Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19152
    Posts
  2. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    13
    Points
    35658
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87997
    Posts
  4. shanthy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    4644
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/08/21 in all areas

  1. துபாயின் விண்ணை முட்டும் கட்டிடங்கள்..! கட்டிட வடிவமைப்புக் கலையில் ஆர்வமிக்கவர்களை இக்காணொளி நிச்சயம் கவரும்..
  2. காட்டு மாதா: காட்டுமாதா என தமிழர்களால் அழைக்கப்படும் இந்த தேவாலயம் பிரான்சின் புறநகர் பகுதியில் வயலும் காடும் நிறைந்த இடத்தில் உள்ளது.வாரம்தோறும் ஏராளமான பக்தர்கள் மாலையில் இருந்து இரவுவரை இருந்து குடும்பமாக உண்டு களித்து செல்வார்கள். நேற்று நாங்களும் அங்கு சென்றிருந்தோம். நல்லதொரு ஒய்வு நாளாக இருந்தது.......!
  3. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தற்கொடைப்படையும் & சிறப்புப்படையுமான 'கரும்புலிகளின்' படிமங்கள் உள்ளன. என்னிடம் இருக்கின்ற கரும்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "கரும்புலிகள் என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும்‌. எனவே கரும்புலி எனும் சொல் பல பொருட்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது." - உயிராயுதம் பாகம் - 1 என்னும் புத்தகத்தில் தவிபு தலைவரின் உரையில் இருந்து. தற்கொடைப்படை என்பது மனித குலத்தின் உன்னத விழுமியமாக, உயரிய ஈகமாக பிறர்க்காகத் தன்னை அழித்து/ இழந்து எதிரிகளில் பலரையோ அல்லது எதிரிகளின் பலமிக்க இலக்கினையோ அழித்தல் எனும்‌ தற்கொடைப்‌ பண்பாளர்களைக்‌ கொண்ட படையாகும். - உயிராயுதம் பாகம் - 1 என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு கோர்வையாக்கப்பட்ட மூன்று வரிகள். தரைக்கரும்புலிகளின் இலச்சினை | Ground Black Tigers Logo. 1996 - end of LTTE era:- கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1996 - 1998:- தரைக்கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1998 - end of LTTE era:- மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை & வில்லை | Undercover Black Tigers Logo & Badge: "எம் தேசத்திற்காய் எங்கெங்கும்" கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge & Logo. Worn only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge & Logo. Worn from 2001- end of LTTE era. "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  4. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். Tamil Eelam Police Logo | தமிழீழக் காவல் துறையின் இலச்சினை "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" தமிழீழ காவல்துறையின் உடை மற்றும் அணிகலன்கள் பற்றி நானெழுதிய ஒரு ஆவணம்: --------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  5. ஆஹா அருமை.......சொல்லி வேல இல்லை......! 👍
  6. இதற்கு 'கரணவாய் குளத்தங்கரை'யிலிருந்து வரும் பதில்..!
  7. புதிதாய் பயிற்சி முடித்த கடற்புலிகளின் கடற்கலவர் தம் உற்றார் உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்கின்றனர்
  8. இவரைப்பற்றி Netflixல் ஒரு documentary - Wild Wild County(MA 15+) வந்துள்ளது.. ஆர்வக்கோளாறில் பார்க்க தொடங்கியுள்ளேன்..
  9. வணக்கம் வாத்தியார்........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்.....! --- முதல் கனவே ---
  10. கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்
  11. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வின்போது இதில் வரும் தமிழீழக் காவல்துறை சாகாட்டினைக்(Pickup) கவனிக்குக.
  12. இதென்ன கோதாரி வரவர அல்லாவுக்கு பகிடியும் தெரியாமல் வெற்றியும் தெரியாமல் போகுது போல கிடக்கு... பகிடி விடுற இடத்தில பகிடிய விட்டு சீரியஸ்சாய் இருக்கிற இடத்திலை சீரியஸ்சாய் இருக்காமல் சட்டாம்பி மாதிரி கடுப்பாய் இருக்கணுமா சார்?
