Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3049
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38754
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/28/25 in all areas

  1. இனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்படித்தான் அங்கே போனார் ஆடு அவலப்பட்டு செத்தாலும் அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர இனிய தீபாவளி ஆனது.
  2. ‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம் October 28, 2025 1:50 pm தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார். பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, சேர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஊடாக இவர் பயணம் செய்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தின் விசேட கலாசார முக்கியத்துவம், மரபுகளை உலகிற்கு வெளிப்படுத்துவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு அழகான இடமாக ஊக்குவிப்பதும், நல்லிணக்கத்தை வளர்ப்பதும், சர்வதேச சமூகங்களுடனான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று வலியுறுத்தினார். இதேவேளை, உலகளாவிய பயணம் தொடர்பான லொன்லி பிளானட் (Lonely Planet) சஞ்சிகையானது, 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://oruvan.com/sri-lankan-army-welcomes-sooran-from-france-to-jaffna/
  3. தீபாவளி வருவதற்கு 4-5 நாட்கள் முதலே ஊரில் இருந்த பெயர் போன குடிகாரர்(எல்லாமே உறவுக்காரர்)தீபாவளிக்கு ஆடடிக்க போறம் ஒரு பங்கு 10 ரூபா எத்தனை பங்கு வேண்டும் என்று வருவார்கள். வீட்டுக்காரரும் அனேகமாக ஒரு பங்கு என்று சொல்லிவிடுவார்கள். இவங்கள் தானே குடிகாரர் உலகத்துக்கு உதவாத ஆட்கள் என்று சொல்லுவீர்களே ? இவர்களை நம்பி எப்படி இறைச்சிக்கு பணம் கொடுத்தீர்கள் என்றால் கதை இல்லை. அனேகமான நாட்களில் பனை ஓலையால் சுற்றப்பட்ட இறைச்சி வரும். பணத்தோடு காணாமல் போன ஓரிரு நாட்களும் உண்டு. எமதூரில் தீபாவளிக்கு மாத்திரமல்ல அடிக்கடி பங்கு ஆடு அடிப்பார்கள்.
  4. உண்மை தான் உடையார். ஆனால் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தன் விருப்பின்றி தீண்ட முற்பட்ட ஒருவரைத் தன் திருமண வைபவத்துக்கு அழைத்து காலில் வீழ்ந்து ஆசீர்வாதமும் பெற்று, அதனை புகைப்படமும் எடுத்து வெளி உலகுக்கு பகிரவும் செய்வார்களா? இங்கு வைரமுத்து இந்த விடயத்தில் மிக மோசமான மனிதர் என்பதில் ஐயமில்லை. ஆனால், சின்மயி?
  5. ஒரு ஆணின் அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க, பெண் ஒருவரும் அதே அளவிலான அல்லது அதைவிட வலிமையான நிலையை அடைய வேண்டும். அவர் எழுதிய கவிதை மனதை கவர்ந்துவிட்டால், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தோன்றும்?????? அதை வெளிப்படையாகச் சொல்ல, இன்னும் அதிகமான தைரியம் தேவைப்படுகிறது. இங்கே, படையில் பணியாற்றிய பெண்களே ஆண் வீரர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதை இப்போதுதான் வெளிக்கொணர்ந்துள்ளனர். அதற்குப் பின்னால் நிற்கும் காரணம் — ஆண் வீரர்களின் பதவி நிலை. அந்த நிலைமை, படை வீராங்கனைகளுக்கே இவ்வாறு என்றால், சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் நிலைமை எவ்வளவு கடினமாய் இருக்கும்?
  6. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 கார்த்திக் டிசம்பர் 22, 2024 மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா தமிழாக்கம் : கார்த்திக் திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல். ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம் உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார். பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார். ” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…” “வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர். சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன். கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார். நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும். மிக சரியான மனிதர் அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேறு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார். ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது. சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் . சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார். இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார். ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார். சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார். அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர். சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார். ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர் ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர். சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம் இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர். கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன். வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார். அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன். மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது. சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான். இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான். https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/
  7. ஆமாம். மிதாலியின் வாழ்க்கை பற்றிய படம். படம்: சாபாஷ் மிது. தாப்சி பன்னு நடிச்சிருப்பா.
  8. அட பாவி சுக்ராச்சாரியாரே.. நீவீர் தான் இதற்கெல்லாம் காரணமோ.. அசுரர்களை தண்டிக்க வெளிக்கிட்டு அப்பாவி குடி காதலர்களை ஏன் தண்டிக்க சாபம் இட்டீர்?
