Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33035
    Posts
  2. மலையான்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    177
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19125
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/01/24 in all areas

  1. நாங்களே துரோகிகளை உருகவித்து, உருவாக்கி, அதை அழிப்பதாக நினைத்து அதனாலேயே அழிந்தோம்............ மீண்டுமா.....
  2. மரண பலம் -----சுப.சோமசுந்தரம் சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர். ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட்டிக்காட்டிலா (!!!) பிள்ளையைச் சேர்ப்பாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து என்னை உரிமையுடன் தூக்கி வந்து பாளையில் அந்தக் காலத்திலேயே இருந்த கான்வென்ட்டில் சேர்த்துப் படிக்க வைத்தாள் என் ஆச்சி. நான் நானாக ஆனேன். அதனால் அவளிடம் பாசத்தில் கட்டுண்டே வாழ்ந்திருக்கிறேன். கடைசிக் காலத்தில் அவளைக் கவனிக்க ஆள் அமர்த்தியபோது, செலவுக்கு என்னிடம் அதிகம் வாங்கலாம் என்றும், "அவன் எனக்காக எதுவும் செய்வான்" என்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறாள். பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கு அவளது பிள்ளைகள் கடமைப்பட்டவர்கள். என்னைப் பாசத்துடன் குறிப்பிட்ட காலம் வரை வளர்த்ததற்கும், கடைசிக் காலத்தில் கூட என்மீது நம்பிக்கயை வெளிப்படுத்தியதற்கும் நானும் கடமைப்பட்டவன். எனவே நாங்கள் அவள் வாழுங்காலம் இயன்றவரை அவளைத் தாங்கிப் பிடித்தோம். ஆனால் நிறைய மனிதர்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தாள். மருமகள்களுக்குக் கொடுமையான மாமியாராகவே வாழ்ந்தாள். வேற்று மனிதர்களிடமும் ஓரளவு அப்படியே ! கடைசிக் காலத்தில் தன்னைக் கவனிக்க அமர்த்தப்பட்டவர்களைக் (caretakers) கேவலமாக நடத்தியதில் சுமார் பதினைந்து பேர்களை மாற்ற வேண்டியிருந்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. அவள் வாழுங்காலம் (காரணத்தோடு) அவளைத் தூற்றிய சிலர் அவளது மரணத்தில், "103 வயது ! கொடுத்து வைத்த ஆன்மா. அதிலும் ஏகாதசி அன்று இறந்ததால் வைகுண்ட பிராப்தி !" என்றெல்லாம் அவள் புகழ் பாடினார்கள். மனதுக்குள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டேன். எனக்கு அவள் நல்ல ஆச்சி. அவ்வளவே! அதற்காக அவள் நல்லவள், உத்தமி என்றெல்லாம் நான் பேசித் திரிந்தால் அது சுயநலமாகத்தானே முடியும் ! அல்லல் பட்டவர்களின் துன்பத்தை உணர்ந்து, பிறிதின் நோய் தந்நோயாகக் கொள்ளும் பக்குவம் எனக்கு வேண்டாமா ? மரணத்திற்கு மனிதனைப் புனிதனாக்கும் ஆற்றல் உண்டோ ? நகைச்சுவை நடிகர் முத்துக்காளை ஒரு படத்தில் சொல்வதைப் போல, முடிந்தால் நாமெல்லோரும் செத்துச் செத்து விளையாடலாமோ !
  3. இந்த அணிவகுப்பு மரியாதையை வழங்கியதனூடாக சிங்களம் தனக்கு ஒரு நண்பனை உருவாக்கியுள்ளது. கனடாத் தமிழர்களின் ஒரு பலமான ஆழுமையை துரோகியாக காட்டுவதனூடாக எம்மை நாம் பலவீனப்படுத்தும் செயலைச் செய்கிறோம். எதிரிகளை எப்படி எனது வழிக்குக் கொண்டுவரலாம் என்பதைத்தான் ஒரு புத்திசாலி யோசிப்பான். (சிங்களம் அதைத்தான் செய்கிறது ) இங்கே நாமோ, புதிது புதிதாக எப்படி எதிரிகளை உருவாக்கி எங்களை நாமே பலவீனப்படுத்தலாம் என்பதை யோசிக்கிறோம். எதிரிகளை எப்படி உருவாக்கி, தம்மைத் தாமே எப்படி அழித்துக்கொள்ளலாம் என்பதற்கு ஈழத் தமிழ் இனம் ஒரு மிகச் சிறந்த உதாரணம். 😏
  4. கனடா பல விதமான உதவிகளை பல நாடுகளுக்கும் செய்து தான் வருகிறது. தமிழ் அகதிகளை அரவணைத்துக் கொண்டு இன்னொரு பக்கம்.. தமிழினப் படுகொலையின் போதும் அது மறைமுகமாக பங்களித்துள்ளது. அது வேறு விவாதிக்கப்பட வேண்டிய விடயம். ஆமாம்.. அது தான் கனடாவில்.. சட்டரீதியாக்கிட்டாங்கள். சும்மா எல்லாம் அவிழ்த்துவிடக் கூடாது. சொறீலங்காவில் கஞ்சா வளர்க்க அமைச்சர் பரிந்துரைக்க.. சொறீலங்கா பொலிஸ் போதைவஸ்து கடத்திறவனை பிடிக்குதாம். போதைவஸ்து கடத்துவதே பொலிஸ். இதில...???! இவர் என்ன அறிவுரையை வழங்குவார்..??! இனப்படுகொலையின் அங்கமாகவும் ஆக்கிரமிப்பின் அங்கமாகவும் சொறீலங்கா பொலிஸ் இருக்குது. அதனை தவிர்த்து தமிழ் மக்களின் நலன் குறித்து பேச முடியாது. தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச உரிமையில் கூட.. பொலிஸ் அதிகாரங்களை தர மறுக்குது சிங்களம். இந்த இடத்தில் சொறீலங்கா பொலிஸுக்கு வெள்ளையடிப்பது.. அதுவும் ஒரு புலம்பெயர் கனடிய தமிழரை கொண்டு வெள்ளையடிப்பது தற்செயலானதல்ல. நன்கு திட்டமிட்ட செயல். தொங்க வேண்டிய இடத்தில் தொங்காமல் விட்டுத்தான்.. எமக்கான நீதி.. உரிமைகளை இழந்து நிற்கிறோம். அதே தவறை திரும்ப திரும்பச் செய்யக் கூடாது. தனிநபர்களின் போலிப் புகழ் தேடலுக்காக. அந்த பல நூறு வட்டங்களும் மாசுபட்ட ஒரு பொலிஸ் என்றால் அது சொறீலங்கா பொலிஸ். நான் சொல்லவில்லை.. ஆண்டு தோறும் வெளிவரும்.. மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சொல்கின்றன. அவர்களும் தேவை இல்லாத ஊஞ்சலாடினமாக்கும். உங்களுக்கு சொறீலங்கா பொலிஸூக்கு குஞ்சம் கட்ட வேண்டிய தேவை இருக்கலாம். நமக்கில்லை. தெரிகிறது... ஆனால் நிச்சயமா தெரியவில்லை. இதுவே போதும். அறியாமல் செய்கிறாங்கள் என்று சொல்லிவிட்டுப் போகலாம். அறிந்து செய்தாலும். ஆனால் இதுகள் சொந்த இனத்தின் இத்துனை துயர்களையும் அழிவுகளையும் கண்ட பின்னும்.. சொறீலங்கா பொலிஸில்.. உண்மையான நேர்மையான சர்வதேச தரத்திலான.. மாற்றங்களை கோராமல்.. போலிப் புகழ்ச்சி செய்து.. கேடயம் வாங்கிச் செல்வது எந்த வகையில்.. சொறீலங்கா பொலிஸ் தன் தரத்தை மேம்படுத்த.. தன்னை திருத்திக்க.. தன் தவறுகளுக்கு பொறுப்பேற்று குற்றவாளிகளை தண்டிக்க.. கப்பம் ஏவல் கொள்ளை கொலை..கடத்தலில் கூட்டுப் பங்காளியாக இருப்பதை விட்டொழிக்க தூண்டும்..??! இவை எதுவுமே நிகழாமல்.. சொறீலங்கா பொலிஸ் உருப்படுற மாதிரியே தெரியவில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பகிரங்க குற்றச்சாட்டுக்களை சுமக்கும் ஒரு கொடிய பொலிஸ் சேவைக்கு.. கனடா உதவுவது எந்த வகையில்.. கனடாவின் கொள்கைகளுக்கு அமைவாகும்.. இதை கனடாவிடம் கேட்க வேண்டிய ஒரு நபர்.. சொறீலங்கா பொலிஸூக்கு வெள்ளையடிச்சு கேடயம் வாங்கிச் செல்வதன் நோக்கமென்ன..??! சொறீலங்கா பொலிஸில் உள்ளவர்களில் பலர் குற்றவாளிகள். அவர்களை தண்டிக்காமல்.. நீதியின் முன் நிறுத்தாமல்.. சொறீலங்கா பொலிஸ் உருப்படாது. அதேபோல்.. சொறீலங்கா பொலிஸை அரசியலுக்கு அப்பால் கண்காணிக்கக் கூடிய சுயாதீன அமைப்புக்கள் இன்றி.. சொறீலங்கா பொலிஸ் உருப்பட வாய்ப்பில்லை. மாறாக.. சொறீலங்கா பொலிஸின் கடந்த கால நிகழ்கால குற்றங்களை மறைத்து குற்றவாளிக் குலாமாக இருக்கும் சொறீலங்கா பொலிஸுக்கு வெள்ளையடிப்பதால்.. எந்த மாற்றமும் வராது. அதேபோல்.. தமிழர் பிரதேசங்களில் இருந்து.. இனப்படுகொலையின் அங்கமான சொறீலங்கா பொலிஸ் வெளியேற்றப்பட்டு.. பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழீழ காவல்துறைக்கு ஒப்பான நேர்மையும் கண்ணியமும் கட்டுப்பாடும் செயல்திறனும் மிக்க ஒரு காவல்துறையை தமிழர் தரப்பு கட்டியமைப்பது அவசியம். தமிழர் பகுதி வாழ் முஸ்லிம்களும்.. சிங்களவர்களும்.. விகிதாசார அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும். இதனை கனடாவிடம்.. வலியுறுத்த துரையப்பாவின் எச்சங்கள் தயாராமோ..?!
