Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    26
    Points
    39465
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19869
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    89120
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3165
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/20/26 in Posts

  1. கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK USA NED NAM போட்டியாளர் செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் IND PAK நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா IND PAK நிலாமதி IND PAK நந்தன் IND PAK 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் PAK IND நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா PAK IND நிலாமதி IND PAK நந்தன் IND PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் NAM ஏராளன் USA வசீ USA புலவர் NAM சுவைப்பிரியன் NAM அல்வாயன் USA ஈழப்பிரியன் NED நியூ பலன்ஸ் USA வாத்தியார் NAM கறுப்பி USA வாதவூரான் USA வீரப் பையன்26 NAM சுவி NAM கிருபன் NED கோஷான் சே NED அஹஸ்தியன் USA கந்தப்பு NAM நியாயம் NAM எப்போதும் தமிழன் USA ரசோதரன் NAM பிரபா NAM நிலாமதி NAM நந்தன் OMA 43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு முதல்வராக இருந்த @alvayan முதுகின் மீது ஏறி நாற்காலியைக் கைப்பற்றியுள்ளார்!
  2. றோசா என்றாலே அது மனதுக்கு மென்மையை உணர்த்தி நறுமணத்தையும் அள்ளி வீசும். ஆனால் தமிழ்சிறி தம்பிக்கு முள்ளாக குத்தி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதே.😳 தம்பி தற்போது வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற்று வர இறைவனை வேண்டுகிறேன். மேலும் உறவுகளுக்கு விபரங்களை அறியத்தந்து அவர்களின் மனங்களை ஆறுதல்படுத்துமாறு தம்பியைத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.🙏
  3. அரையிறுதிப் போட்டிகள் கேள்விகளின் அடைப்படையில் நடாத்தப் படாவிட்டால் புள்ளிகள் பறிபோகாது. அரையிறுதியில் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். அது முதல் போட்டி அல்லது இரண்டாவது போட்டியாக இருந்தாலும் பிரச்சினை இல்லை! இரண்டுக்கும் சேர்த்து aggregate ஆகக் கொடுக்கப்படும். ஆனால் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு ஒரு புள்ளியும் கிடையாது😂
  4. நாளைக்கு சுவி அண்ணா, நந்தன், வாகவூரன், நான் நாலுமுனை போட்டியில் உள்ளோம்😂 @ரசோதரன் அண்ணா, இந்த துரோகத்தை பின்வாங்கு மன்னிக்கிறது, ஆனால் மறக்காது😂
  5. கேள்விகள் 50) இலிருந்து 52) வரைக்கான புள்ளிகள்: 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ SA AFG CAN UAE போட்டியாளர் செம்பாட்டான் NZ SA ஏராளன் NZ SA வசீ NZ SA புலவர் NZ SA சுவைப்பிரியன் NZ SA அல்வாயன் NZ SA ஈழப்பிரியன் NZ SA நியூ பலன்ஸ் NZ SA வாத்தியார் NZ SA கறுப்பி NZ SA வாதவூரான் NZ AFG வீரப் பையன்26 NZ SA சுவி SA AFG கிருபன் NZ SA கோஷான் சே NZ SA அஹஸ்தியன் NZ SA கந்தப்பு NZ SA நியாயம் NZ SA எப்போதும் தமிழன் NZ SA ரசோதரன் SA AFG பிரபா NZ SA நிலாமதி SA AFG நந்தன் NZ SA 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் SA NZ ஏராளன் NZ SA வசீ NZ SA புலவர் NZ SA சுவைப்பிரியன் SA NZ அல்வாயன் NZ SA ஈழப்பிரியன் SA NZ நியூ பலன்ஸ் SA NZ வாத்தியார் NZ SA கறுப்பி NZ SA வாதவூரான் NZ AFG வீரப் பையன்26 NZ SA சுவி SA AFG கிருபன் NZ SA கோஷான் சே NZ SA அஹஸ்தியன் SA NZ கந்தப்பு SA NZ நியாயம் NZ SA எப்போதும் தமிழன் SA NZ ரசோதரன் SA AFG பிரபா SA NZ நிலாமதி SA AFG நந்தன் NZ SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் UAE ஏராளன் CAN வசீ CAN புலவர் UAE சுவைப்பிரியன் UAE அல்வாயன் CAN ஈழப்பிரியன் CAN நியூ பலன்ஸ் CAN வாத்தியார் UAE கறுப்பி CAN வாதவூரான் CAN வீரப் பையன்26 UAE சுவி CAN கிருபன் UAE கோஷான் சே UAE அஹஸ்தியன் CAN கந்தப்பு CAN நியாயம் CAN எப்போதும் தமிழன் UAE ரசோதரன் CAN பிரபா UAE நிலாமதி CAN நந்தன் CAN முதல் சுற்றுப் போட்டிகளுக்கான 52 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் @கந்தப்பு மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முதல்வர் நாற்காலியில் உறுதியாகத் தக்கவைத்துள்ளார். சுமைதாங்கி மீண்டும் @goshan_che இடம் வந்துள்ளது. ஆனால் அது அடிக்கடி கைமாறலாம்!
