Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46798
    Posts
  2. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5418
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10104
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/13/23 in all areas

  1. தமிழீழ விடுதலைப் புலிகளாக பரிணாம வளர்ச்சியடைந்த புதிய தமிழ்ப் புலிகள் ஒரு வீரனுக்கான தேவை துரையப்பாவின் கொலையின் மூலம் ஒரு செய்தியினை சிங்கள அரசுக்கு பிரபாகரன் தெரிவிக்க விரும்பினார். தமிழர் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் புதிய சக்தியொன்று களத்தில் இறங்கியிருக்கிறது என்பதுதான் அது. இது மிகக் கடுமையான தாக்கத்தினை தமிழ் மக்களிடத்திலும் சிங்களவரிடத்திலும் ஏற்படுத்திவிட்டிருந்தது. சுபாஷ் சந்திரபோசுக்கு நிகரான தமிழ் வீரன் ஒருவனை தமிழ்ச் சமூகம் நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஈழத்துக் காந்தியென்று மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட தந்தை செல்வா தனது மக்களுக்கான தந்தை எனும் ஸ்த்தானத்தைக் கொடுத்திருந்தார். ஆனால் அவராலும் மக்களுக்கான விடுதலையினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. வன்முறையற்ற போராட்டங்கள் மூலம் தமிழருக்கான விடுதலையினையும், உரிமைகளையும் பெற்றுவிடமுடியும் என்று தந்தை செல்வா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் முற்றான தோல்வியினையே தழுவியிருந்ததுடன், தமிழரின் இருப்புப் பற்றிய நம்பிக்கயீனத்தையும் தமிழரிடையே ஏற்படுத்திவிட்டிருந்தது. தந்தை செல்வாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற போராட்டங்களை சிங்கள அரசுகள் தமது அரச இயந்திரத்தினைப் பாவித்தும், காடையர்களை ஏவியும் மிகக் குரூரமாக அடக்கியிருந்தன. மனித விழுமியங்களை மதித்து முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் சிங்கள அரசுகளால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தன. தமிழ் மக்கள் பலமான, தம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக திருப்பித் தாக்கக்கூடிய சக்தியொன்றை எதிர்பார்த்தனர். சுருங்கக் கூறின், ஒரு வீரனை அவர்கள் எதிர்பார்த்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கா. துரையப்பாவின் கொலையின் மூலம் தம்மீதான தாக்குதல்களுக்கு தமது உயிரைத் துச்சமென மதித்து, திருப்பியடிக்கக் கூடிய இளைஞர்கள் அமைப்பொன்று உருவாகிவருவதை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டனர். துரையப்பாவின் கொலைக்கு தமிழர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அவர்களின் மனோநிலையினை மிகவும் தெளிவாகக் காட்டியது. மக்களுடன் நட்பாகப் பழகும் மேயர் ஒருவர் கொல்லப்பட்டதால் அவர்கள் கவலையடைந்திருந்தாலும், சிறிமாவின் அரசியலமைப்பின் மூலம் தமிழர்களை அடிமைகொள்ள அவர் எடுத்துவந்த நடவடிக்கைகளுக்கு தன்னாலான முழு ஆதரவினை வழங்கிவந்த ஒரு தமிழ்த் துரோகி கொல்லப்பட்டது அவர்களுக்கு மகிழ்வினையே கொடுத்திருந்தது. சிங்கள இனவாதத்தின் அரசி என்று தமிழ் மக்களால் முற்றாக வெறுக்கப்பட்ட சிறிமா மீதான அவர்களின் அதிருப்தி பிரபலமான தமிழ் அரசியல்வாதியான துரையப்பாவை அவர்கள் தியாகம் செய்யுமளவிற்கு அவர்களைத் தள்ளிவிட்டிருந்தது. துரையப்பாவின் மரணம் சாதாரண யாழ்ப்பாணத் தமிழனின் மனதில் இதனைச் செய்த தமிழ் இளைஞர்கள் மீது இனம்தெரியாத மரியாதையினையும், பாசத்தினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. "பொடியள் செய்துபோட்டங்கள், எங்கட பொடியள் அவங்களுக்குச் சரியான பாடத்தைப் படிப்பித்திருக்கிறாங்கள். நாங்களும் திருப்பியடிக்க எங்களிட்டையும் பலமாக படையொண்டு வந்திருக்கு" என்று கூறியதுடன் தமது இளைஞர்களின் துணிவுபற்றி கெளரவத்துடன் பேசத் தொடங்கினர்.
