Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    7054
    Posts
  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8557
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38771
    Posts
  4. Eppothum Thamizhan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2375
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/20/23 in Posts

  1. ஒன்பது அன்று மாலை எட்டு மணிவரை கணவருக்குத் தெரிந்தவர் வளர்ந்தவர்கள் என்று மனிசன் எம்மை ஓட்டோவில் அலைக்கழிக்க இரவு உணவையும் நண்பர் ஒருவரின் கரைச்சல் தாங்காது அங்கு உண்டுவிட்டு இரவு எட்டு மணிக்கு கோட்டலுக்கு வர தெரிஞ்ச ஓட்டோ தான் அவர்கள் பிடித்து விட்டார்கள். ஆனாலும் வீதிகள் இருட்டு கொஞ்சம் பயமாகவும் தான் இருந்தது. எனது பண்ணையை அடுத்தநாள் காலை பார்க்கப் போவோம் என உறுதிபூண்டு சுப் பிரமணிய பிரபாவிற்கு போன் எடுத்து நாளை காலை வருகிறோம் என்று கூற ஓகே அக்கா வாருங்கள் என்கிறார். ஓட்டோவுக்கு எவ்வளவு வரும் என்று கேட்க நான் ஓட்டோ அனுப்பட்டோ என்கிறார். காலையில் எட்டு மணிக்குத் தயாராகி மீண்டும் அம்மாச்சிக்கே சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் ஓட்டோவை அழைத்து கோணாவிலுக்குச் செல்ல எவ்வளவு என்று கேட்க மூவாயிரம் என்கிறார் ஒருவர். பிரபா சொன்னது ஆயிரம். என்ன தம்பி நாங்கள் அடிக்கடி போறனாங்கள். மூண்டு மடங்கு சொல்றீங்கள் என்றதற்கு 2000 தாங்கோ என்கிறார். 1000 தானே குடுக்கிறானாங்கள் என்றுகூற 1500 தாங்கோ பெற்ரோல் விலை ரோட்டும் சரியில்லை என்றவுடன் சரி என்று ஏறுகிறோம். இதாலபோனால் அந்த வீடுவரும். அதாலபோனால் வயல்வரும் என்று ஒவ்வொன்றையும் மனிசன் சொல்லிக்கொண்டு வர எரிச்சல் வந்தாலும் அடக்கியபடி கேட்டுக் கொண்டு வருகிறேன். வீதி சில இடத்தில் குன்றும் குளியுமாக இருக்கு. உருத்திரபுரம் சிவன்கோவிலுக்குப் பக்கத்தில் ஐந்து ஏக்கர் நிலம் தங்களுக்கு இருந்ததாகவும் இடப்பெயர்வின் போது உறுதி தொலைந்துவிட்டதாகவும் தகப்பன் இறந்ததானால் அதைப்பற்றி அக்கறை கொள்ளாமல் தாயும் சகோதரர்களும் விட்டுவிட்டதாகவும் மனிசன் புலம்பியபடியே வருகிறார். இனிப் போய் கண்டுபிடிக்க முடியாதா என்கிறா மகள். எத்தனை ஆண்டுகளாய் விட்டன. இப்ப வேறு யாரும் அதில் இருப்பார்கள். போரின் பின் எப்படி இருக்கோ. எமக்கு உது தேவையற்ற வேலை என்கிறேன். எவடம் என்று கேளுங்கோ என்கிறார் ஓட்டுநர். பிரபாவுக்கு போன் செய்து கேட்க நேரே வாருங்கள் நான் சந்தியில் நிற்கிறேன் என்றவர் எம்மைக் கண்டு கையைக் காட்டுகிறார். ஓட்டோவைப் பணம் கொடுத்து போகும்படி கூறிவிட்டு பிரபாவின் பின் செல்கிறோம். எனக்கு மனதுள் ஒருவித அவா ஏற்படுகிறது. அவர் இரும்புக் கேற்றை திறக்க ஆவலோடு உள்ளே பார்க்கிறேன். அவர் கூறியபடி ஐந்து ஏக்கர் நிலம் அல்ல. ஒரு ஏக்கர் கூட இருக்குமோ தெரியாது. மண் வெள்ளையாக வேறொரு நிறமாக இருக்கு. ஒரு இருபது முப்பது வாழைகள் குருந்தன் அடித்தபடி நிற்கின்றன. என்ன பிரபா இது என்கிறேன். இந்த மண்ணில் எப்படி வாழை வரும். யாரையும் காலந்தாலோசிக்கவில்லையா என்கிறார் கணவர். 1000 கோழிகள் வளர்க்கக்கூடிய கோழிக்கூடு என்று கூறி அதற்கென்று மேலதிகமாகப் பணமும் அனுப்பபட்டிருந்தது. கோழிகளையும் நெடுங்கேணியில் 20 மிகுதி மட்டக்களப்பு கிரானில் விசாரித்தது என்றெல்லாம் குழுவில் கூறியிருந்தார். ஒரு நூறு இருநூறு கோழிகளாவது இருக்கும் என்று பார்த்தால் எல்லாக் கூடுகளும் காலியாக இருந்தன. ஒரு ஐந்தே ஐந்து கோழிகள் மட்டும் வாழைக்கடியில் கிளறிக்கொண்டு நின்றன. பெரிய பகுதியில் பாசன் புரூட் நட்டு எல்லாம் வளர்ந்திருப்பதாக எமக்குப் படம் போட்டிருந்தார். பார்த்தால் அவையும் சிறு பகுதியில் அரைவாசி கருகியபடி இருக்க உங்கள் காசு என்றால் இப்படிக் கவனமின்றி இருப்பீர்களா?? ஆற்றையன் காசுதானே என்று விட்டுவிட்டீர்கள் என்று ஏசுகிறேன். பண்ணையைப் பார்க்கப் பார்க்க எம்மை அவர் நன்றாக ஏமாற்றிவிட்டது தெரிகிறது. உங்களை நம்பி இத்தனை பேரும் பணம் போட்டோமே. எம்மை ஏமாற்றிவிட்டீர்களே என்கிறேன். நான் என்ன அக்கா