com

கொழும்பு ஊடகம் = புஞ்சிபுத்தா.கொம்

உண்மையில் யாரும் தப்பவில்லை.. வெளிநாடுகளில் இருந்தவர்களையும் என்ன எது நடக்குது எண்டு விபரம் அறியமுதல்.. இந்திய உளவுப்படை அந்தந்த நாட்டு அரசு அனுமதியுடன் போட்டுத்தள்ளிவிட்டது.. உண்மை வெளியில் வந்துவிடும் எண்ட அச்சத்தில்..

நியூ யோர்க் ஊடகம்..

புலிகளின் முதல் முப்பது பேர் சங்கம்... முழுக்க முழுக்க இந்திய உளவுப்படையின் பேனா வல்லுனர்களினால் கொண்டு நடத்தப்பட்ட ஒரு குழுவாகும்..

சைனாவின் ஆப்பு இறுகியவுடன்.. தடையத்த அழிச்சிட்டு பறந்திட்டானுகள்..

எல்லோரும்..ஐ மீன்... எல்லொரும், சுத்த இருளில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.. முதல் தொடக்கம் முடிவுவரை ரகசியம், ரகசியம் எண்டு எமது பொருளில்,, எமது இளைஞர்/இளைஞிகளால்,, எமது சமுதாயம் உபயோகிக்கபட்டு அழிக்கப்பட்டுள்ளது....

இந்தியாவின் இந்த நாடகத்துக்கு தமிழ்நாடும் ஒரு முக்கிய பங்காளர் ஆகும்..

அரிய கண்டுபிடிப்பும், பக்கவாத்தியங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இருந்தால்

அதைவிட சந்தோசம் வேறு ஏது...?

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயம் மிளகாய் சரக்குகள் எல்லாம் போட்டுக் கட்டுரையாளர் நல்லா தாளிச்சு சிறிலங்கா அரசு மீதான விசுவாசததைக் காட்டியிருக்கிறார்.போர்க்குற்ற விசாரணை வெற்றியளிக்காது என்று திரும்பத் திரும்பச் சொல்லி அந்த முயற்சியைக் கை விடச் (மறைமுகமாக)சொல்கிறார்.நா.க.அரசையும் கோமாளிக் கூத்து என்று சொல்லி உருப்படாது என்று அதன் மீதான நம்பிக்கையின்மையை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்.இதை எல்லாவற்றையும் விட்டுப் போட்டு பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு உதவிசெய்யட்டாம் என்று கேபி சொன்ன மாதிரிச் சொல்கிறார்.கேபியைச் சனம் நம்பாததால பத்திரிகையாளர் என்ற முறையில தான் கேட்டுப் பார்க்கிறார். உண்மையில் புலம் பெயரர்தவர்களின் மேற்குறித்த செயற்பாடுகளின் மீதான சிறிலங்கா அரசின் அச்சமே அதன் அடிவருடி எழுத்தாளரின் எழுத்தில் புலப்படுகிறது.

கடற்புலிகளின் துணைத் தளபதி கேணல் விநாயகம் அவர்கள் வீரச்சாவடைந்தது உண்மையே.

அவர் வீரச்சாவடைந்தமையை அவரின் உறவினர்களிற்கு விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

அவருக்கு அந்தியட்டிவரை செய்யப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.