  2. ஒரு துரோகியின் முடிவு தலைவர் பிரபாகரன் துரையப்பா மீதான தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளை பிரபாகரனே பொறுப்பெடுத்தார். தனக்கு உதவுவதற்காக மூவரையும் தெரிவுசெய்தார். கலபதி, கிருபாகரன் மற்றும் பற்குணராஜா ஆகியோரே அந்த மூவரும். தாக்குதலுக்கான ஆயுதத்தினைத் தயாரித்தல் மற்றும் துரையப்பாவைக் கொல்வது ஆகிய வேலைகளைத் தானே செய்வதாகத் அவர் தீர்மானித்தார். ஏனையவர்கள் துரையப்பாவின் நடமாட்டங்களை அவதானிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். துரையப்பா ஒரு கிறீஸ்த்தவராக இருந்தபோதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அவர் தவறாது பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்றுவருவதை புலிகள் அவதானித்தனர். தான் வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்றுவருவதற்கான காரணத்தை துரையப்பா தனது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். வரதராஜப்பெருமாள் கோயிலின் அமைவிடமும் அதன் அமைதியான தன்மையும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தனது நண்பரான யாழ்ப்பாண சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான ராஜசூரியரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், அவ்வாலயத்தினுள் சென்றவுடன் தனது மனம் அமைதியடைந்துவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். அல்பிரெட் துரையப்பா கொல்லப்பட்ட நாளான 1975 ஆம் ஆண்டு ஆடி 26 ஆம் திகதிக்கு முதல் நாள் பொன்னாலையிலிருக்கும் தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன், அங்கு தனது நண்பரின் தாயார் சமைத்த உணவினை உட்கொண்டுவிட்டு, வழக்கம் போலவே தனது நண்பருடன் பேசிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். அப்போது பிரபாகரன் குண்டுகள் ஏற்றப்படாத கைத்துப்பாகியொன்றை வெளியே எடுத்து தனது தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு தூங்குவதை நண்பர் அவதானித்தார். அவருக்கருகில் இரண்டு அல்லது மூன்று சிறிய பெட்டிகளும் இருந்தன. "உன்னால் ஒரு காகத்தைத் தன்னும் இத்துப்பாகியைக் கொண்டு சுடமுடியுமா?" என்று வேடிக்கையாக பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார் நண்பர். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த பிரபாகரன், "அமைதியாய் இரு, நாளைக்கு நடக்கப்போவதை மட்டும் பார்" என்று கூறினார். அந்த நண்பர் பிற்காலத்தில் இச்சம்பவம் பற்றிப் பேசும்போது, "பிரபாகரன் அன்று நன்றாகவே தூங்கினார், காலை விடியுமுன்னரே அவர் கிளம்பிவிட்டார்" என்று கூறுகிறார். நண்பரின் வீட்டிலிருந்து புறப்பட்ட பிரபாகரன் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலின் முன்னாலிருந்த தேனீர்க் கடைக்குச் சென்றார். அங்கே கலபதி, கிருபாகரன் மற்றும் பற்குணராஜா ஆகியோர் அவருக்காகக் காத்திருந்தனர். கொலையின் பின்னரான விசாரணையின்போது சாட்சியமளித்த அக்கடையின் உரிமையாளர், அவர்கள் நால்வரும் தனது