செய்ய. நான் கேட்டதுபோல் இன்னும் திரும்பவும் கொஞ்சம் எல்லாரும் தந்திருந்தால் நான் எதாலும் செய்திருப்பேன் என்கிறார். இந்த மண்ணுக்கு கச்சான் தான் வரும். வாழையோ மரக்கறிகளோ வாராது என்கிறார் கணவர். காணியை சுற்றிப் பார்க்கிறேன். காணியைச் சுற்றி தூண்கள் நட்டு தகரவேலி நன்றாகப் போடப்பட்டிருக்கு. இரு அறைகளுடன் கூடிய சிறிய கட்டடமும் மலசலக்கூடம் குளியலறை போன்றனவும் இருக்கு. பக்கத்தில் கல்லரியும் யாட் என்று சிறிது வருமானம் காட்டியிருந்தார். அதற்காக எமக்குத் தரவும் இல்லை. வந்த வருமானத்தையும் அது செய்தேன். இது செய்தேன் என்று கணக்குக் காட்டியிருந்தார். பின்னர் அதுவும் இல்லை. அதைப் போய் பார்த்தால் பாழடைந்துபோய் இருக்கு. ஒரு excavator வாங்கியதாகவும் கணக்குக் காட்டியிருந்தார். ஒரு சிறிய கட்டடம் கட்டி அதை ஏற்றி மழையில் நனையாதவாறு வைத்திருக்கு. இப்ப வேலை ஒன்றும் நடப்பதில்லையா என்கிறேன். இப்ப குறைவக்கா, சீமெந்தும் விலையக்கா, மணலும் விலை என்கிறார். அப்ப உந்த excavator ஐ விற்றுவிட்டு எமக்கு பணத்தைப் பகிர்ந்து தாருங்கள். நாம் தந்ததில் சிறிது பணமாவது திரும்ப வரட்டும் என்று கூற அது எப்படியக்கா முடியுமென்கிறார். இளநீர் வெட்டித் தரவோ அல்லது தேனீர் போடவோ என்று கேட்க இளநீர் என்கிறோம். அவர் வேறெங்கோ இளநீர் எடுத்துவர மோட்டார் சயிக்கிளை எடுத்துக்கொண்டு போக கணவர் என் மேல் பாய்கிறார். முன்னரும் கல்லு அரியிறம் எண்டு சொல்லி காசு குடுத்து ஏமாந்தனி. இப்பவும் நான் சொல்லச் சொல்ல இல்லை எண்டு குடுத்தனி என்று ஏதோ எல்லாம் சொல்கிறார். நான் அப்பாவிபோல் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எனக்குப் பழைய நினைவு வருகிறது. உப்பிடித்தான் நானும் இன்னும் இரண்டோ மூன்று பேரும் சேர்ந்து கிளிநொச்சியில் கல்லரியும் யாட் என்று ஒருவர் திறந்தார். இரண்டாம் மாதம் 4000 ரூபாய்கள் இலாபம் என்று கூற நான் உதவும் பெண்ணுக்கு அனுப்பச் சொன்னேன். அதன் பின் மூன்று மாதங்கள் மழை பெய்வதால் யாட்டில் வேலை நடைபெறவில்லை என்று கூறிஅவர் எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை. நானும் நம்பிவிட்டேன். மூன்று மாதங்களின் பின் என் மாமியார் கிளிநொச்சி வந்தபோது என்ன மாமி மழையுக்குள் உங்கு வந்திருக்கிறீர்கள் என்றேன். இங்க மழை பெய்து நாலு மாதம் இருக்கும் என்றார். அதன் பின்தான் எம்மை அவர் ஏமாற்றுவது புரிந்தது. கடுமையாகக் கதைத்து நான் போட்ட முதலை மீளப் பெற்றுவிட்டேன். அப்போது என்னுடன் சேர்ந்து முதல் போட்ட ஒருவர் பிரபாவிடமும் பயணம் கொடுத்துள்ளார் என்ற விபரம் ஒரு சூம் மீட்டிங்கில் கதைத்தபோது தெரிந்தது. எனக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் யாழில் சொந்தப் பெயருடன் இல்லை அவர். அவர்தான் எனக்குத் தன்னை அறிமுகம் செய்துவிட்டு. அக்கா நெடுகவும் நாங்கள் ஏமாறுவதே வேலையாகிவிட்டது என்று சிரித்தார். . ஒருவரைப் பற்றி சரியாக அறியாமல் ஒன்பதுபேரும் மீளமுடியாமல் மாட்டிக் கொண்டோமே என மனம் அங்கலாய்க்கிறது. அவருக்குப் பணம் அனுப்பும்போது ஒரு பவுட்ஸ் 220 ரூபாய்கள் மட்டும்தான். பிரபா இளநீருடன் வந்து வெட்டியும் தர மன எரிவுக்கும் வெயிலுக்கும் இளநீர் குளிர்மையாக, வேறு வழியில்லை என மனம் சாமாதானம் கொள்கிறது. இன்னும் சிறிதுநேரம் இருந்து என்ன செய்யலாம் என்று கதைத்தாலும் எதுவும் சரிவரவில்லை. பாசன் புரூட் கரைச்சுத் தரட்டோ என்று கேட்க, சரி குடுத்த காசுக்கு அதையும் குடிச்சிட்டுப் போவம் என மனம் சொல்ல தலையை ஓம் என்று ஆட்டுகிறேன். அறைக்குள் இருந்து ஒரு இளம் பெண் வெளியே வருகிறா. ஒரு மாதத்தின் முன்னர்தான் பண்ணையைக் கவனிக்க ஒரு குடும்பத்தை இருத்தப் போவதாகக் கூறி இருந்தார். அதை எண்ணியபடி இவைதான் பண்ணையைப் பார்த்துக் கொள்கிறார்களா என்கிறேன். இல்லை இது என் மனைவி. இப்ப நாங்கள் இங்குதான் இருக்கிறோம் என்கிறார். அவர் உள்ளே சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார். குழந்தையை வாங்கி தான் கையில் வைத்திருக்கிறார் மகள். சிறிது நேரத்தில் நாங்கள் போகவேணும். ஒரு ஓட்டோவுக்கு போன் செய்கிறீர்களா என்கிறேன். உடனே அவர் போன்செய்ய ஐந்து நிமிடங்களில் ஓட்டோ வருகிறது.
