goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
Everything posted by goshan_che
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
இல்லை. Fact டு, செக்கிடு👇 https://www.reuters.com/fact-check/us-contributes-16-nato-annual-budget-not-two-thirds-2024-05-31/#:~:text=VERDICT,about our fact-checking work. நேட்டோவின் செலவில் 16% சதவீதம்தான் அமெரிக்காவினது. நீங்கள் சொல்லும் 60% - ஒட்டு மொத்த அமெரிக்க பாதுகாப்பு பஜெட்டையும் நேட்டோவிற்கான செலவு என பொய்யான கணக்கு காட்டும் - சோசல் மீடியா உருட்டு. —— நேட்டோ உடைந்தால் முதல் பாதிப்பு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு. அடுத்த பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் உள்ளே ஒரே வித்தியாசம் - இராணுவ பலம். அமெரிக்காவின் இராணுவ பலமே அதன் பொருளாதார பலத்தின் அச்சாணி. நேட்டோவை உடைப்பது இந்த அச்சாணியை உடைப்பற்குச் சமன். 🤣 இனி எங்களை Dads Army என உள்ளூரில் சென்ரி பார்க்கும் வேலைக்குத்தான் எடுப்பார்கள். ஆனால் எமக்கு அடுத்த தலைமுறை பெரும் பாடு பட வேண்டி வரலாம்.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
இந்தியன் 🤣
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
புட்டின் சொன்னதை டிரெம்ப் செய்கிறார். போன முறை பைடன் வெல்லும் போதே யாழில் எழுதியதுதான். கிரீன்லாந்து - டென்மார்க்-ஈயூ, கனடா - நடப்பு அரசின் மீது குறைபாடு - பிரித்தானியா…. நேட்டோவை சல்லி சல்லியாக உடைப்பதே புட்டின் டிரம்புக்கு கொடுத்துள்ள அசைண்ட்மெண்ட். இந்த மூன்றையிம் செய்யா விடிலும் இதன் மூலம் நேட்டோவை ஆட்டம் காண வைப்பார்.
-
இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
அரசில் ஒரு பொழையும் இல்லை… பொலிசாரில் தான் முழு பிழையும்🤣 நான் சொல்லல🤣
-
தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு
பால் காவடி புஷ்ப காவடி பன்னீர் காவடி மனமுருகி தூக்குகின்றோம் அனுர காவடி🤣
-
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
ஆளுக்கு ஐயாயிரம் படி பொலிசாரின் பொக்கெட்டுக்குள் காசை தவற விட வேண்டும்🤣
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
சும்மா போங்க அங்கால…உப்பிடித்தான் ஒரு தைபொங்கலுக்கு வெடி சுட, படுத்த பாய்க்கும் சொல்லாமல் மேற்குக்கு ஓடி வந்ததனான்… மறுபடியும் பொங்கலா…🤣🤣🤣 நிச்சயமாக. ஆனால் ஒரு வழியா பல இடங்களில் துரத்தி போட்டாங்கள். அண்மையில் சாகோஸ் தீவுகள். ஆனால் அவுஸ், நியூசி விழுங்கினது விழுங்கினதுதான்.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
நிச்சயமாக. ஐரோப்பாவில் நிலம் விழுங்கி ரஸ்யா போல் ஆசியாவில் நிலம் விழுங்கி சீனா. இந்தியா ஒரு பேப்பர்-புலி என்பதால் திபெத்தை சீனா லபக்கியது மட்டும் அல்லாமல் வளங்களை உறிஞ்சுகிறது. திபத்தினை சீன மயமாக்கலின் அடுத்த கட்டம் இது. எத்தனை தேசிய இனங்களை விழுங்கிய கட்டமைப்பு சீனா என்பதை இந்த மேப் விளக்கும்.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
யாழ்கள விண்ணர்களுக்கு மட்டும் அல்ல, தினக்குரலுக்கும் கூகிள் டிரான்சிலேட்டர்தான் துணை போல கிடக்கு…. Rich and highly diverse environment என்பதை தான் “பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட” என எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன். செழிப்பானதும், மிகுந்த பன்முகதன்மை உடையதுமான என்பது பொருந்தும் என நினைக்கிறேன்.
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
மிக முக்கியமான அறிவுப்புகள். தானும் தின்னான் நாய்க்கும் கொடான் என்பது ஈழத்தமிழரோடு பிறந்த குணம். தாமும் உருப்படியாக எதுவும் செய்யமாட்டார்கள். செய்பவர் மீதும் வசை பாடுவார்கள். இந்த அறிவிப்புகள் மூலம் சிந்துவெளியில் இருந்தது தொல் தமிழர் நாகரிகமே என்பதை குறிப்பாக அந்த எழுத்தை படிக்க முடிந்தால், தென்னிந்திய மொழிகளுக்கு தாய் மட்டும் அல்ல, இந்திய மொழிகளிலும் முந்தையது தொல்தமிழே என்பதை நிறுவ முடியும். ஒரு ஈழத்தமிழனான நன்றியும் வாழ்த்துக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு.
