Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    38770
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    488
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/21/23 in all areas

  1. இலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று
  2. உங்களின் நம்பிக்கைக்கு நன்றி கு.சா.......நேரம் கிடைக்கும்போது எழுதலாம்......! 😁 இதில் இடங்கள்தான் நிஜம்......மற்றவை எல்லாம் கற்பனைதான்......! நான் இந்தக் கதையில் வரும் ஆச்சியின் கனவைப் பற்றி யாரும் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன் யாரும் அதை படிக்க வில்லையையோ தெரியாது.......அதுக்குத்தான் நிறைய மினக்கெட்டிருந்தேன்.........! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே......! 😁
  3. 90களின் தொடக்க காலத்தில் புலிவீரர்கள், யாழில்
  4. எங்க மிகுதியை காணல அந்த ஸ்கூட்டிய பிரட்டுன கதை வருமா அல்லது வராதா?? நாலு கோடிக்கு என்ன செஞ்சிருப்பார் இதற்க்காகவே இந்த தனி விலகியே நிற்பது ?? இப்பவும் சொல்லுவது இதைத்தான் நீங்கள் நினைப்பது போல ஈழம் - இலங்கை அல்ல மாறாக பொய் ,பித்தலாட்டம் நிறைந்து காணப்படுகிறது ஆனால் எல்லோரும் அல்ல சிலருக்கு இப்படி அமைந்து விடுகிறது
  5. கடுமையான போர் நிகழ்ந்த காலகட்டங்களில் வன்னி நிலப்பரப்பு எங்கும் ஓயாது மக்கள் பணியாற்றிய கருணாரட்ணம் அடிகளார்( கிளி் பாதர்) 20 04. 2008 சிறீலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் அணியினால் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.. மிழ் வாழும் காலம்வரை உங்கள் நினைவிருக்கும்.
  6. இவர் இதுக்கு சரிவர மாட்டார். எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பத்தாயிரம் ஆர் குடுப்பினம். முதல் அங்கே போய் அப்படி செய்ய வேணும் இப்பிடி செய்ய வேணும் என்று நீங்கள் பெரிய சமூக சேவையாளி போல காட்ட வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை புதிதாக நடப்பது போல கூற வேண்டும். ஒரு பெரிய காணி இருக்கு நிறைய பேருக்கு வேலை குடுக்கலாம் ஆனால் திருத்த வேண்டும் என்று ஒரு ஐநூறு ஆயிரம் வாங்க வேணும். 3 மாதத்தில் திருத்திய காணிக்குள் நரி வருது எலி வருது எண்டு சுத்தி அடைக்க ஆயிரம் இரண்டாயிரம் எண்டு வாங்க வேண்டும். பிறகு கொஞ்ச படங்களை போட வேணும் ... பக்கத்து தோட்ட படமென்றாலும் பரவாயில்லை இதை இன்னும் பெருசாக்க உளவு இயந்திரம் வேணும் சிறிய கிண்டி வேண்டும் என்று ஒரு ஐயாயிரம் ஆறாயிரம் வாங்கி பிறகு அடிச்ச வெளிக்கு பெயிண்ட் அடிக்க வாகன பராமரிப்புக்கென்று புதிதான ஆர்வலர்களிடம் ஒரு ஐநூறு ஆயிரம் வாங்கி இப்பிடி படிப்படியா 2 வருடத்தில் இருபதாயிரம் முப்பதாயிரம் pounds ஐ வாங்காமல் எடுத்த எடுப்பிலேயே .... நீங்கள் இதுக்கு சரி வர மாட்டீர்கள்
  7. டெலோ அமைப்பிடமிருந்து விலகி தனித்து இயங்கத் தீர்மானித்த பிரபாகரன் கருனாநிதியுடன் கலந்துரையாடும் சிறி, பாலகுமார் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவினர் புலிகளையும் டெலோ அமைப்பையும் இணைத்து ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் அப்போது நடந்துகொண்டிருந்தன. தங்கத்துரையும், குட்டிமணியும் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் டெலோ அமைப்பின் தலைவராக வந்திருந்த சிறி சபாரட்ணம், இந்த ஒன்றாக்கும் விடயத்தில் அதிக அக்கறை காட்டினார். இரு அமைப்புக்களினதும் வளங்களையும், திறமைகளையும் சேர்ப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தினை மேலும் பலப்படுத்தவும் விரிவாக்கவும் முடியும் என்று அவர் கூறினார். ஆனால், புலிகளின் மூத்த உறுப்பினர்களால் இரு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவது, புலிகள் இயக்கத்தின் வரலாற்றை அவர்கள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இரண்டாவது, புலிகள் இயக்கம் தனதே என்று ஒருமுறை உரிமை கோரிய உமா மகேஸ்வரன் இந்த ஒருங்கிணைப்பு விடயம் தெரியவருமிடத்து, மீண்டும் தனது உரிமை கோரலை கொண்டுவரலாம் என்று அவர்கள் கூறினர். புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்களின் ஆட்சேபணைகள் சிறி சபாரட்ணத்தை எரிச்சலடைய வைத்திருந்தன. ஆனாலும், அமைப்புக்கள் இரண்டையும் இணைக்கும் தனது விருப்பத்தை அபோதைக்குத் தள்ளிப்போட அவர் இணங்கினார். ஆனால், அந்த இணைக்கும் செயற்பாடு இறுதிவரை நடைபெறாமலேயே போய்விட்டது. ஏனென்றால், 1982 ஆம் ஆண்டி நடுப்பகுதியில் டெலோ அமைப்புடன் சேர்ந்து இயங்கும் தனது நடைமுறையைக் கைவிட்ட பிரபாகரன் தனித்து இயங்க முடிவுசெய்தார். பிரபாகரனின் இந்த முடிவிற்கான காரணங்களை பேபி சுப்பிரமணியம் பின்வருமாறு விளக்கியிருந்தார். ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் தொடர்ச்சியான விதண்டாவாதங்களை நடத்துவோர் குறித்து போதிய அனுபவங்களைப் பிரபாகரன் கொண்டிருந்தார். செயலில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த பிரபாகரன் விதண்டாவாதம் நடத்துவோரால் செயல்கள் தாமதிக்கப்படுவதோடு சிலவேளைகளில் அவற்றுக்கான சாத்தியங்களே இல்லாமலாக்கப்பட்டுவிடுவதாக உணர்ந்தார். ஆகவேதான் ஒரு அமைப்பிற்கு ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். பல விடுதலைப் போராட்டங்களை கற்று உணர்ந்துகொண்ட அவருக்கு அதுவே சரியான முடிவாகவும் தெரிந்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றிபெறவேண்டும் என்பதே அவரது இலட்சியமாக இருந்தது. ஆகவே, இந்த இலட்சியத்தை அடைவதற்கு தனது தலைமையின் கீழ் விசுவாசமான விடுதலைப் போராட்ட அமைப்பொன்று இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று