Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  2. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    53011
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23926
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20029
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/25/21 in Posts

  1. 18.03.2021அன்று எனது கவி வரிகளில் உருவான இந்த பாடலை யாழ் இணையத்துள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்க்கின்றேன். நன்றிகள். அன்புடன் பசுவூர்க்கோபி-
  2. தள்ளாடும் வயது வருமுன்பு தனக்கென சேமித்து கொள்; தனித்து விடப்படடாலும் , தளராமல், தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழலாம்.
  3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜைக் கொல்வதற்கு கருணாவிடம் 50 மில்லியன் ரூபாய்களைக் கொடுத்தார் கோட்டாபய ராஜபக்ஷெ - பொலீஸ் அதிகாரி சாட்சியம் முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மனிதவுரிமை சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் அவர்களைக் கொல்வதற்கு அந்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷெ துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரி கருணாவுக்கு 50 மில்லியன் ரூபாய்களை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னால் சாட்சியமளித்த முன்னாள் தேசிய புலநாய்வுத்துறை பொலீஸ் உத்தியோகத்தர் லியனராச்சி அபெயரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷெ அப் பொலீஸ் அதிகாரி மேலும் சாட்சியமளிக்கையில், கருணாவுக்கான இந்தக் கொடுப்பனவு பாதுகாப்பு அமைச்சகத்தினூடாக, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியான வசந்தவினால் வழங்கப்பட்டதென்று கூறினார். ரவிராஜைக் கொல்வதற்கான இந்தப் பேரத்தின்பொழுது பிரதிப் பொலீஸ் மா அதிபர் கீர்த்தி கஜனாயக்க மற்றும் தேசிய புலநாய்வுச் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகர் மஹில் டோலேயும் சமூகமளித்திருந்தனர் என்று அவர் மேலும் கூறினார். பங்குனி மாதம் 2 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை இப்படுகொலைப் பேரத்தினை கண்ணால்க் கண்ட சாட்சியான அஞ்செலோ ரோய் என்பவரை மீண்டும் வழக்கு நீதிமன்றில் விசாரிக்கப்படுமிடத்து சமூகமளிக்கும்படியும் கோரப்பட்டது. முன்னாள்ப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் நாள் கொழும்பிலிருந்த அவரின் வீட்டிற்கு மிக அருகாமையில் வாகனத்தில் செல்ல எத்தனிக்கும்போது கருணா துணைராணுவக் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவிராஜைக் கொன்றது மகிந்த ராஜபக்ஷெவின் அரசுதான் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் குற்றஞ்சாட்டிய நிலையில், அரசு இதனை மறுத்திருந்தது.
  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோசேப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரைக் கொன்றது கருணாவும் டக்கிளஸும் தான் - பாராளுமன்ற உறுப்பினர் ரொபேட் பிளேக்கிடம் தெரிவிப்பு : விக்கிலீக்ஸ் வெளியீடு ! "இலங்கையில் அரசின் பின்புலத்தில் இயங்கிவரும் துணைராணுவக் குழுக்களில் கருணா குழுவே மிகக் கொடூரமானதும் வீரியம் மிக்கதாகவும் காணப்படுகிறது. ஆட்களைக் கடத்துதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் என்பவற்றில் இக்குழுவே முன்னின்று செயற்பட்டு வருகிறது". "கடந்த பங்குனி மாதம் 20 ஆம் திகதி எனைச் சந்தித்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டவல்லுனருமான க. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கருணாவைக் கொண்டு இலங்கையரசாங்கம் படுகொலை செய்யும் என்று நாம் அச்சப்படுகிறோம் என்று என்னிடம் கூறினார்". "இதேபோல் கொழும்பு மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுமக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான மனோ கணேசன் அவர்களும் இதே வகையான அச்ச உணர்வு தனக்கும் இருக்கிறதென்று கடந்த பங்குனி 29 ஆம் திகதிச் சந்திப்பில் எம்மிடம் கூறினார். இவர்களைப்போலவே இன்னும் பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும், சில முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கருணாவினால் தாம் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தில் இருப்பது தெரிகிறது". "திரு விக்னேஸ்வரன் மேலும் கூறுகையில், கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தைக் கொல்லும் திட்டத்தினைத் தீட்டிய