Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    21
    Points
    46798
    Posts
  2. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    929
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87993
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/09/23 in all areas

  1. தமிழர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் லலித் அதுலத் முதலியின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இத்தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் எனும் சொற்பதத்திற்கான விளக்கம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்துச் சட்டத்தின் படி பயங்கரவாதம் எனும் சொல்லிற்கு பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது, "அரசியல் ரீதியிலான முடிவுகளை நோக்கி நடத்தப்படும் வன்முறைகள்". இலங்கை உருவாக்கிய 1979 இல் உருவாக்கிய சட்டம் முன்னர் உருவாக்கப்பட்ட சட்டத்திற்கான திருத்தங்கள் என்று மட்டுமே கூறியிருந்தது. இச்சட்டத்தின்படி குற்றங்களும் தண்டனைகளும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டிருந்தன, தமிழ் மக்கள் மேல் குரூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்த இந்தச் சட்டத்தின் சில பகுதிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், 1. ஒரு குறித்த நபருக்கு மரணத்தை விளவிக்கும் அல்லது ஒரு குறித்த நபரைக் கடத்தும் அல்லது ஒரு குறித்த நபர் மீது தாக்குதலை நடத்தும் எந்த ஒரு நபரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின்படி மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 2. ஒரு குற்றத்திற்கான சாட்சியாக இருக்கும் ஒரு நபரை கொல்லும் அல்லது கடத்திச் செல்லும் அல்லது அந்தச் சாட்சி மீது தாக்குதல் நடத்தும் எவரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 3. ஒரு குறித்த நபருக்கு அச்சுருத்தல் விடுப்பது அல்லது சாட்சியொன்றிற்கு அச்சுருத்தல் விடுப்பது, அரச சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, திணைக்களங்கள், பொதுமக்கள் கூட்டுத்தாபனங்கள், வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது, அல்லது இந்த அரச சொத்துக்களைக் கையாடுவது, சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆயுதங்களை, தோட்டாக்களை, வெடிமருந்துகளை, அவற்றின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வது அல்லது தயாரிப்பது மற்றும் இவற்றினைப் பாவிப்பது அல்லது பாவிப்பதற்கு உத்தேசித்திருப்பது , பாதுகாப்புப் பகுதியொன்றில் ஆயுதங்களை, வெடிபொருட்களை, உதிரிப்பாகங்களை வைத்திருப்பது, அவற்றைப் பாவிப்பது அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது, 4. இனங்கள், மதங்கள், சமூகங்களுக்கெதிரான வார்த்தைகளை, சொற்களை, பிரசுரங்களை இனங்களுக்கிடையே பகைமையினை வளர்க்கும்படி பாவிப்பது, அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது 5. சட்டத்திற்குப் புறம்பான வகையில் பெருந்தெருக்கள், வீதிகள், பொதுமக்கள் பாவிக்கும் சொத்துக்களில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட ஏனைய அறிவித்தல்களை அழிப்பது, மாற்றம் செய்வது, சேதப்படுத்துவது, 6. குற்றச்சாட்டிற்குள்ளான ஒரு நபரை மறைத்துவைப்பது அல்லது அவர கைதுசெய்யப்படுவதைத் தடுப்பது அல்லது கைது நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பது, ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடும் எந்த ஒருவரும் இச்சட்டத்தின்படி தண்டணைக்குள்ளாவார். 