  6. இன்றைய இறுதியான முதல்சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஓமான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. வாசிம் அலி மாத்திரம் நிதானமாக 32 (33 பந்துகளில்) ஓட்டங்களை எடுத்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்து, இறுதியில் 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 104 ஓட்டங்களுடனும் சுருண்டுகொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்செல் மார்ஷும், ட்ராவிஸ் ஹெட்டும் பந்துகளை நாலாபக்கமும் விளாசித் தள்ளி 6 ஓவர்களிலேயே 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். தொடர்ந்தும் வேகமாக அடித்தாடியபோதும் ட்ராவிஸ் ஹெட் 32 ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும் மிச்சல் மார்ஷ் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் 64 (33 பந்துகளில்) ஓட்டங்கள் எடுத்து 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். முதல் சுற்றின் 40 போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  7. நீர் வீழ்ச்சியில் மின்பிறப்பாக்கிகள் இல்லை அண்ணை. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி, மஸ்கெலிய, ஹட்டன் நகர்களுக்கு அண்மித்து, இரு ஆறுகளை தடுத்து, அணை+மின்பிறப்பாக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இப்படி மொத்தம் 5 இடங்கள் என நினைக்கிறேன். இவை எல்லாமும் சேர்த்து - லக்சபான நீர்மின் தொகுதி எனப்படும். இலங்கையின் முதல் நீர்மின் பிறப்பாக்கும் முறை என்பதாலும், இதன் பின்ன்னர்தான் தேசிய அளவிலான மின் வழங்கல் நடைமுறைக்கு வந்தது என்பதாலும், சாக்கிலேட்டை கண்டோஸ் என்பது போது, தேசிய மின்வலையமைப்பை (national grid) உங்கள் தலைமுறை லக்சபான கரண்ட் என அழைத்தது. இப்படி ஒரு National grid அமையும் முன், மின்சாரம் உள்ளூரில் இருந்த அனல் மின்நிலையங்கள் மூலம், உள்ளூர் வலையமைப்பில் வந்தது. ஒன்றில் இருந்து ஒன்றை பிரித்து காட்ட, லக்சபான கரண்ட் என்ற பதம் பிரயோகத்யில் இருந்தது. பின்னாளில் யுத்தகாலத்தை தவிர, இப்போ மின்சாரம் தேசிய வலையமைப்பிலேயே வருகிறது. உள்ளூர் மின்நிலையங்களும் இந்த வலையமைப்பில் உப நிலையங்கள் ஆகியுள்ளன. பின்னாளில் இதை விட பெரிய, ரந்தம்பே, ரந்தெனிகல, விக்டோரியா நீர்தேக்கங்கள் கட்டப்பட்டு அவை மூலம் வரும் மின்சாரமே இப்போ நீர் மின்சாரத்தில் கணிசமானதை பிறப்பிக்கிறன. இப்போது குறைந்தளவான பங்களிப்பையே லக்சபான தொகுதி வழங்கிறது. இப்போ யாரும் லக்சபான கரண்ட் என சொல்வதில்லை. ஆனால் நாட்டின் பெரும்பாலான மின்சாரம் இன்னமும் எரிபொரிருட் தகனம் மூலமே பிறப்பாக்கிறது (களனிதிஸ்ஸ, நுரைச்சோலை).
  8. இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று... Antibiotic குளிசைகளை காலையும், மாலையும் 5 நாட்களுக்கு போடும்படி தந்தார். 5 நாட்களும் கடந்த பின்பும்... Antibiotic குளிசைக்கு நோவும், வீக்கமும் சொல்வழி கேட்கவில்லை. இப்படியே பொறுத்து இருந்தால்... கடைசியில் பிரச்சினை பெரிதாகி விடும் என நான் முடிவெடுத்து, அருகில் உள்ள வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவிற்கு சென்று நடந்ததை சொல்ல... அவர்கள் "எக்ஸ் ரே", இரத்தப் பரிசோதனை எல்லாம் எடுத்து சோதித்து பார்த்து விட்டு... மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று போத்தல் வீதம்... கையில் Antibiotic ஐ, திரவ வடிவில் ஏற்றி கண்காணிக்க வேண்டும் என்றும், வீக்கம் வற்றாது விட்டால்... அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்றும் சொன்னார்கள். நமக்கும்... ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு கனநாள், ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று , அவர்கள் நீட்டிய காகிதங்களில் கையெழுத்தை போட்டுக் கொடுத்து விட்டு... நான் அந்த ஆஸ்பத்திரியின் வாடிக்கையாளன் என்ற படியால், எங்கு அடுத்துப் போக வேண்டும் என்று எனக்கு ஒருவரும் கூட்டி வந்து காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை . அவர்கள் தந்த சில காகிதங்களை வாங்கிக் கொண்டு, நான் தங்க வேண்டிய பகுதிக்கு பொறுப்பான "நேர்ஸ்" ஐ சந்திக்க சென்றேன். தொடரும்... ✍
  9. 🤣................ நான் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து விட்டேன், பையன் சார்................ அதை ஒரு வரலாற்று ஆவணமாக ஆக்கப் போகின்றேன்...................🤣.