  13. @ரஞ்சித் வணக்கம் அண்ணை, தாங்கள் மிகவும் அளப்பரிய பணியினை செய்து வருகிறீர்கள்... தொடர்ந்து செய்யுங்கள்... எந்த இடையூறு வந்தாலும் செய்வதை நிறுத்தாதீர்கள். என்னைப் போன்ற இளைய தலைமுறைக்கு(2k) தங்களின் ஆவணப்படுத்தலானது வரலாற்றை அறிந்து கொள்ளவும் எமக்கு எம்மினதின் புல்லுருவிகள், காட்டிக்கொடுப்போர், வஞ்சகர் போன்றவர்கள் ஆரார், எந்தெந்த வடிவத்தால் இருந்தார்கள், இனியும் எப்படியெல்லாம் பசுத்தோல் போர்த்தி வருவார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், படிப்பினையைச் செய்யவும் இத்தொடர் மிகவும் உதவி கரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இத்தொடரானது -->கூலிப் படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கத்தின் வால்களுக்கும், -->சிங்கள அடிவருடிகளுக்கும், -->புலிகளைப் பிடிக்காதோருக்கும், -->தமிழீழம் கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போரிற்கும், -->தவறுகளைச் சரிசெய்யப்போகிறோம் என்று கூறி இனத்தை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் பேர்வழிகளுக்கும், இத்தொடர் உறுத்தும்; உறுத்துகிறது. அதை பற்றியெல்லாம் தாம் சட்டை செய்ய வேண்டாம்.... தொடங்கியதை முற்றாக எழுதி இனிதே முடித்து வையுங்கள்... நன்றி
  14. இங்கு, தமிழீழ காவல் துறையினர் இறுதிப்போரின் போது எறிகணை வீச்சு, வான்குண்டு வீச்சு ஆகியவற்றிற்கு நடுவில் நின்று எம்மக்களின் துயர்போக்கிய காட்சிகளை உங்கள் கண்முன்னே நிறுத்தும் படிமங்களாக இணைக்கிறேன், கண்ணீர் நினைவுகளை மீட்டுப் பாருங்கள்! என்ன துயர் வந்தாலும் என்ன இடர் ஏற்பட்டாலும் மக்களுக்காக வேலை செய்பவர்களே காவற்றுறையினர். அதை மெய்ப்பித்தார்கள் தமிழீழ காவல் துறையின் காவலர்கள் அன்று. எனது நாட்டின் காவற்றுறையினை எண்ணி பெருமிதம் அடைகிறேன். இந்த மக்கள் பணியின் போது வீரச்சாவடைந்த எமது காவலர்களுக்கு வீரவணக்கம் (நடைமுறையரசின் கீழ் என்பதால் வீரவணக்கம் என்பதே சரி) செலுத்தி படிமங்களைப் பார்ப்போமாக. 22-2-2008 கிளிநொச்சி மருத்துவமனையில்: 27-04-2009:- வேறெங்கோ: வேறெங்கோ: புதுக்குடியிருப்பு மருத்துவமனையினுள் பொக்கணை எறிகணை வீச்சு:
  15. மனைவியை... நாம், எவ்வளவிற்கு நேசிக்க, வேண்டும்?