தனது போராளிகளைப் பயிற்றுவித்திருந்தார் பிரபாகரன். அவர்களுக்கான காலையுணவு காலை 8 மணிக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலும் ரொட்டி மற்றும் தோசையே உணவாகப் பரிமாறப்பட்டது. அவ்வபோது இடியப்பமும் வழங்கப்பட்டது. தேங்காய்ச் சம்பல் அல்லது பருப்புக் கறியுடன் அவர்கள் தமது காலையுணவை உட்கொண்டார்கள். காலை 9 மணியளவில் போராளிகளுடன் பயிற்சிகளில் ஈடுபட்டுவிட்டு பாலசிங்கமும், அடேலும், பண்டிதரும் இன்னும் சிலரும் பிரதான வீதியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த பஸ் தரிப்பிடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அங்குவரும் அரச பேரூந்துகளில் ஏறி போரூர் சந்தைக்குச் சென்று, அன்றைக்குத் தேவையான உணவுப்பொருட்கள், மரக்கறி வகைகள், மீன் ஆகியவற்றை வாங்குவது அவர்களுக்கிருந்த பணி. பேரம்பேசலில் ஆர்வம் கொண்ட பாலசிங்கமே பொருட்களை விலை பேசுவார். அவர் எப்போதும் நல்ல மீன்களை மலிவான விலைக்கு வாங்கிவிடுவதாக அடேல் குறிப்பிடுகிறார். பின்னர், அவர்களுக்கான சோறும் கறிகளும் சமைக்கப்படும். அனைவரும் சமைக்கவேண்டும் என்பது பிரபாகரனின் கட்டளை. ஆகவே எல்லோருமே சமைக்கத் தொடங்கினார்கள். ஆனால், பண்டிதரே சமையலில் கெட்டிக்காரராகத் திகழ்ந்தார். ஆகவே, அவரையே பிரதான சமையல்க் காரராக அவர்கள் நியமித்தார்கள். பாலா மிகவும் சிக்கலான மீன்களைக் கழுவி வெட்டும் பணியை எடுத்துக்கொள்வார். அவரது வேலை முடிந்தவுடன், சமையலறையில் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரசிமூட்டைகளின் மேல் அமர்ந்துகொண்டு நகைச்சுவையாகப் பேசுவது அவரது வாடிக்கை. அடேலுக்கு அன்று தமிழ் பெரியளவில் தெரிந்திருக்காவிட்டாலும் கூட, அவர்கள் அனைவரும் சிரித்த விதத்தைப் பார்க்கும்போது நிச்சயமாக அது வயதுவந்தவர்களுக்கான நகைச்சுவையாகவே இருக்கும் என்பதை ஊகித்துக்கொள்வார். அடேல் சிறிய வெங்காயங்களை வெட்டிக் கொடுப்பார். பண்டிதரின் விருப்பத்திற்கு ஏற்ப ரகு மரக்கறிகளை வெட்டிக் கொடுப்பார். ரகுவின் பணிகளுக்கு சங்கர் ஒத்தாசை புரிவார். நேசன் தரையில் இருந்து தேங்காய்களைத் திருவிக் கொடுப்பார். சிறி இறைச்சிக்கறியைச் சமைப்பார். ஒவ்வொரு தடவையும் கோழி இறைச்சி சமைக்கப்படும்போது பிரபாகரனும் சமையலில் இறங்கிவிடுவார், ஏனென்றால் கோழிக்கறி அவருக்கு மிகவும் பிடித்த உணவுவகைகளில் ஒன்று. சமையல் முடிந்தவுடன், அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு தரையில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் அமர்ந்துகொண்டு உணவை உட்கொள்வார்கள். பண்டிதரோ அன்றைய செலவுகளைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருப்பார். மாலை வேளைகளில் சினிமாவுக்கோ அல்லது கடற்கரைக்கோ போவது வழக்கம். பிரபாகரனுக்கு ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது பிடித்திருந்தது, குறிப்பாக போர் சம்பந்தப்பட்ட படங்களை அவர் விரும்பிப் பார்த்தார். வெளியில் செல்லாத மாலை நேரங்களில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து இலங்கையிலும், இந்தியாவிலும் நடக்கும் அரசியல் மாற்றங்களைப்பற்றிப் பேசுவதுடன், தமது போராட்டத்தை நடத்தவேண்டிய முறைகள் பற்றியும் சிந்திப்பார்கள். அவ்வப்போது வெடித்துக் கிளம்பும் சிரிப்பொலிகளை வைத்து பாலா மீண்டும் தனது இரட்டை அர்த்தம் கொண்ட நகைச்சுவைகளை அள்ளிவிடுகிறார் என்பதை அடேல் புரிந்துகொள்வார். பிரபாகரனுக்கு சீட்டு விளையாட்டென்பது பிடிக்காத ஒரு விடயம். அமைப்பில் போராளிகள் சீட்டாட்டத்தில் ஈடுபடுவதை அவர் தடைசெய்திருந்தார். ஆனால், பிரபாகரன் வீட்டில் இல்லாத வேளைகளில் போராளிகள் சீட்டாடுவார்கள். ஆனால், அவர் திரும்பிவரும்போது போராளிகள் சீட்டாடுவதைக் கண்டவுடன் பாலாவைத் திட்டுவார். உங்களால் அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள் அண்ணை என்று அவர் கடிந்துகொள்வார். புகைத்தலும், மது அருந்துதலும் பிரபாகரனால் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. செலவுகளை எப்போதும் குறைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறும் அதேவேளை, தனது போராளிகள் நிறைவாக உண்டு பசியாற வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். "அவர்கள் தமது தாய் தந்தையரைத் திறந்து, வாழ்வின் சுகபோகங்களைத் திறந்து, மக்களின் விடிவிற்காகக் போராட வந்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சிறந்த உணவும் குறைந்தளவிலாவது வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்" என்று பிரபாகரன் அடிக்கடி கூறுவார். எவையுமே விணாக்கப்படுவதை அவர் அனுமதிப்பதிப்பதில்லை. ஒவ்வொரு போராளிக்குமான ஒருநாள்ச் செலவு பத்து இந்திய ரூபாய்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு போராளிக்கும் இரு சோடி ஆடைகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றை ஒவ்வொரு நாளும் கழுவி, தூய்மையாக அணியவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டார்கள். தமிழ்ப் புத்தாண்டிற்கும், தீபாவளிக்கும் போராளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அவர்களின் தலைமுடி நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்ததுடன், தினமும் சவரசம் செய்துகொண்டார்கள். தனது போராளிகள் இழிவான நிலையில் இருப்பதை பிரபாகரன் ஒருபோதும் விரும்பியதில்லை. சினிமாவுக்கான கைப்பணம் போராளிகளுக்கு வாரம் தோறும் வழங்கப்பட்டு வந்தது. ராகவன் பிரபாகரன், ரகு, ராகவன். பண்டிதர், சங்கர் மற்றும் பேபி சுப்பிரமணியம் ஆகியோர் கைத்துப்பாக்கிகளைத் தம்முடம் எப்போதும் வைத்திருந்தனர். அவர்களிடம் வேறு