7. இவ்வாறு குற்றவாளிகளால் இலக்குவைக்கப்படும் குடிமக்கள் நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ, அமைச்சர்களாகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, உள்ளூர் அதிகாரிகளாகவோ, இராணுவம் மற்றும் பொலீஸ் உறுப்பினர்களாகவோ, சட்டத்துறையில் செயலாற்றுபவர்களாகவோ இருப்பர். இதற்குத் தண்டனையாக மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 8. சட்டத்தின் பகுதி 2 மற்றும் பகுதி 3 இன் அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். இந்த குற்றவாளியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் முறையற்றவை என்று பிரகடணப்படுத்தப்படும். 9. ஒரு நபர் குற்றமொன்றைச் செய்யவிருக்கிறார். அல்லது குற்றத்தைச் செய்துவிட்டார் என்று தெரிந்தும் அதனை மறைத்தல், அவரது நகர்வுகளை அதிகாரிகளுக்கு வழங்க மறுத்தல், குற்றவாளியினது மறைவிடங்கள் பற்றிய தகவல்களை வழங்க மறுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஏழு வருடங்களுக்கு உட்பட்ட வகையில் சிறைத்தண்டனை வழங்கப்படும். 10. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபரோ, அமைப்போ, நிறுவனமோ இதேவகையான தண்டனைக்கு உள்ளாகும். தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, இச்சட்டத்தினை எதிர்க்க முன்வராமல் மெளனம் காக்கத் திட்டமிட்டது. முன்னணியினருக்கு தனது மகிழ்வான முகத்தை அப்போது காட்டிக்கொண்டிருந்த ஜெயவர்த்தனவைக் கோபப்பபடுத்திப் பார்க்க முன்னணியின் எந்த உறுப்பினரும் தயாராக இருக்கவில்லை. இச்சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பதை விடுத்து, விவாதத்தில் கலந்துகொள்ளாது விடுவதன் மூலம் ஜெயாரை சாந்தப்படுத்திய முன்னணியினர், தமிழ் இளைஞர்களைச் சாந்தப்படுத்த இச்சட்டத்தினை விமர்சித்து அறிக்கையொன்றினை மட்டும் வெளியிட்டனர். மேலும், தமது கட்சியின் மத்திய குழுவில்க் கூட இச்சட்டம் பற்றிய விவாதங்களை நடத்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை மறுத்துவிட்டது. ஆனால், பாராளுமன்றத்தில் இச்சட்டத்தினை எதிர்க்கட்சியாகவிருந்த சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களித்தது. வெறும் 8 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த அக்கட்சியினால் இச்சட்டத்தினைத் தடுத்து நிறுத்தவியலாமல்ப் போய்விட்டது. இந்தக் கொடூரமான சட்டம் நாட்டிலிருந்த மனிதவுரிமைகள் செயற்ப்பாட்டாளர்களினதும், பல நீதிபதிகளினதும் கண்டனத்திற்குள்ளானது. கண்டனத்துக்குள்ளாக்கப்பட்ட இச்சட்டத்தின் சில பகுதிகளாவன, 1. பொலீஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சியமாகப் பாவிக்கப்படக்கூடியன. 2. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வைத்திருந்த எந்தப் பொருளும், ஆவணமும் அவருக்கெதிராக சாட்சியமாகப் பாவிக்கப்படும். 3. ஒருவர் குற்றவாளியாக இருக்கலாம் என்று அமைச்சர் சந்தேகப்படுமிடத்து, அந்த நபர் குறைந்தது 18 மாதங்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட முடியும்.