கடையில் காலையுணவினை முடித்துக்கொண்டு கோயிலின் அருகில் சென்று எவரின் வருகைக்காகவோ காத்திருப்பதை தான் கண்டதாக கூறினார். சிறிதுநேரத்தில் அங்குவந்த துரையப்பாவின் கார், கோயிலின் வாயிலைக் கடந்து ஒரு சில மீட்டர்கள் சென்று நிறுத்தப்பட்டது. தனது கதவினைத் திறந்துகொண்டு வெளியே இறங்கினார் துரையப்பா. அவருக்காகக் காத்திருந்த நான்கு இளைஞர்களும் அவரைப் பார்த்து, "வணக்கம் ஐயா" என்று கூறினார்கள். இயல்பாகவே நட்பாகப் பேசும் துரையப்பாவும் அவர்களைப் பார்த்து, "வணக்கம் தம்பிகள்" என்று பதிலுக்குக் கூறினார். பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த சுழற்துப்பாக்கியினை வெளியே எடுத்து துரையப்பாவை நோக்கிச் சுட்டார். துப்பாக்கிச் சன்னங்கள் துரையப்பாவின் நெஞ்சுப்பகுதியை ஊடறுத்துச் சென்றன. காயத்திலிருந்து இரத்தப் பீய்ச்சிட்டுப் பாய்ந்தது. நிலைகுழைந்து கீழே விழுந்த துரையப்பா அவ்விடத்திலேயே பலியானார். அதன்பின்னர் துரையப்பாவின் காருக்குச் சென்ற பிரபாகரனும் மற்றைய மூவரும், சாரதியை துரத்திவிட்டு காரை ஓட்டிச் சென்றனர். இனப்பிரச்சினையின் முதலாவது கொலை நடத்தப்பட்டாயிற்று. அது தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிங்களவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது சிறிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ் மக்களின் தனிநாட்டிற்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  3. பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்கம் யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம். அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன். @vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே விடயங்களை பகிர்ந்து கொள்ளும், வினாக்களை எழுப்பும் ஒரு திரியாக இதில் நாம் ஒன்றிணைவது சாலப்பொருத்தம் என கருதி இந்த திரியை திறக்கிறேன். மேலே சொன்னோர் மட்டும் அல்ல இன்னும் பலர் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பீர்கள். ஆகவே, பங்கு? வா பங்கு ஒரு கை பார்க்கலாம். பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்ட திரிகள் சில கீழே:
  4. நானும் கேட்டேன் ப‌தில் வ‌ர‌ வில்லை அப்ப‌டியே விட்டு விட்டேன் லொல்
  5. ஆம். வசி கூறியதுபோல் வாங்கும் போது உள்ள விலைக்கும் அதே கணம் விற்கும் நிலைக்கும் உள்ள இடைவெளிதான் கமிசன். ஒவ்வொரு சந்தையைப் பொறுத்து இந்தத் தொகை வேறுபடும். உதாரணமாக Palladium 100 டொலருக்கு (X10) ற்கு வாங்கினால் அதன் விற்பனை விலை 96.5 ஆக இருக்கும். தங்கத்தில் இந்த இடைவெளி மிகச் சிறிது. மற்றும்படி பிரான்சில் பங்குச் சந்தையில் 1 டொலர் இலாபம் வந்தாலும் 1 மில்லியன் டொலர் இலாபம் வந்தாலும் 30 வீதம் வரி கட்ட வேண்டும். 😬 பங்குச்சந்தை இலாபத்தில் வரி கட்டுவதில் குறுக்கு வழியில் எதுவும் செய்ய முடியாது. ஒரே ஒரு வழி உண்டு, அது ஒரு வித வைப்புத் திட்டத்தில் முதலிடுவது, 17 வீதம் வரி.