  5. 2009 க்குப் பின் தமிழர்களுக்கு இதெல்லாம் தனிநபர் வியாபாரமாப் போச்சு. ஆளாளுக்கு சொறீலங்கா சிங்களவனின் காலில் வீழ்ந்து..சரணாகதி அடைவதெல்லாம்.. டிப்ளோமசி.. பாசிட்டிவ் திங்கிங். உங்கட சுமந்திரன் செய்யாததா.. கண்டது என்ன 15 ஆண்டுகள் கடந்து விட்டன. உங்கட சம்பந்தர் செய்யாததா.. 50/60 ஆண்டுகள் கடந்து விட்டன. உங்கட சி ரி சி ஈழத்துக்குள் இமாலயத்தை கொண்டு வரப் போட்டினம்.. பிரகடனம் என்னாச்சு.. பிரண்டு போச்சா. அடிப்படையில் எம்மவர்களுக்கு டிப்ளோமசி என்றாலே என்னென்று தெரியாது. எதிரியின் காலில் போய் நேரடியாக வீழ்வதும்.. அவனை பாராட்டி வியாபாரம் வாங்குவதும்.. கேடயம்.. விருது.. பத்திரமும் வாங்குவதென்றால்.. அது டிப்ளோமசி கிடையாது. டிப்பொசிட்.. இன் பின்.. தான். நீங்களும் சில பல ஆங்கிலப் பதங்களை எழுதி இவையை ஏதோ பெரிய வித்துவான்களாக காட்ட நினைக்கிறீர்கள்.. நிச்சயம் சிங்களத்தின் காலில் வீழ்ந்தோ.. முதுகை வருடியோ.. அவனை பாராட்டியோ.. உங்கட டிப்ளோமசி அமையும் என்றால்.. அதனை எத்தனையோ பேர் செய்து முடிச்சிருப்பினம். சிங்களத்திடம் அது சுய சலுகை வாங்கிப் பிழைப்பை ஓட்ட உதவலாமே தவிர.. தமிழ் மக்களுக்கு அணு அளவும் விமோசனம் வராது. இனியும் மக்களிடம்.... உங்களின் சொந்த சுயலாபங்களை இட்டான.. சிங்களவனிடம் சரணாகதி அடைவதை எல்லாம் டிப்ளோமசின்னு சொல்லிக்கிட்டு வராதீர்கள். ஹரி ஆனந்த சங்கரி.. கனடா எம் பி. உலகத்தமிழனத்துக்கு தலைவர் கிடையாது. அவரை மையப்படுத்தி.. தமிழர் உரிமை கோரலும் இல்லை. எனவே.. அவர் மக்களுக்கான.. நேர்மையான வழியில் செல்லும் வரை.. வரவேற்கப்படுவார். எதிரியின் போக்கில் போவதாக மக்கள் உணரும் பட்சத்தில்... மிச்சத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனந்த சங்கரி எடுத்துக்காட்டு.
  6. 1. நிஷான் துரையப்பா, 1973 இல் கொழும்பில் பிறந்து, கனடா சென்று, யூனிவர்சிட்டியில் இளமானியாகி, 1995 இல் பொலிஸ் கான்ஸ்டபிளாகி, பலவருட சேவையின் பின் 1.6 மில்லியன் மக்கள் வாழும் மிசுசுகா, பீல் பிராந்தியத்தின் பொலிஸ் தலைமை அதிகாரியாகியுள்ளார். 2. முன்னர் கனடாவில் தமிழ் குழுக்களை அடக்க, இலங்கை பொலிஸ் அதிகாரி, சுந்தரலிங்கம் என நினைக்கிறேன், உதவியை பெற்றது கனடா. இதுபோல் பொலிஸ் பிரிவுகள் தமக்கிடையே ஆட்களை, நடைமுறைகளை, தகவல்களை பரிமாறுவதும், விஜயங்கள் செய்வதும் வழமையே. இப்படி வரும் உயரதிகாரிகளுக்கு இப்படி மரியாதை கொடுப்பதும் வழமையே. 3. ஆனால் அல்பிரட் துரையப்பா - சரியாகவோ அல்லது பிழையாகவோ - தமிழின விடுதலை போரினை எதிர்க்கும் தமிழர்களின் முகமாக, தமிழர், சிங்களவரால் நோக்கப்படுகிறார். ஆகவே இந்த வகையில் இவரின் வருகை கூடிய முக்கியத்துவம் பெறுகிறது. 4. நிஷான் - இதுவரைக்கும் இந்த துறைசார் வருகையை மீறி எதுவும் சொல்லவில்லை. 5. பார்ப்போம். சொல்வதை, செய்வதை வைத்து இதில் நாம் முடிவு எடுக்கலாம். தனியே துறைசார் நடவடிக்கையுடன் மட்டுப்பட்டால் - அலட்டிகொள்ள வேண்டியதில்லை. இல்லை எனில் எதிர்வினையாற்றலாம்.
  7. இணையத்தில் வாசித்து, யூரியூப் காணொளிகள் பார்த்து பெற்ற தகவல்களின் பிரகாரம் இவர் பொலிஸ் துறையில் அதீத திறமைசாலிகளில் ஒருவர். இவரது பதவி இன்னும் ஐந்து வருடங்களுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டு உள்ளது. வட அமெரிக்காவில் பெரியதொரு பிரதேசத்து காவல்துறைக்கு பொறுப்பாக எங்களில் ஒருவர் உள்ளது எமக்கு பெருமையை அளிக்கும் விடயம் மட்டுமல்ல எமது துறைகளில் நாம் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய ஊக்குவிப்பும் ஆகும். பீல் என அழைக்கப்படும் பிரதேசத்துக்கு மட்டும் அல்ல ஒன்றாரியோ மாகாணத்தின் பொலிஸ் அமைப்புக்களின் தலைவரும் இவர் என கூறப்படுகின்றது. இப்படிப்பட்ட ஒருவருக்கு யாழ் யாழ் கருத்துக்களத்து ஜாம்பவான்கள் பாடம் எடுக்கின்றார்கள் என்றால்.. ஆஹா.. எந்தப்பக்கம் திரும்பி புளகாங்கிதம் அடைவது என தெரியவில்லை.
  8. 🤣 ஒருமுறை @அக்னியஷ்த்ரா எழுதினார். இப்பவே புலம்பெயர்ந்த பலரின் பிள்ளைகள் கலப்பினத்திருமணம். இன்னும் இரெண்டு சந்ததி போக புலம்பெயர் தமிழ் சமூகம், ஒரு கலவை கலரில், கலவை பண்பாட்டுடன், செம்பாட்டு தலையுடன் நிக்கும் என்று. அது உண்மை. அதில் தப்பும் இல்லை. இதுதான் காலம் எனும் காட்டாறின் நியதி. தாங்கள் வெள்ளைகாரன் நாட்டில் அவன் பாணியில் வாழலாம். அங்க செண்டை அடிச்சாத்தான் தப்பு🤣. நாகரும், இயக்கரும், வேடரும், இப்போ மலையாளிகளாய் போய் விட்ட சேரரும், சோழரும், பாண்டியரும், இப்படி பலரும் கலந்த சாம்பாருதான் ஈழத்தமிழர். இனங்களுக்கு தனிதுவம் இருக்கிறது. ஆனால் எந்த இனமும் இந்த உலகில் தனியாக, சுயம்பாக, கலப்பில்லாமல் இருந்ததில்லை. இனகுழுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று பண்பாட்டு கூறுகளை கடன் வாங்கி கொண்டே இருக்கும்.
  9. வாழிய வாழிய வாழியவே! --------------------------------------- யாழை நாம் மீட்டுவோம் யாவையும் தேடுவோம் காவியம் படைத்துக் கவிதையும் பாடுவோம் கதைகளும் எழுதுவோம் கருத்துப் படங்களும் வரைந்துமே கருத்துடன் மோதுவோம் புத்தியைத் தீட்டுவோம் கத்தியை ஏந்திடோம் சத்திய வேள்வியில் சரித்திரமானவர் நினைவொடு வருகின்ற ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று மகிழ்வோமே! களத்திலே இணைந்த நாம் முகங்களைப் பார்க்காது நலன்களைத் தேடிடும் நட்புகள் ஆகினோம் நாளையும் தொடருவோம்! மோகனத் திருமகன் செதுக்கிய யாழிலே நிழலொடு நியாயினி நுணாவிலாரொடு பலருமாய் இழுக்கின்ற தேரென யாழ்க் களமது யுகங்களைக் கடந்துமே வாழிய வாழிய வாழியவே! பிறக்கின்ற ஆண்டிலே கள உறவுகள் யாவர்க்கும் உளமொடு உடல் நலன் சிறப்புடன் மிளிர்ந்திட வாழ்த்துகின்றேன் வாழிய வாழிய வாழியவே!
