Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19152
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38777
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/04/21 in all areas

  1. கேள்வி : உங்களைக் காப்பாற்றுவதற்கும் இந்த மேற்குநாட்டு அதிகாரிகள் முயற்சி செய்தார்களா? கே பி : ஆம், முயன்றார்கள்தான். ஆனால், அப்போது அந்தச் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம் என்று எனக்குப் புரிந்தது. மாசி 2009 இலிருந்து நாம் எல்லா முடிவுகளையும் காலம் தாழ்த்தியே எடுத்தோம். நான் ஒரு விடயத்திற்கு ஒத்துவரும்போது, அக்காரியத்திற்கான சந்தர்ப்பம் கைநழுவிப்போயிருந்தது. கேள்வி : 2002 இன் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்து இறுதிவரை புலிகள் இயக்கம் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு விட்டது என்று ஏன் நினைக்கிறீர்கள்? கே பி : 2002 இலிருந்து மட்டுமல்ல, அதற்கு பல காலத்திற்கு முன்பிருந்தே அவர்கள் சகல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டே வந்திருந்தார்கள். முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இணங்கிக்கொண்டதன்படி ஒரு தீர்வினை நாம் எட்டும் சாத்தியம் கிடைத்தது. அதனைப் பிரபாகரன் நிராகரித்திருந்தார். அதேபோல, 1987 இல் ராஜீவ் காந்தி , ஜெயவர்த்தனாவுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எமக்குக் கிடைக்கவிருந்த 13 ஆம் சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கான சந்தர்ப்பத்தினை வேண்டுமென்றே பிரபாகரன் தவறவிட்டதிலிருந்து இந்த தவறுகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. பிரபாகரனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று மட்டும்தான், அதுதான் தனிநாடான தமிழ் ஈழம். இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் அவர் தயாராக இருக்கவில்லை. இறுதியில் அவரோடு அவரது கனவும் அழிக்கப்பட்டுவிட்டது, அவ்வளவுதான். கேள்வி : 2002 இல் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்ததன் உண்மையான காரணம் தம்மை ஆயத்தப்படுத்தவும், இன்னொரு போருக்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளவும் தான் என்று நினைக்கிறீர்களா? கே பி : ஆம், நிச்சயமாக. ஒருபக்கம் சில போர்வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் கூட, அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பலவீனப்பட்டிருந்தார்கள். அவர்களின் நிதிவளமும் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது. உணவுக்கும் ஏனைய பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவியது. அதுமட்டுமல்லாமல், வெளியுலகமும் மாறத் தொடங்கிவிட்டிருந்தது. முன்னர் இருந்ததைப் போலல்லாமல் அனைத்துமே மாறிவிட்டிருந்தன. இரட்டைக் கோபுரத் தாக்குதல் புலிகளைப் பொறுத்தவரை பாரிய நெருக்கடிகளைக் கொடுத்திருந்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி அரசு சாரா பிரிவினைவாதிகளுக்கெதிராகவும், அவர்களின் நிதி வழங்கல்களுக்கெதிராகவும் கடுமையான அழுத்தங்களைப் பிரியோகிக்கத் தொடங்கியிருந்தார். புலிகள் உட்பட பல கிளர்ச்சியமைப்புக்கள் அமெரிக்காவினாலும் ஏனைய நேச நாடுகளாலும் பயங்கரவாதிகளாக அறிவித்துவிட்டிருந்தன. இந்த நிகழ்வுகள் புலிகள் இயக்கத்தை மிகப்பெரிய அளவில் பாதித்திருந்தன. இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதுபற்றி புலிகள் பெரிதும் கலங்கியிருந்தனர். அவர்கள்மேல் மிகக்கடுமையான அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வந்தன.
  2. படித்தது.. ரசித்தது பிரசவ அறை வாசலில் "பெண் குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வையில் இருக்கிறதடா உலகின் அத்தனை பிரிவினைவாதமும்... அவள் பாதுகாப்பாய் வீடு திரும்பும் வரை உயிரற்ற உடலாய் காத்திருந்த நொடிகளில், செத்து பிழைக்கும் நான்.. தினம் தினம் அவளை பிரசவித்தேன்... இரு முறை தாய் வாசம் தெரியவேண்டுமெனில், பெண் பிள்ளை பெற்றெடுங்கள்... மகள்களின் நேசிப்பெனும் சிறையில் விடுதலை இல்லை ஆயுள் தண்டனை மட்டுமே... மகளில்லாத தந்தையர்களே, சகோதரியில்லாத ஆண் மகனே, எங்கேனும் தனியாய் பெண்ணைக் கண்டால் சுதந்திரமாய் செல்ல விடுங்கள்.. தந்தைகள் காத்திருக்கிறோம் அவள் வருகைக்காக...