  2. நேரில் பார்த்தாலும் நல்லவர்போல் நடித்து ஏமாற்றிவிடுவார்கள். அவர்களை அறிய ஒரு ஆண்டாவது கண்காணிப்பு அவசியம். நாம் அங்கிருந்தாலன்றி யாருமே எமக்கு விசுவாசமாக எதையும் செய்யப்போவதில்லை. சரியான கவலையான விடயம் தனக்கள் முன்னேற்றத்துக்குக் கூட தாம் உழைக்க மாட்டார்கள். பட்டுப் பட்டும் என போன்றவர்களுக்கு அறிவே வருகுதில்லை அண்ணா
  3. எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇 யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉 @மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?
  4. எனக்கும் பட்டறிவின் முடிவு இது தான்😭
  5. சின்னஞ்சிறிய வண்ணப்பறவை .........! 😍
  6. நல்ல யோசனை..நன்றி..முயற்சிக்கிறேன்......எனது விருப்பம் இரண்டு மூன்று சுயமுயற்ச்சியாளரை. உருவாகிறது....அல்லது தொழில் முனைவோரை வளர்த்து எடுப்பது ....முதலிலேயோ தோல்வி கண்டு விட்டேன் ...கவலையளிக்கிறது....இனிமேல் கவனமாக இருந்து நல்ல நம்பிக்கையான. நபர்கள் கிடைத்தால் நேரில் போய்ப் பார்த்து செய்ய வேண்டும் ...படங்களை கதைகளை நம்ப முடியாது
  7. ஏன் அக்கா சுப்பிறமணிக்கு வாய் தான் மிச்சம் என்பது உங்களுக்கு முகப் புத்தகம் ஊடாக விளங்கிக்க கொள்ள முடியவில்லையா...🤔
  8. சொந்த உறவுகளே தற்போது யாழில் ஏமாற்றுகின்றார்கள், யாரையும் நம்ப முடியாது. எனது மனைவியின் சொந்த மாமா, அவரால் பயன் அடைந்தவர்கள் பல, அதில் நானும் எனது நண்பர்களும், மிகச்சிறந்த மனிதர், அவருடைய மகனும் மகளும் வெளிநாட்டில், அவரின் நொருங்கிய சொந்தகாரர்கள் படுத்த படுக்கையாக இருக்கும் போது Power of Attorney வாங்கிவிட்டார்கள், அவர் இறந்தவுடன் வீடு வங்கியில் உள்ள பணங்களை முடக்கிவிட்டார்கள், மகன் கலியாணம் கட்டவில்லை தலைவருடன் இருந்து பின் முதுகெழும்பு பிரச்சனை மன நோய், மகனை வைத்து மகளுக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் நீதிமன்றமூடாக தடுத்துவிட்டார்கள், 50 கோடி வரும் சொத்து மதிப்பு, யாரையும் நம்ப முடியாது இந்த உலகில் கஷ்டப்பட்ட ஒரு மாணவ or மாணவியை தேர்ந்தெடுத்து படிப்பியுங்கள், வருகாலத்திற்கு நல்ல முதலீடு
  9. ஐயையோ பத்தாயிரம் பவண்ஸ்சா????? எங்கே லண்டனிலா பண்ணை போடப் போகிறீர்கள் ???🤣😂😂. ....காசு கிடைக்கும் கிடைத்து. பண்ணை போட்டதும். பண்ணையின் முகவரியை அறியத்தரவும். நேரில் வந்து பண்ணையை பார்த்து எனது பங்களிப்புகள் எவ்வளவு ?? எப்போது ?? என்று அறிவிக்கிறேன். அப்புறம் இனிமேல் புத்தகங்கள் வாசிக்கமாட்டீர்களா ???
  10. அவதிப் படக்கூடாது கண்டியளோ கோவிட் மூட்டம் நிறையப்பேருக்கு கிட்டத்தட்ட 143 பேர் கொண்ட குழுவில் பயணம் சேர்த்து உணவுப் பொதிகள் எல்லாம் கொடுத்து ஒழுங்காகக் கணக்குக் காட்டியதும் எல்லோரும் நம்பிவிட்டோம். எதைத்தான் நான் செய்யவில்லை.
  11. "உலகம் தெரிய வில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை "......உண்மைதான் மனிதர்கள் மனம் மாறிக் கொண்டே இருக்கின்றார்கள் யாரையும் நம்ப முடியாத போலி உலகில் வாழ்கிறோம். அருமையான பாடல் மிகவும் நன்றி.
  12. எப்போதும் கேக்கக் கூடிய பாட்டு. இணைப்புக்கு நன்றி சுவி.
  13. நானும் ஏமாற்றமடைந்துள்ளேன். ...தனியாக..என்பதால் ஏமாத்திட்டீங்களே ....ஒரு குழுவாக நாலு பேருடன். இணந்து செயல்பட்டிருந்தால். நல்லது என எண்ணி...நினைத்து கவலைப்பட்டு இருக்கிறேன்..உங்கள் எழுத்துகளை வாசிக்கும்போது ஒன்பது பேரையும் ஏமாற்றினார்கள்....நம்ப முடியவில்லை பிரபா. கொட்டிக்காரன். தான் நல்ல மிகச்சிறந்த ஒரு அனுபவம் அங்கு உள்ள இளம் சந்ததிக்கு உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம்...சிந்தனை...விருப்பம்..ஒரு துளி கூட கிடையாது...இவ்வாறு அனுப்பும் பணத்துக்கு நாலு போத்தல்கள் விஸ்கி குடித்து விட்டு அமெரிக்கர்களை திட்டி கொண்டு இருக்கலாம் 🤣😂நல்ல நித்திரையாவது வரும்........ஆமா புதிய பண்ணைகள். தொடங்கவில்லையா.?????🤣..
