Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனுக்கு உதவுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனுக்கு உதவுங்கள்

அவசரம் ஒரு உயிர்காக்க வேண்டிய அவசியம்

jega.jpg

நேற்று முதல் ஒரு உயிரைக்காக்குமாறு வேண்டுதல்கள் ஊடகங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடைசி யுத்தத்தில் முதுகுப்பகுதியில் காயமடைந்து மருத்துவம் பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர் ஜெகதீஸ்வரன். இந்த ஜெகதீஸ்வரன் என்ற முன்னாள்போராளி கொழும்பு வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் தனது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த 33வயது இளைஞனின் 2சிறுநீரகங்களும் பாதிப்புற்றுள்ள நிலமையில் மாற்றுச்சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலமையில் இருக்கிறார். எதிர்வரும் 3மாதங்களுக்குள் சிறநீரகம் மாற்றப்படாதுவிட்டால் அவருக்கு இறப்பு நிச்சயம் எனப்படுகிறது.

மாற்றுச்சிறுநீரகம் பொருத்தப்படும் வரை 6நாட்களுக்கு ஒருமுறை இரத்தம் மாற்றப்பட வேண்டும். இரத்தமாற்றுகைக்கு ஒருமுறைக்கு 6ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.

ஜெகதீஸ்வரனின் மருத்துவச் செலவுகள் மாற்றுச்சிறுநீரகம் பொருத்துதல் எவற்றிற்கும் அவரது குடும்பத்தினரிடம் பணவசதியில்லை. உலகத்தமிழர்களிடம் உதவியை வேண்டும் இந்தக் குடும்பத்திற்கு உறவுகளே உங்களிடம் உதவியை வேண்டுகிறோம்.

இந்த இளைஞரின் உயிர்காக்க எம்மாலான உதவியினைச் செய்ய முன்வாருங்கள் உறவுகளே…..!

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Donation

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

தொடர்புபட்ட செய்தியிணைப்புகள் :-

http://www.bbc.co.uk...eyfailure.shtml

http://www.virakesar...asp?key_c=33992

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞரின் உயிர்வாழும் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. உதவுங்கள். இவனது உயிரைக்காருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெகதீஸ்வரனைக் காப்பாற்ற வாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உயிரின் துயர் யாருக்கும் கேட்கவில்லையா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க prakash என்ற அன்புறவு 57,00$ (40,58€)

உதவüயüனை வழங்கியுள்ளார்.

மற்றும் ஐ.எல்.சி வானொலியில் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவிகோரியிருந்தோம் எமது வேண்டுதலை ஏற்று பிரித்தானியாவிலிருந்து ஒரு உறவு 200€க்களை உதவியிருக்கிறார்.(தனது பெயரை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய அவரது பெயரை இங்கு தவிர்க்கிறேன்)

இதுவரை மொத்தம் 240,58€ கிடைத்துள்ளது.

உதவிய இருவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் கள உறவு ஒருவர் 141,48€ உதவியிருக்கிறார். தன்பெயரை மறைத்து இவ்வுதவியை வழங்கிய அந்த நல்லிதயத்தக்கு மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றவீந்தர் - 14,47 € பேபால் ஊடாக உதவியிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஜெகதீஸ்வரனுக்கான உயிர்காப்பு நிதியாகக் கிடைத்த உதவி - 395,53€

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று உதவியோர் விபரம்:-

29.09.2011 - எஸ்.கந்தையா (பிரித்தானியா) - 50000.00ரூபா

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29.09.2011 குலராஜா மந்தாகினி (பிரித்தானியா) 49.05€

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க இலங்கை ரூபா - 1000000.00ரூபா தேவைப்படுகிறது. இன்றுவரை 230000.00ரூபாவே சேகரிக்கப்பட்டுள்ளது. 777000.00ரூபா தேவைப்படுகிறது.

உயிர்காக்க உதவுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

100€ தருகின்றேன் அக்கா

இன்று எனது பிறந்தநாள்..

சாத்திரியர் வருகிறார். கொடுத்துவிடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

100€ தருகின்றேன் அக்கா

இன்று எனது பிறந்தநாள்..

சாத்திரியர் வருகிறார். கொடுத்துவிடுகின்றேன்.

விசுகு நான் இப்பொழுது பாரிஸ் வரும் திட்டம் இல்லை அவசர உதவி என்பதால் நேசக்கரத்திற்கு பே; பால் மூலமாக போட்டு விட்டால் உதவியாக இருக்கும்.நன்றி

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100€ தருகின்றேன் அக்கா

இன்று எனது பிறந்தநாள்..

சாத்திரியர் வருகிறார். கொடுத்துவிடுகின்றேன்.

நன்றிகள் விசுகு.

