Leaderboard
-
Justin
கருத்துக்கள உறவுகள்12Points7053Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்10Points2957Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்10Points46791Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்8Points31993Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/17/24 in all areas
-
டாடோ என்கின்ற டாலிபோ
5 points23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன. அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில் கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்” என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது. மகனின் சகலன் ஆதியும் கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியில அதிக நாட்டம் இருந்ததில் வியப்பில்லை. கடத்தப்பட்டவரைத் தனக்குத் தெரியுமென்றும் குறோஸியா நாட்டைச் சேர்ந்தவன், வயது 50க்குள்தான் இருக்கும் என்றும் ஆதி சொன்னான். கொலை, கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதை மருந்துகள் என ஏகப்பட்ட செய்திகள் நாளாந்தம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் போது, வந்த இந்தச் செய்தியும் அது போல ஒரு செய்தி தான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. அதனால் எங்கள் நகரில் நடைபெற்ற அந்தக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. “அந்த ஒப்பந்தம் காரனின் பெயர் டாலிபோ“ என்று ஆதி குறிப்பிட்ட போது, எனது மகன் என்னைப் பார்த்துக் கேட்டான், “உங்களின்ரை குளியல் அறை செய்தது ஆர்?” “டாடோ” என்றேன். “அது அவனுக்கு நெருக்கமானவர்கள் அவனை அழைக்கும் பெயராக இருக்கலாம். அவனுடைய குடும்பப் பெயர் தெரியுமோ?” என்று எனது மகன் மீண்டும் கேட்க என் தலை இல்லை என்று வலம் இடம் ஆடியது. 2020இல் எங்களை வெளியில் நடமாட விடாது வீட்டுக்குள்ளே கொரோனா அடைத்து வைத்திருந்த ஆரம்ப கால நேரம். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சந்திக்கலாம், அதுவும் நான்கு பேர்கள் மட்டும் ஒன்று கூடலாம் என்ற அறிவிப்பினால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தேன். பென்சன் எடுத்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருந்ததால் நிறைய ‘போர்’ அடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நீண்டநாள் நான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்த குளியல் அறையைத் திருத்தினால்... என்ற எண்ணம் எனக்குள் வந்தது. இணையத்தில் தேடி எனது நகரில் இருக்கும் ஒரு பிளம்பர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளும் போது ஜோர்க் அறிமுகமானார். தொழிலாளிகள் யாரும் வேலைக்கு வராததால் கையைப் பிசைந்து கொண்டு வீட்டில் இருந்து பியர் குடித்து, வயிறு வளர்த்துக் கொண்டிருந்த (ஜோர்க்) முதலாளிக்கு எனது அழைப்பு உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். எனது வேண்டுகோளை உடனேயே ஏற்றுக் கொண்டார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்வதற்காக தானே தனக்குத் தெரிந்த ஒரு கட்டிடக்காரரை அழைத்து வருவதாகவும் சொன்னார். அப்படி அவர் அழைத்து வந்தவன்தான் டாடோ(47). டாடோவும் ஒரு நிறுவனத்தின் முதலாளி. ஆக மூனாவின் குளியலறை வேலைக்கு இரண்டு மூனாக்கள் வேலைக்கு வந்தார்கள். உயரமான, பருத்த உடம்புவாசிதான் டாடோ. “குளியலறை என்பதால் ஜோர்க் சட்டப்படிதான் எல்லாம் செய்வார். ஏதாவது பைப் லீக்காகினாலோ, உடைந்தாலோ கொம்பனியின் உத்தரவாதம் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பின்னால் எது நடந்தாலும் காப்புறுதி ஈடு செய்யாது. ஆனால் என்னுடைய வேலை அப்படி இல்லை. ‘கறுப்பு’த்தான். மணித்தியாலத்துக்கு 42 யூரோ தர வேண்டும்” என்று டாடோ கேட்டுக் கொண்டான். கறுப்புத்தானே எனக்குப் பிடித்த கலர். ஒத்துக் கொண்டேன். டாடோவும், ஜோர்க்கும் குளியலறைத் திருத்தத்துக்கான முழுப் பொருட்களையும் தாங்களே கொள்வனவு செய்து எனது சிரமத்தைக் குறைத்துக் கொண்டார்கள். நான் செய்து கொடுத்த ‘சிக்கன் றோல்ஸ்’ மற்றும் அடிக்கடி நான் கொடுக்கும் கோப்பி, மதிய உணவான சோறு, கறிகள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்துப்போக, மாலையில் வேலை முடிய “பியர் கொண்டு வா” என்று என்னிடம் அவர்கள் உரிமையுடன் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகிப் போனோம். அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களை கேலிச்சித்திரமாகவும் வரைந்து கொடுத்திருந்தேன். நான் வரைந்த சில படங்கள் எனது கைத் தொலைபேசியிலும் இருந்தன. தேடிப் பார்த்த போது டாடோவின் படமும் அங்கே இருந்தது. “டாடோ இப்படித்தான் இருப்பான்” என எனது மகனுக்குக் காட்டினேன். மகன் ஆதியிடம் கொடுக்க, அதைப் பார்த்து விட்டு, “இவன்தான்... இவன்தான் டாலிபோ” என ஆதி கூவ, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்தக் கொண்டாட்டத்தை என்னால் ரசிக்க முடியாமல் போயிற்று. “மிகவும் இலாபமான முறையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரோடு ஒப்பந்தம் செய்திருக்கிறன். என்னட்டை ரூமேனியாவிலை இருந்து வந்த வேலையாட்கள் இருக்கினம். அவையள் சட்டப்படியான வேலையாட்கள் இல்லை. மணித்தியாலத்துக்கு ஏழு, எட்டு யூரோக்கள் குடுத்தால் போதும். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்வாங்கள். இப்ப கொரோனா வந்ததாலை எல்லாரும் தங்கடை நாட்டுக்கு திரும்பிப் போட்டாங்கள். வேலையாட்கள் இல்லை. சட்டப்படி சம்பளம் கொடுத்துச் செய்யிறதெண்டால் கட்டுப்படி ஆகாது. பயங்கர நட்டம்தான் வரும். கொரோனா எப்ப தொலையுமோ? போனவங்கள் எப்பத் திரும்ப வரப்போறாங்களோ? இல்லாட்டில் வராமலே இருந்திடுவாங்களோ? என்று டாடோ என்னிடம் கவலைப் பட்டுச் சொன்னது நினைவுக்கு வந்தது. டாடோ நல்லதொரு வேலையாள். பழகுவதற்கு இனிமையானவன். அவனுக்கு ஏன் இந்த நிலமை வந்தது? யார் டாடோவைக் கடத்தி இருப்பார்கள்? எதற்காகக் கடத்தினார்கள் என்று எனக்குக் குளப்பமாக இருந்தது. அடுத்தநாள், தொலைக்காட்சியில் டாடோவின் செய்திகள் வந்து கொண்டிருந்தன. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக டாடோவின் செய்தியே இருந்தது. Mann aus Schwaebisch Hall nach Brandenburg entfuehrt – mutmassliche Entfuehrer forderten Loesegeld Zwei Maenner sollen einen 46-Jaehrigen in ein Auto gezerrt und verschleppt haben. Einer der Verdaechtigen war vergangene Woche an einer Schiesserei in Berlin beteiligt (ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பிராண்டன்பூர்க்கிற்கு ஒருவர் கடத்தப்பட்டார் - கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கடத்தப்பட்டவரை மீட்பதற்கு ஒரு தொகை பணத்தைக் கேட்கிறார்கள். இரண்டு பேர் 46 வயதுடைய ஒருவரை இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த வாரம் பெர்லினில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்) கொஞ்சம் கொஞ்சமாக விபரங்கள் வெளியேவர ஆரம்பித்தன5 points
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
வெள்ளைச் சீனிக்குப் பதிலாக கருப்பட்டியோ , தேனோ தேவையானளவு எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அதில் சீனி இல்லை, கலோரி குறைவென்றெல்லாம் சொல்லவில்லை . எனவே அவர் சொல்வது சரி. ஆனால், நீரிழிவு இருக்கும் ஒருவரின் உடலுக்கு வெள்ளை சீனியும், கருப்பட்டியும் , தேனும் ஒன்று தான். குறைக்க வேண்டியது தான். வெள்ளைச் சீனியினால் நேரடியாக பெண்களில் புற்று நோய் வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், சீனிப் பதார்த்தங்களைக் கட்டுப் பாடின்றி எடுத்துக் கொண்டு உடல் பருமனானால் மார்பக, கருப்பை புற்று நோய்கள் அதிகரிக்கும். மீண்டும், இந்தப் புற்று நோய்களைத் தடுக்கும் வலு கருப்பட்டிக்கு, தேனுக்கு இருக்கிறதா என யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆராய்ந்து பார்க்காமல் மருத்துவர் சிவராமன் பேசும் விடயங்கள் பிரச்சாரமாகத் தான் பார்க்கப் பட வேண்டும், மருத்துவ ஆலோசனையாக எடுக்கப் படக் கூடாதென நினைக்கிறேன்.4 points
-
டாடோ என்கின்ற டாலிபோ
4 pointsகோரோனாவின் பின்னர் விலைவாசிகள் ஏறிக் கொண்டே இருந்தன. கூடவே பல பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் இருந்தன. அதிலும் முக்கியமாக கட்டிடப் பொருட்களை பெரும் விலைகள் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையால் பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் காணத் தொடங்கிய போது, சின்னச் சின்ன நிறுவனங்கள் தள்ளாடி விழுந்து கொண்டிருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. டாடோவினால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைத்துக் கட்ட முடியாத நிலை உருவாகி இருந்தது. அவனுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் “வீட்டு வேலை எப்போது முடியும்?” என்று அவனை நெருக்க ஆரம்பித்தார்கள். தனியாக இருந்து தவிப்பதை விட வேறு சில கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால், இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்து விடலாம் என்று டாடோ கணக்குப் போட்டுக் கொண்டான். பலரைத் தொடர்பு கொண்ட போது பேர்லின், பிராண்டன்பூர்க் நகரத்தில் இருந்து சேர்பியா நாட்டைச் சேர்ந்த முகமுது(28), டாடோவுடன் துணை ஒப்பந்தக்காரராக இணைய விருப்பம் தெரிவித்தான். இங்கேதான் தவறு நடக்கப் போகிறது. அது தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை டாடோ அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அப்பொழுதே தனது நிறுவனம் திவால் ஆகிப் போய்விட்டது என்று டாடோ அறிவித்திருந்தால் தப்பித்திருப்பான். கொரோனா காலம் முடிந்ததன் பின்னர் பல நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டன என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டன. ஆனால் ஏனோ டாடோ அதைப் பற்றி அப்பொழுது சிந்திக்கவில்லை. புதிதாக இணைந்த துணை ஒப்பந்தக்காரன் முகமதுவின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் டாடோ ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பித்தான். புத்துணர்ச்சி வந்ததால் பழைய, புதிய ஒப்பந்தங்களுக்கான கட்டிட வேலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முடுக்கி விட்டான். வரும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிக்கத் தொடங்கினான். டாடோ கேட்கும் பொழுதெல்லாம் முகமது பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி முகமது, தனது பங்குக்காக, டாடோவிடம் கொடுத்த பணம் இப்பொழுது இரு நூறு ஆயிரங்களைத் தாண்டி விட்டிருந்தது. ஆனால் இலாபத்தின் பங்கோ அல்லது கொடுத்த பணத்துக்கான கணக்கோ முகமதுவுக்குக் கிடைக்கவில்லை. பல தடவைகள் நச்சரித்தும் வெறும் பத்தாயிரம் யூரோக்கள் மட்டுமே டாடோவிடம் இருந்து முகமதுவுக்கு திரும்பக் கிடைத்திருந்தது. அதே நேரம் டாடோவிடம் முதலீடு செய்யவென கடனாகப் பெற்ற பணத்தை, திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் முகமதுவுக்கு வந்திருந்தது. முகமதுவுக்கு பணம் தந்தவன் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவன். ஒரு மாபியா குழுவாக பேர்லீனில் செயற்பட்டுக் கொண்டிருப்பவன். தமிழ்ச்சினிமாவில் வரும் கந்து வட்டி வில்லன்களை இப்பொழுது கற்பனை செய்து பார்த்தீர்களானால் குர்தீஸ் இன மாபியாவை ஓரளவுக்கு நீங்கள் வடிவமைத்துக் கொள்வீர்கள். பணக் கொடுக்கல் வாங்கல்களினால், 18.03.2023 இல் பேர்லின் வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஒரு கை கலப்பு நடந்திருக்கிறது. அந்தக் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கியும் இருக்கிறார்கள். இந்தக் கைகலப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் அடிபட்ட காயங்களுடனும் 26 மற்றும் 28 வயதுடைய இருவரை பொலிஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கைகலப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கைகலப்பில் முகமதுவும் இருந்திருக்கிறான் என்பதை விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டார்கள். முகமது ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரனாக இருந்து கொண்டு யேர்மன் நாட்டின் கராட்டி சம்பியனாகவும் இருந்தவன். ஆகவே அவனுக்கும் அடிதடி கைவந்திருந்தது. இன்னும் பணம் இருந்தால்தான் டாடோவினால் தனது கட்டிட வேலைகளைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகி விட்டிருந்தது. மேற்கொண்டு பணம் வரும் வழிகள் எதுவும் இனி இல்லை என்று டாடோவுக்குத் தெரியத் தொடங்கியது. ஒரு பக்கம் கொடுத்த பணத்தை முகமது திருப்பிக் கேட்டு அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். மறு பக்கம் “வீடு எப்போ முடியும்?” என ஒப்பந்தக்காரர்கள் நெருக்க ஆரம்பித்திருந்தார்கள். டாடோ பயணித்த இரு குதிரைகளும் ஒன்றாகத் தரையில் வீழ்ந்திருந்தன. வேறு வழியில்லை எனத் தீர்மானித்த டாடோ, தான் திவாலாகி விட்டதாக அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டான். விடயத்தை அறிந்து தொலைபேசியில் அழைத்து தான் கொடுத்த பணத்தை முகமது கேட்ட போது அரசாங்கத்துக்கு அறிவித்த ‘திவால்’ என்ற வார்த்தையையே டாடோ, முகமதுவுக்கும் சொன்னான். