Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    24
    Points
    929
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    23925
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/19/23 in all areas

  1. திரும்பும் வரலாறு- பாகம் 6 அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்! பிரித்தானிய மக்களின் ஓர்மம் மக்கள் மயப்படுத்தப் படாத எந்த இராணுவ முயற்சியும் தோல்வியில் முடியுமென்பது வரலாற்றில் மீள மீள நிரூபிக்கப் பட்ட ஒரு கோட்பாடு. இதை ஆரம்பத்திலேயே வரலாற்றின் மாணவனான சேர்ச்சில் உணர்ந்து கொண்டதன் விளைவே பிரித்தானிய மக்களை இயலுமான வழிகளில் நாசி எதிர்ப்பு யுத்தத்தில் பங்களிக்க நடவடிக்கைகளை எடுத்தது. இந்த மக்கள் பங்களிப்பின் முதல் வடிவமாக, பிரித்தானியர்கள் நாசிகளின் கொடூரத் தாக்குதல்களை ஓர்மத்தோடு தாங்கிக் கொண்டனர். ஏனெனில், போருக்குப் பின் கைப்பற்றப் பட்ட கோயபல்சின் நாட்குறிப்புகளின் படி, நாசி விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் பிரித்தானிய மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கி, பிரித்தானிய அரசின் மீது வெறுப்பேற்றுவதாகவே இருந்திருக்கிறது. இதனால், சேர்ச்சில் மீது எதிர்க்கட்சிகளே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சேர்ச்சிலை அகற்றி விட, நாசிகளுக்கு பிரிட்டனில் செங்கம்பளம் விரிக்கப் படும் என்று கோயபல்சே நம்பியிருக்கிறாரெனத் தெரிகிறது. இந்த நாசிக் கனவில் முதல் மண்ணை பிரித்தானிய மக்களே போட்டனர். ஏராளமான வதந்திகள், பொய் செய்திகள் கோயபல்சின் கட்டுப் பாட்டிலிருந்த ஆங்கில மொழி மூல வானொலிகள் மூலமும், ஐந்தாம் படையினர் மூலமும் பிரித்தானிய மக்களிடையே பரப்பப் பட்டாலும், எவையும் எதிர் பார்த்த மறை விளைவைத் தரவில்லை. இது எப்படிச் சாத்தியமானது? சேர்ச்சிலின் நிர்வாகம், மக்களைத் தம் பக்கம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸ் வீழ்வதற்கு முன்னரே உணர்ந்து சில திட்டங்களைச் செயல்படுத்தியது ஒரு காரணம். உதாரணமாக, பிரித்தானிய மக்களிடையே சில ஆயிரம் தொண்டர்களைக் தேர்த்தெடுத்து, அவர்களுக்கு மக்களின் உணர்வுகளைக் கிரமமாகப் பதிவு செய்யும் பணி வழங்கப் பட்டது. Mass observation diary என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டம் மூலம், பிரித்தானிய மக்களின் நாடித் துடிப்பை பிரித்தானியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு துல்லியமாகக் கணித்து வந்தது. இதனை நவீன அரசுகள் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒட்டுக் கேட்டு உளவறியும் முயற்சியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த மக்கள் குறிப்புகள் மூலம் தனி நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப் பட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. மாறாக, மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறுவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி விடும் நோக்கமே இந்தப் பாரிய முயற்சியின் நோக்கமாக இருந்தது. உதாரணமாக, லண்டன் நகர வாசிகள் தினசரி இரவு நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து தப்ப நிலக்கீழ் காப்பிடங்களுக்குச் சென்று விடுவர். ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் அற்றிருந்த இந்தக் காப்பிடங்களை, அரச நிர்வாகம் ஒரு சீரான தரத்தில் வைத்திருக்கும் விதிகளை உருவாக்கி, மக்களின் இரவு வாழ்க்கையை இலகுவாக்கியது. இதன் விளைவுகள் அபாரமாக இருந்தன: லண்டன் வாசிகள் இரவை நிலக்கீழ் காப்பிடங்களில் கழித்து விட்டு, காலையில் வழமை போல தங்கள் தொழில்களைப் பார்க்கச் செல்லும் அளவுக்கு பிரித்தானிய மக்களின் நாளாந்த வாழ்க்கை சாதாரணமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஏராளமான பிரித்தானிய மக்கள் வெறுமனே பலியாடுகளாக இருக்காமல் தொண்டர்களாக நாசி எதிர்ப்புப் போர் முயற்சியில் இறங்கினர். நாசிகளின் இரவு நேரத் தாக்குதல்களில், நாசிகளுக்கேயுரித்தான குரூர நுட்பங்கள் பல இருந்தன. ஒவ்வொரு தாக்குதல் விமான அணிக்கும், முன்னணியாக இலக்குகளை அடையாளம் காணும் விசேட விமானங்கள் வரும். இந்த விசேட விமானங்கள் இலக்குகள் மீது எரி குண்டுகளை (incendiaries) வீசி, அந்த இலக்குகளை பிரகாசமாக எரியவைக்கும். பின் தொடரும் தாக்குதல் விமானங்கள், எரியும் இலக்குகள் மீது தங்கள் குண்டுகளை வீசும். எனவே, தீயணைப்புத் தொண்டர்கள் எரியும் இலக்குகளை அணைக்கும் வேலை முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதனை, உயிராபத்திற்கு மத்தியிலும் சாதாரண தீயணைப்புத் தொண்டர்கள் செய்தனர், உயிரையும் கொடுத்தனர். இன்னொரு குரூர நுட்பமாக, நாசிகள் நேரங்கழித்து வெடிக்கும் குண்டுகளையும் வீசினர். உடனடியாக வெடிக்காத இந்தக் குண்டுகள், மீட்புப் பணியில் ஈடுபடும் மக்களைக் குறி வைத்து வீசப்பட்ட தாமதித்து வெடிக்கும் (delayed fuse) குண்டுகள். இந்தக் குண்டுகளாலும் ஏராளமான பிரித்தானிய போர் முயற்சித் தொண்டர்கள் பலியாகினர். ஆனால், பிரித்தானிய மக்கள் ஒவ்வொரு தாக்குதல் இரவின் பின்னரும் பிரித்தானியாவை நாசிகள் ஆழ அனுமதித்தால் என்ன நிகழும் என்ற எச்சரிக்கையை ஆழமாக உணர்ந்து கொண்டதால், எட்டு மாத நரகத்தினூடாக நடந்த படியே இருந்தனர். இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி. அலன் ரூறிங்கும் விஞ்ஞானிகளும் பிரித்தானியாவை நாசிகளின் தாக்குதல்கள் சுருள வைக்காமல் காத்த இரண்டாவது பெரிய சக்தி தொழில்நுட்பம். பிரித்தானியா, வரலாற்று ரீதியாக ஒரு தொழில்நுட்ப முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எதையும் பிரமாண்டமாக (பல சமயங்களில் காரணமில்லாமல்) செய்யும். ஆனால், பிரித்தானியா பிரமாண்டத்தை விட, செயல் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் - இது பல விடயங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இயல்பு. இதே தொழில்நுட்ப மேன்மையை, பிரித்தானியாவின் நாசி எதிர்ப்பு யுத்தத்திலும் பயன்படுத்தினார்கள். இது ஒரு பாரிய குழு முயற்சியாக இருந்தாலும், பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களில் கணிதவியலாளரான அலன் ரூறிங் (Alan Turing) முக்கியமானவர். அலன் ரூறிங்கின் முக்கியத்துவம் அறிவதற்கு, நாம் ஜேர்மனியின் இரகசிய