  16. காவல் துறையின் ஆளணி காவி யாழ், ஒரு திருவிழாவின் போது, 1990 களில்
  17. காவல் துறையின் ஆளணி காவி கிளிநொச்சி, 2002/2003
  18. இது 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிகழ்படம்(video) & படிமம்(image). (தலைவரின் தொப்பியில் உள்ள வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை பொறிக்கப்பட்ட சதுர வடிவ சிவப்பு நிற துண்டம் ஆனது 2000 ஆம் ஆண்டில் மட்டுமே அவரது தொப்பியில் இருந்தது. எனவே இது 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படிமம் ஆகும்) தேசியத் தலைவருடன் 120 கரும்புலிகள் ஒன்றாக நிற்கும் அரிய காட்சி.:- நிரை- —— = 12 பேர் வரிசை- | = 10 பேர் 12x10=120 தடைநீக்கிகள் 'வலது பக்கத்தில் இருந்து முதல் நான்கு வரிசையிலும் நிற்பது தரைக்கரும்புலிகள் (நிகழ்படத்தில் தொப்பியிலும் புயத்திலும் தெரியும் வில்லைகளை(badge) உற்று நோக்குக). ஏனையவற்றில் உள்ளவர்கள் கடற்கரும்புலிகள். இவர்கள் தமது வலது புயத்தில் குத்தியிருப்பது கடற்கரும்புலிகளின் முதலாவது(முந்தைய) சின்னம் கொண்ட வில்லை' மேலும் இப்படிமத்தில் வலமிருந்து நான்காவது வரிசையில் முன்னிருந்து மூன்றாவதாக நிற்பவர் தரைக்கரும்புலி மேஜர் அன்பரசன். இவர் 08.01.2007 அன்று நடவடிக்கைக்காக சென்ற போது வீரச்சாவடைந்து விட்டதாலும், எதிரி இவரது வித்துடலை எடுத்து விட்டதாலும், கரும்புலியின் வித்துடலை எதிரி எடுத்து விட்டான் என்று கொக்கரிக்கக் கூடாது என்பதற்காக இவருக்கு கரும்புலி என்ற நிலை வழங்கப்படாமல் மேஜர் என்ற பதவி நிலை மட்டுமே விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் நிகழ்படத்தையும்(video) கண்டுபிடித்து விட்டேன். Video: https://eelam.tv/watch/தல-வன-ச-ச-ழ-110-கடற-கர-ம-ப-ல-கள-வர-ச-ய-க-ந-ற-க-ம-அர-ய-க-ட-ச_QeEPRPt5sFfrxl8.html 'இடது பக்கத்தில் நிற்பவரே கரும்புலி அன்பரசன்' அற்றை நாளில் எடுக்கப்பட்ட மற்றொரு நிழற்படம்:- இது மேற்கண்ட நிழற்படத்தின் வலது பக்க மூலையில் நிற்பவர்களைக் காட்டும் படிமம் ஆகும். 'கடைசியில் [லெப். கேணல் மாதவி எ துளசி (2009/02)] இருந்து இரண்டாவதாக நிற்பவர், ஈரத்தீ என்ற பளை சேணேவி(Artillery) படைத்தள ஊடுருவித் தாக்குதல் தொடர்பான திரைப்படத்தில் கூட நாயகியாக நடித்திருந்தார். ' பளை ஊடுருவித் தாக்குதலில் படைத்தளத்தினுள் நுளைந்த போது ஏற்பட்ட தொடக்க சமரில் சிங்கள நோக்கு நிலையினை(OP) லோ-ஆல் அடித்து உடைத்தபோது சுதாஜினி அக்கா நெஞ்சினில் ஏவுண்ணி மேஜர் சுதாஜினியாகவும், உள்நுழைந்து சிங்களத்தை விரட்டிவிட்டு தெறோச்சிகளை(Howitzer) அழித்துக் கொண்டிருக்கும்போது தனுசன் அண்ணா ஒரு தெறோச்சிக்கு நேரக்கணிப்பு வெடிகுண்டினை அதன் சுடுகுழலில் கட்டிக்கொண்டிருக்கும்போது அது திடீரென வெடித்ததால் மேஜர் தனுசனாகவும் தாய்நாட்டிற்காய் உயிரீகம் செய்தனர். இவ்வூடுருவல் சமரில் படைத்தளத்தினுள் மண்ணரணைக் கடந்து உள் நுழைந்தபோது சிங்களவனின் சூட்டுக்கு இலக்காகி ஒரு கரும்புலி காயமடைந்தார். அவரை திரும்பிச் செல்லும்போது ஏனைய கரும்புலிகள் தூக்கிச் சென்றனர்.