  10. சிறிலங்கா இனப்படுகொலையரசையும், அதனை நிகழ்த்தி முடித்த இனக் கொலைஞர்களையும் காப்பதில் தமிழர்களும் அக்கறைகாட்டுவது ஒன்றும் புதிதல்ல. இனப்படுகொலை தொடங்கியகாலம் முதல் உள்நாட்டிலே சிங்களத்தைக் காத்த தமிழ்த் தரப்புகள் இருந்தன. அதே இனஅழிப்பைக் கரணியமாக முன்வைத்து புலம்பெயர்ந்த தரப்பிலும் சிறிலங்கா இனப்படுகொலையரசையும், அதனை நிகழ்த்தி முடித்த இனக் கொலைஞர்களையும் காப்பதற்கெனவும் தமிழர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானது அல்லவே. இந்தந் திரியிலே தலைப்புத் தொடர்பாகத் தொடங்கிப்பின் 'துறையப்பாவின் பேரன் யார்,, என நீண்டு விரிந்து துரோகியா, துரோகியில்லையா நாளைக்கு இன்னும் பலருக்குப்பட்டம் கொடுப்பீர்களா, அந்த விழாவுக்கு நாமும் வரலாமா என நீண்டு செல்கிறது. அதிற் தவறேதும் இல்லைத்தான். களமென்றால் கருத்தாடவும் குளமென்றால் நீந்தவும் வேண்டும்தானே. ஆனால், இங்கே நீந்துவதோடு சிறிலங்காவுக்குத் தங்கமுலாம் பூசலும் நடக்கிறது. துறையப்பா யார்? அவர்தொடர்பான வரலாற்றுத் தகவல் என்ன? தமிழருக் எதிராக என்ன செய்தார், என்பவற்றையும் தேடலாம் அல்லவா? நியாயப்படுத்துவதற்கான தேடலைப்போல், அவரது அநியாயங்களையும் தேடுவது நன்று என்பதே பொதுநிலைப் பண்பாக இருக்கமுடியும். சிறிலங்காவினது பிரதமாராக இருந்த சிறிமாவோவால் தமிழரது பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ் மண்ணிலே தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, உலகத் தமிழ் அறிஞர் பெருமக்களது பங்களிப்போடும், வருகையோடும் ஷஷஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,, நடைபெறுவதா(?) என்ற இனவன்மத்துடனான தடைகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்றதைப் பொறுக்காது சிங்களப் காவற்றுறையெனும் காடையரைப் பயன்படுத்தித் தமிழர்களை கொன்றதைத் தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்களின் நினைவாலயம் இன்றும் இருக்கிறது. (தெரியாதவர்கள் யாழ்ப்பாணம் சென்றால் பார்க்கலாம்.) ஆனால், கொலைஞர்கள் இன்னும் தண்டிக்கப்படவுமில்லை. சிங்களம் ஒப்புக்காவது வருத்தம் தெரிவித்ததும் இல்லை. இடங்களைக் கொடுக்க மறுத்து மாநாட்டைக் குழப்பியடித்து சிறிமாவோ அரசின் தமிழினக் கொலைக்கு உடந்தையாக இருந்த துறையப்பாவின் வம்சத்துக்கான நன்றிக்கடனோடு, தமக்கான வெள்ளையடிப்பையும் சிறிலங்காக் காட்டுமிராண்டிக் காவல்துறை மேலிடம் செய்கிறது. அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியிலே விசாரணைக்கென அழைத்துச் சென்று காவாலித்துறைக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி யாழிலும் இடம்பெற்றதாக நினைவு. ஒருவேளை இந்தக் படுகொலைகளை அறியாதவர்களுக்காக, ஏனென்றால் யாழ்பாணத்தில் அப்படியொரு படுகொலை நடந்ததா என்ற வினா எழும்பினாலும் ஆச்சரியப்படமுடியாதுபோல் தெரிகிறது. 1974.01.10 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைசெய்யப்பட்டோர்: 01) வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்) 02) பரம்சோதி சரவணபவன் (வயது 26) 03) வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32) 04) ஜோன்பிடலிஸ் சிக்மறிலிங்கம் (வயது 52 – ஆசிரியர்) 05) புலேந்திரன் அருளப்பு (வயது 53) 06) இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்) 08) இராஜன் தேவரட்ணம் (வயது 26) 09) சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்) 10) சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்) ஆகியோர் உள்ளடங்கலாகப் பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. படுகொலைக்குத் தலைமைதாங்கிய சிங்கள அதிகாரி, மேலதிகாரியாக அப்போதைய பிரதமாரான சிறீமாவோவால்(சிறிலங்கா சுதந்திரக் கட்சி) பதவி உயர்த்தப்பட்டார் போன்ற சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டதே சிறிலங்கா அரசும் அதன் காவல்துறையும் என்பதைத் தமிழினம் அறிந்ததே. இன்னுமொரு உண்மை தெரிந்தாகணும், அதாவது இவரது குடும்பத்தினர் 1974இல் ஏன் கொழும்பில் இருந்து அகதியாப் போனது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. யப்பானியர்களின் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கான காரணங்கள்
  12. திருவேட்கை by ப.தெய்வீகன் 01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட். வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்குட்டைகளை, அல்பேர்ட் ஒருபோதும் தொட்டறிந்ததில்லை. தந்தை மோர்கனின் கைக்குட்டையை எடுத்துப் பார்ப்பதற்கே அல்பேர்ட்டுக்குத் துணிவிருக்கவில்லை. ஒருநாளிரவு குளிர் மிகுந்திருந்தது. தணலடுப்பில் குளிர்காய்ந்தபடி புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த தாயிடம் அல்பேர்ட் கேட்டான். “அம்மா எனக்குமொரு கைக்குட்டை வேண்டும்” “என் வைரமே! கைக்குட்டையானது உனது பெருமைகளில் ஒன்று. நீ அடைய விரும்பும் உன்னதங்களில் முதன்மையானது. அதனை அணிந்து கொள்ள ஒரு மொழியிருக்கிறது. அது உன் வசப்படும் நாள் வரைக்கும் காத்திரு. இதன் மகத்துவம் இப்போதுனக்குப் புரியாது. அப்பாவும் நானும் அழகான கைக்குட்டையொன்றை உனக்குப் பரிசளிப்போம். அது வரை காத்திரு” என்றாள். ஆனால், இன்று கரோலினாவுடன் சந்தையில் நின்று கொண்டிருந்த அல்பேர்ட்டிற்கு வண்ணமான கைக்குட்டைகளையும், அதனை வாங்கி களிப்புறும் மக்கள் திரளையும் கண்டு மூச்சு வேகமானது. “என்னால் பெற இயலாத ஒன்றா இது?” என்ற கேள்வி எழுந்தது அவனுக்கு. அவனுக்குள் ஒரு தீ மழை இறங்கிற்று. தன்னுடைய சிறகுகளை விரித்துத் தாழப்ப றந்திறங்கும் கழுகின் மூர்க்கம் அவனுக்குள் அலகு தீட்டியது. வட்டத் தொப்பியணிந்து கைக்குட்டையை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வயோதிகனை இலக்கு வைத்தான். அவருடைய கையிலிருந்த கைக்குட்டையைப் பறித்துக் கொண்டு உயரப் பறக்கும் வேகத்தோடு ஓடி மறைந்தான். தன் குஞ்சைப் பறிகொடுத்த திகைப்போடு கழுகை விரட்டுபவளைப் போலவே கரோலினா, அல்பேர்ட்டை துரத்தினாள். “அல்பேர்ட் அல்பேர்ட்… ஓடாதே நில்லு” வீதியின் குறுக்காய் பாய்ந்து வந்த குதிரை வண்டியில் மோதி இடறி விழுந்தான் அல்பேர்ட். கரோலினா ஓடிச் சென்று அவனைத் தாங்கிப் பிடித்தாள். இருவரின் மூச்சிரைப்பும் வீதியில் கூடி நின்றவர்களை நோக்கி குற்றத்தால் அதிகரித்தது. அல்பேர்ட் தாழ்த்திய தனது முகத்தை நிமிர்த்தாமல் பூமியையே பார்த்தான். அதிவேகமாக வந்த கைக்குட்டை கடைக்காரன் கரோலினாவை முதுகில் உதைத்து விழுத்தினான். அல்பேர்ட் விசுக்கென ஓடித் தப்பித்தான். கரோலினாவும் கைக்குட்டையும் வீதியில் பேசு பொருளாகின. இரண்டு போலீஸார் கூட்டத்தை விலத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இரண்டு நாட்களிலேயே வோர்விக் நீதிமன்றத்தில் கைக்குட்டை திருடிய குற்றவாளியென கரோலினாவுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்வ வல்லமைகளாலும் தனது மகனைக் காப்பாற்றிய மோர்கன் குடும்பம் வோர்விக் நகரைவிட்டு வெளியேறினார்கள். குற்றத்தின் வேதனையில் நெளிந்தபடி அல்பேர்ட் தாயிடம் சொன்னான். “அம்மா, கைக்குட்டையைத் திருடியது நான்தான். இவர்கள் ஏன் கரோலினாவை தண்டிக்கிறார்கள்?” சுவாசத்தில் வெக்கையும் அவமானமும் இருந்தது. பிளவுண்ட தன்னுடைய சொற்களை நடுங்காமல் தொகுத்து, ஒரு சூரியோதம் போல புன்னகையோடு அல்பேர்ட்டின் தாய் சொன்னாள். “அவர்கள் ஏழைகள். தண்டிக்கப்படுவதற்காகவே பூமிக்கு வருகிறார்கள். நீ அவர்களைப் பற்றி கவலை கொள்ளாதே” அல்பேர்ட் தனது கண்களைத் தடாலென மூடிக் கொண்டு “கரோலினா என்னை மன்னித்துக் கொள்” என்றான். லண்டன் நீதிமன்றத்தில் ஐந்து வருடங்களுக்கு அதிகமாகச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் தனது காலனித்து நாடான ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு முடிக்குரிய பிரித்தானிய அரசு தீர்மானித்தது. கரோலினாவும் அவளது ஒரே மகனுமான டேவிட்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்கள். அழுகையை உண்டாக்கும் திகிலோடு காற்று மூச்சு வாங்கி பறந்து போனது. ஆயிரத்து நாநூற்றி எழுபத்து ஆறாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தாறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மழையும் காற்றும் மிரட்டியது. ஆனாலும் குற்றவாளிகளைக் கப்பலில் அனுப்பும் முடிவில் பிரித்தானியா தாமதிக்கவில்லை. கடலில் விழுந்து அழுகினாலும் கவலையில்லையென அதிகாரிகள் அறிவித்தனர். கைக்குட்டை திருடிய குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட நூறுபேர் உட்பட நூற்று நாற்பது குற்றவாளிகளுடன் “பிறின்ஸ் ஒவ் ஹம்ஷயர்” கப்பல் புறப்பட்டது. கரோலினா டேவிட்டை அணைத்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். விரிந்த கடலில் விழும் மானுடர் கண்ணீர் தனித்த கழிவு. 