-
இறந்துவிட்டதாக ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டவருக்கு மீண்டும் 'உயிர்' கொடுத்த வேகத்தடை
கொய்யால….உயிரோட இருந்த மனுசனை வெட்டி கொலை செய்யவில்லை எண்டு சந்தோசப்படுப்பா🤣
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
2025 இல் யாருக்கு ஏழரை ஆரம்பம்? கால்தடம் போடும் கண்டகச்சனி ! அடிக்கடி தொல்லைதரும் அர்ஷடாமத்த சனி ! அலைச்சல் தரப்போகும் அஷ்டமத்துச்சனி! இப்படி அநேக பகீர் தலையங்கள் இருந்தாலும்…. ஏழரை முடிவு - கூரையை பிய்ய்து கொண்டு கொடுக்கப்போகும் சனிபகவான் போன்றனவும் உள்ளன. Conditioning …. யாழில் சிலருக்கு சாதி….சிலருக்கு சனி🤣
-
சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
👆👇 உங்களுக்கும் பச்சை இட்டவருக்கும் - பதில் முன்பே எழுதப்பட்டு விட்டது.
-
சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
ஆயிரம் ஆண்டுகாலமாக சாதியால் ஒதுக்கப்பட்டவன் - தனக்கென அடையாள அரசியல் செய்ய ஒரு கட்சியை ஸ்தாபிப்பது வேறு. தனக்கு ஒருவர் மீது தனிப்பட்ட பகை என்பதால் அவரின் சாதியை இழுத்து கதைப்பது வேறு. இரெண்டுக்குமான வித்தியாசம் ஒருவருக்கு புரியவில்லை என்றால் - unconscious bias அதாவது இச்சையின்றிய சார்பு-வாதம் போல, இச்சையின்றிய சாதியவாதத்தால் அவர்கள் அவதிபடுகிறார்களோ என நான் அஞ்சுவதுண்டு.
-
சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
நாறப்பயல்…. யார் மீதும் எப்படியும் விமர்சனம் வைக்கலாம்… ஆனா இப்படி சாதியை இழுத்து பேசுபவர்களுக்கு நாக்கிலேயே சூடு வைக்க வேண்டும்.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
ஒரு வழியா நாலு நாள் கழிச்சு அண்ணனும் போராட வந்திருக்கார்… வந்த கையோட பொலிஸ் வானில் ஏறி போய் விட்டார்🤣. நேற்றே ஆனந்து உட்பட விஜை கட்சியினர் பலர் போராடி கைதாகினர், இதை பார்த்து விட்டு எங்காத்து காரரும் கோர்ட்டுக்கு போறார் என போராட வந்துள்ளார் அண்ணன்🤣. இந்த விடயத்தில் விஜை கூட சுணக்கம்தான். அண்ணாமலை கோமாளித்தனம். எடப்பாடி தெளிவாக போராடுகிறார்.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
நான் எழுதியதை மீள வாசிக்கவும்😎. அண்ணாமலை என்ற பிராடை (பிஜேபி) நம்பிய விசுகு அண்ணைமேல் நம்பிக்கை போய்விட்டது என எழுதியுள்ளேன். பிகு ஆதி திராவிடர் என்பது ஒரு குறித்த தாழ்த்தப்பட்ட சாதியி குழுவின் பெயர். நீங்கள் திராவிட கட்சிகள் என்பதை இதனோடு போட்டு குழப்பி கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் எந்த திராவிட கட்சியின் ஆதரவாளனும் இல்லை. ஆனால் பெரியார் முன்வைத்த கொள்கைகள் மீது ஆர்வம் உண்டு.
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
ஆயிரம் கோடி இந்திய ரூபாய் என்றால் 93 மில்லியன் பவுன்ஸ் அல்லவா? அவ்வளவு பெரிய தொகையாக தெரியவில்லையே? அதாவது சராசரியாக 2 கோடியில் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்கலாம்? அதாவது 186,000 பவுண்ஸ். நான் கணக்கு பிழை விடுகிறேனோ?