  19. கருணாவின் துரோகத்தின் இந்திய உளவுத்துறை றோவின் பங்கு மூலம் தமிழ்நேசன், ஆக்கம் சச்சி சிறீகாந்தா காலம் சித்திரை 2004 இந்தியாவின் அமைச்சரவை அதிகாரம்பெற்ற புலநாய்வு அமைப்பான றோ மிகப்பலம்வாய்ந்த ஒரு அரச வெளியுறவுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, பலம் மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகள் என்பவற்றின் மீதான அதனது தாக்கம் மிகப் பெரியது. பாகிஸ்த்தானுட்பட பல அயல்நாடுகளில் பல நாசகார, ராஜதந்திரத்திற்கு முரணான செயற்பாடுகளை அது தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. தனது செயற்பாடுகளுக்கான தங்குதடையற்ற ஆதரவினை தொடர்ந்துவரும் இந்திய அரசுகளிடமிருந்து அது பெற்றுவருகிறது. இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் றோ அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் இந்தியப் பாராளுமன்றத் திற்கு தெரிவிக்கப்படாமேலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. புலிகளிடமிருந்து தான் பிரிந்து இயங்கப்போவதாக கருணா கூறிச்சென்று ஏறக்குறைய ஒரு மாதகாலமாகிறது. இந்தியாவின் நாசகார உளவுத்துறை கருணாவின் பின்னால் உண்மையாகவே இருந்திருக்கிறதா? இனிவரும் காலங்களில் எமக்குக் கிடைக்கவிருக்கும் சாட்சிகள் இதனை உண்மையென்றோ அல்லது தவறென்றூ நிரூபிக்கப் போகின்றன என்கிறபோதும், இதுதொடர்பாக உள்ளூர் , சர்வதேச செய்திச் சேவைகளில் வெளிவந்த செய்திகளினூடு எனது பார்வையினை இங்கே பதிகிறேன். முதலாவதாக ஜனவரி மாதம் சிலோன் டெயிலி மிரர் பத்திரிக்கையில் வெளியான "புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் றோ உளவாளிகள்" எனும் தலைப்பில் சிறிநாத் பிரசன்ன ஜயசூரிய எழுதிய ஆக்கத்தினைப் பார்க்கலாம். தை 13 ஆம் திகதி அவர் அக்கட்டுரையினை எழுதிய சில மாதங்களின் பிறகு, பங்குனி 3 ஆம் நாள் கருணா தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். "வடக்குக் கிழக்கில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிகளுக்குள் இந்திய உளவுத்துறையான றோ உளவாளிகள் நுழைந்திருப்பதாக புலிகளின் புலநாய்வுத்துறை தெரிந்துகொண்டது". "வடக்கிலிருக்கு ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி எழுதும் அவர், இந்திய உளவாளிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளைப் புலிகள் ஆரம்பித்திருப்பதாக அவர் எழுதுகிறார். அண்மையில் தமிழ்நாட்டு வர்த்தகர் ஒருவரையும், புலிகளின் மேஜர் தரப் போராளி ஒருவரையும் மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் கைதுசெய்திருக்கும் புலிகள் இந்திய உளவுத்துறையினருடனான இவர்களின் தொடர்புபற்றி விசாரித்துவருவதாகத் தெரியவருகிறது. புலிகளின் மேஜர் தரத்தில் இருந்த போராளியொருவர் இந்தியாவின் உளவுப்பிரிவின் உளவாளியாகச் செயற்பட்டு