  3. பொண்டாட்டி பேச்சை கேக்கிற இரண்டு பேர் இதை அடுத்தடுத்து போட்டிருக்கிறார்கள்......நான் அந்தமாதிரியில்லை.......எனக்கு இதை மனிசிதான் பார்த்து சொல்லிச்சுது ......! 😇
  4. கேள்வி : இந்த தீவிரவாத எண்ணம் கொண்ட புலம்பெயர் தமிழர்களை உங்களால் இனங்காண முடியுமா? கே பி : ஆம். அவர்களின் பெயர்களைக் கூறுகிறேன். நெடியவன், விநாயகம், பாதிரியார் இம்மானுவேல், தமிழ்நெட்டினை நடத்தும் ஜெயச்சந்திரன், பி டி எப், ஜி டி எப் என்று சிலரை என்னால் அடையாளம் காண முடியும். இந்தத் தனி நபர்களும், அமைப்புக்களும் ஐரோப்பாவில் மிகுந்த பண பணபலத்தோடு செல்வாக்காக வாழ்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளும் மிகவும் நன்றாக வாழ்கிறார்கள். இவர்கள் தமது எதிர்காலச் சந்ததியினரின் மனங்களில் இனவாதம் என்னும் நச்சினை ஊட்டி வளர்க்கிறார்கள். ஆனால், அவர்களின் இந்த விளையாட்டினை நான் இங்கு ஆட விடமாட்டேன் ! இனவாதத்தினை இங்கே அவர்கள் ஊற்றிவளர்க்க நினைத்தால், முதலில் அவர்கள் என்னைக் கொல்லவேண்டும். அதன்பின்னரே அவர்கள் உள்ளே செல்ல முடியும். தாயக மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்து விட்டார்கள். இம்மக்கள் அமைதியாகவும், சந்தோசமாகவும் வாழ்வதை நான் விரும்புகிறேன். இன்று எமது மக்களின் முகங்களில் கவலையும், வறுமையுமே தேங்கி நிற்கிறது. நாம் அதனை மாற்ற முன்வர வேண்டும். தாயக மக்கள் தாம் பிறந்ததிலிருந்து சந்தோஷத்தினைக் காணவில்லை. ஆனால், புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் எப்போதுமே சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள். மிகவும் உல்லாசமான வாழ்க்கையினை வாழ்கிறார்கள். ஆனால், வன்னியிலோ நிலைமை வேறு. எமது பிள்ளைகள் சந்தோசமாக இல்லை. பாடசாலைக்குப் போவதற்கான கூட அவர்களுக்குக் கிடையாது. காலையில் நீங்கள் வீதியில் நடந்துசென்றால் பாடசாலை செல்லும் சிறார்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர்கள் கால்நடையாகவே சென்றுவருவதைக் காணலாம். அவர்கள் தமது எதிர்காலம்குறித்து கவலையுடன் வாழ்கிறார்கள். இச்சிறுவர்களை மீண்டும் பயங்கரவாதத்தினுள் தள்ளும் முயற்சியினை எவர் மேற்கொண்டாலும் நான் முன்னின்று தடுப்பேன். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. கேள்வி : நீங்கள் உயிருடன் இருக்கும்வரை ஐரோப்பாவில் இயங்கும் தமிழ்ப் பயங்கரவாதிகள் இன்னொரு ஆயுதப்போராட்டத்தினை இங்கே முன்னெடுப்பொஅது சாத்தியமில்லை என்கிறீர்களா? கே பி : நிச்சயமாக. அவர்கள் இங்கே ஆட்களைத் திரட்டி, மக்களுக்குப் பிரச்சினைகளை உருவாக்க முயன்றால், நான் அவர்களைத் தடுத்து நிறுத்துவேன். என்னைக் கொன்றபின்னர்தான் அவர்கள் வேறு எதனையும் செய்ய முடியும். கேள்வி : இறுதியுத்தத்தில் புலிகளின் தலைமைப் பீடத்தினைக் காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் சில முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுவது உண்மையா? கே பி : 2009 தை மாதத்திலிருந்து நான் சண்டையினை நிறுத்த முயன்று வந்தேன். இரவு பகலாக நான் இதற்காக பாடுபட்டு உழைத்தேன். ஆனால், புலிகள் இறுதித் தருணம் வரை என்னால் எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் எதற்குமே ஒத்துழைக்க முன்வரவில்லை. எனக்கு இருந்த அனைத்து நம்பிக்கையும் அத்துடன் போய்விட்டது. மே 15 அன்று மேற்கு நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் என்னுடன் தொடர்புகொண்டு, புலிகளின் தலைமையினைப் பாதுகாப்பாக வெளியேற்ற விரும்புகிறோம், இதற்கு அவர்களின் பதிலென்ன என்பதைக் கேட்டுச் சொல்வீர்களா என்று என்னைக் கேட்டார்கள். இவ்வாறு வெளியேற விரும்பும் தலைவர்களின் பெயர் விபரங்களைத் தருமாறு கேட்டுக்கொண்ட இந்த அதிகாரிகள், புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக கப்பல் முலம் இன்னொரு நாட்டிற்குத் தாம் அனுப்பிவைக்கப்போவதாகவும் என்னிடம் கூறினார்கள். கேள்வி : இவ்வாறு உங்களை அணுகிய நாடுகள் எவையென்று கூறமுடியுமா? கே பி : உண்மையாகவே அது ஐ நா இன்னும் சில மேற்குநாடுகளின் துணையோடு இம்முயற்சியில் ஈடுபட்டது. தனிப்பட்ட நாடுகளினதும், நபர்களினதும் பெயர்களை நான் வெளியிட விரும்பவில்லை. ஆனால், அவர்கள் எல்லோருமே மேற்குநாட்டவர்கள்தான் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