பெரிய துப்பாக்கிகளும் இருந்தன. புலிகள் அமைப்பில் முதன் முதலாக துப்பாக்கியொன்றைக் கொண்டு திரிந்தவர் அடேல் பாலசிங்கம் தான். அவரது கைத்துப்பாக்கி எப்போதும் அவரின் கைப்பையில் இருக்கும். அடேலையும், பாலாவையும் பாதுகாக்க கைத்துப்பாக்கியை வைத்திருக்குமாறு அடேல் பிரபாகரனால் கேட்கப்பட்டார். ஆனால், பாலா ஒருபோதுமே ஆயுதங்களைக் கொண்டு திரிந்ததில்லை. தனக்கு வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சி குறித்து தனது புத்தகத்தில் எழுதும் அடேல், தன்னை அவர்கள் சென்னையின் கரையோரப் பகுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறியிருந்தார். கடற்கரையோரத்தில் இருந்த சவுக்குக் காட்டுப் பகுதியில் இலக்குகள் அமைக்கப்பட்டு சூட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. ரகுவும் பண்டிதரும் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கொண்டுவருவார்கள். அவர்களின் ஆயுதங்கள் புதினத் தாள்களால் சுற்றப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருக்கும். அவை தானியங்கித் துப்பாக்கிகள். அடேல் முதலில் கைத்துப்பாக்கியை பயன்படுத்தப் பயிற்றப்பட்டார்.அவருக்கு துப்பாக்கிச் சுடுதலைக் கற்றுக்கொடுத்தவர் பிரபாகரனே. "முதலில் அவர் ஒருமுறை துப்பாக்கியை இயக்கிக் காட்டுவார். பிறகு அதனை என்னிடம் தருவார். எனக்கு அதனைச் சரியாகக் கையாள்வதில் பிரச்சினை இருந்தது. நான் இலக்கு நோக்கிச் சுட்ட ஆறு ரவைகளில் ஒன்று மட்டுமே இலக்கை அடைந்தது. பின்னர் தானியங்கித் துப்பாக்கிகளைச் சுட்டுப் பழகினோம். அது ஒரு அற்புதமான அனுபவம். தானியங்கித் துப்பாக்கியின் பின்னுதைப்பு நான் துப்பாக்கியைக் கைநழுவி விடுமளவிற்குப் பலமாக இருந்தது" என்று அடேல் கூறுகிறார். பிரபாகரனும் அவரது போராளிகளும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிகளின் பொழுது மிகவும் அவதானமாக இருப்பார்கள். துப்பாக்கிகளுக்கான ரவைகள் மிகவும் விலைமதிப்பானவை என்பதுடன், அவற்றினைப் பெற்றுக்கொள்வதும் கடிணமாக இருந்தது. ஒவ்வொரு ரவையும் இந்திய மதிப்பில் 25 ரூபாய்களாக இருந்ததுடன், ஒவ்வொரு போராளிக்கும் ஒரு வாரத்திற்கே இரு ரவைகளே பயிற்சிக்காக வழங்கப்பட்டன. இது போராளிகளை மிகவும் கவனமாகவும், துல்லியமாகவும் தமது துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள ஊக்குவித்திருந்தது. இதிலிருந்தே பிரபாகரனின் ஆயுதங்கள் தொடர்பான கொள்கை பிறந்தது. எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தல் என்பதே அது. இதனை ஒரு மந்திரமாகவே தனது போராளிகளிடம் அடிக்கடி பிரபாகரன் கூறிவந்தார். "எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தெடுங்கள். ஒருபோதும் எதிரியிடம் உங்களின் ஆயுதத்தைப் பறிகொடுக்காதீர்கள். ஒரு சிறிய கைத்துப்பாக்கியைக் கூட எதிரியிடமிருந்து கைப்பற்றுவது மகிழ்ச்சியான விடயமே" என்று அவர் கூறுவார்.
  8. சுப்பிரமணியம் பிரபா சுமந்திரன் வலது கை எல்லோ.. கலியாண வீடெல்லாம் முன்னிண்டு நடத்தினவர் சும்ச்ந்திரன்.. பேஸ்புக்கில் மகா உத்தமன் வேடம்போடுவான் எல்லாரையும் குற்றம் சாட்டுவான்.. அவனை எல்லாம் நம்பி காசு அனுப்பின சுமேக்கு காலுக்கு கீழ அலம்பல் சுள்ளியால மனுசன்காரனும் மகளும் சுபிரமணி வீட்டுல வச்சு குடுத்திருக்கோணும்..
  9. 🙏KALIYUGAVARADHAN🙏 · Rejoindre Raji Raji · · நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன். மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர். தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் விரைவான மற்றும் சிறந்த சேவை... பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை கேன்ஸல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன். வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. எனவே உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார் என்றார். நான் அமைதி ஆனேன் பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 வெயிட்டர்ஸ் எனக்கு பறிமாறினார்கள். மிகவும் சுவையான உணவு நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர். அவர் என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார். எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்குமாறு சமையலறைக்கு அறிவுறுத்தினார். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள் அது தான் #வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள். உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே. அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்... கவலை கொள்ளாதீர்கள்... கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை தலைமை சமையல்காரர் கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும். பொறுமையாக நம் கடமைகளை சரி வர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் நாளை அப்போது அனுபவிக்கவும். நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது.......! 😂
  10. எனக்கும் விருப்பம்தான், ஆனால் இந்தக் கோடைகாலம் வந்ததால் நிறைய நிகழ்ச்சிகள் வரிசையாய் நிக்கின்றன அவை முடிய உங்களின் கோரிக்கை நிறைவேற்றப் படும்......! 😁
  11. கிருபண்ணை பகிடிக்கு சொல்லவில்லை நீங்கள் இறங்குவதென்றால் நானும் இறங்கத் தயார். சிங்கை டாலர்களில் தட்டிவிடலாம்
  12. எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇 யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉 @மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?