செய்தித் தொடர்பு இயந்திரமான "எனிக்மா" இயந்திரம் பற்றிச் சிறிது பார்க்க வேண்டும் எனிக்மா எனும் "சிதம்பர சக்கரம்" நாசிகளின் பயன்பாட்டிலிருந்த ஒரு எனிக்மா இயந்திரம். பட உதவி: நன்றியுடன் சைமன் சிங் இணையத்தள விம்ப சேகரிப்பு. இரண்டாம் உலகப் போர் காலத்தில் வானலைகள் வழியாக மோர்ஸ் சமிக்ஞை (Morse code) மூலமே இராணுவத் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்த மோர்ஸ் சமிக்ஞையை யாரும் இடை மறித்துக் கேட்க முடியும். எனவே, சங்கேத மொழியொன்றை உருவாக்கும் முயற்சியாக ஜேர்மனியர்கள் எனிக்மா (Enigma) எனும் இயந்திரத்தை போர் ஆரம்பிக்க முன்னரே தயாரித்தார்கள். சம்பந்தமில்லாத சொற்களை சங்கேதக் குறிகளாகப் பயன்படுத்தும் முறையை மாற்றி, ஆங்கில மொழியின் 26 எழுத்துகளில் ஒவ்வொன்றும் வேறொரு ஆங்கில எழுத்தாக (cypher) இந்த எனிக்மா இயந்திரத்தால் மாற்றப் படும். மாற்றப் பட்ட தகவல் சாதாரண கண்களுக்கு அர்த்தமற்ற எழுத்துக் கூழாகத் (Alphabetic soup) தெரியும். ஆனால், மோர்ஸ் கோட் மூலம் இந்த எழுத்துக் கூழ் அனுப்பப் படும் இடத்தில் இருக்கும் ஒருவரிடம், இந்த எனிக்மா இயந்திரத்தின் எழுத்துக் கூழை, உண்மையான சொற்களாக மாற்றிக் கொள்ளும் குறியீட்டு வழிகாட்டி (code) இருக்கும். இத்தகைய இரகசிய நீக்கம் (decryption) செய்வதற்கும், ஒரு எனிக்மா இயந்திரத்தைப் பயனபடுத்திக் கொள்ளலாம். எனிக்மா இயந்திரத்தின் கட்டுமானத்தைச் சிக்கலாக்குவதன் மூலம், இதன் மூலம் உருவாக்கப் படும் செய்திகளை எனிக்மாவின் உதவியின்றி ஒருவர் இரகசிய நீக்கம் செய்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை “பில்லியனில் ஒன்று” என்ற அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், எனிக்மாவுக்கும் ஆப்பு வைக்கும் சில குறைபாடுகள் இருந்தன: ஒரு எனிக்மா இயந்திரத்தைக் கைப்பற்றினாலோ அல்லது எனிக்மா குறியீட்டுப் புத்தகத்தைக் கைப்பற்றினாலோ இதன் இரகசிய நீக்கம் சாத்தியமாகி விடும். பிரித்தானியா இந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னரே, போலந்து விஞ்ஞானிகள் எனிக்மாவை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். இரகசியமாக போலந்து இராணுவக் கட்டமைப்பினருக்குக் கிடைத்த ஒரு எனிக்மா இயந்திரத்தை ஆராய்ந்து, தாங்களே ஒரு எனிக்மா இயந்திரத்தை போலந்து இராணுவம் வடிவமைத்தது. சில கணிதவியலாளர்களைப் பணியில் அமர்த்தி, சில ஜேர்மன் செய்திப் பரிமாற்றங்களையும் ஆராய்ந்து எனிக்மா செய்திகளை இரகசிய நீக்கம் செய்வதில் ஒரளவு வெற்றியும் கண்டார்கள். ஆனால், நாசிகள் தங்கள் மிக அடிப்படையான எனிக்மா இயந்திரத்தை மேலும் சிக்கலானதாக மாற்றி, தங்களது இரகசிய குறியீட்டுப் புத்தகத்தையும் தினசரி மாற்ற ஆரம்பித்த போது, போலந்தின் முயற்சிகள் முன்னேற முடியாமல் முடங்கின. ப்ளெட்ச்லி பார்க்- Bletchley Park ப்ளெட்ச்லி பார்க் அருங்காட்சியகத்தில் அலன் ரூறிங்கின் சிலை. 