  10. கேள்விகள் 47) இலிருந்து 49) வரைக்கான புள்ளிகள்: 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG WI SCOT NEP ITA போட்டியாளர் செம்பாட்டான் ENG WI ஏராளன் ENG WI வசீ ENG WI புலவர் ENG WI சுவைப்பிரியன் ENG SCOT அல்வாயன் ENG WI ஈழப்பிரியன் ENG WI நியூ பலன்ஸ் ENG WI வாத்தியார் ENG WI கறுப்பி ENG WI வாதவூரான் ENG WI வீரப் பையன்26 ENG WI சுவி ENG SCOT கிருபன் ENG WI கோஷான் சே ENG WI அஹஸ்தியன் ENG WI கந்தப்பு ENG WI நியாயம் ENG WI எப்போதும் தமிழன் ENG WI ரசோதரன் ENG WI பிரபா ENG WI நிலாமதி ENG WI நந்தன் ENG WI 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் ENG WI ஏராளன் ENG WI வசீ ENG WI புலவர் ENG WI சுவைப்பிரியன் ENG SCOT அல்வாயன் ENG WI ஈழப்பிரியன் ENG WI நியூ பலன்ஸ் ENG WI வாத்தியார் ENG WI கறுப்பி ENG WI வாதவூரான் ENG WI வீரப் பையன்26 WI ENG சுவி ENG SCOT கிருபன் ENG WI கோஷான் சே ENG ITA அஹஸ்தியன் ENG WI கந்தப்பு ENG WI நியாயம் ENG WI எப்போதும் தமிழன் ENG WI ரசோதரன் WI ENG பிரபா ENG WI நிலாமதி WI ENG நந்தன் ENG SCOT 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் ITA ஏராளன் ITA வசீ ITA புலவர் ITA சுவைப்பிரியன் ITA அல்வாயன் ITA ஈழப்பிரியன் NEP நியூ பலன்ஸ் ITA வாத்தியார் ITA கறுப்பி ITA வாதவூரான் SCOT வீரப் பையன்26 ITA சுவி NEP கிருபன் SCOT கோஷான் சே SCOT அஹஸ்தியன் ITA கந்தப்பு ITA நியாயம் ITA எப்போதும் தமிழன் ITA ரசோதரன் SCOT பிரபா ITA நிலாமதி SCOT நந்தன் ITA 49 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயாவுக்கும் @goshan_che க்கும் இடையில் ஆடு-புலி ஆட்டம் தொடர்கின்றது!
  11. கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS SL IRE ZIM OMA போட்டியாளர் செம்பாட்டான் AUS SL ஏராளன் AUS SL வசீ AUS SL புலவர் AUS SL சுவைப்பிரியன் AUS ZIM அல்வாயன் AUS SL ஈழப்பிரியன் AUS SL நியூ பலன்ஸ் AUS SL வாத்தியார் AUS SL கறுப்பி AUS SL வாதவூரான் AUS SL வீரப் பையன்26 AUS SL சுவி AUS SL கிருபன் AUS SL கோஷான் சே AUS SL அஹஸ்தியன் AUS SL கந்தப்பு AUS SL நியாயம் AUS SL எப்போதும் தமிழன் AUS SL ரசோதரன் AUS SL பிரபா AUS SL நிலாமதி AUS SL நந்தன் AUS SL 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் AUS SL ஏராளன் AUS SL வசீ AUS SL புலவர் AUS SL சுவைப்பிரியன் AUS ZIM அல்வாயன் AUS SL ஈழப்பிரியன் AUS SL நியூ பலன்ஸ் AUS SL வாத்தியார் AUS SL கறுப்பி SL AUS வாதவூரான் AUS SL வீரப் பையன்26 AUS SL சுவி AUS SL கிருபன் SL AUS கோஷான் சே SL AUS அஹஸ்தியன் AUS SL கந்தப்பு AUS SL நியாயம் AUS SL எப்போதும் தமிழன் AUS SL ரசோதரன் SL AUS பிரபா AUS SL நிலாமதி SL AUS நந்தன் AUS IRE 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் OMA ஏராளன் OMA வசீ OMA புலவர் OMA சுவைப்பிரியன் OMA அல்வாயன் OMA ஈழப்பிரியன் OMA நியூ பலன்ஸ் OMA வாத்தியார் OMA கறுப்பி OMA வாதவூரான் OMA வீரப் பையன்26 OMA சுவி ZIM கிருபன் OMA கோஷான் சே ZIM அஹஸ்தியன் OMA கந்தப்பு OMA நியாயம் OMA எப்போதும் தமிழன் OMA ரசோதரன் OMA பிரபா OMA நிலாமதி OMA நந்தன் OMA 46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @goshan_che தனது பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!
