Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. திரு. சுப.சோமசுந்தரம் அவர்களே! ஒரு சிறு காளாக்காயைப் போடும் அளவிற்குக் கூட இல்லாத என் அறிவுச் சிறு பையில், பெரும் பலாப்பழத்தையே நீங்கள் போடத்தந்தால் நான் என்செய்வேன்.??😩
  2. இதற்கெல்லாம் காரணமானவர்கள், நாங்களும் எங்கள் சமூகமுமே, வைத்தியர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணாமல், கடவுள்களாகப் போற்றி வணங்கியமைதான்.😩
  3. கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் மனைவி அன்று! மனைவி இறந்தால் உயிரை மாய்க்கும் கணவன் இன்று!! குழந்தைகள்??????.
  4. ஆமாம் சுவி! ுஉங்கள் ஆதங்கம் வரவேற்கக் கூடியதே!! ஆனாலும் ஒரு பெட்டிக்குள் ஒன்றுதான் கொண்டுசெல்வது உலக வழக்கம்.!!!🤔
  5. பால் ஊற்றுவது வழக்கம், எந்தப் பால், எதனுடைய பாலை ஊற்றினார்களோ???🤔
  6. வெளிவந்தது இலங்கையின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்: அதில் இரு தமிழர் யார் தெரியுமா? - 6 years ago local news இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான "FORBES" சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள். நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள். நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா. இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள். முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள். முதலாமிடம் - மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்) இரண்டாமிடம் - அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்) மூன்றாமிடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்) நான்காமிடம் - ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்) ஐந்தாமிடம் - கருணா (17 லட்சம் டொலர்) ஆறாமிடம் - ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்) ஏழாமிடம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்) எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்) ஒன்பதாம் இடம் - ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்) பத்தாம் இடம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்) இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் இதில் தகிடுதம் பண்ணும் ஒரு முக்கிய முஸ்லீம் அமைச்சரின் பெயரும், குதிரை பெட் கம்பனி நடாத்தும் சிங்கள அரசியல்வாதியின் பெயரும் இதில் இல்லாமை ஆச்சரியமான விடயம் தான். தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் நமது வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் ஏமாளிகள் தான்.
  7. மரணதண்டனை வேதனையெல்லாம் தண்டனை முடிந்ததும் மறைந்துவிடும். நலமடித்து வாழ்நாள் முழுவதும் அதை எண்னி ஏங்கி அலைய விடவேண்டும்.😩🥴
  8. பிரபாகரன் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பல சிங்களப் படிப்பறிவற்ற சிப்பாய்களும் விடுதலையாகித் திரும்ப தங்கள் கும்பத்தினருடன் இணைந்தபோது, படிப்றிவோடு கூடவே ஆங்கில மொழியறிவும் கொண்டடிருப்பது கண்டு அந்தச் சிப்பாய்களின் குடும்பங்கள் வியந்ததுதான் வரலாறு.
  9. ) தரமற்ற ஊசி மருந்துகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் மற்றும் நால்வரின் பிணை மனுவை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
  10. சிறீலங்காவில் தமிழீழத் தமிழர்கள் விடுதலை அடைவதற்கு கனடாநாடு அளித்துவந்த பாரிய உதவிகளை எப்போ நிறுத்தியது??
  11. என் மகன்கள் இருவருமே ஸ்ரைல் தாடி வைத்திருக்கிறார்கள், 🧔🏻🧔🏻நான் தினமும் முகச்சவரம் செய்து முகத்தைப் பளிச்சென்று வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் என் பத்தினியின் முகத்தில் மலர்வையும் மகிழ்வையும் ஒருசேரக் காணலாம். என் பேரனுக்கு இப்போதுதான் நாலு முடிந்து ஐந்து தொடங்கியது, “அப்பப்பா ஏன் தாடியை வெட்டினீங்கள்” என்னைக் கண்டால் முகக்கடுப்போடு வருகிறான்.👨🏽‍🦳
  12. சென்ற புதன்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய எங்கள் குமாரசுவாமி அவர்கள், 🏃நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றோம்.!!🙌
  13. தம்பி தமிழ் சிறி! நாங்கள் துள்ளித் திரியும் காலத்திலேயே அடங்கி மூன்று முடிச்சுப்போட்டுப் பாடம் பயின்றவர்கள், ஒருமுறை போட்ட முடிச்சை வாழ்நாள் முழுவதும் அவிழாமல் பாதுகாத்துவரும் பரம்பரையைச் சேர்ந்த உத்தமர்கள். எங்கள் பத்தினிகளும் முடிச்சு அவிழ விடமாட்டார்கள். “இன்று சுமங்கலி பூசை”🙏😌
  14. அட இப்பதான் எனக்குப் புத்தியில் உறைத்தது. தலைக்குப் போட்டதுதான் தவறி அவர் கால்களில் விழுந்ததா.??😳
  15. அது😀 அப்படி இருக்கக்கூடாது கவி அவர்களே! நீங்கள் வாழும் நாட்டையும் ஒருக்கால் உற்றுப் பார்க்கவேண்டும். அங்குதான் நானும் வாழ்கிறேன், நல்லசேதி வருமா???