2011, யூலை 15, அரசி இரண்டாம் எலிசபெத்தினால் ப்ளெட்ச்லி பார்க் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. பட உதவி: நன்றியுடன், பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பகம். போலந்து, போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்னர் தனது எனிக்மா இயந்திரம் மீதான முயற்சிகளை பிரிட்டனிடமும், பிரான்சிடமும் பகிர்ந்து கொண்டது. போலந்து வீழந்த பின்னர், போலந்தில் இருந்த எனிக்மா இயந்திரங்களில் ஒன்று பிரிட்டனின் உளவுத் துறையிடம் வந்து சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், பின்னர் நோர்வேயில் குறுகிய காலம் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுப், பின்வாங்கிய போதும் நாசிகளிடமிருந்து எனிக்மா இயந்திரமும், குறியீட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப் பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஆரம்ப முதலீட்டை வைத்துக் கொண்டு எனிக்மாவின் இரகசியங்களை உடைக்கும் மிக ஆரம்ப காலக் கணணியை வடிவமைத்தவர் தான் அலன் ரூறிங். பற்சக்கரங்களும், மின் விளக்குகளும் கொண்ட இந்தப் பாரிய இயந்திரத்தை இன்று ப்ளெட்ச்லி பார்க் எனப் படும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். சிக்கலான எனிக்மா இயந்திரத்தின் தகவல்களை, கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி இரகசியம் நீக்கும் வேலையை இந்த ஆரம்ப காலக் கணனி செய்ததால், பல லட்சம் உயிர்கள் காக்கப் பட்டன. பிரிட்டன் உட்பட, போரில் நாசிகளை எதிர்த்த நேச அணியின் வெற்றியும் இதனால் உறுதி செய்யப் பட்டது. ப்ளெட்ச்லி பார்க் என்ற மாளிகையின், நிலவறையில் நடந்த இந்த முயற்சிகள் அதி உயர் இரகசியமாகப் பேணப்பட்டதால், நாசிகளுக்கு போர் முடியும் வரை தங்கள் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப் படுவது தெரிய வரவில்லை. அதே நேரம், இந்த அரிய பணியைச் செய்த அலன் ரூறிங்கின் பெயரும் அப்போது வெளியே தெரியவரவில்லை. இந்தப் பிரபலமின்மையின் ஒரு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராக இருந்த அலன் ரூறிங்கை பிரித்தானிய அரசு ஆண்மை நீக்க மருந்துகள் மூலம் குணமாக்க முயன்றதும், அந்த மருந்தின் பக்க விளவினால் அவர் தற்கொலை செய்து கொண்டதும், பெரிதாகப் பேசப் படவில்லை. ஓரினச் சேர்க்கையாளராக நீதிமன்றினால் தண்டிக்கப் பட்ட அலன் ரூறிங்கை, அவாது மரணத்திற்குப் பின்னர் மிக அண்மையில் பகிரங்கமாக அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்தது பிரித்தானிய அரசு. - தொடரும்
  2. அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல் நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றபடியால், எனக்கும் படகோட்டத்தெரியும் என்று நினைத்திருந்தார்கள். ஏரிக்கு அருகில் சென்றதும் ஒரு படகுக்கு இருவர், நாலு துடுப்புகள் என்று எடுத்துக்கொண்டு படபடவென்று ஏறிவிட்டார்கள். எனக்கு படகு ஓட்டத்தெரியாது என்று அவர்களிடம் உடனேயே சொல்லிவிட்டேன். எம்முடன் வந்த guide, தான் என் படகில் முன்னுக்கு இருந்து துடுப்பை இயக்குவதாகவும், நான் எப்படி பின்னுக்கு இருந்து அதே மாதிரி செய்யவேண்டும் என்றும் சொல்லித்தந்தான். அமைதியான ஏரிதான். என்றபடியால் பிரச்சனை இல்லை என்று ஒருமாதிரி நானும் படகை