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்ட மனவுளைச்சல், பணத்தைக் கடனாகத் தந்தவனிடம் இருந்து வந்த அச்சுறுத்தல் இரண்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட முகமது தூக்கம் இன்றித் தவித்தான். முகமதுவால் ஓடி ஒளிய முடியாது. காரணம் அவனது தாயும் சகோதரியும் பேர்லினில்தான் வசிக்கிறார்கள். தன்னால் அவர்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஒரு புறம் பயமுறுத்தியது. முகமது தனது வேலையாளான லூக்காவை தொலைபேசியில் அழைத்தான். “காரை எடுத்துக் கொண்டு வா ஸ்வேபிஸ்ஹாலுக்குப் போகவேணும்” என்றான். லூக்காவும் வேலை நிமித்தம் சேர்பியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவன்தான். லூக்கா, முதலாளி முகமதுவுக்கு மிகவும் பிடித்தவன், நம்பிக்கையானவன். சாலை விதிகளைச் சரியாகக் கடைப் பிடிக்காமல் தனது சாரதி பத்திரத்தை இழந்திருந்த முகமதுவுக்கு லூக்காதான் இப்பொழுது சாரதி. VW UP காரில் பேர்லினில் இருந்து இருவரும் அதிகாலை புறப்பட்டு மதியம் ஸ்வேபிஸ்ஹாலை வந்தடைந்தார்கள். டாடோ வீட்டில் ஒன்று கூடிப் பேசினார்கள். இனிமையாக, கோபமாக, அதட்டி என்று எந்தவகையில் கேட்டாலும், டாடோ திரும்பத் திரும்பச் சொன்னது ,”என்னிடம் பணம் இல்லை. நான் திவாலாகிப் போயிட்டன்” என்பதுதான். முகமது பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவன் பழகிய கராத்தே வெளியேவரத் தொடங்கியது. வன்முறைக்கும் டாடோ அசைந்து கொடுக்கவில்லை. டாடோவை இழுத்துக் கொண்டு வந்து காருக்குள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். நடந்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டாடோவின் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் குறேஸியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவள். மொழி அவளுக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை. திகைத்துப் போய் பல்கணியில் அவள் நின்றாலும் தனது கணவனை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை எழுதி வைத்துக் கொண்டாள். காரின் வலது பக்க இருக்கையில் டாடோ இருந்தான். பின் இருக்கையில் முகமது இருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. வாகனத்தில் பயணிக்கும் போது முன் இருக்கை இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தைக் காட்டி “இங்கே உன் வலது கையை வை” என்று டாடோவிடம் முகமது சொல்ல அவனும் அந்த இடத்தில் கையை வைத்தான். முகமதுவின் கையில் இருந்த சுத்தியல் வேகமாக டாடோவின் கையில் இறங்கியது. டாடோ அலற ஆரம்பித்தான். சிறிது நேரப் பயணத்துக்குப்பின், “டாடோ உன் இடது கையை வை” என முகமது திரும்பவும் கட்டளையிட்டான். முகமதுவின் கையில் இருக்கும் சுத்தியல் தன் தலையில் இறங்கினால்..? டாடோவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. காரை ஓட்டிக் கொண்டிருந்த லூக்காவும் இடையிடையே டாடோவுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தான். தலைக்கு வர இருப்பது கையோடு போகட்டும் என்று டாடோ இடது கையை வைத்தான். மீண்டும் சுத்தியலால் முகமது டாடோவின் கையில் அடித்தான். பேர்லினுக்கான பயணம் ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது. அந்த ஆறு மணித்தியாலங்களும் தமக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் டாடோவை சுத்தியலாலும் கைகளாலும் முகமதுவும் லூக்காவும் தாக்கிக் கொண்டே பயணித்தார்கள். பயணத்தின் போது தனது இன்னுமொரு வேலையாளான எல்விஸ்ஸை முகமது அலைபேசியில் அழைத்து, சில வேலைகளைச் செய்யும்படி சொன்னான். எல்விஸ்ம் சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன் . அவனது அடுத்த தொலைபேசி டாடோவின் வீட்டுக்குப் போனது. வீட்டுத் தொலைபேசி அழைப்பை டாடோவின் மனைவியே எடுத்தாள். “உன்னுடைய புருசன் உனக்குத் திரும்பத் தேவை என்றால், முதற்கட்டமாக இருபத்தைந்தாயிரம் யூரோக்களை தருவதற்கு ஏற்பாடு செய்” முகமதுவின் குரல் அவளுக்கு எச்சரித்தது. “ஹலோ” சொல்லிவிட்டு புன்னகையுடன் டாடோவின் மனைவியைப் பார்த்த வங்கி ஊழியர் என்ன வேண்டும் என்ற பார்வையுடன் நின்றார். “பணம். இருபத்தையாயிரம்” “இருபத்தையாயிரம்?” கேட்டு விட்டு டாடோவின் மனைவியைப் பார்த்தார் வங்கி ஊழியர். “அவ்வளவு பணத் தேவையா? தனியாகவா வந்தீர்கள்?” கேட்டுக் கொண்டே பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பித் தரும்படி அவளிடம் கொடுத்தார். யேர்மனியில் சில காலமாக தனியாக இருப்பவர்களை வயது போனவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், வங்கிகளில் அதிகமாகப் பணத்தை எடுக்கும் போது இப்படியான கேள்விகள் கேட்பது வழக்கம். இன்றும் வங்கி ஊழியர் டாடோவின் மனைவியிடம் அப்படித்தான் கேட்டார். அது பலனைத் தந்தது. பொலிஸாரின் கேள்விகளுக்கு டாடோவின் மனைவி பதில் சொல்ல, அவளுக்கு அப்பொழுது மொழி பிரச்சனையாக இருக்கவில்லை. அவளது இரண்டு மகள்மாரும் பாடசாலை முடித்து வீடு திரும்பி இருந்ததால், தாயின் பதிலை அவர்கள் மொழிபெயர்த்தார்கள். ஒரு குற்றம் நடந்த இடத்தில் அதைச் செய்தவன் பதட்டத்தில் ஏதாவது சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். முகமது தனது சொந்தக் காரில் வந்து பெரிய தடயத்தையே விட்டுச் சென்றிருந்தான். பொலிஸாருக்கு அதிக பிரச்சனைகள் இருக்கவில்லை. வாகன இலக்கத்தை வைத்தே ஆளை அடையாளம் கண்டு விட்டார்கள். ஸ்வேபிஸ்ஹால் பொலிஸாரிடம் இருந்து பேர்லின் பொலிஸாருக்கு தகவல்கள் போனாலும் அவர்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுத்தார்கள். முகமதுவின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே அவதானித்து இருந்ததால், சிறப்பு அதிரடிப்படையை வரவழைத்தார்கள்.4 points
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
3 pointsநாங்கள் கூடுதலாக ஜேர்மன் கடைகளில் விற்கும் மரக்கறிகளையே சமைத்து சாப்பிடுவோம். சுவையாக சமைத்தால் மேற்கத்திய மரக்கறிகள் நன்றாகத்தான் இருக்கும். ஈழத்தில் நமது பிரதேசங்களில் வேலியில் படரும் செடி கொடியும் உணவுதான். அதனால் தான் எம் பிரதேசங்கள் எவ்வளவு அனர்த்தங்களை சந்தித்தும் பட்டினி சாவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.3 points
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது, பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்னரை விட பெறலாம் என்ற விடுதலைப்புலிகளின் கணிப்பே. இதற்காகவே தென்னிலங்கையில் வெளிப்படையாக கடும் போக்கை காட்டக்கூடியவர்கள் பதவிக்கு வருவது எமது போராட்டத்துக்கு அனுகூலமாக அமையும் என்று நினைத்தார்கள். இதற்கு முன்னர் பிரேமதாசவுடனான பேச்சுவார்ததையின் பின்னரும் சந்திரிக்காவுடனான பேச்சுவார்ததையின் பின்னரும் பாரிய இராணுவ வெற்றிகளை பெற்று முன்னரை விட மிகப் பலமான நிலையை அடைந்தது போல் மேலும் இராணுவ ரீதியில் பலமடைவதே எமது எமது இலட்சியத்தை அடைய வழி என்றே புலிகள் கணித்தார்கள். இது பல காரணங்களால் பிழைத்துப் போனது. ஆனால், முன்னைய பேச்சுவார்ததைகளின் முடிவிலான தமது இராணுவத்த்தோல்விகளின் தமது முன்னைய அனுபவங்களை பாடமாக எடுத்த ஶ்ரீலங்கா அரசு இதனை மிக கவனமாகவும் சிறப்பாகவும் நவீன தொழில்நுட்பங்களுடன் தனது போர்த் தயாரிப்புகளைச் செய்தது. இதற்காக உலக நாடுகளிடம் உதவிகளை பெற்று கொண்டு மிக கடுமையான தாக்குதல்களை தொடுத்தது. விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் மீது மேற்கு நாடுகள் அதிப்தி கொண்டிருந்தமையும் தமிழீழம் என்ற நாடு அமைவதையும் இணைத்தலைமை நாடுகள் விரும்பாமை இலங்கை அரசுக்கு இயல்பான சாதக நிலையாக அமைந்தது. இது அரசியல் ரீதியில் ஶ்ரீலங்கா அரசுக்கு பலம் சேர்த்தது. இவ்விடயங்களைப் புலிகள் சற்றும் எதிர்பார்ககவில்லை. எதிர்பார்ததிருந்திருந்தால் நீங்கள் கேட்ட plan B யை வகுத்து, பேச்சுவார்ததைகளை சாட்டுக்காவது நீடித்து அரசியல் ரீதியான நகர்வுகளை செய்து குறைந்தது மக்களின் இழப்புகளையாவது தவிர்த்திருப்பர். அதற்கான நிபுணத்துவம் வழங்கும் மதியுரைஞரை இழந்ததும் தமிழரின் துரதிஷரமே. இறுதியில் இலங்கை அரசின் கண்மூடித்தனமான மக்கள் மீதான தாக்குதல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து ஒரு யுத்த நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று விடுதலைப்புலிகள் கணிப்பும் ஈடேறவில்லை. காலம் கடந்தபின் புலம் பெயர் நாடுகளில் யுத்த நிறுத்தத்தை கோரி நடத்தப்பட்ட ஆர்பபாட்டங்களை மக்கள் கோரிக்கையாக ஏற்காமல் புலிகளின் அநுதாபிகள் தான் அவர்களை காப்பாற்ற செய்கிறார்கள் என்ற பார்வையுடன் மேற்கு நாடுகள் அதை உதாசீனம் செய்ததுடன் புலிகளின் அழிவை அவர்கள் விரும்பியதும் காரணம். விளைவு: பேரம் பேசி எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத இன்றைய அவல நிலையை அமைந்தோம்.3 points
-
யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
கற்பனைக்கு செயல் வடிவம் கொடுத்த இளையவர்களுக்கு பாராட்டுக்கள். பட்டப்போட்டிகள், மாட்டு வண்டி சவாரி போன்றன பாரப்பரியமாக எமது கலாச்சாரத்தில் இருந்து வருகின்றன.3 points
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இத்தனை தியாகங்களைச் செய்தவர்கள் மீது யாரும் குற்றம் சொல்லிவிடக்கூடாது என்கிற நியாயமான பயம் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.2 points
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
புலிகளிலும் அரைவாசிக்கு அரைவாசி பிழை என்றும் , பேச்சு வார்த்தை குழம்பினால் அதற்கான மாற்று திட்டமே புலிகளிடம் இருக்கவில்லை என்பது விசுகு அண்ணாவிற்கு தெரியும்....இரு தரப்புமே பேச்சு வார்த்தையை சீரியசாக[ அதாவது தமிழர்களுக்கான தீர்வை பெற்று கொடுப்பதற்காய் ] பயன்படுத்தவில்லை ...ஆனால் அரச தரப்பு திறமையாய் பயன்படுத்திருந்தார்கள்...என்ன தானெதிரிகளாய் இருந்தாலும் சிங்களவர்கள் இராஜ தந்திரத்திரத்திற்கு முன் தமிழர்கள் தூசி .2 points
-
உலகத்துக்கு தமிழனை அறிமுகம் செய்தவர்.