  13. கடற்போரிலும் கரும்புலி தாக்குதல் வடிவம் புகுத்தப்பட்டு சிறிலங்கா கடற்படைமீதான முதலாவது பாரியதாக்குதல் 10/07/1990 அன்று கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன்,கப்டன் கொலின்ஸ்,கப்டன் வினோத் ஆகியோரால் வல்வைக்கடலில் தொடக்கிவைக்கப்பட்டது.இதனால் கடற்போர் ஒரு புதிய பரிமாணத்துக்குள் சென்றது.
  14. பிரபாகரனைச் சந்தித்த இந்திய உளவுத்துறை, ரோ பாண்டிபஜார் துப்பாக்கிச் சண்டை தன் கையில் கிடைக்கப்பெற்றிருந்த அபரிதமான அதிகார பலத்தினைக் கொண்டு தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று ஜெயார் கங்கணம் கட்டியிருந்தார். ஆனால், இதைச் செய்த்வதற்கு அவர் பாவித்த கருவிகளான அரச பயங்கரவாதமும், மிதவாதிகளை ஓரங்கட்டும் செயற்பாடுகளும் அவரது நோக்கத்தை அடைவதில் தடைகளாக மாறியிருந்தன. பொலீஸாரும் ராணுவத்தினரும் தமிழர்மேல் மேற்கொண்டு வந்த அட்டூழியங்கள் அவர்களை அச்சப்படுத்துவதற்குப் பதிலாக தமிழர்களிடையே தைரியத்தையும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மனோவலிமையினையும் ஏற்படுத்தியிருந்தன. இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் செயற்பாடுகள் தமிழர்களை போராளி அமைப்புக்களை நோக்கித் தள்ளத் தொடங்கின. ஆரம்பத்தில் சிறிய உதவிகளைத் தமது போராளி அமைப்புக்களுக்குச் செய்வதில் ஆரம்பித்து, ஈற்றில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாதுகாவலர்கள் எனும் நிலைக்கு தமிழ் மக்கள் உயர்ந்தனர். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டத்தின்படி வழங்கவேண்டிய அதிகாரங்களையும், நிதியையும் வழங்க மறுத்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பலவீனப்படுத்த ஜெயவர்தன எடுத்த முடிவும் தமிழ் மக்கள் போராளிகளை நோக்கிச் செல்வதை மேலும் ஊக்குவித்திருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் செயற்பாடுகளினூடாக தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்த்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, அச்சபைகளின் செயற்பாட்டுத் தோல்வி பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருந்ததுடன், மக்களின் முன்னால் அவர்களின் நம்பகத்தன்மையினையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தது. அரசியலில் தமிழ் மக்கள் சார்பாக தாம் சாதித்தது எதுவுமே இல்லை எனும் கையறு நிலைக்கு முன்னணியை இச்சபைகளின் தோல்வி தள்ளிவிட்டிருந்தது. பொலீஸ் மற்றும் இராணுவத்தின் அழுத்தங்கள் புளொட் அமைப்பில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது உண்மையே. அவ்வமைப்பின் மரியநாயகம், கணேசலிங்கம், ரொபேர்ட், ஞானசேகரம், அரங்கநாயகம், அரபாத் ஆகிய உறுப்பினர்கள் பொலீஸாரினால் அந்நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அன்று, புளொட் அமைப்பினைக் காட்டிலும் சிறிய அமைப்பாக விளங்கிய புலிகள், பெரும்பாலும் தமது போராளிகளைத் தக்கவைத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. தலைவருடன், யோகரத்திணம் யோகி மற்றும் பின்னாட்களில் இந்திய உளவாளியாக மாறிய மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா கோபாலசாமி தமிழ் மக்களின் கலாசாரப் பொக்கிஷமான யாழ் நூலகம் சிங்கள அரசால் எரிக்கப்பட்ட துயர நிகழ்வை, கலாசாரப் படுகொலையை கண்ணுற்று, மிகுந்த வேதனையும், கூடவே வன்மமும் கொண்டு அங்கிருந்து இன்னும் 10 தோழர்களுடன் 1981 ஆம் ஆண்டு ஆனி 6 ஆம் திகதி தமிழ்நாடு நோக்கிப் பயணமானார் பிரபாகரன். தான் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் யாழ்க்குடா நாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா கோபாலசாமியை பிரபாகரன் அமர்த்திவிட்டுச் சென்றிருந்தார். தனது வவுனியா முகாமில் தங்கியிருந்த உமா மகேஸ்வரன், கிளிநொச்சி வங்கிக்கொள்ளையின் பின்னர் 20 தங்க நகைகள் கொண்ட பைகளையும் எடுத்துக்கொண்டு, இன்னும் நான்கு தோழர்களுடன் 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 25 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றார். சென்னையில் தங்கிக்கொண்ட அவர் தமிழ்நாடு கம்மியூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களூடாக தனக்கான வலையமைப்பொன்றினையும் ஏற்படுத்திக்கொண்டார். தனது நெருங்கிய சகாக்களில் பலர் தன்னை விட்டுப் பிரிந்து உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் இணைந்துகொண்டதால், பிரபாகரன் அன்று டெலோ அமைப்பினரோடு சேர்ந்தே இயங்கிவந்தார். 