  6. விலங்குகள் இணை பிரிவதில்லை . விவாக ரத்து செய்வதில்லை .😃
  7. இப்படியும் சாப்பிடலாம்.....😂
  8. குட்டிமணி 1973 ஆம் ஆண்டு அவர் பயணித்த படகிலிருந்து டெட்டனேட்டர்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதையடுத்து குட்டிமணி தமிழ்நாட்டில் கைதானார். இந்தியாவின் வெடிபொருள் மற்றும் கடவுச்சீட்டு சட்டங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கையில் அரசுக்கெதிரான பழிவாங்கும் தாக்குதல்களை குட்டிமணி திட்டமிட்டிருந்தார் என்கிற இலங்கையரசின் அறிவிப்பினை ஏற்றுக்கொண்ட அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சரான திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், முத்துவேல் கருனாநிதி, இலங்கை அரசு கேட்டுக்கொண்டதன்படி குட்டிமணியை இலங்கைக்கு நாடுகடத்த ஒப்புக்கொண்டார். இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட குட்டிமணி சிலகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வந்திறங்கிய தங்கத்துரை தனது இயக்கத்தின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தார். 1975 ஆம் தைமாதம், மூன்றாவது அமைப்பொன்று உருவாக்கப்பட்டது. லண்டன் நகரில், தொடர்மாடிக் குடியிருப்பில் இடம்பெற்ற பல சம்பாஷணைகளின் விளைவாக இளையதம்பி இரத்திணசபாபதி மற்றும் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் ஆகியோர் இணைந்து இந்த மூன்றாவது அமைப்பினை உருவாக்கினர். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது தமிழரின் பிரச்சினையை உலகறியச் செய்வதுதான். இவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் 1975 ஆம் உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற நகரங்களான இங்கிலாந்தின் ஓவல் மைதானம் மற்றும் மஞ்செஸ்ட்டர் மைதானம் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், ஒருசிலர் இலங்கையில் சிங்கள அரசு தமிழர் மேல் புரிந்துவரும் அட்டூழியங்களை பதாதைகளில் எழுதி, அவற்றினைக் கைகளில் உயரப்பிடித்தவாறு மைதானத்தின் குறுக்கே ஓடினர். இவ்வமைப்பின் கிளையொன்று யாழ்ப்பாணத்திலும் திறக்கப்பட்டதோடு, 1976 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் வவுனியா கண்ணட்டி பகுதியில் இவ்வமைப்பின் இராணுவப் பயிற்சி முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்னுமொரு ஆயுத அமைப்பொன்று 1975 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு, சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களுக்கு பலவிதமான அரசியல்க் கொள்கைகள் இருப்பினும், ஒரு அமைப்பாக அமிர்தலிங்கத்தின் கீழ் இவர்கள் செயற்பட்டனர். இந்த அமைப்பில் இருந்த இடதுசாரி கொள்கையுடைய பல உறுப்பினர்கள் தமிழர் ஐக்கிய முன்னணியினரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொள்வதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப்பொறுத்தவரை தமிழ் அரசியல்வாதிகள் உதட்டளவில் மட்டுமே தமிழர் நலன்குறித்துப் பேசுபவர்களாகவும், பாராளுமன்ற பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசியல் செய்பவர்களாகவுமே தெரிந்தனர். ஆகவே, தமிழ் இளைஞர் பேரவை என்பது, இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை விலத்தி, செயற்றிறன் மிக்க, சமூக மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அத்துடன் தமிழர் ஐக்கிய முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட சாதி ஒழிப்புக் கோஷம் பொய்யானது என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த வாதப் பிரதிவாதங்களின் விளைவாக