வந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது". "இது நடைபெற்று மிகக் குறுகிய காலத்தில் இலங்கை இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் அவசர அவசரமாகக் கையெழுத்திடும்பொழுது, வன்னியின் காடுகளுக்குள் இந்திய உளவாளிகளைத் தேடும் புலிகளின் நடவடிக்கை தொடர்கிறது. றோ உளவாளி என்று சந்தேகிக்கப்பட்டு மன்னாரில் புலிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்திய வர்த்தகர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர் என்பதும், அவரிடம் பல மீன்பிடி ட்ரோலர்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இலங்கைக்கு வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக வந்திருப்பதாக இவரும் இன்னும் பலரும் உல்லாசப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எனும் போர்வையில் தமிழர் தாயகப் பகுதிகளில் இறக்கிவிடப்பட்டிருப்பதாக புலிகளின் உளவுத்துறை தலைமைக்கு அறிவித்திருக்கிறது". கருணாவின் துரோகம் எவருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருக்குமாக இருந்திருந்தால், ஜயசூரியவினால் இதுதொடர்பான கட்டுரையொன்றினௌஇ 50 நாட்களுக்கு முன்னர் எப்படி அனுமானித்து எழுதமுடிந்தது? 1. ஹிந்து - புரொன்ட்லைன் பத்திரிக்கைகள் பங்குனி 27 ஆம் திகதி வெளிவந்த புரொன்ட்லைன் பத்திரிக்கையில் எட்டுப் பக்க தலைப்புச் செய்தியை அக்குழுமத்தின் வழமையான விற்பன்னர்களான வி எஸ் சம்பந்தனும், டி பி எஸ் ஜெயராஜும் எழுதியிருந்தார்கள். இவ்விருவரும் தமக்குள் போட்டி போட்டு எழுதுதிக் குவித்த ஆயிரக்கணக்கான வார்த்தை ஜாலங்களின் சாரம்சம் இதுதான், அ) பிரச்சினைக்குள் அகப்பட்டுப்போயுள்ள புலிகள் - சம்பந்தன் ஆ) விரும்பப்பட்டவரும், வெறுக்கப்பட்டவரும் - சம்பந்தன் இ) ஒரு தேர்தல் முற்றுகை - சம்பந்தன் ஈ) கிழக்கின் ஆயுததாரி - ஜெயராஜ் உ) கேர்ணல் கருணாவுடன் ஒரு நேர்காணல் - சம்பந்தன் ஊ) புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினை - ஜெயராஜ் எ) தமிழ்ச்செலவ்னுடன் ஒரு நேர்காணல் - சம்பந்தன் ஏ) புலிகள் எதிர் புலிகள் - ஜெயராஜ் ஆனால், இவை எவற்றிலுமே இந்திய உளவுத்துறை றோ பற்றி இவர்கள் இருவரும் மூச்சுக் கூட விடவில்லை. ஆகவே றோவின் கைங்கரியம் பற்றி நாம் அறிவதற்கு இந்துப் பத்திரிக்கை குழுமத்தின் முழுப்பூசணிக்காயினை சோற்றில் மறைக்கும் இச்செயலை நாம் தண்டிச் செல்வது அவசியமாகிறது. 2. டெக்கான் ஹெரல்ட் பங்குனி 16 இல் டெக்கால் ஹெரல்ட் பத்திரிக்கையில் சுதா ராமச்சந்திரன் சில விடயங்களை மறைவின்றிப் பேசுகிறார். இலங்கையில் தற்போது நடைபெறும் விடயங்கள் தொடர்பான சாதாரண மக்களின் கருத்தினை அது பிரதிபலிக்கிறது. "கருணாவின் துரோகத்தின் பின்னால் வெளிச்சக்திகளான இந்தியாவின் உளவுத்துறை றோவோ அல்லது அமெரிக்கர்களோ இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். சிலவேளை