Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    13683
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  3. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    10720
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/08/21 in all areas

  1. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ் சரி தானோ.. முறை தானோ.. எந்தன் சமுதாயமே
  2. முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்.....! 😁
  3. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 02, வைகாசி 2009 8 வயதுச் சிறுமியைக் கப்பத்திற்காகக் கடத்திக் கொன்ற கருணா மகள் தினுசிக்காவை கருணாவின் கொலைவெறிக்குப் பலிகொடுத்த தாய் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல்ப் போயிருந்த பாடசாலை மாணவி தினுசிகா சதீஸ்குமாரின் உடல் மட்டக்களப்பு நகரில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இன்று கண்டெடுக்கப்பட்டது. கடத்திக் கொல்லப்பட்ட தினுசிகாவின் பெற்றோர் இதுபற்றிக்கூறுகையில் கருணாவே தமது மகளைக் கடத்திச்சென்று முப்பது லட்சம் ரூபாய்களைக் கப்பமாக வழங்கினால் மட்டுமே உங்களின் குழந்தையைப் பார்க்கமுடியும் என்று கூறியதாகவும், பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கும்போதே தமது குழந்தையை அவர்கள் கொன்றுவிட்டதாகவும் கூறி அழுதிருக்கின்றனர். சதீஸ்குமார் இக்குழந்தையின் தந்த சதீஸ்குமார் சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் கருணாவினால் கடத்தப்படு கப்பப் பணத்தின் ஒருபகுதியைப் பெற்றுக்கொண்ட பிறகு கழுத்தறுத்துக் கொல்லப்பட்டது நினைவிலிருக்கலாம். இக்கடத்தல்களில் கருணாவுடன் முன்னாள் புளொட் உறுப்பினர் ஒருவரும் இணைந்தே ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். கொலப்பட்ட சிறுமியின் தந்தையான சதீஸ்குமார் உடற்பயிற்சி ஆசிரியராக வேலைசெய்துவந்த வேளையிலேயே கருணா குழுவால் கடத்தப்பட்டு வெலிக்கந்தைப் பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும், கப்பம் பகுதியாக அறவிடப்பட்ட பின்னரும் அவர் மிகக் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது செய்தியாக முன்னர் வந்திருந்தன. தினுசிக மட்டக்களப்பு கோட்டைமுனை வித்தியாலயத்தில் பயின்று வந்ததுடன், வழமைபோல பாடசாலையிலிருந்து வீடு திரும்போதே அவர் கருணாவினால் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலைக்குழு ரதீஷ்குமார் முன்னாள் கொலைக்குழு புளொட் மோகனின் நெருங்கிய சகாவான கந்தசாமி ரதீஷ்குமாரே கருணாவுக்கு இப்படுகொலைகளில் உதவிவருவதாகக் கூறும் பெற்றோர்கள், இதேபோன்று பல குடும்பங்களிடமிருந்து ஆட்களைக் கடத்திவைத்து 30 லட்சம் ரூபாய்களைக் கப்பமாகக் கேட்டுவருவதாகக் கூறுகின்றனர். கப்பம் அறவிடுதலினை நியாயப்படுத்திய ரதீஷ்குமார், தனது சகாக்களை வெளிநாடு அனுப்பிவைக்க இப்பணம் தேவைப்படுவதாகக் கூறியிருக்கிறான். மேலும், இவன் முன்னால் அரச ராணுவ கொலைப்படை உறுப்பினரான லெப்டினன்ட் கேர்ணல் நிசாம் முத்தலிப்புடன் நீண்டகாலம் கொலைகளில் ஈடுபட்டு வந்தவன் என்பதும் குறிப்பிடத் தக்கது. ரதீஷ்குமார் மற்றும் சீலன் ஆகிய துணைராணுவக் குழுக்களின் கடத்தல் மற்றும் படுகொலை நிபுணர்கள் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களுக்கு பல கடத்தல்களில் உதவிவருவதுடன், கப்பம் அறவிடுதல், படுகொலை செய்தல் ஆகியவற்றிலும் உதவிவருகின்றனர்.