  16. ஆரம்பிப்பதை சங்கு ஊதி ஆரம்பிப்பார்கள், முடிவையும் சங்கை ஊதி முடிப்பார்கள், அத்தனை சிறப்பு சங்கிற்கு. தமிழ் வேட்பாளரை சங்கு ஊதி வரவேற்போம்!🙌 அட சங்குகளில் உயர்வான, சிறப்பான சங்கு என்பெயரிலேயே உள்ளது. 😁 பாஞ்ச சன்யம்.😌
  17. இது எந்தக் கண்டத்தில், எந்தநாட்டில், எந்த ஊரில் பேசப்படும் மொழி.????🤔
  18. தேர்தல் ஆணையகம் சங்கைச் சின்னமாக தமிழ் தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்தது நன்மைக்கனதே!🙌 சங்கு, தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. 'மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே' என்று பக்திபாவத்தோடு ஆண்டாளும், 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று பாவேந்தரும் பாடுவது அதன் அன்றாடப் பயன்பாட்டில் இருந்த முக்கியத்துவத்தின் காரணமாகத்தான். மங்கலச் சடங்குகளின்போதும் அமங்கலச் சடங்குகளின்போதும், சங்கின் பயன்பாடு தவிர்க்க இயலாதது. கடலிலிருந்து கிடைக்கும் சங்குப்பூச்சியின் உடற்கூட்டினையே சங்காகப் பயன்படுத்திவருகிறோம். சங்கில் மணி, துவரி, பாருதம், பூமா, துயிலாசங்கு, வெண்சங்கு, வைபவ சங்கு, திரிசங்கு எனச் சங்கில் பல வகைகள் உண்டு. சங்க காலத்தில் நம் முன்னோர்கள், தங்களின் செல்வங்களை இரண்டாக வகைப்படுத்தினர். அதில் ஒன்று, 'பத்ம நிதி' மற்றொன்று 'சங்க நிதி (வலம்புரிச் சங்கே அதன் அடையாளம்)'. இந்த இரண்டையும் கொண்டோரை 'இருநிதிக்கிழவன்' என்றழைத்தனர். இதன்மூலம் அவர்கள் சங்கைத் தங்களது தலையாய செல்வமாகக் கருதினர் என்பது தெளிவாகிறது. மேலும், கடவுளை பூஜிக்கும் ஒரு பொருளாக சங்கைப் பயன்படுத்திவந்தனர். நீரிலிருந்து கிடைக்கும் பொருள்கள் எல்லாம் புனிதமானவை என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. பாற்கடலை, அமிர்தத்திற்காக தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்று சங்கு என்பது ஐதிகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை 'இடம்புரிச் சங்கு'. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும். இரண்டாம் வகை, 'வலம்புரி'. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மைபெறுகிறது. மூன்றாவது 'சலஞ்சலம்'. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் கிடைக்கும். இது, அபூர்வ வகை. நான்காவது 'பாஞ்சஜன்யம்'. இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும். கிருஷ்ணபகவானின் கையில் இருக்கும் சங்கு இதுதான். சங்கு, மிகச்சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள். சங்கிலிருந்து தயாரிக்கப்படும் 'சங்கு பஸ்பம்' குழந்தைகளுக்கு நுண்ணுயிரிகளால் தொண்டையில் ஏற்படும் டான்சில்ஸ் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இது கூகுள் ஆண்டவரிடம் சங்குபற்றிக் கிடைத்த செய்தி.😌🙏
  19. செஞ்சோலையில் பிஞ்சுக் குழந்தைகளென்றும் பாராமல், அதுவும் யுக்ரையின் பெண் விமானிகள் கொன்றழித்ததாகச் செய்திகள் வந்ததே, யார் கண்டித்தார்கள்.????
  20. அடிமை வாழ்வில் ஒரு சுகம் இருக்கிறது. இது சம்பந்தர் காலத் தமிழினம் அனுபவிக்கும் நிகழ்வல்ல. நாங்கள் உலகாண்ட தமிழர் என்று பெருமைப்படும் சோழர் காலத்திலிருந்தே அனுபவித்துவரும் சுகம். எங்கள் கடவுள்களையே எமது தாய்மொழியால் அழைத்து வணங்காமல், வடவரின் மொழிக்கு அடிமைப்பட்டு அதன் அதிகாரத்தில் பணிந்து வணங்கிவரும் இனம். தமிழினத்திற்கு ஒரு தமிழன் தலைவனாக வந்தால் தாங்கமாட்டோம். வேற்று இனத்தவன் ஒருவன் தலைவனாக வந்தால் அவனுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து, வந்தது, வருவதுதான் எங்கள் வரலாறு.😩
  21. இன்னொரு இனக்கலவரத்தைத் தூண்டிவிட்டால் போச்சு, பெருமளவு குறுகிவிடும்.🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.