Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    23926
    Posts
  3. மல்லிகை வாசம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    9
    Points
    1662
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/11/21 in all areas

  1. பூசாரியார் அவர்கள் விட்டமின் D யை நேரடியாக பெற்றுக் கொண்டிருக்கின்றார்.😺
  2. எந்த இரை யாருக்கு என்று விதிக்கப்பட்டதோ அந்த இரை அவர்களுக்கே கிடைக்கும்.......! 🤔
  3. குட்டி யாழ்ப்பாணம் Markham and Steeles Plaza .. கலக்குது கலக்குது கனடா கலக்குது. 😎
  4. 1965 ? ..பொங்கல் - துணிகடை பரிதாபம்கள்..☺️..😊
  5. அவர் புத்தன் என்ற ஐடியை தான் பாவிப்பதில்லை ...மற்ற ஜடிகள் வேலை செய்யுது 😁
  6. புத்தன் கள உறவு ஒருவர் இரண்டு வாரங்களுக்கு மேல் எந்தப் பதிவையும் இடாத போது தானியங்கியால் அவர் கருத்துக்கள உறவுகள் நிலையில் இருந்து கருத்துக்கள பார்வையாளர் நிலைக்கு நகர்த்தப்பட்டு விடுவார். இந்த உறுப்பினர் பிரிவில் உள்ளவர்களால் பச்சைப் புள்ளிகளை இட முடியாது. (நீங்கள் இறுதியாக சனவரி 9 இன் பின் இன்றுதான் கருத்து ஒன்றை வைத்துள்ளீர்கள்.) இவ்வாறு பார்வையாளர் நிலைக்கு நகர்த்தப்பட்டுவிட்ட ஒரு உறுப்பினர் மீண்டும் ஒரு வாரத்திற்குள் குறிப்பிட்ட எண்ணைக்கையில் பதிவுகளை இட்ட பின் அவர் மீண்டும் கருத்துக்கள உறவுகள் நிலையிற்கு நகர்த்தப்படுவார். இந்த செயற்பாடு, கருத்துகள் எதுவும் வைக்காது வெறுமனே பச்சை குத்த விரும்புகின்றவர்களை கருத்தாடச் செய்வதற்காகவும், பச்சைப் புள்ளிகளை தவறாக பயன்படுத்த முனைகின்றவர்களை கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட ஒரு செயற்பாடு.
  7. புலிகள் ஏன் அழிக்கப்பட்டார்கள்?
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, கார்த்திகை 2010 பிள்ளையான் கொலைக்குழு முக்கிய ஆயுததாரி பொலீஸாரினால் கைது கிழக்கு மாகாண முதலமைச்சரும் கொலைக்குழுத் தலைவனுமான பிள்ளையானின் நெருங்கிய சகா அஜித் என்பவரை பொலீஸார் வாழைச்சேனையில் இன்று கைதுசெய்துள்ளனர். பிள்ளையான் கொலைக்குழுவின் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினரான வடிவேல் ரவிச்சந்திரன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மோட்டார் வான் ஒன்றைத் திருடியதற்காக அஜித் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. வடிவேல் என்கின்ற பிள்ளையான் கொலைக்குழுவின் உள்ளூர் அரசியல்வாதி ஏற்கனவே கொள்ளையில் ஈடுபட்டு நுவரெலியப் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அஜித் எனும் ஆயுததாரி கருணாவும் பிள்ளையானும் இணைந்து கொலைக்குழுவாக இயங்கியபொழுது அவர்களுக்காக வாழைச்சேனைப் பகுதியில் கடத்தல்கள், கொள்ளைகள், கப்பத்திற்காக ஆட்களைக் கடத்துதல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டவர் என்றும், அப்பகுதி மக்களால் மிகவும் பயத்துடன் பார்க்கப்பட்டு வந்தவர் என்றும் கூறப்படுகிறது. இக்காலப் பகுதியில் அஜித், வடிவேல் மற்றும் ஜெயந்தன் ஆகிய பிள்ளையான் கருணா கொலைக்குழு முக்கியஸ்த்தர்கள் முஸ்லீம் ஒருவரின் வாகனத்தைக் கடத்தி தமது கொள்ளைச் சம்பவங்களுக்கும், பணத்திற்காக ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகளுக்கும் பாவித்துவந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட இந்த வாகனத்தை இன்னொரு முஸ்லீமுக்கு இவர்கள் விற்க முற்பட்டபோதே இதுபற்றித் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வாழைச்சேனை பிரதேசசபை உதவி தலைவர் ரவிச்சந்திரன் வடிவேலை பொலிஸார் கைதுசெய்தபோதே அஜித் எனும் ஆயுததாரிபற்றிய தகவல்களும் வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது.