  5. கேள்வி : புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? கே பி : முதலாவது, அவர்கள் இங்கிருக்கும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள் "எமக்குப் பால் வேண்டும் " என்று அழுதால் நாம், "சற்றுப்பொறுங்கள், ஐ நா வரும், தீர்வு வரும், அதன் பின்னர் நாம் பால் தருகிறோம்" என்று கூறமுடியாது. நாம் அப்படி பார்த்திருந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள். அவர்கள் தமக்கு இப்போது உணவுவேண்டும் என்றுதான் அழுகிறார்கள். ஆகவே புலம்பெயர் தமிழர்கள் இம்மக்களுக்கான பசியினைப் போக்க உழைக்க வேண்டும். தாயக மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு மீண்டபின்னர் அவர்களுக்கு என்ன தேவையென்று பின்னர் நாம் கேட்கலாம். அதை விடுத்து நீங்கள் வன்னிக்குப் போய் அவர்களிடம் 13 ஆம் திருத்தச்சட்டம் உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டால், அவர்கள் உங்களை விசனத்துடன் தான் பார்ப்பார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அரிசியும் பாணும் மட்டும் இருந்தால் போதும். புலம்பெயர் தமிழர்களுக்குக் கள யாதார்த்தம் புரியவில்லை. தாயக மக்கள் தமது சொந்தக் காலில் முதலில் நிற்கட்டும், பிறகு மற்றையவை பற்றி யோசிக்கலாம். கேள்வி : ஆக, உங்களைப்பொறுத்தவரை பல புலம்பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை கொண்டவர்களாக, செல்வச் செழிப்போடும், உயர் பதவிகளிலும் இருந்துகொண்டு, இலங்கைக்கு ஒருபோதுமே வர விரும்பாமல், ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட மட்டுமே தமது பணத்தினை வாரியிறைத்த இத் தமிழர்கள், தற்போதாவது தாயக மக்களின் விடயங்களில் தலையிடுவதைலிருந்து விலகி, தாயக மக்களின் மீட்சிக்காக உழைக்க வேண்டும் என்பதுதானே? ? கே பி : சரியாகச் சொன்னீர்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால், யுத்தம் முடிந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. எமக்கு முன்னாலிருப்பது ஒற்றை வழிதான். இருப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான். அதுவே சமாதானத்திற்கான வழியும், சந்தர்ப்பமும். சிங்களவர்களோடு ஒற்றுமையாக இணங்கிச் செல்லும் சமாதானமான வழியே அது. பல நம்பிக்கயீனங்கள் இருபக்கமும் நிகழ்ந்துள்ளன, எமக்கிடையே நூற்றாண்டுகளாக கசப்புணர்வுகள் இருக்கலாம். அரச நிர்வாகம் என்பது பொதுவாகவே குறைந்த வேகத்துடன் தீர்வுகளைத் தருவது. எமக்கான சில தீர்வுகள் கிடைக்க காலம் எடுக்கலாம். ஆனால், எமக்கு வேறு வழியில்லை. அமைதியாகவும் பொறுமையாகவும் நாம் பயணிக்கும்போதுதான் எமக்கான தீர்வுகளை நாம் பெறமுடியும். உங்களுக்கு முன்னாள் அமைச்சர் தொண்டைமானைத் தெரிந்திருக்கும். அவர் அமைதியாகவும், பொறுமையாகவும் பல்லாண்டுகள் காத்திருந்துதான் தனது மக்களில் ஒரு லட்சம் பேருக்கு வாக்குறிமையினைப் பெற்றுக்கொடுத்தார். அதுபோல நாமும் பொறுமையுடனும், அமைதியாகவும் காத்திருக்க வேண்டும். தொண்டைமானுடன் பேசுவத்ற்கு எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் என்னிடம் கூறும்போது, "உங்கள் மக்கள் எல்லோருமே நன்றாகப் படித்தவர்கள். ஆனால், உங்களிடம் நல்ல தலைவர்கள் இல்லை. உங்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய தலைவர்களில்லை" என்று கூறினார். எமக்கு விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய, நெகிழ்ச்சியான தன்மையுடைய, சமரசம் செய்யக்கூடிய தலைவர்கள் வேண்டும். ஆனால், அப்படியான தலைவர்கள் இல்லாமலிருப்பதே எமக்குப் பெரும் பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது.. எதிர்மறையான உணர்வுகள் ஒருபோதுமே எமக்கு நண்மை பயக்கப்போவதில்லை. ஆம், எமக்கு ஒரு போர் நடந்ததுதான், மக்கள் கொல்லப்பட்டார்கள்தான். ஆனால் அது ஒரு 100 வருடகாலப் பிரச்சினை. ஆகவே அதனைத் தீர்ப்பதற்கு எமக்கு நியாயமான காலம் தேவை. நான் புலம்பெயர் தமிழர்களின் விடயத்திற்கு மீண்டும் வருகிறேன். நான் அவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகிறேன். 90 வீதமான புலம்பெயர் தமிழர்கள் மிகவும் நல்லவர்கள். பலர் இங்கே பிறந்தவர்கள், சிலர் புலம்பெயர் நாடுகளில் பிறந்திருக்கலாம். ஆனால், இங்கிருக்கும் தமது உறவுகள் குறித்து அவர்கள் அதீத கரிசணை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள். எனக்கு முன்னாலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், இன்னமும் தீவிரவாத எண்ணம் கொண்டு அலையும் அந்த 10 வீதத் தமிழர்கள் தான். அவர்களே தாயகத் தமிழர்களுக்கு பாரிய நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார்கள்.