02 ஆஸ்திரேலியாவின் வன் டீமன் தீவுக் கரையைக் கப்பல் வந்தடைந்தது. கைதிகள் இறக்கப்பட்டார்கள். அந்நியத்தின் காற்று முகம் மோத கரோலினா மகனைத் தூக்கி வைத்திருந்தாள். குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படும் அநீதியின் துறைமுகமென காணும் வெளிமுழுதும் நீண்டிருந்தது. கரோலினாவின் கண்ணீர் கனத்து விழுந்த கப்பல் அலைகளில் நிதானமற்று ஆடியது. நீதியின் உப்பு பூமியில் மிஞ்சுமென்று அவளால் நம்ப முடியாமலிருந்தது. ஈரக்காடுகள் சூழ்ந்த மலையுச்சியில் உறைந்து கிடந்த சிறை. நூற்றுக்கணக்கான பெண் சிறைவாசிகளோடு அடைக்கப்பட்டாள். குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் பிரத்தியேக இடம். சுண்ணாம்பு சுவர்களாலான நீண்ட மண்டபத்தில் ஆடைகள் தயாரிக்கும் முழு நேர வேலை. ஏழு வருட தண்டனையை ஒவ்வொரு நாளாக எண்ணத் தொடங்கினாள் கரோலினா. பணியிடத்தில் அழுது அரற்றுபவர்களின் மேனியைச் சிறையதிகாரிகளின் கசையடிகள் ரத்தம் பார்த்தன. சிலர் மாதக் கணக்கில் இருட்டறையில் வீசப்பட்டார்கள். நீண்ட வெள்ளை துணிகளைத் தொட்டிகளில் முக்கியெடுத்து, சாயம் பூசுகின்ற வேலையைப் பார்த்து வந்தாள் கரோலினா. இழந்த வாழ்வின் வண்ணங்கள் எல்லாமும் கரைந்து போனதெனும் துயர் நுரைக்க கதறி அழுவாள். லண்டனில் கைக்குட்டை கடைக்காரன் தரையில் அழுத்தி விளாசிய அவமானச் சீழ் கொதித்து வலித்தது. தண்ணீர் கொண்டு வந்த வாகனத்துக்குள் பதுங்கி சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட பெண் கைதிகள் எல்லோர் முன்னிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். டேவிட்டை அணைத்த கரோலினாவின் கைகள் அச்சத்தில் நடுங்கின. நெஞ்சு அதிர்ந்தது. குற்றமே செய்யாமல், தண்டனைக்குள் தலை கவிழ்த்துக் கிடக்கின்ற பாரம். தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தாய்மையின் தவிப்பு ஓலமாய் அவளுக்குள் எரிந்தது. ஐந்து வருட சிறைத்தண்டனை பூர்த்தியானவர்களில் நன்நடத்தையின் அடிப்படையில் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் அவர்கள் விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கரோலினாவும் டேவிட்டும் விடுதலையாகியும் கொஞ்ச நேரம் சிறையின் முன்பாக அமர்ந்திருந்தனர். அவள் டேவிட்டின் மடியில் தலை வைத்து, வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணீர் பெருக்கில் அவனது கால்களை நனைத்தாள். “அம்மா, நாம் இப்போது குற்றமற்றவர்களா?” “டேவிட், எப்போதுமே குற்றமற்றவர்கள் நாம். ஆனாலும் எப்போதும் தண்டிக்கப்படுவோம்” என்றாள். “ஏனம்மா?” “பூமியில் நாதியற்றவர்களை இப்படித்தான் பாலைப் புழுதி மூடும்” என்றாள். டேவிட் கரோலினாவை முத்தமிட்டான். “பூமி நமக்கெனப் படைத்த குடிசையொன்றும் குற்றமற்ற சூரியனும் இங்கு இருக்கும். எழுந்து செல்வோம்” என்றான். 03 லீட் பகுதியில் குடியேறினார்கள். அருகிலிருந்த கிராமத்துப் பாடசாலைக்கு டேவிட்டை அனுப்பினாள். அங்கேயே ஒரு சிற்றுண்டியகத்தை வைத்துக் கொண்டாள். எல்லா விதமான பலகாரங்களையும் விற்று வருவாயை ஈட்டினாள். ஒரு நாள் அதிகாலையில் சமையல் கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கரோலினா மயக்கமாகி சரிந்தாள். பாத்திரங்களின் சத்தம் கேட்டு உறக்கம் விழித்த டேவிட் தாயின் மூச்சற்ற உடலைக் கட்டியணைத்தான். அவளது கால்களைத் தொட்டு அம்மாவென்று கதறினான். பூமி நன்றாக விடியும் வரை தாயின் கைகளைப் பற்றி வெறித்துக் கொண்டிருந்தான். குற்றமற்ற சூரியன் எழுந்து குடிலினுள்ளே ஒளி புகுந்தது. தாயின் பெருந்துயர் அவனுள் தகித்துக் குழம்பென உருப்பெருத்தது. நீதியால் வஞ்சிக்கப்பட்ட இனிமையான வாழ்வை இனி எவராலும் தர முடியாதென உணர்ந்தான். திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட தனது தாயின் அழிவிற்கு அவன் பதில் சொல்ல விரும்பினான். படிப்பை நிறுத்தினான். சிற்றுண்டியகத்தில் முழு கவனத்தையும் செலுத்தினான். முன்பிலும் பார்க்க பலர் உணவருந்த வந்தார்கள். தன்னிடம் ரொட்டியும் தயிர்க்கட்டியும் வாங்கும் அனைவருக்கும் இலவசமாக ஒரு கைக்குட்டையைக் கொடுக்கத் தொடங்கினான் டேவிட். தாயின் வாழ்விலிருந்து உதிர்ந்த வண்ணங்களை, ஒவ்வொரு கைக்குட்டைகளிலும் கோர்த்தெடுத்தான். இரவில் பல மணி நேரம் விழித்திருந்து கைக்குட்டைகளை உருவாக்கினான். அதன் பிறகு, காலையில் ரொட்டி செய்ய வேண்டிய மாவைப் பிசைந்து வைத்துவிட்டு, படுக்கைக்குப் போனான். டேவிட்டின் ரொட்டியைவிட, லீட் பகுதியெங்கும் அவனது கைக்குட்டையே பிரபலமானது. இலவச கைக்குட்டை பற்றிக் கேட்டவர்களிடம் தனது தாய்க்கு நேர்ந்தவற்றைச் சொன்னான். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிப் பெண்ணைப் பிரித்தானிய நீதிமன்றம் எவ்வாறு கடூழியச் சிறைக்குத் தள்ளியதென்ற சரித்திரம் லீட் பிரதேசத்தில் அனைவரிடமும் பரவியது. பாடசாலையிலுள்ளவர்கள் டேவிட்டின் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வருத்தம் தெரிவித்தார்கள். நீண்ட இரவுகளாய் தனித்திருந்து துயரத்தின் துணியால் அவன் கைக்குட்டைகளைச் செய்தான். “ உன்னுடைய அம்மாவின் பொருட்டு நீ கைக்குட்டைகளை வழங்கியது போதும்” என்றனர். “நான் கைக்குட்டையை உங்களிடம் தருவதாக நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நான் அளிப்பது, நீதியின் கறையால் அழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையை, அவளது மேன்மையைக் கருக்கிய ரத்தம் உலராத கொடுமையின் நான்கு மூலை கொண்ட நினைவுச் சின்னத்தை” டேவிட் சொன்னான். 04 இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டு இயேசு பாலன் பிறந்த அன்றைக்குத் தேவாலயம் ஒன்றின் முன்பாக டேவிட்டின் சந்ததிப் பேத்தியான மிஷேல் கைக்குட்டையை எல்லோருக்கும் வழங்கினாள். அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். சொந்த மண்ணில் யுத்தத்தினால் கசக்கி வீசப்பட்ட கைக்குட்டைகளைப் போல குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டார்கள். கரோலினாவைத் திருடியென வீதியில் அறைந்ததைப் போல, எங்களைத் தமிழர்கள் என்று கொன்று குவித்த தீவிலிருந்து வந்தடைந்தேன். மிஷேலும் நானும் முதன் முறையாகக் கலவியில் முயங்கி மீந்திருந்தபோது, அவள் சொன்னாள். “நானும் நீயும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும்போது பூமிக்கு நீதி திரும்பிவிடும்” “அப்படியான எந்த அசட்டு நம்பிக்கையும் எனக்கில்லை மிஷேல். பூமிக்கும் நீதிக்குமிடையே பெரும்பாழ் தோன்றிவிட்டது” என்றேன். “தளராதே, இந்தப் பூமிக்கு எங்கள் கைக்குட்டை நீதியை அழைத்து வரும் திலீபா. நான் கைக்குட்டையைக் கையளிப்பது போல, எனக்கு நீ குழந்தையை அளிக்க வேண்டும்” “மிஷேல். நீ என்ன சொல்ல வருகிறாய்” “நீ ஆயுதங்களாலும், கொடூர வஞ்சகங்களாலும் அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மிச்சம். கொல்லப்பட்ட குழந்தைகள். நாங்கள் கையளிக்கும் கைக்குட்டைகள் போல. இந்தப் பிரபஞ்சம் முழுதும் புலம்பெயரும் பறவைகள் கிளைகளில் அமர்ந்து பறப்பதைப் போல, ஆசுவாசம் கொள்ள எம்மிடமிருப்பது நினைவுகள் மட்டும் தான்” “எமக்குப் பிறக்கப் போகும் குழந்தை எப்படி நினைவாக இருக்கும்” “இருக்கும். நினைவு என்பது இறந்த காலத்தில் உறைந்தது மட்டுமல்ல. நிகழ்வதும் தான். நாம் வழங்கும் கைக்குட்டை நினைவா? நிகழ்வா? நீயே சொல்” அவளை இறுக அணைத்து முத்தமிட்டுச் சொன்னேன். “பூமிக்கு நீதி திரும்பிவிடும் மிஷேல். உன்னுடைய முப்பாட்டன் டேவிட் பிறந்ததும், அவனை நல்லூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்வோம்” “ஆனாலொன்று திலீபா. அவனை நாம் கடல் வழியாக அழைத்துச் செல்ல வேண்டும். சமுத்திரம் முழுதும் கைக்குட்டைகளை நிறைக்க வேண்டும்” என்றாள். “இங்கிருந்து போவதற்குச் சாத்தியமில்லை. அங்கிருந்து வேண்டுமானால் கடல் வழியாக வந்துவிடலாம்” “அது எப்படி” “அகதிகள் வருவார்கள் அல்லவா” கடல் முழுதும் அகதிகள் படகுகளில் கையசைத்து ஆஸ்திரேயாவின் கடற்கரையில் கரையொதுங்கினார்கள். மிஷேல் சொன்னாள் “ அவன் வந்திறங்கியிருப்பான். வா சென்று பார்க்கலாம்” “ஆர்?” “எங்களுடைய பிள்ளை” என்று சொல்லி கட்டி அணைத்தாள். எனக்குள் ஒரு கடல் அந்தியொளியில் அலையற்று அசைந்தது. https://vallinam.com.my/version2/?p=9442
  13. வணக்கம்...உறவுகளே. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இலங்கைப் பொலிசுக்கோ,ஆமிக்கோ ,ஏன் சனதிபதிக்குக்கூட .. வேலையில்லை என்றுதான் கருதவேண்டிக்கிடக்கு....தமிழகத்தில் சிறுவர் பாட்டுப்போட்டியில் வென்ற கில்மிச்சவுக்கும்,வெல்லாத அசானிக்குமே...கேடயம் கொடுக்கிற நிலமையில் நாடு இருக்குது..சனாதிபதி போன் எடுத்து வாழ்த்திகிறார்...இப்படியிருக்க ஒரு நகரசபை பொலிசு அதிகாரி ...நாட்டிற்குப் போனால் என்ன செய்வினம்....அவர் சொந்தலீவிலை போனாரோ,சொந்தங்களை பார்க்கப் போனாரோ தெரியாது...எப்படா...எங்கை யாரைபிடித்து எம்மை தூயவனாக்குவம் என்று திரயிறவைக்கு ...கனடா பொலிசு மாட்டிவிட்டார்...இந்த கேடையம் கொடுத்த தென்னக்கோனே ..அங்கு நடைபெற்ற சர்ச் தாக்குதலில் குற்றவாளீ...றணிலின் தயவால் ஒரு வருசத்துகு வேலை கிடைச்சிருக்கு...இப்போது அங்கு அரசியல் வறுமை ...அதற் குப் பிச்சைபோட ..தமிழர்தான் வேணும்...அங்கை போற எந்த தமிழனுக்கும் ஆலவட்டம் வீசுவினம்...இப்ப அது தொடர் கதை..அதை யாழில் லென்ஸ் வைத்துக் .. காட்டுகினம்
  14. ஒரு பச்சை மிளகாய் இரண்டாயிரம் ரூவாய் வித்தாலும் எங்கடை வீரன்கள் தோட்டப்பக்கம் போகான்கள். ஒன்லி கனடா இல்லாட்டி லண்டன் பக்கம் தான் அம்புக்குறி போட்டு வைச்சிருக்கிறாங்கள்.🤣 சில்லெடுத்த சின்னையா ஆதங்கம் 😎
  15. துரையப்பா அரசியல் ரீதியாக தமிழரசு கட்சிக்கு சவால், அதை அகற்ற பாவிக்கப்பட்டதுதான் துரோகி பட்டம். ஈழ தமிழர் அகராதியில் இருக்கும் அருவருக்கதக்க சொல் "துரோகி".
  16. யாழ்கள உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
  17. யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் 2024 ம் ஆண்டு இனிய புதுவருட வாழ்த்துக்கள்........! 💐
  18. எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை. பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம். இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை. சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள். வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது. அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர். டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது. உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை. உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.