  9. முஸ்லீம் தாதிகளுக்கு சீருடையில் விலக்கு அளிக்கப் பட்டமைக்கு சில பிக்குகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அரசு அறிவித்த சீருடையில் வேலை செய்ய விரும்பாவிடில்… வேறு வேலையை தேடச் சொல்லி உள்ளார்கள்.
  10. இதையும் பாருங்க சிறி...அனுரவினால் கொடுக்கப்பட்ட விசேட சலுகையாம்..
  11. மீண்டும் ஒரு பீப்பாய் கழிவு ஆயிலுக்குள் தொபுக்கடீர் என விழுந்து விட்டார் மேற்படியார் 😂 இமோசனல் என சொன்னது நகைச்சுவையாக வசி. நீங்கள் இதன் மறுபக்கத்கை பார்கிறீர்கள் என்பதும் - இவர்கள் மோசடியாக இல்லாமல் பிழையாக நடந்து கொண்டதன் பலனே இது என சிந்திக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் நீங்கள் you are cutting them a lot of slack என நினைக்கிறேன். உலக நாடுகள் எங்கெனும் வியாபாரங்கள், பெரு வியாபாரங்கள் திவாலாவது வழமை. ஆனால் நீங்களே சொன்னது போல அதை சரியான முறையில் செய்தால் வேலையாட்கள் உட்பட vulnerable ஆக உள்ளோரை முடிந்தளவு இதன் தீய விளைவில் இருந்து காக்கலாம். எரிந்த வீட்டில் பிடுங்குவது இலாபம் என நடப்பது பின் கம்பி நீட்டுவது - சுயநலத்தின் உச்சம்.
  12. பாராட்டுக்கள், சூரன்போர் நடக்கும் நேரத்தில் யாழில் சூரனின் விஜயம் பொருத்தமாய் அமைந்திருக்கு . .....! 😂
  13. Amazing Trees Incredible colors in Cape Breton, Nova Scotia - Canada.🍁" வர்ணங்களால் சூழப்பட்ட அழகிய அரண்மனை ........! 🥰
  14. சண்டை முடிஞ்சால் எமக்கென்ன ....... படத்தைப் பாருங்கள் நம்ம நாட்டாமையை வைத்துத்தான் பஞ்சாயத்து முடிந்திருக்கு . ........உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ......பொறாமை ........! 🙂
  15. வாய்ப்பு இருக்கு லொள்😋...........................
  16. எனக்கு இந்த திரியினை பார்த்த பின்புதான் இந்த நபர்கள், இந்த விடயம் பற்றி தெரிகிறது, இதில் எதுவும் இமோசனல் இல்லை! அதோடு எனது கருத்து உங்களது கருத்து போல சாதாரணமானதுதான், நான் இவர்களில் தவறில்லை என நிறுவ முற்படவும் இல்லை, பொதுவாக நடைமுறையில் நடைபெறும் விடயங்களை அறிந்த விடயங்களை கூறுகிறேன், இதில் இமோசனலாக ஏதேனும் இல்லை. Volunteer Liquidation செய்திருந்தால் தொழிலாளிகளுக்கு முன்னுருமை அளித்து, அவர்களது கொடுப்பனவினையே முதலில் செய்திருப்பார்கள், ஆனால் இப்போது அனைத்து நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு கொடுத்து ஏதாவது மிச்சமிருந்தால் மட்டுமே கடைசியாக தொழிலாளர்கள் பக்கம் திரும்புவார்கள்.
  17. அததெரண கருத்துப் படம்.
  18. இதில் ஒன்பது கோடி சேர்த்தவர்களையும் அடக்கினால் வெளிநாடுகளில் டபுள் அடிச்சு காசு அனுப்பின மக்கள் கொஞ்சமாவது நின்மதியடைவார்கள்.
  19. கக்கா போகவேண்டிய அவசரம் அவருக்கு. விமானத்தை இறக்கவேண்டிய தேவை விமானிகளுக்கு. கழிப்பறையில் யாராவது உள்ள நிலையில் விமானத்தை தரை இறக்க முடியாது என ஒரு விதி உள்ளதாக அறிந்தேன்.
  20. ஆரப்பா அந்த ஆட்கள். இவைகள் பெயர், ஊர் விபரங்களை வெளிவிட்டால்தானே மிகுதி வால்கள் யார், யார் என்பதை கண்டுபிடிக்கலாம். சட்டவிரோதமான முறைகளில் சொத்து சேர்ப்பவர்களின் சொத்தை முடக்குவது வரவேற்கத்தக்க விடயம்.
