Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19157
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    88006
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/27/20 in all areas

  1. ஆடிஅடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா .....! 🌹
  2. வாட்சப்பில் வந்த பதிவு. படலை இணையதளத்தில் எழுதபட்டிருக்கிறது. அதன் நடத்துனர் ஜேகேயின் ஆக்கம் என நினைக்கிறேன். பிகு: நிர்வாகத்துக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் அதியுட்ச ஈகத்தை செய்தவர்களை பற்றிய ஆக்கம் என்பதால் இங்கே பதிகிறேன். வேறு பகுதி பொருத்தம் என்றால் அங்கு மாற்றி விடுங்கள். ———— மன்னிப்பாயா ------------ காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது. இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். "இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும் நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்? வாழ்க்கை என்னும் பயணம். இதை மாற்றிடவா முடியும்?" தொண்ணூறுகளில் இந்தப் பாடலை முணுமுணுக்காமல் எவரும் வல்வை வெளியையோ, ஆசைப்பிள்ளை ஏற்றத்தையோ சைக்கிள் மிதித்து கடந்திருக்கமாட்டார்கள். அப்போது எம்மோடு மிக நெருக்கமாக இருந்த பாடலை இப்போது திரும்பவும் கேட்கையில் அந்த எதிர்க் காற்றும், ஆசைப்பிள்ளை ஏற்றத்தின் பளுவும் நம்மை மீண்டும் தாக்குகிறது. தானாகவே விக்கிராமதித்தியனின் வேதாளம் வந்து தோளில் உட்கார்ந்து கொள்ளுகிறது. விலகாமல் கூடவே இருந்து கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது. குப்புசாமி ஞானமணி. தமிழ்நாடு வேலூரைச்செர்ந்தவர். யார்? எவர்? என்று எனக்கு தெரியாது. "குட்டி” பற்றிய பதிவைப்பார்த்துவிட்டு "அடுத்த தலைமுறைகளுக்காக தம்முயிரை துறந்தவர்களை நினைக்க நினைக்க கண்ணீர் தன்னாலே கலங்கி வழிகிறது" என்று எழுதியிருந்தார். முகம்தெரியாத ஒரு மனுஷிக்காக வடிக்கும் கண்ணீர். அந்தப்பதிவை நான் எழுதி இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு பிறகு எத்தனையோ முறை படலையில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். கதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நூற்றுக்கணக்கில் எழுதியாயிற்று. இப்போது திடீரென்று இந்த முகம் காணாத மனிதர் நேற்று அதை வாசித்து அழுதிருக்கிறார். அவர் அப்படி அழுது கொண்டிருக்கையில், அதை எழுதிய நானோ இந்தவாரம் எதை எழுதலாம்? என்று யோசித்துக்கொண்டிருந்திருக்கிறேன். எழுதும்போது என்னோடு கூட இருந்த உணர்வு ஆழ்மனதுக்கு மீண்டும் திரும்பிப்போய்விட்டது. வாசித்தவருக்கு அதே ஆழ்மன உணர்வு நேற்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது. இந்த அபத்தம் புரிய கொஞ்சம் சலிப்பும் கூடவே வருகிறது. ஒருமுறை மாவீரர் தினத்துக்கு