  14. Wheel Chair போன்ற சேவைகளை நான் இன்னும் பயன்படுத்தியதில்லை. ஆனால், காசு மாற்றிக் கொண்டு போவதுண்டு. பம்பாய், கட்டார் போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்ள Toilet இனை பயன்படுத்த முதல் அங்கிருக்கும் கிளீனரை கண்டு பிடித்து (அனேகமாக அங்கேதான் நிற்பார்கள்), அவருக்கு $10 இனை கொடுத்து நான் பாவிக்க நினைக்கும் Toilet ட்டை சுத்தம் செய்ய சொல்லிய பின் தான் பயன்படுத்துவது. அவருக்கு மகிழ்ச்சி, எனக்கு தூய்மை. சேர்விஸ் சார்ஜ் அறவிடும் உணவு விடுதிகளில் Tips கொடுப்பதில்லை. இங்கு (கனடிய) Tips ஆக மொத்த பில்லின் 10 அல்லது 15 வீதம் கொடுப்பதுதான் வழமை. கனடிய முறைகளில் (habits) இதுவும் ஒன்று. கொடுக்கப்படும் பணம் அங்குள்ள மிச்ச வேலையாட்களும் பகிரப்படும். என் மகன் கடந்த வருட கோடை விடுமுறையில் ஒரு உணவு விடுதியில் Dish washer ஆக part time வேலை செய்தான். வாரத்துக்கு டிப்ஸ் மட்டும் $100 இற்கு மேல் கிடைத்தது.
  15. நல்லது! இனி அப்படியே சரியாத எழுத்துகளில் இருப்பதையும் வாசித்து விடுங்கள்!
  16. ஏழு தேநீர் போடவோ என்கிறா சித்தி. ஓம் கொண்டுவாங்கோ என்றுவிட்டு சாய்மனைக் கதிரையில் இருந்து எழுகிறேன். உள்ளே சென்று வீட்டைப் பார்க்க மனதில் இது இப்ப என் வீடு இல்லை என்னும் எண்ணம் தோன்றி அலைக்கழிக்கிறது. பத்து ஆண்டுகளின் முன்னர் என் கணவரின் சகோதரர் ஒருபுறம், என் அம்மாவின் தங்கை பிள்ளைகள் ஒருபுறம் தமக்குத் தான் வீடு என்று கதைத்துக்கொண்டு திரிந்ததாலும் கணவரின் தொடர் கரைச்சல் காரணமாக அந்த வீட்டை என் தங்கைக்குக் கொடுத்து இரண்டு மாதங்கள் சரியான தவிப்பாகிவிட திரும்ப எனக்குத் தா என்று கேட்டதற்கு நான் விக்கமாட்டான். கேட்காதைங்கோ என்றுவிட்டாள். வேறு காணிகள் வாங்குவதற்கு நான் ஆசைப்பட்டபோதெல்லாம் அங்க ஆர் போய் இருக்கப்போறது சும்மா இரு. என்ர காணி இருக்குத்தானே. வேணுமென்டால் அதில போய் வீடுகட்டி இருக்கலாம் என்னும் கணவரின் அதட்டலாலும் காணிகள் வாங்கும் ஆசையே போய்விட, இப்ப வீட்டுக்குள் நின்று பார்க்கும்போதுதான் அவசரப்பட்டு விற்றுவிட்டேன் என்று மனதில் வேதனை எழுகிறது. தேநீர் குடித்தபின் தங்கை வீட்டுக்குச் செல்கிறோம். வெளிநாடு தோற்றுப்போகுமளவு பார்த்துப்பார்த்து வீட்டைத் திருத்தி வைத்துள்ளனர். 2- 2.20 நீள அகலத்துடன் தேக்குக் கட்டிலும் மெத்தையும் யன்னல் திரைச் சேலைகளும் ஏசியும் என பார்க்கவே ஆசையாக இருக்கிறது. அறையுடனேயே ரொய்லெட் வசதியுடன் கணவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார். மகளுக்கும் பிடித்துவிட ஒரு இரண்டு மூன்று நாட்கள் தூங்குவதும் கதைப்பதும் உண்பதுமாக காலம் களிக்கிறது. வீட்டின் முன்பகுதி முழுவதும் விதவிதமாக பூங்கன்றுகள் சாடிகளிலும் நிலங்களிலும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்த வாரம் அங்குள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் தேர் என்பதனால் எனக்கும் மகளுக்கும் சேலை வாங்குவது சட்டை தைக்கக் கொடுப்பது என்று நேரம் ஓடிப்போக மனிசன் வேட்டி கட்டிக்கொண்டு மேலே ஒன்றும் போடாமல் கோயிலுக்குத் தயாராகி வருகிறார். அப்பா சேர்ட்டை மறந்திட்டியள் என்று சிரிக்கிறாள். கோயிலுக்கு உள்ளே சேர்ட் போடக்கூடாது என்று மச்சாள் சொல்ல எதுக்கும் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாங்கோ. உள்ள போகும்போது கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு போகலாம் என்கிறேன். கோயிலில் முன்பு போல் பெரிதாகக் கூட்டம் இல்லை. இணுவிலுக்கும் உரும்பராய்க்கும் நடுவே இருப்பதால் இரு ஊரவரும்முன்னர் நிறையவே வருவார்கள். இம்முறை சிறிய குழந்தைகளையும் இளம் பெண்களையோ ஆண்களையோ அல்லது கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களையோ அங்கு காணமுடியவில்லை. எங்கள் வயதை ஒத்தவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். விசாரித்தபோது பிள்ளைகளுக்குப் பள்ளி. பெரியவர்களும் யூனி, வேலை. மற்றவர்கள் வரப் பஞ்சியில் வரவில்லை என்றனர். அம்மன் கோவிலுக்கு என்றால் நிறையப்பேர் லீவு போட்டுவிட்டும் வருவினம். இந்தக் கோவிலுக்குக் குறைவு என்கிறா மச்சாள். சனம் குறைவாக இருந்தது பார்க்க ஒரு மாதிரித்தான் இருந்தது. நான் சாதாரணமாகவே கோயில்களுக்குச் செல்வதில்லை. மகளுக்காகவும், சரி கன நாட்கள் தேர் பார்த்து. போவோம் என்று போனது. கடும் வெயில் வேறு. காலையில் உணவுமில்லை. தேர் மெதுவாக நகர நகர கால்களிலும் வெயிற்சூடு மட்டுமன்றி குறுணிக் கற்கள் குற்றுவதும் தாங்கவே முடியாததாகிவிட்டது. மூன்றாவது வீதிவரை பொறுமையோடு இருந்த எனக்குப் பொறுமை போய்விட தேரைக் கடந்து சென்று செருப்பை எடுக்கவும் ஏலாமல் தவிப்புடன் நிற்கிறேன். வெறுங்காலுடன் வீடும் செல்ல முடியாது. மேற்கொண்டு தேருக்குப் பின்னால் போவதில்லை என்று முடிவெடுத்து தண்ணீர்ப் பந்தல் ஓரமாக