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
ஏன்….முன்பு கொழும்பில் சப்பாத்து பொலிஷ் போடும் தொழில் இருந்தது… சாப்பாடு வீட்டில் கட்டி எடுத்து போய் வேலையிடத்தில் கொடுக்கும் தொழில் இருந்தது… இலண்டனில் பஸ் கண்டக்டர் தொழில் இருந்தது, கரிசுரங்கத்தொழில் இருந்தது… பின் இல்லாமல் போனது. ஊரில் இப்போ மாட்டு வண்டி ஓட்டும் தொழில் இல்லை. எல்லாமும் மாறும், அழியும். சிலது அழியாது….சிகை அலங்காரம் போன்றவை…ஆனால் அதை எல்லோரும் செய்யும் தொழில் ஆக்காவிடில் அதுவும் அழியும். இப்போ சவரம் நாமே செய்வது போல் ஆகும் அல்லது வெளிநாடு போல் அதை சகல சாதியினரும் கற்று தொழிலாக செய்யும் நிலை வரும்.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
இருப்பதில் பெரிய கள்ளந்தான் ஐ பி எஸ் 🤣
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
அண்ணாமலையை கொஞ்சம் நம்பினேன் என்றதன் மூலம் உங்கள் மேலானா என் நம்பிக்கை டெமேஜ் ஆகிவிட்டது🤣
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
ப்ரோ…. கைய குடு ப்ரோ….இந்த கருத்தை எழுதின கைக்கு @Nathamuni மோதிரம் போடுவார் நான் ஒரு முத்தம் கொடுத்துகிறேன். இப்ப வெளி நாட்டில் பறை அவையவை தானே அடிக்கிறம்… வெள்ளை அவையவை தானே கட்டுறம் செலவு படையலை அவையவைதானே தூக்கி போய் முன் சந்தியில் வைக்கிறம். அதே நிலை ஏனைய தொழிகளுக்கும் ஊரில் வர வேண்டும். வந்து கொண்டுள்ளது. வந்து விடும். பிகு ஆரும் யாழில் ஆசாரவாதிகள் போர்வையில் மறைந்திருக்கும் சாதியவாதிகள் பாரம்பரிய தொழில் அழிவதாக கவலைப்பட்டால் - அவர்கள் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி இந்த தொழில்களை நடத்த சொல்லலாம். ஏறுபட்டி, தளைநார் எண்ட செலவு.
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
நீங்கள் பிலாஸ்டிக்கில் செய்த மீன், இறைச்சி எங்கே வாங்கிகொள்வீர்கள்? முன்பு தமிழ் நண்டு …இப்போ தமிழ் குரங்கு…. இப்படித்தான் இன்னொரு குரங்கு போய் இறங்க….இங்கே இருந்து வேறொரு குரங்கு போட்டு கொடுத்து நாலாம் மாடிக்கு ஏர்போர்ர்ட்டில் இருந்து அள்ளிப்போனார்கள். எஜமானர்கள் மாறும் போது, கூ, கா கொடுக்கும் கூட்டமும் மாறுவது வழமைதானே🤣.
-
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை!
மட்டகளப்பில் புத்தர் சிலை விகாரையாக பெருப்பிக்கப்பட்ளது. இது சாம்பிள் போதாதா? தையிட்டி விகாரையை கட்டி முடித்து காட்டினால் ஏற்பீர்களா? அதே
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சூப்பர் அண்ணா. நான் இப்போதும் தலைக்கு வைப்பது நல்லெண்ணைதான். தொண்டை கரகரப்புக்கு கொஞ்சமாய் எடுத்து தடவினால் பறந்து விடும். முன்பு ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் அரையில் ஒரு துண்டை கட்டியபடி நல்லெண்ணையில் மலையாள பட போஸ்டர் மாதிரி நானும் அப்பாவும் மின்னுவோம்🤣. கொழும்பு, வெளிநாடு வந்தாலும் முழுகும் போது நேரம் இருப்பின் ஒரு அரைமணி நேரம் எண்ணை வைத்து ஊறவிட்டே முழுகுவேன். ஒருமுறை இப்படித்தான் மகனுக்கு காது வலி - கொஞ்சம் நல்லெண்ணையை விட்டு சில நிமிடத்தில் கவிழ்த்தால் என்ன என நான் ஐடியா சொன்னேன். குழந்தையாக வெளிநாடு வந்து விட்ட மனைவி என்னை what a country brut என்பதாக லுக்கு விட்டு விட்டு, ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார். அங்கே ஒரு வயதான ஆங்கில வைத்தியர் சோதித்து விட்டு, ஒரு சின்ன இன்பெக்சன் அதனால் வந்த வலிதான் மருத்து ஏதும் தேவையில்லை, வலியை குறைக்க உங்கள் வீடுகளில் பாவிக்கும் seed oil எதையாவது விடலாம் என்றால்… மனைவியின் முகத்தில் வழிந்தது ஒரு போத்தல் எண்ணை அல்ல, அசடு🤣