கருணா, டக்கிளஸ் தேவானந்தாவின் ஆதரவுடன் நத்தார் ஆராதனையில் அவரைக் கொன்றார் என்று எம்மிடம் தெரிவித்தார். அவ்வாறே கடந்த 2006, கார்த்திகை 10 ஆம் திகதி யாழ்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல மனிதவுரிமைச் சட்டத்தரணியுமான திரு நடராஜா ரவிராஜ் அவர்களைக் கொழும்பில் திட்டம் தீட்டிக் கொன்றது கூட கருணாதான் என்று அவர் எம்மிடம் மேலும் கூறினார்". பிரபல துணைராணுவக் கொலைக்குழு முக்கியஸ்த்தர்கள் கருணா மற்றும் டக்கிளஸ் தேவானந்தாவுடன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அமெரிக்கத் தூதுவர் ரொபேட் பிளேக்கினால் வோஷிங்க்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பின் விக்கிலீக்ஸின் வெளியீடு பின்வருமாறு சொல்கிறது. "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருவானவர் பேர்ணாட் எம்முடன் பேசும்போது கருணா தனது துணைராணுவக் குழுவின் நடவடிக்கைகளை கிழக்கில் மட்டுமல்லாமல் வடக்கிற்கும் விஸ்த்தரித்திருப்பதாகக் கூறினார். 2005 கார்த்திகை முதல் 2007 மாசி வரை குறைந்தது 747 தமிழர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கருணாவினால் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று எம்மிடம் கூறிய குருவானவர், இவற்றுள் கடந்த 2007 பங்குனி மாதத்தில் மட்டும் கருணாவினால் 52 தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்" "காணமலாக்கப்பட்டவர்களைப்பற்றிய விசாரணைகளுக்கென்று மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் கமிஷனிடம் தான் சேகரித்த 200 கடத்தல்கள் பற்றிய முறைப்பாடுகளை வழங்கியதாகவும், ஆனால் இவ்விசாரணைக் கமிஷனின் தலைவரும் ஜனாதிபதி மகிந்தவின் நெருங்கிய நண்பருமான திலகரட்ன மஹநாம இதுவரையில் எந்தவொரு கடத்தல்பற்றியும் நடவடிக்கை எடுக்க மறுத்துவருவதாகவும் அவர் மேலும் கூறினார்" "யாழ்ப்பாணத்தில் கருணாவினால் நடத்தப்பட்ட 747 கடத்தல்களில் பல சம்பவங்களில் பொலீஸாரின் அசமந்தத்தினாலும், அரச இடையூறுகளினாலும் தன்னால் 200 கடத்தல்கள் பற்றிய விபரங்களையே சேகரித்து ஆவணப்படுத்த முடிந்ததாகக் கூறும் குருவானவர், இவ்வாறான ஒரு கடத்தல் சம்பவத்தில் புலிகளின் அனுதாபியொருவரைக் கடத்திச்சென்ற கருணா குழு அவரது உறவினர்களிடம் கருணாவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டியை கொடுத்துவிட்டு "இவனின் காலம் முடிந்துவிட்டது" எனும் தொனியில் கூறிவிட்டுச் சென்றதாக முறையிடப்பட்டிருப்பதாகக் கூறினார்" என்று ரொபேட் ஓ பிளேக்கினால் வோஷிங்டனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  5. கருணாவைப் பாவித்து ஊடகவியலாளர்களுக்குக் கொலைப்பயமுறுத்தல் விடுத்த கோத்தா விக்கிலீக்ஸில் வெளிவந்த செய்தி : செய்தி அனுப்பப்பட்ட நாள், மே 18, 2007. அனுப்பியவர் அமெரிக்கத் தூதர் ரொபேட் ஓ பிளேக் "கருணாவுக்கு தாம் ஆதரவளிக்கவில்லையென்று அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும் கூட, கடந்தமாதம் 16 ஆம் திகதி அஸோஸியேட்டட் பிரஸ் அமைப்பின் தென்னாசிய நிருபர் மத்தியூ ரொசென்பேர்க்கிற்கு அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தா வழங்கிய செவ்வியின் ஒலிவடிவம் கிடைக்கப்பெற்றது. அச்செவ்வியில் கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை வானளாவப் புகழ்ந்த கோத்தாபய, கருணாவின் உதவியின் மூலம் ராணுவத்திற்குக் கிடைத்த நண்மைகள் , வெற்றிகள் பற்றிப் பெருமையாகப் பேசினார்" என்று வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் ரொபேட் பிளேக் குறிப்பிட்டிருக்கிறார். கோத்தாவும் கருணாவும் விக்கிலீக்ஸில் வெளிவந்த இந்தச் செய்திக்குறிப்பை கொழும்பு டெலிகிராப் வெளியிட்டிருக்கின்றது. "உச்ச பட்ச ரகசியம்" என்று குறிப்பிடப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த செய்திக்குறிப்பில் கருணா தலைமையிலான துணைராணுவக் கொலைக்குவின் நடவடிக்கைகள் பற்றி அது விளக்குகிறது. இச்செய்திக் குறிப்பு அன்றைய தூதுவர் ரொபேட் பிளேக்கினால் மே மாதம் 18 ஆம் திகதி, 2007 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அதேவேளை, கடந்த சித்திரை மாதம் 16 ஆம் திகதி டெயிலி மிரர் பத்திரிக்கையின் ஆசிரியர் சம்பிக்க லியனாராச்சி அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, வாகரையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் முகம்கொடுத்துவரும் இன்னல்கள் பற்றிய எழுதியதற்காக அவரையும், அச்செய்தியைச் சேகரித்து வழங்கிய நிருபரையும் (விபச்சாரி என்று விழித்து) "கருணாவைக் கொண்டு