16 வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறிய பிரபாகரன், தனது வாழ்க்கையை முழுமையாகவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு அனீதா பிரதாப்புடனுனான அவரது செவ்வியில் தன்னை விட்டு விலகிச் செல்ல பலர் எடுத்த முடிவினை "துரோகம்" என்று அவர் வர்ணித்திருந்தார். கேள்வி : உங்கள் வாழ்க்கையில், உங்களை அதிகம் ஏமாற்றியிருந்த விடயம் எது? பிரபாகரன் : "அப்படியொரு தனியான விடயத்தை என்னால் துல்லியமாகக் கூறமுடியாது. ஆனால், மிகுந்த ஏமாற்றமளித்த விடயங்களில் ஒன்று, நான் நம்பியிருந்த, எனது இலட்சியத்தின்பால் பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொண்ட, எனது நெருங்கிய தோழர்களில் சிலர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றது. ஆனால், அவர்கள் ஈற்றில் சுயநலம் மிக்க சந்தர்ப்பவாதிகள் என்று தம்மை வெளிப்படுத்திக்கொண்டார்கள்". மதுரைக்குச் சென்ற பிரபாகரன் அங்கு முகாம் ஒன்றில் தங்கியிருந்தார். சென்னையின் மேற்குப்புறப் பகுதியான வளசரவாக்கத்தில் வீடொன்றினை வாடகைக்கு ஒழுங்குசெய்யுமாறு கிட்டுவையும் பொன்னம்மானையும் பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சில நாட்களின் பின்னர் அவ்வீட்டிலேயே அவர்கள் தங்கிக்கொண்டனர். அடேலும் பாலசிங்கமும் இதே பகுதியில்த்தான் தாம் இரண்டாவது முறை தமிழ்நாட்டிற்கு 1981 ஆம் ஆண்டு வந்தபோது தங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. "விடுதலை வேட்கை" எனும் தனது நூலில் எழுதும் அடேல் பாலசிங்கம், கிட்டுவின் இளமைத்தனமான குறும்புகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். "ஒருமுறை கிட்டு பிராமணரைப் போன்று வெண்ணிற மேலாடையும் கூடவே பூணுலும் அணிந்துகொண்டார். அதே ஆடையுடன் அசைவ உணவகம் ஒன்றிற்குச் சென்ற கிட்டு, அங்கே ஆட்டுக்கறியையும், பொறித்த கோழியையும் பலரும் பார்த்திருக்க ருசித்து உண்டார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த உணவக ஊழியர்களினதும், உரிமையாளரினதும் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தன" என்று எழுதுகிறார். புலிகளின் புகழ்பூத்த யாழ்மாவட்டத் தளபதி - கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார் புலிகளின் வளசரவாக்கம் வீட்டில் தங்கியிருந்த போராளிகள் பற்றிய பல சுவாரசியமான விடயங்களை அடேல் எழுதியிருந்தார். 1976 ஆம் ஆண்டு, பிரபாகரன் புலிகள் அமைப்பை உருவாக்கிய காலத்தில் அவருடன் இணைந்துகொண்டவர், இன்று வன்னியில் கல்விக்குப் பொறுப்பாக இருக்கும் பேபி சுப்பிரமணியம். மிகவும் மென்மையானவராகவும், மற்றையவர்களைப் பற்றி புரணி கூறும் தன்மையற்றவராகவும், அதிகாரப் போட்டியில் நாட்டமில்லாதவருமாக விளங்கிய பேபி சுப்பிரமணியம், மிகுந்த அறிவாற்றலைக் கொண்டிருந்தார். புலிகளின் விடுதலைப் போராட்டம் பற்றியும் ஏனைய போராட்டங்கள் பற்றியும் பல தகவல்களை தன்னிடம் கொண்டிருந்த அவரை நடமாடும் தகவற் களஞ்சியம் என்றே எல்லோரும் அழைத்து வந்தனர்.ஒரு பழைய துணிப்பையினை தன்னோடு எப்போதும் காவித்திரியும் அவர், அதற்குள் பத்திரிக்கைகள் புத்தகங்கள் என்று போராட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களைக் கொண்டு திரிந்தார். சைவ உணவுகளை மட்டுமே உண்டுவந்த அவர், சிலவேளைகளில் சோற்றுடன் ஐந்து அல்லது ஆறு மோர் மிளகாய்களைக் கடித்துக்கொண்டே தனது உணவை முடித்துக்கொள்வார் என்று அடேல் எழுதுகிறார். பிரபாகரனின் மிகவும் நெருக்கத்திற்குரியவராக இருந்த இன்னொருவர் நேசன் எனப்படும் ரவீந்திரன் ரவிதாஸ். தனது மருத்துவக் கல்வியைக் கைவிட்டு விட்டு பிரபாகரனுடன் இணைந்துகொண்டவர் அவர். ஆனால், பிற்காலத்தில் இயக்கத்திலிருந்து விலகிச் சென்று தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருகிறார். திடகாத்திரமான உடலைக் கொண்ட அவர், தினமும் உடற்பயிற்சிக்காக அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு நாள் காலையுலும் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். பிரபாகரனின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவிருந்த ரகுவிற்கு ஷங்கர் உதவிவந்தார். ரகுவே பிரபாகரனின் தலைமை மெய்ப்பாதுகாப்பாளராக பல்லாண்டுகள் செயலாற்றி வந்தார். ஆனால், இயக்க விதிகளை மீறியதற்காக பின்னர் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். வளசரவாக்கம் வீட்டில் தங்கியிருந்த புலிகளின் உறுப்பினர்களில் பண்டிதரும் ஒருவர். கடுமையான ஆஸ்த்த்மா நோயினால் பாதிக்கப்பட்டபோதிலும், தனது அரசியல் நடவடிக்கைகளில் அவரது உடல்நிலை தாக்கம் செலுத்துவதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. புலிகளின் அச்சுவேலி முகாமை இராணுவம் 1985 ஆம் ஆண்டு தை மாதம் சுற்றிவளைத்தபோது, இராணுவத்துடனான மோதலில் பண்டிதர் வீரச்சாவடைந்தார். பின்னாட்களில் டெலோ இயக்கத்தின் தலைவராக வந்த சிறி சபாரட்ணமும் இதே வளசரவாக்கம் வீட்டிலேயே தங்கியிருந்தார். புலிகளுக்கும் டெலோ அமைப்பிற்கும் இடையே அன்று ஏற்பட்டிருந்த இணக்கப்பட்டிற்கு அமைய சிறி அங்கு தங்கினார். இவ்வீட்டிற்கு பிரபாகரன் அடிக்கடி வந்துசெல்வார். தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் என்கிற அரசியற் கட்சியின் தலைவரான நெடுமாறனின் இரு சட்டசபை உறுப்பினர்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட விடுதிகளில் ஒன்றிலேயே பிரபாகரன் தங்கியிருந்தார்.