கருணாவை அவமானப்படுத்த இவ்வகையான செய்திகள் பரப்பப்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை, மிகப் பலம்பொறுந்திய பிரபாகரனை பகிரங்கமாக எதிர்ப்பதற்குக் கருணாவுக்கு நிச்சயமாக இப்படியான வெளிச் சக்திகளின் ஆதரவு இருந்திருக்க வேண்டும். புலிகளைடமிருந்து பிரிந்துசென்று எதிராகச் செயற்பட்ட பலரை பிரபாகரன் அழித்திருக்கிறார். கருணாவுக்கு என்ன நடக்கும் என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" என்று எழுதுகிறார். 3. பயணியர் இந்திய அமைதிப்படையின் மேஜர் ஜெனரலாக 1988 முதல் 1990 வரை பணியாற்றிய அஷோக் மேத்தா என்பவர் பயணியர் பத்திரிக்கையில் எழுதிய 1280 வார்த்தைகள் அடங்கிய குறிப்பில், இந்திய உளவுத்துறையினை மறைமுகமாகச் சாடுவதுடன், இலங்கை உள்வுத்துறையின் கைங்கரியமே இதுவென்று சொல்ல விழைகிறார். "இந்திய உளவுத்துறையும் இலங்கை புலநாய்வுத்துறையும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ கருணாவை ஊக்குவித்து புலிகளிடமிருந்து பிரித்து வெளியே எடுத்திருக்கலாம் என்கிற பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. எனக்குத் தெரிந்த மட்டில் புலிகளுடனான தொடர்பினை இந்திய உளவுத்துறையான றோ இந்திய அமைதிப்படை 1990 இல் வெளியேறியதன் பின்னர் முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டது. ஆனால், புலிகளைப் பலவீனப்படுத்தி, பிளந்திருக்கும் இந்தச் செயற்பாட்டினை எமது புலநாய்வு அமைப்பே செய்திருந்தால் நிச்சயாம் அதனை நாம் பாராட்டியே தீரவேண்டும், ஆனால் அவ்வாறானதொரு தீரச்செயலினை எமது உளவுத்துறை அண்மைக்காலத்தில் செய்திருக்கிறதா என்பதைப் பார்த்தால் அதற்கான சாத்தியங்கள் குறைவென்றே எண்ணுகிறேன். சிலவேளைகளில் இலங்கை அரசாங்கமே இந்தப் பிளவினை திட்டமிட்டு உருவாக்கியிருக்கலாம்" என்று கூறுகிறார். 1990 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் வெளியேறியதன் பின்னர் புலிகளுடனான தொடர்புகளை றோ முற்றாக அறுத்துவிட்டதெனும் மேத்தாவின் கருத்து ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், இங்கே திட்டமிட்டு மறைக்கப்பட்ட மற்றொரு விடயம் தான் புலிகளுக்கெதிரான அமைப்புக்களோடடு றோ மிக நெருக்கமான தொடர்புகளை இன்றுவரை பேணிவருவதென்பது. இந்த அமைப்புக்களும், சக்திகளும் தமிழரகாவோ, சிங்களவராகவோ அல்லது முஸ்லீம்களாகவோ இருந்தால்க் கூட, புலிகளை அழிக்கும் தனது இலட்சியத்திற்கான கருவிகளாக அவர்களைப் பாவித்து மிக நெருக்கமான தொடர்புகளை அது உருவாக்கிப் பேணியே வருகிறது. இதற்கான காரணம் என்ன? 1987 இல் இருந்து ராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பிரபாகரனைப் பிந்தொடர்ந்து, தனது நாசகார நடவடிக்கைகள் மூலம் புலிகளைப் பலவீனமாக்கிப், பிரித்து இறுதியில் முற்றாக அழிப்பதை இன்றுவரை தனது தலையாய இலக்காகக் கொண்டிருப்பதே அதன் காரணம்!