  19. நானும் கனடாவில் இருப்பதனால்..2 உதாரணம் சொல்கின்றேன்..எனதுவீட்டு முற்றத்தில் நின்ற வாகனத்தின் பிற்பக்கத்தில் யாரோ இடித்து பாரிய சேதம்…என்னவென்று தெரியவில்லை…பொலிசுக்கு அறிவித்து ..இரு ஆபிசர்ஸ் வந்தினம் ..மிக இள ம் பையன்கள்.. ஒருவர் தமிழ்..இன்னொருவர் பாகிஸ்தான்….இவையை கண்டவுடன் ..அதிர்ச்சி..அந்த நம்ம அதிகாரி மகனின் வகுப்புத் தோழன் ..அத்துடன் எமதுவீட்டில் பிரத்தியோக பாடம் படித்த மாணவனும்…அப்ப நானும் மனுசியும் ..எமக்கு நீதி கிடைத்துவிட்டதுபோல் …மள மள என்றூ கொட்டித்தீர்த்தம்…எல்லாவற்றையு பொறுமையாக கேட்டுவிட்டு …அன்ரி..அங்கிள்..இதுவாகனம் சடுதியாக திருப்பும்போது ஏற்பட்ட அடி..நீங்கள் என்னதான் …ஆதாரங்கள் சொன்னாலும்..அதனை நாமும் எமது சட்டமும்தான் ..முடிவு செய்யும்…தனிப்பட்ட முறையில் என்னால் எதுவும் எதுவும் செய்ய முடியாது… இப்படித்தான்..சிறீலன்க சென்ற நம்ம அதிகாரியிடம் ..தென்னக்கோன் கொட்டித் தீர்த்திருப்பாரு.. குளிரவக்க கேடயமும் கொடுத்திருப்பார் அதிகாரி தம்முடைய நிலையைச் சொன்னாலும் இதை கீழிருந்துபார்த்த சிங்களப் பத்திரிகைக்காரரும் ..தம்முடைய கற்பனைக்கு எழுதிகிழித்திருப்பினம்..அதை அப்படியே ..யாழில் உள்ள சிரீலன்கா நலன்விரும்பிகள்… ..சீனாவும் தானாவும் ஒன்றாயிட்டினம் என்று பீத்துகினம் ஒருநண்பருக்கு ஏற்பட்டது…குடும்பத்தகராறு…பொலிசுவரை சென்று…கோட்சுவரை போயாச்சு.. லாயரை வைச்சாச்சு…..லாயர் யாரென்றால்..மகனுடன் படித்தவர்…நம்ம வீட்டிலும் வந்து படித்தவர்…அப்ப அந்த நண்பர் சார்பாக ..லாயரிடம் நானும் மனைவியும்… நண்பபரின் இக்கட்டான சூழ்நிலை பற்றி எடுத்துரைத்தோம்..அன்பாக கேட்ட லாயர்தம்பி….சொன்னது ..சூழ்நிலை விளங்குது..ஆனால் சட்டம் இடம்தராது….இப்படித்தான் .. நம்ம ஆபிசரும் எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்டிருப்பாரு…ஆனல் கனடாவில் சட்டத்தை மீறமுடியாதே…ஆனால் யாழில் பக்க வாத்தியாகாரர் தமக்கேற்றவாறு தாளத்தை மாற்றி…லங்கா மாதாவுக்கு…ஜெயவேவா போடவைப்பினம்
  20. இனவாத சிங்களச் சிறிலங்காவுக்கு தன்ரை நாட்டு பிரச்சனையை தானே தீர்க்க வக்கில்லை. இந்த திறத்திலை....... துரையப்பாவின்ரை பேரன் கேக்குதோ´?
  21. என்ர ராசாவுக்கு கிறிஸ்டி நல்லரெத்தினம் யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான இலைகளை தடவிக்கொடுத்தார் முருகேசர். ஊற்றிய நீரை உறுஞ்சிய தொட்டிமண்ணை விரலினால் கிளறி ஈரப்பதத்தை பரிசோதித்த திருப்தியுடன் வெற்று கிளாசை மேசையில் வைத்தார். அந்த அறையில் உயிர்ப்புடன் இருந்தது அவரும் அந்தச் செடியும்தான்! அவரது அறை அத்தனை பெரியது அல்ல. ஒரு கட்டில் மூலையில் அவரது உடமைகளையும் உடைகளையும் வைக்க ஒரு கப்போர்ட், சாய்ந்திருக்க ஒரு சாய்மனைக்கதிரை, சுவரில் பதித்திருக்கும் 15″ டி.வி, அதன் கீழ் ஒரு மேசை, மூலையில் உறங்கும் அவர் கைத்தடி, குளியலறையையும் டொயிலெட்டையும் இணைக்கும் ஒரு கதவு. இதுவே அவர் உலகம். ஒரு வயோதிபர் விடுதியில் இவைகளை விட வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஒரு மனிதன் மூப்படைய அவன் சஞ்சரிக்கும் பரப்பளவு குறைந்து கொண்டு போவது ஒரு சோகமான உலக நியதி. அந்த குறுகும் உலகைத் கூட கைத்தடி பிடித்து கடக்க வேண்டிய கட்டாயத்தையும் இறைவன் சமைத்துவைத்து விடுகிறான்! அவரின் அறையில் ஹீட்டர் வசதிகள் இருந்ததால், மெல்பேர்ன் குளிர் அவரை தீண்டவில்லை. ஒன்பது வருடங்களுக்கு முன் பெற்றோர் இணைப்பு விசாவில் வந்து சேர்ந்ததால் அவருக்கு ஆஸ்திரேலிய பிரஜைக்குரிய எல்லா வசதிகளும் உரிமையாகின. இளைய மகன் சபேசன் குடும்பத்துடன் எட்டு வருடங்கள் வாழ்ந்து, ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த ‘றிவ சைட் ஏஜ் கேர்’ வாசியானார். இந்த இடப்பெயர்ச்சிக்கு சபேசன் பல காரணங்களை சொன்னாலும், தனது எண்பத்தி ஏழு வயதும் ஒரு காரணம் என்பதை அவர் அறிவார். “அப்பு, இஞ்ச தனிச்சுப்போவியள். நானும் செல்வியும் வேலைக்கு போனாப் பிறகு நீங்க விழுந்து கிழுந்து போட்டியள் எண்டா ஆரு பாக்கிறது? அங்க உங்கள நல்லா பாத்துக்கொள்ளுவினம். உங்கள குளிப்பாட்ட, சாப்பாடு பருக்க செல்வியால ஏலாதுதானே? அங்க உங்களுக்கு எண்டு ஒரு அறை தருவினம். குளிப்பாட்ட கிளிப்பாட்ட அங்க கெயாறஸ் இருப்பினம். சொன்ன வேளைக்கு சாப்பாடு….வருத்தம் வாதை எண்டாலும் உடனே டொக்டர அங்கயே வருவிப்பினம். இஞ்ச நானும் செல்வியும் வேலைக்கு போனாப்புறம் நீங்க தனிச்சு போவியள். மகள் ஆர்த்தியும் யூனிவர்சிற்றியும் படிப்பும் எண்டு ஓடியபடியல்லோ இருக்காள்” என்று மகன் அடுக்கிய காரணங்கள் எல்லாம் அவருக்கு வெற்று வார்த்தைகளாகவே பட்டது. இதுவே இங்கு ஒரு நாகரீகமாய் போய்விட்டது. வெள்ளைக்காரனின் சமூக சடங்குகளை பிரதியெடுத்து வாழும் வாழ்வுதான் உயர்ந்தது எனும் ஒரு மனப்பான்மை நம்மவர்களுள் குடிகொண்டு செழித்து வளர்வதை முருகேசர் அறியாதவர் அல்ல. இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள் அது. மெல்பேர்ன் நகரின் வட-மேற்கில் இருக்கும் ‘சன்சைன் முதியோர் தமிழ் மன்றத்தின்’ மாதாந்த சுற்றுலா நாள் இன்று. இந்த ஞாயிறுகளில் ஒரு பேரூந்தில் வீடுகளிலும் முதியோர் இல்லங்களிலும் வாழும் மூத்தபிரஜை அங்கத்தினர்களை வந்து ஏற்றிக்கொண்டு ஒரு நாள் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் வந்து இறக்கி விடுவார்கள். முருகேசர் தவறாமல் கலந்துகொள்ளும் நிகழ்வு இது. முதியவர்களையும் சமுதாயத்தில் ஒரு துடிப்புள்ள பிரஜைகளாக வாழவைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் சமூகநல முயற்சிகளில் இதுவும் ஒன்று. பயணத்தின் போது வாய்க்கு ருசியான உணவு வகைகள் பரிமாறப்படுவதும் ஒரு விசேடம். யாழ்ப்பாணத்து கறித்தூளும் தாளித்த கருவேப்பிலையின் நறுமணமும் கட்லட், பற்றீஸ் என்ற பெயரில் பேரூந்தை நிறைக்கும். ஏஜ்ட் கெயாரில் பரிமாறப்படும் ‘வெள்ளைக்காரனின்’ உணவு வகைகளை விழுங்கி மரணித்த முருகேசரின் நாவு விழித்துக் கொள்ளும். “காஞ்சி போன ரொட்டி துண்டும் சூப்பும் இவரு டின்னர்” எனும் பாடலை ஞாபகமூட்டும் சாப்பாடு வகைகளை உண்டு அவருக்கு அலுத்துவிட்டது. இடையிடையே செல்வியின் சமையலை சபேசன் கொண்டுவந்து பரிமாறும்போது தான் இழந்தது உறவுகள் மட்டுமல்ல என்பதை எண்ணிக்கொள்வார். இன்று கடற்கரை விஜயம். அங்கு போகும் வழியில் ஒரு உள்ளூர் மார்க்கட்டுக்கும் அழைத்துச் செல்வதாய் அழைப்பு சொல்லிற்று. பேரூந்து கலகலவென்று சம்பாஷணைகளில் நிரம்பி வழிந்தது. தமது வலிகளையும் வாதைகளையும் பகிர்ந்து கொள்பவர்கள், தம் தனிமையையும் புறக்கணிப்புகளையும் மறைக்க கோமாளி முகமூடிகளை அணிந்த சில முகங்கள், ‘இன்னும் எத்தனை நாள் இப்படி’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் உருவங்கள், கடந்த கால இன்ப நினைவுகளை மீட்டெடுக்க தூண்டில் போடும் சில சிந்தனை முகங்கள், வழுக்கிச் செல்லும் நினைவுகளை வலிந்து பற்றி வார்த்தைகளாக்கி பகிரும் கதைசொல்லிகள் என பல வகை மூத்தோர் கூட்டம். அவர்கள் மாற்றியமைக்க நினைத்த உலகே அவர்களை சிறைப்படுத்தி வைத்த சோகம் பலர் முகங்களில் கோடிழுத்து நின்றன. முருகேசர் தன் சக பயணி நண்பரான துரைராஜாவுடன் அமர்ந்துகொண்டார். இருவருக்கும் உலக அரசியலில் ஈர்ப்பு இருந்தமையினால் அதுவே அவர்கள் உறவிற்கு பசையானது. அரைமணி நேரத்திலேயே பேரூந்து அந்த ‘சண்டே மார்க்கட்’ எனும் சந்தைக்கு வந்து சேர்ந்தது. “கெதியா இறங்கி பார்த்திட்டு வந்துருங்கோ…..வெய்யில் ஏற முன்னம் போகவேணும் கண்டியளோ” என்ற கட்டளைக்கமைய எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கினர். இந்த மார்க்கட்டில் உணவு வகைகள், தோட்டத்து காய்கறிகள், பழைய உடைகள், புத்தகங்கள், தோட்டவேலை செய்வதற்கான பாவித்த உபகரணங்கள், பூச்செடிகள், மற்றும் ‘தட்டு முட்டு’ சாமான்கள் என பலவகை பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அனேகமானவை பாவித்த பொருட்களும் ‘கராஜ் சேல்’ என்ற வீட்டு வாசல் விற்பனையில் மலிவு விலையில் வாங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டவை. முருகேசரும் துரைராசாவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களில் ஆர்வமின்றி நடைபயின்றனர். “அங்க பாத்தியளோ?….