  21. சீமானுடைய தம்பிகளின் லிஸ்டில் நான் ஒருபோதும் சேரமுடியாது.😂 சீமான் என்னைவிட 5 நாட்கள் பிந்தியே பிறந்தார் 😜
  22. பண்டிகைக்காலத்திக்கேற்ற பதவிசான கவிதை ..........! சுமார் 1975 க்கு முன்வரையான சில நிகழ்வுகள் நினைவில் நீந்துகின்றன ........! அன்று நாங்கள், எம்போன்ற மத்தியதர வர்க்கம் ஆட்டிறைச்சி சாப்பிடுவதென்றால் தீபாவளி போன்ற பண்டிகைகள் , கோவில் வேள்விகள் , யாராவது இறந்துபோனால் "சிலவு" நாட்களில்தான் கிடைக்கும் ........அப்போது கடைகளில் இறைச்சி வாங்கும் பழக்கமும் இல்லை ......மாட்டிறைச்சி..... ம்கூம் .....மூச் ........ கோழி இறைச்சி அப்பப்ப மற்றும் உறவினர் வரும்போதும் கிடைக்கும் .......அக்காலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாதபடியால் அவை தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரியும் . ........! ஆகையால் நான் வேள்விகளுக்கு எதிரானவன் அல்ல .........கிடாய் வளர்ப்பதே விருந்தோம்பலுக்கும், வேள்விகளுக்கும்தான் ........எப்படி பூசி மொழுகினாலும் இன்றும்கூட இதுதான் யதார்த்தம் . .....! எப்படிக்கொல்வது..... கோவில்களில் ஒரே வெட்டில் முடிந்துவிடும் .......மற்றும்படி இதற்காக ஒரிருவர் டிப்பிளோம் எடுத்து ஆங்காங்கே வசித்தார்கள் . ..... சிலர் வாய்க்குள் உப்பு போன்ற எதையாவது திணித்துவிட்டு மூச்சுத்திணற பிடித்து கொல்வார்கள்...... அடுத்து அதை சாப்பிட இலைகுலை குடுத்து பாரமான இரும்பால் தலையில் ஒரே அடி ......அதன்பின் அதன் தோல் உரிப்பது ஒரு கலை .......காலில் குறிப்பிட்ட இடத்தில் கொஞ்சம் வெட்டி விட்டு அதனுள் காற்றை செலுத்த மாற்றர் பலூன்போல பெரிதாக உப்பிக்கொண்டு வந்திருக்கும் பின் சுலபமாய் உரித்து விடுவார்கள் . ......இப்போது அவர்களும் தாம் கொன்ற சீவன்களைத் தேடிப் போய்விட்டார்கள் ..........! 😇
  23. நீங்கள் சொல்வது போல், அவர்கள் தப்பாக நிறையச் செய்திருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் புறக்காரணிகளையும் ஒதுக்கிவிட முடியாது. அவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதில் உள்ள உள் விளையாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தால்தான் முழுஉண்மையும் வெளிவரும். தலைமறைவானார்கள் என்பதிலேயே எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அதுசம்பந்தமாக, நிறைய ஊகங்கள். பிறகு வெளியில வந்து என்னமோ சொன்னார். இன்னும் என்ன என்ன எல்லாம் வெளியில் வருமோ. உண்மைதான். இப்பிடி நடந்திருக்க வாய்ப்பு அதிகம். நல்ல வக்கில் வைத்தால் குறைந்த தண்டனைகளுடன் வெளிவந்துவிடுவார்கள். ஆனால், எம்மவர் முன்னால், அவர்கள் குற்றவாளிகளே. 😄
  24. 🤣....................... ஆத்திகமும், நாத்திகமும் தான் அடிப்படை வித்தியாசம், நாளும் கோளும் அல்ல என்று சொல்வார்கள் போல............... ஆத்திகர்களுக்கும், நாத்திகர்களுக்கும் இடையில் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்று ஒரு பகிடியைச் சொல்லுவார்கள்..................... இதுவரை பூமியில் வந்து போன, இன்னும் இருக்கின்ற கடவுள்களின் எண்ணிக்கை 7000 என்றால், ஆத்திகர்கள் அதில் 6999 கடவுள்கள் பொய்யென்றும், ஒரு கடவுள் உண்மை என்றும் சொல்லுகின்றார்கள்................ நாத்திகர்கள் 7000 கடவுள்களும் பொய்யென்று சொல்லுகின்றார்கள்.................. 1/7000 வித்தியாசம்............ இப்படியே எல்லாவற்றையும் கதைத்துக் கொண்டு இருக்க, கடைசியாக கயிற்றை மிதித்து தான் காலம் முடியும் போல..................🤣.