  9. கிழக்குப் பல்கலைக்கழகக் கொலைகள்............. பல்கலைக்கழக பெண்கள் விடுதி மேற்பார்வையாளர் பிரேமலதா படுகொலை செய்யப்பட்டு சரியாக மூன்று நாட்களுக்குப் பின்னர், அதாவது மாசி மாதம் 26 ஆம் திகதி வன்னியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கலைப்பீட மாணவி நிருஷா தனபாலசிங்கம் இதே துணை ராணுவப் படையினரால் கொல்லப்பட்டார். அவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பல்கலைக் கழக நிர்வாகம் காட்ட முயன்றபோதும், அவர் கருணா குழுவினரால் விடுதி மேற்பார்வையாளர் கொல்லப்பட்டதைப் போன்றே கொல்லப்பட்டிருப்பதாக உடன் படித்த மாணவர்களும் பெற்றோர்களும் நம்புகின்றனர். இக்கொலைகள் நடந்து ஒருமாதம் முடிவடைந்த நிலையில், அதாவது 22 ஆம் திகதி பங்குனி அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டில் கல்விபயின்று வந்த சுதர்சனா ரவீந்திரனின் சடலம் முற்றாகக் கருக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இப்படுகொலைகள் கருணா குழுவால் நடத்தப்பட்ட வேளையில் பல்கலைக் கழகம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்விசார் நிறுவனங்களிலும் கருணா குழு தமக்குச் சார்பானவர்களை நியமித்து அவற்றைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்ததுடன், வடமாகாண அதிகாரிகளை பணிநீக்கம் செய்தும், சிலரைப் படுகொலை செய்தும் வந்தது நினைவிலிருக்கலாம்.
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, மார்கழி 2010 கிழக்குப் பல்கலைக்கழகக் கொலைகள் 2009 மாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வன்னியில் அகோரமாக இனக்கொலை நடந்துவரும் வேளையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பெண்கள் விடுதி மேற்பார்வையாளரும் வன்னியைச் சேர்ந்த இன்னும் இரு பல்கலைக் கழக மாணவிகளும் மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் கட்டளையின் கீழ் அவரது ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மட்டக்களப்புப் பத்திரிக்கையாளர்கள் இக்கொலையில் ஈடுபட்ட கருணா துணை ராணுவக் குழு உறுப்பினரை மேற்கோள்காட்டி தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை கருணா துணை ராணுவக் குழுவில் படுகொலைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட இனியபாரதி எனப்படும் ஆயுததாரியின் நெருங்கிய சகாவான பாண்டிருப்பினைப் பிறப்பிடமாகக் கொண்ட 54 வயது நபர் சுருக்கிட்ட நிலையில் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகக் கல்முனைப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். கல்முனைப் பொலீஸ் நிலைய அதிகாரி சதாக் இதுபற்றிக் கூறுகையில் தூக்கிட்டுக் கொண்டவரின் பெயர் செல்லையா பிரேமதாசன் என்றும், இவர் மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட ஆயுததாரி இனியபாரதியுடன் மிக நெருக்கமானவர் என்றும் தெரிவித்திருக்கிறார். இதேவேளை கிழக்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முன்னாள் துணை ராணுவக்குழு உறுப்பினர் கருணாவின் நேரடி கட்டளையின் பேரிலேயே வன்னியைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவிகள் உட்பட மேற்பார்வையாளரையும் தாம் கொன்றதாகக் கூறியிருக்கிறார். வன்னியில் நடந்துவந்த அகோரங்களுக்கு