  2. 2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனும், பேராசிரியர்களுடனும் அட்லாண்டாவில் இருந்து பிரான்ஸ் வழியாக மடகாஸ்கர் சென்றடைந்தோம். மடகாஸ்கர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்ததால் பிரான்சில் இருந்து தினமும் நேரடி விமான சேவைகள் இருக்கு. நிறைய பிரெஞ்சு காரர்கள் அடிக்கடி மடகஸ்கார் செல்வார்களாம். மடகஸ்காரில் பிரெஞ்சு மொழியில் பேசும் எல்லோருக்கும் குறிப்பாக சிறுவர்களுக்கு பிரெஞ்சு பயணிகள் பணம் கொடுப்பதால் எல்லா மக்களும் பிரெஞ்சு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்து வேர்ல்ட் ஸ்ட்ரிட்ஸ் (World strides) என்னும் அமைப்பினர் எம்மை வரவேற்று அந்தணனாரிவோ (Antananarivo) விமான நிலையத்தில் இருந்து ஆன்டாசிபே சரணாலயத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 12,000 அமெரிக்கன் டொலர் செலவிட்டிருந்ததால் 13 நாள் பயணம் முழுவதும் உயர்தர ஹோட்டல் மற்றும் ரிசொர்ட்கலில் தங்கினோம். இந்த்ரி (Indri lemur) எனப்படும் லிமூர் இனம் கூர்ப்பில் மனிதர்களுக்கு தொடர்புடையது. தாவர உண்ணியான இந்த்ரி லெமூர் இனம் வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பமாக வாழும். அவைகளையும் , பல விதமான பச்சோந்திகளையும் அடர் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்து சில படங்களையும் எமது பயண விபரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அங்கு பாம்புகளோ,யானைகளோ வேட்டையாடும் இனங்களான புலி, சிங்கம் கரடிகளோ இல்லாததால் இரவிரவாக காடுகளில் நடமாட முடியும். அத்துடன் லெமூர் இனங்களும் மனிதர்கள் தம்மை தாக்க மாட்டார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக உணர்ந்த படியால் அவைகள் மனிதர்களை தாக்குவதும் இல்லை, பயந்து ஓடுவதும் இல்லை. மாறாக மனிதர்களை நம்பும் ஒரு காட்டு விலங்குங்களாக இருக்கின்றன. மேலும் தொடரும். ஜல்லிக்கட்டில் இருந்து அப்பச்சட்டி வரை எல்லாமே இருக்கும் ஒரு விசித்திர ஊர் மடகாஸ்கர்.
  3. ஜெயவர்த்தனவிடம் அடைக்கலமாகிப்போன அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழருக்கான சுயநிர்ணய உரிமையினை மார்க்ஸிச - லெனினிஸக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கவேண்டும் அல்லது வேண்டாம் என்கிற பாரிய சர்ச்சையொன்று தமிழ் மற்றும் சிங்கள இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. சிங்கள இடதுசாரிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்குத் தகுதியுடையவர்கள் ஆனபோதும் கூட நாட்டைப் பிரித்து தனியான நாடொன்றினை உருவாக்கும் நிலைப்பாட்டை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாலசிங்கம் தனது இரண்டாவது பிரசுரத்தில் இவ்வாறு எழுதினார், "சோசலிசத் தமிழீழம் நோக்கி". அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் என்கிற வகையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்கு உரித்துடையவர்கள் என்று அவர் எழுதினார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகத்தின் பிரதியொன்று பிரபாகரனுக்கும் கிடைத்தது. பாலசிங்கம் எழுதிய இப்புத்தகத்தை பிரபாகரன் படித்தபோது அதன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக "சுதந்திர வேட்கை" எனும் புத்தகத்தில் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். பாலசிங்கத்தின் தாத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகள் லண்டனில் இயங்கிவந்த புலிகளின் செயற்பாட்டாளர்களான கிரிஷ்ணன், ஆர் ராமச்சந்திரன் (அன்டன் ராஜா) ஆகியோருடன் அன்டன் பாலசிங்கம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. பாலசிங்கத்தை அடிக்கடி சந்தித்துக்கொண்ட இவர்கள், புலிகளின் செயற்பாடுகள் குறித்து அவருக்குத் தொடர்ச்சியாக அறிவூட்டியும் வந்தார்கள். அத்துடன் தமது அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு பாலசிங்கத்தின் உதவியினையும் நாடத் தொடங்கினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை, உலக இளைஞர் மாநாட்டில் தமிழரின் போராட்டம் தொடர்பான அறிக்கையொன்றினை வெளியிடத் தீர்மானித்தது. இதற்கு பாலசிங்கத்தின் உதவியை உமா மகேஸ்வரன் நாடினார். பாலசிங்கம் எழுதிய அந்த அறிக்கை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜேர்மனிய, போத்தூகேய மற்றும் தமிழ் மொழி ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகியது. இந்த அறிக்கை, மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்துலகப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. போரும் சமாதானமும் விளையாட்டு புலிகளை சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தும் உமா மகேஸ்வரனின் திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதில் சிக்கல்கள் தோன்றியது. 