நிற்கிறேன். கணவர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாற்போல் என்னருகே வருகிறார். சர்க்கரைத் தண்ணீர் அல்லது மோர் குடிக்கப் போகிறாயா என்று கேட்க சரியான விடாய் தான் ஆனாலும் வேண்டாம் என்கிறேன். மகளும் தகப்பனும் சர்க்கரைத் தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். ஒரு வாளியில் தண்ணீர் வைத்து சில்வர் கப்புகளைக் கழுவிக் கழுவி அடுக்குகிறார்கள். என்ர செருப்பை எடுத்துக்கொண்டு வாறியளோ ? நான் போகப்போறன் என்கிறேன். நான் அப்பாவுடன் வருகிறேன் என்கிறாள் மகள். தேர் தெற்கு வீதிக்கு நகர மச்சாளிடம் திறப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒரு தேநீர் போட்டுக் குடித்தபின்னர் தான் மனம் அசுவாசமடைகிறது. அடுத்தநாள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் செல்வோம் என முடிவெடுத்து பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து நடந்து செல்கிறோம். என் ஒன்றுவிட்ட அண்ணா சிவகுமாரனுடன் சேர்ந்து சில விடயங்களைச் செய்ததாலும், துரையப்பா கொலைவழக்கில் கைதாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்கு அம்மா என்னையும் அழைத்துக்கொண்டே கோட்டைச் சிறைக்குச் செல்வார். அகளிக்குள் முதலைகளெல்லாம் இருக்கின்றனவோ இல்லையோ. நான் அம்மாவுடன் அதைக் கடந்து உள்ளே செல்லும்வரை முதலை பாய்ந்து வந்து இழுத்தாலும் என்ன செய்வது எனப் பயந்தபடி அம்மாவின் கையை இறுக்கிப் பிடித்தபடி செல்வேன். இப்ப எல்லாம் தரைமட்டமாகிக் கிடப்பதைப் பார்க்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை உயிர்கள் இதற்காகக் காவு கொள்ளப்பட்டன என எண்ணும்போது வேதனையாகவுமிருந்தது. இப்போது முன்னர் போன பாதை அன்றி வேறு பாதை அமைக்கப்பட்டிருந்தது. நானும் கணவரும் இலங்கை ஐடி வைத்திருந்தபடியால் எமக்கு 100 ரூபாய்களும் மகளுக்கு 1250 ரூபாய்களும் அறவிட்டனர். எக்கச்சக்கமான சிங்கவர்கள், சிங்களப் பள்ளி மாணவிகள் என சிங்களப் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற எண்ணமே ஏற்பட்டது. நாம் போனது 11 மணிக்கு கடும் வெயில். ஒரு 15 நிமிடத்தில் பார்த்துவிட்டு மேலே இருந்த ஒரு மரத்தடியில் வேரில் நான் இருக்க கணவனும் மகளும் புல்லின்மேல் அமர்கின்றனர். மகள் கோட்டையைப் பற்றிக் கேள்விகள் கேட்க நானும் கணவரும் தெரிந்தவற்றைக் கூறுகிறோம். மீண்டும் வெளியில் வந்து முனியப்பர் கோவிலடியிலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்தையும் பார்ப்போம் என்று சொன்னால் அங்கும் நிறைய ஆட்கள். ஆனால் நூலகத்தில் ஏதோ வேலை நடப்பதாகக் கூறி யாரையும் உள்ளே விடவில்லை. வெளியே சென்று உணவருந்தலாம் என்று பார்த்தால் வீதிகளில் ஓட்டோவைக் காணவில்லை. யாழ் பேருந்து நிலையம்வரை சென்று அங்கிருந்து ஒரு ஓட்டோவை அமர்த்திக்கொண்டு ஒரு நல்ல கோட்டலாகக் கொண்டுபோக முடியுமா என்று கேட்க, தட்டாதெருவுக்குக் கிட்ட ஒன்று இருக்கு. அங்கு போகலாமா என்று சாரதி கேட்கிறார். சரி என அங்கு சென்றால் அதைப் பார்க்க நல்ல உணவகம் போலவே இல்லை. ஆனால் சரியான சனம். மணமும் நன்றாகவே இருக்கு. ஆக எடுப்பு எடுக்காதை சாப்பிட்டுப் பார்ப்பம். நல்லம் இல்லை என்றால் இனிமேல் வராமல் விடுவம் என்கிறார். மகளும் தகப்பனுக்கு சப்போட செய்ய நாம் ஓரிடத்தில் அமர்கிறோம். ஒரு மட்டன் பிரியாணியும் 2 சீபூட் பிரைட் ரைஸ்சும் மாம்பழ, அன்னாசி யூசும் மாறும் கோலாவும் ஓடர் செய்துவிட்டு காத்திருக்கிறோம். சுற்றிவரப் பார்த்தால் ஏ லெவல் படிக்கும் மாணவர்கள் போல. ஒரு பத்துப்பேர் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அனேகமாக பக்கத்தில் இருக்கும் ஆண்கள் கல்லூரி மாணவர்களாய்த்தான் இருக்க வேண்டும். கடைகளில் வந்து உண்ணுமளவு இப்ப மானவர்களின் நிலை மாறிவிட்டதா என்கிறேன். ஏனம்மா ஏதாவதொரு மாணவனின் பிறந்தநாளாகக் கூட இருக்கலாம் தானே என்கிறாள் மகள். என்ன வெளிநாட்டுக் காசாய் இருக்கும் என்று கணவர் கூற, அதைப் பற்றி உங்களுக்கு என்ன? நீங்களா பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்கிறாள். முதலில் யூசைக் கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் எதையும் காணவில்லை. யாரிடமும் கேட்கலாம் என்றாலும் அவர்களையும் காணவில்லை. சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாக வருகிறது. கரண்டியும் ரிசுவும் தரமுடியுமா என்று கேட்க கொண்டுவந்து தருகிறார். உணவு நினைத்ததிலும் மேலாக நன்றாகவே இருக்கிறது. டிசேர்ட் இல்லையோ என்கிரா மகள். றியோவில் போய் உண்போம் என்கிறார் மனிசன். ஐஸ்கிரீம் சாப்பிட இன்னொருநாள் தனியப் போவம். இப்ப இங்க ஏதும் இருக்கா கேட்பம் என்றுவிட்டு அதில் நின்ற வேலையாளைக் கூப்பிட்டு என்ன இருக்கு என்று கேட்க வனிலா ஐஸ் மட்டும்தான் இருக்கு என்கிறார். அதை வாங்கி ஆடிப்பாடி உண்டு விட்டு வெளியே செல்கிறோம்.
