Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14675
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/12/25 in all areas

  1. இன்றும் தொடர்கிறது அன்று சோழர்கள் இன்று சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் அன்று அதிகாரத்தில் உள்ள சோழர்கள் செய்தனர் இன்று அதிகாரத்தில் உள்ள சிங்கள இராணுவம் செய்கின்றது அன்றைய சோழ எகாதிபத்தியவாதிகள் இன்றைய அமெரிக்கா எகாதிபத்தியவாதிகள் போல நட்ந்து கொண்டனர்🤣 😅🤣
  2. ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..! பீகாரைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்து குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து, போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர். இந்நிலையில் வடமாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று, ஆசிரியர் கானிடம் படித்த சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டியுள்ளனர். மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேவேளை ராக்கி குறித்து உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு பேசிய ஆசிரியர் கான், தனது மணிக்கட்டில் 15,000-க்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் இதன் எடை காரணமான கையை கூட உயர்த்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1442513
  3. பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள் அமைப்பினரால் காரைநகரில் அத்தியாவசியப் பணி நிறைவேற்றப்பட்டது கடந்த 04/07/2025 வெள்ளிக்கிழமை அல்வின் வீதி, காரைநகரைச் சேர்ந்த திரு வே.நாகராசா (3பேர் விசேட தேவை உடையவர்கள்) ஐயாவின் வீட்டிற்கு குடிநீருக்காக புதிய தண்ணீர்தாங்கி பொருத்தி, பழுதடைந்திருந்த மலசலகூடத்தினை மீளப்புனரமைப்பு செய்துள்ளோம். இப்பணிகளுக்காக 44110 ரூபா செலவு செய்துள்ளோம். இந்த அத்தியாவசியப் பணியை செய்ய நிதி உதவி அளித்த பே்மிங்காம் (2016) உதவும் கரங்கள் அமைப்பினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விசேடமாக இவ்அமைப்பின் செயற்பாட்டாளர்களான திரு கதிர் அண்ணா, திரு இராசகுமார் அண்ணா, திரு ஜெயசசி அண்ணா ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளை பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முயன்று செய்வித்த புலர் அறக்கட்டளையின் பொருளாளர் திரு கு.பாலகிருஸ்ணாவிற்கும் கணக்காய்வாளர் திரு சி.சிறீரங்கன் அவர்களிற்கும் J/46 கிராம சேவகராக உள்ள திருமதி ப.சிவப்பிரியா அவர்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி குயிலினி ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிகிறோம். உதவிகள் செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் கீழுள்ள எமது WhatsApp இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். +94 77 777 5448 +94 77 959 1047 ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.
  4. ஏதோ ஒரு பிரச்சினை குமையிது....நெருப்பில்லாமல் புகைவராது....பாவம் நம்ம என்.பி .பி வாலுகள்..
  5. மைத்திரி - ரணில் அரசாங்க உறவும் ஹர்த்தாலும் ******** ****** **** *இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் முன்வைத்த யோசனை. *இராணுவ எண்ணிக்கை குறைப்பு - IMF பரிந்துரை! *முல்லைத்தீவு சம்பவத்துக்கு பின்னணி இதுதான்! *** *** *** 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், 2009 இற்கு முன்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டம் ஒட்டுமொத்த இன விடுதலை என்ற அடிப்படையில் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான முப்பது வருடங்கள் அதாவது, 1950 களில் இருந்து அஹிம்சை வழியில் நடந்தன. அது சட்ட மறுப்பு போராட்டமாகவே இருந்தது. இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் யாப்புச் சட்டங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதை மையப்படுத்தியே "தமிழ்த் தேசியம்" என்ற கோட்பாடு எழுந்தது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் தான், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேச முடியும் என்ற புதிய கற்பிதம் ஒன்றை சில தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்தனர்... இக் கற்பிதம் வேடிக்கையானது என்ற பின்னணியில், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தை எப்படி நோக்குவது? தேர்தலில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரிப்பது என்ற ஒரேயொரு இலக்கைத் தவிர, வேறு அரசியல் உத்திகள் - இராஜதந்திரம் எந்த ஒரு அரசியல் கட்சியிடமாவது இருந்ததா? ஆகக் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு நிதி வழங்கும் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைத்திருந்தன. ஆனால், இப் பரிந்துரைகள் கூட உரியமுறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி பிடிவாதமாக நின்று அழுத்தம் கொடுத்ததா? இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்துக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்ததாக எகனாமி நெக்ஸ்ட் (EconomyNext) என்ற சஞ்சிகை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசுரித்திருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது. இக் கட்டுரையை மேற்கோள் காண்பித்து "த டிப்ளோமற்“ (thediplomat) என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த ரதீந்திர குருவிற்ற (Rathindra Kuruwitaa) என்ற சிங்களப் பத்திரிகையாளர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund - IMF) மகிழ்விக்க, ரணில் இராணுவ எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக விமர்சித்திருந்தார். ஆனாலும் ஐஎம்எப் வழங்கிய பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச செலவினங்களை குறைக்க, இராணுச் செலவினங்களை குறைப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை ரணில் அப்போது செய்திருக்கிறார். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பற்றி ஐஎம்எப் ஒருபோதும் வெளிப்படையாக பரிந்துரைக்கவில்லை. அவ்வாறிருந்தும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேபிவியும் ரணிலின் இராணுவ எண்ணிக்கை குறைப்பு முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. ஐஎம்எப்பின் பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமே தவிர, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் பிரச்சாரங்களிலும் ஜேவிபி சொல்லியிருந்தது. எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் இதுவரை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றிய விடயங்களைத் தவிர வேறு பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க முடியும் என்ற தொனியில் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்திடம் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது. ஆகவே, இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்துள்ள ஜேவிபியிடம் இராணுவத்தை குறைக்கும் திட்டத்தை எதிர்பாரக்க முடியாது. ஆனாலும், மீள் நல்லிணக்கம் (Reconciliation) என ஐஎம்எப் அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் மொழியின் உள்ளடக்கத்தின் (Content) பிரகாரம், வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இராணுவ முகாம்கள் பலவற்றையும் மூடித்தான் ஆக வேண்டும்... ஆனால், இதற்கு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் உட்படுவார்கள் என்று கூறுவதற்கு இல்லை. எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், இராணுவ எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் அநுர அரசாங்கத்திடம் மறைமுகமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. இல்லையேல் நிதி கிடைக்காது போலும். ஆகவே இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செய்திருக்கக் கூடும்....என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை.... அவ்வாறு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கமாகவும் அது இருக்கலாம். ஆனால், இராணுவ எண்ணிக்கை குறைப்பிற்கு அநுர அரசாங்கம் தயாராக இல்லை என்பதை சமீபகால அணுகுமுறைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இப் பின்புலத்தோடு---- 2015 ஆம் ஆண்டு ரணில் - மைத்திரி அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை பிணை எடுத்தது சம்பந்தன் தலைமையிலான அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். இந்த ஞாபகப்படுத்தலின் பிரகாரம் ---- முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் தாக்கப்பட்டு ஒருவர் மரணித்தமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதற்கு யார் பொறுப்பு என சிந்திக்க வேண்டும்! ஏனெனில் 2015 இல்தான் இராணுவ முகாம் விஸ்தரிப்பு - காணி அபகிரிப்பு- புத்த கோவில் கட்டும் நகர்வுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் சட்ட ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே ----- 2015 இல் இழைத்த இக் குற்றத்துக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும், வரலாறு மன்னிக்காது. இயற்கை நீதி பதில் சொல்லும். ஹர்த்தால் நடத்தி சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல், இராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக கொழும்பில் உள்ள ஐஎம்எப் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பது பற்றிச் சிந்திப்பதே சிறந்த பரிகாரம். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பரிந்துரை தமிழர்களுக்கானது அல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்சிக்கானது. இருந்தாலும், அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் இராணுவ எண்ணிக்கை குறைக்கும் பணியையாவது உருப்படியாக செய்ய வேண்டும். அத்துடன், ஜெனீவா மனித உரிமை சபைக்கு எழுத்து மூலம் உடனடியாகவும் கூட்டாகவும் அறிவிக்கவும் வேண்டும். மாறாக... இது இன அழிப்பு என்று தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் போலியாகக் கருத்துச் சொல்லி, கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்க வேண்டாம். இப் பிழையான அரசியல் உத்திகள் ஊடே சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் தன்மைகளை அறிந்து அதன் ஊடாக காய் நகர்த்தும் இராஜதந்திர முறைமை, 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பிடம் அற்றுப் போயுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்பதன் ஊடாக தமிழ் மரபு அடையாள அழிப்பு நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் 2009 இற்குப் பின்னரும் அரங்கேறுவதற்கு இதுவே காரண - காரியம் என்பதும் பட்டவர்த்தனம். ஆனால் இயற்கை நீதியும் மக்களின் சமகால பட்டறிவு - உணர்வுடன் கூடிய புரிதல்களும் பலருடைய வாக்கு வங்கிச் சரிவை ஏற்படுத்தும் என்பது கண்கூடு... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid033Brh5tG5HfTNqrkELWcoZy3LPn39sDRg411GtATRu2PzgKsDEEy7EivmTZLyB53il/?