  6. கூட்டாளிகளின் வாழ்த்து! ஒரு மட்டு மரியாதை வேண்டாம்😂
  7. முதலாவது நாள் இறுதியில் $49399 கணக்கு $49900 எட்டியுள்ளது, 1.01% வீத வளர்ச்சியை கணக்கு எட்டியுள்ளது அனால் ASX 0.50 அளவிலேயே உள்ளது இதனால் தற்சமயம் இந்த Portfolio இதனடிப்படையில் சந்தை 1 விகிதம் முன்னேறினால் கணக்கு 2 மடங்கு முன்னேறும் அதே போல் இறங்கினாலும் ஏற்படலாம், ஆனால் இது ஒரு நாள் மாற்றத்தைக்கொண்டு இதன் Beta கணிப்பிட முடியாது.
  8. இப்படியெல்லாம் வயதுபார்த்தால் நீங்கள் ஒரு கலாரசனை இல்லாதவர் என்று பொருள்......அவர் திட்டுறதும் சரிதான்....! 😂
  9. அது கொவ்வைக் காய் ....பேச்சு வழக்கில் கோவக்காயாக மாறி விட்டது ....... இந்த இதழ்களை நன்றாகப் பாருங்கள் நாதம்ஸ்.... இதுபோல் அது இருப்பதால் அந்தப் பெயர்......அகநானூறு புறநானூறிலும் கொவ்வை இதழ் என்று பல பாடல்கள் இருக்கின்றன......! 😂
  10. அடியே....நம்ம குள்ளத்தாரா பொரிச்ச குஞ்சுகளில கோழிக்குஞ்சும் ஒன்று இருக்குதடி......அவள் அந்த கொண்டை சேவலுடன் திரியும்போதே நினைச்சன் இப்படி ஏதாவது நடக்கும் என்று ......கலிகாலம்.....! ஊர்வம்பு பேசும் தாராக்கள்......! 😂
  11. “ஜியாங் ரோங்” இன் ‘’ஓநாய் குலசின்னம்’’ November 4, 2021 — அகரன் — அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி கலிபோர்னிய வறட்சி பற்றிய விபரணத்தை வெளியிட்டது. அங்கு ஒர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் முற்றிலும் காணாமல்போய்விட்டது. அப்பகுதி மக்கள் பெற்றோல் பங்கில் 15 டொலர் கட்டி வாரத்தில் குளிக்கிறார்கள். ஒரு வயதான பெண்மணி கடந்த மாதம் 1000 டாலருக்கு தண்ணீர் வேண்டினேன் என்று கலங்கினார். அங்கு 2018இல் நீர் நிறைந்திருந்த ஏரியில் சிறுகோடுபோல தண்ணீர் இருக்கிறது. உலகின் வல்லரசு ஒன்றின் நிலத்தில் நடக்கும் கோரமான நிலை இது. அண்மையில் உலக நாடுகளின் சூழல் விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ‘’மனித நடவடிக்கைகள் ஆபத்தான நோயை பூமிக்கு வழங்கிவிட்டன. காலம் பிந்திவிட்டது. கடந்த பத்தாண்டுகளின் புவி வெப்பநிலை ஏற்றம் ஆபத்தின் கூக்குரல்’’ என்றது. கரியமில வாயுவை கட்டுப்படுத்த நாடுகள் கூட்டம்விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்சீனா ஹைதரசன் குண்டை பரிசோதித்திருக்கிறது. மோசமான அதிகார வெறி இந்த பூமியை அழிப்பதை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆபத்தானவன்தான். இப்படியான ஒரு நாளில்தான் ‘’ஓநாய் குலசின்னம்’’ என்ற நாவலை படித்தேன். இந்த நாவல் ஜியாங் ரோங் என்பவரால் சீனமொழியில் 2004இல் வெளியிடப்பட்டது. இதை ஆங்கிலத்தில் படித்த திரு வெற்றிமாறன் இதை வெளியிடவே அதிர்வு என்ற பதிப்பகத்தை ஏற்படுத்தி சி.மோகன் என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 2012இல் தமிழில் வெளியாகியது. இச்சேதியே இந்த நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இதை படித்ததும் வளர்ச்சி என்ற சொல்லே வெறுப்பை தந்தது. இயற்கையை சிதைத்துவிட்டு எதை நாம் வளர்க்கப்போகிறோம்?அழிவையும், மரணங்களையும்தானே? ** நாவல் மையங்கொள்வது மொங்கோலிய புல்வெளிகள் பற்றியது. சீன மறுமலர்ச்சியில் மாவோ கிராமங்களை வளர்க்க மாணவர்களை எங்கும் அனுப்புகிறார். அப்படித்தான் மொங்கோலிய புல்வெளி ஓலான் புலாக்கிற்கும் சீன மாணவர்கள் வருகிறார்கள். அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள். அதில் ஒரு மாணவன் ஜென்சின். அவனுக்கு அந்த மக்கள் வாழ்வு பிடித்துப்போகிறது. மொங்கோலிய புல்வெளிகளின் உண்மையான ராஜா ஓநாய்கள்தான். ஓநாய்கள் தங்கள் மந்தைகளை கொன்றாலும், புல்வெளி நிலைத்திருக்க ஓநாய்கள்அவசியம் என்று அந்த மக்கள் விரும்புகிறார்கள். ஓநாய்களுக்கும் கடவுளுக்கும் தொடர்பிருப்பதாகஅவர்கள் கருதுகிறார்கள். ஓநாய்கள் ஊளைஇடும்போது அவை வானத்தைப்பார்த்து கடவுளிடம் முறையிடுகின்றன. அதைப்பார்த்தே மனிதனும் வானத்தைப் பார்த்து வணங்க கற்றுக்கொண்டான் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு காலத்தில் பத்தாயிரம் மான்கள் கூட்டமாக அந்தப்புல்வெளியில் புல்மேயும். மான்களின் உயிர்ப்பெருக்கத்தை சமநிலையில் வைத்திருப்பவை ஓநாய்கள். அதைவிட எலிகள், ஒரான்குட்டான்கள், முயல்கள் என்று எல்லாவற்றையும் இயற்கை சமநிலை பேணி நிலைக்க வைத்திருப்பவை ஓநாய்கள். இறந்த விலங்குகளில் இருந்து கிருமிகள் வெளியேறாமல் எலும்புகளைத்தவிர எல்லாவற்றையும் உண்பதால் புல்வெளி சுத்தமாக இருக்கும். ஓணாய்கள் தங்கள் உடமையை தாக்கினாலும் அவற்றை மொங்கோலிய புல்வெளி மக்கள் குலதெய்வமாகவே பார்த்தார்கள். இதைவிட ஓநாய்களின் சிறப்பியல்புகள் ஜென்னை வியப்பில் நிறுத்துகின்றன. தம் உணவுத்தேவைக்கு அதிகமாக அவை உயிர்களை கொல்லாதவை. யுத்ததந்திரங்களில் அவற்றை அடிக்க யாருமில்லை. தமக்கு சாதகமான நிலை வருமட்டும் பதுங்கி இருப்பவை. இரவில் பெரும் தாக்குதலை நடத்ததலைமை ஓநாயின் கட்டளைப்படி நகர்வதோடு தாக்குதலுக்கான புலனாய்வு நடவடிக்கையைக்கூட இரகசியமாக பல நாட்களின் முன்னே செய்பவை. மொங்கோலிய குதிரைகளின் வேகம் அதிகரித்ததற்கு ஓணாய்களே காரணம். இந்த நிலத்திலிருந்து செங்கிஸ்கான் என்ற மாபெரும் மனிதபோர் அலையை இந்த ஓநாய்களே ஏற்படுத்திஇருக்கும் என்பது இதில் இருந்து தெரிகிறது. இந்த நிலையில் ஓநாய் குகையில் ஓர் ஓநாய் குட்டியை எடுத்து ஜென் வளர்க்கிறான். ஒரு குழந்தையை தாய் வளர்ப்பதுபோல அவன் அக்கறை காட்டுகிறான். ஓநாய் வளர்க்க பல இடையூறுகள் வருகின்றன. நாய்களோடு சேர்த்து வளர்த்தாலும் அது ஓநாயாகவே வளர்கிறது. அதன் தனித்தன்மையை எந்த நிலையிலும் அது இழக்கவில்லை. இப்படியான நிலையில் /ஓநாய்கள் மந்தைகளைகொல்கின்றன. உற்பத்தியை பெருக்க விவசாய நிலமாக அவற்றை மாற்ற அரசு முயற்சிக்கிறது. /எல்லாவற்றுக்கும் ஓநாய்களை அழிக்க வேண்டும் என்று அதிகாரவர்க்கம் முடிவெடுக்கிறது. புல்வெளி முதியவர்களின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறது. ஓநாய்களை இராணுவம் சுட்டுக்கொல்கிறது. சீனர்கள் வருகிறார்கள். விவசாயம் வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு நடந்த வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. ஓநாய்கள் இல்லாததால் எலிகள் பெருகி நிலமெங்கும் ஓட்டைபோட்டு வளைகள் வருகிறது. குதிரைகள் அந்த ஓட்டைகளில் கால்விட்டு கால் முறிகிறது. ஓநாய்களை அடுத்து மான்கள் வேட்டை நடக்கிறது. வெறும் 20 ஆண்டுகளில் புல்வெளிபாலை நிலம்போல் மாறுகிறது. அங்கு விவசாயம்கூடசெய்ய நீரற்றுப்போகிறது. ஆற்றில் மணல் மட்டும் அடையாளமாக கிடக்கிறது. இப்போது அந்த மண்வெளியில் இருந்து மணல்புயல் சீனாவின் பீஜிங் ஐ அடிக்கடி தாக்குகிறது. நாவலின் இறுதியில் வளர்த்த ஓநாயை தன்கையாலே கொல்லவேண்டி ஏற்படுகிறது. தன் குழந்தையை கொன்றதுபோல ஜென் துடிக்கின்றான். இந்த நாவலில் புல்வெளியின் ஆன்மா போன்ற ஓர் முதியவர் வருகிறார் அவர் பில்ஜி. ஜென்னை தன் மகன்போல கருதி அந்த வாழ்வைகற்றுக் கொடுக்கிறார். அவர் புல் வெளிபற்றி கூறும் வார்த்தைகள் அதிர்வை தருபவை. « இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றயவை சிறிய உயிர். புல்லை தின்னும் ஜீவன்கள் இறைச்சி தின்னும் உயிர்களைவிட மோசமானவை. மான்களைவிட புல் இரக்கத்துக்குரியவை. மான்களுக்கு தாகம் எடுத்தால் அவை நதியை தேட முடியும். குளிர் எடுத்தால் மலையில் இதமான இடத்துக்கு நகரமுடியும். புல்? அது பெரிய உயிர். அதன் வேர்கள் அழமற்றவை. அதனால் ஓட முடியாது. எவரும் அவற்றின்மீது ஏறி மிதிக்கலாம், உண்ணலாம். அவை பூப்பதில்லை. தம் விதைகளை அவற்றால் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புற்களைவிட வேறேதும் இரக்கத்திற்குரியதல்ல » புல்வெளியை அழித்த சீனா இன்று அதன் பெறுபேற்றை அனுபவிக்கிறது. ஏரல் என்ற கடலை சோவியத் தின்றதையும், பாலைவனத்தை இன்று மெல்வதையும் பார்க்கிறோம். அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல்! அந்த அரசாங்கமே காட்டை எரித்து விவசாய நிலத்தை