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் இலங்கையில் தோன்றியிருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாக அமைந்தைருந்தது. காளைமாடு - வீரதுங்க எதிர்க்கட்சியினருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சேர்ந்தால் தமிழருக்கெதிரான இன்னொரு வன்முறைக் கலவரத்தை உருவாக்குவேன் என்று அச்சுருத்தி, அந்த முயற்சியைத் தவிடு பொடியாக்கியிருந்த ஜெயவர்த்தன, தனது போர் விளையாட்டுக்களை முன்னெடுப்பதில் உறுதியுடன் செயற்படத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு ஆடியில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அவர் நடைமுறைப்படுத்தினார். இந்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஆடி 20 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வடமாகாணத்திலிருந்து தீவிரவாதத்தை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற கட்டளையுடன் தனது மருமகனான, "காளை மாடு" என்றழைக்கப்பட்ட திஸ்ஸ வீரதுங்கவை வடமாகாணத்திற்கான இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக அவர் ஆடி 14 இல் நியமித்தார். ஜெயவர்த்தன, காளைமாட்டு வீரதுங்கவிற்கு இட்ட ஆணை இவ்வாறு கூறியிருந்தது "தீவிரவாதத்தையும், அதன் அனைத்து விதமான வடிவங்களையும் இந்த நாட்டிலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து, நாட்டின் அனைத்துச் சட்டங்களின் பிரகாரம் முற்றாக அழித்தொழிப்பதற்கு நீர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறீர். இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் அனைத்து மக்களையும் உமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உம்மால் மேற்கொள்ளப்படும் இந்த பயங்கரவாத அழிப்பு நடவடிக்கை 1979 ஆம் ஆண்டு மார்கழி 31 ஆம் திகதிக்குள் முற்றுப்பெறவேண்டும்". வீரதுங்கவின் இராணுவ நடவடிக்கைக்கு ஏதுவாக ஆடி 12 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் சரத்து 14 இனைப் பாவித்து அவசரகால நிலைமையினை ஜெயவர்த்தன பிரகடணப்படுத்தினார். இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகத்திற்கிடமான எவரையும் உடனேயே சுட்டுக் கொல்லும் அதிகாரமும், அவர்களது உடல்களை விசாரணையின்றி எரித்துவிடும் அதிகாரமும் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது. பொலீஸாரினதும், இராணுவத்தினதும் மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குவதாகக் கணிக்கப்பட்ட சுமார் 200 போராளிகளுக்கெதிராகவே ஜெயவர்த்தனவின் இந்த இராணுவ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. தமிழ் பொலீஸ் பரிசோதகர் குருசாமியின் இழப்பிற்குப் பின் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த பொலீஸ் உளவுப்பிரிவு சரிவைச் சந்தித்திருந்தது. அதேவேளை, பலாலி இராணுவ முகாமில் கப்டன் முனசிங்க தலைமையில் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் புலநாய்வுப் பிரிவு செயற்படும் நிலைக்கு வந்திருந்ததுடன், அப்பிரிவு யாழ்ப்பாண இராணுவத் தளபதி பிரிகேடியர் ரணதுங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கத் தொடங்கியது. இராணுவம் முறுக்கேற்றப்பட்ட நிலையிலும், அந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சட்டப் பாதுகாப்புக்கள் பலமாக இடப்பட்ட நிலையிலும், ராணுவ தீர்வில் வெகு இறுமாப்புடன் இருந்த ஜெயவர்த்தன, தனது கவனத்தை அரசியல்க் களம் நோக்கித் திருப்பத் தொடங்கினார். தன்னால் அடிபணியவைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும், அவரது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தொடர்ந்தும் தமிழருக்கெதிரான கலவரம் பற்றி அச்சத்தில் வைத்திருக்க தனது பிரதமரான ரணசிங்க பிரேமதாசாவை ஜெயவர்த்தன பாவித்தார். இந்தச் செய்தியை பதியும்படி நான் பணிக்கப்பட்டிருந்தேன். நான் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பல சந்திப்புக்களில் கலந்துகொண்டேன். அவர்கள் மிகுந்த பதற்றத்துடனும், அதேவேளை கவலையுடனும் காணப்பட்டார்கள். "தமிழர்களால் இனியொரு இனக்கலவரத்தைச் சந்திக்க முடியாது" என்று அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கூறினார்கள். இனங்களுக்கிடையிலான பதற்றநிலையினைத் தவிர்ப்பதற்கு இருபகுதியினரும் இணைந்து சில நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பிரேமதாச முன்னணியினரிடம் ஆலோசனை கூறினார். அதற்கு உடனடியாகவே அமிர்தலிங்கம் ஒப்புக்கொண்டார். பாராளுமன்றத்தின் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் பின்னர் பிரேமதாசவுடன் இணைந்து