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, சித்திரை 2009 நான்கு பொதுமக்களை திருகோணமலையில் சுட்டுக் கொன்ற கருணா குழு இலங்கை ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா துணை ராணுவக்குழு திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடத்திய கொலைச் சம்பவங்களில் மூன்று தமிழர்களும் ஒரு முஸ்லீமும் கொல்லப்பட்டைருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் நொச்சிக்குளம் சமாதானப் பேரவையின் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு, கோணேஸ்வரன் 48, நொச்சிக்குளம் சமாதானப் பேரவை தலைவர் சேகர் 60, அமீர் 32, ராசமணி 70. திருமலை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் இப்படுகொலைகள் பற்றி பொலீஸாரிடம் முறையிட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க மறுத்துவருவதாகத் தெரிகிறது. கடந்த இருவாரங்களில் மட்டும் கருணா குழுவினரால திருகோணமலை மாவட்டத்தில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை 15 என்பது குறிப்பிடத் தக்கது. வன்னியில் நடந்துவரும் பாரிய இனவழிப்பு யுத்தத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் திருகோணமலைத் தமிழர்கள் ஈடுபடுவதைத் தடுக்கவே இவ்வாறான அச்சுருத்தல் பாணியிலான படுகொலைகளை கருணா குழு நடத்திவருவதாக திருமலை வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, பங்குனி 2009 சிறுமி வர்ஷா படுகொலை : ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் துணை ராணுவக் குழுக்கள் திருகோணமலைச் சிறுமியான வர்ஷா ஜூட் ரெஜீ என்பவரைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலைசெய்த பாதகத்தினை ஒருவர் மீது ஒருவராக பிள்ளையான் கொலைக்குழுவும் கருணா துணைராணுவக் குழுவும் சாட்டி வருகின்றன. இம்மாதம் 11 ஆம் திகதி ஆறுவயது நிரம்பிய இச்சிறுமி வழமையாக வீடுசெல்லும் முச்சக்கரவண்டிக்காகக் காத்துநின்றபோது, அவரைக் கடத்திச் சென்ற துணைராணுவக் குழு உறுப்பினர்கள் பின்னர் உரைப்பைய்யொன்றில் கொல்லப்பட்ட அவரது உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். கருணா குழுவே இக்கொலையில் ஈடுபட்டதை தம்மால் நிரூபிக்க முடியும் என்று பிள்ளையான் கூறியதுடன், கருணா அரசாங்கத்துடன் இணைந்தபின்னரும் கூட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் தமது கட்சியின் பெயரைப் பாவித்து கடத்தல்கள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், கருணா துணைராணுவக் குழுவின் பேச்சாளர் இனியபாரதி இக்கொலைபற்றித் தெரிவிக்கும்போது, "வர்ஷாவினதும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான கடத்தல்கள், படுகொலைகளை பிள்ளையானே செய்துவருகிறார். இதனையே அவர் இவ்வளவுகாலமும் தொழிலாகச் செய்துவருகிறார்" என்று குற்றஞ்சாட்டியதாக கொழும்புப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட ஆறுபேரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின்பொழுது பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்ற ஒரு துணைப்படை உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இன்னுமொருவர் சயனைட் அருந்தி மரணித்திருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையினை விசாரித்துவரும் பொலிஸார் தமது கடமையினைச் செய்வதை இவ்விரு துணைராணுவக் குழுக்களும் இடையூறு செய்துவருவதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
  6. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மாசி 2009 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக மட்டக்களப்பில் போட்டியிட துணை ராணுவக் குழுத் தலைவர் கருணா முடிவு மட்டக்களப்பில் அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைச் சந்தித்துப் பேசிய கருணா தனக்கும் தனது சகாக்கள் 6 பேருக்கும் இத்தேர்தலில் வெல்வதற்கான உதவிகளையும் ஆதரவினையும் அவர்கள் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் நீக்கப்பட்டு, கருணாவுக்கு ஆதரவானவர்கள் அவ்விடங்களுக்கு அமர்த்தப்பட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பை அவர் நடத்தியிருக்கிறார். கிழக்குப் பல்கலை கழகத்தின் உயர் அதிகாரிகள், வட்டாரக் கல்வி அதிகாரிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகிய பதவிகளை வகித்து வந்த வடமாகணத்தைச் சேர்ந்த பலர் தமது பதவிகளை உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டும் என்று மிரட்டப்பட்டு, அப்பதவிகளுக்கு கருணாவுக்கு ஆதரவானவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவான அதிகாரிகளும் இலக்குவைக்கப்பட்டு, பதவிகளில் இருந்து அகற்றப்பட்டு வருகிறார்கள் என்று செய்திகள் வந்திருக்கின்றன. இவ்வாறான பல அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்ற கருணா குழு ஆயுதமுனையில் அவர்களை மிரட்டி ராஜினாமாச் செய்ய வைத்ததை பாதிக்கப்பட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் குழுவுக்குச் சார்பான அதிகாரிகளும் கருணா குழுவால் இலக்குவைக்கப்பட்டு தூக்கப்பட்டு வருவதுடன், வாகரைப் பகுதியில் பாடசாலை அதிபர்களைச் சந்தித்த கருணா, "உங்களின் தலைகள் உடம்பில் இருக்கவேண்டும் என்றால் யோசித்து முடிவெடுங்கள், இல்லையேல் தலை இருக்காது" என்று பகிரங்கமாக ஒரு கூட்டத்தில் மிரட்டியதாக அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். அவ்வாறே கிழக்கு பல்கலைக் கழக பதிவாளரும் துப்பாக்கிமுனையில் மிரட்டப்பட்டு ராஜினாமாச் செய்யவைக்கப்பட்டிருக்கிறார்.