  12. சிறப்பு. 80 புள்ளிகளில் 68ஐப் பெற்ற அல்வாயன், கந்தப்பு. வாழ்த்துகள். இனித்தான் விறு விறுப்பான கட்டம். எப்படி அமையப் போகிறது
  13. இன்று காலையில் வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂 நலம் விசாரித்த @Paanch அண்ணை, @குமாரசாமி அண்ணை, @விளங்க நினைப்பவன், @satan, @யாயினி, @alvayan, @ஈழப்பிரியன், @நியாயம், @ஏராளன், @suvy ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏
  14. மென்மையான மனதுள்ளவர்களைத்தான் ரோஜா முள்ளு குத்தும். விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன்.
  15. றோசா முள்ளு குத்தி சிறி அண்ணா மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றாரா அவர் தொழில்சாலை பாரிய விபத்தையே வெற்றியுடன் கடந்து வந்தவர் 💪 இதை சுலபமாக கடந்து வருவார் விரைவில் நலபெற வாழ்த்துக்கள்
  16. நலம் பெற வேண்டுகின்றேன்.
  17. அந்த நாட்களில் காத்தவராயன் கூத்து - ஆரியமாலா திருமணம் என்று விடிய விடிய கோவில் வீதியில் நடத்துவார்கள். அதில் ஒரு பாட்டு வரும் என்று ஞாபகம். 'ஓராம் படியில் காலை வைத்தேன் பெற்றவளே தாயே எனக்கு.................' என்று ஏதாவது ஒரு இக்கட்டைச் சொல்லுவார்கள். இப்படி எக்கச்சக்கமான படிகளைச் சொல்லிப் பாடி நடிப்பார்கள். யாழ் களத்திலும் கீழே இருந்து மேலே போவது அதே கடினம் தான்...............🤣.
  18. வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம் - சுப.சோமசுந்தரம் கருப்பு, சிவப்பு, நீலம் என்ற இந்த மூன்று வண்ணங்களில் எதிலுமே நிற்காத ஒருவரிடம் நான் அரசியல் பேச விரும்புவதில்லை. அந்த மாதிரியான நபரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது என்று தெரியாததே காரணம். இந்த மூன்று வண்ணங்களும் முறையே திராவிட இயக்க அரசியல், இடதுசாரி அரசியல், தலித் அரசியல் இவற்றைக் குறிப்பன என்பது இன்று தமிழ்நாட்டில் சிறு பிள்ளைகளுக்கும் தெரியும், தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மூன்று வண்ணங்களையும் எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் நான். அதாவது இவற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியிலும் உறுப்பினர் ஆகாமலே மூன்றையும் கொண்டாடும் உரிமை பெற்றுள்ளேன். ஆங்கிலத்தில் சொல்வது சுருக்கமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என நம்புகிறேன், "I own them, I belong to them". இதில் ஆகச் சிறந்த நன்மை ஒன்று உண்டு. ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் மூன்றில் எந்த ஒரு அணியும் மேற்சென்று இடித்தற் பொருட்டாய்க் கடிந்து கொள்ளும் உரிமையே அது. அந்த உரிமை அவர்களிடம் எடுத்து எனக்கு நானே கொடுத்துக் கொள்வது. ஆனால் எந்த நிலையிலும் எதிரிகளிடமும், தன் பெண்டு தன் பிள்ளையென மட்டும் வாழும் சராசரிகளிடமும் இந்த மூவண்ணத்தாரை நான் விட்டுத் தருவதில்லை. நான் வகுத்த வர்ணாசிரமம் இதுவே ! ஏன் இந்தப் பீடிகை ? இப்போது நாம் கையில் எடுத்துள்ள வாச்சாத்திக்கு வருவோம். வெகு சமீபத்தில் செங்கொடியினரால் வெளியிடப்பட்ட 'வாச்சாத்தி' எனும் ஆவணப்படத்தை மானிடர் அனைவரும் பார்க்க வேண்டும். அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. வாச்சாத்தி தர்மபுரி மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்களின் கிராமம். 1992 ஜூன் மாதம் 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இம்மூன்று அரசு இயந்திரங்களாலும் சூறையாடப்பட்ட சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட கிராமம். சுமார் 600 கோடி பெறுமானமுள்ள (1992 டிலேயே) சந்தன மரங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுகவினராலும் துணை போன அதிகார வர்க்கத்தாலும் மூன்றில் ஒரு பங்கு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாகவும் அரசு இயந்திரங்களின் உதவியோடு மேலும் அத்தனையையும் வெட்டத் திட்டமிருந்ததாகவும் கேள்வி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறாக இருந்த அந்தக் கிராமத்தினரை அப்புறப்படுத்தவே வன்முறை, பாலியல் வல்லுறவு, வீடுகளை அடித்து நொறுக்குதல், கிராமத்துக் கிணற்றில் மோட்டார் கழிவு எண்ணெயைக் கலத்தல் என எழுத்திலடங்கா வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவும் ஏதோ ரவுடிக் கும்பலால் அல்ல; மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அரசுத்துறைகள் எனும் கும்பலால். கிராம மக்கள் மீது சந்தனம் வெட்டிக் கடத்திய குற்றம் சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். எந்தக் குற்றத்தை அவர்கள் எதிர்த்தார்களோ அந்தக் குற்றமே அவர்கள் மீது சுமத்தப்பட்டது பேரவலம். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களை இப்போது வெளியாகி உள்ள ஆவணப்படத்தில் அனைவரும் கண்ணீருடன் கண்டு குமுறலாம். அரசுத் துறைகளில் மெத்தப் படித்தோரும் பாதகஞ் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களைச் சரியாக வழிநடத்தி 31 ஆண்டுகள் ஜனநாயக வழியில் நீதிப் போராட்டம், வீதிப் போராட்டம் என்று நடத்தி அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த வீரமும் ஈரமும் கொண்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்; அவர்கள் மட்டுமே ! அரசுத் துறை ரவுடிகளால் வன்புணர்வு எனும் கொடுமைக்கு ஆளான 18 பெண்கள் உட்பட அதிகார வெறியாட்டத்திற்கு ஆளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததோடு அரசுத் துறைகளைச் சார்ந்த 269 பேர் குற்றவாளிகள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கித் தந்தனர். 269 பேரில் இந்த 31 ஆண்டுகளில் மரணித்த 54 பேரைத் தவிர ஏனைய 215 பேரும் சிறைத் தண்டனை பெற்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நம் செங்கொடித் தோழர்கள் மட்டுமா போற்றுதலுக்குரியவர்கள் ? பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் இத்தனை ஆண்டுகள் உறுதியோடு நின்றார்களே ! ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அம்மக்களில் ஒவ்வொருவருக்கும், பிறழ் சாட்சியாக மாற, அவர்கள் நினைத்துப் பார்க்காத பணம் பேரம் பேசப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் மிரட்டப்பட்டிருப்பர். ஆனால் ஒருவர் கூட உடன்படவில்லை, அஞ்சவில்லை என்பது வரலாற்றில் வேறு எங்கும் நிகழ முடியாத ஒன்று. CPI(M) மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியதைப் போல அந்த மக்களே தலையாய கதாநாயகர்கள் (protagonists). மக்கள் இயக்கம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை உலகுக்கே உணர்த்தியவர்கள். அரசியல் சூட்சமங்கள் அவ்வளவாகத் தெரியாத பாமரர் மனதில் சில கேள்விகள் எழுவது இயல்பு. வாச்சாத்தி கொடுமை நிகழ்ந்தது அதிமுக ஆட்சியில். மணக்கும் சந்தன காசை இழக்க மனமின்றி எத்தகைய கொலை பாதகத்திற்கும் அவர்கள் துணிந்தது புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தில் மும்முரமாக நின்ற தோழர் பி.சண்முகம், தோழர் அண்ணாமலை இவர்களை ஏதாவது ஆக்சிடென்ட் செய்து கதையை முடிக்கச் சொன்ன அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொலைபேசிப் பேச்சின் பதிவிலிருந்து தெளிவாகத் தெரிகிறது - அதிலும் அப்பதிவு தோழர்களின் கையில் கிடைத்ததால். இடையில் கலைஞர் கருணாநிதியின் திமுக ஆட்சி ஏற்பட்டபோது வழக்கைத் துரிதப்படுத்திக் குற்றவாளிகளை மக்களுக்கு இனங் காட்டியிருக்கலாமே ! மாறாக நீதிமன்ற உத்தரவின் படி சிறைப்படுத்தப்பட்ட 269 காவலர்களை கலைஞர் ஏன் விடுவித்தார் ? இதே கேள்வி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் எழுகிறது. அமைதி வழியில் போராடிய 13 போராளிகள் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளப்பட்டது எடப்பாடியாரின் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆட்சி மாறிய பின் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி, குற்றம் (குற்றேவல்) புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அரசு நிர்வாக அதிகாரிகளின் மீதும் ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை ? இக்கேள்விக்கெல்லாம் அனுபவத்தால் முதிர்ச்சி பெற்ற தோழர் ஒருவர் பதிலிறுத்தார், "ஆட்சி மாறினாலும் காவல்துறையின் உயரதிகாரிகளும் நிர்வாக அமைப்பின் உயரதிகாரிகளும் உரியோரைச் சந்தித்து, தங்கள் ஆட்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மொத்த அமைப்பும் நிலை குலைந்து போகும் - அதாவது demoralise ஆகும் - என்று ஓதிவிட்டு வருவார்கள் (சரியாகச் சொன்னால், எச்சரித்து விட்டு வருவார்கள்). என்ன இருந்தாலும் இவர்களை வைத்துதானே ஆட்சி நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் எந்த ஆளும் கட்சியும் அடக்கி