ஓட்டினேன். அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது. மடகாஸ்கர் மக்கள் பொருளாதார பிரச்சனைகளால் சட்டத்தை மீறி காடுகளையும், மிருகங்களையும் அழித்து வருகிறார்கள். அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது. அப்பாடா என்று நினைக்கும் முதல் பாறைகள் நிறைந்த எரிப்பக்கத்தில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. என்னுடன் படகை ஒட்டிய மடகாஸ்கர் காரனே கொஞ்சம் படபடத்தமாதிரி இருந்தது. வந்த எல்லோருமே மிகவும் பயந்து போனோம். இடையிடையே படகைவிட்டு பாறையில் ஏறி நிற்பதும் பிறகு படகில் போவதுமாக ஒருமாதிரி லெமூர் தீவை சென்றடைந்தோம். தூரத்தில் எங்களை கண்டதுமே அழகான ரிங் டெய்ல் லெமூர் இன மிருகங்கள் ஏரியின் கரையில் வந்து வரவேற்பதுபோல் ஆவலாக நின்றார்கள். படகுகள் அவர்களை அண்மித்ததும் பாய்ந்தோடிவந்து எங்கள் தோள்மூட்டு, தலை என்று ஏறி நிண்டுகொண்டார்கள். கூட்டி வந்த guide மார் வாழைப்பழங்களை தந்து அவர்களுக்கு கொடுக்கும்படி கூறினார். மிகவும் நற்பான மனிதர்களை நம்பும் காட்டு விலங்கினங்கள் அவை. எமது மாணவிகள் செல்பி எடுக்க வெளிக்கிட்டவுடனேயே அந்த லெமூர்கள் அவர்களது தலையில் இருந்துகொண்டு தாமும் போஸ் கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது.
  3. வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான். மருத்துவக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு இவர்தான் அலங்காரம் செய்வபவர்
  4. சுவியர்... நானும் ஆற்றின் படத்தை கண்டவுடன், அந்த இராட்சத மரத்தையும், முழுசிக் கொண்டு நிற்கும், நில்மினி எங்கே என்றும்தான் தேடினேன். 😂 அவ அந்தப் படத்தை எமக்கு காட்டாமல், மறைத்து விட்டா போலுள்ளது. 🤣
  5. அழகான படங்களும் அருமையான கட்டுரையும் நன்றாக இருக்கிறது.....! சிறியர் அந்த ஆற்றில மரத்தில தடக்குப்பட்டு முழுசின அனுபவமும் வந்ததா......! 😂
  6. திரு கருணைநாயகம். போன கிழமை பரி யோவான் 200 ஆம் ஆண்டு நிகழ்வும் புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.சந்தோசம். அம்மாவின் உறவுகளின் வீடுகள் எங்கு இருந்தன என்று அறியத்தர முடியுமா? எமது அப்பா நல்லூர் ( நாவலர் பரம்பரை) அம்மம்மா உரும்பிராய் அம்மப்பா எழுதுமட்டுவாள். கந்தர்மடத்தில் 1920 களில் குடியேறி அயல்களில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வாழ்ந்தவர்கள். எமது பூர்வீக வீடு இன்னும் அங்கு உள்ளது.
  7. நிச்சயம் தொடருவேன் Pira பிரா. பதின்மூன்றுநாள் தான். ஆனால் தொடர்ந்து இரவு பகலாக பயணித்ததால் ஒரு வருட அனுபவமும் போல இருந்தது.
  8. இன்றுதான் இந்தத் திரியைப் படிக்க நேரம் வந்தது. @தமிழ் சிறி ஐயா மீண்டும் வேலைக்குப் போவது சந்தோஷம்! வீட்டில் அடைந்து கிடைக்காமல் வேலைக்குப் போனால் உடம்பும் குறையும். மனதும் இலகுவாகும். தவறு செய்தவன் குற்ற உணர்வில் வந்து கதைக்காமல் இருக்கலாம். அது அவனுக்கு தொடர்ந்து உறுத்திக்கொண்டு இருக்கும். இப்போதுவரை அவனுடன் கதைக்கவில்லை என்றால் உறுத்தல் பெருகும். ஒரு சாதாரண தருணத்தில் ஒரு சில வார்த்தைகளை சினேகபூர்வமாகச் சொன்னால் பெரிய மாற்றம் வரும்.