  6. தானே தனக்குள் ரசிக்கின்றாள் தலை முழுகாமல் இருக்கின்றாள் ......... ! 😍
  7. Published By: RAJEEBAN 11 AUG, 2025 | 12:07 PM ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இதனை உறுதி செய்துள்ளதுடன் இரண்டு தேசக்கொள்கை மத்திய கிழக்கில் வன்முறையை நிறுத்துவதற்கு மனித குலத்திற்கான சிறந்த நம்பிக்கை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன இஸ்ரேலிய தேசங்களை உருவாக்குவதற்கான 181 வது தீர்மானத்திற்கு ஆதரவாக முதலில் கையை உயர்த்திய நாடு அவுஸ்திரேலியா என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். 77வருடங்களின் பின்னர் இந்த தீர்மானம் குறித்து சில தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக உலகத்தினால் இனிமேலும் காத்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இராணுவகளைவு, பொதுத்தேர்தல்களை நடத்துதல், இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்தல் போன்ற வாக்குறுதிகளை பாலஸ்தீன அதிகார சபை வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள யூதசமூகத்தினர் உடனடியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த முடிவை கண்டித்துள்ளனர், பாலியல் வன்முறை மற்றும் கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு தொழில்கட்சி அரசாங்கம் வெகுமதி வழங்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222300
  8. #ஹர்த்தால்_திகதியில்_மாற்றம் இந்த வெள்ளிக்கிழமை (15.08.2025) நடத்த திட்டமிட்ட ஹர்த்தால் தவிர்க்கமுடியாத காரணங்களால் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு 18.08.2025) ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சுமந்திரன் ஐயா அறிவிப்பு… தகவல் #காலைமுரசு_மாலைப்பதிப்பு 👇👇👇கூலி திரைப்படத்தை முன்னிட்டு கர்த்தால் பின்போடப்பட்டுள்ளதாம்.ரஜனி நன்றி தெரிவிப்பாம். இந்திய சுதந்திர தினம் வேறையாம்.
  9. நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்
  10. பிரதமர் பதவியில் மாற்றமில்லை! ஜனாதிபதியே பிரதமரைப் பாதுகாத்ததாக உதயகம்மன்பில விளக்கம். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது குறித்து உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாவது ” பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும். அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர் பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது. அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார். பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல, தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது. இதனை நாம் கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்துக் கொண்டுள்ளார். ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவை தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமானது. தேசிய மக்கள் சக்தியின் தலைவராக பிரதமர் உள்ளார். மேற்குலக நாடுகளின் தூதரக பிரதிநிதியாகவும், அரசாங்கத்தின் பிரபுக்கள் வகுப்பின் பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், பாலின சமத்துவத்தின் பிரதிநிதியாகவும், கல்வி மற்றும் தொழில்துறை பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். ஆகவே அவரை பதவி நீக்க முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்துள்ளனர். பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார். https://athavannews.com/2025/1442747
  11. அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 18 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 18 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உண்மையில் தேவநம்பியதிஸ்ஸ இருந்தாரா?' இன்னும் ஒரு ஒப்பீட்டையும் நான் சொல்லவேண்டும். தேவநம்பிய தீசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன். அதேபோல அசோகனும் பிந்துசாரரின் (Bindusara) இரண்டாவது மகனாவார். தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது. அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same epithet ‘Devanampiya’] காணப்படுகிறது. அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை. ஆனால் அசோகனுக்கு அவை தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka] மேலே குறிப்பிட்டுள்ளபடி, விஜயன் முதல் தேவநம்பியதிஸ்ஸ வரை எந்த வரலாற்று அல்லது தொல்பொருள் ஆதாரங்களும் இல்லாமல் இந்த மன்னர்கள் காணப்படு கிறார்கள். அப்படி என்றால், அன்றைய காலத்தில் இலங்கையில் அரசர்கள் இல்லை என்பதல்ல. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்களின் பெயர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, இந்த கண்டு பிடிக்கப்பட்ட மன்னர்கள் 'புத்த மதத்தின் பக்தியுள்ளவர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு / 'serene joy and emotions of the pious.' பதிலாக இங்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மகாவம்சம் அத்தியாயத்தின் முடிவிலும் இது கூறப்பட்டுள்ளது. தேரவாத பௌத்தத்தில், பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் உருவாக்கவென, மகாவம்சம் அதன் வாசகர்களிடையே இப்படி, ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கூறுகிறது. இது பார்வையாளர்களுக்குள் ஒரு உணர்வுகளை தூண்டவும் மற்றும் கண்மூடித்தனமான ஒரு பக்தியை வளர்க்கவும் என்று நாம் கருதலாம். இது வரலாற்று நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றுபவர்களிடையே ஆழமான உணர்ச்சி மற்றும் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு உரையாக இருக்கலாம். / In Theravada Buddhism, serene joy and emotion of the pious relates to the emotional impact the Mahavamsa aims to create in its readers. It represents both the desired emotional response to its teachings and the ultimate goal of its compilation: to foster spiritual feelings and devotion within the audience. This highlights the Mahavamsa as a text designed not only for historical recounting but also for evoking a deep emotional and spiritual connection among its followers. முன்பே கூறியது போல், சில அனுமானங்களின்படி, மூத்தசிவா குறைந்தது 137 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது, அதன்படி, மூத்தசிவா அரியணை ஏறும் போது அவனுக்கு 77 அகவையாகும். முத்தசிவனுக்கு முப்பது வயது இருக்கும் போது இரண்டாவது மகன் தேவநம்பிய தீசன் பிறந்திருந்தால், அரியணை ஏறும் போது தேவநம்பியதிசனுக்கு 107 வயது இருந்திருக்கும், மேலும் அவர் 147 வயது வரை மிகவும் பழுத்த வயது வரை தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் [(107-30-30)+60+40, அல்லது 137 - 30 + 40 வரை]. இப்போது அசேல மன்னனின் ஆட்சியைப் பார்ப்போம். அசேல முத்தசிவாவின் ஒன்பதாவது மகன். முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அவர் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். தேவநம்பிய திசாவுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதைத் தொடர்ந்து சேனா மற்றும் குட்டாகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். எங்கள் முன்னைய ஊகத்தின் படி அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் இருந்ததால் அல்லது முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அசேல பிறந்தார் என்றால், குறைந்தது 179 அகவையில் [147 - 20 + 10 + 10 + 10 + 22 = 179] அல்லது 137- 50 + 40 + 10+ 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். இது ஒரு பரிதாபகரமான பொய்யாக இருக்க வேண்டும். பண்டுக முதல் அசேல வரையிலான ஆட்சியாளர்களின் வயது வழக்கத்தை விட மிக அதிகம். புத்தர் மறைந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இருப்பினும், இந்திய பாரம்பரியத்தின்படி புத்தர் மறைந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இரண்டு மரபுகளுக்கும் இடையே நூற்று பதினெட்டு ஆண்டுகால மாறுபாடு உள்ளது. இப்போது அறிஞர்கள் புத்தர் இறந்த ஆண்டை கி பி 400 க்கும் கி பி 369 க்கும் இடையில் கணிக்கிறார்கள். பண்டுவாசுதேவரில் இருந்து அசேல வரையிலான ஆட்சியின் நீளம், தமிழ் மன்னர்களான சேனனும் குத்திகனும் [22 ஆண்டுகள்] தவிர, 30, 20, 70, 60, 40, 10, 10, 10 மற்றும் 10 ஆகியவை ஆகும். இவர்கள் எல்லோரும் எல்லோரும் நேர்த்தியான வட்ட இரட்டை எண்களாக இருப்பதும் ஆச்சரியமே! இனி வரும் பாடங்களில் பண்டுவாசுதேவருக்கும் துட்டகாமினிக்கும் இடையிலான சகாப்தம் விரிவாக பகுப்பாய்வு செய்யப்படும். Part: 18 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did Devanampiyatissa really exist?' Let us now look at Devanampiyatissa again. He was the second son of Mutasiva. Asoka was also the second son of Bindusara. Devanampiyatissa ruled for forty years as per the Ceylon chronicles. Asoka ruled for thirty-seven years after his consecration as per the Ceylon chronicles. However, Asoka assumed the power about four years prior to his formal coronation. Asoka therefore ruled forty-one years in total as per the Ceylon chronicles. The Indian tradition says that Asoka ruled thirty-six years after the coronation. Adding four years prior to the coronation, Asoka ruled forty years, as did Devanampiyatissa. Both are with the same epithet ‘Devanampiya’. Therefore, the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet. He could not have been a real person. That is why there are no archaeological or inscriptional evidence in Lanka about Devanampiyatissa while evidences for Asoka are available in length and breadth of India except in Tamil country. Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka. As noted above, Vijaya to Devanampiyatissa are invented kings without any historical or archaeological evidences. This does not mean that there were no kings in Ceylon during that time. There must have been chieftains in various parts of Lanka, and all their names were obliterated and these invented kings were substituted for the serene joy and emotions of the pious. As stated above, Mutasiva must have lived to a very old age of one hundred and thirty seven. If the second son Tissa was born when Mutasiva was thirty years of age, then Devanampiyatissa would have been 107 years of age when he ascended the throne, and he should have continued to live for the very ripe age of 147 years, [(107-30-30)+60+40, or 137 - 30 + 40] Now let us look at the king Asela’s rule. Asela was the ninth son of Mutasiva. Suppose he was born when Mutasiva was fifty years of age. Considering the rules of Uttiya (10 years), Mahasiva (10 years), Suratissa (10 years), Sena and Guttika (22 years), Asela must have ascended the throne when he was, (107-30-50)+60+40+ 10+ 10 + 10 + 22, 179 years of age and he must have been killed by Elara when Asela was 189 of age, after the reign of ten years. This must be a pathetic lie. The ages of rulers from Panduka to Asela are very much longer than usual. Asoka’s coronation took place two hundred and eighteen years after the demise of the Buddha as per the Ceylonese chronicles. However, Asoka’s coronation took place only one hundred years after the demise of the Buddha as per the Indian tradition. There is a variation of one hundred and eighteen years between the two traditions. Now scholars prefer 400 B. C. to 369 B. C. as the preferred range in which the Buddha died. The lengths of reigns from Panduvasudeva to Asela, except the Damila kings Sena and Guttika [22 years] - 30, 20, 70, 60, 40, 10, 10, 10 and 10 are neat round even numbers indicating cooked up numbers. The era between Panduvasudeva to Dutthagamani is analysed in detail further down in this chapter. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 19 தொடரும் / Will Follow
  12. அன்பை விட நன்றி அதிக கனமுள்ளது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது ........ ஆசிரியர் கானுக்கு பாராட்டுக்கள் ....... ! 🙏
  13. தனிமனித ஆதிக்கத்தை இல்லாது பண்ணி ,தனிக்கட்சி ஆதிக்கத்தை உருவாக்க முயல்கின்ற☹️னர்
  14. இப்பவும் யாழ்ப்பாண மக்கள் புத்தகங்களை வாசிக்கின்றனரா?குறிப்பாக மாணவர்கள் வாசிக்கின்றனரா? நான் நினக்கின்றேன் சர்வதேச யூ டியுப்,சர்வதேச டிக்டொக்,சர்வதேச வட்சப் ,சர்வதேச முகப்புத்தக திருவிழா என திருவிழா நடத்தினால் மக்கள் அலை அலையாக வந்து கல்ந்து கொள்வார்கள்...🤣
  15. சுமத்திரன்2010 இல் இருந்து அரசியலில இருக்கிறார். தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார்.மைத்திரி ஜனாதிபதியாக இருந்த காலத்தில்வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத வகையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த வேளையில் ஒருங்கிணைந்த கூட்டரசாங்கத்துக்கு முழு ஆதரவளித்த எதிர்க்கட்சியில் இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம். இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு கோரவில்லை.ரணில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் பல முறை தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாலேயே தப்பிப் பிழைத்தது.அப்பொழுதெல்லாம் இதனை ஒரு துருப்புச்சீட்டாகாப் பாவித்து ஏன் பேரம் பேசவில்லை. மாறாக அதே இராணுவ பாதுகாப்புடனேயேதமிழ்ப்பிரதேங்களில் உலாவித் திரிந்தார்.இப்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் வடமாகாண முதலமைச்சர் கனவில் பம்மாத்து அரசியல் செய்கிறார். இது ஒரேநாளில் நெல் முளைத்த வயலை ஊழுது விதைத்து அறுவடை செய்து நெருப்பில்லாம் பொங்கல் பொங்கி படம்காட்டிய நடிப்பு அரசியல் போலத்தான் இ.ருக்கப் போகிறது.நல்லூர்த்திருவிழா காலத்தில் யாழ்நகர்பகுதியில் சனநடமாட்டம் அதிகரித்த வேளையில் வர்த்தகர்களின் வணிகத்துக்கு ஆப்பு வைக்க நினைக்கிறார். நல்லூர்த்திருவிழாவையே நம்பி வாழும்கடலை கச்சான்,தும்புமிட்டாயக் கடைகளையும் சாத்த வேண்டும் என்று சொல்கிறாரோ?
  16. நாங்கள் பாடசாலைக்கு செல்ல முதலிருந்து பொலிசும் ,இராணுவமும் அட்டுழியங்களை செய்கின்றனர்...பெரிய இனப்ப்டுகொலை நடந்த பின்பும் அட்டுழிய்ங்களை செய்கின்றனர் ... அவர்கள் நியாயமாக நடந்தால் மக்கள் அநியாயமாக நடக்க மாட்டார்கள் ... 😆
  17. இடதுசாரிகள் நாட்டை கியுபா போல மாற்ற வேணுமென்றும் வலதுசாரிகள் நாட்டை சிங்கபூராகவும் மாற்ற வேணுமென்று கனவு காண்கின்றனர் ஆனால் சிறிலங்கா மக்களும்,அமைச்சர்களும் சிறிலங்கா போல த்தான் இருப்போம் என அடம் பிடிக்கின்றனர்.