  20. இந்தியாவும் தமிழீழ விடுதலைக்கான போராட்டமும் துணைப்படைகளுக்கான ஆட்சேர்ப்பினை இந்தியாவில் மேற்கொண்டுவரும் இந்திய புலநாய்வுத்துறை றோ காலம் : ஆனி 2006 மூலம் : தமிழ்நேசன் மற்றும் தமிழ்நெட் "நாடுகளுக்கிடையேயான உறவுகள் தார்மீக அடிப்படையில் உருவாவதில்லை, மாறாக, தார்மீகத்தினை எதிர்த்தே உருவாக்கப்பட்டு தொடரப்பட்டு வருகின்றன" - ஜோதிந்திரா நாத் டிக்ஸீத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் 1985 - 1989, வெளியுறவுச் செயலாளர் 1991 - 1994, இந்தியப் பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2004 - 2005. இந்தியாவின் முன்னணிச் செய்திச் சேவைகளில் ஒன்று இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பொன்றில் இலங்கை ராணுவத்தின் துணைப்படையாக இயங்கும் கருணா குழு தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடையே தமக்கான புதிய உறுப்பினர்களைத் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. பெருந்தொகைப் பணத்தினை மாதாந்தக் கொடுப்பனவாக வழங்குவதாகக் கூறியே இந்த ஆட்சேர்ப்பில் கருணா குழு ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் ராணுவத் துணைப்படையான கருணா குழுவின் கீழ் இயங்கிவரும் ஈழ ஜனநாயகத் தேசிய விடுதலை முன்னணி எனப்படும் அமைப்பே கருணா குழு சார்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர் அகதிமுகாம்களில் இருந்தும் அநாதை விடுதிகளில் இருந்தும் கருணா குழுவுக்கான உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுவருவதாக உள்ளூர் செய்தியாளர்களை மேற்கோள் காட்டி இந்த செய்திச்சேவை செய்திவெளியிட்டிருக்கிறது. இலங்கை ராணுவத் துணைக்குழுவினருக்கான இந்த ஆட்சேர்ப்பு இந்திய வெளியக புலநாய்வுத்துறையான றோவின் அனுசரணையுடனும், ஆசீர்வாதத்துடனுமே நடைபெற்றுவருவதாக இந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஈ என் டி எல் எப் அமைப்பின் தலைவரான பரந்த ராஜனை பயன்படுத்தி தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களிலிருந்து கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பினை றோ மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. கருணா குழுவில் இணைபவர்களுக்கு உடனடிக் கொடுப்பனவாக 10,000 ரூபாய்களும், அவர்கள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பரந்தன் ராஜன் எனும் துணை ராணுவக் குழுவின் தலைவர் தனது கண்காணிப்பின் கீழ் பெங்களூர் பகுதியில் அநாதை விடுதிகளை நடத்திவருவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது அநாதை விடுதியிலிருந்து சிறுவர்களை இலங்கையில் போர் நடவடிக்கைகளில் பாவித்தார் என்கிற பலமான குற்றச்சாட்டு அவருக்கெதிராகச் சுமத்தப்பட்டிருக்கிறதென்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கெதிரான பல துணைராணுவக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படும் பரந்தன் ராஜன், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டே வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் செயற்பட்டு வந்த பரந்தன் ராஜன், இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்றகாலப்பகுதியில்,புளொட்டிலிருந்து வெளியேறி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய துணைராணுவக் குழுக்களின் உதிரிகளை இணைத்துக்கொண்டு "த்ரீ ஸ்டார்" எனும் துணைராணுவப் படையினை உருவாக்கிச் செயற்பட்டு வந்தார். 1987 ஆம் ஆண்டு, இந்தியப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் இந்திய உளவுத்துறையுடன் நெருங்கிச் செயற்பட்ட பரந்தன் ராஜன், அவர்களின் உதவியுடனேயே தனது துணைராணுவப்படையான ஈ என் டி எல் எப் அமைப்பினை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. 