Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87997
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/05/21 in all areas

  1. "தெரிந்த ரகசியம்" சிவராமை கருணாவே கொன்றான் என்பது புலிகளுக்குத் தெரிந்தே இருந்தது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அரச புலநாய்வுத்துறையும், தமிழ் துணைராணுவக் குழுவும் இப்படுகொலையின் பின்னால் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். சிவராமைக் கொன்றவர்களைக் கைதுசெய்வதில் பொலீஸாருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் விசாரணைகள் இங்கிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமற்றதாகவே படுகிறது. அரசின் பலம்வாய்ந்த ஒரு பிரிவு மக்களைக் கடத்திச் சென்று படுகொலை செய்யும்போது, பலமற்ற இன்னொரு பிரிவு அப்படுகொலைகளை விசாரிப்பதென்பது இயலாத காரியம். ஆகவே, சிவராமின் படுகொலையும் விசாரிக்கப்படமுடியாத படுகொலைகளின் நீண்டுசெல்லும் பட்டியலில் சேர்க்கப்படப்போகிறதென்பது திண்ணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிவராமை கருணாவே கொன்றான் என்பது ஓரளவிற்குத் தெரிந்த "ரகசியம்" என்றே எண்ணத் தோன்றுகிறது. கருணாவே சிவராமைக் கொன்றான் என்பதை புலிகள் வெளிப்படையாகக்ச் சொல்லாமைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, தமக்குச் சார்பான பத்திரிக்கையாளர் ஒருவரைக் கருணாவோடு இணைந்து ராணுவப் புலநாய்வுத்துறை கொல்வதென்பது, மீதமிருக்கும் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான பத்திரிக்கையாளர்களை முடக்கிப் போட்டு விடும் என்பது மட்டுமல்லாமல், கருணாவுக்கு தேவையற்ற விளம்பரத்தை வழங்குவதையும் அவர்கள் விரும்பியிருக்கவில்லையென்றும் சொல்லப்படுகிறது. அதேவேளை, தனது பழிவாங்கலினை நேர்த்தியாகச் செய்துமுடித்த கருணாவினால்க் கூட சிவராமைக் கொன்று பழிதீர்த்த தனது வீரப் பிரதாபத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமற் போய்விட்டது. தனது பிரதேசவாத மாயைக்குள் சில அடிவருடிகளை இழுத்துவைத்திருக்கும் கருணா, தனது சொந்தப் பழிவாங்களுக்காகவே மட்டக்களப்பைச் சேர்ந்த சிவராமைக் கொன்றான் என்பது வெளிவரும் பட்சத்தில் அவர்களுக்குள் தான் பற்றிய சந்தேகங்கள் எழலாம் என்று அவன் கருதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படுகொலையில் இருக்கும் மிக முக்கியமான அபாயம் யாதெனில், இனிவரும் கொடூரமான பலபடுகொலைகளுக்கு இது முன்னோடியாக இருக்கப்போவதுதான். சந்திரிக்காவின் அரசாங்கத்திலிருக்கும் மிகப் பலம் வாய்ந்த அமைச்சரும், ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டுவருபவருமான ஒருவரின் ஆசீர்வாதம் இப்படுகொலையின் பின்னால் இருந்திருக்கிறதென்பது மிகவும் ஆபத்தானது. அரச ஆதரவுடன் இனிமேல் நடக்கவிருக்கும் இம்மாதிரியான பல படுகொலைகளைத் தடுப்பதற்கு காட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். சர்வதேசத்திலிருந்து வரக்கூடிய அழுத்தங்களினால் மட்டுமே இவ்வாறான அரச மயப்படுத்தப்பட்ட படுகொலைகளை தற்காலிகமாத் தன்னும் நிறுத்திவைக்க முடியும். ஆங்கில மூலம் : டி பி எஸ் ஜெயராஜ் தமிழில் : ரஞ்சித் உங்கள் போன்றவர்களின் ஆதரவே என்னை தொடர்ந்தும் இத்துரோகிகள் பற்றித் தேடித் தேடி எழுதத் தூண்டுகிறது. மிக்க நன்றி சிறி !
