Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. மிகவும் மேம்போக்காக நீங்கள் போட்டுள்ள கேள்வி கொத்தை வாசித்ததன் பிரகாரம் - இது ரஸ்யா, பெலரூஸ் போன்ற நாடுகளின் மீது உக்ரேன் போரின் பின்னதாக போடப்பட்ட தடை சம்பந்தமானதாகவே தெரிகிறது. ஆனால் - தப்பி ஓடியவர்ரை மீள கொண்டு வருவது extradition நாடுகடத்தல் சம்பந்தபட்டது. தமிழில் சகலதையும் நாடு கடத்தல் என பொதுவாக அழைக்கிறோம். ஆனால் பிரித்தானிய சட்டத்தின்படி இவை மூவகை படும். ரிமூவல் - நாட்டில் வசிக்கும் உரிமை இல்லாதவரை நாட்டை விட்டு வெளியேற்றல் டிபோர்டேஷன் - 12 மாதத்துக்கு மேல் குற்றம் தீர்க்கப்பட்டவரை நாட்டை விட்டு வெளியேற்றல் எக்ஸ்டிரடிசன் - ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு, இன்னொரு நாட்டிற்கு வந்தோரை, குற்றம் சாட்டப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்புதல். இதில் எக்ஸ்டிரடிசன் இருவழி பாதை. அதாவது ஒரு பிரித்தானிய பிரசை, அல்லது பிரிதானியாவில் தங்கும் உரிமை உள்ளவரை வேறு ஒரு நாடு, வழக்குக்காக தம்மிடம் அனுப்பும் படியும், அதேபோல் வேறு ஓர் நாட்டில் உள்ளவரை தம்மிடம் அனுப்பும் படியும் பரஸ்பர கோர்ட்டுகள் தமக்கிடையே கோரிக்கை வைக்கலாம். ஆனால் இப்படி நடக்க நாடுகள் இடையே எக்ஸ்டிரடிசன் டீர்ட்டி எனப்படும் இருதரப்பு ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். உதாரணமாக இவர் இலங்கையில் போய் ஒழிந்தால் - இங்கிலாந்து ஹைகோர்ட் ஒரு கோரிக்கையை இலங்கை ஹைகோர்ட்டுக்கு அனுப்ப, அவர்கள் அதை பரிசீலித்த்து, சரியான கோரிக்கை எனில் உள்நாட்டு மந்திரி, பொலிஸ், இமிகிரேசனுக்கு ஆளை பிரித்தானியா அனுப்பும்படி ஆடர் போடுவார்கள். மிக அரிதாக ஒரு ஹைகோர்ர்ட்டின் விண்ணப்பத்தை, இன்னொரு நாட்டின் ஹைகோர்ட்டோ, அல்லது உள்நாட்டு மந்திரியோ நடைமுறைபடுத்தாமல் தவிர்க்கலாம். அண்மையில் அதீத மனவளர்ச்சி பிரச்ச்னையான அஸ்பேகஸ் சின்ரோம் உள்ள பதின்மவயதினன் ஒருவரை, ஹேக்கிங் குற்றசாட்டில் அமரிக்கா அனுப்ப வேண்டும் என பிரித்தானிய கோர்ட் முடிவு செய்தபோதும், தன் தனிஉரிமையை பயன்படுத்தி, பிரித்தானிய உள்துறை மந்திரி இதை செய்யாமல் விட்டார். அதேபோல் அமெரிக்காவுக்கு அனுப்பும் போது “மரணதண்டனை நிறைவேறாது” என்ற உறுதிமொழியை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதும் வழமை. இப்படியான எக்ஸ்டிரடிசன் ஒப்பந்தத்தை பிரித்தானியா அநேகமாக சகல நாடுகளிடமும் போட்டுள்ளது. விதிவிலக்குகள், ரஸ்யா, வடகொரியா, ஈரான், சோமாலியா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இன்னும் சில நாடுகள். ஜெமினி இப்படி சொல்கிறது. Countries with no extradition treaty Afghanistan, Algeria, Andorra, Angola, Armenia, Azerbaijan, Belarus, Bhutan, Bosnia and Herzegovina, Burkina Faso, Cambodia, Cameroon, China, Cuba, Georgia, Japan, Kazakhstan, North Korea, Russia, Somalia, Syria, and Vietnam. Countries that do not extradite their own citizens to the UK China, Russia, Croatia, Finland, France, Germany, Greece, Latvia, Poland, Slovakia, Slovenia, Sweden, and