  18. தாழம்பூ கைகளுக்கு . ........ ! 😍
  19. நீருக்குள் நீந்த குளிரும் என்று - தாயின் சிறகின் மேல் தாவி நின்று பார்க்கும் தளிர் ஒன்று ....... ! 😁
  20. 2015 இல் சுமந்திரன் தொடக்கியதை 2025 இல் கஜேந்திரன் முடித்து வைக்கிறார். ஆணையாளரின் பதில் கடிதம் சொல்லும் சொல்லாத செய்திகள்! - --- --- --- ---- ----- *உள்ளகப் பொறிமுறையே பிரதானம். *தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது. சொல்லாது சொல்லும் செய்தி என்ன? *ஜேவிபி அரசாங்கத்தை உருப்பெற வைப்பது! *சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இலங்கை தானாக இணைந்தால் சிறப்பு, ஆனால்...! *இன அழிப்பைப் பற்றி மேலோட்டமாக கதைக்கலாம். குறிப்பாகவோ வலுவாகவோ அதைக் கேட்கக் கூடாது. *சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த Relay Race, 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்தார். --- ----- --- --- ------ கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் உள்ள பிரதான இரண்டு ஆங்கிலச் சொற்களின் பிரகாரமும், கொழும்பில் உள்ள சில இராஜதந்திர வட்டாரங்களோடு இன்று சனிக்கிழமை உரையாடிய விளக்கத்தை மையப்படுத்தியும் இக் கட்டுரையை எழுதுகிறேன்... ஜெனீவா மனித உரிமை சபையின் ஆணையாளருக்கு தமிழ்த்தேசிய பேரவை அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக பெருமைப்படுகிறார்கள். ஆனால், உண்மை நிலையோ வேறு! அந்த பதில் கடிதத்தின் உள்ளடக்கம் - பொருள் என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆணையாளர் தன்னுடைய பதில் கடிதத்தில் இலங்கையும், மனித உரிமை சபையும் செய்யவுள்ள “பொறுப்புகள்” பற்றி இரண்டு ஆங்கிலச் சொற்களில் வரைவிலக்கணம் செய்கிறார். 1) Comprehensive Process (SL) 2) Complementary Strategies (OHCHR & UNHRC) இந்த இரண்டு சொற்களையும் விரிவாக ஆராய்ந்தால்-- 1) Comprehensive Process (SL) என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது இலங்கையின் ‘விரிவான செயல்முறையை’ குறித்து நிற்கிறது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையையும் சர்வதேசத்தின் நம்பிக்கையையும் இலங்கை முதலில் வென்றெடுக்க வேண்டும் என்ற தொனியில் அச் சொல் அமைகிறது.. இன்னும் அழுத்திச் சொல்வதானால் பொறுப்புக்கூறல் என்ற முறையில் இலங்கைக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்த செயல் வடிவம் அது. 2) Complementary Strategies என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது ‘குறை நிரப்புகின்ற மூலோபாயம்’ என்பதைக் குறித்து நிற்கிறது. அதாவது, இலங்கை நடத்துகின்ற உள்ளக விசாரணைகளின் பற்றாக்குறைகள் அல்லது விடுபட்டுள்ளதாக கருதப்படுகின்ற விவகாரங்கள் சிலவற்றுக்கு குறுகிய சில நடவடிக்கைகளை பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction System) முறை ஊடாக சில நாடுகளின் நீதிமன்றங்கள் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம். மனித உரிமைச் சபை உப்புச் சப்பற்ற தீர்மானத்தைக் கவனிக்கும் அல்லது அந்த விசாரணைகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் என்ற பொருளில் அது அமைகிறது. அதேநேரம், இலங்கை செயற்படுத்த வேண்டிய, விரிவான செயல்முறை என்ற Comprehensive Process என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்தும், ஆணையாளர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களில் இருந்தும் மேலும் சில கற்பிதங்களை புரியக் கூடியதாகவுள்ளது. அதாவது, செயல் திறன் மிக்க நியாயமான(Independent fair) அதுவும் சர்வதேச சட்டங்களின் நியமங்களை முழுமையாக திருப்பித்திப்படுத்தக் கூடியதாக இலங்கை நடத்தவுள்ள உள்ளக விசாரணை அமைய வேண்டும் என்ற தொனி தெரிகிறது. அதாவது ஆணையாளர் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்? சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) இலங்கை முதலில் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம். மனித உரிமைகள் பற்றி சர்வதேச மட்டத்தில் ஏற்கப்பட்டுள்ள மனித உரிமைகள் விதிகள் அனைத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்வது நல்லது. ஆனால், இவையெல்லாம் பழைய குற்றங்களுக்கு செல்லுபடியாக வேண்டியது இல்லை. எதிர்காலம் மட்டுமே முக்கியம். கடந்தகாலப் பொறுப்புக்கூறல் கண்துடைப்பாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய ஐ நா உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறது. ஆகவே, எதிர்வரும் காலத்தில் எப்போதோ ஒரு நாள் ICC இல் இலங்கையை இணைத்த பின்னர் நடத்தவுள்ள விசாரணை எப்படிப்பட்டதாக இருக்கும்? இலங்கை இணைந்தாலும் ஈழத்தமிழர்கள் கோருகின்ற