தமிழ் இளைஞர் பேரவை 1975 ஆம் ஆண்டு ஆனி மாதம் இரு பிரிவுகளாக உடைந்தது. அதன்படி மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ஆகியோர் தலைமையில் ஒரு பிரிவு தொடர்ந்தும் தமிழர் ஐக்கிய முன்னணியோடு செயற்பட, முத்துக்குமாரசாமி மற்றும் வரதராஜப்பெருமாள் தலைமையிலான மற்றைய பிரிவு பிரிந்துசென்று ஈழம் விடுதலை இயக்கம் எனும் அமைப்பினை உருவாக்கியது. துரோகிகளை அழித்தல் சிவாகுமாரனினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட, சிறிமாவின் தமிழ் முகவர்களான துரோகிகளைக் கொல்லும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க பிரபாகரன் முடிவெடுத்தார். 1975 ஆம் ஆண்டு, தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான ஆணையினை தந்தை செல்வாவிற்கு வழங்கிய அதே காலப்பகுதியிலேயே தமிழினத்தின் துரோகிகளை கொல்லும் முடிவினை பிரபாகரன் எடுத்திருந்ததாக அந்நாட்களில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பிலிருந்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனது அமைப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பிரபாகரன் தனது முடிவிற்கான காரணம்பற்றி தெளிவாக விளக்கியிருந்ததாகவும் கூறினார். இந்தக் கலந்துரையாடல்களில் இலங்கைத் தமிழரின் சரித்திரப் பெருமைபற்றி பிரபாகரன் பரவசத்துடன் பேசியிருக்கிறார். குறிப்பாக யாழ்ப்பாண ராஜ்ஜியம் பற்றியும், போர்த்துக்கேயரிடம் அது வீழ்ச்சியுற்றது பற்றியும், பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தமிழ்த் தலைவர்களின் அசமந்தத்தினால் தமிழரின் இறையாண்மை சிங்களவரிடம் அடகுவைக்கப்பட்டதுபற்றியும் உணர்வுபொங்க அவர் பேசியிருக்கிறார். மேலும், காங்கேசந்துறை இடைத்தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை தமிழ் மக்கள் வழங்கியது குறித்துப் பேசிய பிரபாகரன், மக்கள் ஆணையின்படி இழக்கப்பட்ட தமிழரின் இறையாண்மையினை மீளப்பெற்றே தீருவோம் என்று முழங்கியதாகவும் கூறுகிறார். "இந்த உன்னதமான கடமை எமது தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இலகுவான காரியமல்ல. மிகவும் கடுமையானதாகவும் நீண்டதாகவும் இது இருக்கப்போகிறது. ஆனால், நாங்கள் இதனை செய்துமுடிப்போம்" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். பிரபாகரனுக்கு அப்போது 20 வயதே ஆகியிருந்தது. அவரது வழிநடத்துதலின் கீழ் 30 போராளிகள் செயற்பட்டுவந்தனர். அவரிடமிருந்த ஆயுதங்கள் இரு கைத்துப்பாக்கிகள் மட்டுமே. ஒன்று வெளிநாட்டில் செய்யப்பட்டது, மற்றையது உள்நாட்டுத் தயாரிப்பு. வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் தனது பயிற்சிமுகாமினை அமைத்திருந்த பிரபாகரன் தனது தோழர்களுக்கு துப்பாக்கியை நேராகச் சுடும் பயிற்சியை வழங்கிவந்தார். தமது நள்ளிரவு கலந்துரையாடல்களில் தமது முதலாவது ராணுவ நடவடிக்கையின் இலக்கினை தெரிவுசெய்தார்கள். அவர்தான் யாழ் மேயர் அல்பிரெட் துரையப்பா. அது அமைப்பின் உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவு. தமது இலக்கு யாரென்பதைத் தெரிவித்த பிரபாகரன், அதற்கான காரணத்தையும் உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதில் முதலாவது குற்றச்சாட்டு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழர் மாநாட்டில் நடந்த படுகொலைகளில் துரையப்பா ஆற்றிய பங்கு. இரண்டாவது குற்றச்சாட்டு, தமிழாராய்ச்சி மாநாட்டின் படுகொலைகள் முடிந்த கையோடு, யாழ்ப்பாணத்தில் சிறிமாவுக்கு வரவேற்பளிக்க மக்களை பலவந்தமாகத் திரட்ட அவர் எடுத்த முயற்சிகள். மூன்றாவது குற்றச்சாட்டு, சிறிமாவின் அரசுக்கு ஆதரவான தளம் ஒன்றினை தமிழர்களிடையே ஏற்படுத்துவதற்கு துரையப்பா செய்துவந்த நடவடிக்கைகள். வரதராஜப் பெருமாள் கோயில், பொன்னாலை யாழ்ப்பாணம்