வாசிக்கும்". இது மட்டுமா ? முதுகுளத்தூர் கலவரத்தில் தலித்துகளின் பக்கம் முழுமையாக நிற்க வேண்டிய பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் பஞ்சாயத்து பண்ணத்தானே முயற்சி செய்தார்கள் ? அங்கு பெரும்பான்மையாகத் திகழ்ந்த ஆதிக்க உயர்சாதியினரைப் பகைப்பது வாக்கு வங்கி அரசியலுக்குச் சரிவராது என்ற நிதர்சனம் அன்றி வேறென்ன ? அதுபோலவே கவின் கொலை போன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவதில் இப்போது காலதாமதம் ஏன் ? இதுதான் ஜனநாயகத்தின் அவலம். இந்த அரசியலை எதிர்கொள்ள வீதிமன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி ஆள்வோரை நிர்பந்திக்க மக்களும் மக்கள் இயக்கங்களும் முன்வர வேண்டும். இப்பணியினை வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டோரும் செங்கொடியினரும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் பங்கு கொள்ளாத கருப்புக் கொடியினரும் தலித் அமைப்பினரான நீலக் கொடியினரும் இதுபோல் இங்கு நிரம்பப் பணியாற்ற வேண்டும். ஏன் செங்கொடித் தோழர்கள் கூட, தம்மால் முன்னெடுக்கப்படாத ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்திலும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திலும், இன்ன பிறவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிக் குரல் கொடுக்க வேண்டும். தமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட்தானே ! இதை விட பொதுவுடைமைக்கு வேறு என்ன சிறந்த வரையறை இருக்க முடியும் ? உரைநடையில் கூட மரபுப் பாடல் ஒன்றினை வலுக்கட்டாயமாக இழுக்கும் மன நோய் எனக்கு உண்டு. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பாடி இக்கட்டுரைக்கு நிறைவுத் திரை போட விழைகிறேன். பொதுவுடைமைவாதிகளால்தான் இவ்வுலகமே இயங்குகிறது என ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்ச் சொல்கிறது பாடல். வாச்சாத்தியில் அயராது போராடிய மக்களுக்கும் அவர்களைச் செவ்வனே வழி நடத்திய செங்கொடியினருக்கும் பாடும் மங்கல வாழ்த்தாக இதனைக் கொள்ளலாம். எனது வலைப் பதிவிலிருந்து படி எடுத்து இங்கு பதிவு செய்கிறேன் : "உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி ரபுகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !" ----புறநானூறு 182. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது). பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார். பாடற்பொருள் : " இவ்வுலகம் உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்) எனத் தொடங்குகிறது பாடல். இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார் புலவர். அவையாவன :- இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்; பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம் மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி (அன்ன மாட்சியர் அனையராகி), வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே முயலும் தன்மையர். இத்தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.
  19. 🤣............... எந்த அலையில் இழுபட்டு இப்படிப் போனேன் என்று தெரியவில்லையே.............🤣. பின்வாங்கிலில் இருந்து இத்தாலிக்கு ஆதரவாக கையை தூக்கிய அந்த நாட்கள்............அதையும் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டும் போல..................🤣.
  20. சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது. பிரித்தானிய நேரப்படி நாளை சனி 21 பெப் முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் பாகிஸ்தான் (Y3) NZ எதிர் PAK 14 பேர் போட்டியில் உள்ள நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஏழு பேர் போட்டியில் உள்ள பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத ஆப்கானிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் NZ வசீ NZ புலவர் NZ சுவைப்பிரியன் NZ அல்வாயன் NZ ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் NZ வாத்தியார் NZ கறுப்பி NZ வாதவூரான் PAK வீரப் பையன்26 PAK சுவி NZ கிருபன் NZ கோஷான் சே NZ அஹஸ்தியன் PAK கந்தப்பு PAK நியாயம் NZ எப்போதும் தமிழன் NZ ரசோதரன் AFG பிரபா PAK நிலாமதி AFG நந்தன் PAK நாளைய போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?