1990 இல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, ராஜனும் அவரது பல துணைராணுவக் குழு உறுப்பினர்களும் இந்தியாவுக்குத் தமது தளத்தினை மாற்றிக்கொண்டார்கள். பின்னாட்களில் பரந்தன் ராஜன் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இந்திய. இலங்கை அரச புலநாய்வுத்துறைகளின் சார்பாகச் செயற்பட்டு வந்தார். பரந்தன் ராஜன் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் துணைராணுவக் குழுவினை அமைத்துக்கொண்டபோது, இந்திய உளவுத்துறையின் பெரிதும் விரும்பப்பட்ட ஈழத்தமிழராக மாறினார். கருணா குழுவின் ஆதரவாளர்களின் கருத்துப்படி, கருணாவையும் பரந்த ராஜனையும் ஒன்றாக இயங்கும்படி பணித்தது இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பே என்று கூறியிருக்கிறார்கள். பரந்தன் ராஜன் துணை ராணுவக் குழுவொன்றை வழிநடத்தியவாறே இந்தியாவில் நெடுநாள் தங்கியிருப்பதும், தங்குதடையின்றி இந்தியாவின் எப்பகுதிக்கும் சென்றுவருவதும், புலிகளுக்கெதிராகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதும் கூறும் ஒருவிடயம் அவர் இந்திய உளவுத்துறையினரால் இயக்கப்படும் ஒரு ஆயுததாரி என்பதுதான் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது. 2004 இல் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை ஜெயலலிதா தேடித் தேடி வேட்டையாடியபோது பரந்தன் ராஜனும் தவறுதலாக கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், கைதுசெய்யப்பட்ட சில மணிநேரத்திற்குள்ளேயே றோ வின் தலையீட்டினால் பரந்தன் ராஜன் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று அச்செய்தி மேலும் குறிப்பிடுகிறது. 2005 இல் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பரந்தன் ராஜன் மீளவும் இந்தியாவில் செயற்படுவதற்கும், அலுவலகங்களை அமைத்து இயங்குவதற்கும், ஆட்களைச் சேர்ப்பதற்கும் அவருக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை பெங்களூரிலிருந்து செயற்பட்ட ராஜன், 2006 இல் தி மு க அவின் ஆட்சியின் பின்னர் தமிழக அரசின் ஆதரவுடனும்,இந்திய புலநாய்வுத்துறையின் ஆசீருடனும் மீண்டும் சென்னையிலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார். தமிழகத்தில் பரந்தன் ராஜனின் இருப்பிடம் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரிக்கும் தமிழகக் காவல்த்துறை "அவர் ஒரிஸாவில் எங்காவது இருக்கலாம்" என்று மழுப்பலாகப் பதிலளிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ஆனால், தன்னை அடையாளம் காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தமிழக காவல்த்துறை அதிகாரியொருவர், "ராஜன் தற்போது கருணாவுடன் மட்டக்களப்பில் தங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு தீவுச்சேனைப்பகுதியில் அமைந்திருந்த கருணா - ஈ என் டி எல் எப் அமைப்பின் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின்போது ஈ என் டி எல் எப் அமைப்பினை புலிகளுக்கெதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக றோ பாவிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ராஜனின் செயற்பாடுகளை வழிநடத்திவரும் றோ, அவரையும் கருணாவையும் இணைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கு இருக்கும் ஆதரவினைக் குறைத்துவிட முயல்வதாக இச்செய்தி மேலும் கூறுகிறது. சித்திரை 2004 இல், கருணாவின் ராணுவப் பலம் புலிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து பெருமளவு தமிழ் துணை ராணுவக் குழு உறுப்பினர்களை இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை ராணுவம் வரவழைத்திருக்கிறது. புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தவென தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈ என் டி எல் எப் கூலிகளை ஒருவருட நுழைவு அனுமதியுடன் சுழற்சி முறையில் அழைத்துவரும் இலங்கை அரசு, புலிகளுக்கும் தமிழருக்கும் எதிரான நாசகார நடவடிக்கைகளில் வடக்குக் கிழக்கில் ஈடுபடுத்தி வருகிறது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே ஆரம்பித்திருக்கும் சிறியளவிலான இப்போர் நடவடிக்கைகளால் குறைந்தது 3000 தமிழர்கள் தமிழகத்தில் தற்போது தஞ்சமடைந்திருப்பதாகவும் இச்செய்து கூறுகிறது.
  21. உக்கிரமான வெய்யிலையும் உலர்த்தி வடிகட்டி தரையில் விடும் தருக்கள்.....! 🌳

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.