  15. பழிவாங்கும் குணம் கொண்ட கிழட்டு நரி ஜெயார் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகி பல வருடங்களுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் பத்திரிக்கையாளர் ரொஷான் பீரீசுடன் பேசும்போது ஜெயார், "சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது" என்பதைக் காட்டவே விஜய குமாரதுங்க கைதுசெய்யப்பட்டதாகக் கூறினார். "எனது மகனை சிறிமாவோ பண்டாரநாயக்கா கைதுசெய்து, சிறையில் அடைத்து வைத்ததுபற்றி நான் ஒருபோதும் பேசியது கிடையாது" என்று கூறினார். அவரது மகன் ரவி ஜெயவர்த்தன மக்கள் விடுதலை முன்னணியினரின் 1971 ஆம் ஆண்டுக் கலகத்தின்போது சிறிமாவினால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 80 களில் தமிழருக்கெதிரான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயாரின் ஒரே புத்திரன் - ரவி ஜெயவர்த்தன ஆனால், ஜெயார் தனது மகனின் கைதுபற்றி அவ்வப்போது பேசியே வந்திருக்கிறார். சிறிமாவின் சிவில் உரிமைகளைப் பறித்து, அவரது அரசியல் எதிர்காலத்தை ஜெயார் அழித்திருந்த நிலையில், அவரைச் சந்திக்கச் சென்றிருந்த அமரபுர நிக்காய பீடத்தின் பெளத்த பிக்குகளின் தலைவரான கொஸ்கொட தர்மவன்சவிடமும் இன்னும் சில பெளத்த பிக்குகளிடமும் பேசிய ஜெயவர்த்தன தனது ஒரே மகனை 1971 ஆம் ஆண்டு கைதுசெய்து சிறையிலடைத்த சிறிமா, தகரக் கோப்பையில் உணவு போட்டார் என்று வன்மத்துடன் கூறியிருந்தார். அப்படியானால், உங்களின் மகனின் கைதுக்காகவா நீங்கள் இன்று சிறிமாவைப் பழிவாங்குகிறீர்கள் என்று பிக்குகள் அவரிடம் வினவியபோது, ஜெயார் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், சிறிமாவின் மீதான கடும்போக்கைக் கைவிடுமாறு பிக்குகள் முன்வைத்த வேண்டுகோளினையும் ஜெயார் முற்றாக நிராகரித்து விட்டார். விஜய குமாரதுங்கவின் கைது கூட தனது மகனின் கைதிற்கான பழிவாங்கலாகவே ஜெயாரினால் செய்யப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதற்காக கார்த்திகை 2 ஆம் திகதி அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட நான்காவது திருத்தத்தினை பீலிக்ஸ் ஆர் பண்டாரநாயக்கவும், சி வி விவேகானந்தனும் உச்ச நீதிமன்றத்தில் அதன் நியாயத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியிருந்தனர். அரச தலைமை வழக்கறிஞர் இந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றுவதாகவும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாகவும் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற குழு, 4 இற்கு 3 என்கிற ரீதியில் புதிய திருத்தம்பற்றியோ அல்லது சர்வஜன வாக்கெடுப்புப் பற்றியோ தீர்ப்பளிப்பதற்கு ஏதுமில்லை என்று கைவிரித்து விட்டது. வி என் நவரட்ணம் 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 4 ஆம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்ப்பதென்று முடிவெடுத்தது. சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி. என். நவரட்ணம் தலைமையிலான உறுப்பினர்கள் இந்த முடிவில் தீர்க்கமாக நின்றனர். தனது தொகுதி வாக்களர்களின் ஆதரவின் மூலம் பதவிக்கு வந்த தான், தனது 6 வருட பதவிக் காலம் முடிவுற்றதும் தனது பதவியினை இராஜினாமாச் செய்யப்போவதாக அறிவித்தார். "தொடர்ந்தும் கதிரையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்" என்று அவர் கூறினார். அக்குழுவில் இருந்த சிலர், முன்னணி, எதிர்க்கட்சியுடன் இணைந்து சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்க்கவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து ஏற்கனவே ஒரு இணக்கப்பட்டிற்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில் ஜெயாருக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். ஆகவே, முன்னணியினரின் பாராளுமன்றக் குழு ஒரு சமரசத்திற்கு வந்தது. அதாவது, சர்வஜன வாக்கெடுப்பிற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் அதேவேளை, எதிர்க்கட்சியுடன் சேர்வதில்லை என்பதே அது. மேலும், 1983 ஆம் ஆண்டு ஆவணியில் முடிவிற்கு வரும் நடப்பு பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியிலிருந்து தாம் இராஜினாமாச் செய்வதாகவும் தீர்மானித்தார்கள். மேலும், தமது முடிவினை உறுதிப்படுத்தும் முகமாக அனைத்து முன்னணி உறுப்பினர்களும் தமது இராஜினாமாக் கடிதங்களை அமிர்தலிங்கத்திடம் கையளித்திருந்தனர். அதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பிற்க்நெதிராக முன்னணி கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடாது எனும் உறுதியையும் அமிர்தலிங்கத்திடமிருந்து ஜெயார் பெற்றுக்கொண்டார். ஜெயாருக்கு தான் வழங்கிய வாக்குறுதியின்படி அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் நடந்துகொண்டனர். அதன் மூலம் வடக்குக் கிழக்கிற்கு வெளியே இருந்த தமிழர்களின் ஆதரவு ஜெயாருக்குக் கிடைக்க ஏதுவாகியது. சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட அமிர்தலிங்கம், அதற்கெதிரான தமது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தார். ஆறு வருடங்களுக்கு மட்டுமே மக்கள் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 வருடங்களுக்குப் பதவியில் நீடிப்பது மனச்சாட்சிக்கு விரோதமானது என்று அவர் கூறினார். மேலும், தமது பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி தனது கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முதலாவது ஆயுட்காலம் முடிவடையும்போது ராஜினாமாச் செய்வார்கள் என்றும் அறிவித்தார். ஆனால், பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது அவரும், அவரது கட்சியினரும் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை. பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட பாராளுமன்றத்தை நீட்டிக்கும் பிரேரணை 142 வாக்குகளுக்கு 4 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தால் 1982 ஆம் ஆண்டு, கார்த்திகை 5 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அநுரா பண்டாரநாயக்க, ஆனந்த திசாநாயக்க, லக்ஷ்மன் ஜயக்கொடி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சியின் சரத் முத்துவெட்டுவே கம ஆகியோர் பிரேரணைக்கெதிராக வாக்களித்திருந்தனர். சர்வஜன வாக்கெடுப்பிற்கான திகதி மார்கழி 22 ஆம் நாளுக்குத் தீர்மானிக்கப்பட்டது. வாக்களர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட கேள்விகளாவன : நடப்பிலிருக்கும் பாராளுமன்றத்தை இன்னும் ஆறுவருடங்களுக்கு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதிவரை நீட்டிக்கவும், அத்திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துவிடவும் அனுமதி தருகிறீர்களா? சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிப்பதுகுறித்து வாக்காளர்களுக்கு அறிவுருத்தல் விடுக்கப்பட்டது. அதன்படி, பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க விரும்புவோர் விளக்குச் சின்னத்திற்கும், விரும்பாதோர் பானை சின்னத்திற்கும் புள்ளடியிடுமாறு கோரப்பட்டனர். விளக்குச் சின்னத்திற்கு ஆதரவாக ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்த அதேவேளை, சிறிமா தலைமையிலான எதிர்க்கட்சியினர் பானைச் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்தனர். சர்வஜன வாக்கெடுப்பிற்கான தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை கார்த்திகை மூன்றாம் வாரம் கொழும்பு, கொச்சிக்கடையில் ஆரம்பித்த ஜெயவர்த்தன, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் புதிய விடயம் அல்ல என்றும், இது 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிறிமாவோ மக்களின் விருப்பினை அறிந்துகொள்ளாமல், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1975 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை நிட்டித்தது போல அல்லாமல், தான் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தை நீட்டிக்க விரும்புவதாக ஜெயார் கூறினார். தனது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே தற்போதிருக்கும் பாராளுமன்றத்தை தொடர்ந்தும் பேண தான் விரும்புவதாக அவர் கூறினார். சிறிமா அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதால், அந்த வேட்பாளர்கள் தமது தகமையினை இழப்பார்கள் என்கிற தடை இருந்தபோதும், சிறிமாவோ இப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சியின் பிரதம பிரச்சாரகராகப் பங்கெடுத்தார். ஏனென்றால், இந்த சர்வஜன வாக்கெடுப்பில் வேட்பாளர்கள் என்று எவருமே இருக்கவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் பேசிய சிறிமா, "உங்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பமிருந்தால், நீங்கள் பானைச் சின்னத்திற்கே உங்களின் வாக்கினை வழங்க வேண்டும். எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்விற்காக நீங்கள் பானைச் சின்னத்திற்கே வக்களிக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். 1931 ஆம் ஆண்டிலிருந்து நாம் பேணிவரும் நடைமுறையினை இதன் மூலம் மட்டுமே நாம் பேணைக்காக்க முடியும்" என்று கூறினார். "பானைக்கு வாக்களிப்பதென்பது எந்தவொரு அரசியற் கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லத் எதிராகவோ வாக்களிப்பது என்று அர்த்தமாகிவிடாது. பானைக்கு வக்களிப்பதன் மூலம் 1931 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாக்கப்பட்டு வரும் நடைமுறையான பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்யும் உரிமையினை காப்பாற்றிக்கொள்வதாகும்" என்றும் அவர் கூறினார். சர்வஜன வாக்கெடுப்பு நடப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரவாளர்களைக் கவரும் விதமான வதந்தியொன்று கொழும்பில் வேண்டுமென்றே அரசால் பரப்பப்பட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும் முகமாக, அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவினால் அமர்த்தப்படப் போகிறார் என்பதுதான் அந்த வதந்தி. நான் அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்து நேரடியாகக் கேட்டேன், "குப்பை" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்த அமிர், அதனை முற்றாகவும் மறுக்க விரும்பவில்லை. "ஒரு வதந்தியை நான் எப்படி இல்லையென்று மறுக்க முடியும்?" என்று அவர் என்னைப்பார்த்துக் கேட்டார். நாடுபூராகவும் 5,768,662 வாக்காளர்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள். பதிவுசெய்யப்பட்ட 8,145,015 வாக்களர்களில் இது 70.82 வீதமாகும். மொத்தமாக 3,141,223 வாக்குகள், 54.45 வீதத்தினர் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க தமது விருப்பினைத் தெரிவித்திருந்தார்கள். 2,605,983 வாக்காளர்கள், 45.17 வீதத்தினர், பாராளுமன்ற ஆயுட்கால நீட்டிப்பிற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். எதிர்க்கட்சியினர் மீதான குண்டர்களின் வன்முறைகள், அச்சுருத்தல்கள் என்பவற்றுடனும், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகவும் நடத்தப்பட்ட இந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஜெயவர்த்தன 535,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, நாடு தழுவிய ரீதியில் வக்களித்தவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் குறைந்து காணப்பட்டது. ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் காட்டிய விருப்பைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்த 228,613 தமிழர் வாக்களர்களுடன் ஒப்பிடும்பொழுது, சர்வஜன வாக்கெடுப்பில் 290,849 தமிழ் வாக்களர்கள் யாழ்ப்பாணத்தில் வாக்களித்திருந்தனர். இவர்களுள் 260,534 வாக்களர்கள் பாராளுமன்றத்தை நீட்டிப்பதற்கு எதிராகவே வாக்களித்தனர். 25,312 வாக்களர்கள் பாராளுமன்றம் நீட்டிக்கப்படுவதை ஆதரித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் ஜெயவர்த்தனவுக்கு ஆதரவாக வாக்களித்த 44,780 தமிழர்களில் 19,000 தமிழர்கள் அவருக்கெதிராக சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர். இவ்வாறே, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வசித்துவரும் பெரும்பாலான தமிழர்கள் பாராளுமன்றத்தை நீட்டிக்கும் ஜெயவர்த்தனவின் விருப்பிற்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். வன்னி மாவட்டத்தில் 48,968 வாக்களர்கள் இல்லையென்றும், 25986 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் 51,909 வாக்களர்கள் இல்லையென்றும், 39,429 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 72,971 வாக்களர்கள் இல்லை என்றும், 47,482 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் 91,129 வாக்களர்கள் ஆம் என்றும், 62,836 வாக்களர்கள் இல்லையென்றும் வாக்களித்திருந்தனர். தனது விருப்பிற்கெதிராக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிந்தபோது, இயல்பாகவே பழிவாங்கும் குணம் கொண்ட ஜெயார் தமிழர்களுக்கொரு பாடத்தைப் புகட்ட வேணடும் என்று தருணம் ஒன்றை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார்.