  25. Puthiyamaadhavi Sankaran · மூதாட்டி கற்றுக் கொடுத்த வியாபார தர்மம். மகாராஷ்டிரா நாக்பூர் அருகே அந்த மூதாட்டி விற்கும் காரி -டோஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கும் என்று தோழர் காம்ப்ளே எங்களை மாலை நேரத்தில் அழைத்துச் சென்றார். டோஸ்ட் வாங்கியாச்சு. இப்போ அதை முக்கி சாப்பிட சூடான சாய் வேணும். நான் என் பொருளாதரப் புத்தியை அவளிடம் காட்டினேன். " மெளசி, ஆஃப் சாயா பி தேனேக்கா" நீங்க எங்களுக்கு தேநீரும் கொடுக்கணும். டீயும் சேர்த்து விற்பனை செய்தால் நல்லா விற்பனை ஆகுமே" இது நம்ம படிச்ச பொருளாதர தொழில் அபிவிருத்தி. அந்த மூதாட்டி கண்கள் புன்னகைக்க சொன்னாள்.... " பேட்டி.. பக்கத்தில ஒருத்தர் சாய் விக்கிறார் பாரு. அவரு குடும்பமும் பிழைக்கணும்" நான் திரும்பிப் பார்த்தேன். எதிரே அந்த மனிதர் சாய் விற்றுக் கொண்டிருந்தார். அவரு யாரு என்று கேட்டேன். தெரியாது, என்னமாதிரி ஒருத்தர் அவ்வளவுதான்" என்று சொல்லி விட்டு தன் அடுத்த கஸ்டமருக்கு பொட்டலம் போட ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சாய் விற்கமுடியும். ஆனால் அதை அவள் செய்யவில்லை. வியாபார அபிவிருத்தி திட்டங்களை பக்கம் பக்கமாக எக்னாமிக்ஸ் பத்திரிகைகளில் வாசித்திருந்த எனக்கு அந்த ஆதித்தாயின் பொருளாதர வியாபாரக் கொள்கை பிடித்திருந்தது. வியாபாரம், முன்னேற்றம் என்பதெல்லாம் " தான் மட்டும் வாழ்வதல்ல" மற்றவர்களையும் வாழ வைப்பதுதான்." வாழு. வாழ விடு. என் குடியிருப்புக்கு கீழே இருந்த கடையில் ( provision store) எல்லாம் கிடைக்கும். காய்கறி தவிர. காய்கறி வாங்கி விற்க முடியாது என்பதல்ல. ஆனால் அந்தக் கடைக்காரர் அதைச் செய்யவில்லை. காரணம் அக்கடைக்கு வெளியே தள்ளுவண்டியில் காலையிலும் மாலையிலும் காய்கறி வியாபாரம் உண்டு. கடைக்காரருக்கு எவ்வளவு பெரிய மனசு. வாழு வாழ விடு. Voir la traduction
  26. ஏகலைவன் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் துரோணாச்சாரியாரின் கண்காணிப்பின் கீழ் கௌரவர்களும் பாண்டவர்களும் தீவிர பயிற்சி பெற்று வந்தனர். அப்பொழுது அர்ஜுனனுக்கு மட்டும் அவர் தனிக்கவனம் கொடுப்பதாக துரியோதனன் குற்றம் சாட்டினான். அதை பொய் என்று நிரூபிப்பதற்காகவும், அர்ஜுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு ஒரு போட்டி ஒன்றை துரோணர் ஏற்பாடு செய்தார். அங்கே இருந்த மரத்தின் உச்சி கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பழத்தை ஒரே கணையில் வீழ்த்த வேண்டும் என்பதே போட்டி. அங்கிருந்த அனைவரும் முயன்றும் யாராலும் அப்பழத்தை வீழ்த்த இயலவில்லை. அர்ஜுனன் அதை ஒரே அம்பில் வீழ்த்தினான். அப்பொழுது அவர்களிடம் நீங்கள் கணையை தொடுக்க குறி வாய்த்த பொழுது உங்கள் கண்ணில் பட்டது என்ன என துரோணர் கேட்டார். ஒவ்வொருவரும் , கிளை, இலை பின் பழம் என சொல்ல அர்ஜுனனோ தன் கண்களுக்கு அப்பழம் மட்டுமே தெரிந்தது எனக் கூறினான். இந்த ஒரு பதிலிலேயே அங்கிருந்தவர்களில் மிக சிறந்த வில்லாளி யாரென்று அனைவருக்கும் புரிந்தது. பிரதம சீடனை மிஞ்சிய வேடுவ இளவரசன் ஒரு நாள் இளவரசர்கள் அனைவரையும் அருகில் இருந்த வனத்திற்கு கூட்டி சென்றார் துரோணர். அவர்களுக்கு முன்பு அவர்களின் நாய் சென்றது. திடீரென்று சப்தம் வந்த திசையை நோக்கி குரைத்துக் கொண்டே சென்றது அந்த நாய். சில நிமிடங்களுக்குப் பின் அதன் குரைப்பு அடங்கிவிட, என்ன ஆனதென்று அனைவரும் அங்கு சென்றனர். அங்கே அந்த