விசாரணைகள் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் இருக்காது. அப்படி நடந்தாலும் கூட ஜேவிபி என்பிபி அரசாங்கத்தின் காலத்தில் இருந்து தான் விசாரணைகள் நடைபெறலாம். ஏனெனில், ஆட்சி மாற்றம் என்பதை அமெரிக்கா போன்ற மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன. Universal Jurisdiction System என்ற முறைமை ஜெனீவாவினால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளில் வைத்து அவர்களை விசாரணை செய்யும் முறை. ஆகவே, Universal Jurisdiction என்ற இந்த மாதிரியான பலவீனமான முறைமைகள் நடைமுறையில் சில மேற்கு நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இருப்பதால், அந்த நடைமுறைகளையும் வைத்துக் கொண்டு, இனிமேல் பழைய குற்றங்கள் பற்றிய பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதே மேற்குலகத்தின் பிரதான இலக்கு. ஆனால், மனித உரிமை பேரவையில் இதைத் தொக்க வைத்திருந்தால், இலங்கையில் எதிர்பாராத நிலை ஏதும் ஏற்பட்டால் மீண்டும் அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை. அதாவது, புதிய ஆட்சியில் புதிய நகர்வுகளை மேற்கொள்ளும் திட்டமாகவே (Comprehensive Process (SL) (Complementary Strategies -OHCHR & UNHRC) என்ற இந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் அமைந்துள்ளன என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை. அதாவது, பழைய விவகாரங்களைக் கைவிட்டு புதிய அணுகுமுறையில் சென்று தமக்குரிய புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களில் மேற்கு - ஐரோப்பிய நாடுகள் செயற்படுவதற்கு ஈடாகவே ஆணையாளரின் பதில் அமைந்துள்ளது. அதற்கு ஏற்பவே தமிழ்த் தேசிய பேரவையும் கடிதத்தை தயாரித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐ.நா அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு அல்லது அவர்களின் ஆலோசனையின் (Advice) பிரகாரம் கடிதம் எழுதியிருக்கலாம் என்பதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. இன அழிப்பு விவகாரம் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் (International (Court of Justice -ICJ) ஈழத்தமிழர்கள் ஏதேனும் ஒரு நாட்டை பிடித்து வழக்குத் தாக்கல் செய்தால், இலங்கை, அமெரிக்க- இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களுக்கு ஒத்திசைவாக இருக்காது என்ற நோக்கில், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐநா இவ்வாறு கையாளுகிறது. இப் பின்புலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த அஞ்சல் ஒட்டத்தை (Relay Race) 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்துள்ளார் என்றே பொருள் கொள்ள முடியும். பிரபல ஜிகாதியாக அறியப்பட்ட அல்-ஜூலானி என்பவரின் தலைக்கு பத்து மில்லியன் கொடையாக சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது, அப்படியான பயங்கரவாத ஜிகாதியோடு அதே அமெரிக்கா கைகோர்த்து சிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ஜேவிபியோடு கூட்டு வைப்பதில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த ஒரு வில்லங்கமும் இருக்காது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://www.facebook.com/1457391262/posts/pfbid03ddadDcotUwMxUHCdKHhsMJT5ctijLnSzg8gpUfndY4oydbKoVGi6Mv6CS1rGqE6l/?
  21. ஆதரவற்றோரை ஆதரித்து அவர்க்கு அன்னமும் அளித்து கல்வியும் தந்துதவும் அகரம் பவுண்டேசன் ஞான்றும் ஞாலத்தில் காலங்கள் கடந்தும் வாழியவே ....... ! 🙏
  22. வீரவணக்கம் செலுத்துவதாக இருந்தால் நவம்பர்27 திகதி மாவீரர் நாளில் செய்வதே சரியானது.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இயற்கை சாவு அடைந்தால் கூட அவர்கள் மாவீரர்கள் என்றே கருதப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படுவதே புலிகளின் வழக்கம்.ஆனால் மாவீரர் நாளுக்கு நாலே மாதங்கள் மட்டுமே இலரக்கும் நிலையில் ஓகஸ்ட் 02 ஆம் திகதி நடத்த வேண்டிய அவசரம் என்ன?அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமைச்சபையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வரப்போகின்றது. செம்மணிப் புதை குழிகள் விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை மடைமாற்ற வேண்டும்.எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்வு நட்த்தப்பட்டிருக்கலாம். நிச்சயம் இதன் பின்னணியில் பல மறைகரங்கள் இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கலாம். போலித்துவாராகவை உருவாக்கியவர்களும் இந்த நினைவேந்தலை செய்தவர்களும் ஒரே மறை கரங்களால் இயக்கப்படும் ஆட்களே.
  23. புரட்சி ஏன் சார் எந்திரிக்கணும்? அவசர சிகிச்சைப் பிரிவினர் வண்டியில் ஏற்றிக் கொண்டு போவார்கள்.