  2. சுவியர்... உங்களுக்கு, தோழரா... பெருமாள். தமிழ்நாட்டு முகநூலை, அடிக்கடி பார்த்ததால்... வந்த பாதிப்பு என நினைக்கின்றேன். 🤣
  3. கொல்லப்படுமுன் சிவராம் சித்திரவதை செய்யப்பட்டாரா? காலை 1 மணியிருக்கும், தலங்கமை பொலீஸ் நிலையத்திற்கு தன்னை யாரென்று அறிமுகம் செய்துகொள்ள விரும்பாத ஒருவர் தொலைபேசியில் அழைத்து, இலங்கை - ஜப்பான் நட்புறவு வீதியில், தியவன்னா ஓயா ஆற்றுக்கு அருகில் ஒரு சடலம் கிடப்பதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டிருக்கிறார். பாராளுமன்றம் அமைந்திருக்கும் சிறி ஜெயவர்த்தனபுர கோட்டே பகுதியில், பாராளுமன்றத்திற்குப் பின்புறமாக , சுமார் 500 மீட்டர்கள் தொலைவில், கிம்புலா எலச் சந்தியின் அருகில் இருந்த பற்றைக் காடுகளுக்குள்ளிருந்து ஒரு சடலத்தைப் பொலீஸார் கண்டெடுத்தனர். சடலத்தை அடையாளம் காட்டிய சிவராமின் குடும்பத்தாரும் நண்பர்களும் அது சிவராமினுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தினர். புள்ளிபோட்ட கைக்குட்டை ஒன்றினால் சிவராமின் வாய் அடைக்கப்பட்டு, அவரது கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலைகாரர்கள் அவரது பின்னந்தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் தாக்கியிருப்பதற்கான காயம் தெரிந்தது. தன்னைக் கடத்தியவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சிவராம் போராடியிருப்பது அவரது உடலில் இருந்த காயங்களூடாக அனுமானிக்க முடிந்தது. தொடர்ச்சியாகத் தம்முடன் முரண்டுபிடித்த சிவராமை மயக்கமடையச் செய்ய கொலைகாரர்கள் அவரைத் தாக்கியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இறுதியாக, அவரைக் கடத்தியவர்கள் அவரின் முன்னால் நின்று, கைக்கெட்டும் தொலைவில் 9 மில்லி மீட்டர் பிறவுனிங் கைத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். ஒரு சன்னம் அவரது கழுத்தினூடாக நெஞ்சுப்பகுதிக்கும், இரண்டாவது சன்னம் அவரது கையைத் துளைத்துக்கொண்டு உடம்பினுள்ளும் புகுந்திருக்கிறது. அவர் சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டிருக்கலாம் எனும் தகவல்கள் அவரது பின்னந்தலையில் விழுந்த அடியை வைத்தே சொல்லப்பட்டிருக்கலாம். அவரது சடலத்தினருகில் 9 மில்லி மீட்டர்கள் சன்னத்தின் இரு வெற்று ரவைகள் கண்டெடுக்கப்பட்டதுடன், மிகச்சிறியளவான குருதியே கசிந்து காணப்பட்டிருக்கிறது. கொழும்பு மருத்துவ பீடத்திற்காகு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்ட சிவராமின் உடலை மருத்துவர் ஜேன் பெரேரா பரிசோதனை செய்திருந்தார். பரிசோதனைகளின் முடிவில் சிவராம் கொல்லப்படுமுன் சித்திரவதை செய்யப்பட்டதற்கான சான்றுகள் அவரது உடலில் காணப்படவில்லை என்று அவர் கூறினார். சர்வதேசமெங்கும் இருந்து வந்த கண்டனங்கள் மருத்துவர் பெரேரா தொடர்ந்தும் கூறுகையில், "பின்னந்தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டு சிவராம் கீழே வீழ்ந்திருக்க, அவரது தோற்பட்டையூடாக நெஞ்சுப்பகுதி நோக்கி இருமுறை சுட்டிருக்கிறார்கள். அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சிவராமின் கண்கள் வீங்கியிருந்ததன் காரணம் அவரது பின்னந்தலையில் வீழ்ந்த அடியினால் அன்றி, துப்பாக்கிச் சன்னங்க்கள் உடலினுள் உட்புகும்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்டதாகும். சிவராமின் கொலை அதிகாலை 12:30 மணிக்கும் 1:00 மணிக்கும் இடையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது" என்று கூறினார். சிவராமின் கோழைத்தனமான படுகொலை சர்வதேசமெங்கிலும் இருந்து பலத்த கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷெ, ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். சிவராமைப் புலிப்பயங்கரவாதி என்று கடுமையாக விமர்சித்துவந்த ஜே வி பி யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இப்படுகொலைபற்றி மெளனம் சாதித்திருந்தார். சர்வதேசத்திலிருந்து வந்த கண்டனங்களில் ஜப்பான் நாட்டு தூதர், அகியோ சூடாவின் கண்டனம் முக்கியமானது. சிவராமுடன் நெருங்கிச் செயற்பட்டுவந்த அகியோ சூடா, சிவராமை ஜப்பானுக்கு விஜயம் செய்யும்படி அழைத்திருந்தார். தென்னாசியாவில் ஜப்பானின் செயற்பாடுகள் தொடர்பில் சிவராமுடன் ஜப்பானிய அரசு பேசிவந்தது. சிவராம் கொல்லப்பட்டு, வீசி எறியப்பட்ட வீதி ஜப்பான் - இலங்கை நல்லுறவு அமைப்பினால் கட்டப்பட்டது என்பதும், ஜப்பானுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் நோக்குடனேயே அவரது சடலம் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகர் சரத் லூகொட தலைமையில் நான்கு பொலீஸ் குழுக்கள் சிவராமின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தன. 75 இற்கும் மேற்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டதுடன், சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டன. ஆனால், விசாரணைகளில் எதுவித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. பம்பலப்பிட்டிய பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக கடத்தப்பட்டு, நாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் பின்புறத்தில் கொல்லப்பட்டு வீசப்பட்ட ஒருவரின் படுகொலை தொடர்பான விசாரணைகள் எங்குசென்று முடியும் என்பது ஊகிக்கக் கடிணமானதொரு விடயமாக இருந்திருக்காது. சிவராமுக்கு இறுதியாக வந்த தொலைபேசியழைப்பு அவரைக் கடத்தியவ்ரிடமிருந்தே வந்ததாகப் பொலீஸார் சந்தேகிக்கின்றனர். சிவராமின் கவனத்தைத் திசை திருப்பவும், தாம் கடத்தப்போவது சிவராமைத்தான் என்பதை உறுதிப்படுத்தவுமே கடத்தல்க்காரர்கள் அவரை தொலைபேசியில் அழைத்ததாக கருதப்படுகிறது. இதேவேளை மதுபான விடுதியில் இருந்தவேளை சிவராமுக்கு நான்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகவும், இருமுறை அவரே அழைப்புக்களை ஏற்படுத்தியதாகவும் தெரியவந்திருக்கிறது. சிவராமின் தொலைபேசி மீடகப்படுமிடத்து அவரைத் தொடர்புகொண்டவர்களையோ அல்லது கடத்திக் கொன்றவர்களையோ அடையாளம் காணமுடியும் என்றபோதும், இதுவரை அவரது தொலைபேசி கண்டுபிடிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. "நான் 777 - 311 - 380 என்ற இலக்கத்திற்கு சித்திரை 29 மற்றும் 30 ஆகிய இருநாட்களில் பலதடவைகள் அழைப்புகளை மேற்கொள்ள முயன்றேன். ஆனால், தொலைபேசியைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் வைகாசி முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை தொலைபேசிக்கான அழைப்புகளை என்னால் மேற்கொள்ள முடிந்தது, ஆனால் எவரும் பதிலளிக்கவில்லை".
  4. மேநாள்..! *********** உழைப்பாளர் தினம் 18ம் நூற்றாண்டின் போராடிப் பெற்றதிற்கான வெற்றித்தினம்-இந்த மேதினம்.. ஆனால் இன்றும் ஆதிக்க அரசியல் முதலாளி.. வர்க்கத்துக்கு எதிராக போராடவேண்டிய தினம். உலகெங்கும் இன்று லீவுநாள். முதலாளிகளுக்கு ஆடம்பர நாள் அன்றாட தொழிலாளர்களுக்கு-இது பட்டணியின் நாள். இருந்தாலும் எல்லோரையும் துரத்தும் பொது எதிரியின் நாள் அதுதான் “கொரோனாவின் நாள்” உயிர் காக்க அனைவரும் இணைந்து.. போராடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி- 01.05.2021
  5. தோழர் சுவியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  6. ரஞ்சித்.... சிவராமின், கொலைக்கு காரணமானவர்களை.... உங்கள் கட்டுரையின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தியமைக்கு நன்றி.