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, கார்த்திகை 2008 முன்னாள் விடுதலைப் புலிகள் இருவரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைராணுவக் குழு அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு முன்னாள் விடுதலைப் புலிகளை கருணா துணை ராணுவக்குழு சுட்டுக் கொன்றிருக்கிறது. கொல்லப்பட்டவர்களுடன் நின்றிருந்த இன்னொருவரை அக்குழு கடத்திச் சென்றிருக்கிறது. கொலைச் சம்பவத்தினையடுத்து அப்பகுதிக்கு வந்த பொலீஸ் கொல்லப்பட்டவர்களுள் ஒருவரின் மனைவியை விசாரணைக்கென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட முன்னால் போராளிகளின் விபரங்கள், பாலகிருஷ்ணன் விஜயராஜ் அல்லது அர்ஜுன், 30, ஒரு பிள்ளையின் தந்தை, 2 ஆம் குறிச்சி கண்ணகிபுரத்தில் வசித்து வந்தவர். ர. அன்புமணி, 22, ஆலையடிவேம்பைச் சேர்ந்தவர். விஜயராஜாவின் மனைவி விசித்திராவே பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டவராவார். கருணா துணைராணுவக் குழுவால் கடத்திச் செல்லப்பட்ட மூன்றாவது நபர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. கொல்லப்பட்ட இரு போராளிகளின் உடல்களையும் கருணா துணைப்படை அவ்விடத்தில் இருந்து இழுத்துச் சென்றதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். சம்பவ இடத்திலிருந்து பொலீஸார் டி 56 ரக துப்பாக்கியொன்றையும் கண்டெடுத்திருக்கிறார்கள்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2008 பங்குடாவெளி உள்வீட்டுக் கொலைகளையடுத்து கடத்தப்பட்ட உறுப்பினர்களின் உறவினர்கள் கடந்த வியாழன் இரவு பங்குடாவெளியில் அமைந்திருந்த துணைராணுவக்குழு முகாமில் நடந்த உட்கொலைகளைகள் மற்றும் 7 பேரின் தலைமறைவினையடுத்து, இவ்வாறு சகாக்களைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ள 7 பேரின் உறவினர்கள் 9 பேரை துணை ராணுவக் குழு கடத்திச் சென்றிருக்கிறது. இந்தக் கடத்தலினையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், கடத்தப்பட்டவர்களின் 3 சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துணைராணுவக்குழு முகாமில் நடந்த உட்கொலைகளையடுத்து அப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட துணைராணுவக் குழுவும் விசேட அதிரடிப்படையுமே சின்னக் கொலனி எனப்படும் பகுதியில் இந்த உறவினர்களைப் பலவந்தமாகத் தமது வெள்ளை வான்களில் ஏற்றிச்சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட 9 அப்பாவிகளினது விபரங்கள், பாலப்போடி செங்கமலம் (40), சிவலிங்கம் விமலதேவி (22), லிங்கேஸ்வரன் ஜனூபா (10), லிங்கேஸ்வரன் ஜனுராஜன் (8), செல்வராஜா தேவராஜா ( 42), முத்தைய்யா ராசாத்தி ( 40), தேவராசா குமார் (25), தேவராசா சுமன் (14), தேவராசா சுமேந்திரன் (17)
  9. https://fb.watch/3wo4Qo8xvh/ சின்னங் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா தந்தையும் மகளும் ... அழியாத நினைவுகள்
  10. பாடல்: காலை அதிகாலை படம்: நடுவன் இசை: தரன் குமார் வரிகள்: கார்க்கி & Dr Burn பாடியவர்: சிட் சிறிராம்
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, கார்த்திகை 2008 தொடரும் துணைராணுவக் கொலைக்குழுக்களின் உள்வீட்டுப் படுகொலைகள் : பிள்ளையானின் ஆலோசகர் ரகு கொழும்பில் கருணாவால் படுகொலை ரகு எனப்படும் பிள்ளையான் குழு ஆலோசகர் குமாரசுவாமி நந்தகோபன் அவுஸ்த்திரேலியாவிலிருந்து கிளம்பி இலங்கை சென்று பிள்ளையானின் பிரத்தியேக ஆலோசகராக செயற்பட்டுவந்த ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோபன் மற்றும் பிள்ளையானின் இன்னொரு சகா ஆகியோர் கொழும்பில் கடந்த வெள்ளியன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். பிள்ளையான் கொலைக்குழுவின் முன்னைநாள் பேச்சாளர் ஆசாத் மெளலானாவின் மோட்டர் வண்டியில் அத்துருகிரியப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போதே கருணா துணைராணுவக் குழு ஆயுததாரிகளால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். லண்டனில் இருந்து