நண்பன் ஒருவனோடு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, எனக்குத் தெரிந்த, முகம் அறிந்த, போரில் மரணித்தவர்களைப்பற்றி சொல்லிக் கொண்டுவந்தேன். அவர்களுக்கும் எனக்குமிடையிலான உறவு பற்றியும் சொன்னேன். நான் சொல்லும்போது அதில் ஒரு சின்னத்தனமான பெருமையும் இருந்தது. "பார்த்தியா இவரை எல்லாம் எனக்கு தெரியும்" என்கின்ற பெருமை. பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வந்தவன், விடைபெறும்போது சாதாரணமாக சொன்னான். "எண்ட தம்பியும் இப்பிடித்தான் அடிபாடு ஒண்டில செத்திட்டான். வெளிய தெரிஞ்சா பிரச்சனை எண்டு ஒருத்தருக்கும் சொல்லுறதில்லை " பளார். மாவீரர் தினமன்று திருவுருவப் படங்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடப்பதுண்டு. ஊரில் அப்போதெல்லாம் பிரமாண்டமாக நடக்கும். எல்லோருடைய படங்களும் எங்கேயோ ஏதோ ஒரு சந்தியிலாவது இருந்திருக்கும். இப்போது வெளிநாடுகளில் சிறிய அளவுகளில். இருபது முப்பது பேரின் படங்களை வைத்து செய்யப்படும் அஞ்சலிகள். கூட்டத்துக்கு வருகின்ற எல்லோரும் ஒவ்வொரு படங்களையும் உற்றுப்பார்த்துக்கொண்டு போவார்கள். அவற்றில் எதையோ அவர்கள் தேடுவது போல இருக்கும். வேறொன்றுமில்லை. தம் பிள்ளையோ, அண்ணனோ, தம்பியோ, அக்காவோ, தங்கையோ அங்கே படங்களில் இருக்கிறார்களா? என்கின்ற தேடல். அனேகமாக அவர்கள் தேடும் படங்கள் இருக்காது. ஆனாலும் அழுவார்கள். அதற்கு அர்த்தங்கள் ஏராளம். எழுதி விளக்கக்கூடாது. முடியாதது. நான் அப்படியான சந்தர்ப்பங்களில் யாரைத் தேடுவேன்? அங்கிருந்த படங்களில் இருக்கும் எல்லோருமே எனக்காக இறந்தவர்களே. இல்லாதவர்களும் எனக்காக இறந்தவர்கள். என் நண்பனின் தம்பியும் எனக்காகத்தான் இறந்திருக்கிறான். பெயர் தெரியாது. அவசரத்தில் அவனிடம் கேட்கவும் இல்லை. அவன் வீரவேங்கையா? 2ம் லெப்டினன்டா? லெப்டினன்டா? கப்டனா? ஒன்றுமே தெரியாது. ஒருவேளை அதற்கு மேலே என்றால் தெரிந்திருக்கும். இப்படி ஒருவர் இல்லை. இருவர் இல்லை. ஆயிரக்கணக்கில், நமக்காக இறந்தவர்கள். என் அப்பாவோடு நான் நிறைய சண்டை பிடிப்பேன். அம்மாவை ஏசியிருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதட்டப்படுவதும் நான்தான். மனைவி மீதான பாசமும் அப்படித்தான். சகோதரங்கள், நண்பர்கள் என்று எந்த உறவை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் மீது அபரிமிதமான பாசம் இருக்கிறது. அவர்களுக்காக என்னவெல்லாமோ செய்யத் தலைப்படுகிறோம். நாம் இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்தபோது எம்மை பாதுகாத்த குடும்பம் எனக்கு இன்றைக்கும் கடவுள் போன்றது. ஊருக்குப்போனால் அவர்கள் வீட்டில் தலைகாட்டாமல் திரும்புவதில்லை. என் சொந்த அக்கா அண்ணன் எல்லோருமே பிறப்பாலே எனக்கு உறவானவர்கள். மாவீரர்கள் எல்லோருமே இறப்பாலே உறவானவர்கள். இறந்து நம்மோடு