  17. பிற்குறிப்புகள் தொடர்ந்து வாசித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் - முக்கியமாக சுவி, புங்கையூரான் ஆகியோருக்கு - நன்றிகள்! பயன்படுத்தப் பட்ட நூல்கள்: 1. In the Garden of Beasts (2011), Erik Larson. இது நாசிகளின் 1933 ஜேர்மனியின் நாளாந்த சம்பவங்களை விபரிக்கும் ஒரு நூல். 2. The Splendid and the Vile (2020), Erik Larson. இது 1939 முதல் 1940 வரை சேர்ச்சிலின் இங்கிலாந்து, ஹிற்லரின் நாசி ஜேர்மனி ஆகியன பற்றிய அருமையான நூல். 3. Stalingrad, The Fateful Siege:1942-1943. Antony Beevor (1998). இது 1942 இல் நிகழ்ந்த ஸ்ராலின்கிராட் முற்றுகை பற்றியதெனினும், அனைத்து சோவியத் முனைகள் பற்றிய முதல் நிலைத்தரவுகள் (primary source) அடிப்படையிலான வரலாற்று நூல். 4. Einstein: His Life and Universe, Walter Isaacson (2008). ஐன்ஸ்ரைனின் வாழ்க்கை வரலாறு, இதன் ஒரு அத்தியாயம் அணுகுண்டு தயாரிப்பு முயற்சிகள் பற்றிய விபரங்களைத் தருகிறது. 5. Killing the Rising Sun: How America Vanquished World War II Japan, by Bill O’ Reilly & Martin Dugard (2016). பேர்ள் துறைமுகத் தாக்குதல், அமெரிக்க அணுவாயுதப் பரிசோதனைகள், ஜப்பான் மீதான அணுவாயுதத் தாக்குதல் என்பன பற்றிய நூல். இணையவழி ஆவணக்காப்பகங்கள்: 1. The US National Archives. 2. Imperial War Museum, UK.
  18. திரும்பும் வரலாறு- பாகம் 5 டன்கர்க் 1940, மே மாதம் 10 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் தரைப்படைகள் பிரான்சினுள் சடுதியாக ஆக்கிரமித்து ஊடுருவின. பிரான்ஸ் தரப்பில் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுத் தரைப்படையினர், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ் இராணுவம் (British Expeditionary Force), சில பத்தாயிரம் பெல்ஜியம், கனேடியப் படையினர் என பெரும் இராணுவ அணியை நாசிகள் டன்கர்க் எனும் வட கிழக்கு பிரான்ஸ் கடற்கரையோர நிலப் பரப்பில் சுற்றி வளைத்தனர். பாதுகாப்புகளற்ற கடற்கரை வெளியில் சிக்கிக் கொண்ட நான்கு இலட்சம் வரையான இப்படைகளை, நாசி விமானங்கள் இடைக்கிடை குண்டு வீசிப் பெரும் உயிர்ச்சேதமெற்படுத்தின. கடல்வழியாக இந்தப் படைகளில் ஒரு பகுதியினரையாவது மீட்டெடுக்கும் முயற்சியாக ஒபரேசன் டைனமோ மே 26 இல் ஆரம்பிக்கப் பட்டு, அடுத்த ஒரு வாரத்தினுள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ், பிரெஞ்சு, கனேடிய படையினர் டோவர் நீரிணையின் வழியாக மீட்கப் பட்டனர். கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும், அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். சமாதானப் புறாக்கள் 1940 ஜூன் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாசிகளிடம் சரணடைந்து 80% ஆன பிரான்ஸ் நிலப்பரப்பை நாசிகளிடம் ஒப்படைத்தது. இவ்வாறு பிரான்ஸ் சரணடைவதற்கு முன்னர், நாசிகள் பாரிசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும் வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரான்ஸ் அரச தலைவர்களை பிரான்சிலேயே நேரடியாகச் சந்தித்து தொடர்ந்து போராடும் படி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இந்த வலியுறுத்தலின் காரணங்கள் பல. பிரான்ஸ் வீழ்ந்து விட்டால் கடல்வழியாக பிரிட்டனை நாசிகள் ஆக்கிரமிக்க அதிக காலம் எடுக்காது. அத்துடன், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நாசி விமானங்கள் பறக்க வேண்டிய தூரமும் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, பிரான்சின் பாதுகாப்பு என்பது இங்கிலாந்தின் பாதுகாப்புத் தான் என்பது தெளிவு. எனவே, இறுதியில் பிரான்ஸ் வீழ்ந்த போது, அடுத்த நாசி இலக்கு இங்கிலாந்து தான் என்பது சேர்ச்சிலுக்கு மட்டுமன்றி பிரிட்டன் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஹிற்லர் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை உடனே வழங்கவில்லை. ஏன்? ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாசிகள் தம் ஒவ்வொரு எதிரிகளையும் ஒவ்வொரு தரத்தில் வைத்திருந்தனர். யூதர்களும், றோமாக்களும் கரப்பான் பூச்சிகள், ரஷ்ய சிலாவிக் மக்கள் "கீழ் நிலை மனிதர்கள்" என வெவ்வேறு தரங்களில் பார்த்தனர் (இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!). ஹிற்லர், பிரித்தானியர்களை, ஜேர்மனிய ஆரியர்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நாகரீக இனமாகப் பார்த்தார். எனவே, இராணுவ ரீதியில் தாக்காமலே அவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இருந்தார். ஹிற்லர் நீட்டும் நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டு இங்கிலாந்து சமாதானத்தைப் பேண வேண்டுமென வாதிட்ட எட்வேர்ட் மோஸ்லி (இவர் பிரிட்டன் பாசிச யூனியன்- British Union of Fascists எனும் அமைப்பின் தலைவர்), டியூக் ஹமில்ரன் (Duke of Hamilton) போன்ற சிலரும் பிரிட்டனில் இருந்தனர். சமகாலத்தில், சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம். இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்கு, நாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். வளையாத கருங்கல்! "கருங்கல் உடையும், வளையாது!" எனும் புதுவையின் வரிகளின் பிரதிபலிப்பாக, வின்ஸ்ரன் சேர்ச்சில் நாசிகளோடு பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பேயில்லையென மறுத்து விட்டார். பிரிட்டன் பாராளுமன்றிலும் சரி, பொது மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றும் உரைகளிலும் சரி, சேர்ச்சிலின் உரைகள் இரு பகுதிகளைத் தவறாமல் கொண்டிருந்தன. ஒன்று: எந்த நிலையிலும் பிரிட்டன் சரணடையாது போராடும் என்ற உறுதி, இரண்டு: இந்தப் போராட்டம், பிரிட்டன் மக்களுக்கு ஒரு கொடிய நரகமாக இருக்கும் என்ற யதார்த்தம். இது ஒரு அற்புதமான செயல்திறன் மிக்க உளவியல் நுட்பம். எதிர் கொண்டு வரும் கடின நாட்கள் பற்றிய உண்மையை மீள மீளச் சொல்லி விட்டால், மக்கள் பூப்படுக்கையை எதிர்பார்க்காமல் இருப்பர், ஏமாற்றம் கொள்ளாமல் காரியத்தைப் பார்ப்பர். அதே வேளை நம்பிக்கையை இழப்பது மட்டும் நடக்கக் கூடாதென மனதில் ஊன்றி விடுதல் மூலம், போராட்டக் குணத்தைத் தக்க வைத்தல். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ரத்தின சுருக்கமாக சேர்ச்சில் சொன்ன ஒரு வாக்கியம்: “If you are walking through hell, keep walking!” "நரகத்தினூடு நடக்க வேண்டியிருக்கிறதா? நடந்து கொண்டேயிருங்கள்!" காத்திருந்த கழுகுகள் மறு கரையில் நாசி ஜேர்மனியில், பி.பி.சி வானொலியைத் தவறாமல் கேட்ட படி சமாதான சமிக்ஞைக்காகக் காத்திருந்த நாசிப் பிரச்சார பீரங்கி கோயபல்ஸ் பிரிட்டனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நாள் நெருங்கி விட்டதாக தன் டயரியில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். பிரிட்டனின் சரணடைவை விரைவாக்கும் "லங்காபுவத்" பாணி பிரச்சார நடவடிக்கைளும் கோயபல்சால் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இன்று இணையவழியில் ரஷ்யாவின் அரச அமைப்புகள் பொய்ச்செய்திகளையும், எதிர் நாட்டில் பிரிவினையூட்டும் போலி ஆய்வுகளையும் கசிய விடுவது போல, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த மக்கள் தொடர்பாடல் ஊடகமான வானொலி மூலம் நாசிகள் பிரச்சாரம் செய்தனர். பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளிலிருந்து ஆங்கில மூலத்தில் இந்தப் பிரச்சாரங்கள் ஒலிபரப்பாகின. ஹிற்லரின் உள்வட்டத்திலேயே பிரிட்டனை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் ஒரு காரணம், யார் தலைமை நாசியான ஹிற்லரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பதில், ஹிற்லரின் கூட்டுக்களிடையே இருந்த கடும் போட்டி. ஹிற்லரின் நம்பர் 2 ஆக இருந்த ருடோல்f ஹெஸ் சமாதானம் பேச வேண்டுமென்று வலியுறுத்தினார் (பின்னர் அவரே ஒரு விமானத்திலேறி ஸ்கொற்லாந்துக்குப் பறந்து போனது இன்னொரு சுவாரசியமான கதை!). கோயபல்ஸ் உள்பிரிவினையால் பிரிட்டனையும் சேர்ச்சிலையும் பலவீனப் படுத்திய பின்னர் கடல்வழியாக ஆக்கிரமிக்க வேண்டுமென்றார். நாசி விமானப்படையின் தலைவரான கோறிங், ஒரே வாரத்தில் தன் விமானப் படையின் தாக்குதல்களால் பிரிட்டன் அடி பணியும் என்று ஹிற்லருக்கு நம்பிக்கையூட்டினார் (மூன்று நாட்களில் உக்ரைனின் கியேவ் விழும் என்று வாக்குறுதி கொடுத்த ரஷ்ய இராணுவத் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!). இறுதியில், கோறிங்கின் இந்த வான்வழித் தாக்குதல் தான் பிரிட்டனை அடிபணிய வைக்கும் வழியென ஹிற்லர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தார். கழுகின் நாள்! பிரான்சின் வடக்குக் கரையோரத் தளங்களிலிருந்து கிளம்பி, ஆயிரத்திற்கு மேற்பட்ட, பல வகை நாசி விமானங்களை உள்ளடக்கிய விமான அணி இங்கிலாந்தை நோக்கி முதலில் தாக்குதல் செய்ய ஆரம்பித்தது 1940, ஆகஸ்ட் 13. இந்த முதல் நாளை கோறிங் "கழுகின் நாள்- Eagle Day (Adlertag)" என்று பெயரிட்டு தயார் செய்து கொண்டிருந்த போது, பேர்லினில், பிரிட்டன் தோற்ற வெற்றிப் பேரணியைக் கொண்டாடும் அலங்கார வேலைகளை இன்னொரு நாசிக் குழு செய்ய ஆரம்பித்திருந்தது. அவ்வளவுக்கு, தனது விமானத் தாக்குதலால், சில நாட்களில் பிரிட்டன் சுருண்டு