நாயின் வாய் அம்புகளால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் துளி இரத்தமும் சிந்தவில்லை. அந்த வித்தையை கற்றவர் யார் என்று அனைவரும் யோசிக்க அப்பொழுது அங்கே வந்த நிஷாத நாட்டு இளவரசன், துரோணரை வணங்கி “என் பெயர் ஏகலைவன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை வணங்கினான். அப்பொழுதுதான் முன்பு நடந்த சம்பவம் அவரது நினைவிற்கு வந்தது. சில காலம் முன்பு அவரிடம் வந்த ஏகலைவன் தன்னை சிஷ்யனாக ஏற்கும்படி வேண்டினான். ஆனால் குரு வம்சதிற்கு குருவாக இருந்த காரணத்தினால் நிஷாத நாட்டு இளவரசனை அவரால் சிஷ்யனாக ஏற்க முடியாது என மறுத்துவிட்டார். “குருவே! உங்கள் உருவத்தை மண்ணால் செய்து வைத்து தினமும் உங்களை வணங்கி வில் பயிற்சி செய்துவந்தேன். உங்கள் கருணையால் நான் நன்கு கற்று வருகிறேன்” என அவன் கூறினான். அவன் கூறியதை கண்டு வியந்த துரோணர், இப்படி ஒரு வில்லாளி இருப்பது என்றும் குரு வம்சத்திற்கு ஆகாது என மனதில் நினைத்துக் கொண்டார். பின் அவனிடம் “நீ நன்கு கற்று தேறி வருவது மகிழ்ச்சியே! ஆனால் , குரு தக்ஷிணையாக என்ன தரப்போகிறாய்?” எனக் கேட்டார். ஏகலைவனும் பணிவுடன் அவர் விரும்பும் தக்ஷணையை தருவதாகக் கூறினான். “அப்படியானால் உனது வலது கை கட்டை விரலை எனக்குத் தருவாயாக” என கேட்டார். அவர் கூறியவுடன் எந்தவித கோபமோ வருத்தமோ தயக்கமோ இன்றி தனது வலது கட்டை விரலை வெட்டி அவரது காலடியில் சமர்ப்பித்தான் ஏகலைவன். தோல்வியான வெற்றி சிறு வயதிலேயே தனது சகோதர்கள் அனைவரையும் விட பெரிய உடலையும், அதிக பலத்தையும் பெற்றவனாக பீமன் இருந்தான். தன் பலத்தை தன் சகோதரகளைக் காப்பாற்ற பயன்படுத்திய அதே சமயத்தில் கௌரவர்களை துன்புறுத்தவும் உபயோகித்தான். இதனால் எரிச்சலடைந்த துரியோதனன், பீமனை கொல்ல சதி திட்டம் தீட்டினான். ஒருமுறை கங்கைக் கரையில் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில் , பீமனின் உணவில் விஷத்தைக் கலந்து விட்டான். அது தெரியாத பீமன் அந்த உணவை உண்டு மயங்கிவிட, மற்ற சகோதரர்களின் உதவியுடன் அவனை கயிற்றில் கட்டி, கங்கையின் ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டான். பீமன் வீழ்ந்த இடத்தில கொடிய நாகங்கள் வாழ்ந்து வந்தன. பீமனை அவை கடிக்க, அவற்றின் விஷம் ஏற்கனவே அவன் இரத்தத்தில் கலந்திருந்த விஷத்தின் முறியடிக்க, பீமன் புத்துயிர் பெற்று எழுந்தான். தாங்கள் கடித்தும் அவன் இறக்காதது கண்டு அதிர்ச்சியடைந்த பாம்புகள் தங்கள் தலைவனான வாசுகியிடம் சென்று முறையிட்டு பீமனை அங்கே கொண்டு வந்தன. பீமனைக் கண்டவுடன் அவன் குரு வம்ச இளவரசன் என அடையளாம் கண்டுகொண்ட வாசுகி , பீமனின் உடல் நலம் தேற அவர்களின் அபூர்வ மருந்தை அவனுக்கு கொடுத்தது. அதைக் குடித்தவுடன் பீமனுக்கு ஆயிரம் யானை பலம் வந்தது போல் உடல் புத்துணர்வு பெற்றது. அந்த மருந்து மேலும் கிடைக்குமா என அவன் கேட்க, மேலும் ஏழு குவளை மருந்து அவனுக்கு தரப்பட எட்டு குளிகை மருந்தை குடித்து புதிய பலம் பெற்றான் பீமன். அதைக் குடித்தவுடன் அவனுக்கு தூக்கம் சொக்க, ஒரு வார காலம் வாசுகியின் அரண்மனையில் தங்கி ஓய்வெடுத்தான். பின், அவனிடம் விடைபெற்று கரைக்கு திரும்பினான். இறந்துவிட்டான் என கௌரவர்கள் நினைத்த பீமன், புத்துணர்வுடனும் புதிய பலத்துடனும் வருவது கண்டு துரியோதனன் தன்னைத் தானே நொந்து கொண்டான். https://solvanam.com/2025/05/25/ஏகலைவன்/