  21. ஆப்கான் ரவுண்டு முடிந்த பின்னும் சேதம் அதிகம் இல்லை........ வரலாறு நீண்டு கொண்டே போகுதே...........................😜.
  22. 🤣............... இந்தப் பிரச்சனையை தவிர்ப்பதற்காகவே, முடிந்த வரை அணிகளின் தலைவர்களை நான் தேர்ந்தெடுப்பது.............. சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் என்று தெரிவுகளில் சோடி கட்டி விடுவதும் உண்டு...............🤣.
  23. ஜ‌பிஎல்ல‌ SRH அணிக்கு விளையாடும் வீர‌ர் தொட‌க்க‌ வீர‌ர் அவ‌ர் தான் போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல் போட்டியில் ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிக்கும் வீர‌ர் யார் என்ர‌ கேள்விக்கு அவ‌ரின் பெய‌ர் தான் ச‌ரியான‌து 141ர‌ன்ஸ்சு அடிச்சு இருந்தார் இந்த‌ உல‌க‌ கோப்பை பெடிய‌னுக்கு ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை.............இப்ப‌டியே போனால் இவ‌ரின் இட‌த்தை இள‌ம் இந்திய‌ வீர‌ர்க‌ள் பிடிக்க‌ கூடும்.......................
  24. பொதுவாக எல்லோரும் அப்படித்தான், எனது தெரிவினை இப்போது போய் பார்த்தேன் அதில் ஸ்ராக்கினை ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுப்பவராக தேர்வு செய்துள்ளேன் அவர் போட்டியிலேயே இல்லை.
  25. எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் சுற்று முடிவுகள் எண்ணும் பணி ஆரம்பமாகிவிட்டது.
  26. அதிலும் அவன் கிலென் பிலிப்ஸ் இருக்கானே, பறவை மாதிரி. எக்ஸ்ரா கவர் இடம் அவனின் ராஜ்ஜியம். அடிச்சுப் பாருங்கோவன்.
  27. இல்லை. அது கிரிபாட்டி தீவு எனும் நாடு. 🙏
  28. அவுஸ்திரேலியாவில் 21 ஆம் திகதி பிறந்துவிட்டது. நான் ஏன் நீங்கள் இன்று என எழுதினீங்க என்று சற்று குழம்பிவிட்டேன்!😄
  29. நீங்கள் இளவயதில் வேலைக்கென வெளிக்கிட்டவர், இப்போ போனாலும் நேரே யாழ் போவபர் என் சொன்ன நினைவு. முடிந்தால் இலங்கையின் மற்ற இடங்களையும் பார்த்து வாருங்கள். ஒவ்வொரு நீழ்வீழ்ச்சியும் ஒவ்வொரு அழகு.
  30. பழைய ஆட்களை சந்திக்க கிளுகிளுப்பாக இருந்திருக்குமே? தட்டச்சு செய்ய பிரச்சனை இல்லையோ? என்னை மாதிரி ஒத்தை விரல் தானோ?
  31. ஓஓஓஓ இதுவரை காலமும் லக்சபான நீர்வீழ்ச்சியில் இருந்தே முதல் மின்சாரம் பெறப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். நீர்வீழ்ச்சியைக் காட்டியதும் பெரும் ஏமாற்றமாக போய்விட்டது. மலையில் இருந்து கயிறு மூலம் இறங்கியவர்கள் எல்லோருமே பேய் அறைந்தது போல இருந்தார்கள். தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மாட்டவே மாட்டேன் என்று அடம் பிடித்தார். பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கால்கள் கூசியது. அங்குள்ளவர்கள் அமைப்பாக பாதுகாப்பான முறையில் வழி நடத்துகிறார்கள். பெரும் தகவலுக்கு மிகவும் நன்றி கோசான். சுவி வழமையில் நீங்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதால் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நினைத்தேன்.
  32. கொலைக்கு பாவித்த சிம்மை தலையை சுற்றி கடலுக்குள் எறிவார்களா? அல்லது…. அனுர சொல்லிபோட்டார் என்பதால் மீள பதிந்து, கொலை கேசில் மாட்டி கொள்வார்களா😂. இது கொம்பெனிகளை அல்ல…இந்த கொலைகளை செய்தோரை…ஆதாரம் இல்லை என சொல்லி பாதுகாக்கும் முயற்சி. ஏன் என்றால் இந்த கொலைகள் பல இனவாத நோக்கில் நடந்தவை, அதை அனுரவும், அவர் கட்சியும் அன்றும், இன்றும் ஆமோதித்தன.