நம்மட ஊர் நடராசர் சிலை போல கிடக்குது. உது எங்க இஞ்ச வந்தது?” என்ற துரைராசாவின் கேள்வி முருகேசரின் கவனத்தை அந்த மேசையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த ‘தட்டு முட்டு’ சாமான்களுடன் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நடராசர் சிலை மேல் திருப்பியது. ஆம், அது உண்மையே. வெங்கலத்தால் செய்யப்பட்ட வட்டமான சிலை. நடராசர் நர்த்தனம் புரியும் சிலை வடிவம். அதைத் தூக்கி அதன் பின்புறம் ஒட்டியிருந்த வெள்ளை காகிதத்தில் எழுதியிருந்த விலையை பார்த்தார். $10 என்று எழுதியிருந்தது. “நல்ல வடிவான சிலை…. தனி வெங்கலத்தில செய்திருக்கினம்….. உதப்போல ஒரு சிலைய தேடித்திரியிறன்…. விலைய கேட்டுப்பாப்பம். $5 இற்குத் தருவானோ தெரியாது.” “ஓம், நல்லாத்தான் இருக்குது ….விருப்பம் எண்டால் கேட்டுப்பாரும்” என்ற துரைராசாவின் அங்கீகாரத்தால் உந்தப்பட்ட முருகேசர், மேசையின் மறுபுறம் நின்றவனிடம் தன் பேரத்தை வார்த்தைகளாக்கி “கான் ஐ ஹாவ் இட் ஃபோர் $5.” “நோ சேர்…. வட் எபவுட் $8 ? “ இது எட்டு வெள்ளிக்கு லாபமே என்பதை அவர் மனக்கணிப்பு சொல்லிற்று. பணம் கைமாற நடராசர் முருகேசரின் உடமையானார். x x x x x மாலை ஆறு மணிக்கு சுற்றுலா முடிந்து ஏஜ் கேருக்கு வந்து சேர்ந்த முருகேசருக்கு இரவு உணவு அவரது அறை மேசையில் தயாராக காத்திருந்தது. அவருக்கோ ஊர் சுற்றிய களைப்பு. ஒரு ‘காக்காய் குளியலுடன்’ தலையை துவட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்து தான் அன்று சந்தையில் வாங்கிய நடராசர் சிலையை கையிலேந்தி பழைய நினைவுகளில் மூழ்கினார். நினைவுகள், அவரும் மனைவி பாக்கியமும் இன்பமாய் கழித்த நாட்களுக்கு அவரை இழுத்துச் சென்றன. திருமணமாகி ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும். இருவரும் தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசிக்கும் எண்ணத்தில் திருச்சி வந்திறங்கி, பின்னர் சில திருத்தலங்களை தரிசித்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை வந்தடைந்தனர். ஆகம விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருந்த ராஜகோபுரங்களின் கம்பீரமும் அழகும் அவர்களை பிரமிக்கவைத்தது. கிழக்கே அமைந்திருந்த ராஜகோபுரத்தில் இருந்த நாட்டியத்தின் 108 கரணங்களை பிரதிபலிக்கும் சிற்பங்களை பாக்கியம் வியப்புடன் பார்த்து “உதுகளையெல்லாம் எப்படித்தான் கட்டியிருப்பினமோ?” என்று கூறி வியந்தாள். எல்லா சன்னதிகளையும் கோயிலின் தீர்த்தக்குளமான ஆனந்த தீர்த்தத்தையும் பார்த்தபின்பு, பிரகாரத்தை சுற்றி வந்து பூஜை செய்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்தனர். கோயிலின் முன்னால் இருந்த கடைவீதியில் பல விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தெய்வீக உணர்வில் திழைத்திருக்கும் பயணிகள் மென்மனதில் ‘வாழைப்பழத்தில் ஊசியாக’ வணிகம் சொருகப்படும் தலங்கள் இவை. அவர்களை கவர்ந்தது அழகான வெண்கல மற்றும் பித்தளை விக்கிரகங்கள் விற்கும் அந்தச் சிறிய கடை. “ஐயா….நல்ல டிசைன் சிலைகளுங்க. நாங்க வாங்கி விக்கிறதில்லீங்க…எல்லாம் எங்கட தயாரிப்புங்க… இங்க சிலைய வாங்குநாக்கா நாங்களே பிஃரீயா எழுத்த பொறித்துத் தருவமுங்க….வேற இடத்தில வாங்கினீங்க….. அதுக்கு வேறா சார்ஜு பண்ணுவானுங்க” என்ற கடைப்பையனின் விற்பனை மந்திரம் எந்த கஸ்டமரையும் கட்டிப் போட்டுவிடும். பாக்கியம்தான் சிலை வாங்குவதில் மும்முரமாய் இருந்தாள். “சும்மா காசப்பாக்கம ஒண்ட வாங்குவம். சாமி அறைக்கும் ஒண்டு வேணும். இஞ்ச வாங்கின ஞாபகமும் இருக்குமல்லோ….இல்லாட்டி பேந்து துக்கப்படுவம்” மனைவியின் கெஞ்சலுக்கு இளகிய முருகேசர், பாக்கியம் தெரிவு செய்த ஒரு நடராஜர் சிலையை வாங்கி அவள் கைகளில் திணித்து “சரி…சிலையில என்ன எழுதப்போறீர்?” என கேள்வியை தொடுத்தார். பிரபஞ்சத்தின் வட்டத்தினுள் நடராஜர் வலது கையில் அபய முத்திரையையும் இடது காலை உயர தூக்கியும் ஆனந்த தாண்டவம் ஆடும் உருவச்சிலை அது. முருகேசரின் கேள்விக்கு பாக்கியம் பதில் அளிக்கும் முன்பே இடையில் குறுக்கிட்ட கடைப்பையன் “என்ன பொறிச்சுத் தரணுமினு இந்த பேப்பர் துண்டில எழுதிக் தாங்க அம்மா….மிஸ்டேக் இல்லாம தமிழில எழுதித் தரணுமுங்க”. பேப்பரை வாங்கி பாக்கியம் ஒரு கண யோசனையில் பின் பேனாவால் “என்ர ராசாவுக்கு” என எழுதி பையனிடம் கொடுத்தார். அதை படித்த பையனின் முகம் கோணலானது. கண்களை குறுக்கி மூக்கை சுழித்து “அம்மா, ‘எனது ராஜாவுக்கு’ அப்படீணு சுத்த தமிழ்ல பொறிச்சி தரட்டுமா?” “ஐயோ வேணாம்…நீ ஒண்டும் மாத்த கீத்த வேணாம். அதயே பொறித்துத் தா” என்று ஒரு ரகசியத்தை கூறுவது போல் சொன்ன பாக்கியத்தின் முகம் பெண்மைக்கே உரிய வெட்கத்தால் சிவந்தது. குறும்புக்கார பையனின் கேள்வி தொடர்ந்தது. “அப்படீனா ராசாவுக்கு அப்புறம் ஐயாட பேர பொறித்……”. அவன் வார்த்தையை முடிக்கும் முன்னே இடைமறித்த பாக்கியம் “அது ஒண்டும் தேவையில்ல. நான் சொன்னத செய்…..அவர விட்டா எனக்கு வேறு யாரு ராசா?” என கூறிவிட்டு பையனிடம் அதிகப்பிரசங்கித்தனமாக பேசிவிட்டேனோ என்ற உணர்வில் நாக்கை கடித்துக்கொண்டார். கடைக்குள் வேறு சிலைகளை பார்த்துக் கொண்டிருந்த முருகேசரின் காதுகளுக்கும் மனைவியின் இந்த சம்பாஷணை எட்டாமல் இல்லை. பாக்கியத்தின் வார்த்தைகள் அவர் இதயத்தை நெருடிச் சென்று ஒரு இதமான இன்ப அனுபவத்தை விதைத்துச் சென்றது. இந்த மென் உணர்வுகளுக்கு மானுடர் எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் ஒரு கணவனை மனைவி அன்பினால் சிறைப்படுத்தி உரிமை கொண்டாடும் இத் தருணங்கள் புனிதமானவை. பண்பாடுகளும் கலாச்சாரங்களும் அந்த உணர்வுகளுக்கு வேலி அமைத்து மண்மூடி மறைக்க எத்தனித்தாலும் மண்ணை மீறிய விதைகளாய் அவை என்றும் ஏதோ ஒரு வடிவத்தில் புலப்பட்டு தன் உரிமைகளை மீட்டுக்கொள்ளும்! பாக்கியம் பதினைந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால் மறைந்த பின்பும் அந்த நடராஜர் சிலைக்கு சாமி அறையில் முதன்மை ஸ்தானத்தை அளிக்க முருகேசர் தவறவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த போதும் முருகேசர் கூட பயணித்து மகன் சபேசனின் வீட்டில் குடிகொண்டார் நடராஜர். ஒரு வருடத்திற்கு முன் முருகேசர் இந்த ஏஜ் ட் கெயாருக்கு வர பெட்டியை அடுக்கும்போது மகன் சொன்னது இன்னும் ஞாபகமே. “அப்பு, உதுகள எல்லாம் கட்டி சுமக்க வேணுமே? அங்க உங்கட அறையும் அப்பிடி ஒண்டும் பெரிசில்ல. இத இஞ்ச வச்சிற்றுப் போங்கோவன். நாங்க என்ன பாத்துக்க மாட்டமா?”. சபேசனின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தை அவர் புரிந்துகொண்டார். ஆனாலும் அவனுக்கு சிலையாக தெரிந்த நடராஜர் அவருக்கோ பாக்கியத்திடம் இருந்து புறப்பட்ட அந்தரங்க உணர்வுகளின் அடையாளம். பாக்கியத்துடன் வாழ்ந்த இன்ப நினைவுகள் அவர் மனதில் வரிசை கட்டி நின்றன. காலக் குடுவையின் சிறு துளையில் வடியும் மணல் பருக்கைகளாய் அவர் வாழ்வு மங்கிப் போய் கொண்டிருக்கும் இந்த முதிர் வயதில் அந்த இனிய நினைவுகளை மீட்டெடுக்கும் எந்த ஒரு சடப்பொருளும் அவருக்கு தோணியின் துடுப்பாய்ப் பட்டது. வாழ்க்கை எனும் வானத்தில் மிதக்கும் முகில் கூட்டங்களாய் அவரின் நினைவுப்பஞ்சுகள் மெல்ல மெல்ல அவரை விட்டு எங்கோ தூர ஓடி மறைகின்றன! நடராஜர் சிலையை கையில் ஏந்தியபடி கட்டிலில் அமர்ந்திருந்த முருகேசரின் கண்களில் பாசத்தின் ஊற்றாய் நீர் முட்டி கன்னங்களை நனைத்து சிறு துளிகளாய் சிலையில் விழுந்து தெறித்தன. சிலையில் பின்பகுதியில் ஒட்டியிருந்த $10 என எழுதியிருந்த காகிதத்தையும் நனைக்க அவை தவறவில்லை. அவரை அறியாமல் அவர் விரல்கள் சிலையில் ஒட்டியிருந்த அந்த காகிதத்தை சுரண்டி அகற்றியது. சிலையில் பொறித்திருந்த “என்ர ராசாவுக்கு” என்ற வார்த்தைகள் அவரைப் பார்த்து சிரித்தன! நடுங்கும் கைகளால் சிலையை மெதுவாய் உயர்த்தி நெஞ்சுடன் அணைத்த அவரின் வாயில் இருந்து “என்ர குஞ்சு” என்ற வார்த்தைகள் ஒரு மந்திர உச்சரிப்பாய் காற்றில் கலந்து மறைந்தன. https://solvanam.com/2023/12/31/என்ர-ராசாவுக்கு/
  22. நல்லதொரு கதை. நன்றி கிருபன்
  23. தமிழ்வின் தளத்தில் ஈ பி டி பி கட்சி தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். எனது அபிப்பிராயமும் தற்போதைய நிலமையில் ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதே நல்லது போல் தோன்றுகின்றது. ரணில் சிறந்த தெரிவு இல்லையாயினும் உள்ளவற்றில் இதுவே நல்லதாக தெரிகின்றது.