கூடப்பிறந்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல. போரிலே காயப்பட்டு, காணாமல் போய், குடும்பங்களை தொலைத்து, உருக்குலைந்து, சின்னாபின்னப்பட்டு .... இதெல்லாமே நமக்காக செய்தவர்கள். எல்லோருமே நமக்கு உறவுதான். ஒரு பாடல் வரி ஞாபகம் வருகிறது. "யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே" யோசித்துப்பார்க்கிறேன். ஒரு காதலன் காதலிக்கு சொல்லுகின்ற உச்சப்பட்ட வார்த்தை "நான் உனக்காக உயிரைக்கூட கொடுப்பேன்". எப்போவாவது கதைகளிலோ திரைப்படங்களிலோ இதைப்பார்க்கும்போது அபத்தமாக இருக்கும். எவன் இந்தக்காலத்தில் உயிரை எல்லாம் கொடுக்கப்போகிறான்? ஆனால் இவர்கள் எல்லோருமே எமக்காக உயிரைக்கொடுத்தவர்கள். இந்தச் சொந்தத்தை நாங்கள் இலகுவில் மறந்துவிடுகிறோம். பெற்றதாய்க்கு கூட தன் குழந்தைகளில் யாரோ ஒருவரிடம் அதிக பாசம் இருக்கும். அது இயல்பு. ஆனால் இவர்களிடம் அந்த சிந்தனையே இல்லை. எம்மை வைத்து அரசியல் செய்வார்களா? மறந்துவிடுவார்களா? தம் குடும்பம் என்னாகும்? எந்த யோசனையும் இல்லை. என் பெயர் கூட இவர்களுக்கு தெரியாது. ஆனால் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். கோபம் வருகிறது. சேர்ட்டு கொலரைப்பிடித்து உலுக்கிக்கேட்கவேண்டும் போன்றிருக்கிறது. எதற்கு? நான் யார் உங்களுக்கு? எனக்காக ஏன் இப்படிப்போய் இறந்தீர்கள். உங்களை நாங்கள் அவனா? இவனா? என்கின்ற அரசியலுக்குள் அடக்கிவிடுகிறோம். உங்கள் பெயரைச்சொன்னால் சிக்கல் வந்துவிடும் என்று சீண்டாமல் இருக்கிறோம். இந்தக் கையாகாதவனுக்காக ஏன் இறந்தீர்கள்? இதை எழுதும்போதும் "இவன் ஏன் இதை எழுதுகிறான், இன்றைக்கு மாவீரர் தினம் இல்லையே, இதற்குள் ஏதாவது அரசியல் இருக்குமோ?" என்று யோசிக்கிறோம். நானே யோசிக்கிறேன். சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன திடீரென்று? என்றால், அதுதான் மனிதமனம். எப்போதோ இறந்த அன்னைக்காக திடீரென்று அழுபவர்களை கண்டிருக்கிறோம். அவர்களிடம் எதுக்கு திடீரென்று அம்மா ஞாபகம்? என்று கேட்கமுடியாது. அது எப்போதும் வரும். சிலவேளைகளில் எதுக்கு வேண்டாத வேலை? என்கின்ற கோழைத்தனத்தை மீறியும் வரும். அதுபோலத்தான் இதுவும். இதற்கெல்லாம் மாவீரர்வாரம் வேண்டியதில்லை. நம் மனத்துக்கு தர்க்கங்கள் செய்யத்தெரியாது. சில கணங்களுக்காக உணர்ச்சிவசப்படவே முடியும். அது எக்கணத்திலும் நிகழும். நாம் அழும்போது உலகத்தில் இன்னொருவர் சிரித்துக்கொண்டே இருக்கிறார். சிரிக்கும்போது எங்கோ ஒருவீட்டில் ஒப்பாரி கேட்டுக்கொண்டே இருக்கும். இது நியதி. அவர்கள், இவர்கள், தவறு, சரி இதெல்லாமே அரசியல் சார்ந்தது. அது வேறு. அதெல்லாமே ஆராயப்படவேண்டியதுதான். ஆனால் எந்த அரசியல் பகடைக்குள்ளும் இவர்களை நாம் இட்டு துகிலுரிக்கக்கூடாது. அப்படி உரித்தாலும் உரிபடுவது நாமே ஒழிய அவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக எம்மோடு சேர்த்து இவர்களையும் துகிலுரிக்கவே முயலுகிறோம். இருக்கிறோம். மற்றவனை விட நாமே அதிகமாய் அதை செய்கிறோம். இதை படம் பிடிக்க சனல் 4 தேவையில்லை. தினம் தினம் எங்கள் வீடுகளிலேயே நிகழ்கிறது. நண்பர் குடும்பம் ஒன்று சென்றவாரம் இலங்கை சுற்றுலா சென்று திரும்பியது. சந்திரமௌலீச்சரம் உட்பட அத்தனை ஈச்சரங்களுக்கும் சென்று வந்தோம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் ஆர்மிக்காரங்கள் கூட நல்லா தமிழ் கதைக்கிறாங்கள் என்றார். ஆனால் அவர் மகனால் தமிழ் பேசமுடியாது. என்ன ஒரு முரண்நகை இது. ஒருபுறம் நமக்காக, தமிழுக்காக உயிரை மாய்த்தவர்கள். இன்னொருபுறம் அவர்கள் யாருக்காக உயிரை மாய்த்தார்களோ அவர்கள் பரம்பரை தமிழை பயிலவில்லை. கொன்றவன் தமிழ் பயில்கிறான். அதுதான் இந்த முரண்நகைகளின் உச்சம். எம் நிர்வாணங்களை நிலைக் கண்ணாடி காட்டும்போது நமக்கே அவமானமாக இருக்கிறது. அவமானம் உச்சமாகி குற்ற உணர்ச்சி மேலோங்கினால் சிலர் தம்மைத்தாமே குத்தி இரத்தம் வரவைப்பார்கள். தனிமையை நாடுவார்கள். கோபம் வரும். கழிவிரக்கம் வரும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி உண்டு. நமக்கு தெரிந்தது இப்படி எழுதுவது. இதெல்லாமே இயலாமையே. "Tuesdays with Morrie" என்ற புத்தகம் வாசிக்கும்போது இந்த இயலாமைக்கான மூலம் ஓரளவுக்கு தெளிவானது. அதிலே மொரி ஒரு கருத்து சொல்லுவார். "முதலில் நீ உன்னை மனப்பூர்வமாக மன்னிக்கப் பழகவேண்டும்" எம்மை நாம் மன்னிக்காவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். மறப்பது வேறு. மன்னிப்பது வேறு. காலம் பலதை மறக்கடிக்கச்செய்யும். மறந்துபோவதால்தான் நாலு வேளையும் நமக்கு வயிறு செரிக்கிறது. ஆனால் மறப்பதைப் போன்றதொரு துரோகம் வேறொன்றுமில்லை. மன்னிக்க வேண்டும். நம்மை. ஒருகணம் கண்ணைமூடி நாம் செய்த தவறுகளை மன்னிக்க முயன்றுபாருங்கள். இயலாது. நம்மை நாமே மன்னிப்பதென்பது சாதாரண விடயம் இல்லை. மன்னிப்பதற்கும் மன்னிக்கப்படுவதற்கும் தகுதிவேண்டும். அது மட்டும் முடியுமானால் நாமெல்லோருமே என்றைக்கோ நல்லவராகியிருப்போம். “மன்னிப்பவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத்தெரிந்தவன் பெரிய மனுஷன்” என்று விருமாண்டியில் ஒரு வசனம் வரும். இங்கே இருவருமே நாமாக இருக்கையில் நாம் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருக்கவேண்டும்? அது முடியாமலேயே வாழ்க்கை முழுக்க குற்ற உணர்ச்சிகளோடு சுற்றித்திருந்து தம் வாழ்வையும் சூழவிருப்பவர் வாழ்வையும் துன்புறுத்துபவர்களே இங்கே அதிகம். தன்னை மன்னிக்க முடியாதபோது அது ஏற்படுத்தும் கோபமும் கழிவிரக்கமும் மற்றவர்கள் மீது திரும்புகிறது. அடுத்த பாடல் வருகிறது. “எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது” மன்னிப்பாயா?