  33. அவுஸ்ரேலியா எதிர் ஓமான் ஜ‌ரோப்பிய‌ நேர‌ம் ம‌திய‌ம் இர‌ண்டு ம‌னிக்கு தொட‌ங்குது................இது தான் ஆர‌ப்ப‌ சுற்று க‌ட‌சி போட்டி..............................
  34. ஓமானின் ஒற்றை நம்பிக்கை இந்த கணிப்பு மட்டும்தான்😂 இது என்னுடைய வாழ்க்கையின் கதைதான்😂. இதே போல் இன்னொரு விடயம் -எந்த விடயமும் 2ம் அல்லது 3ம் முயற்சியில்தான் சரிவரும். அதுக்காக ஜியை போட்டியை இன்னொருக்கா வைக்க சொல்லி கேட்கவா முடியும்😂.
  35. அண்மையில் காதலர் தினம் வந்து போனது. சிறியர் ஏடாகூடமாய் ஏதும் உணர்ச்சி வசப்பட்டு ரோசாவிடம் குத்து வாங்கியிட்டாரோ?
  36. றோஜாவை மணக்கலாம் கட்டி அணைக்கக் கூடாது. சிங்கன் விரைவில் நலமாகி யாழில் ஓடித்திரிய வேண்டுகிறேன். தகவலுக்கு நன்றி பாஞ்ச்.
  37. பூரண நலம் பெற்று வீடு திரும்புங்கோ சிறி.👋
  38. வைத்தியசாலையில் தங்கி இருக்கும் அழவுக்கு ரோசா குத்தி விட்டதா...? காலையில் யாழில் புதியவர் ஒருவரை இன்ரவியூ எடுத்து கொண்டு இருந்தாரே..🤭.சரி பூரண நலம் பெற்று வீடு திரும்புங்கோ சிறியண்ண.👋
  39. இலங்கை அணித்தலைவர் சகல துறை ஆட்டக்காரர். ஆறு அல்லது ஏழாம் இடத்தில் களம் இறங்குவார். ஐந்தாவது அல்லது நான்காவதாக பந்து வீசுவார். சிறப்பாக களத்தடுப்பு அமைப்பார். தனது வேலையைச் செவ்வனே செய்கிறார். வேற என்னத்தச் சொல்ல.
  40. வீட்டோடு நாயையும் கொடுத்திட்டு வந்திட்டீர்களே. பிஸ்கட்டாவது வைத்திருக்கிறீர்களா? போன உடனே நாய் வாலை ஆட்டுமே.
  41. ஆருக்கோ வெருட்டல் மாதிரிக் கிடக்கு. மேலே நிக்கிறவை பாடு திண்டாட்டம் போல கிடக்கு. 😁 எனக்கென்டா..... உங்களுக்குத்தான் ஏதோ சொல்றாரோ.
  42. முதல் சுற்று புள்ளிகள் எல்லாம் கணக்குப் பார்த்தாயிற்று😁 ஆனால் நாளை போட்டி முடிந்த பின்னர்தான் பதிய முடியும்! நிலைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.. 🤪
  43. அமெரிக்கா அணிக்கு சூப்ப‌ர்8க்கு போகும் வாய்ப்பு கிடைச்சு இருந்தால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அமெரிக்கா வீர‌ர் தான் அதிக‌ விக்கேட் எடுத்து இருப்பார் ஏராள‌ன் அண்ணா இவ‌ரின் ப‌ந்து வீச்சு பாராட்ட‌ த‌க்க‌து 4விளையாட்டில் விளையாடி 13விக்கேட்😍..........................
  44. அந்த கேசு தூசு தட்டி விசாரணைக்கு வருகுது....இப்ப ரூட்டைமாத்திப் பாய்கிறார்...இவர்சொன்ன ஆர்ப்பாட்ட மாதமும் கேசு எடுக்கும் திகதியும் கிட்டக் கிட்ட..
  45. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!
  46. பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் வாழ்வதற்கும் நடுவிலே விதி வருவது எந்த உருவத்திலோ தெரியல. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியவில்லை பெருகிவரும் மனிதகுலம் உலகிலே எதற்கு பிறக்கிறது என்று இதுவரைக்கும் புரியலை பெற்றவரும் மற்றவரும் பிரிவு தானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறு தானம்மா உற்ற பொருள் செல்வம் எல்லாம் சொந்தம் ஏதம்மா இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா
  47. உண்மையிலேயே.. இவ்வளவு நுணுக்கமாக சிலை வடித்த சிற்பியை நினைக்க ஆச்சரியமாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.