மத்தியில் கிழக்கில் கருணா மேற்கொண்ட படுகொலைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இலங்கை ராணுவத்திடமிருந்து கருணா துணைராணுவக் குழுவிற்கு வழங்கப்பட்ட "வன்னியைச் சேர்ந்தவர்களைக் கொல்லுங்கள்" என்னும் கட்டளைக்கு இணங்க கருணாவினால் வழிநடத்தப்பட்ட வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த துணைராணுவ ஆயுததாரி இப்பெண்கள் மூவரையும் கொன்றதாக அந்த முன்னாள் துணைப்படையுறுப்பினர் மேலும் தெரிவித்தார். மேலும் இதுபற்றித் தெரியவருவதாவது, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த மற்றும் கல்விகற்றுவந்த வன்னியையும், வடமாகாணத்தையும் சேர்ந்தவர்களைக் கொல்வதற்கான திட்டம் கருணாவினால் வாழைச்சேனையைச் சேர்ந்த ஆயுததாரி ஒருவரிடம் வழங்கப்பட்டது. இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையுடன் இயங்கும் இந்த ஆயுததாரி போலவே, இன்னும் வேறு ஆயுததாரிகள் கிழக்கில் வாழ்ந்துவந்த வன்னியைச் சார்ந்தவர்களைக் களையெடுக்கும் பணிக்கு கருணாவினால் அமர்த்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் கூறினார். சுதந்திரக் கட்சியில் கருணா இணைந்துகொண்டு, அவரது நெருங்கிய சகாக்கள் இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத்துறையுடன் நெருங்கிச் செயற்படத் தொடங்கிய காலத்திலேயே வன்னியைச் சேர்ந்த இரு மாணவிகள் உட்பட மூன்று பெண்கள் கருணாவினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. ஆனால், கருணா குழு ஆயுததாரிகளின் இருப்பை மறைத்துவந்த அரசாங்கம் அவர்கள் தம்மிடமிருந்த ஆயுதங்களைக் கையளித்துவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துவிட்டதாகப் பிரச்சாரப்படுத்தி வந்தது நினைவிலிருக்கலாம். 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் 23 ஆம் திகதி பல்கலைக் கழகத்தினுள் நுழைந்த கருணா கொலைக்குழு ஆயுததாரிகள் அங்கே பெண்கள் விடுதி மேற்பார்வையாளராக இருந்த சித்தாண்டியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய மாரிமுத்து பிரேமலதா என்பவரிடம் விடுதியில் இருக்கும் வன்னியைச் சேர்ந்த பெண்களை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த பிரேமலதா மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த கருணா கொலைக்குழுவினர் அவ்விடத்திலேயே அவரைக் கொன்றுபோட்டனர். இந்த கருணா கொலைக்குழு ஆயுததாரி, மருத்துவ அதிகாரிகளை மிரட்டி மரணத்திற்கான காரணம் தற்கொலை என்று அறிக்கை சமர்ப்பிக்கும்படி செய்ததாகவும், பெற்றோர் இறுதிவரை தமது மகள் கருணா குழுவினராலேயே கொல்லப்பட்டதாகக் கூறி, மருத்துவ அறிக்கையினை நிராகரித்துவிட்டதாகவும் அந்த முன்னாள் துணைராணுவக்குழு உறுப்பினர் கிழக்குப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
  11. வாழையினால் ஆன சறுக்கு மரம் ஏறுதல் செம ஜோக்.........! 😂
  12. 1954 குமுதம் முதல் பக்கம்.👍 சிங்க மார்க்கு பட்டாசு விளம்பரம் ( கடைசி பக்கம் ).👌
  13. நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததுமுதல் இன்றுவரை எனக்கு ஊக்கம் தந்து எழுதத் தூண்டிய யாழ்க்கள உறவு மீராவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் ஆதரித்திருக்காவிட்டால் தொடர்ந்திருப்பேனோ என்றுகூட யோசித்திருக்கிறேன். நன்றி !