நான் ஒருமுறை வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும் நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார், ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை? என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்கின்றீர்கள் என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே, அதுதான் பதில் சொல்லவில்லை என்று, அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே, ஆம் நான் இந்தியன், ஆனால் என் தாய் மொழி #தமிழ் என்று சொன்னேன். அப்போது அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே, என்று சொன்னான், என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு, அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, L+T+T+E தமிழ் டைகர், பிர+பா+கரன் பேசுற மொழிதானே தமிழ் .? அதைதான் நீங்களும் பேசுறிங்களா? என்று கேட்டான் .நான் ஆச்சரியத்துடன் ஆம்! என்றேன். அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி, என் குரலை பதிவு செய்தார்கள். பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள், அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்.. நான் வெளியே வந்து யோசித்தேன் என்னடா தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழர் இருக்கிறோம், எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. இலங்கை தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு? அந்தமாதிரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேகிறான், நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று, அப்பத்தான் எனக்கு புரிந்தது நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன்? நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிர+பாக+ரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன்.. பிர+பாக+ரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை.. நன்றி . கவிப்பேரரசு வைரமுத்து முகநூலில் இருந்து2 points
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
திரும்பவும் - நடேசனை, விக்கி ஐயாவை, சிறிமாவினால் "மகே கழு புத்தா" என்று அழைக்க பட்ட பொன்னம்பலத்தின் மகனை விட்டு விட்டு சும், சாணக்கியனை மட்டும் ஏன் அவர்களது தனிப்பட்ட வாழ்விற்காகத் திட்டுகிறீர்கள்? இது தமிழ் தேசிய உணர்வென்பதை விட காழ்ப்புணர்ச்சி என நினைக்கிறேன். ஒவ்வொரு தமிழ் தலைவரும், அவர் குடும்பமும் இனத்திற்காக தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டுமென்கிறீர்கள். ஏன் நீங்கள் முன்மாதிரியாக இருக்கக் கூடாது? பின்லாந்தை விட்டுப் போய், ஈழத்தில் ஒரு கட்சி ஆரம்பித்து, அதனை நீங்கள் தமிழ் தலைவர்களிடம் எதிர்பார்க்கும் நிபந்தனைகளோடு நடாத்தி ஏதையாவது மாற்ற முயலாமலிருப்பது ஏன்? முடியவில்லை அல்லவா? ஏனெனில் உங்களைப் போலவே, தனிப் பட்ட வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் வெவ்வேறாகப் பேணும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அமரர் நடேசன் முதல் சாணக்கியன் வரை , நான் மேலே சுட்டிய அனைவருக்கும் இருக்கிறது. எனவே, இந்த தும்பைப் பிடித்துத் தொங்காமல் வேறு ஏதாவது பெரிய விடயங்களைப் பற்றிக் கவலைப் படுங்கள்.2 points
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
மிகவும் தவறான கருத்து. இது பற்றி எழுத எதுவும் இல்லை. உங்கள் பிள்ளை உங்களுக்கு இதற்கான விளக்கத்தை அல்லது படிப்பினையை தரும். அது வரை நன்றி தம்பி.2 points
-
போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம்
2 pointsபோர் முழக்கம் - சுப.சோமசுந்தரம் நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்த (21) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹனா ரஹிதி மெய்பி கிளார்க்' என்ற பெண் அந்நாட்டின் தொல்பழங்குடி இனமான 'மவுரி' இனத்தைச் சார்ந்தவர். பழங்குடியினருக்கான சமூகச் செயற்பாட்டாளர். தம் இனத்தின் போர் முழக்கப் பாடலைப் பாடி பாராளுமன்றத்தில் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அவருடன் இணைந்து வேறு சிலரும் முழக்கத்தில் பங்கெடுத்தது சிறப்பு. தலைவிரி கோலத்தில், "இளங்கோவடிகளின் சிலம்பு எடுத்தியம்பும் கொற்றவையோ, தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரிக் கொற்றவையோ, உலகில் தீமையை அழிக்கும் கூற்றமோ !" என்று வியக்க வைக்கிறார் மெய்பி கிளார்க். "இன்னுயிர் ஈந்தும் உங்களது உரிமைகளை மீட்டெடுக்க முயல்வேன்" என்று தமது உரையில் நாட்டின் பூர்வகுடிகளுக்கு மேலும் உறுதி கூறினார். அப்போர் முழக்கமும் அவரது உரையும் இணைய தளங்களில் உலகெங்கும் பரவின. வரலாறு அறிந்த நாள் முதல் நமது தமிழ்க்குடி தொன்மையான நாகரிகத்தில் வகைப்படுத்தப்பட்டதால், பழங்குடிப் பாடல் என்று தமிழுக்கு ஏதும் அமையவில்லை. தமிழ் நிலத்தில் வாழும் காணி, தோடர் போன்ற தொல்குடிகளுக்கு இருக்கலாம். போரில் வெற்றி பெற்றவரைப் பாடுவது பரணி எனும் சிற்றிலக்கியமாய்த் தமிழில் வகைப்படுத்தப்பட்டது. பரணியில் போர் மேற்கொண்டு செல்லுகையில் போர் முழக்கமும் உண்டு. நமக்கான முதல் பரணி இலக்கியமான கலிங்கத்துப்பரணியே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சார்ந்ததுதான். காலத்தால் அவ்வளவு சமீபத்தியது. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தளபதியான கருணாகர தொண்டைமான் தலைமையில் சோழர் படை அனந்தவர்மன் எனும் கலிங்க மன்னனின் படையை வெற்றி கொண்டதை செயங்கொண்டார் எனும் புலவர் பாடுவது கலிங்கத்துப் பரணி. இதில் போர் முழக்கம் உண்டு. நியூசிலாந்தின் மெய்பி கிளார்க் எழுப்பும் போர் முழக்கத்திற்கும் நமது செயங்கொண்டாரின் போர் முழக்கத்திற்கும் வேறுபாடு உண்டு. முன்னது தம் இன உரிமைக்கான முழக்கம்; பின்னது திறை செலுத்தத் தவறிய கலிங்க மன்னன் மீது படை எடுத்துச் சென்ற சோழனின் ஏகாதிபத்திய முழக்கம். முன்னது பெருமையுடன் பாட வல்லது; பின்னது தற்போதைய பண்பட்ட உலகத்தில் சிறுமை உணர்வு கொண்டது. உள்ளத்தை உறுத்தும் இப்பொருள் வேறுபாட்டைச் சற்றே மறந்து, இலக்கியம் என்ற வகையில் கலிங்கத்துப்பரணியின் போருக்கான அறைகூவலை மெய்பி கிளார்க்கின் உணர்வோடும் முகபாவனைகளுடனும் கற்பனை செய்வது ஓர் இலக்கியப் பார்வை. அவ்வளவே ! அப்பார்வை செல்லும் பாதையில் கலிங்கத்துப்பரணி பாடி சிறிது பயணித்துப் பார்ப்போமே ! "எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே" - பாடல் 404. பொருள் : '(படைக் கருவிகளை) எடும் எடும்' என விடுத்த மாறுபட்ட ஒலியானது (இகல் ஒலி) பொங்கியெழும் கடல் எழுப்பும் ஒலியை விட மிகுதியாகக் (இகக்க) கேட்பதாக ! குதிரை (பரி), யானைக் (கரி) கூட்டத்தினைக் (குழாம்) கட்டவிழ்த்து 'விடும் விடும்' என்று மிகுதியாய் ஒலிப்பதாக ! "வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே" - பாடல் 405. பொருள் : நன்கு கட்டமைக்கப்பட்ட வில்லில் (வரிசிலை) அச்சம் கொள்ளும் வகையில் (வெருவர) நாணிலிருந்து தெறித்த (தெறித்த நாண்) அம்பு சென்ற (விசைபடு) திசையே (திசைமுகம்) வெடிக்கட்டும் ! போரிடுவோர் (செருவிடை அவரவர்; செருதல் - போரிடுதல்) அதட்டும் ஒலியினால் (தெழி) உலகம் செவிடாகட்டும் (உலகுகள் செவிடெடுக்கவே) ! "எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே" - பாடல் 406. பொருள் : ஆர்ப்பரிக்கும் கடலோடு (எறி கடலொடு) கடல் மோதியது போல் (கிடைத்த போல்) இருதரப்புப் படைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்வதாக (எதிர் கிடைக்கவே) ! மடங்கி வரும் அலையோடு (மறி திரையொடு) அலை மோதியது போல், வருகின்ற குதிரைப்படையோடு (வரு பரியொடு) இங்கிருக்கும் குதிரைப்படை மோதுவதாக ! "கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே" - பாடல் 407. பொருள் : பருத்த மலையோடு (கன வரையொடு; வரை - மலை) மலை போரிட்டதைப் போல் மதம் பொழியும் யானைகளோடு (கட கரியொடு) யானைகள் போரிடுவதாக ! திரளான மேகங்களோடு (இன முகின்) மேகங்கள் (முகில்) எதிர்ப்பது போல் தேர்ப்படையினைத் தேர்ப்படை (இரதமொடு இரதம்) எதிர்ப்பதாக ! "பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே" - பாடல் 408. பொருள் : போரிடும் புலி (பொரு புலி; பொருதல் - போரிடுதல்) புலியோடு சினம் கொள்வது போல் (சிலைத்த போல்; சிலைத்தல் - இசைச் சொல் - ஓசைப் பொருண்மையுடைய சொல்) போர் வீரரோடு (பொரு படரொடு) போர் வீரர் சினம் கொள்வதாக ! சிங்கத்தோடு சிங்கம் (அரியினொடு அரியினம்) மோதிக் கடுமையாகத் தாக்குவது போல் (அடர்ப்ப போல்) படைத்தளபதிகளோடு தளபதிகள் தாக்குவதாக (அரசரும் அரசரும் அடர்க்கவே) !2 points
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
உங்கள் புரளியும் அதே புரளி போன்றதுதான் சக்கரைநோய்க்கு நிவாரணி என்றுதான் சொல்லப்படுகிறது நீங்கள் இனிப்பு தாது பொருட்களை குறைத்து பாவற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு நோய்யை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம் என்றுதான் சொல்கிறார்கள் பாவற்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய் மாறும் என்று தவறாக எண்ணுபவர்கள் போல்தான் உங்கள் எண்ணமும் "உணவே மருந்து" இதைத்தான் சொல்கிறார்கள் இதன் பொருள் நீங்கள் நோய்க்ளை உண்டாக்கிய பின்பு உணவு சாப்பிட்டால் நோய் குணம் ஆகும் என்பதல்ல மருந்துபோல உணவை சாப்பிட்டு வந்தால் நோய் இன்றி வாழலாம் என்றுதான் சொல்கிறார்கள்2 points
-
வாழ்வு தந்தவள் இவளே!