இது அவசர உதவியானபடியால் பேபால் ஊடாக அல்லது நேரடியாக அனுப்பிவிடுவீங்களா ? தனிமடலில் எழுதுங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

play-button.gif?w=28&h=30ஜெகதீஸ்வரனெண்ட ஒரு 33வயது இளைஞன் தன்ரை உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிற செய்திகளை அண்மைய நாட்களில நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறம்.

கடைசியுத்தத்தில காயமடைஞ்சு மருத்துவமனையிலயிருந்தவனை பூசா சிறைக்குக் கொண்டு போயிருக்கினம். அந்தச் சிறையில சரியான மருத்துவமில்லாமல் சரியான கவனிப்பில்லாமல் ஜெகதீஸ்வரன் தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் முழுமையாப் பாதிக்கப்பட்டு கடுமையான நிலமையில இப்ப கொழும்பு ஆதார வைத்தியசாலையில அவசர சிகிச்சைப்பிரிவில இருக்கிறார்.

இன்னும் 10கிழமையில இந்த இளைஞனுக்கு மாற்றுச்சிறுநீரகம் பொருத்தாவிட்டா இவரை காப்பாற்றேலாமப் போயிடும்.

எங்களுக்காக தன்னுடைய காலத்தை வாழ்வைத் தந்த ஜெகதீஸ்வரனுடைய உயிரைக் காக்க உலகமெல்லாம் வாழுற தமிழர்கள் எல்லாரிட்டையும் நேசக்கரம் கையேந்தி நிக்குது. உங்கடை உதவிகளைக் குடுத்து ஜெகதீஸ்வரனைக்காப்பாற்றுங்கோ.

ஜெகதீஸ்வரனின்ரை அக்கா உங்களிட்டை தன்ரை தம்பியின்ரை நிலமையைச் சொல்ல வாறா கேளுங்கோ கேட்டு உதவுங்கோ….

ஒலிப்பதிவை கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகல மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோல்

உயிருக்காகப் போராடும் தமிழ் அரசியல் கைதி ஜெகதீஸ்வரனின் உயிரைக் காப்பாற்றுங்கள்.

jega.jpg

போரின்போது படுகாயமடைந்ததால் இரத்தமாற்று நோய்க்கும் சிறுநீரக வியாதிக்கும் ஆளான திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த இராஜேந்திரம் ஜெகதீஸ்வரன் (32 வயது) என்ற தமிழ் அரசியல் கைதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றார்.

கொழும்பு விளக்க மறியல் சிறைச்சாலையில் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற யுத்தத்தில் படுகாயமடைந்து கப்பல் மூலமாக திருகோணமலை வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது 2009.09.21 இல் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் (சிறை இல : 1981)

இவருடைய மனைவியான ரஜீதா என்பவரும் போரின்போது காயப்பட்டு ஒரு காலை இழந்த நிலையில் தற்போது வவுனியாவில் வசித்து வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

2009 இல் வன்னியில் இடம்பெற்ற குண்டுவீச்சினால் இவர் படுகாயமடைந்தபோது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் அரச புலனாய்வினரால் கைதுசெய்யப்பட்டதனால் சிகிச்சையை தொடர முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டார் இதன் பின்பு இவரின் இரண்டு சிறுநீரகங்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் யூ பிரிவு சிறுநீரகம் அவசரமாக மாற்ற வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கைகளில் விலங்கு பூட்டப்பட்டு சிறைச்சாலை காவலாளிகளின் பாதுகாப்பிலேயே இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் அத்துடன் உறவினர்கள் இவரைப் பார்வையிடுவதற்கும் பாதுகாப்பு தரப்பினர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக உறவினர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள இந்தக் கைதி எவ்வாறு வன்முறையில் ஈடுபட முடியும் அப்படி இருக்க ஏன் இவரின் கைகளில் விலங்கு போட்டு சிகிச்சை அளிப்பதற்கு இடையூறான செயற்பாடுகளில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுகின்றனர்.

மேலும் இவருக்கு சிறுநீரகம் புதிதாக மாற்றப்படுமானால் இவரை தகுந்த சுகாதார வசதிகளுடன் பராமரிக்க வேண்டும் அவ்வாறாயின் கைதியான இவர் சிறைச்சாலையில் இருந்துகொண்டு எவ்வாறு பராமரிக்கப்படுவார் எனவே இந்த சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை இவருக்கு மேற்கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு முன் இவர் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே போரினால் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டுவந்த ஒருவரை பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் சிறையில் அடைத்து அவரின் நோய்க்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சையை தடுத்து அவரை கொலை செய்ய நினைப்பது ஒரு நீதியான விடயமாகுமா?

எனவே குறித்த கைதியை விடுதலை செய்வதற்கும் அவருக்கு சுதந்திரமான முறையில் சிகிச்சை அழிப்பதற்கும் வேண்டிய சூழ்நிலையை உருவாக்க சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.