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஐப்பசி 2010 கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த மறுக்கும் கிழக்கு மாகாண முதலைமைச்சர் பிள்ளையான் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களாலும், முஸ்லீம்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் தமிழர்களின் நிலங்களைக் காப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும், ராணுவப் புலநாய்வுத்துறையால் இயக்கப்படும் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ச்சியாக மறுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் செல்வராசா குற்றஞ்சாட்டியிருக்கிறார். தொடர்ச்சியாக இதுபற்றி தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் முறைப்பாடுகளை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கும் பிள்ளையான், தமிழர்களது காணிகள் பறிபோவதை மெளனமாக அனுமதித்துக்கொண்டிருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. தமிழருக்கெதிரான ஆட்கடத்தல்கள, கப்பம் கோருதல்கள், காணாமற்போதல்கள், படுகொலைகள என்று பாரிய வன்முறைகளை பிள்ளையானினதும் கருணாவினதும் கொலைக்குழுக்கள் தமிழ் மக்கள் மேல் ஏவியிருக்கும் நிலையில், தமிழர்களின் நிலம் இன்று சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், தமிழர்கள் எல்லாவிதத்திலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். அரச சார்பற்ற சில தொண்டு நிறுவனங்களாலும், சில தன்னார்வ அமைப்புக்களின் உதவியினாலும் அன்றி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியிருப்பது சாத்தியப்பட்டிருக்காது என்றும் அவர் மேலும் கூறினார். மிகக் கொடூரமான யுத்த அழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு வாழ் தமிழர்களுக்கான எந்த நிவாரணத்தையும் இந்த அரசாங்கம் இதுவரை வழங்க மறுத்துவருவதுடன், அவர்களிடம் மீதமாக எஞ்சியிருக்கும் நிலத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது அநியாயம் என்று அவர் மேலும் தெரிவித்தார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=32799
  15. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2010 துணை ராணுவக் குழுக்கள் மற்றும் இலங்கை ராணுவத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனிடம் முறையிட்ட மட்டக்களப்பு மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் கொலைக்குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு போன்றவை இம்மாவட்டத்தில் மேற்கொண்டுவரும் ஆட்கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் என்பன பற்றி பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட கண்துடைப்பு அமைப்பான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்திருக்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை மட்டுமே குறைந்தது 490 கடத்தல்கள் , காணாமற்போதல்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய முறைப்பாட்டினை இந்தக் கொமிஷனிடம் செங்கலடியில் வைத்து மக்கள் கையளித்தனர். இதேவேளை இந்த விசாரணைகளை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் மட்டுமே தம்மால் விசாரிக்கமுடியும் என்று இந்த கண்துடைப்பு அமைப்பு பிடிவாதமாக மறுத்துவருவதென்பது, இனக்கொலையொன்றினைத் திட்டமிட்டு மறைக்கும் செயலே என்று காணமலாக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர். துணைராணுவக் குழுக்களின் உதயத்தின்பிறகு மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் பற்றியும், காணாமற்போதல்கள் பற்றியும் விசாரிக்க மறுக்கும் இந்த குழு, பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ராணுவத்தின் தேவைக்காக கருணாவும், பிள்ளையானும் கடத்திச் சென்றதைப் பற்றி விசாரிக்க மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது. இக்குழுவின் முன்னால் சாட்சியமளித்த