  7. எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே நீரின்றி ஒன்றில்லையே - இங்கு நீர்தானே என் எல்லையே 1. என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2 உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே 2. பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே தேவா எழுந்து வா ...
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  9. மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா ! தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார். கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார். சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம். கருணாவை எதிர்த்து நின்ற சிவராம் கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார். அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை. புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின் ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது. சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர். ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட, புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது. இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும் , தனது கையாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது. அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.
  10. சுட்டுக்கொன்றபின் சிவராமை வீதியில் எறிந்துவிட்டுச் சென்ற கொலைகாரர்கள் அவரை வேறு எங்காவது இழுத்துச் சென்று கொன்றிருக்கலாம். வேறு எங்காவது அவரது உடலை வீசியெறிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மிகச்சிறிய அளவிலான இரத்தமே கணப்பட்டிருகிறது. ஆகவே, அவர் வேறு எங்கோ சுடப்பட்டு, இறக்கும் தறுவாயில் இங்கே கொண்டுவந்து வீசப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு. அவரது உயிர் தியவன்னா வாவியில் பிரிந்திருந்தாலும்கூட, அவரது உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூடுகள் வேறு எங்கோதான் நடத்தப்பட்டிருக்கின்றன. அருகில் கிடந்த வெற்றுக் கூடுகள் அவரை அங்கே கொன்றதாகக் காட்டுவதற்காக கொலையாளிகளால் வேண்டுமென்றே போடப்பட்டவை என்பது உறுதியாகிறது. இலங்கை காவல்த்துறையிடம் கொலை தொடர்பான விசாரணைகளை திறம்படச் செய்வதற்கான கருவிகள் இல்லையென்பது படுகொலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாமல்ப் போகக் காரணமாயிருக்கிறது....... அப்படியானால், சிவராம் எங்கே வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்? இதற்கான மிக இலகுவான பதில், கொலைகாரன் எங்கே அவருக்காகக் காத்திருந்தானோ, அங்கேதான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அப்படியானால் அவரைக் கொன்றது யார்? இதற்கான ஒரே பதில் சிவராமைக் கொல்வதற்கு தனது பதுங்குமிடத்தைவிட்டு வெளியே வந்தால் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்று அஞ்சி, சிவராமைத் தனது காலடியில் கடத்திவந்து வீழ்த்தும்படி கடத்தல்க்காரர்களை ஏவிய ஒருவன். கிழக்கில் கருணாவுக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளின்படி சிவராமை தனது கைத்துப்பாகியால் சுட்டுக் கொன்றது கருணாவே என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான காரணமாக அவர்களால் பின்வரும் சம்பவங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