  9. எங்க மிச்ச சொச்சத்தை காணல @nilmini
  10. சிறி இந்தக்காணொளியை பார்த்தீர்களா? எமது வீடுகளுக்கு கிட்டவெல்லாம் எடுத்திருக்கிறார்கள்.
  11. இதன் அர்த்தம் தெரியுமா? கொழும்பில் இருந்து யாழ் சென்ற யாழ்தேவியில், முன் சீட்டில் இருந்த ஒருவர் சொன்னார். வயது போன ஒருவரை அவரது சொத்துக்காக, ஒரு இளம் பெண் கலியாணம் கட்டி கொண்டாராம். அவர் ஒரு வருத்தக்காரரை போல தினமும் தூங்கி வழிந்து கொண்டிருப்பதாக, பார்க்க வந்த தாயிடம் காதில் மகள் புறுபுறுக்க, பிள்ளை, சொத்தை, எழுதுமட்டு(ம்)வாழ் என்று புத்தி சொல்லி திரும்பினவாம். பக்கத்தில் இருந்தவர், உங்களுக்கு எப்படி, தாய், காதில் சொன்னது தெரியவந்தது என்று கேட்க, ஹா...ஹா.. நான் அந்த ஊர், எனது முப்பாட்டி தான் அந்த இளம்பெண் என்று சொல்லி இறங்கிப்போனார். இது வீரகேசரி பத்திரிகையில் முன்பு வாசித்தது.
  12. ஐய்க்... நம்ம ஊரு... அப்படியே பழம் றோட்டாலை போய், வலதுபக்கம் வாற, பிள்ளையாருக்கும் கும்புடு போட்டு, அரசடி ரோட்டில், ஒரு ரைட், 10 மீட்டரில், கந்தபுராண வீதியில் ஒரு லெப்ட்... நம்ம வீடு. அரசடி ரோட்டில் லெப்ட் எடுத்தால், நல்லூர் போகலாம். போறவழியில் இடது பக்கம் மடத்து பள்ளிக்கூடம்.
  13. நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள். வீட்டு வேலை நான் நினைத்தது போல் இன்னும் முடிக்கவிலை. ஜூலை மாதம் செய்யலாம் என்று இருக்கிறேன்.
  14. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........( 11). அப்போது அங்கு கபிரியேல் வருகிறான். என்ன நீங்கள் இருவரும் சிரிக்கிறீர்கள், சொன்னால் நானும் சிரிப்பேன். மிருதுளா அவனிடம் சீ .....போடா அதெல்லாம் லேடீஸ் மேட்டர் என்கிறான். அவனும் பதிலுக்கு அவளிடம் நீ போடி என்று சொல்லி விட்டு அவர்களை பார்த்து அங்கு ஒரு லூசு லூசு என்று வந்திருக்கு வந்து பாருங்கோ என்று சொல்லி மேலே போகிறான்.இருவரும் வரும்போது சுமதி மிருதுளாவிடம் என்னடி இவன் போடி என்கிறான், லூசு என்கிறான் என்று கேட்க, அதொன்றுமில்லை மேடம் ரேணுகாதான் அவனுக்கு தமிழ் டீச்சர்.தமிழில் இருக்கும் தூய தமிழ் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி.முகபாவத்துடன் சொல்லுவான்.இப்ப நிறைய தமிழும் கதைக்கிறான். பிரேமாவுடன் பிரெஞ் கதைப்பதைவிட தான் தமிழ் படிச்சு தமிழில் கதைப்பது பெட்டராம். சுமதி சிரித்துக் கொண்டே வருகிறாள். மேலே ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ஓ......நீங்களா வாங்கோ என்ன விடயம் ....அது வந்து சுமதி நாளைக்கு மாலை ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போக வேண்டும், இந்த ப்ளவுசை கொஞ்சம் லூசாக்கித் தரவேண்டும், அத்துடன் இந்த சாறிக்கு ஏற்றதுபோல் ஒரு உள் பாவாடையும் தைத்துத் தரவேண்டும். சரியென்று மிருதுளா அவரைக் கூட்டிச்சென்று அளவுகள் எடுத்து விட்டு "நாளை மதியத்துக்கு பின் வாங்கோ" என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். பின் சுமதியிடம் இது இரு மாதங்களுக்கு முன் நாங்கள் தைத்துக் கொடுத்த சட்டைதான் மேடம். இப்போது கொஞ்சம் சதை போட்டு குண்டாகி இருக்கிறாள். நான் அப்பவே உள்ளே சிறிது துணி கூட விட்டுத்தான் தைத்தது.