அறிக்கையொன்றினை முன்னணியினர் தயாரித்தனர். நாட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்ட அந்த வேண்டுகோள் இப்படிக் கேட்டிருந்தது, "நாம் இந்த நாட்டு மக்களிடம் வேண்டுவது யாதெனில், தீய சக்திகளின் வதந்திகளாலும், நடவடிக்கைகளாலும் ஆட்கொள்ளப்பட்டு விடாது, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான். பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைத்து அரசியல், மதத் தலைவர்கள், சமூக சேவைகள் அமைப்புக்கள் ஆகியோரிடமும் நாம் மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும், சட்டம் ஒழுங்கினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த தம்மாலான சகலதையும் செய்யவேண்டும் என்றும், தமது தேர்தல்த் தொகுதிகள், கிராமங்கள் மட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுத்து மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவதைத் தடுக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" "தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கி மக்கள் மீது இனரீதியான வன்முறைகளை ஏவிவிடக் காத்திருப்போரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் நாம் எம்மாலான சகலதையும் செய்வோம் என்று உறுதியெடுக்கிறோம்". "எமது நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் சமாதான ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று திடமாக நம்பும் அதேவேளை, அரசியல் லாபத்திற்காக சில விஷமிகள் விரித்துவரும் வலையில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" "நாகரீகமடைந்த மக்கள் கூட்டம் என்கிற வகையில், எமக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை சமாதான வழிகளில் எம்மால் தீர்த்துக்கொள்ள எமது மதங்களோடு இணைந்த பாரம்பரியங்கள் எமக்கு எப்போதும் துணைநிற்கும் என்பதை நாம் சர்வதேசத்திற்குப் பாடமாக எடுத்துக் கூறுவோம்". இந்த ஒருங்கிணைந்த வேண்டுகோளிற்கே ஒரு அரசியல்க் காரணம் இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜெயவர்த்தன முயன்று வந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த ஆடி 19 ஆம் திகதி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உருவாக்கம் பற்றிக் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார் ஜெயவர்த்தன. இந்த அழைப்பினை உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள, எதிர்க்கட்சியோ அழைப்பை நிராகரித்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனது அழைப்பிற்குச் சாதகமாகப் பதிலளித்ததையடுத்து, அதற்குப் பிரதிபலனாக ஜெயார் சில விடயங்களைச் செய்யப்போவதாக அறிவித்தார். வவுனியாவில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக வாழும் மூன்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அநுராதபுரம் மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தனது முடிவினை நடைமுறைப்படுத்தப்போவதில்லை எனும் அறிவிப்பு மற்றும் லலித் அத்துலத் முதலி தலைமையில் உருவாக்கப்படும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவினூடாக யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யப்போவதாக ஜெயவர்த்தன முன்னணியினரிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவை எப்படியாவது மகிழ்வித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தாம் அதுவரை பகிஷ்கரித்து வந்த பாராளுமன்ற அமர்வுகளில் இனிக் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. தனது போர் விளையாட்டு வெற்றிபெற்று வருவது கண்டு பூரிப்படைந்த ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு நீதிவழங்கத் தான் தயாராக இருப்பதாகவும், பேராசிரியர் ஏ.ஜே.வில்சனுடனான தனது கலந்துரையாடல்களின் அடிப்படியில் மாவட்ட அதிகார சபைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிக்கப்போவதாகவும் அறிவித்தார். இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஏ.ஜே. விஜேகோனும், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி. ஏ.ஜே. வில்சன், கலாநிதி. ஜே.ஏ.எல். குரே, கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் ஏ.சி.எம்.அமீர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இது ஜெயவர்த்தனவின் மிகச்சிறந்த தந்திர நகர்வாகக் கருதப்பட்டது. இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக அவர் வரிந்துகொண்டார். இதன்மூதல் தமிழ்ப் போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நிரந்தரப் பிரிவை அவர் உருவாக்கினார். இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முற்றான தோல்வியையும் அவர் உறுதிப்படுத்தினார்.