சாட்சிகள், தம்மை ராணுவப் புல்நாய்வுப்பிரிவு என்று அடையாளம் காட்டிக்கொண்டு ஆட்களைக் கைதுசெய்யும் நபர்கள் கைதுசெய்யப்பட்டவர்களை அருகிலிருக்கும் பொலீஸ் நிலையத்திற்குக் கொண்டுசென்று விடுதலை செய்தபின்னர், துணைராணுவக்குழுக்கள் அன்றிரவே வந்து அதே இளைஞர்களைக் கடத்திச் செல்வதாக சாட்சியமளித்தனர். வேறொரு சாட்சி இதுபற்றிக் கூறுகையில் ராணுவப் புலநாய்வுத்துறை என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் பல லட்சம் ரூபாய்களைத் தந்தால் உங்களது பிள்ளைகளை விடுவிப்போம் என்றோ அல்லது கடத்தியவர்கள் பற்றிய தகவல்களைத் தருவோம் என்றோ கூறி மக்களிடம் கப்பம் அறவிடுவதாகவும் தெரிவித்தனர். துணைராணுவக் குழுக்களான கருணாவும் பிள்ளையானும் கிரான், வாழைச்சேனை, வந்தாறுமூலை மற்றும் வாகரை பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளைக் கடத்திச் சென்றுள்ளதாகவும், இவ்வாறு கடத்திசெல்;ல்ப்படுபவர்கள் பற்றி முறைப்பாடு செய்தால் குடும்பத்தில் மீதமுள்ளோரையும் கடத்துவோம் என்று மிரட்டியதாகவும் சாட்சி சொல்லப்பட்டிருக்கிரது. ராணுவப் புலநாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக் குழுக்களினால் மயிலந்தனை, புல்லுமலை, தோணித்தாட்டமடு, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, வாகரை ஆகிய மட்டக்களப்பு மாவட்ட கிராமங்களில் இருந்தும், திராய்க்கேணி, உடும்பன்குளம், சின்னவத்தை, கண்ணபுரம் கொலனி 35, கரவாக்கு, வீரமுனை மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய அம்பாறை மாவட்டக் கிராமங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் இனவழிப்பு அரசாங்கத்தின் கட்டளையின்படி கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, புரட்டாதி 2010 இலங்கை அரசாங்கமே ஆட்களைக் கடத்துகிறது - கொலைக்குழுத் தலைவர் பிள்ளையானின் பிரச்சாரச் செயலாளர் குற்றச்சாட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும்பெயரில் இயங்கிவரும் ராணுவ புலநாய்வுப்பிரிவின் கொலைக்குழுவான பிள்ளையான் குழுவின் பிரச்சாரப் பொறுப்பாளர் கொம்மாதுறைப் பகுதியில் பொதுமக்களுடன் நடத்திய சந்திப்பொன்றில் பேசும்பொழுது, மட்டக்களப்பில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நடந்துவரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்று கூறியுள்ளார். இதேவேளை, இவரது கூற்றுப்பற்றிக் கருத்துக் கூறிய மட்டக்களப்பு மக்கள் பிள்ளையானின் கொலைக்குழுவும், இன்னொரு துணைராணுவக் குழுவான கருணா குழுவுமே மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள், கப்பம் கோருதல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அரசின் உயர்மட்டத்தினரின் ஆசீர்வாதத்துடனேயே இது நடப்பதாகவும் விசனம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இதுபற்றிக் கூறிய மக்கள் கடத்தல்களை அரசுதான் பொறுப்பெடுக்கவேண்டும் என்று கூறும் இந்த துணைராணுவக் குழுக்களின் தலைவர்கள் அதே அரசில் முதலமைச்சராகவும் இன்னொருவர் பிரதியமைச்சராகவும் இருந்துகொண்டு அரசுதான் பொறுப்பெடுக்கவேண்டும் என்று கூறுவது விசித்திரமானது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். பணத்திற்காக சிறுவர்களைக் கடத்திக் கொல்லும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வரும் கருணா மற்றும் பிள்ளையான், தம்மீது மக்களுக்கு ஏற்பட்டுவரும் அதிருப்த்தியைத் திசை திருப்புவதற்காக தமது உறுப்பினர்களையே கடத்திவைத்துக்கொண்டு ராணுவப் புலநாய்வுத்துறை அவர்களைக் கடத்திச் செல்வதாக நாடகம் ஆடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=32624