  24. முற்றான இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்டு, தமக்கான நீதிகோரி, கைகளில் இறந்த தமது உறவுகளின் உருவப்படங்களை ஏந்தி கண்ணீருடன் வீதிகளில் அலைந்து திரியும் ஒரு இனம், மற்றையவர்ளைக் கடத்திச் சென்று கொன்றுதள்ளும் கொடூரமான மனோநிலையினைக் கொண்டவர்கள் என்று எவ்வாறு இந்தியர்களால் படமாக்க முடிகிறது? இதனை தமிழர்களே ஆகா ஓகோ என்று கொண்டாடி மகிழ்வது எப்படி? இக்குப்பைக்கும், பமிலி மேன்‍-2, மட்ராஸ் கபே ஆகிய அபத்தங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? தயவுசெய்து இக்குப்பைகளைக் கொண்டாடுவதைத் தவிருங்கள்.
  25. 4) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள "சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை" ஊடாக பேரன் அபிஷேக் அசோக் (சென்னை, அமெரிக்கா) குடும்பத்தினர் வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் வகையில் திரு லக்சன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 35000 ரூபாவை வைப்பிட்டுள்ளனர். 23/07/2025 இன்றுவரை மொத்தமாக 139970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
  26. மனைவிமார்கள் சொல்லும் குற்றம் குறைகளை வைத்தும் ஒருவர் மதிப்பிடப்படலாம் என்றால், ஆபிரகாம் லிங்கன் கூட ஒன்றும் இல்லை என்று ஆகிவிடுவார். அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட அவருடைய நோபல் பரிசைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஓபாமாவிற்கு கொடுத்த நோபல் பரிசு விவாதத்திற்கு உட்பட்டதே. ஆனால் அவருக்கு அந்தப் பரிசை முன்மொழியவும், அதைக் கொடுக்கவும் தேவையான சரியான உறுதியான நடவடிக்கைகளை ஓபாமா அவரது பதவியின் முதல் வருடத்திலேயே எடுத்திருந்தார். ஓபாமாவை எந்த தனிநபர்களும் அரசியல் சார்பாகவோ அல்லது நலம் கருதியோ முன்மொழியவில்லை. மாறாக, நோபல் பரிசுக் குழுவே அவரை தெரிந்தெடுத்தது. ஒபாமாவை தெரிந்தெடுத்தற்கான காரணங்களாக நோபல் குழுமம் பின்வருபனவற்றை சொல்லியிருந்தார்கள்: இஸ்லாமிய நாடுகளுடன் இணக்கத்தை உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் இன்றும் கூட ஓபாமா மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தார் என்பதே. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை புதுப்பித்தது அல்லது உண்டாக்கியது. யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார். ட்ரம்பின் சமாதான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கூட தவிர்த்துவிட்டு, புதிய ஒப்பந்தங்களை பயமுறுத்தலின் ஊடாகவே அவர் செய்ய முனைகின்றார். அவைகளும் கூட மிகவும் ஒரு பக்கச் சார்பாக, அமெரிக்காவின் நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இவர் உலகின் மீது தொடுத்திருக்கும் வர்த்தகப் போர்கள் கூட உலகின் ஸ்திரத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று என்ன, நாளை என்ன என்று எதுவும் தெரியாத நிலையிலேயே அமெரிக்கர்களும், உலகமும் இவரின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடுமை உலகம் கண்ட மிகக்கொடிய சில கொடுமைகளில் ஒன்று. 'ஒரு பை அரிசிக்காக பலஸ்தீனியர்கள் அவர்களின் உயிர்களைக் கூட விட தயாராக இருக்கின்றார்கள்...................' என்ற வசனம் எந்த மனிதனையும் அழவைக்கும். அமெரிக்காவும், ட்ரம்பும் நினைத்தால் இந்தக் கொடுமையை இன்றே நிற்பாட்டமுடியும். ஆனால் காசாவில் உல்லாச விடுதிகளைக் கட்டுவதைப் பற்றியே ட்ரம்பும், அவரது குடும்பமும் அக்கறையாக உள்ளது. ஈரானுடனான முரண்பாட்டில் கூட ட்ரம்ப் சமாதானத்தை தேடவில்லை. இன்னும் பல இப்படியே போய்க் கொண்டிருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்டவற்றை விட, இன்றைய திகதியில் உலகில் மிகப்பெரும் அட்டூழியங்கள் செய்யும் இஸ்ரேலின் தலைவரே ட்ரம்பை முன்மொழிந்திருக்கின்றார் என்ற ஒரு தகவலே ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கக் கூடாது என்பதற்கான பிரதான காரணம்.
  27. காற்றாலை மின் உற்பத்தியினால் அப்படி என்ன சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை மன்னார் மக்களும் , மாக்கஸ் அடிகளாரும் யாழ்களத்தில் விளங்கபடுத்த வேண்டும் குறைந்தபட்ச CO2 வை உருவாக்கும் காற்றாலை மின்சாரத்தின் பங்கு மேற்குலகநாடுகளில் மின்சார உற்பத்தியில் அதிகமாக அதிகரித்து வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.