  24. இல்லையே.. சொறீலங்கா பொலிஸை சுத்தமென்றெல்லோ சொல்லி இருக்குது. உண்மையான ஒரு பொலிஸ் அதிகாரின்னா.. தனது நாட்டில் உள்ள பொலிஸ் விசேடங்களைச் சொல்லி.. அதனை உதாரணமாக்கி.. சொறீலங்கா பொலிஸ் துறை முன்னேற்றகரமாகவும்.. மனித உரிமைகளுக்கு.. மக்களின் உரிமைகளுக்கு கூடிய மதிப்பளித்தும் செயற்பட வேண்டும் என்று சொல்லி இருக்கனும். ஏனெனில்.. சர்வதேச அளவில் சொறீலங்கா பொலிஸ்படைக்கு எதிராக பல மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்களோடு.. போர்க்குற்றச் சாட்டும் உள்ளது. அப்படி இருக்க..?????!
  25. அப்போ.. துரையப்பா.. தமிழரசுக் கட்சிக்கு எதிராகத்தான் செயற்பட்டார். ஏனெனில்.. சொறீலங்கா சுதந்திரக் கட்சி ஆளாக. உரிமை கோரிய தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல...??! அப்போ துரையப்பாவுக்கு.. உலகத் தமிழாராட்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு.. காரணம்.. தமிழரசுக் கட்சி..???! துரோகி என்ற பதம் எல்லா நாடுகளினதும் வரலாற்றில் உள்ளது. துரோகத்தின் பெயரால்.. பிரித்தானிய முடிக்குரியவர்களை போட்டுத் தள்ளின வரலாறு கூட அவர்களின் வரலாற்றில் உண்டு. இப்படி எல்லா நாடுகளிலும் இருக்குது. துரோகிகளை துரோகிகள் என்று இனங்காண்பதில் எந்தத் தவறும் கிடையாது. மாறாக துரோகங்களை மக்கள் இனங்காணவும் தடுக்கவும் அது உதவலாம். உங்களுக்கு ஒவ்வாது விடில்.. ஒதுங்கி இருக்க வேண்டுமே தவிர.. மக்களை அழிக்க முற்படக் கூடாது. துரையப்பா செய்தது சொந்த மக்களை அழித்து தன்னை தன் பதவியை காத்துக் கொள்ள முனைந்தது.
  26. இவர் காலத்தில் எங்கள் உறவினர்கள் உட்பட பலர் சொறீலங்கா பொலிஸ் சேவையில் இருந்து சுயமாக விலகிச் சென்றார்கள். சொறீலங்கா பொலிஸின் தமிழர் விரோத.. தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரலை.. தவறாகக் கையாள ஆரம்பித்ததற்காக. ஆனால் அல்பிரட் துரையப்பா செய்தது... பேரினவாத.. அதிகார சிங்களத்தின் கட்டளைக்கு அமைய தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. இப்ப புரியுதா.. மக்களின் தாகம் எது என்று அறியாதவன்.. எப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்கலாம். சொந்த மக்களின் மீது அக்கறை இருந்திருந்தால்.. ஒரு பொலிஸ் அதிகாரி தானாக பதவி விலகும் போது.. ஒரு மக்கள் பிரதிநிதி என்ன செய்திருக்க வேண்டும்..??! அந்த மக்களை அதே பொலிஸை ஏவி அடக்குவதா..???!
  27. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய புது வருட நல்வாழ்த்துகள்.
  28. புதிய வரிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பலரும் குழம்பி கொண்டு உள்ளார்கள் இந்தநேரத்தில் ஏன் இந்த அணில் ஏன் கோமணம் இல்லாமல் வடக்கு பக்கமாய் ஓடுது ?
  29. 2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🎉🎉
  30. நான் ஏதோ சொல்ல விழைய நீங்கள் சாப்பாட்டில் வந்து நிற்கின்றீர்கள்.
  31. ஈழத்தமிழின துரோகிகளுக்கு இனவாத சிங்களம் செங்கம்பள வரவேற்பும் அரச மரியாதை வரவேற்புகளும் கொடுப்பது ஒன்றும் புதிதல்லவே. ஈழத்தமிழர்களே இனியாவது உங்களை சுதாகரிக்க தயாராகிக்கொள்ளுங்கள்.சிங்களம் தீயாய் வேலை செய்கின்றது.
  32. இனிய ஆங்கில.. நிர்வாகப் புத்தாண்டு (2024) வாழ்த்துக்கள்.
  33. கள உறவுகள் யாவருக்கும் 2024 இனிய புது வருடமாய் அமைய வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி மகிழ்வோடும் செல்வ வளமோடும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
  34. பெற்றோல் டீசல் மண்ணெண்ணை போன்றவை விலை ஏறினால் சகலதும் விலை ஏறிப் போயிடுமே?
  35. வார்டன் களத்தில இறங்கீற்றாரு! ஆனாலும் இணையம் விடாது கருப்பு....
  36. இந்திய தீபகற்பத்தின் கிழக்குக்கரையில், வட-கிழக்கு பருவமழையை நம்பி பயிர் செய்யும் பல்வேறு பட்ட மக்கட் கூட்டங்களுக்கு ஒரே சமயத்தில் விளைச்சல் திருவிழா harvest festival வருவது அத்துணை ஆச்சரியமான விடயம் அல்லவே. அத்தோடு வானசாஸ்திரப்படியும் சூரியன் இடம்மாறும் நாள் இது. பல்வேறு ஐரோப்பிய குடிகள்கூட, summer solstice, winter solstice, harvest festival ஐ ஒன்றாக கொண்டாடுவதை காணலாம். மனித குலத்தின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் வரலாறு மிக சிக்கலானது. காலத்தின் படி மாறககூடியது. தொடர்பு வெளி, உள் ஆளுமைகளால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும். களப்பிரர் காலத்துக்கு முந்திய தமிழர் பண்பாடு இப்போ இல்லை. அதை இப்போ கொண்டு வந்தால் யாழின் கலாச்சார காவலர்களுக்கு ஜன்னி கண்டு விடும்🤣. அதேபோல் இன்று எதை நாம் தமிழர் கலாச்சாரம் என கருதுகிறோமோ அது நாளை அப்படியே இருக்காது. எமது செண்டையை நாமே தொலைத்து விட்டு, இப்போ அது அந்நிய பண்பாடு என மாரடிக்க்கிறோம் - இதுவும் மேலே சொன்ன மாற்றத்தின் அங்கம்தான். இதை சொல்லியும் விளங்காவிடில் ஒரு விவேக் ஜோக்கை போட்டு கடந்து போகவேண்டியதே.
  37. கணேசதாசன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  38. கணேசதாசன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  39. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த அவைகளுக்குள் வாழ்ந்த காலங்களை இரைமீட்க முடிகின்றது.......! 👍 நன்றி கிருபன்......!