ஏற்படுத்துகிறது. எல்லாம் வளர்ச்சிக்காக!!! இன்று வல்லமை நாடுகளிடம் 17000 அணுகுண்டுகள் சட்டப்படி இருக்கின்றன. அதைவிட வலிமைகூடிய நைடரஜன் குண்டுகள் வலம்வருகின்றன. இவை எல்லாம் எங்கு பயன்படுத்த காத்திருக்கின்றன ? அதற்கு முதல் ஒரு கேள்வி. பூமியில் நீரும், பிராணவாயுவும் இல்லாதபோது எந்த நாடு இருக்கும்?! யார் யாரை எதிர்ப்பார்கள்? « ஓநாய்கள் தம் பசியை மீறி உயிரை கொல்லாது, பிள்ளைத்தாச்சி விலங்கை கொல்லாது பிறந்த குட்டிகளை உண்ணாது» மனிதனைவிட எவ்வளவு மேலானவை?!! ‘’ஓணாய் குல சின்னம்’’ இந்த நூற்றாண்டின் அவசிய நாவல்!! https://arangamnews.com/?p=6700
  12. கேள்வி : ஐ நா வினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பற்றிய உங்கள் பார்வை என்ன? போர்க்குற்றம் தொடர்பாகக் கடுமையான வாதப் பிரதிவாதங்களை அது ஏற்படுத்தியிருக்கிறதே? கே பி : நாம் ஒரு புதிய தசாப்த்தத்தினுள் வந்திருக்கிறோம். பழயவை பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் இனிப் பயனில்லை. அறிக்கையின்படி இரு பக்கத்தினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. இந்த அறிக்கை மூலம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. இந்த அறிக்கையே மிகவும் குழப்பகரமானது, பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. நல்லிணக்க முயற்சிகளை முற்றாக தடம்புரள வைக்கக் கூடியது. எம்மைப் பொறுத்தவரை இந்த அறிக்கையினால் எவருக்குமே நண்மையேதும் கிடைக்கப்போவதில்லை. இது வெறுமனே தகவல் அறியும் முயற்சி என்றுதான் பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் வன்னிக்குச் சென்று இந்த அறிக்கை மூலம் யாராவது ஒரு குடும்பமாவது நண்மை அடைந்ததா என்று கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உண்மை. இவ்வறிக்கையினால் எவருக்குமே நண்மை கிடைக்கப்போவதில்லை. தமிழர்கள் உட்பட முழு நாடுமே இந்த ஐ நா அறிக்கையினை முழுமனதோடு எதிர்க்கிறார்கள். நீங்கள் கள யதார்த்தத்தினை உணர்ந்துகொள்ள வேண்டும். பழையவற்றை நாம் கிளறுவதால் இன்னும் அழிவுகளே மிஞ்சும். போர் என்று வரும்போது யார் முதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதே முக்கியமானது. போரில் உண்மையும் கொல்லப்பட்டுவிடும். மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் செய்ய முடியாது. போர் என்றால் மக்கள் இறப்பது இயல்பானது. போரில் நல்லபோர், கெட்ட போர் என்று வேறுபாடில்லை, போர் என்றால் போர், அவ்வளவுதான். இதில் ஒருவரையொருவர் குறைகூறுவதில் அர்த்தமில்லை. இரு தரப்பினரும் தமது எதிரியை அழிக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். ஆகவே ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இப்படியே ஒவ்வொரு யுத்தத்திற்கும் ஐ நா அறிக்கை விட்டு நடவடிக்கை எடுப்பதென்றால், இது எப்போது முடியப்போகின்றது? என்னைப்பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது, மக்கள் இரண்டுவருடங்களைக் கடந்து வந்துவிட்டார்கள், அவ்வளவுதான். இந்த அறிக்கைகளில் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஒருவேளை, தாம் அறிக்கையில் செய்யப்போவதாகச் சொல்லும் விடயங்களை உண்மையாகவே செய்தார்கள் என்றால், பின்னர் பார்க்கலாம். இந்தப்போரில், அரசாங்கம் முழுமையான வெற்றியை அடைந்துவிட்டது, புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், தோற்றுப்போன புலிகளின் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். நான் நேரடியாக சிங்கள மக்களுக்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றாலும் கூட புலிகளுக்கான ஆயுத முகவராகத் தொழிற்பட்டதனால், நானும் முன்னர் இயக்கத்தில் இருந்தவன் தான். ஆகவே, எமது நலன்பற்றி இந்த அறிக்கை ஏதாவது கூறுகிறதா? இல்லையே? மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால்ப் போதும். அவர்களைப்பொறுத்தவரை போர்க்குற்றம் என்பதோ , ஐ நா அறிக்கை என்பதோ தேவையற்றது. அவர்கள் இவ்வறிக்கையிலிருந்து நண்மை எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. வெறும் தகவல் அறியும் பணிக்காக வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை பற்றி நாம் அலட்டிக்கொள்ளவேண்டிய தேவையென்ன? இந்த அறிக்கை, போரில் இப்படியான குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறதே, அதுபற்றி உங்களின் கருத்தென்ன என்று இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான், இதைத்தவிர இந்த அறிக்கைபற்றிப் பேச ஒன்றுமில்லை. கேள்வி : ஆகவே உங்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இன்று தேவையானது கல்வி, அபிவிருத்தி, மருத்துவ வசதிகள் என்பன மட்டும் தான் என்று தெரிகிறது, அப்படித்தானே? கே பி : நிச்சயமாக. போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் இன்னும் அல்லற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முன்னர் பல கசப்பான அனுபவங்கள் எமக்குக் கிடைத்திருக்கலாம். பல பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், பழைய விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களைப் போன்றே, இனிமையான அனுபவங்களும் எமக்குக் கிடைக்கும். நாம் இந்த அனுபவங்களையெல்லாம் பாவித்து ஒற்றுமையாக ஒரு தீர்வினைக் காண சேர்ந்து இயங்கவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கேட்பது உணவும், உடையும், இருக்க வீடு, வேலைவாய்ப்பும் மட்டுமே. அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் வழங்க முடியும்.
  13. "உலக வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால், கெரில்லா பாணியிலான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர் சேகுவேராதான் என்பது உங்களுக்குப் புரியும். உலகமெங்கும் இந்த முறையிலான போராட்டம் பரப்பப்பட்டாலும்கூட, கியூபாவில் மட்டுமே இது சாத்தியமாகியது, கியூபாவில் மட்டுமே இது வெற்றியளித்தது. ஆனால், பல நாடுகளில் கெரில்லாப்போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தம்மை அழித்துக்கொண்டதுதான் மிச்சம், இலங்கையிலும் இதுதான் நடந்தது. பனிப்போர் இறுதிக்கட்டத்தினை அடைந்த காலத்திலேயே இந்த நாட்டில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதிலும், இந்த ஆயுதபோராட்டம் இறுதியான காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. பனிப்போரினை முடித்துக்கொண்டு உலகம் ஒன்றாக இயங்க ஆரம்பித்தவேளையிலேயே நாம் போராட்டத்தினை ஆரம்பித்தோம். இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து பனிப்போர் முடிவுற்ற காலப்பகுதிவரை உலகம் முதலாளித்துவத்தையும், கம்மியூனிசத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரிந்து நின்றது. இக்காலத்தில்த்தான் புதிய நாடுகள் பல பிறந்தன. நாடுகள் பிரிக்கப்படுவதென்பது பனிப்போர் காலத்து நடைமுறையாகவிருந்தது. ஆனால், பனிப்போரின் பின்னரான புதிய உலக ஒழுங்கு முற்றிலுமாக வேறுபட்டது. போராட்டம் தோற்றதற்கு இதுவே முக்கிய காரணம்". "நீங்கள் எமது பிரச்சினையினைப் பார்த்தால், இந்தியா என்பது மிக முக்கிய நாடாக, எமது பெரியண்ணராக இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, இந்தியாவின் ஆதரவு இல்லாமல் நாம் எதனையும் அடைந்துவிட முடியாது என்பது தெளிவு. இப்பிராந்தியத்தில் இந்தியாவே மிகவும் பலமான நாடு. ஆகவே இந்தியாவைப் பகைத்துக்கொண்டு புலிகள் போராடியது இன்னொரு தவறு. இதுவும் அவர்கள் தோற்றதற்கு இன்னொரு காரணம். போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் என்கிற வகையில், அவர்கள் தாயகத்தில் இருந்த மக்களின் ஆதரவினை இழந்துவிட்டார்கள். 35 வருடகால நீண்ட போராட்டம் மக்களுக்கு சலிப்பினையும், அழிவினையும் மட்டுமே பெற்றுக்கொடுத்தது. புலிகளின் போராட்டத்திற்கு மக்களே பாரிய விலையினைச் செலுத்தினார்கள். அம்மக்கள் புலிகளியக்கத்திலிருந்து தம்மை அப்புறப்படுத்தியமையும் போராட்டம் தோற்றதற்கு இன்னொரு காரணம். நான் மீண்டும் கூறுவது என்னவென்றால், புதிய உலக ஒழுங்கு பிரிவினைவாதக் கிளர்ச்சிகளுக்கு முற்றிலும் எதிரானது. 