  16. பாராளுமன்றத்தை நீட்டிக்க ஜெயார் தீட்டிய சதி அடுத்தபடியாக, தனது திட்டத்தை மக்களை ஏற்றுக்கொள்ளவைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார் ஜெயார். அரச ஊடகங்களான லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினி தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகியன ஜெயாரின் இத் திட்டத்திற்காக செயலில் இறக்கப்பட்டன. கார்த்திகை 2 ஆம் திகதி அவற்றிற்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தலின்படி மறுநாள் அரசால் வெளியிடப்படவிருக்கும் அறிவிப்புக்களுக்கு இவ்வூடகங்களின் நிகழ்ச்சி நிரலில் அதிமுக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படவேண்டும் என்று கூறப்பட்டது. கூறப்பட்டதன்படி, கார்த்திகை 3 ஆம் திகதி இந்த ஊடகங்களில் அதிர்ச்சிதரும் செய்தியொன்று வெளியானது. அந்த அறிவித்தல் ஜனாதிபதி ஜெயாரின் கையொப்பத்தோடு வெளிவந்திருந்தது. "1982 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 21 ஆம் திகதி எனக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தலைமை தாங்கியவர்களும், அக்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களுமான சிலர் என்னையும், அமைச்சர்கள் சிலரையும் மற்றும் திரு அநுர பண்டாரநாயக்க, பாதுகாப்புப் படைகளில் தலைமை நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளைப் படுகொலை செய்யவும், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைப்பிடிக்கவும் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, இவர்களின் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், இராணுவ ஆட்சியொன்றை நாட்டில் ஏற்படுத்தி, தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறியவாறு அரசியலமைப்பை முற்றாக நிராகரித்துவிடவும் இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்". "இந்தக் கயவர்களின் முயற்சி கைகூடுவதனை அனுமதிப்பதா அல்லது எனக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஜனாதிபதி எனும் அதிகாரத்துடன், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து நடத்திச்சென்று, மக்களுக்கான நற்திட்டங்களை தொடர்வதற்கான மக்கள் ஆணையினை பெற்றுக்கொள்வதா என்பதுபற்றி தீர்மானம் எடுக்கவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இக்கயவர்களை நான் பாராளுமன்றத்தில் நுழைய அனுமதித்தால், நடைமுறையில் இருக்கும் ஜனநாயக விழுமியங்களை இவர்கள் அழித்துவிட முயல்வதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நக்சலைட்டுக்கள் பாணியிலான அரசாங்கத்தையும் இவர்கள் உருவாக்கி விடுவார்கள்". "மேலும், ஜனநாயக வழிகளில் தொழிற்பட விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்குள் தமது அதிகாரத்தை மீளவும் நிலைநாட்டுவதற்கான கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நான் கருதுகிறேன்" "ஆனால், நான் இன்று பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றிற்குச் செல்லுமிடத்து, கடந்த ஐப்பசி 20 ஆம் திகதி நிலவரப்படி எனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 196 ஆசனங்களில் 120 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி 68 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். அது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால், எதிர்க்கட்சி ஒரு ஜனநாயகவிரோத, வன்முறையினை விரும்பும் நக்சலைட் அமைப்பாக இருப்பதை நான்விரும்பவில்லை. ஆனால், ஐப்பசி 29 இல் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அவ்வாறான வன்முறைவிரும்பும் ஜனநாயக விரோத அமைப்பாகவே இருந்தது. ஆகவேதான், பொதுதேர்தல் ஒன்றினை நடத்தி, வன்முறையாளர்களை பாராளுமன்றத்திற்குள் அனுமதிப்பதைக் காட்டிலும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தைத் தொடரலாம் என்கிற முடிவிற்கு நான் வந்திருக்கிறேன்" என்று ஜெயாரின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. நான் பணிபுரிந்த டெய்லி நியூஸ் பத்திரிக்கையும், ஏனைய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான தினமின, தினகரன் ஆகிய பத்திரிக்கைகளும் இந்த நக்சலைட் சதிபற்றி பிரச்சாரப்படுத்தி எழுதியதுடன், அச்செய்தினுள் சூட்சுமமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பிற்கான அவசியத்தையும் புகுத்தி செய்தி வெளியிட்டிருந்தன. டெய்லி நியூஸ் பத்திரிக்கை, "ஜனாதிபதியைக் கொல்லும் நக்சலைட் சதி முறியடிக்கப்பட்டது" என்று தலைப்பிட்டிருந்தது. ஹெக்டர் கொப்பேக்கடுவ 1982 குற்றவியல் விசாரணைத் திணைக்களம் இந்த நக்சலைட் சதிபற்றி விசாரிக்க அழைக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியிருந்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கணவருமான விஜய குமாரதுங்கவும் இன்னும் சிலரும் கைதுசெய்யப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேக்கடுவவும் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டார். விஜய குமாரதுங்க "கிழட்டு நரியொன்று தன்னையும் தனது கொலைகாரக் கூட்டத்தையும் தனது அரசியல் எதிரிகள் கொல்லத் திட்டமிடுவதாக தானே ஒரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றி வந்ததாம்" என்கிற வகையில் ஜெயாரின் பித்தலாட்டங்கள் குறித்து வதந்திகளும், நகைச்சுவைக் கதைகளும் கொழும்பின் அரசியல் வட்டாரங்களில் பரவி வந்தன. தனது சதிக் கோட்பாட்டை உண்மையென்று நிரூபிப்பதற்கு எதிர்க்கட்சியின் தலைமைப்பீடத்தின் சில பெயர்களையும் ஜெயார் வெளியிட்டார். மேலும், எதிர்கட்சியை வழிநடத்திய மேன்மைதங்கிய பெண்மணியும் கைதுசெய்யப்படவேண்டும் என்று அவர் கூறினார். தான் திட்டமிட்டபடியே சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பது உறுதிப்படுத்தப்படும்வரை எதிர்க்கட்சி மீதான கைதுகளையும், விசாரணைகளையும் ஜெயார் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். கொழும்பு அரசியலின் நகைச்சுவைகளுக்கு அப்பால், விஜய குமாரதுங்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் ஜெயாரின் சூழ்ச்சியைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார். ஆகவே அவரையும், அவர் சார்ந்தவர்களையும் கைதுசெய்து அடைத்துவைக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலகம் கடுமையான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த மாவட்ட மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. இவர்களும் கொலைச்சதி பற்றிக் கடுமையாக விசாரிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தேர்தல் நாள் கடந்து சென்றவுடன், இவர்கள் அனைவர் மீதிருந்த விசாரணைகளையும் பொலீஸார் நிபந்தனையின்றி கைவிட்டுச் சென்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.