  17. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, ஆனி 2010 துணைராணுவக் குழுத் தலைவர் கருணா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் இலங்கை ராணுவத்தால் வழிநடத்தப்படும் துணைராணுவக்குழுவொன்றின் தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த வியாழன் அன்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். மகிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்றத்தில் உதவியமைச்சராக துணைராணுவக் குழுத் தலைவர் தெரிவுசெய்யப்பட்டபின் நடக்கும் முதலாவது யாழ்ப்பாண விஜயம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ சகிதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த துணை ராணுவக் குழுத் தலைவர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் குறித்தே கவனம் செலுத்த வந்தேன் என்று கூறினார். இதன்போது முஸ்லீம் நல்வாழ்வுக் கழகம் மற்றும் அரச அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். இதேவேளை யாழ் சிவில் சமூக அமைப்புக்கள் இவரது யாழ்ப்பாண வருகைபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், கருணா இறுதியாக யாழ்ப்பாணத்தில் நின்றது 1990 ஆம் ஆண்டு முஸ்லீம்களை யாழ்க்குடா நாட்டிலிருந்து வெளியேற்றும் புலிகளின் நடவடிக்கையின்போதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். முதலில் பொரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கருணா அங்கு முஸ்லீம் சமூக நலக் கழகத்தைச் சந்தித்ததுடன் பின்னர் யாழ்ப்பாண செயலகத்தில் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களை அவர்களது சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்த தேவையான நடவடிக்கைகள் பற்றிப் பேசினார். இங்கு பேசிய கருணா, முஸ்லீம்கள் தமது மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை இலங்கை அரசின் அனுமதியுடன் செல்வந்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க பலமுறை முயன்றபோதும் அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=31995
  18. எல்லோரும் வாசிக்கிறோம் அங்கின இங்கின குத்தி பச்சை முடிந்து போவதால் எல்லாவற்றுக்கும் பச்சை போடா முடிவதில்லை. நாங்கள் வாசிக்கிறோமோ இல்லையோ வாசிக்க வேண்டியவர்கள் வாசிக்கிறார்கள் அதுதான் திண்ணை பாண் போரானை மாதிரி கொதிக்குது மாவை குழைத்து திணையில் வைத்து பாண் வெத்துக்கலாம் போல இருக்கு
  19. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, ஆனி , 2010 கல்முனையில் கருணா துணைராணுவக்குழுவும், பிள்ளையான் கொலைக்குழுவும் அரசியல்வாதிகளுக்காகக் கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் ஹரிஸ் கருணா துணைராணுவக் குழுவும், பிள்ளையான் கொலைக்குழுவும் அரசியல்வாதிகளின் ஆதரவோடு கல்முனையில் ஆட்களைக் கடத்திப் பணம் பறிப்பதிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கொள்ளைகளில் ஈடுபடும் துணைராணுவக் குழுவினர் தொடர்பான விபரங்களை தாம் பொலீஸாருக்கு வழங்கியபொழுதும், அவர்கள் அதுதொடர்பாக நடவடிக்கை எதனையும் எடுக்க முன்வரவில்லையென்றும் அவர் மேலும் கூறினார். இதேவேளை கல்முனைப் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா இதுபற்றிக் கூறுகையில், தாம் இந்த துணைராணுவக் கொள்ளையர்களைக் கைதுசெய்தபோதிலும் அரச உயர்மட்டத்திலிருந்து வரும் அழுத்தத்தினால் அவர்களை விடுதலை செய்யவேண்டி ஏற்படுவதாகக் கூறியிருக்கிறார். ஹரிஸ் அவர்கள் மேலும் கூறுகையில், இதே துணைராணுவக் குழுவினரே கடந்த காலத் தேர்தல்களிலும் வாக்குமோசடி மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்றும், அரச நிகழ்வுகளிலும், கல்விசார் நடவடிக்கைகளிலும் அநாவசியமாகத் தலையிட்டு மக்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். கல்முனைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா மேலும் இதுபற்றிக் கூறுகையில், கடந்த இருவாரங்களில் மட்டும் கல்முனைக்குடியிருப்பு, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் வியாபார