கெதியா சரிபண்ணிடலாம் என்கிறாள். அப்ப இவன் லூசு என்று சொன்னது இந்த லூசைத்தான் போல. இதையாடா லூசு என்று சொன்னனி என்று அவனிடம் கேட்க அவனும் ம்....என்று தலையாட்டுகிறான். கபிரியேலையும் கூட்டிக்கொண்டு தனது அறைக்கு வந்த சுமதி அவனிடம் கபிரியேல் இந்த வாரத்துடன் உனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இது உனது புது ஒப்பந்தம் படித்துப் பார்த்துவிட்டு உன் அபிப்பிராயத்தை சொல்லு. கடிதத்தை வாங்கிப் படித்த கபிரியேல் தனது வேலை ஒப்பந்தம் மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்திருப்பதை பார்த்து விட்டு சுமதியிடம் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை சுமதி ஆனால் நான் சமீபத்தில் இரண்டு லொறிக் கம்பெனிகளில் சாரதிக்கான நேர்காணலுக்குப் போயிருந்தேன். அவர்கள் எந்நேரத்திலும் எனக்கு பதில் அனுப்புவார்கள் என்று காத்திருக்கிறேன்.அப்படி அழைப்பு வந்தால் நான் உங்களிடம் சொல்லி விட்டு அங்கு செல்லலாம் என்றிருக்கிறேன். --- ஏன் கபிரியேல் உனக்கு இந்த வேலை பிடிக்கவில்லையா, அல்லது சம்பளம் குறைவு என்று நினைக்கிறாயா, அல்லது நிரந்தரமான வேலை ஒப்பந்தம் போட்டுத் தரவா என்று சொல்கிறாள். --- ஓ......நோ .....அப்படியொன்றும் இல்லை மேடம். லாரிகள் ஓட்டுவதென்பது ஒரு ஜாலியான வேலை. 1000 / 1500 கி.மீ. லாரி ஒட்டிக் கொண்டு போவதும் வழியில் ஏனைய லாரி சாரதிகளுடன் வயர்லெஸ்சில் உரையாடிக் கொண்டு செல்வதும் இடத்துக்கு இடம் வித விதமான உணவுகள் தங்கும் ஹோட்டல்கள் எல்லாம் சொல்லி வேல இல்லை சுமதி, அந்த சுகம் அனுபவிக்கனும் அப்ப புரியும். கதைக்கும் போதே கனவுகளில் மிதக்கிறான்.பிரெஞ் இளைஞன் அல்லவா அவனது உணர்வுகள் அவளுக்குப் புரிகிறது. --- சரி கபிரியேல் நீ விரும்பியதுபோல் எப்போது வேண்டுமானாலும் போகலாம், வரலாம். ஒரு நல்ல நண்பர்களாக உன்னுடன் வேலை செய்யும் இந்த நாட்கள் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை.இருவரும் படியேறி மேலே கடைக்கு வருகிறார்கள். சரி .....மிருதுளா நாளைக்கு நீ எட்டரைக்கு வந்து கடையை திறந்து விடு. அந்நேரம் கதீஜாவும் வந்து விடுவாள். இருவருமாக கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல் 13:00 மணிக்கு கபிரியேல் வரட்டும் சரியா.....! --- சரி மேடம். உங்களுக்கு மிக்க நன்றி. --- ம்....