  4. மரியா வேர்த் என்னும் ஜெர்மனிய (இப்ப இந்திய சைவப்பெண்) கூறியபடி 55 வீதமான ஜெர்மானியர் மதத்தை விட்டு வெளியேறிவிட்டார். நியூசிலாந்தில் 1990 லேய தேவாலயங்கள் வெறிச்சோடி இருந்தன. அமெரிக்காவில் ஒரு பகுதி வெள்ளைக்காரர் இன்னமும் பணமும் கொடுத்து தேவாலயத்துக்கு செல்லகிறார்கள். கறுப்பர் பாடுதான் கவலைக்கிடம். அவர்கள் செல்லும் தேவாலயங்களில் ஏழை கறுப்பர்களிடம் இருந்தும் பணம் பறிக்கிறார்கள். அது நடக்கும் காலமும் விரைவில் வரலாம்
  5. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தற்கொடைப்படையும் & சிறப்புப்படையுமான 'கரும்புலிகளின்' படிமங்கள் உள்ளன. என்னிடம் இருக்கின்ற கரும்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "கரும்புலிகள் என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிப்பாட்டுக்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னோரு பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்கு புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும்‌. எனவே கரும்புலி எனும் சொல் பல பொருட்களை குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்று இருக்கிறது." - உயிராயுதம் பாகம் - 1 என்னும் புத்தகத்தில் தவிபு தலைவரின் உரையில் இருந்து. தற்கொடைப்படை என்பது மனித குலத்தின் உன்னத விழுமியமாக, உயரிய ஈகமாக பிறர்க்காகத் தன்னை அழித்து/ இழந்து எதிரிகளில் பலரையோ அல்லது எதிரிகளின் பலமிக்க இலக்கினையோ அழித்தல் எனும்‌ தற்கொடைப்‌ பண்பாளர்களைக்‌ கொண்ட படையாகும். - உயிராயுதம் பாகம் - 1 என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு கோர்வையாக்கப்பட்ட மூன்று வரிகள். தரைக்கரும்புலிகளின் இலச்சினை | Ground Black Tigers Logo. 1996 - end of LTTE era:- கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1996 - 1998:- தரைக்கரும்புலிகளின் வில்லை | Ground Black Tigers Badge. 1998 - end of LTTE era:- மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை & வில்லை | Undercover Black Tigers Logo & Badge: "எம் தேசத்திற்காய் எங்கெங்கும்" கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge & Logo. Worn only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge & Logo. Worn from 2001- end of LTTE era. "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  6. View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார். எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை. மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம். தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில் ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம். ஆசை பலகோடி அத்தனையும் தீராமல் காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள் பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால் விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள் நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு. கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர் புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.
  7. சுவி இன்றுதான் நீண்டநாட்களின்பின் யாழை எட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. தையல் கடையை முழுவதுமாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நானும்தான் வீட்டில் தைத்துக் கிழிக்கிறேன். நாம் எவ்வளவுதான் தைத்துக் கிழித்தாலும் எழுதிக்கிழித்தாலும் உங்களுக்கே உரிய தனித்துவமான நகைச்சுவையுடன் கூடிய எழுத்தாற்றல் எமக்கு வராது. எம்மைச் சுற்றி நடப்பனவற்றை மிகவும் கூர்ந்து அவதானித்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் பாராட்டுக்கள்.