  9. முதலாவது இராணுவ நடவடிக்கை நாடுதிரும்பிய பிரபாகரன் சிவகுமாரன் முயன்று செய்யமுடியாமற்போன ஒரு விடயத்தைப் பிரபாகரன் செய்துமுடித்தார். அதுதான் யாழ்நகர மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவைக் கொல்வது. சிவகுமாரனின் திடீர் மரணமும் பிரபாகரன் நாடுதிரும்புவதற்கான காரணிகளில் ஒன்றாகவிருந்தது. சிவகுமாரனின் மறைவோடு அரசுக்கெதிரான கிளர்ச்சியாளாளர்களின் செயற்பாடுகள் மந்தகதியினை அடைந்தன. ஆகவே, இச்செயற்பாடுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க தான் நாடு திரும்புவது அவசியமானதென்று பிரபாகரன் கருதினார். அப்போது பிரபாகரனுடன் செட்டியும் இருந்தார். புதிய தமிழ்ப் புலிகளை பிரபாகரன் ஆரம்பிக்கும்போது செட்டியும் அவருடன் இருந்தார். 1973 ஆம் ஆண்டு செட்டி கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டபோது, அங்கிருந்து தப்பி அவர் சென்னை வந்தடைந்திருந்தார். பிரபாகரனுடன் கோடாம்பக்கத்தில் தங்கியிருந்த பெரிய சோதி, பிரபாகரன் செட்டியுடன் சேர்ந்து செயற்படுவதை விரும்பியிருக்கவில்லை. அதனால், குட்டிமணி தங்க்த்துரை ஆகியோரிடம் இதுபற்றி முறையிட்டிருந்தார். ஆனால், இந்த அழுத்தங்களுக்கு அடிபணிய பிரபாகரன் விரும்பவில்லை. அவரைப்பொறுத்தவரையில் அன்றைய தேவையாக இருந்தது தாயகத்தில் அரசுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது மட்டுமே, அதற்கு செட்டி அவருக்குச் சரியான ஆளாகத் தெரிந்ததனால், அவருடன் சேர்ந்து செயற்பட அவர் தீர்மானித்திருந்தார். சிவகுமாரன் மரணித்து ஏறத்தாள ஒன்றரை மாதத்திற்குப் பின்னர், 1974 ஆம் ஆண்டு ஆடி மாதம் பிரபாகரன் நாடு திரும்பினார். தனக்கான மறைவிடங்களைக் கண்டுபிடிப்பதில் பல கஷ்ட்டங்களை அவர் அனுபவிக்க நேர்ந்தது. அவரது முன்னைய மறைவிடங்கள் அனைத்தையும் பொலீஸார் அறிந்துவைத்திருந்தனர். அவரிடம் பணமிருக்கவில்லை. ஊரிலிருந்த அவரது முன்னாள்த் தோழர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். பொலீஸாரின் கண்களிலிருந்து தப்பியிருந்த ஒருசில நண்பர்களும் அச்சம் காரணமாக பிரபாகரனுக்கு உதவ முன்வரவில்லை. ஆயுதரீதியில் செயற்பட எத்தனித்த பல இளைஞர்கள் மீது பொலீசார் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்த காலம் அது. இப்போராளிகளைத் தேடி வேட்டையாடுவதில் முன்னின்று செயற்பட்ட பல தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் மிகக்கடுமையாக இருந்தன. தமிழ்ப் பொலீஸ் பரிசோதகர்களான பஸ்த்தியாம்பிள்ளை, பத்மநாதன், மற்றும் தாமோதரம்பிள்ளை ஆகியோர் மேலிடத்திலிருந்து வரும் பாராட்டுதல்களுக்காகவே தமிழ் இளைஞர்களைத் தேடித்தேடி வேட்டையாடி வந்தனர். "அவர்கள் எப்படியாவது இளைஞர்களைப் பிடித்துவிடுவார்கள்" என்ற பெயர் பொலீஸ் திணைக்களத்தில் அவர்களுக்கு இருந்தது. தமிழ் இளைஞர்களுடன் கடுமையாக நடந்துகொள்ளுமாறு அரசாங்கமும் இவர்களைப் பணித்திருந்தது. அமைச்சர் குமாரசூரியர் இந்தவிடயத்தில் மிகக்கடுமையாக நடந்துகொண்டிருந்தார். தமிழ் ஆயுத அமைப்புக்களை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடக் கங்கணம் கட்டிய குமாரசூரியர் தமிழ் பொலீஸ் அதிகாரிகளின் கடுமையான செயற்பாடுகளின் பின்னால் இருந்துவந்தார். தமிழர்களை அரசின் வழிக்குக் கொண்டுவர குமார்சூரியர் எடுத்துவந்த முயற்சிகளையெல்லாம் தமிழ் இளைஞர்கள் குழப்பிவிடுவார்கள் என்பதை அவர் உணரத் தலைப்பட்டார்.