  11. விடையளிக்கப்படாத கேள்விகள் சிவராம் கடத்தப்பட்ட இரவில், அவர் மது அருந்திய விடுதிப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அவருடன் அன்றிரவு மது அருந்திய ஏனைய மூவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். கடத்தல்க்காரர்கள் சிவராம் விடுதியில் இருப்பதை நன்கு அறிந்தே வைத்திருந்ததுடன், அவருக்காக சுமார் 2 மணித்தியாலங்கள் வரை அப்பகுதியில் காத்திருந்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு எப்படித் தெரியும், எவ்வாறு தெரியும்? சிவராம் விடுதியிலிருந்து முன்னதாகவே கிளபியிருந்தால், அவர்கள் 2 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியிருக்காது. சிவராமும், சகாக்களும் இரவு 9 மணிக்கே தமது மதுபானங்களுக்கான பணத்தைச் செலுத்துவிட்டுக் கிளம்பத் தயாராகியிருக்கிறார்கள். ஆனால், மீதி மூவரில் ஒருவர் இன்னும் கொஞ்சம் அருந்தலாம் என்று தொடர்ந்து மதுபானங்களை வரவழைத்திருக்கிறார். முதலில் எண்ணியவாறே 9 மணிக்கு அவர்கள் வெளியேறியிருந்தால், இக்கடத்தல் பிற்போடப்பட்டிருக்கலாம். அப்படியானால், சிவராமும் நண்பர்களும் 9 மணிக்குக் கிளம்பபப்போவதை கடத்தல்க்காரர்கள் அறிந்திருந்தார்களா? அப்படியானால் அதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியது யார்? அடுத்ததாக, சிவராமை பம்பலப்பீட்டி பொலீஸ் நிலையத்திற்கு முன்னால், பொலீஸ் காவலரண் வீதியைப் பார்த்திருக்க அமைக்கப்பட்டிருக்கும்போது, அங்குசென்று தனது முறைப்பாட்டினைப் பதிவுசெய்யாமல் சிவராமின் நண்பர் குசால் வெறுமனே வீடு சென்றது ஏன்? இப்படுகொலையில் மிகவும் பாரதூரமான விடயம் யாதெனில், இதன்மூலம் கொலையாளர்கள் சொல்லும் செய்தி. தமிழ் ஊடககங்கள் இருபிரதான விடயங்கள் பற்றிப்பேசுகின்றன. முதலாவது விஅடயம், சிவராம் கடத்தப்பட்ட விடுதியும், அமைவிடமும் பம்பலப்பிட்டி பொலீஸார் அதிகம் நடமாடும், காவலுக்கு நிற்கும் ஒரு பகுதியென்பதும், அவரைக் கடத்திச் சென்றவர்கள் பொலீஸ் நிலையத்தின்முன்பாக குறைந்தது 2 மணித்தியாலங்கள் வரையாவது எதுவித பிரச்சினைகளும் இல்லாமல், சுதந்திரமாக நடமாடித் திரிந்திருக்கிறார்கள் என்பது. இரண்டாவது, நாட்டின் அதியுச்ச பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பாராளுமன்றத்தின் பின்புறத்தில், அரச காவல்த்துறையினதோ ராணுவத்தினதோ கண்களில் படாமல் சிவராம் படுகொலைசெய்யப்பட்டு அவரது உடல் வீதியின் அருகில் வீசப்பட்டிருப்பது. ஆக, இவற்றிலிருந்து தெரியவருவது யாதெனில், இப்படுகொலையுடன் அரசும், பாதுகாப்புத்துறையும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதான். வேண்டுமென்றே கொலைகாரர்களால் விடப்பட்ட சாட்சியங்கள் இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில், இவை எதுவுமே தவறுதலாக கொலைகாரர்களால் விடப்பட்ட சாட்சியங்கள் அல்ல. மாறாக வேண்டுமென்றே, ஒரு செய்தியை சொல்லும் நோக்கத்துடன் விடப்பட்டவை. அதில் முக்கியமான செய்தி, புலிகளை ஆதரிக்கும் தமிழ் மக்களுக்கும், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க எச்சரிக்கை. சிவராமின் கடத்தலும் படுகொலையும் சொல்லும் இன்னொரு விடயம் இவற்றிற்கு அரச பாதுகாப்புப் பிரிவே பொறுப்பாக இருக்கிறதென்பது. தமிழ்மக்களை குறியாக வைத்து நடத்தப்பட்டிருக்கும் இப்படுகொலைமூலம், புலிகளுக்கு ஆதரவாக இருந்தால், அரசே உங்களைக்கொல்லும் என்னும் மிகத் தெளிவான எச்சரிக்கை ஒன்றினை அரசு விடுத்திருப்பதாகவே படுகிறது. அத்துடன், படுகொலை செய்யப்பட்ட சிவராம் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகில் வீசப்பட்டதன் காரணம், "சிங்கள பெளத்த " அரசின் அதிகாரமே இப்படுகொலையினைச் செய்கிறதென்பதைக் காட்டவே என்று கருதப்படுகிறது. இப்படுகொலையில் புரியாத விடயம் என்னவென்றால், சிவராம் கடத்தப்பட்டு இரு மணிநேரத்திற்குள்ளேயே கொல்லப்பட்டுவிட்டார் என்பது. அவரைக் கொல்வதுதான் கடத்தல்க்காரர்களின் நோக்கம் என்றால், அவரை பம்பலப்பிட்டியில் வைத்தே சுட்டுக் கொன்றிருக்கலாம். கடத்திச்சென்று அல்லற்படவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை !
  12. சிவராமின் படுகொலையுடன் கருணாவின் தொடர்பு புலிகளின் ஊடகமான நிதர்சனத்தில் வெளிவந்த செய்திக்குறிப்பில் கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி கடத்தல்க்காரர்கள் நால்வரில் ஒருவன் என்று குறிப்பிட்டிருக்கிறது. சிவராம் படுகொலை செய்யப்பட்டு சரியாக 24 மணிநேரங்களின் பின்னர் இனியபாரதியும், அவனது முஸ்லீம் சகாவான எம் எம் பெளசரும் அம்பாறைச் சோதனைச் சாவடியொன்றில் பொலீஸாரால் சாதாரண வீதிச் சோதனையொன்றில் கைத்துப்பாக்கி வைத்திருந்தமைக்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து சிவராமைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட 9 மிமீ பிறவுனிங் ரகக் கைத்துப்பாகியும் இன்னும் 16 சன்னங்களும் மீடகப்பட்டன. நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்ட இவர்கள் இருவரும் சிலநாட்கள் காவலில் வைக்கப்பட்டு, கருணாவின் கட்டளைகளின்படி மொனராகலைப் பகுதியில் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டதாகத் தெரியவருகிறது. பொலீஸார் இப்படுகொலை தொடர்பில் உண்மையாகவே விசாரணைகளை மேற்கொள்ள விரும்பினால், இனியபாரதியைக் கடுமையாக விசாரிப்பது அவசியமாகும். மட்டக்களப்பு - பொலொன்னறுவ மாவட்ட எல்லைகளில் நடக்கும் பல படுகொலைகள் கடத்தல்களுடன் அவனது பெயர் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுப் பேசப்பட்டு வருகிறது. சந்திரிக்காவின் அரசாங்கம் கிழக்கில் நடக்கும் படுகொலைகள் பற்றியும், கருணா - பிள்ளையான் போட்டிக் குழுக்களுக்கிடையேயான வன்முறைகள் பற்றியும் உண்மையான கரிசனை கொண்டிருந்தால், இனியபாரதி எனப்படும் இந்த முக்கிய கருணா குழு கொலையாளி தொடர்ந்தும் விசாரிக்கப்படுதல் அவசியம். முறையான, நீதியான முறையில் இடம்பெறும் விசாரணைகள் தனிநபர் கமிஷன்களைவிட பயனுள்ளதாக அமையும்.
  13. கடத்தல்............. சிவராமை சில நபர்கள் இழுத்துச் செல்ல முயற்சிப்பது கண்டு அவரை விடுவிக்க அவரை நோக்கி "சிவா" என்று கூச்சலிட்டுக்கொண்டே குசால் ஓடவும், "அருகில் வரவேண்டாம்" என்று கடத்தல்க்காரர்களால் அவர் எச்சரிக்கப்பட்டிருக்கிறார். அதேவேளை சிவராமை வாகனத்தில் தள்ளி ஏற்றுவதில் அவர்கள் வெற்றி கண்டிருந்தார்கள். குசாலைப் பார்த்து எச்சரிக்கை செய்தபடியே அம்மூவரும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வாகனம் அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிவிட்டது. தன்கண்முன்னே தனது நண்பனை சிலர் கடத்துவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன குசால் உடனடியாக வீட்டிற்குச் சென்று தனக்குத் தெரிந்த சிலருக்கு இக்கடத்தல்பற்றிய செய்திகளை அறிவிக்கத் தொடங்கினார். இந்தக் கடத்தல் நிகழ்வு பம்பலப்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு நேர் எதிரிலேயே, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில், பொலீஸார் பார்த்திருக்க நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்ச்சியான விசாரணைகளின்பொழுது சிவராமைக் கடத்திய அந்த நால்வரும் இரவு 8:30 மணியிலிருந்து அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. அவர்களில் இருவர் தமிழில் சரளமாகப் பேசிக்கொண்டிருந்ததாகவும், ஏனைய இருவரும் சிங்களத்தில் பேசியதாகவும் கண்ணால் கண்ட சாட்சியங்கள் உறுதிபடுத்தியிருக்கின்றன. கடத்தல்க்காரர்களில், தமிழர்களான