நிலையங்களிலும், பொதுமக்கள் வீடுகளிலும் இக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைகளில் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகள், பொருட்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும் கருணா துணைராணுவக் குழு முக்கியஸ்த்தருமான இனியபாரதியே இப்பகுதிகளில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், படுகொலைகள், கப்பம் கோரல்கள் மற்றும் கொள்ளைகளுக்குப் பொறுப்பாக விளங்குவதாகத் தெரியவந்திருக்கிறது. தேர்தல் காலத்தில் பாரிய வாக்கு மோசடியில் ஈடுபட்ட இனியபாரதி தற்பொழுது இப்பகுதியில் சிவில் நடவடிக்கைகளிலும், கல்விசார் நடவடிக்கைகளிலும் தலையீடு செய்வதாக அதிகாரிகள் முறையிட்டு வருகின்றனர். http://4.bp.blogspot.com/_otWn2PlEOdY/RuuJdJKuG4I/AAAAAAAABBU/6rDspiSxIKc/s1600/tmvpkaruna-pillaiyan-iniyaparathinew1.jpg இனியபாரதியின் அடாவடித்தனம் குறித்து முறைப்பாடுகளை அம்பாறை வாழ் தமிழ்பேசும் மக்கள் பொலீஸாரிடம் கொடுத்திருக்கின்றனர். பொலீஸாருக்கு இனியபாரதி மற்றும் அவருடன் சேர்ந்து கொள்ளைகளில் ஈடுபடும் நபர்களது விபரங்கள் தெரிந்தபொழுதும்கூட, மகிந்த ராஜபக்ஷவின் தலையீட்டினால் அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் தாம் இருப்பதாக விசனம் தெரிவித்திருக்கின்றனர். வெளிப்படையாக வாகனங்களில் ஆயுதங்கள் சகிதம் உலாவரும் இனியபாரதியும், அவரது சகாக்களும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சங்கடங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்திவருவதாக பொலீஸாரும் மக்களும் தெரிவிக்கின்றனர்.
  20. ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே ......! 💞
  21. இரு சூப்பர்ஸ்டார்களான தியாகராஜ பாகவதரும், எம்.ஜி.ஆரும் ஒரே பாடலில். 'சர்வகுண போதன்...' பாடல் அஷோக்குமார் திரைப்படம் (1941)
  22. இரக்கம் மிகுந்த கரத்திலே காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே கண்விழித்து பார்த்திருந்தேன் பேசவே (2) விரைந்து என்னில் வந்திடுவாய் மகிழ்ந்து உன்னை ஏற்றிடுவேன் (2) மகிழ்ந்து உன்னை ஏற்றிடுவேன் 1.உயிராக நீ வந்தால் உடலாகி இணைந்திடுவேன் உறவாக நீ கலந்தால் உள்ளத்தை தந்திடுவேன் (2) மழையாக நீ பொழிந்தால் மண்ணாகி குளிர்ந்திடுவேன் மலராக நீ மலர்ந்தாய் மணமாக மாறிடுவேன் மணமாக மாறிடுவேன். 2.கதிராக நீ வந்தால் பொழுதாக புலர்ந்திடுவேன் கலையாக நீ வளர்ந்தால் இமையாமல் ரசித்திடுவேன் விழியாக நீ பிறந்தால் ஒளியோடு வாழ்ந்திடுவேன் அன்பாக நீ கரைந்தால் உன் அடிமை ஆகிடுவேன் உன் அடிமை ஆகிடுவேன்.++
  23. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கைகளை ஏந்திவிட்டேன்.. கண்ணீரை சிந்திவிட்டேன்.
  24. திருக்கேதீஸ்வரம் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையர்
  25. தாயாக அன்பு செய்யும்........... இறைவா.......... என் வாழ்விலே........ ஒளி ஏற்ற வா........ தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீர் தானய்யா சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்ற வா -(2) கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2 பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா. 1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன் நான் என்றும் உன் சாயல் தானே உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2) 2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் மீட்டிடுவேன் உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன் எல்லாமே நீர் தானே இறைவா என் உள்ள நிறைவாக நீ வா-(2) இறைவா நீ ஒரு சங்கீதம்
  26. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  27. அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் யாழ்பாணம்
  28. செல்வமே தெய்வீக மலரே குழந்தை இயேசு அந்தோணியார் பேரச் சொன்னா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.