1 pointவாழ்வு தந்தவள் இவளே! ***************************** எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய் ஏர் பூட்ட வயல்கள் தந்தாய் பயிர் வளர மழையும் தந்தாய் பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய். அழகான அருவி தந்தாய் அகிலம் சுற்றி கடலும் தந்தாய் எரிகின்ற தீயும் தந்தாய் இளவேனிற் காற்றும் தந்தாய். உயர்வான வானம் தந்தாய் உருண்டோடும் மேகம் தந்தாய் வளமான காடு தந்தாய் வலிமைமிகு மரங்கள் தந்தாய். சூரியன்,மதியும் தந்தாய் சுதந்திர பறவைகள் தந்தாய் கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய் கரையோரம் காட்சிகள் தந்தாய். கலர்,கலராய் மலர்கல் தந்தாய் கண்குளிர பலவும் தந்தாய் இரவு பகல் எமக்குத் தந்தாய் எம் வாழ்வு சிறக்கத் தந்தாய். இத்தனையும் தந்த உன்னை மறக்கலாமோ? இடையில் வந்த பணத்தின்பின் ஓடலாமோ? செத்தபின்பும் செயற்கை என்றும் வருவதில்லை சிறந்த இந்த இயற்கை எம்மைப் பிரிவதில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி. 17.01.20241 point
-
தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்
1 pointஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - இந்தாண்டு புதிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடி, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று நாளும் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சாதியினரும் இடம்பெறுவது தொடர்பான பிரச்னை நீதிமன்ற படியேற நேரிட்டது. இதில் தீர்வு எட்டப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கு இல்லை. அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாத நபர்கள் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டு உறுதி மொழி ஏற்க, அமைச்சர் மூர்த்தி போட்டிகளை கொடியசைத்து போட்டி துவங்கி வைத்தார்.. தற்போது நடைபெறும் முதல் சுற்றில் 50 பேர் களத்தில் உள்ளனர். படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் கூறும் விதிமுறைகள் என்ன? ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர். அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதனையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து கமிட்டியினர் தான் முடிவு செய்வார்கள், அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ள சாதிப் பெயர்களை குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன். சாதி பெயர் குறிப்பிடப்படாது மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதி பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அமைச்சர் மூர்த்தியும் உறுதி செய்தார். அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜல்லிக்கட்டு போட்டியில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாதிப்பெயர் குறிப்பிடப்படாமல் காளையின் பெயர், ஊர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும். ", என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES காவல்துறை அறிவிப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அளித்த அனுமதிச் சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி. காளைகளுடன் வரும் உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது. காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதி சீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்றும் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மதுபோதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்து இருக்கிறது. ”காளையை களத்தில் சந்திக்க தயார்” ”கடந்தாண்டில் நடைபெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றேன். இதில், அலங்காநல்லூர், சத்திரக்குடி ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் மற்றும் இருசக்கர வாகனம் என பல்வேறு பரிசுபொருட்களை வென்றேன். இந்த ஆண்டும் அதேபோல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்த வீரராக விளங்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "நான் சிவகங்கை மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவன் எனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறேன். அவர்களும் மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து இருக்கிறார்கள். காளைகளை களத்தில் இறங்கி சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்கிறார் அவர். ”மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட காளைகள் தயார்” பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த என்பவர் தனது இரண்டு காளைகளை அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக டோக்கன் முன்பதிவு செய்திருந்தார். அவருக்கான டோக்கன் முன்பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. “எனது இரண்டு காளைகளையும் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் இறக்குவதற்காக தயார் செய்து இருக்கிறேன். மாடுபிடி வீரர்களுக்கு எனது காளைகள் களத்தில் ஆட்டம் காட்டி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்", என கூறுகிறார். இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு அதன் மீதான தடை நீங்கிய பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதிலும், ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்கி விளையாடுவதில் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. இதனை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கொண்டுவரப்பட்டன. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் அரசு அறிவித்த இணையதளத்திற்கு சென்று மாட்டின் உரிமையாளர், மாடுபிடிவீரர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து உடல் தகுதியை உறுதி செய்து அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்த வேண்டும். அரசு சார்பில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். இந்தாண்டு ஜல்லிக்கட்டில் போட்டிகளில் பங்கேற்க காளையின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர். எத்தனை பேர் பங்கேற்பார்கள்? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை நிர்வாகத்தின் சார்பில் இணையதளம் முன்பதிவு கடந்த 10-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 11-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. இதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,400 காளைகள், 1,318 காளையர்கள், பாலமேட்டில் 3,677 ஜல்லிக்கட்டு காளைகள், 1,412 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இந்த இரண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை விட உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 6,099 காளைகள், 1,784 மாடுபிடி வீரர்கள் என மொத்தமாக இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் சேர்த்து பங்கேற்க 12,176 ஜல்லிக்கட்டு காளைகளும் அவற்றுடன் போட்டியிட 4,514 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த வீரர்கள், காளைகள் ஜல்லிக்கட்டு நாட்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு களத்தில் 50 வீரர்கள் என்ற சுழற்சி முறையில் களமிறக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டி எப்போது? மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் 66 ஏக்கர் பரப்பளவில் 61.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏது தழுவுதல் அரங்கம் இந்த மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9x26l32pkjo1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் இராணுவ அடக்குமுறைமீது கடுமையான அதிருப்தியில் இருந்த மக்களின் மனோநிலையினை தமக்குச் சார்பாக பயன்படுத்த போராளிகள் முற்பட்டனர், முக்கியமாக புலிகள் இச்செயற்பாட்டில் முன்னிலை வகித்தனர். இராணுவத்தினர் மீதும் பொலீஸார் மீதும் தமது தாக்குதல்களை அவர்கள் தீவிரப்படுத்தினர். மேலும், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கிவிட கண்ணிவெடித் தாக்குதல்களையும் கைக்கொள்ளத் தொடங்கினர். மன்னார் மாவட்டத்தில், பூநகரிப் பாதையில் அமைந்திருந்த தள்ளாடி இராணுவ முகாமின் இரவு நேர ரோந்தை எதிர்பார்த்து விக்டர் தலைமையிலான புலிகளின் குழுவொன்று காத்திருந்தது. ஆவணி 11 ஆம் திகதி அதிகாலை 4:30 மணிக்கு ஜீப் வண்டியிலும், ட்ரக்கிலும் ரோந்துவந்த இராணுவத்தினரின் அணிமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருந்த 13 இராணுவத்தினரில் 6 பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர், இன்னுமொருவர் காயப்பட்டார். வழமைபோல தம்மீதான தாக்குதல்களுக்கு பொதுமக்கள் மீது தனது பழிவாங்கல்த் தாக்குதல்களை இராணுவம் ஆரம்பித்தது. சிவில் உடையில் மன்னார் நகரத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் தமிழருக்குச் சொந்தமான கடைகளையும் வீடுகளையும் எரிக்கத் தொடங்கினர். அடம்பன் பகுதியில் பொதுமக்களைத் தாக்கியதோடு வீடுகளையும் எரித்தனர். சிலவிடங்களில் முஸ்லீம் மக்களும் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். இந்த நாட்களில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை இருபது. கொல்லப்பட்டவர்களில் ஆறு இந்திய வம்சாவளித் தமிழர்களும் அடக்கம். அவர்களில் ஒருவர் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்குத் திரும்புவதற்காகக் காத்திருந்தவர். பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள் குறித்து மன்னார் ஆயர் ஜெயவர்த்தனவிடம் முறைப்பாடு செய்திருந்தார். "ஆக்கிரமிப்பில் ஈடுபடும் இராணுவத்தினர் போன்று அவர்கள் தமது வழியில் அகப்பட்டவை எல்லாவற்றையும் அழித்து நாசம்செய்தபடி செல்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். மன்னாரில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவினை மதிப்பிட அமைச்சர் எச்.எம்.