ஒருவர் தொலைபேசியில் பேசும்போது, "வாகனத்தை அனுப்பு" என்று சிலதடைவைகள் ஏகதொனியில் கேட்டதாக சாட்சியொருவர் தெரிவிக்கிறார். அவ்வாறு அந்த நபர் பேசி சில நிமிடங்களில் அந்த வெள்ளிநிற ஜீப்ரக வாகனம் அவ்விடத்திற்கு வந்ததை தாம் அவதானித்ததாக அவர் மேலும் கூறுகிறார். சிவராமைக்கடத்திச் சென்ற வாகனமும், தான் கண்ட வாகனமும் ஒரே வாகனம்தான் என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். சிவராமைக் கடத்திச் செல்வதற்காக அருகில் உள்ள இடமொன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வாகனத்தையே தமிழில் பேசிய நபர் வரவழைத்திருக்கவேண்டும் என்று தெரியவருகிறது. தனது கணவன் கடத்தப்பட்டதை அறிந்த மனைவி , யோகரஞ்சினி தனது சகோதரனையும் அழைத்துக்கொண்டு பம்பலப்பீட்டி பொலீஸ் நிலையத்தில் தனது கணவன் கடத்தப்பட்டதுபற்றி புகார் ஒன்றைப் பதிவுசெய்திருக்கிறார், சிவராமின் நண்பரும், இன்னொரு ஊடகவியலாளருமான ராஜ்பல் அபெயநாயக்க சிவராம் கடத்தப்பட்டதுபற்றி ராணுவத்தளபதி லெப். ஜெனரல் சாந்த கொட்டேகொடவுக்கும் இன்னும் சில அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியதையடுத்து, வீதிச் சோதனைச் சாவடிகளுக்கு தாம் இதுபற்றி அறியத்தருவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
  14. தாரகி (தர்மரட்ணம் சிவராம்) படுகொலை - கருணாவே அருகிலிருந்து சுட்டுக் கொன்றான் "சிவராமின் படுகொலையென்பது ஒரு தனிப்பட்ட ஊடகவியலாளரின் படுகொலை என்பதையும் கடந்து, இனிநடக்கவிருக்கும் பல படுகொலைகளுக்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கின்றது என்பது மிகவும் ஆபத்தானது. ஜனாதிபதி சந்திரிக்காவின் அமைச்சரவையில் இருக்கும் பலம்வாய்ந்த சில அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் துணைராணுவக் குழுவொன்றின் தலைவன் ஆகியவர்களின் கூட்டினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விசேட கொலைப்படையே இப்படுகொலையின் பின்னால் இருந்திருக்கிறது என்பது மிகுந்த அச்சத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. அரச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாதமாக உருப்பெற்று வரும் இந்தக் கொலைக்குழுக்களின் நடவடிக்கைகள் உடனடியாகக் கண்டிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்படவேண்டும். சர்வதேச நாடுகளின் தலையீடு ஒன்றின்மூலமே இந்த அரச மயப்படுத்தப்பட்ட படுகொலைகள் இனிமேல் இடம்பெறாவண்ணம் தடுக்கமுடியும்" - டி பி எஸ் ஜெயராஜ் முடிவுறாத படுகொலைகளை, இனரீதியிலான வன்முறைகளை எதிர்கொண்டு நிற்கும் அநாதைகளாக்கப்பட்ட தமிழினத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் துணிச்சலானதும், மிகவும் கொடூரமானதுமான தனிநபர் படுகொலையே மும்மொழி வித்தகரும், பிரபல ஊடகவியலாளரும், தமிழ்த்தேசியவாதியுமான தாரகி எனப்படும் தர்மரட்ணம் சிவராமின் கடத்தலும் படுகொலையும் என்றால் அது மிகையில்லை. வாழ்வதற்கான உரிமையென்பதே அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படையானது. இந்த வாழ்தலுக்கான உரிமையுட்பட அடிப்படையுரிமைகள் தமிழர்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வருகிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைளும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதோடு, தமிழ்த்தாயின் பிள்ளைகள் வீதிகளிலே பிணங்களாக தூக்கியெறியப்பட்டு