நாடுகடத்தப்பட்ட கருணா, தான் நாடுகடத்தப்பட்ட நாளில் இருந்து ரகுவை துணைராணுவக் குழுவிலிருந்து அகற்றுமாறு பலமுறை பிள்ளையானுக்கு எச்சரித்து வந்ததாகவும், பிள்ளையான் தொடர்ந்தும் கருணாவின் கட்டளையினை ஏற்கமறுத்ததாலாயே ரகு கருணாவால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 38 வயது நிரம்பிய ரகு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய 3 மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்றும் தெரியவருகிறது. பிள்ளையானின் துணைராணுவக் கொலைக்குழு அரசியற்கட்சியாக பதிவுசெய்யப்பட்டதையடுத்து கடந்த வருடம்தான் ரகு அவுஸ்த்திரேலியாவிலிருந்து இலங்கைவந்து இணைந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ரகுவுடன் கொல்லப்பட்ட மற்றையவர் 29 வயதுடைய சமீர் ராஜ்குமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். பிள்ளையானுக்கும் கருணாவுக்குமிடையிலான மோதால் தீவிரமடைந்துவருவதாக அரச புலநாய்வுத்துறை அரசுக்கு அறிவித்த சில நாட்களிலேயே இத்தாக்குதல் கருணாவால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ரகு கொல்லப்பட்ட இடத்தினை பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் வந்து பார்த்ததாகவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர். துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, கார்த்திகை 2008 தொடரும் துணைராணுவக் கொலைக்குழுக்களின் உள்வீட்டுப் படுகொலைகள் : பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழு முகாமில் தாக்குதல், இருவர் பலி எழுவர் ஆயுதங்களுடன் தலைமறைவு கரடியனாறு பகுதியில் பங்குடாவெளியில் அமைந்திருந்த பிள்ளையான் துணைராணுவக் குழு முகாமில் இடம்பெற்ற தாக்குதலில் மதன் மற்றும் மணி எனப்படும் துணை ராணுவக் கூலிகள் கொல்லப்பட்டதோடு மேலும் 7 பேர் அம்முகாமிலிருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகியுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழன் அன்று நடந்த இத்தாக்குதலில் பிள்ளையான் குழுவினுள் செயற்பட்டுவந்த புலிகளின் உறுப்பினர்களே இதனைச் செய்ததாக பொலீஸார் தெரிவிக்கின்றனர். செங்கலடி பதுளை வீதியில் அமைந்திருந்த இம்முகாம் மட்டு நகரிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கிறது.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2008 வவுணதீவு துணைராணுவக் குழு முகாம் மீது தாக்குதல் வவுணதீவு, மங்கிக்காடு பகுதியில் அமைந்திருந்த துணைராணுவக் குழு முகாம் மீது திங்கள் அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரு துணைராணுவக் கூலிகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் புலிகள் கூறியுள்ளனர். காயமடைந்த நால்வரும் தப்பியோடிவிட்டதாக அவ்ர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஐந்து தானியங்கித் துப்பாக்கிகள், ஆர் பி ஜீ க்கள், ரவைகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள் உட்பட சில ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவில் இந்த துணைராணுவ முகாம் அமைந்திருந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து 13 கிலோமீட்டர்கள் தென்கிழக்கில் அமைந்திருக்கும் இம்முகாமில் நடந்த தாக்குதல் உள்வீட்டு வேலையாய் இருக்கலாம் என்று மட்டக்களப்பு பொலீஸார் கூறியிருக்கின்றனர். வர்மன் எனப்படும் துணைராணுவக் குழு உறுப்பினரும் இன்னும் மூவரும் இத்தாக்குதலை உள்ளிருந்து நடத்திவிட்டு புலிகளிடம் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
  13. ஈழத்துச் சிதம்பரம்|சிவதாண்டவம்
  14. முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே... கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல்..
  15. வானத்துத் தாரகைகள் எல்லாம் பூமியில் இறங்கி வந்ததோ......கலர்புல்லான நடனம் .......! 😁
  16. பானுக்குள் வெண்ணைய தடவும் வேகம்..👌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.