இன்னும் ஒன்று, இப்ப வேலைகள் நிறைய வருகின்றன, கதீஜாவும் இருப்பதால் ஆபிரிக்கன்ஸ் அல்ஜீரியன்ஸ் ஓடர்களும் கொஞ்சம் வரலாம் அதனால் நான் வேறு ஆட்களை எடுக்கும் வரை நீயும் அவளும் விரும்பினால் வேலை அதிகம் இருக்கும் நாட்களில் கூடுதலாக இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்து விட்டுப் போகலாம். அதற்குரிய பணத்தை நான் தனியாக உங்களின் கைகளில் தந்து விடுகிறேன். --- சரி மேடம். ஆறுமாதங்கள் பின் கடை ஒரு பிரச்சனையும் இல்லாமல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கு. கபிரியேல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஒரு டிரான்ஸ்போர்ட் கொம்பனியில் வேலை எடுத்துக் கொண்டு போய் விட்டான். கடைக்கு மேலும் ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு ஆட்களை மூன்று மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்திருந்தார்கள். கதீஜாவுக்கு கீழ் அறையில் ஒரு பக்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்கு. அங்கு அவள் ஆபிரிக்கன் பெண்களுக்கு தலை அலங்காரம் ஒப்பனைகள் செய்வதுடன் மேலே கடையில் குறிப்பாக ஆபிரிக்கன் ஆடைகள் விற்கும் பகுதியிலும் அவர்களுக்குரிய ஸ்பெஷல் திருமண ஆடைகள் போன்றவை தைத்துக் கொடுப்பதிலும் தகுதி பெற்றவளாக சிறப்பாக வேலை செய்து கொண்டு இருக்கிறாள். மேலும் சிறுமிகளுக்கும் குமரிகளுக்கும் தலை பின்னுவதில் கிடைக்கும் பணத்தை கதீஜாவே எடுத்துக் கொள்ளுமாறு சுமதி சொல்லியிருந்ததால் அவளுக்கு அந்தப் பணத்துடன் சுமதி தரும் சம்பளப்பணமும் கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சி. அன்று "லக்கி டெய்லரிங் & டெக்ஸ்டைல்ஸ்" மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு சேகர் வருகிறான்.சுமதி அவனை வரவேற்று என்ன சேகர் இந்தப் பக்கம், நீ சும்மா வரமாட்டாயே என்கிறாள். --- அதொன்றுமில்லை அக்கா, வாரமாதம் ஒரு புது சீட்டு ஒன்று தொடங்கிறன். இந்தமுறை தொகையும் கொஞ்சம் அதிகம். அதுதான் ஒரு சீட்டுக்கு உங்களையும் சேர்க்கலாம் என்று சொல்ல ...... சுமதிக்கு "இனிமேல் நீ சீட்டுகள் போடக் கூடாது என்று சுரேந்தர் சொன்னது ஞாபகத்தில் வந்து போகுது. ஆனாலும் மனம் இந்த சீட்டைப் போட்டு கழிவு குறைவாய் வரும்போது எடுத்தால் " லா கூரினேவிலும்" (தமிழர்களும், ஆபிரிக்கங்களும் செறிந்து வாழும் ஒரு இடம்) ஒரு தையல் கடை திறக்கலாம் என்று கணக்குப் போடுது. சரி சேகர் என்னையும் ஒரு சீட்டுக்கு சேர்த்துக்கொள் என்று சொல்கிறாள். சேகர் போகிறான். --- மனம் சொல்லுது, நீ பாட்டுக்கு சீட்டுக்கு சொல்லி விட்டாய், நாளைக்கு சுரேந்தர் கேடடால் என்ன செய்வாய். --- நீ சும்மா இரு, எனக்கெல்லாம் தெரியும். அந்தாளுக்கு சமயம் பார்த்து சூடாக ஒரு பிரியாணி போட்டு விட்டால் எல்லாம் சரியாயிடும்.........! சுபம். யாவும் கற்பனை.....! யாழ் அகவை 25 க்காக ........! ஆக்கம் சுவி........! 🙏 🙏 🙏
  15. இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.
  16. இவரிடமும் நான் அடி வாங்கியது பெருமான் சித்தம்.
  17. 77 வயது. https://newsthamil.com/obituary/மரண-அறிவித்தல்-69/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.