வருகிறார்கள். நண்பர்கள் வட்டத்தில் சிவா என்றும், சிவராம் என்றும் அன்பாக அழைக்கப்பட்டுவந்த சிவராம், தான் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட இரவில் தனது மூன்று நண்பர்களுடன் பம்பலப்பிட்டியவில் உள்ள மதுபான விடுதியொன்றிற்குச் சென்றிருந்தார். அவர் கொல்லப்பட்ட சித்திரை 28 அன்று இரவு அவருடன் ஊடகவியலாளர் குசால் பெரேரா, தொழிற்சங்க ஊழியர் ரவி குமுதேஷ், அரச சார்பற்ற அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரட்னாயக்க ஆகியோர் அவருடன் அந்த விடுதியில் இருந்திருக்கின்றனர். இரவு சுமார் 10:25 மணிக்கும், தமது ஒன்றுகூடலினை முடித்துக்கொண்டு அவர்கள் நால்வரும் விடுதியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். கடத்தல் ரவியும், பிரசன்னவும் தாம் பொரள்ளவுக்குச் செல்லவிருப்பதால், மூன்றுசக்கர வாகனம் ஒன்றை அமர்த்துவதற்காக கொள்ளுப்பிட்டி பக்கமாகச் செல்வதாகக் கூறிவிட்டு சிவராமிடமிருந்து விடைபெற்றுச் சென்றிருக்கின்றனர். மீதமிருந்த குசாலும், சிவராமும் பேசிக்கொண்டே வெள்ளவத்தைப் பக்கமாக நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமது சம்பாஷசணை முடிந்தவுடன் இருவரும் பேரூந்தில் ஏறித் தத்தமது இடங்களுக்குச் செல்வதென்று முடிவாகியிருந்தது. பெரேராவும், சிவராமும் டி வொஸ் அவெனியூவினை அடைந்தபோது, சிவராமின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்திருக்கிறது. தமிழில் வந்த தொலைபேசியழைப்பினை ஏற்றுக்கொண்டு பேசத் தொடங்கிய சிவராம் சற்று முன்னால் நடக்க, குசால் பெரேராவோ, எதிர்த்திசையிலிருந்து வரும் பேரூந்திற்காகப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார். பெட்டாவிலிருந்து பாணதுறை நோக்கிச் செல்லும் பேரூந்தைக் கண்டதும் தனது நண்பனை சுதாரிக்கச் செய்ய சிவராமின் பக்கம் திருமிபியிருக்கிறார் குசால். அப்போது குசால் கண்ட காட்சி அவரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிவராமுக்கு மிக அருகில் ஒரு வெள்ளிநிரத்திலான ஜீப் ரக வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. டொயோடா ரகத்தைச் சேர்ந்த அந்த வாகனத்தின் இலக்கத்தகடு WPG 11 என்று எழுதப்பட்டிருந்தது. அவசரத்திலும், அதிர்ச்சியிலும் மீதி இலக்கங்களை குசாலினால் பதிவுசெய்துகொள்ளமுடியவில்லை. இரு நபர்கள் சிவராமை அந்த வாகனத்திற்குள் தள்ளுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். மூன்றாமவன் திறந்திருந்த வாகனத்தின் கதவிற்கு அருகில் நின்றிருந்தான். வாகனத்தின் இயந்திரம் ஒட்டிக்கொண்டிருக்க, சாரதி புறப்பட்டுச் செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். சிவராமை பின்னாலிருந்து உந்தித் தள்ளி வாகனத்தில் ஏற்ற அவர்கள் முயலும் வேளை, அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க சிவராம் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார். அவரைக் கடத்த முயன்று கொண்டிருந்தவர்கள் சாதாரண உடையில் வந்திருந்தாலும்கூட, அவர்கள் செயற்பட்ட விதத்தினைப் பார்க்கும்பொழுது நிச்சயம் ராணுவம் சார்ந்த அமைப்பொன்றுடன் தொடர்புபட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
  15. வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்த வீடியோவை கவனித்துப் பார்க்கவும்......! 😁
  16. பாட்டு புக்ஸ் .👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.