  8. இந்த மரத்தின் பிரமாண்டத்தை, நீங்களே... கற்பனை பண்ணிப் பாருங்கள்.
  9. பறவையா?விரல்நுனியில் கொசு மாதிரி உட்கார்ந்து இருக்கிறதே?
  10. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவில் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
  11. வாசித்து முடித்து விட்டேன். கொஞ்சம் விரிவாக பின்னூட்டம் இடுவம் என்பதால் நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
  12. அந்த நேரத்துக்கு புட்டும் மீன் குழம்பும் யோசனை சிறி . இந்த கொம்பினேஷனும் நல்ல இருக்கும். இது அக்கா செய்து தந்தது. எப்படியும் உங்கள் குடும்பத்தை ஒருமுறையாவது சந்திக்க வேணும் வெள்ளைக்காரர்களுக்கு எல்லாத்திலயும் கலை உணர்வும் ரசனையும் அதிகம். நல்ல தகவல் கு சா அண்ணா
  13. உலகிலேயே சிறிய பறவையும் (Bee Hummingbird) அதன் முட்டையும்.
  14. ஏலோலோ....ஏலோலோ......
  15. பாலா அண்ணா இந்த இளைஞர் விழா நிகழ்வினைத் தமக்குச் சாதகமாகப் பாவித்த புலிகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய துண்டுப்பிரசுரங்களை அங்கு வந்திருந்த வேறு நாட்டு இளைஞர்களிடம் விநியோகித்தனர். இந்தத் துண்டுப் பிரசுரம் அன்டன் ஸ்டனிஸ்லோஸ் பாலசிங்கம் எனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனால் வெளிநாடொன்றில் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வீரகேசரி பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் கொழும்பில் இயங்கிவந்த பிரித்தானியாவின் உயர்ஸ்த்தானிகராலயத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர் அன்டன் பாலசிங்கம். பின்னர் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் காலத்தில் அவரது துணைவியார் கடுமையான சிறுநீரகக் கோளாறினால் மரணமானார். அதன்பிறகு, அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்த தாதியான அடேலை பாலசிங்கம் மணமுடித்தார். இவர்கள் இருவரும் லண்டன் பலகலைக் கழகத்தில் சமூகவியல் கற்கை நெறிக்கான காலத்தில் சந்தித்திருந்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம், தனிநாடொன்றினை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை, 1977 ஆம் ஆண்டுத் தேர்தல், அதன்பின்னரான தமிழர் மீதான வன்முறைகள், புலிகளின் வெளிப்படுத்தல், அவ்ரோ விமானம் மீதான தாக்குதல் ஆகிய விடயங்கள் லண்டனில் வாழ்ந்துவந்த பல தமிழ் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்க , அவர்கள் 33 வயது நிரம்பிய, தமது பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரான பாலாவைச் சூழ்ந்துகொண்டு ஊர் நிலவரங்கள் பற்றிப் பேசத் தொடங்கினர். அந்த இளைஞர்களில் ஒருவரான ஞானசேகரன் தமிழர்களின் பிரச்சினை குறித்து கட்டுரை ஒன்றை வரையும்படி பாலாவைக் கேட்டார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பாலா செய்தார். பாலா எழுதிய துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது, "தமிழ்த் தேசியப்பிரச்சினை தொடர்பாக". பாலசிங்கத்தின் இந்த முயற்சி அவரை லண்டனில் வாழ்ந்துவந்த புலிகளியக்க தொடர்பாளர்கள் மற்றும் ஈரோஸ், டி.எல்.ஒ ஆகிய ஏனைய அமைப்பின் செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கத்தை ஏற்படுத்த உதவியது.
  16. பெரிய பிரித்தானியா போன்ற வெளிநாடுகளிலை தேவாலயங்களை வாங்கித்தான் எங்கடை சிவன்,பிள்ளையார்,முருகன் எல்லாரும் குடியிருந்து அருள்பாலிக்கினம்
  17. Two boys in Madagascar scratch the back of a habituated lemur (Via National Geographic)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.