கொல்வேன்" என்று மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து சம்பிக்க லியனராச்சி கருணாவைத் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசியபோது, "நீங்கள் கவலைப்படவேண்டாம், நான் உங்களைக் கொல்லப்போவதில்லை, கோத்தா சும்மாதான் சொல்கிறார்" என்று பதிலளித்திருக்கிறார். ரொபேட் பிளேக்கினால் வோஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட முழுச் செய்திக்குறிப்பின் விபரம் கீழே: "அரசாங்கத்தின் உதவியுடன் கருணா துணைராணுவக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் கடந்தவருடத்தில் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. கருணாவைக் கொண்டும், டக்கிளஸைக் கொண்டும் புலிகளுக்கு ஆதரவானவர்களையும், அனுதாபிகளையும் கொன்றுவரும் அரச ராணுவம் பழியினை இலகுவாக இக்கொலைக் குழுக்கள் மீது போட்டுவிட்டுத் தப்பிவிடுகிறது". "இந்த துணைராணுவக் கொலைக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் அரசாங்கம் கண்துடைப்பிற்காக கடத்தல்களையும் காணாமற்போதல்களையும் விசாரிக்க தனிநபர் விசாரணைக் கமிஷன் ஒன்றினையும் நிறுவப்போவதாகக் கூறிவருகிறது. ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம், வெளிநாட்டில் சரிந்திருக்கும் தனது பெயரினை மீள கட்டியெழுப்பவே அது செய்கிறதென்பதும், உள்நாட்டில் உண்மையாகவே மனிதவுரிமை மீறல்களை அடக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லையென்பதும் தெளிவானது". "கொழும்பிற்கு வெளியே இந்த துணைராணுவக் குழுக்களால் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள், பிள்ளைகளைக் கடத்துதல், சிறுவர்களைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கப்பம் அறவிடுதல் ஆகிய விடயங்கள் அரசின் ஆசீர்வாதத்துடன் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன". "பெரும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் ராஜபக்ஷேவின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட துணைராணுவக் குழுக்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை முற்றாக நிறுத்தியிருப்பதோடு, கருணா மற்றும் டக்கிளஸ் ஆகிய துணைராணுவக் குழுக்கள் நேரடியாகவே மக்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவதை ஊக்குவித்து வருவது தெரிகிறது". "இந்த துணைராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான நெருக்கம் பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு உள்ளூர் தொடர்புகள் மூலம் மேலும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
  6. ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய் முருகா வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் மாசு சேரழுபி றப்பையும் அறுத்த உமை தந்தவாழ்வே காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில்நாகை காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர் திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா . . . முருகா
  7. அமலோற்பவியே தாயே நீயே.. இறைவனின் திருக்குலமே வருக அரச குரு குலமே வருக(2) கரையில்லா கருணையில் கனிவுடன் காக்கும் இணையில்லா இறைவனின் திருவடி பாடியே மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து விரைந்து பணிவோம் அவர் பதமே 1. தாயின் கருவில் தோன்றும் முன்பே தயவாய் நம்மை தெரிந்தார் தனிப்பெரும் கருணையில் நம் பெயரெல்லாம் தம் கையில் பொறித்து வைத்தார் தாயாக நாளும் சேயாக நம்மை கண்போல காக்கின்றார் இந்நாளில் நாமும் ஒன்றாகக்கூடி பண்பாடி பணிந்திடுவோம் 2. அரணும் கோட்டையும் கேடயமானவர் அவர் புகழ் பாடிடுவோம் வாழ்வும் வழியும் வலிமையும் ஆனவர் அவரடி பணிந்திடுவோம் வற்றாத நதியாய் அருள் வாரி வழங்கும் பலிபீடம் சூழ்ந்திடுவோம் அருளோடு நாமும் உறவோடு வாழ்வோம் உலகோர்க்கும் உரைத்திடுவோம்
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  9. உலக விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் நம்ம விஞ்ஞானிகள் .......சும்மா மிரட்டுகிறார்கள்.....! 👏
  10. பானை அடியில் ஓட்டை யாக இருக்கிறது , தண்ணீர் ஒழுகாதா......! 🤔
  11. 4021..? பரிணாம வளர்ச்சில இதுவும் நடக்கலாம்..
  12. அன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......
  13. வழி இல்லாதபோது அடிமையாக பவ்வியமாக இருப்பதும், திடீரென்று பணக்காரனாகி பவிசு வந்ததும் விரலைக் காட்டுவதும் ஒரு நல்ல மனிதருக்கு அழகில்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.