மொகம்மட் அங்கு சென்றிருந்தார். ஜெயாருக்கு அவர் வழங்கிய அறிக்கையில் மன்னாரில் எரிக்கப்பட்ட பெரும்பான்மையான கடைகளும் வீடுகளும் முஸ்லீம்களுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டிருந்தார். தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மொகம்மட்டிடம் பேசுகையில், தள்ளாட்டி இராணுவ முகாமில் தங்கியிருந்த இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட்டின் அதிகாரிகளே முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும், வைகாசியில் கொழும்பில் இயங்கிவரும் மொசாட்டின் அலுவலகத்திற்கு முன்னால் முஸ்லீம்கள் சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பழிவாங்கவே இது நடத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் கூட மன்னாரில் ஏற்படுத்தப்பட்ட அழிவினைப் பார்வையிடச் சென்றிருந்தனர். அப்போது கொழும்பில் நடந்துகொண்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் தான் கண்டவற்றை அமிர்தலிங்கம் அறிக்கை வடிவில் வெளியிட்டார். இராணுவத்தினரைப் பாவித்து அரசாங்கம் தமிழரை அழித்துக்கொண்டிருக்கும் நிலைமையில் தமிழருக்கான அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசுவது பயனற்றது என்று அவர் குறிப்பிட்டார். "தமிழ் மக்கள் இராணுவத்தினரால் நாள்தோறும் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகையில் நாம் இங்கே அமர்ந்திருந்து எதுவுமே நடக்காதது போல பாசாங்கு செய்துகொண்டு இருக்க முடியாது" என்றும் அவர் கூறினார். இந்திரா காந்தியிடம் கோரிக்கையொன்றினை அன்று விடுத்த அமிர், "பல லட்சக்கணக்கான தமிழர்கள் இராணுவத்தினரின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலை ஒன்றினைச் சந்திக்கும் முன்னர் அவர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இலங்கையில் தமிழர் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களையடுத்து தமிழ்நாடு, சென்னையில் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். தமிழர்களைக் காப்பாற்ற இலங்கையில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டப் பேரணிகளை அவர்கள் நடத்தினர். சென்னையில் அமைந்திருந்த இலங்கையின் துணைத் தூதுவராலயத்திற்கு பேரணியாகச் சென்ற மாணவர்களை பொலீஸார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்து கலைக்கவேண்டியதாயிற்று. சென்னையில் மேலும் இவ்வகையான போராட்டங்கள் நடைபெறலாம் என்று அஞ்சிய அன்றைய தமிழ்நாடு அரசு பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஒருவார விடுமுறை அளிப்பதாக அறிவித்தது (அன்று எம்.ஜி.ஆர் செய்ததையே 2009 இல் கருநாநிதியும் செய்தார்). இத்தாக்குதல்களையடுத்து கொழும்பு மீது இந்திரா கடுமையான அதிருப்தி கொண்டார். அன்று புது தில்லியின் மனோநிலை குறித்து இந்துவின் செய்தியாளர் ஜி.கே.ரெட்டி பின்வருமாறு எழுதுகிறார், " தமிழர்கள் மீது அரசு நடத்திவரும் வன்முறைகளால் இந்திரா காந்தி தனது பொறுமையினை இழந்துவருகிறார்" என்று எழுதினார். ஆவணி 15 ஆம் திகதி செங்கோட்டையில் இருந்து இந்திய மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில் இலங்கையரசை அவர் கடுமையாக எச்சரித்தார். கொழும்பு அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களைக் கொன்றுவந்தால், இந்தியா வாளாவிருக்க முடியாது என்று அவர் கூறினார். இராணுவத்தினரினதும், பொலீசாரினதும் பழிவாங்கல் நடவடிக்கைகளால் போராளிகளின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களும் செயற்பாட்டில் இறங்கலாயின. புலிகள் நடத்திவரும் தாக்குதல்களின் பிரமாண்டத்தைக் காட்டிலும் தாம் அதிகமாகச் செய்துவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் நகர்வுகள், அவர்களின் சிறிய முகாம்கள் ஆகியவற்றின் மீது மட்டுமே தாக்குதல்களை நடத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்குவதையே அன்று புலிகள் செய்துவந்தனர். அவர்களின் இந்த முயற்சி பலனளித்திருந்தது.பல பகுதிகள் இதன்மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு அப்பகுதிகளில் தமது நிர்வாகக் கட்டமைப்புக்களையும் புலிகள் 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து செயற்படுத்த ஆரம்பித்திருந்தனர். ஆவணி 11 முதல் ஆவணி 14 வரையான நான்கு நாட்களில் மட்டும் புலிகள் இரு பொலீஸ் நிலையங்களைத் தாக்கியதோடு கண்ணிவெடித் தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர். ஆவணி 11, சனிக்கிழமை காலை இராணுவத்தினரின் சீருடையில் வந்த சுமார் 50 புலிகள் ஊர்காவற்றுரையில் இயங்கிவந்த பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் கூறுகையில் பொலீஸாரும் போராளிகளும் காலை 3:30 மணியில் இருந்து நேரடித் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகவும், முடிவில் போராளிகளின் முயற்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறினார். சண் மற்றும் பிற்காலத்தில் டெயிலி மிறர் பத்திரிக்கையின் ஆசிரியராகக் கடமையாற்றிய லலித் அழகக்கோன் ஊர்காவற்றுறை தாக்குதலை பின்வருமாறு விபரித்தார், "ஊர்காவற்றுறை பொலீஸ் நிலையத்தின்மீதும் தபால் அலுவலகத்தின்மீதும் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. காலை 3:30 மணியிலிருந்து தொடர்ந்து நான்கு மணித்தியாலங்கள் நடைபெற்ற நேரத் துப்பாக்கிச் சமரில் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்". ஆவணி 14 ஆம் திகதி, செவ்வாயன்று வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள். காலை 4:30 மணிக்கு பொலீஸ் நிலையத்திலிருந்த பாதுகாப்பு வெளிச்சம் மீது தாக்குதல் நடத்தி, அதனை செயலிழக்கப் பண்ணியதன் பின்னர் இருட்டில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பொலீஸ் நிலையத்தின் முற்பகுதியை மட்டும் விட்டு விட்டு ஏனைய மூன்று பகுதிகளில் இருந்தும் பொலீஸ் நிலையத்தின் மீது கிர்னேட்டுக்களையும், பெற்றொல்க் குண்டுகளையும் எறிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸ் கொமாண்டோக்கள் உள்ளிருந்து நான்குதிசைகளிலும் கண்ணுக்குத் தெரியாத எதிரிமீது தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதல் சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இத்தாக்குதலில் சுமார் 50 பொலீஸார் கொல்லப்பட்டதுடன் கட்டடமும் கடுமையான சேதத்தினைச் சந்தித்தது. ஆனாலும், பொலீஸார் புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதேநாள் இரவு, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஆயுதப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவம் காரைநகரில் அமைந்திருந்த பாரிய கடற்படை முகாம் தொகுதி மீது துணிகரமான, பாரிய தாக்குதல் ஒன்றினை ஆரம்பித்தது. இன்று ஈ.பி.டி.பி யின் தலைவராக இருக்கும் டக்கிளஸ் தேவானந்தாவே அன்று மக்கள் விடுதலை இராணுவத்தின் தளபதியாக இருந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அவர் சென்னையில் தங்கியிருந்தார். முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு உறுப்பினரும், தற்போதைய தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்தார். தோல்வியில் முடிவடைந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இன் காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதல் மக்கள் விடுதலை இராணுவத்தின் யாழ்ப்பாணத் தளபதியான ரொபேர்ட் என்று அறியப்பட்ட சுபத்திரனினாலும் , சுரேஷ் பிரேமச்சந்திரனினாலும் காரைநகர் முகாம் மீதான தாக்குதலினை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. தாம் அண்மையில் பயன்படுத்தத் தொடங்கியிருந்த இரு புதிய வழிமுறைகளைப் பாவித்து இத்தாக்குதலினை நடத்தலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். தமிழ்நாடு கும்பகோணம் முகாமில் பயிற்றப்பட்டவரும், லெபனான் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டவருமான திருகோணமலையைச் சேர்ந்த சின்னவன் என்பவர் மோட்டார் உந்துகணை தொடர்பான பயிற்சியினைக் கொண்டிருந்தார். தனது இயக்கத்திற்காக மோட்டார்க் குண்டுகளையும் அவரே உள்ளூரில் தயாரித்துமிருந்தார். இதனைவிடவும், இயக்கத்தின் இன்னொரு உறுப்பினரான சுதன் எனப்படுபவரால் தயாரிக்கப்பட்ட உள்ளூர்க் கவச வாகனம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபடலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் நினைத்தது. மோட்டார்த் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் முகாமின் முன்வாயில் ஊடாக கவச வாகனத்தை ஓட்டிச் செல்வதே அவர்களின் திட்டம். ஆனால், இரு திட்டங்களும் தோல்வியில் முடிவடைந்தன. அவர்கள் ஏவிய பெரும்பாலான மோட்டார்கள் வெடிக்கவில்லை. மேலும், அவர்களின் கவச வாகனமும் முகாமின் வாயிலிற்பகுதியில் செயலிழந்து நின்றுவிட்டது. ஆரம்பத்தில் முகாமின் பிற்பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றிருந்த கடற்படையினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தாக்குதல் பிசுபிசுத்துப் போனதையடுத்து முகாமின் முற்பகுதி நோக்கி முன்னேறி கடுமையான எதிர்த்தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். கடற்படையினரின் பலத்த எதிர்த்தாக்குதலில் பல போராளிகள் கொல்லப்பட, கொல்லப்பட்ட தமது சகாக்களையும், காயப்பட்டவர்களையும் இழுத்துக்கொண்டு மீதிப்பேர் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றனர். இத்தாக்குதலில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தமது முதலாவது பெண்போராளியை இழந்திருந்தனர். தனது 15 வயதில் மக்கள் விடுதலை இராணுவத்தில் ஷோபா என்கின்ற அந்தப் பெண்போராளி இணைந்திருந்தார்.1 point -
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இது சரி பேச்சுவார்த்தை குழம்பும் அதற்கான மாற்றுத்திட்டமும் குழம்பும் காரணம் நீங்கள் மேலே கூறியுள்ளீர்கள் அதாவது அரசாங்கம் கால அவகாசம் பெற முனைந்தது மாற்றுத்திட்டம் செல்வா- பண்டா ஒப்பந்தம் அல்லது செல்வா- டல்லி ஒப்பந்தம் இவை கிழித்து எறியப்பட்டது எப்படி வைக்கிறது??? இந்த இரண்டு ஒப்பந்தம்களையும் விட கீழே ஏதாவது அதிகாரமுள்ள. தீர்வுகள் உண்டா??? ஆயுதப் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் பல நாடுகளில் பல சுற்று பேச்சுவார்த்தைகளயும். நடத்திய அதேநேரம் முப்படைகளையும் வைத்து நீதிமன்றம் காவல்துறை ...போன்றவற்றுடன் வரியையும் வசூலித்து ஒரு அரசாங்கம் நடத்திய புலிகள் தோற்று விட்டார்கள் பலரும் எந்தவொரு ஒழுங்கு வரையறையுமின்றி கேள்விகள் கேட்டு தீர்ப்பும் வழங்குகிறார்கள் முடியவில்லையடா சாமி புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது இலங்கை அரசாங்கம் தீர்வுகள் தரமாட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து காட்டவே அதனை பரிபூரணமாக வெற்றியுடன் செய்து விட்டார்கள் நன்றி வணக்கம் 🙏1 point
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இதில என்ன இன்னும் சோகம் என்னவென்றால் தமிழரை மீள எழ முடியா படுகுழிக்குள் தள்ளி விட்டு ஏன் இன்னும் மற்றவர்கள் தீர்வு பெற்று கொடுக்கிறார்கள் இல்லை என்று விசுகு அண்ணா போன்றவைகள் கேள்வி கேட்பது தான்1 point
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
ஆ.... வாயால சாப்பிடுறம். இருக்கிற விசருக்கு கேக்கிற கேள்வியைப்பார் 😛 ஹலோ பெரிசு! சாப்பிடேக்கை ஆறுதலாய் மென்று அசைபோட்டு உமிழ்நீர் சுரக்க சாப்பிட வேணுமாம். உமிழ் நீரிலையும் கனக்க விசயம் இருக்காம்.தண்ணிய குடிக்கிறது எண்டாலும் உமிழ்நீர் சுரக்க குடிக்க சொல்லீனம். உமிழ்நீர் இயற்கை தந்த அற்புத மருந்தாம் எல்லே...... ஆதாரம், உறுதி,போட்டோ,ஆராச்சி சான்று எல்லாம் கேட்கப்படாது. டொட்😎1 point
-
அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?