  10. இங்கு Back test செய்ய பயன்படுத்த பட்ட மென்பொருள் Amibroker 6.00, இந்த மென்பொருள் இலவச தரவுகள் மட்டும் வழங்குகிறது யாகூ பைனான்ஸ் இல் இருந்து, சில இணைகள் மட்டும் நாணய வர்த்தகத்திற்கு இலவசமாக உண்டு. Amibroker ஒரு தடவை மட்டும் பணம் செலுத்தினால் ஆயுட் காலம் முழுவதும் பயன்படுத்தலாம், தரமான தரவுகளுக்கும் அனைத்து விதமான சந்தை தரவுகளுக்கும், 3 ஆம் தரப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும், Amibroker இலவச தரவு சில குறைபாடு கொண்டது. இது ஒரு Charting program மட்டுமே ஆனால் Interactive broker இல் கணக்கிருந்தால் AUTO TRADING செய்யலாம் ( மனித குறுக்கீட்டுடன் semi automatic அல்லது மனித குறுக்கீடு முழுவதுமற்ற Fully automatic). 3 ஆம் தரப்பு இதற்கான தரவுகளை வழங்குகின்றன, அனைத்து வகையான சந்தைகளையும் கொண்ட தரவுகளை ஆண்டு ஒன்றிற்கு 30 யூரோ செலுத்தி பெறுகிறேன். மேலே அவுஸ்ரேலிய புளூசிப் பங்குகள் கொண்ட உத்தி இற்கான (sell on may go away) AFL Coding (மேலே இணைத்துள்ள வர்த்தக Strategy back test program) தேவைப்படுபவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும், இங்கு இணைக்க முடியாது என கருதுகிறேன் (இணையத்தில் இலவசமாக உள்ள ப்ரோகிராமிங் மாற்றங்கள் செய்துள்ளமையால்). தற்போது புதிய இணைய மூலம் பல நிறுவனங்கள் தரவுகளுடன் தானியங்கி வர்த்தக வசதியுடன் மாதாந்த கட்டணத்திற்கு இந்த வசதிகளை வழங்கின்றன. Trading view அதில் ஒன்று ஆனால் இந்த இணைய வழி நிறுவனங்களில் Automatic back testing இல்லை அதனை manual ஆக செய்யவேண்டும்,back testing இலவச பகுதியில் தற்போது நிறுத்திவிட்டார்கள். MT4 traderகள் Fx blue இன் free trading stimulation இனை Back test இற்கு இலவசமாக பயன்படுத்தலாம் இந்த இணைய வழி நிறுவனங்களுக்கான உங்களது சொந்த உத்திகளுக்கான ப்ரோகிராமிங் (ப்ரோகிராமிங் கற்காதவர்கள்) எழுதுவதும் கடினமாக இருக்கும் என கருதுகிறேன் (எனது சொந்த கருத்து).