  27. Bjp Eswaramoorthy Kannan · குப்பை வண்டி விதி’ தெரியுமா? (The Law of the Garbage Truck) ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார். அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்” அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார். வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள். நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது. Voir la traduction......!
  28. Oct 28, 2025 - 01:51 PM கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (27) அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். தென் மாகாணத்தைப் பற்றிப் பேசினால், இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது. இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் ஆவர். அதில் அதிகமானவர்கள் குறைவான எழுத்தறிவு மட்டத்தில் காணப்படுகின்றனர். தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர். வழக்குகளை விசாரித்து 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுகள் வரை தாயும், குழந்தையும் ஒன்றாக இருக்க அனுமதிக்கிறோம். 5 வயது பூர்த்தியாகும் நாளில் குழந்தையையும் தாயையும் பிரித்து வைக்கின்றோம். அது என் வாழ்க்கையில் நான் கண்ட மிக சோகமான சந்தர்ப்பங்களில் ஒன்றாகும். குழந்தை அம்மாவை வேண்டி அழுகிறது. அம்மாவும் குழந்தையை வேண்டி அழுகிறாள். 5 வருடங்களாக அவர்களுக்கு இருந்த ஒரே உறவு அதுதான். அதில் சட்டம் குறுக்கிடுகிறது. அதனால் ஒருபோதும் ஒரு பெண்ணாக நீங்கள் தவறு செய்யாதீர்கள். போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க இந்த அரசாங்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது என தெரிவித்தார். இதனிடையே நேற்று களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். நாங்கள் இப்போது நிறைய அதிகாரிகளை சிவில் உடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். நீங்கள் பாடசாலை முடிந்த பிறகு எப்படிச் செல்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள், எங்கு குழுவாக நிற்கிறீர்கள் என்று பார்க்க. உங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால், பாடசாலை விட்டுச் செல்லும்போது பஸ் நிலையங்கள், கடைகள் போன்ற இடங்களில் இதுபோன்ற விடயங்களைக் கண்டால் எங்களிடம் கூறுங்கள். எனது தொலைபேசி இலக்கம் 071 859 2683 இதுவாகும் என குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmhaarysg0191o29n81mh815f
  29. இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை! இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது. இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது. உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்துமாறு பிரதமர் கியர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அகதிகளை விடுதிகளில் தங்க வைக்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இதேவேளை, விடுதிகள் வழியாக தங்குமிடம் வழங்கும் திட்டம், அரசுக்கு பல பில்லியன் பவுண்டுகள் இழப்பை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451369
  30. இங்கே கருத்தாடல் செய்யப்படும் விடயம் விடுதலைப்புலிகள் யாழ் மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து முஸ்லீம்களை விரட்டிய காலத்தில் விரட்டப்பட்ட முஸ்லீம்களிடம் இருந்த தங்க நகைகளை அபகரித்தார்களா? இல்லையா? என்பது மட்டுமே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.