தமிழ் பேசும் அயலான் - 1,500 பேரின் உழைப்பில் தத்ரூபமாக உருவானது எப்படி? பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம், உண்மைக்கு மிக நெருக்கமான முழுநீள VFX காட்சிகளுக்காக அதிகம் பாராட்டை பெற்றுள்ளது. தமிழில் பேசும் ஏலியனாக தோன்றியுள்ள ‘டேட்டூ’ கதாபாத்திரம் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த ஏலியனை உருவாக்க 1,500 பேர் சேர்ந்து உழைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். “இந்திய சினிமாவிலேயே VFX கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட முழு நீளக்கதை இதுவரை வெளிவந்ததில்லை. அதை முதலில் செய்திருப்பது அயலான் என்பதில் எங்களுக்கு பெருமை” என்றார் VFX காட்சிகளை தயாரித்த பேந்தம் எஃப் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிஜாய் அற்புதராஜ். “இந்தப் படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அப்போது வெளிவந்திருந்தால், இந்த முயற்சிகள் இன்னமும் புதிதாக பார்க்கப்பட்டு இருக்கும். கடந்த ஆறு ஆண்டுகளில் வேறு பல படங்கள் VFX தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளன. இருந்தாலும் நாங்கள் அயலானில் செய்திருப்பதை எந்த படமும் செய்யவில்லை” என்று அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ அம்பத்தூரில் உருவாக்கப்பட்ட VFX ஹாலிவுட் படங்களைத்தான் தமிழில் மொழி மாற்றம் செய்து பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் அயலான் திரைப்படம் அதை மாற்றியமைத்துள்ளது என்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார், “அயலான் படத்துக்கு அவதார் படக்குழுவினர் பங்களித்ததாக சமூக ஊடகங்களில் சிலர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. அம்பத்தூரில் உள்ள குழுவினர் தான் இந்த VFX அனைத்தையும் உருவாக்கியது” என்கிறார். அடுத்தடுத்த திரைப்படங்களும் அறிவியல் தொழில்நுட்பத்துடனே அமைந்திடும் என்பதுடன், இன்னும் பிரமாண்டமான வடிவத்தில் அயலான்-2 உருவாக்கப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் அவர். பட மூலாதாரம்,RAVIKUMAR ஏலியனுக்கு எது அடிப்படை? அயல் கிரகத்தில் வாழும் உயிரினங்களை காட்சிப்படுத்துவதற்கு கற்பனையை மட்டுமே நாட வேண்டியுள்ளது. இப்போது பயன்படுத்தப்பட்டுள்ள ஏலியன் உருவத்திற்காக ஆய்வுகள் செய்து முடிவுக்கு வந்தோம் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். அதுபற்றி அற்புதராஜ் கூறும்போது “இந்த கதாபாத்திரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. எனவே ஏலியனின் உருவம் குள்ளமாக இருக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே இயக்குநர் சொல்லிவிட்டார். பார்ப்பதற்கு க்யூட்டாக கார்ட்டூன் கதாபாத்திரம் போல இருக்க வேண்டும் அதேநேரம் பொம்மை படம் என்றும் யாரும் கூறிவிடக்கூடாது அதற்கேற்ற வகையில் உருவம் மற்றும் நிறம் தேர்வு செய்யப்பட்டது. கிரே ஏலியன் (Grey alien) என்று கருத்தாக்கத்தை கொண்டுதான் இந்த ஏலியன் உருவாக்கப்பட்டது. கிரே ஏலியன் என்பது உலகம் முழுக்க இருக்கக்கூடிய ஒரு கருத்தாகும். ஏலியன் வந்ததை நேரில் பார்த்ததாக சொல்லக் கூடியவர்கள் அது எப்படி இருந்தது என்று விவரித்த விவரங்களைக் கொண்டு ஹாலிவுட் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட உருவம் தான் இந்த கிரே ஏலியன். எனவே இது யார் ஒருவருக்கும் சொந்தமானது அல்ல. அதன் அம்சங்களை எடுத்துக்கொண்டு நமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொண்டோம்” என்கிறார் அற்புதராஜ். பட மூலாதாரம்,X/@BEJOYRAJ ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் டைனோசர் என்ற அழிந்துபோன உயிரின வகையின் தோற்றத்தை மீண்டும் வடிவமைத்திருப்பார்கள். அதே போன்ற ஒரு முயற்சிதான் அயலான் என்கிறார் ரவிக்குமார், “ஜுராசிக் பார்க், டைட்டானிக் போன்ற படங்கள் எப்படி பிரமாண்டமாக இருக்கின்றனவோ, அதுபோன்ற படங்களை தமிழில் உருவாக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறோம். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் நம் ஊரிலேயே இருக்கின்றன.” என்று குறிப்பிட்ட அவர் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன என்றும் சுட்டிக்காட்டுகிறார். “ஹாலிவுட் நம்மை விட இன்னும் முன்னேறியதாக இருக்கிறது. அவர்களின் சந்தை பெரியது. எல்லா துறைகளிலும் இருப்பது போல, அவர்களின் நிபுணத்துவமும் இதிலும் அதிகம். எனவே, இப்போதிருக்கும் சூழலில் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,X/@@RAVIKUMAR_DIR அயலானின் தமிழ் முக பாவனைகள் டேட்டூ என அழைக்கப்படும் தமிழ் ஏலியன், பேச்சில் மட்டுமல்லாது முக பாவனைகளின் வழியாகவும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. “ஏலியன் திரையில் தோன்றினால் மட்டும் போதாது. இந்தப் படத்தில் ஏலியன் சிரிக்க வேண்டும், அழ வேண்டும், கோபப்பட வேண்டும். மனிதரை போல பல உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதை பார்க்கும் ரசிகர்களுக்கு புரியும்” அதற்காக பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம் என விவரித்தார் அற்புதராஜ். “முக பாவனைகளை துல்லியமாக வெளிக்கொணர ஏலியனின் வாய், கண் மற்றும் கன்னத்தில் உள்ள சதைகள் மிக முக்கியமானவை. Performance capture என்ற தொழில்நுட்பத்தின் மூலம், எங்கள் குழுவினர் பல பேரின் முக பாவனைகள் பதிவு செய்யப்பட்டு, அவை ஏலியனுக்கு ஏற்ற விதத்தில் பொருத்தப்பட்டன. இதனை சாத்தியமாக்கிட ஒருவர் ஹெல்மெட் போன்ற கருவியை தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும். அதன் மீது இருக்கும் ‘கோ ப்ரோ’ என்ற கேமரா முகபாவனைகளை பதிவு செய்துகொள்ளும். பின்னர் அதனை கணிணி வழியாக அயலானுக்கு மாற்றினோம்” என்று விளக்கினார். பட மூலாதாரம்,RAVIKUMAR மேலும் உடல் அசைவுகளை மொத்தமாக பதிவு செய்துகொள்ளும் தொழில்நுட்பமும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, அதுபற்றி அற்புதராஜ் விளக்கும்போது, “மற்ற படங்களில் ஸ்டுடியோவில் தான் மோஷன் கேப்சர் நடைபெறும். அதாவது ஒரு நபரின் உடல் அசைவுகளை பதிவு செய்யும் முறை. ஆனால் அயலான் திரைப்படத்திற்காக படப்பிடிப்பு தளத்திலேயே, பாடி சூட் என்பதை ஒருவர் அணிந்து கொண்டு, அவருடைய அசைவுகள் பதிவு செய்யப்பட்டன” என்று விளக்கினார். பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ 1,500 பேர் உழைப்பு அயலான் திரைப்படத்தை உருவாக்குவதில் 1,500 பேர் உழைத்துள்ளார்கள் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, Phantom FX என்ற நிறுவனத்தில் மட்டும் 650 பேர், மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்து இயங்கிய சிறிய நிறுவனங்களின் வழியாக 800 பேர் பணியாற்றியுள்ளனர். ஒரு வாகனம் உற்பத்தி செய்யும்போது எப்படி துணை நிறுவனங்களிலும் உற்பத்தி நடக்குமோ அப்படித்தான் இந்த படத்திற்கான வேலைகளும் நடந்தன என படக்குழுவினர் விளக்கினார்கள். “VFX குழுவில் 16 துறைகள் உள்ளன. இந்த துறையின் செயல்பாடுகள் ஒரு பொம்மலாட்ட தயாரிப்பு போன்றவைதான். முதலில் பொம்மைகளுக்கான உருவத்தை தயாரிக்க வேண்டும். அது VFX -ல் மாடலிங் எனப்படும். அந்த பொம்மைக்கு கம்பிகள் கட்டி அதை அசைக்க வேண்டும். அது ரிக்கிங் எனும் துறையால் செய்யப்படும். அடுத்து அந்த பொம்மையை நடக்க வைக்க வேண்டும். அது அனிமேஷன் என்னும் துறை செய்யும். அதன் சருமம் எப்படி இருக்க வேண்டும் என்பதை டெக்ஸ்சர் துறை தீர்மானிக்கும். அதே போன்று ஆடைகள், தலைமுடி என ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் வெவ்வேறு துறையினர் செய்தனர். ஒரு ஷாட் முழுமை பெற 40 பேர் தேவைப்படும். அயலான் படத்தின் மொத்த செலவில் 50%க்கும் மேல் VFXக்காக செலவிடப்பட்டது. ஏனென்றால், VFXஎன்பது இந்தப் படத்தில் ஒரு பகுதி அல்ல, படம் முழுக்கவே VFX தான்.” என்று கூறுகிறார் அற்புதராஜ். பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ ஒரு திரைப்படத்தை முழு நீள VFX தொழில்நுட்பத்துடன் உருவாக்கும் போது அதற்கான செலவுதான் முதல் சவாலாக உள்ளது. இத போன்ற தமிழில் செய்ய முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. இதுபோன்ற தடைகளையும் தயக்கங்களையும் அயலான் உடைத்துள்ளதாக அற்புதராஜ் கூறுகிறார். தற்போது வரை இந்தப் படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. “VFX செய்ய, மும்பை செல்ல வேண்டும், ஹாலிவுட் செல்ல வேண்டும். அங்கு சென்று அதிகமான செலவு செய்தால் தான் தரமான VFX கிடைக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் அயலான் உடைத்துள்ளது. எங்கள் நிறுவனம் 15 வருடங்களாக இங்குதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்களை முழுமையாக யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என நம்பிக்கையுடன் பேசுகிறார் அற்புதராஜ். https://www.bbc.com/tamil/articles/ce4d3dv777do1 point
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
அதைத் தான் அண்ணா கடைசியாக கேட்டார்கள். அதற்கும் எதுவுமில்லை. அத்துடன் இங்கே வந்திருந்தவர்களுடனான சந்திப்புகள் அதிகமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன.1 point
-
உலகத்துக்கு தமிழனை அறிமுகம் செய்தவர்.
தலையங்கம் பிழை ....வைரமுத்து சென்ற நாட்டு விமான நிலைய ஊழியர்களுக்கு அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால் தமிழ் மிகவும் தொன்மையான மொழி . அதை அறியாமல் இருந்தது அவர்களது அறிவீனம். இந்தியாவில் ஹிந்தி தவிர வேறு மொழிபேசுபவர் (தமிழ் ) இருக்கிறார்கள் என்பது அவர்களது அறிவீனம். நான் சொல்வது சரிதானே ?1 point
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இருந்தால் தானே வைப்பது ?? பேச்சுவார்த்தை தோல்வி இல்லை ஏமாத்திட்டீங்களே என்பது தான் சரி ஏனெனில் அரசாங்கத்திடம் ஏதுமில்லை அரசாங்கம் என்ன வைத்திருந்தது ?? கொடுப்பதற்கு என்று எவருமே கேட்கவில்லை ஏன்??1 point
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
ஓ....கோவ காயை வெட்டுறதிலையும் விசயம் இருக்கு எண்டுறியள் இதை கையால சாப்பிடுகிறீர்களா கம்பிலால சாப்பிடுகிறீர்களா என்பதிலும் நிறைய விடயமிருக்கு.1 point
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
என்னிடம் நீளமாக எழுத எதுவும் இல்லை. The crux of the matter: 1. உங்கள் தவறான தரவுகள்: நீங்கள் ஓரின உறவை மனநோய் என்று தவறாகக் குறிப்பிட்டீர்கள். இது முதல் தடவையல்ல. மேலே கூட பால் மாற்ற சிகிச்சைகளைக் குழந்தைகளில் செய்கிறார்கள் என இணையக் குப்பையில் இருந்து ஆதாரமில்லாத தகவலை இங்கே பதிந்திருக்கிறீர்கள். ஓநாய் வீடியோ தேடும் நேரத்தின் பத்திலொரு பங்கு நேரம் போதும் - AAP இன் பால் மாற்ற சிகிச்சை விதிகள் எவையென்று தேடிப்பார்க்க. இப்படியான தவறான தகவல்களை எழுதி விட்டு சவாலுக்குட்படுத்துபவனை அடக்கு முறையாளன், சூடு சொரணையற்றவன் என்று சம்பந்தமேயில்லாமல் திட்டல் வேற. 2. திரியோடு ஒட்டிய கருத்து: ஈராக், ஈரான், மேற்கு பற்றிய திரியில் ஒரு பாலின உறவு , பால் மாற்றம் பற்றிய பொய் தரவுகளை யார் கொண்டு வந்தது? வாசகர்களே தேடிப் பார்க்கட்டும். 3. சீண்டல்: உங்கள் மருந்தே உங்களுக்கு ஏன் கசக்கிறது? நேரே பதில் சொல்லும் துணிவோ, நேர்மையோ இல்லாமல் உங்கள் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டும் உறுப்பினர்களை எப்படி நீங்கள் விளித்திருக்கிறீர்கள் இது வரை? எனவே உங்கள் பாணியிலேயே ஈரானைப் பற்றி எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் புரிந்திருப்பது திருப்தி. பி.கு: இணையத்தில் கலாச்சார யுத்தம் நடத்தும் தீவிர வலது சாரிகள், தங்கள் மருத்துவ/அறிவியல் அடிப்படையற்ற குப்பைகளைப் பரப்ப உங்கள் போன்ற ஆட்களை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் தகவல்களை சரி பார்க்காமல் யாழுக்கு எடுத்து வருகிறீர்கள் - உங்களுடைய இந்த அறிவடிமைத் தனம் பற்றி ஒரு கரிசனைகூட இல்லாமல், சரியான தகவலைத் தர முயல்பவனை நோக்கி பாட்ஷா பாணி மிரட்டல் விட்டிருக்கிறீர்கள், அச்சம் வரவில்லை, புன்னகையே வருகிறது.1 point
-
குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!