  11. நஸ்டாக் 100 குறியீட்டில் வர்த்தகம் செய்துள்ளீர்கள் என கருதுகிறேன், எனது கருத்து சரியா என அறியத்தரவும். இதில் 4 விற்றல் வர்த்தகமும் ஏனையவை அனைத்தும் வாங்கல் வர்த்தகம் (பிரென்சு தெரியாது ஊகத்தினடிப்படையில்) மேற்கொண்டுள்ளீர்கள். இது ஒரு தின வர்த்தக அடிப்படையில் செய்துள்ளீர்கள் குறித்த நாள் ஆரம்ப விலையும் இறுதி விலையும் கிட்டதட்ட ஒன்றாக உள்ளது. இந்த நாளிற்குரிய மெழுகுதிரி அமைப்பு (Daily candle stick ) Doji candle ஆகும், விலை ஒரு புள்ளியில் ஆரம்பித்து விலை அதிகரித்து பின்னர் குறைந்து அல்லது மறுவளமாக இறுதியில் குறித்த விலையில் முடிவடைகிறது. இந்த நிலையினை நடுநிலையான அல்லது தீர்மானமற்ற சந்தை நிலவரம் என கூறுவார்கள், ஒவ்வொரு நாளும் இதே மாதிரி நிகழாது அல்லது அதற்கான நிகழ்தகவு குறைவு என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). உங்களது இந்த முயற்சி ஒரு சிறந்த முயற்சி, நீங்கள் தனித்துவமாக உங்களுக்கு ஏற்ற ஒரு முறைமையினை (strategy) கடைப்பிடிக்க முயல்வது நல்லது. Maximum adverse excursion vs Maximum favorable excursion மேலே இணித்துள்ள காணொளிகள் சிறந்த காணொளிகள் அல்ல விடயத்தினை சுருக்கமாக கூறுகின்றன. ATR என்பது சராசரி நாளில் சந்தை எவ்வளவு ஏற்றத்தாழ்வு ஏற்படும் எனபதுடன் நிற்காமல் சந்தை நிலவரத்தினை கூறுகின்றது (trending market / Ranging market). தனிய ஒரு பங்குகளில் முதலிடாமல் குறியீட்டில் முதலிடும்போது Stop loss எனபது பிரச்சினையில்லைதான் எப்படியாவது விலை மீண்டும் குறைந்த பட்சம் வாங்கின விலைக்கு வரும் ஆனால் சில வேளை நீண்ட நாள் காத்திருக்கவேண்டும். கிட்டதட்ட ஆரம்பகாலத்தில் இதே போல தின வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளேன் ஆனால் சிறிய வித்தியாசம் அவுஸ்ரேலிய சந்தைகளில். அமெரிக்க சந்தைகள் இங்கு அதிகாலையில் முடிவடைய இங்கு சந்தை ஆரம்பமாகும், அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால் 99% அதனை அப்படியே அவுஸ்ரேலிய சந்தை பின் தொடரும். அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால், அவுஸ்ரேலிய சந்தை (ALL ordinaries, ASX 200) திறக்கப்பட்டதும் முந்தைய நாளின் விலையினைவிட அதிகரித்த விலையில் ஆரம்பிக்கும், இதனை இடைவெளி வர்த்தகம் (gap trade) என அழைப்பார்கள். இதில் 3 வகையுண்டு ஆனாலும் பெரும்பாலும் runaway gup நிகழும்(Gap never filled that day). முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக உயர் விலை (Resistance) Break out / Reverse (temporally) முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக குறைந்த விலை (Support) Reverse குறியீட்டிற்கும் தனித்தனி பங்குகளின் விலைக்குமிடையே சிறிது நேரத்திற்கு மட்டும் வேறுபாடு காணப்படும் அதன் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம். அதே நேரம் குறியீட்டின் ஆரம்ப அதிக / குறைந்த விலை நோக்கி குறியீடு நகரும்போது பங்குகளின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்னரே அறிகுறி காட்டிவிடும். இது உங்களுக்கு விளங்கும வகையில் சொல்லவில்லையோ என கருதுகிறேன். இவர் அமெரிக்காவில் ஒரு மிக பெரிய நிதி நிறுவனம் நடாத்துகிறார். தினவர்த்தகம் செய்யும் போது 1.Tape reading (level 2) 2.Catalyst (News) 3.Chart 4.intution 5. Big picture முக்கியம் என கூறுகிறார். இதில் Big picture என்பது குறியீட்டினை என கருதுகிறேன், இதனையே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.