  3. எங்களுக்காக உங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர் தாய் மண்ணின் தடையகற்றிட தணியா மனதின் துணிவு கொண்டு மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர் பதின்ம வயதில் பாசம் அடக்கினீர் பருவவயதில் புலன்கள் அடக்கினீர் பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர் எங்கள் நிலத்தை எமதேயாக்க உங்கள் நிலங்கள் தான் துறந்தீர் சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தீர் ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர் தமிழர் பெயரை தரணியே போற்றிட தானைத் தலைவனின் தலைமை ஏற்றீர் அத்தனையும் எத்தர்களாற் அழிந்துபோனதே எதிரிகள் கைபட்டுக் குலைந்துபோனதே காட்டிக் கொடுக்கும் கயவர் கொடுமையால் கட்டிய கூடும் சிதைந்தே போனதே அத்தனை உயிர்களும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாய் ஆகிட நித்தமும் நாம் நிமிர்வுடன் நின்றது இத்தனை தாண்டியும் இல்லாமற் போனதே ஆண்டுகள் பலவாய் அடுக்கிக் கட்டிய ஆசைகளெல்லாம் நூர்ந்து போனதே ஓசை கொண்டு ஒலித்த குரல்கள் ஒட்டுமொத்தமாய் ஓய்ந்துபோனதே ஆயினும் உங்கள் அளவிடமுடியா அகத்தீயில் கார்முகில் கரையொதுங்க காவலரே உங்கள் கனவு நிறைவேறும் கணப்பொழுது வந்திடும் போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும் அந்தநாள் வரும்வரை அடங்கிடோம் நாம் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய திண்ணிய வீரராய்ப் போர்க்களம் கண்ட துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் ஊரை இழந்து உருகினோம் ஆயினும் மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம் மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம் வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன் வேங்கையானவர் வீரம் மறந்திடோம் கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய உங்களின் வீரம் என்றும் மறந்திடோம் படை நடத்திப் பகைவரை விரட்டித் துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம் கார்த்திகை தோறும் காவலிருக்கிறோம் மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே
  4. ஆக இழப்பை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய இழப்பா சிறிய இழப்பா என்று முடிவு செய்யச் சொல்கிறீர்கள்,உரிமை அரசியல் போய் இனி இழப்பரசியல் போல ...😂 எதையாவது பெற்று நமது இருப்பையாவது தக்க வைப்போம் என்பதற்கு தயாரில்லை, மக்களில் புரட்சி,போராட்டம் வெடிக்கும் ,எமக்காதரவான ஜட்டிகள், இரத்தத்திலக உசுப்பேத்தல்களுக்கு விலை போகும் தேசிக்காய்களும் இருப்பார்கள் தானே இம்முறை மஹிந்த மாபியா கொடுக்கும் டிரீட்மென்டில் கொழுப்பு கரைந்து சோறு முக்கியம் அமைச்சரே என்ற நிலைக்கு அவர்களாவே வருவினம் புதுக்குதிரைகளாவது பரவாயில்லை எஜமானரின் காலடிதான் எங்களிடம் பெரிசாக உரிமை அது இது என்று எதிர்பார்க்கபடாது என்று முன்னாடியே சொல்லிவிட்டு ஓடுகிறார்கள், ஆனால் இந்த பழுத்து போன திருட்டு குதிரைகள் இருக்கு பாருங்கோ எதை நோக்கி ஓடுகிறோம் என்றும் தெரியாது எது பாதை என்றும் தெரியாது ,ஏறுபவர்களை முகங்குப்புற கவுத்துக்கொண்டே கிடக்குதுகள், நன்றாக விழுந்து நங் என்று அடிவாங்கியவைகளும் இவை குருட்டு,திருட்டு குதிரைகள் ஒரு பைசாவுக்கு பிரயோசமற்றவை என்பதை கண்டுபிடித்தவர்களும் திருந்திவிட்டார்கள்
  5. மனதை வாட்டும் வலிகள்….! மனதை வாட்டும் வலிகள் மௌனிக்க வைகிறது சில நொடிகள்…………!!!! மனதில் எழும் உணர்வு வரிகள் வார்த்தைகள் தராமல் தவிக்கிறது சில நொடிகள்………!!!! விழிகளை நனைக்கும் நீர்கூட தீயாய்ச் சுடுகிறது சில நொடிகள்………!!!! வீர மொழி பேசும் என் பேனா எழுத மறுக்கிறது சில நொடிகள்………!!!! எனினும் உறுதி கொள்கிறேன் வலிகள் நிரந்தரமல்ல ……!!!! என் உணர்வு வரிகள் எம் இனத்தின் உறுதி மொழிகள்…!! ஈழ நினைவுகளை மனதில் சுமந்தால்………!!!! உறைந்த குருதியும் தணலாய்க் கொதிக்கும்…!!! விழி நீர் கூட பகையை எரிக்கும்…!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.