1 point
-
துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 11:24 AM துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மூவரடங்கிய நீதியரசர் குழாம் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்க ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பையே உயர்நீதிமன்றம் வலிதற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/1741361 point
-
தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்
1 pointஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விறுவிறுவென பாய்ந்த மாடுபிடி வீரர்களை சுத்தவிடும் காளைகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று காலை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்றைய போட்டியில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் அருண் விஜய் வந்துள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு அருகில் மேடையில் அமர்ந்திருந்த அவர், ஜல்லிக்கட்டை தான் நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை என்றும், தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளுடன் இதை நடத்தி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் எட்டு சுற்றுகள் வரை இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 வீரர்கள் பங்கேற்பார்கள். ஒரு சுற்றில் காளையை அடக்கி வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தகுதி பெறுவர். மூன்றாவது சுற்று வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கான முதலுதவி வழங்க ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்திலேயே மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களும் தயாராக உள்ளன. இதுவரை ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சுற்றுகளில் எட்டு காளைகளை அடக்கி, அபிசித்தர் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தப் போட்டியில் வி.கே.சசிகலாவின் காளையும் பங்கேற்றது. அந்தக் காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், நாணயம், உள்ளிட்ட பரிசுகளை அமைச்சர் உதயநிதி வழங்கி வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர். அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ காரணங்களுக்காக ஏழு மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து கமிட்டியினர்தான் முடிவு செய்வார்கள். அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ளதன்படி சாதிப் பெயர்களைக் குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன். மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதிப் பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விதிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என இந்த ஆண்டின் மூன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் கடைப்பிடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்து வருவதாக விழா பொறுப்பான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c6p1y69nqmlo1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசென்னை விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் அல்லது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ சாதாரண மக்கள் என்ற அடிப்படை அறிவில்லாத செயல்.1 point- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
அப்போ முழு பைத்தியங்கள்தான் நாகசாகியிலும் ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் கருத்துக்களை சரியாக புரிய முடியவில்லை1 point- டாடோ என்கின்ற டாலிபோ
1 pointஎங்கடை ஆக்கள் வீட்டு வேலையளுக்கு வைச்சிருக்கிற ஆக்களை பார்த்தால்....... நாம் எல்லோரும் ஒரே நீரோட்டத்தில் உள்ளவர்கள். சட்டப்படியான தொழில் நுட்பத்தில் கறுப்பாய் இருந்து செவ்வனே செய்து தருவார்கள்.1 point- யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
சிறப்பாக உள்ளது. இந்தியா செந்தில் தொண்டமானை கொண்டு ஜல்லிக்கட்டு மாட்டு சண்டையை இலங்கை தமிழர்களிடம் திணிக்க முயற்ச்சித்ததிற்கு பதிலாக பட்டத்திருவிழாவை தமிழர்கள் பிரதேசங்களில் நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம்.1 point- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகம் நூலகம் இணையத்தில் இருக்கிறது. https://noolaham.net/project/720/71906/71906.pdf "ஒஸ்லோ பிரகடனம்" என்று அழைக்கப் படும் தீர்மானத்தின் விளக்கம் பக்கம் 669 இல் இருந்து 672 வரையான பகுதியில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். என் அபிப்பிராயம்: புலிகளுக்குப் பின்னான காலத்தில் "எக்க ராஜ்ஜிய, எக்கிய ராஜ்ஜிய" என்று தமிழ் அரசியல் விமர்சகர்கள் "சொற்சிலம்பம்" ஆடியது போலவே ஒஸ்லோ பேச்சு வார்த்தையிலும் சொற்களை வைத்து இரு தரப்பும் விளையாடியிருக்கின்றனர். பக்கம் 672 இல் தடித்த எழுத்தில் இருப்பதைப் பார்த்தால், புலிகள் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்" என்ற மன நிலையில் இருந்திருப்பதாக நான் கருதுகிறேன்.1 point- பிக்குகள் மாத்திரம் காவி உடையணியும் சட்டம் வேண்டும்: ஒரு சில தேரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது! - உதய கம்மன்பில
சுரேன் உடனே பேச்சுவார்த்தை வைத்து இரண்டு வசனத்தை எழுதி விட்டு தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று இமயமலை அளவில் பொய்யை குறுகிய நேரத்தில் சொல்லி சும்மா இருந்த பலரையும் குழப்பத்தில் ஆழ்த்திய பிக்குமாரின் மொட்டைகளின். காவி பறிபோகின்றது பறிக்கப்படபோகிறது 😂🤣1 point- தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
1 pointபன்மொழிப் புலமை, சட்டவாளர் இதெல்லாம் தலைமைக்கு வெளிப் பூச்சுகளே... இனம் சார்ந்து சிந்திக்கும், தம் இன மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களுடன் களத்தில் இறங்கி வேலை செய்யும் தலைமை வேண்டும். கோட்டுப் போட்டவர் தான் தலைமைக்குரியவர் என்ற மனநிலை மாற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்1 point- கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
இது தான் நான் கொழும்பில் வீடுகள் கட்ட விரும்பவில்லை 🤣😂1 point- யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
யாழ். வல்வெட்டித்துறையில் பட்டத்திருவிழா தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்று (15) யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் பட்டத்திருவிழா இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற குறித்த பட்டத்திருவிழாவில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டுள்ளனர். படங்கள் – சமூகவலைதளம் https://thinakkural.lk/article/2882181 point- யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
அருமையான பட்டங்கள் அற்புதமான கலைஞர்கள் .......அனைவருக்கும் பாராட்டுக்கள்.......! 👍1 point- யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
வல்வை பட்டப்போட்டியில் “ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்” முதலிடம் பெற்றது! adminJanuary 16, 2024 யாழ்ப்பாணம் வல்வை உதயசூரியன் கடற்கரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டியில் 60ற்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறந்து போட்டியில் பங்கெடுத்திருந்தன. போட்டியில் முதலாம் இடத்தினை, “ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்” என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த வினோதன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடத்தினை ” விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கை கோள்” என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை , அந்த பட்டத்தினை வடிவமைத்த பிரசாந்த் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தினை ” ஏலியன்ஸ் மர்ம தாக்குதல் விமானம்” என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த கம்ஸன் பெற்றுக்கொண்டார். https://globaltamilnews.net/2024/199807/1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இறுதியில், யானை பார்த்த குருடனின் நிலையில் இந்தத் திரியின் நிலை 🤣1 point- நானும் கவிதாயினியும்.....💕
1 pointகூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே வந்தத் துணையே வந்து அணையே அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டுத்துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே...💞1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- Society of the snow - சிறு குறிப்பு
நானும் புதுவருடம் பிறந்த அன்று பார்த்தேன். மிகவும் சவாலான சூழலிலும் மனிதர் தம்மைக் காத்துக்கொள்ள போராடுவர் என்பதும் நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் உள்ளவர்கள் என்பதும் தத்ரூபமாகக் காட்டப்ப்டிருந்தது. 60 நாள்வரை தாக்குப்பிடித்த நூமா இறந்தது கொடிய தருணம். நரமாமிசம் உண்ணமாட்டேன் என்று இறுதிவரை இருந்தார். முன்னர் ஏற்பட்ட காயத்தின் தொற்றினால் இறந்தார். அவரின் இறப்பு எஞ்சியோருக்கு மேலும் ஓர்மத்தைக் கொடுத்து இருவர் பத்து நாட்கள் மிகவும் சவாலான பனிமலையைக் கடந்து, 60 km க்கு மேல் உறைபனிக்குள் நடந்து சிலி நாட்டுக்குள் மனிதர்களை ஓர் ஆருக்கு எதிர்ப்பக்கம் சந்திக்கின்றார்கள். அது எஞ்சியோரை மீட்க உதவுகின்றது. கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு படம்.1 point- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
அடி ஆத்தி இது எப்ப நடந்தது?1 point- சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
சர்க்கரை - இனிப்பு, பாகற்காய் - கைப்பு. ஆகவே நீரிழிவு நோய்க்குப் பாகற்காய் நிவாரணம் என்று ஒரு புரளி உள்ளது. பாகற்காயில் சர்க்கரை நோயை எதிர்க்கும் ஆற்ற்றல் இல்லையாம். அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்ப்பொருளைக் கொண்டுள்ளதால் இரத்தத்தில் சீனியின் அளைவைக் கட்டுப்படுத்தும். அதுபோல் கோவைக்காய் கைப்பாக இருப்பதால் சர்க்கரை நோய் எதிரியாகக் கருதப்படலாம். எதற்கும் கோவைக்காயில் என்ன மருத்துவப் பொருள் உள்ளது என்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. கட்டுரையாளர் கோவைக்காய் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகிறாரே தவிர எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை.1 point- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
நன்றி இவ்வளவு தான் உங்கள் தாயகப்புரிதலும் வரலாற்று படிப்பும்.1 point- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இலங்கை தமிழருக்கு பலமுறை தீர்வுகள் கிடைத்துள்ளது ஆனாலும் தமிழன் தலைகீழாக. கட்டி தொங்க விட்டு அடித்து கொல்லப்படுகிறான் ..