  40. சர்வகட்சி மாநாட்டு அழைப்பிதழில் ஜெயார் செய்த தில்லுமுள்ளும் அதிலிருந்து அவர் மீள செய்துகொண்ட பகீரதப் பிரயத்தனமும் சர்வகட்சி மாநாட்டிற்கு தனக்கு வந்த அழைப்பிதழில் இரண்டாவது இணைப்பாக வந்திருந்த விடயங்களைப் பார்த்தபோது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். உடனடியாக தில்லியில் இருக்கும் பார்த்தசாரதியுடன் தொடர்பு கொண்டார். அவருடன் சினத்துடன் பேசிய அமிர்தலிங்கம், "கிழட்டு நரி தனது வேலைகளை மறுபடியும் ஆரம்பித்து விட்டது" என்று பார்த்தசாரதியிடம் கூறினார். தனிநாட்டிற்கான கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்கிற கோரிக்கையினை முதலாவது கோரிக்கையாக ஜெயார் இட்டிருக்கிறார் என்று அவர் கூறினார். "போராளிகளை எமக்கெதிராகத் திருப்பிவிடவே இதனை அவர் செய்கிறார்" என்று அவர் கூறினார். மேலும், தில்லியில் தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை சர்வகட்சி மாநாட்டில் பேசப்படப்போகும் விடயங்களின் பட்டியலில் ஜெயார் சேர்க்கவில்லை என்பதையும் அமிர் பார்த்தசாரதியிடம் சுட்டிக் காட்டினார். ஜெயார் புதிய பரிந்துரைகளை தன்பாட்டிற்குப் பட்டியலிட்டிருந்தார். முத்தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை முழுவதுமாக மாற்றி, வலுவிழக்கச் செய்தே தனது புதிய பரிந்துரைகளை ஜெயார் வரைந்திருந்ததை அமிர் கண்டுகொண்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இணைப்பது தொடர்பாக தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதியில் இரு மாவட்ட அபிவிருத்திச் சபைகள், பொதுவாக எவ்வாறு இணைத்து பிராந்திய அலகாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது பற்றிப் பேசியிருந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்களின் சம்மதத்தினூடாகவும், அச்சபைகளில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினூடாகவும் அவை இணைத்துக்கொள்ளப்படலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு இச்சரத்தில் விதிவிலக்களிக்கப்பட்டிருந்தது. இந்த மாகாணங்களில் அமையும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் உறுப்பினர்கள் பதவி விலகுவதனால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஒன்று செயலற்றுப் போகுமிடத்து, அச்சபை அம்மாகாணங்களில் மீதமிருக்கும் சபைகளுடன் இணைத்துக்கொள்ளப்பட முடியும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், முன்னணியினருக்கு ஜெயார் அனுப்பிவைத்த அழைப்பிதழின் இரண்டாவது இணைப்பில் மேற்குறிப்பிட்ட விதிவிலக்கினை முற்றாக அகற்றியிருந்தார். மேலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையே நாடு முழுவதற்கும் அமுல்ப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தில்லியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை ஜெயார் மறுதலித்து, புதிதாக தனது திட்டங்களை அறிமுகப்படித்தியிருக்கும் சூழ்நிலையில் இதுகுறித்துப் பேசுவதற்காக முன்னணியினரை தில்லிக்கு வருமாறு பார்த்தசாரதி அழைத்தார். அன்று மாலையே தில்லிக்குப் பயணமான அமிரும், சிவசிதம்பரமும் பார்த்தசாரதியையும் நரசிம்மராவையும் மாலை சந்தித்ததுடன் அன்றிரவே இந்திரா காந்தியையும் சந்தித்தனர். ஜெயாரின் சூட்சுமம் பற்றிக் கேள்விப்பட்டபோது இந்திரா மிகுந்த கோபமடைந்தார். தனக்குக் கொடுத்த வாக்கிற்கு எதிராகச் சென்று, தன்னை ஜெயார் அவமானப்படுத்தியிருப்பதாக இந்திரா கருதினார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இதனைப் பார்த்துக்கொள்கிறேன்" என்று அவர் முன்னணியினரிடம் கூறினார். இந்திரா உடனடியாக இரு விடயங்களைச் செய்தார். அன்றிரவே, மார்கழி 30 ஆம் திகதி, ஜெயாரை தொலைபேசியில் அழைத்த இந்திரா ஜெயாரின் மாற்றத்தால் தமிழர்களும் முன்னணியினரும் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகக் கூறினார். இதனைச் சரிசெய்வதற்கு பார்த்தசாரதியை உடனடியாக கொழும்பிற்கு அனுப்பத் தான் எண்ணியுள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து தனது மந்திரி சபையில் பேசிய ஜெயார், பார்த்தசாரதியின் கொழும்பு வருகையினை தான் வரவேற்பதாக இந்திராவிடம் கூறினார். போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க முடிவெடுத்த இந்திராவும், அலட்டிக்கொள்ளத பிரபாகரனும் மறுநாள், மார்கழி 31 ஆம் திகதி தனது உயர்மட்ட அதிகாரிகளை தில்லியில் கூட்டமொன்றிற்கு அழைத்தார் இந்திரா. வெளிவிவாகர அமைச்சர் நரசிம்மராவ், வெளியுறவுச் செயலாளர் ரஸ்கோத்ரா, பார்த்தசாரதி, இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளும் காவோ, சங்கரன் நாயர் மற்றும் சக்ஸேனா ஆகியோர் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இரு முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. முதலாவது வெளிவிவகாரத்துறை தொடர்ந்தும் சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது. இரண்டாவது இலங்கை தொடர்பான தனது நடவடிக்கைகளை ரோ மேலும் விஸ்த்தரிப்பது. இரண்டாவது தீர்மானத்திற்கு அமைவாக ரோவிற்கு மேலதிக நிதி இலங்கை தொடர்பான விடயங்களை விஸ்த்தரிக்க ஒதுக்கப்பட்டது. மேலும், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்குமாறும் ரோ பணிக்கப்பட்டது. போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்க இந்திரா எடுத்துக்கொண்ட தீர்மானம் பற்றி போராளிகள் அறிந்துகொண்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமது அமைப்புக்களில் பயிற்சிகளுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்குமாறும் ரோவினால் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். போராளிகளுக்கு முதன்முதலாக இந்திய ஆயுதங்கள் வழங்கப்பட்ட நிகழ்வினை ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் இவ்வாறு பகிந்துகொண்டார். "நாம் மிகுந்த மகிழ்சிக்குள்ளானோம். நிலைமை மாறிவருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எல்லோருமே மிகுந்த மகிழ்ச்சியுடனும் , உற்சாகத்துடனும் காணப்பட்டார்கள்" என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்ட புத்தம்புதிய துப்பாக்கிகள் பெட்டிகளில் வந்திறங்கியதாகக் கூறினார். புலிகளும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. புலிகளின் மூத்த தலைவர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக, கிட்டு மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆனால், பிரபாகரனுக்கு இந்த ஆயுத வழங்கல் நிகழ்வு அதிகம் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கவில்லை. "நாம் எமக்கென்று சொந்தமாக ஆயுதங்களை வெளியே வாங்கத் தொடங்கவேண்டும்" என்று அவர் தனது போராளிகளைப் பார்த்துக் கூறினார். "ஏன் வாங்கவேண்டும், இந்தியாதான் எமக்குத் தேவையானளவு ஆயுதங்களைத் தருகிறதே?" என்று கிட்டு பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார். தனது முடிவிற்கு இரு காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன். "எமக்குத் தரும் ஆயுதங்களின் மூலமாக எம்மைக் கட்டுப்படுத்த இந்தியா முயலும். தனது கொள்கை முடிவுகளை எம்மைப் பாவிப்பதன் மூலம் இந்தியா அடைந்துகொள்ள நிச்சயமாக முயற்சிக்கும். அதாவது, நாம் எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைவதை இந்தியா தடுத்துவிடும்" என்று பிரபாகரன் கூறினார். இரண்டாவது காரணமாக பிரபாகரன் முன்வைத்த விடயம் தனித்துவமானது. "இந்தியா எல்லாப் போராளி அமைப்புக்களுக்கும் ஒரேவகையான ஆயுதங்களையே கொடுத்து வருகிறது. ஆனால், நாம் தனிச்சிறப்பானவர்களாகவும், மற்றைய அமைப்புக்களைக் காட்டிலும் திறமையானவர்களாகவும் திகழவேண்டுமானால், எமக்கென்று வேறு ஆயுதங்களை நாம் இப்போதே கொள்வனவு செய்துகொள்ளவேண்டும் என்று கூறினார். பிரபாகரனின் வாழ்க்கையில் முக்கிய மைல்க்கல்லாகக் கருதப்படும் 1984 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட இந்த தீர்மானம் அமைந்திருந்தது. இதுகுறித்து பின்னர் பார்க்கலாம். ஜெயாரின் சூட்சுமம் சர்வகட்சி மாநாட்டிற்கான அழைப்பும், அதனுடனான இணைப்புக்களும் கொழும்பில் வெளிவந்தன. இலத்தரணியல் சாதனங்களும், பத்திரிக்கைகளும் இச்செய்தியை வெளிக்கொண்டுவந்திருந்தன. சர்வகட்சி மாநாட்டின் செயலாளராக நியமிக்கப்பட்ட பீலிக்ஸ் டயஸ் அபயசிங்க மார்கழி 30 ஆம் திகதி பத்திரிக்கை அறிக்கையொன்றினை வெளியிட்டார். "இணைப்பு இரண்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவையும் அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த அரசியற் கட்சியினாலுமோ முன்மொழியப்பட்டவை அல்ல. சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்கள் மட்டுமே பின்னர் அரசாங்கத்தினாலும், ஏனைய கட்சிகளினாலும் கருத்தில் எடுக்கப்படும்" என்று அவ்வறிக்கை கூறியது. அபயசிங்கவின் அலுவலகம் கொழும்பிலுள்ள பத்திரிகைக் காரியாலயங்களைத் தொடர்பு கொண்டு தனது அறிக்கையினை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும், மாநாட்டிற்கான அழைப்பிதழையும், இணைப்புக்களையும் வெளியிட ஜனாதிபதி விரும்புவதாகவும் அலுவலகம் கூறியது. இந்திரா காந்தியின் தொலைபேசி அழைப்பினையடுத்தே தான் வெளியிட்ட இணைப்பின் சரத்துக்களை உடனடியாக இல்லையென்று மறுதலிக்கும் நிலைமைக்கு ஜெயாரையும் அவரது அரசாங்கத்தையும் தள்ளியிருந்தது. தில்லியில் இந்திராவுடனும், பார்த்தசாரதியுடனும் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டிலிருந்து தன்னை சாதுரியமாக விலத்திக்கொண்ட ஜெயார், இறுதியில் தன்னிச்சையாக வெளியிட்ட அழைப்பிதழின் இணைப்பில் குறிப்பிட்ட விடயங்களிலிருந்தும் தன்னை அந்நியப்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தில்லியில் தான் செய்துகொண்ட இணக்கப்பாட்டிற்கு பெளத்த பிக்குகளிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினையடுத்து அதிலிருந்து ஜெயார் பின்வாங்கி தன்னை அந்நியப்படுத்தியிருந்தார். தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் தான் கையொப்பம் இடாமையினால், அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்குக் கிடையாது என்று பெளத்தர்களிடம் அவர் கூறினார். ஆனால், தில்லி ஆவணத்தில் தானாகவே முன்வந்து கையொப்பம் இட ஜெயார் முயன்ற விடயம் வெளித்தெரிய ஆரம்பித்தபோது, "அது எனது பரிந்துரைகள் அல்ல, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரே அதனை முன்வைத்தனர்" என்று கூறி தப்பிக்க முயன்றார். தனது இரட்டை வேஷத்தை மிகவும் சாதுரியமாக 1984 ஆம் ஆண்டு சித்திரை 30 ஆம் திகதி இந்தியா டுடே சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியிலும் ஜெயார் கையாண்டார். ஜெயாரின் இரட்டை வேசத்தை சர்வகட்சி மாநாட்டில் போட்டுடைத்த அமிர்தலிங்கம் வைகாசி 9 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் ஜெயார் கூறுவதுபோல தில்லியில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தனது கட்சியினால் முன்வைக்கப்படவை அல்ல என்று முற்றாக மறுதலித்தார். முத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட விடயங்களை காலக்கிரமமாக விபரித்தார் அமிர்தலிங்கம். ஆடி 28 மற்றும் மார்கழி 30 ஆம் திகதி ஜெயாருடனான இந்திராவின் தொலைபேசி அழைப்புக்கள், பார்த்தசாரதியுடன் ஜெயார் மேற்கொண்ட மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் என்று நடந்த விடயங்களை விளக்கியதுடன், தில்லியில் முத்தரப்பினாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஜெயார் முற்றாக ஏற்றுக்கொண்டதை இந்திராவும் பார்த்தசாரதியும் தன்னிடம் உறுதிப்படுத்தியதாகவும் சர்வகட்சி மாநாட்டில் வெளிப்படையாகத் தெரியப்படுத்தினார். தானே தன்னிச்சையாக வெளியிட்ட அழைப்பிதழின் இணைப்புக்களிடமிருந்து தன்னை ஜெயார் அந்நியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையினை இந்திரா மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியயிருந்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அதே அழைப்பில் இன்னொரு விடயத்தையும் இந்திரா குறிப்பிட்டிருந்தார். அதுதான், இரண்டாவது இணைப்பினை ஜெயார் மீளப்பெற்றுக்கொள்ளாதவிடத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்பது. ஆகவே, இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சர்வகட்சி மாநாட்டின் செயலாளரே தனக்குத் தெரியாமல் இணைத்துவிட்டார் என்று கூறி ஜெயார் தப்பிக்க வேண்டியதாயிற்று.
  41. சிறிய மாற்றங்கள் செய்த பின்னர் கடந்த சில தினங்களை விட நேற்று மாலையில் இருந்து பக்கங்களைத் திறக்க எடுக்கும் நேரம் குறைவாக இருக்கும்.
  42. உப்பிடி சொல்லி நம்பர் வாங்கி…. வென்ற ஆக்கள் கன பேர். சொன்ன காசை… தரச் சொல்லி கேட்டால் சண்டைக்கு வாறாங்கள். அதுக்குப் பிறகு…. முதல் காசு வேண்டாமல், ஒருத்தருக்கும் நம்பர் குடுக்குறதில்லை. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.