Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. அப்படியா இருக்கப்போகின்றோம்

Featured Replies

Tamils%20political.jpgநாடுகளின் அரசியலில் பருவகால விடய நடவடிக்கைகள் போன்று தமிழர் அரசியல் போராட்டத்தில் விடய அரசியல் காலம் என செயற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் போர்க்குற்றம், இனப்படுகொலை, அவலவாழ்வு, நல்லிணக்கம், அரசியல் பேச்சுவார்த்தை, புலம்பெயர் ஐக்கிய நாடுகளில் போட்டி அரசியல் என சிறுதுகாலம் களைகட்டியது.

.

ஆனால் இப்போ எல்லாமே மூன்று விடயங்களுக்குள் சுருங்கி விட்டது. ஒன்று உள்ளூரில் அரசாங்கம்-கூட்டமைப்பு- இந்தியா அரசியல் இழுபறிகள் இரண்டாவது வெளினாடுகளில் போர்க்குற்ற அடிப்படையிலான அரசியலும் அதனை செய்வதில் உள்ள போட்டிகளும் மூன்றாவதாக தாயகத்தில் மக்களின் தொடரும் அவலவாழ்வு.

.

மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களிலும் மக்களின் அவல வாழ்வு ஒன்றுதான் நிரந்தரமாக, நீண்டகாலம் அப்படியே இருக்கப்போகின்றது என்ற உண்மை தெட்டத்தெளிவு. கூட்டமைப்பு- அரசாங்க பேச்சுவார்த்தை என்பதும், இந்திய அழுத்தங்களும் ஓர் போலியான காலத்தை இழுத்தடித்துக்கொண்டு ஒவ்வொருவரும் தமது ஸ்திரத்தன்மையினை பேணவேண்டிய அல்லது பேணவேண்டும் என்ற தடத்தில் இயங்கி கொண்டு இருக்கின்றது.

.

இதில் இந்தியா, இலங்கையினை பொறுத்தவரை அது ஈழத்தமிழரின் அபிலாசைகளுக்கு எதிரான அரச இயந்திரங்கள். அங்கு ஆட்சிகள் மாறினாலும் அரச இயந்திரங்களின் செயற்பாடுகள் நிலையானது.

.

ஆனால் கூட்டமைப்பின், தமிழர் தலைமையின் நிர்வாக இயந்திரம் நிலை இல்லாதது அடிப்படையான, ஆளமான, நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்க கூடிய கட்டமைப்பினை கொண்டு இல்லை கூடவே மாறவும் கூடியது. எடுத்துக்காட்டாக அரசியலிற்கு அப்பால் தேர்தலில் வென்றால் என்ன தோற்றால் என்ன தமிழர்களுக்கான பலமான அரசியல் பீடம் அல்லது கட்டமைப்பு என்பது இல்லை மாறாக ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தேர்தலை நம்பிய அரசியலாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக கூட்டமைப்பின் எதிர்காலம் அல்லது அடுத்த தலைமை யார்? அல்லது வளர்க்கப்படுகின்றார்களா? என்றால் குறிப்பிடக்கூடிய தகவல்கள் இல்லை.

.

வெளி நாடுகளில் தமிழர்களின் அரசியல் அதனைவிட மோசம். அரசியல் கட்டமைப்புக்களில் அடிபாடு குத்துப்பாடு, ஆரோக்கியமற்ற தலைமைக்கான போட்டிகள்,குறைபாடான ஜனனாயகம், தனி நபர் ஆதிக்கங்கள் இன்றும் தொடர்கின்றன. இந்த சூழல் நிலையான ஓர் உயர் அரசியல் பீடத்தை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கும் என்பதில் கேள்விக்குறிகளே அதிகம்.

.

இந்த நிலையில் சுயாதீன மக்கள் குழுக்களால் நீண்டகாலம், மிக நீண்டகாலம் அரசியல் திட்டங்களை வகுத்து செயற்பட முடியாமல் திணறுவதுதான் நடக்கும் அதுதான் விடய அடிப்படையிலான அரசியல் வேலைத்திட்டங்கள்.

அதாவது போர்க்குற்றம் என்ற அடிப்படையில் தற்போதைய பணிகள்

அடுத்து நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற பணிகள்

மூன்றாவது அரசியல் தலைமைக்கான பனிப்போர்கள் இந்த அடிப்படையிலேயே புலம்பெயர் நாடுகளில் பணிகள் நடக்கின்றன.

.

இந்த மூன்று விடய செயற்பாடுகளும் தெரிந்தோ தெரியாமலோ வெளி நாட்டு சக்திகள் அல்லது புற சூழல்கள்தான் ஆதிக்கம் செலுத்தி நிற்கின்றன என்பதனை யாரும் மறுக்க முடியாது. அதுதான் யதார்த்தம் என பலர் வாதிடலாம். உண்மைதான் ஆனால் இந்த விடய அரசியல் பணியின் ஆயுட்காலம் என்ன? விளைவு என்ன? இந்த இரண்டிற்கும் பதில் தெரியாமலேயே பணிகள் நடக்கின்றன. இதுதான் வேதனைக்குரிய விடயம்.

.

ஆகவே தமிழர்களின் அரசியல் நடவடிக்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்பதில் சிறு அளவேனும் ஓர் அளவுகோல் இல்லாமலேயே பணிகள் நடக்கின்றன. இது சர்வதேச அரசியல் சூழலின் மாற்றமா? அல்லது சூழ்ச்சிகளா? அலல்து தமிழர் தலைமைகளின் சோம்பேறித்தனமா? அல்லது இயலாமையா?