அதுவும் காவல்துறை என்றழைக்கப்படும். பொலிஸாரினால் செல்வா-பண்டா ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான தீர்வு இல்லை செல்வா- டல்லி ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான தீர்வு இல்லை இப்படி பல ஒப்பந்தம்கள் கடந்த காலங்களில் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே இவையெல்லாம் தமிழருக்குகான தீர்வுகள் இல்லை நடைமுறை படுத்தப்படாத எந்தவொரு ஒப்பந்தமும். பேச்சுவார்த்தையும். தமிழருக்குகான தீர்வுகள் இல்லை அவை குப்பைகள் பழைய கடுதாசிகள். பழைய பேப்பர் கழிவு பேப்பர் அவற்றை தீர்வு என்று அழைப்பது. முட்டாள் தனம் இப்போது சுரேன் எழுதிய இமயமலை பிரகடனம் சுரேனிடம் மட்டுமே உண்டு மற்றைய அனைவரும் கிழித்து குப்பையில் போட்டு விட்டார்கள் ஆகவே அது தீர்வு இல்லை இந்த பிரகடனத்தின் மூலம் இதுவரை இலங்கை மக்கள் சமனாக நடத்தப்படவில்லை என்று இதன் பிரதிகளை பெற்றுக்கொண்ட அனைவரும் தங்களை அறியாமலேயே எற்றுக்கொண்டு உள்ளார்கள்1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஜனநாயகவழிப் போராட்டத்திலிருந்து விலகி ஆயுத வழி விடுதலைக்கு ஆதரவளிக்கத் தயாரான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் போரின் சரித்திரத்தில் 1984 ஆம் ஆண்டு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த வருடத்திலேயே ஜனநாயக வழி பேச்சுவார்த்தைகள் மீதான தமது நம்பிக்கையினை தமிழ் மக்கள் முற்றாகக் கைவிட்டிருந்தனர். அந்த வருடத்திலேயே ஜனநாயகவழி மிதவாத அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு ஆக்ரோஷமான, ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்திருந்தனர். தமிழர்களின் இந்த மாற்றம் சிங்களத் தலைமைக்கும் ஒரு பங்களிப்பினை வழங்கியிருந்தது. குறிப்பாக ஜெயவர்த்தனவுக்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் இது பங்களிப்பினை வழங்கியிருந்தது. தமிழ் மக்கள் மீது தாம் தொடர்ச்சியாக நடத்திவந்த அடக்குமுறைகளுக்கூடாகவும், வன்முறைகள் மூலமாகவும் தமிழ் மக்களை வன்முறை நோக்கித் தள்ளுவதில் சிங்களத் தலைமை வெற்றி கண்டிருந்தது. அத்துடன், ஜனநாயக வழியில் அதுவரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியலையும் அது குழிதோண்டிப் புதைத்தது. தமிழ் மக்களின் இந்த மனமாற்றத்திற்கு அரச, தனியார் ஊடகங்களும் பெரும்பங்காற்றியிருந்தன. சிங்கள அரசுத் தலைமையின் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும், கொம்பு சீவிவிடும் கைங்கரியத்தை அவை கச்சிதமாகச் செய்துவந்தன. அவர்கள் மத்தியில் இருந்துகொண்டு, நடந்துவரும் இந்த அக்கிரமத்தைக் கவலையுடனும், மெளனமாகவும் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தேன். செயற்றினற்ற , ஜனநாயக வழி மிதவாதத் தலைவர்களின் கைகளிலிருந்து தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை, செயற்றிறன் மிக்க, ஆக்ரோஷமான ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். இந்த மாற்றத்தை நான் என்னால் உணரவும், கண்டுகொள்ளவும் முடிந்தது. "விலகி நில்லுங்கள், உங்களால் நாம் பட்ட அடிகள் போதும், எங்களைத் திருப்பியடிக்க விடுங்கள்" என்று இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை நோக்கி ஆத்திரத்துடன் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். சித்திரையில் புலிகளால் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலும், அதற்குப் பழிதீர்க்க இராணுவம் நடத்திய பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் இளைஞர்களின் இந்தக் கூக்குரலுக்கு மேலும் வலுச் சேர்த்தன. வீதிகளில் அராஜகத்தில் ஈடுபட்ட இராணுவத்தையும், பொலீஸாரையும் மீண்டும் அவர்களது முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கும் திருப்பியனுப்பி அடக்கிவிடும் பலம் தமக்கு இருப்பதை பொதுமக்களும், இளைஞர்களும் முதன்முதலாக உணர்ந்துகொண்டதும் அப்போதுதான். இக்கணத்திலிருந்து சுமார் ஒருவருட காலத்திற்கு அவர்களால் இதனை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்திருந்தது. தெற்கின் ஊடகங்களும் தமிழ் மக்களும் கொழும்பு ஊடகங்கள் மீதான தமிழ் மக்களின் வெறுப்பும் இக்காலகட்டத்திலேயே அதீதமாக வளர்ந்துவந்தது. அப்பாவிகளின் படுகொலைகளை நியாயப்படுத்தியும், கொல்லப்பட்டவர்களைப் "பயங்கரவாதிகள்" என்கிற பெயரில் அழைத்து, தமது இராணுவத்தினரின் வீரச்செயல்கள் என்று அவை தலைப்பிட்டு எழுதியபோது தமிழ்மக்கள் கொதித்துப் போயினர். தமிழ் மக்களின் மீதான அரச இராணுவத்தின் படுகொலைகளைத் தாம் நியாயப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அதேபொதுமக்களை உறுதியும், தீவிர நிலைப்பாடும் கொண்ட ஆயுதம் ஏந்திய, இலட்சிய வெறிகொண்ட இளைஞர்களை நோக்கித் தள்ளிவிடுகிறோம் என்பதை இந்த ஊடகங்கள் உணரத் தவறிவிட்டிருந்தன. என்னுடன் கூடவே பணிபுரிந்தவர்களும், ஏனைய ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் சித்திரையில் இராணுவம் நடத்திய அட்டூழியங்களை நியாயப்படுத்தியும், பாராட்டியும் எழுதி, அழிவுப்பாதை நோக்கி நாட்டை மேலும் மேலும் தள்ளியபோது நான் அடைந்த வேதனைக்கும் விரக்திக்கும் அளவே இருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் திகதி இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய அக்கிரமங்களையும், பதிலடியாக தாக்கப்பட்ட நாகவிகாரை பற்றியும் அவர்கள் எழுதிய செய்திவிபரிப்புக்களை மீண்டும் அவர்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலும், யாழ் அடைக்கலமாதா ஆலயம் மீது அவர்கள் வேண்டுமென்றே நடத்திய தாக்குதலும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்திருந்தது, குறிப்பாக யாழ்ப்பாண கரையோரம் எங்கிலும் வாழ்ந்துவந்த கத்தோலிக்கத் தமிழர்கள் இச்சம்பவங்களால் பெரிதும் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆத்திரமேலீட்டால் உந்தப்பட்ட பொதுமக்கள் திரண்டுசென்று யாழ் நாகவிகாரையை அடித்து நொறுக்கினார்கள். புலிகள் இந்தச் சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பாவித்தார்கள், ஆனால் இச்சூழ்நிலை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தநாட்களில் கிட்டு அங்கே இருந்தார். கொதிப்படைந்திருந்த மக்களுக்கு கைய்யெறிகுண்டுகளையும், பெற்றொல்க் குண்டுகளையும் அவரே வழங்கினார். சித்திரை 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன்பின்னராக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் அட்டூழியங்கள், பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். சரியான விசாரணைகளின்பின்னரே நான் அவற்றினை இங்கே பதிந்திருந்தேன். இரு சுயகெளரவம் மிக்க இனங்கள் இனமுரண்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன என்கிற உண்மையினை சிங்களத் தலைவர்களும், அவர்களை ஆதரித்த ஊடகங்களும் பார்க்கத் தவறிவிட்டன. நீங்கள் ஒரு இனத்தை மகிழ்விக்க மற்றைய இனத்தை துன்புறுத்த முடியாது. நீங்கள் அப்படிச் செயற்படும்போது, பாதிக்கப்படும் இனம் நிச்சயம் ஆத்திரம் கொள்ளும். ஆத்திரம் கொள்ளும் அந்த இனம் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும். இலங்கையின் நலன்கள் இந்த இரு இனங்களினதும் நலன்களிலும் தங்கியிருக்கிறது. இவ்வினங்களின் மதங்கள், மொழிகள், தனித்தன்மை வாய்ந்த அவர்களின் அடையாளங்கள் என்று அனைத்தும் காக்கப்படும்போது மட்டுமே மொத்த நாட்டினதும் நலன்கள் காக்கப்படும். தமக்கான தனிநாடு ஒன்று தேவையென்று உணர்ந்த தமிழர்களும், உதவிய ஜெயவர்த்தனவும் தமிழ்மக்கள் தமக்கென்று தனியான நாடொன்று வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு 1983 ஆம் ஆண்டில் வர ஜெயவர்த்தனவே காரணமாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன். 1983 ஆடியில் அவர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியிலான வன்முறைகள் அவர்கள் தம்மைத் தனியான தேசம் என்று உணர வழிசமைத்தது. 1984 இல் நடைபெற்ற அவர்கள் மீதான தொடர்ச்சியான இராணுவ வன்முறைகள் இந்த உணர்வை அவர்கள் மனதில் உறுதிப்படுத்தியது. சித்திரைப் படுகொலைகளின் பின்னரான நாட்களில் நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். என்னுடன் யாழ்ப்பாணத்தில் பேசிய இளைய போராளியொருவர் இப்படிக் கேட்டார், "தாக்குதல்களில் இருந்து தமதுயிரைக் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் வேண்டுமென்றே தாக்கியது. அப்படி ஓடிக்கொண்டிருந்த பொதுமக்கள் சிங்களவர்கள் என்றால் ராணுவம் அப்படி நடந்துகொண்டிருக்குமா? அப்படியானால் தமிழர்களைத் தமது எதிரிகள் என்றல்லவா இந்த இராணுவம் பார்க்கிறது? அப்படியானால் தமிழர்கள் தனியான ஒரு தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றல்லவா அர்த்தம்?" என்னிடம் பதில் இருக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு, சித்திரை மாத நடுப்பகுதியளவில் தமிழர்கள் தீர்க்கமான நிலைக்கு வந்திருந்தனர். எனது ஊரான அரியாலையில் வருடப் பிறப்பிற்கான விடுமுறையில் நின்ற நாட்களில் என்னிடம் பேசிய சில இளைஞர்கள், "ஜெயவர்த்தன தனது இராணுவத்தைக் கட்டியெழுப்புகிறார்.அவர் ஒருநாளுமே தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப்போவதில்லை. நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்கள். அவர்களின் தொனியில் இருந்த உறுதிப்பாட்டை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த அத்தியாயமும், இனிவருபவையும் இளைஞர்களின் உறுதிப்பாட்டின் விளைவுகள் குறித்து தொடர்ந்து விபரிக்கும். ஆயுத அமைப்புக்களும் அவர்களின் செயற்பாடுகளும் 1984 ஆம் ஆண்டுப்பகுதியில் ஐந்து பிரதான ஆயுத அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஈரோஸ் ஆகியனவே அந்த ஐந்தும் ஆகும். பிரபாகரன், சிறிசபாரட்ணம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் மற்றும் பாலகுமார் ஆகியோர் இந்த அமைப்புக்களின் தலைவர்களாக இருந்தனர். இவற்றுள் புலிகளே வீரியம் கொண்டு இயங்கினார்கள். அவர்களையடுத்து டெலொவும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் செயற்பட்டு வந்தன. புளொட் அமைப்பும் ஈரோஸும் ஏறக்குறைய செயலற்றுக் காணப்பட்டன. அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கென்று தனித்தனியான கொள்கைகள், அணுகுமுறை, திட்டமிடல் ஆகியவனவற்றைக் கொண்டிருந்தார்கள். பிரபாகரன் ஒரு அதிதீவிர தேசியவாதியாகத் திகழ்ந்தார். திறம்படப் பயிற்றப்பட்ட, இலட்சிய உறுதியும், கட்டுப்பாடும் கொண்ட படையணியொன்றினை அவர் கட்டிவந்தார். போரிடும் திறன், தனிமனிதவொழுக்கம், ஆயுதக் கைப்பற்றல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது போராளிகளை அவர் வளர்த்தெடுத்தார். ஆயுதக் கைப்பற்றலில் அவருக்கென்று கொள்கையொன்று இருந்தது. "எந்தளவிற்கு இராணுவத்திடமிருந்தும், பொலீஸாரிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடியுமோ, அந்த அளவிற்குக் கைப்பற்றுங்கள். இந்திய இராணுவாத்திடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள். உங்கள் எதிரியிடமிருக்கும் ஆயுதங்களை விடவும் சிறப்பான ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொள்ளுங்கள்" என்பதே அது. இராணுவத்தினருடனும், ஏனைய போராளி அமைப்புக்களுடனும் ஒப்பிடும்போது நவீன ஆயுதப் பாவனையில் புலிகள் ஒரு படி முன்னால் நின்றிருந்தனர். போராட்டத்தை இயங்குநிலைக்குள் வைத்திருப்பதிலும் பிரபாகரன் தனக்கென்று ஒரு கொள்கையினை வைத்திருந்தார். நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதன்படி அவரது கொள்கைகள் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டவனையாகக் காணப்பட்டன. "உங்களை இயங்குநிலைக்குள் வைத்திருக்க இராணுவம் ஏற்படுத்தித்தரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள். இராணுவத்தைத் தொடர்ச்சியாகச் சீண்டிக்கொண்டிருங்கள். அவர்கள் பொதுமக்களைத் தாக்கும்போது அவர்கள் தமது பாதுகாப்பிற்காக எம்பின்னால் அணிதிரள்வார்கள்" என்று அடிக்கடி அவர் தனது போராளிகளுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். இந்தக் கொள்கையினையே வெற்றிகரமான தளபதிகள் கைக்கொண்டுவந்ததாக தனது சகாக்களுடனான கலந்துரையாடல்களின்போது பிரபாகரன் கூறிவந்திருக்கிறார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இதேவகையான வழிமுறையினைக் கைக்கொண்டதாகவும், அவ்வியக்கத்தின் இயங்குநிலைக்கான சந்தர்ப்பங்களை இஸ்ரேலிய இராணுவத்தினரே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். வெலிக்கடைச் சிறைப்படுகொலைகளின்போது தமது தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரை இழந்திருந்த டெலோ அமைப்பினர் தமக்கென்று கொள்கையொன்றினை வைத்திருக்கவில்லை. இந்தியாவிடமிருந்தும், ரோ அமைப்பினரிடமிருந்துமே சிறீசபாரட்ணம் கட்டளைகளைப் பெற்றுவந்தார். பத்மநாபா மாக்சியவாதியாக தன்னை காட்டிக்கொண்டார். அதனால் சமூகத்தின் அடிப்படை மட்ட மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் உட்பட அனைவருக்கும் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக மக்கள் எழுச்சிப் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தினை மாற்றவேண்டும் என்று அவர் பேசிவந்தார். இராணுவ ரீதியில் போராட்டத்தை இயக்குவதை அவர் எதிர்த்தார். மக்களை இராணுவ ரீதியிலான போராட்ட வழிமுறை பாதிக்கும் என்று அவர் வாதாடினார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று அறியப்பட்டவை அனைத்துமே அவ்வமைப்பிற்குள் இயங்கிவந்த சிறிய இராணுவ அமைப்பினால் நடத்தப்பட்டவை மட்டுமே. ஆனால், தமது அமைப்பிற்கென்று பலமான ஆயுத வளத்தை அவர்கள் அப்போது கொண்டிருந்தனர். உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பு அதிகளவான உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும்கூட அவரது அமைப்பு ஏறக்குறைய செயலற்ற நிலையிலேயே இருந்துவந்தது.தேசிய புரட்சிபற்றி அவர் தொடர்ந்து பேசி வந்தார். அவரைப் பொறுத்தவரை, தமிழ் ஈழ விடுதலை என்பது அந்த தேசிய போராட்டத்தின் ஒரு அங்கம் என்று கருதப்பட்டது. ஈரோஸ் அமைப்போ எப்போதும்போல் தமக்குள் ஒருவிடயம் தொடர்பாக முடிவெடுக்கும் திராணியற்று, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள் என்று தமது காலத்தைக் கடத்தி வந்தது.1 point - பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.