விடும் என்று நம்பினார் கோறிங். ஆனால், முதல் நாளிலேயே ஏமாற்றம் காத்திருந்தது. பிரிட்டனின் மீதான மோசமான வானிலையும், றோயல் விமானப் படையின் எதிர்த்தாக்குதலும் சேர்ந்து, இலக்குகளை அடையாளம் காணாமலே குண்டுகளை வீசி விட்டுத் திரும்ப வேண்டிய நிலை நாசி விமானங்களுக்கு ஏற்பட்டது. ஆனால், நான்கு நாட்களில் றோயல் விமானப் படையை அழித்து விடுவோம் என்று உறுதியெடுத்த கோறிங், தன்னுடைய கணிப்பை மாற்றிக் கொள்ளவில்லை, எனவே படை படையாக நாசி விமானங்களை இங்கிலாந்தின் வான்பரப்பினுள் அனுப்பும் அணுகுமுறை தொடர்ந்தது. அடுத்த சில நாட்களில், இந்தப் பகல் நேர நாசி விமானத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு மேலதிகமாக, இரவில் பேர்லின் மீதும் றோயல் விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குமளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தன. இரவு நேரம், நிலாக் காலம்! நாசி விமானப் படை ஒரு புதிய நுட்பத்தைக் கையாள ஆரம்பித்தது. பகலில், றோயல் விமானப் படையின் விமானங்கள் நாசி விமானங்களை வானில் எதிர் கொண்டு தாக்குவதைத் தவிர்க்க, இரவுகளில் பிரிட்டன் மீதான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். றோயல் விமானப் படையின் சண்டை விமானங்களில் ரேடார் வசதிகள் இருக்கவில்லை. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளாலும் இரவில் குறி பார்த்துச் சுட இயலாது. ஆனால், நாசி விமானங்கள் இரவிலும் தரையில் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்க இயலும், இதற்கு ரேடார் அவசியமில்லை. எனவே, நிலா வெளிச்சம் நிரம்பிய இரவுகள், பிரிட்டன் நகரங்களுக்கு நரக நாட்களாக மாறின. இரவு நேர நாசி விமானத் தாக்குதல்களால் எரிந்து சிதைந்த இலண்டன் பொதுக் கட்டிடங்கள். பட உதவி: நன்றியுடன் அமெரிக்க ஆவணக்காப்பகம். நிலா வெளிச்சமில்லா நாட்களில் கூட நாசிகள் துல்லியமாக கட்டடங்களையும், இலக்குகளையும் தாக்குவதற்கு ஒரு வானலைத் (Radio beacon) தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். விமானங்கள் ஓடுபாதைகளில் துல்லியமாகத் தரையிறங்குவதற்கெனப் பயன்பாட்டிலிருந்த லொறென்ஸ் (Lorenz) தொழில்னுட்பத்தை செம்மைப் படுத்தி சில நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் இலக்குகளை அடையாளம் காண நாசிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள். அனேக உயிர், உடைமைச் சேதங்கள் பிரிட்டனில் இந்த இரவு நேரத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன. ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், இலண்டன் நகரை நாசிகள் தொடாமல் விட்டிருந்தது, சேர்ச்சில் மனம்மாறி நாசிகளுடன் சமாதானம் பேச வருவார் என்ற நம்பிக்கையினால். அந்த நம்பிக்கை இப்போது சேர்ச்சிலின் வானொலி உரைகளால் தகர்ந்து விடவே, 1940 செப்ரெம்பர் 7 இல் முதன் முறையாக இலண்டன் நகரமும் நாசிகளின் இரவு நேரத் தாக்குதலுக்குள்ளானது. ஒரு இரவில், மத்திய இங்கிலாந்திலிருக்கும் கொவென்ட்றி நகரத்தின் மீதான தாக்குதலில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 1940, செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல், 1941 மே 11 வரையிலான எட்டு மாத காலம், செறிவான நாசி விமானத் தாக்குதல்களை இலண்டன் உட்பட்ட நகரங்கள் எதிர் கொண்டதில், மொத்தம் 44, 652 மக்கள் பலியானார்கள். இவர்களுள் 29,000 பேர் இலண்டனில் பலியானார்கள். பிரித்தானியாவில், நாசி விமானத் தாக்குதல்களால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5,626. ஏமாற்றம், திசை மாற்றம்! 1940 டிசம்பரில், ஹிற்லர் பிரிட்டனின் வீழ்ச்சிக்காக இனிக் காத்திருக்கப் போவதில்லையெனத் தீர்மானித்து, தனது தளபதிகளுக்கு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்: "கேஸ் பார்பரோசா (Case Barbarossa)" எனும் சங்கேதப் பெயர் கொண்ட அந்த ஆணை, சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறும் திட்டங்களை வரையுமாறு கட்டளையிட்டது. இந்தத் திட்டம், ஒப்பரேசன் பாபரோசாவாக 1940 ஜூன் மாதம் ஆரம்பித்தமை தான், பிரிட்டன் மீதான நாசி விமானப் படையின் தாக்குதல்கள் ஒரு ஆளியைச் சொடுக்கியது போல நின்று போகக் காரணம். இதை பாகம் 7 இல் விரிவாகப் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்னாகப் பார்க்க வேண்டியது: நாசிகளின் கொடிய விமானத் தாக்குதல்களால் பிரிட்டன் துவண்டு விடாமல் காத்தது சேர்ச்சில் மட்டுமா? இந்தத் துவழாத பிரிட்டனின் தூண்களாக இருந்த இரு தரப்பினர் பற்றி அடுத்த பாகத்தில் பேசலாம்! - தொடரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.