.

எது எப்படி இருப்பினும் தமிழர் தலைமைகளோ மக்களோ சில அடிப்படைகளில் இருந்து விலக முடியாத சூழலும், வரலாற்று நிர்ப்பந்தகளும் உள்ளன. அதற்கு மக்களின் அவலங்களும், விடுதலைப்போராட்டமும், இழப்புக்களும் இறுதியாக ஓரு நாடு அல்லது தீர்வு வேணும் என்ற இலட்சியமும் காரணிகளாக உள்ளன.

.

சிங்கள அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால் அல்லது இப்படியே காலத்தை இழுத்தடிஓஉ செய்தால் அடுத்தது என்ன? மாற்றுத்திட்டம் என்ன?

நாடு கடந்த அரசாங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுக்கான பணிகள் திட்டங்கள், திட்ட முன்னேற்றங்கள் என்ன?

பேரவைகள், மக்கள் அமைப்புக்களின் நொஈண்டகால திட்டம் அல்லது திட்ட அடைவுகள் என்ன?மேற்கூறப்பட்டவைகளின் நடவடிக்கையில் போர்க்குற்றம் என்ற ஒன்றினை நம்பி நடக்கும் அரசியல் பணிகள் வேறுகோணத்தில் சிலவேளை சென்றால் அடுத்த திட்டம் அல்லது மாற்றுத்திட்டம் என்ன?

.

வந்த பிறகு பார்ப்போம் என்றா இருக்கின்றோம் அல்லது நடக்கட்டும் பார்க்கலாம் என்றா இருக்கின்றோம்.

My link

.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய யதார்த்தத்தைச் சரியாகக் காட்டும் கட்டுரை.

கூட்டமைப்பு காயடிக்கப்பட்டது தெரியாமல் அவர்களிடம் தமிழர்கள் எதையாவது செய்வார்கள் என்பது முட்டாள்தனம்.

புலம்பெயர் நாடுகளில் போர்க்குற்றத்தை வலிமையான முறையில் பாவித்து ஓர் அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசை வருமளவிற்கு அழுத்தம் கொடுப்பதை விட்டுவிட்டு தங்களுக்குள் உள்ள புடுங்குப்பாடுகளைத்தான் முக்கியமானதாக நோக்குகின்றார்கள் இங்குள்ள "தலைமைகள்".

தாயகத்தில் உள்ள மக்களின் அவலம் ஒருவருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறைகள், வடகிழக்குப் பெண்களை பாலியல் தொழிலுக்குப் பாவித்தல் போன்றவற்றை அரசியல் ரீதியாக செயற்பட்டு தடுக்கமுடியாத நிலையில்தான் தாயகத்தின் அரசியல் கட்சிகளும், புலம்பெயர் தலைமைகளும் உள்ளன. ஆனால் ஏதோ ஒரு தீர்வை நோக்கி முன்னேறுகின்றோம் என்று "புலுடா" விடுவதற்கு மட்டும் குறைச்சலில்லை.

இங்கே தெளிவான பாதை என்பது என்ன ? அது யாரால் எப்படி ஏற்படுத்தப் படும் என்பதை அறிய நாம் எமது போராட்டத்தையே பின் நோக்கி நக்ர்த்திப் பார்ப்போம்.

தமிழருசுக் கட்ச்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் எவ்வகையில் கைய்யறு நிலையில் இருந்ததோ அதே நிலையிலையே இன்றைய கூட்டமைப்பின் அரசியல் இருக்கிறது.அன்றைய நிலையில் எந்தப் போராட்ட வழிமுறை எமது அரசியலை மாற்றி அமைத்தது? அது ஆயுதப் போராட்ட அரசியல் வழி முறை.இதைச் சொல்வதால் இங்கே கூவிக் கொண்டு வரலாம்,ஆனால் உலகெங்கும் வரலாறு இப்படித் தான் இருக்கிறது.உலகில் எங்கு எங்கு ஆயுத முனையில் ஒரு போராட்டம் முறையடிக்கப்பட்டதோ அங்கெல்லாம் புதிய வடிவிலான மிக வலிமையான போராட்டங்கள் அடக்குமுறை பாவிக்கப்படும் வடிவங்களிலையே மேல் எழுந்துள்ளன.மீண்டும் எல்லா வழி முறைகளும் எதிரியால் இல்லாது ஆக்கப்பட இறுதி வழியாக அடக்கப்படும் மக்களுக்கு ஆயுதம் ஏந்துதலே வழியாக இருந்திருக்கிறது.

இன்று இந்திய அரசு தமிழ் நாட்டவரின் குரலைச் செவி சாய்க்காமால் இருந்து கொண்டு வருவது, அதிருப்தியுறும் தமிழ் நாட்டு இளையோரையும் அந்த அரசிற்க்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நோக்கியே தள்ளும்.இவை இன்னும் சில ஆண்டுகளுள்ளோ அல்லது இன்னும் பத்து ஆண்டுகளுள்ளோ நடை பெறக் கூடியவை.இழுத்தடிக்கும் அரசியலுக்கான கால அவகாசம் என்பது ஒரு பத்து ஆண்டுகள் வரையிலையே சாத்தியப் படக் கூடியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.