2006 இல் தமது போராட்டத்தினை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்று பிரபாகரன் வேண்டிக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், ஒரு நாடு கூட அவரின் வேண்டுகோளினை சட்டைசெய்து உதவிக்கு வரவில்லை. இதனாலேயே, சர்வதேசம் பிரிவினைவாதத்திற்கு எதிரானது என்னும் எனது வாதத்தினை முன்வைக்கிறேன். 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், சர்வதேசம் சமரசத்திற்கான வாய்ப்பொன்றினை எமக்குக் கொடுத்தது. பாலஸ்த்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்குக் கூட இவ்வகையான சந்தர்ப்பத்தினை சர்வதேசம் வழங்கியிருக்கவில்லை. ஆக, எந்த பிரிவினைவாத இயக்கத்திற்கும் கொடுக்காத சந்தர்ப்பத்தினை, சூழ்நிலையினை புலிகளுக்குக் கொடுத்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான அனுமதியினை சர்வதேசம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஜேர்மனி, நோர்வே, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகள் இலங்கையில் சமாதானம் ஏற்படக் கடுமையாகப் பாடுபட்டன என்பது நீங்கள் அறியாதது அல்ல. ஆனால், புலிகள் இயக்கம் எந்த விட்டுக்கொடுப்பிற்கும், நெகிழ்ச்சித்தன்மைக்கும் தயாராக இல்லாமல், பிடிவாதமாக இருந்துவிட்டது. அவர்கள் கண்மூடித்தனமாக தமது பிரிவினைவாதப் போராட்டத்திலேயே ஆர்வம் கொண்டிருந்தனர். இறுதி யுத்தம் ஆரம்பித்த 2008 இல் , அமெரிக்க ஜனாதிபதி ஐநாவிலோ அல்லது ஐரோப்பிய யூனியனிலோ முன்வைத்த அறிக்கையில், புலிகளுக்கு நிதி செல்லும் அனைத்து வழிகளையும் முற்றாகத் தடுப்போம் என்று கூறியிருந்தார். சர்வதேசத்தினை மீறி எம்மால் தனியே நின்று வெல்ல முடியாதென்பது அப்போதாவது புரிந்திருக்க வேண்டும்".
  14. SPY ETF இன் மாதிரியை பின்பற்றி இந்த முதலீடு(Investment) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, எனக்கு முதலீட்டு அனுபவம் இல்லை அத்துடன் இந்த யாகூ வர்த்தகம் ஒரு மாதிரி கணக்கு மட்டுமே உண்மையான கணக்கு அல்ல. https://www.investopedia.com/articles/investing/122215/spy-spdr-sp-500-trust-etf.asp இதில் தெரிவு செய்யப்பட்ட பங்குகள் அவுஸ்ரேலிய பங்குகள். அனைத்து பங்குகளும் குறிப்பிட்ட Sector இல் அதிக Market capital கொண்டவை. பங்குகள் 03 கார்த்திகை 2021 இறுதி விலை. பங்குகள் 10/11 ASX 20 காணப்படுவதால் ASX 20 மையமாக கொண்டு Portfolio இனது BETA கணிக்கப்படும். இதனை 30 நாள் வரை கணிக்க முடிவு செய்துள்ளேன் நேரம் காணப்படும்போது விளைவுகளை தரவேற்றுகிறேன்.
  15. குறுக்கே வந்தால் வெட்டுவோம்......! 😁
  16. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் , கருணாவுக்கு நிகரான துரோகத்தை நிகழ்த்திய இன்னொருவனான கே பி யின் கைங்கரியங்கள் நாம் அறியாதவையல்ல. சிங்கள ராணுவ புலநாய்வுத்த்துறையினருடன் சேர்ந்து இவன் ஆடிய நாடகங்களும், தமிழருக்கெதிரான இனவழிப்புப் போரில் இவன் ஆற்றிய பங்கும் மறக்கப்பட முடியாதவை. சிங்கள அரசின் விருந்தாளியாக, செல்வச் செழிப்பில் வாழும் இவன், புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் வியர்வையும் குருதியும் சிந்தி உழைத்த பணத்தை நாட்டின் விடுதலைக்கென்று வழங்கியபோது, அவற்றை இனக்கொலையாளிகளின் கைகளில் கொடுத்து தனது விடுதலை வாங்கிக்கொண்ட துரோகி இவன். இவனாலும் சிங்கள ராணூவப் புல்நயாவுத்துறையினராலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட இவனது கைது நாடகத்தின்பின்னர் இலங்கை திரும்பி சிங்களத்தின் செல்லப்பிள்ளையாக இவன் வலம்வந்த 2011 காலப்பகுதியில் தமிழர் விரோத பார்ப்பண நாளேடான தி ஹிந்துவிற்கு இவன் வழங்கிய செவ்வியின் தமிழ் வடிவம் கீழே.
  17. சுவியண்ணை ஒரு கலா ரசிகன் தான்.
  18. இயற்கை.... மீண்டும், தனது இடத்தை... தக்க வைத்த தருணம்.
  19. சீக்கியரின் தலைப்பாகை தலையை காத்தது.......! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.