Turkey. அதேபோல் UAE உடன் ஒப்பந்தம் இருந்தாலும் அதை அமல்படுத்துவது மிக கடினமானது. பிரேசிலில் போய் ஒரு பிரேசிலியன் ஆளை மணம் முடித்தால், அங்கும் திருப்பி அனுப்ப மாட்டார்கள். அதே போல் மேலே சொன்ன நாடுகளிடம் ஒப்பந்தம் இல்லாவிடிலும், தனி வழக்குகளை அனுப்பலாம் case by case, individual consideration - அடிப்படையில். ஆனால் திரும்பி எடுப்பது மிக மிக கடினம். கவனிக்க: இப்போதுவரை இது ஒரு சிவில் வழக்கு, ஒரு சிவில் விசாரணை என்ற அளவில்தான் உள்ளது. இது இப்படியே முடியவே வாய்ப்பு அதிகம். நாட்டுக்கு ஆளை மீள கொண்டுவர - அதாவது extradite பண்ண அது ஒரு கிரிமினல் வழக்காக இருத்தல் அவசியம். ஆகவே இப்போதைக்கு (அநேகமாக எப்போதும்) சஞ்சீவும், ஆரணியும் அவர்கள் சுருட்டிய பணமும் - நலம், நலமறிய ஆவல் என்ற நிலைதான் 😂. ஒருவேளை சிவில் கோர்ட் தண்டம் அறிவித்தால், அதை இவர்கள் இருக்கும் நாட்டின் கோர்ட் மூலம் recover பண்ண முயலாலாம். இதனால்தான் சொன்னேன் - கடைசி 18 மாதங்களிலாவது, அடிப்பதை அடித்து கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடுவோம் என இவர்கள் இருவரும் திட்டமிட்டு செய்த களவு இது.
  2. இதைத்தான் அழகு தமிழில் உள்மனக்கிடக்கை என்பார்கள்😂. பின்னாளில் மனோதத்துவ நிபுணர் சிக்மன்ட் ப்ரோட் தனது Freudian concept இல் ஓர் அங்கமாக முன்வைத்த Freudian Slip என்பதும் இதுவே😂. பிகு காலையில் அவசர வாசிப்பில் தலையங்கம் கண்ணில் பட்டது… நானும் கோஷான் என்றே வாசித்தேன். நம்மதான் யாழில் பிரபலமாச்சே😂, நம்ம (நியாபகார்த்தமா?😂) பெயரை ஏதோ ஒரு கப்பலுக்கு வச்சிருக்காங்க போல எண்டு விட்டுவிட்டேன்😂. மைன்ட்வாய்ஸ் அநியாயமா ஒரு எழுத்தில் எல்லாம் மாறிப்போச்சு. இல்லாட்டில் கப்பல் என்னதுதான், மம்மி டாடி எல்லாம் கனடாவிலதான் லிவிங்ஸ்டன் எண்டு ஏதாவது உருட்டி இருக்கலாம்😂
  3. இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.
  4. கார்திகா சாதி என்னவாம்? இல்லை ஏன் கேக்கிறன் எண்டா… குகேஷ் தெலுங்கன், கார்த்திகா தமிழச்சி என அரசியல் செய்ய வசதியாய் இருக்கும்… அதுக்குத்தான் 😂
  5. இனம் என்பது இசைந்தே இணைவது… தடி கொண்டு தட்டி வைக்க… கையிர் கொண்டு கட்டி வைக்க… அது பட்டியில் கட்டும் வகை அல்ல… தடி எடுத்தால்… தண்டலும் இல்லை… பொங்கலும் இல்லை… பானையும் இல்லை. -வரலாற்றின் பாடம்-
  6. சாதியச் செருக்கு… ஊர்ப்பெருமை… ஆசாரவாதம்… ஆண்-இன வாதம்… பிரதேசவாத பித்து… சுயநலனே கெத்து… என்று களவை போற்றும் கபடம்… இத்தனையும் குரோமசோமில் குடிகொண்ட இனத்தின் பழைய ஏற்பாடுகளை பஸ்பமாக்குவதால்… நன்றே…நன்றே… நையாண்டி நன்றே. -புதிய ஏற்பாடு-
  7. மீண்டும் ஒரு பீப்பாய் கழிவு ஆயிலுக்குள் தொபுக்கடீர் என விழுந்து விட்டார் மேற்படியார் 😂 இமோசனல் என சொன்னது நகைச்சுவையாக வசி. நீங்கள் இதன் மறுபக்கத்கை பார்கிறீர்கள் என்பதும் - இவர்கள் மோசடியாக இல்லாமல் பிழையாக நடந்து கொண்டதன் பலனே இது என சிந்திக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் நீங்கள் you are cutting them a lot of slack என நினைக்கிறேன். உலக நாடுகள் எங்கெனும் வியாபாரங்கள், பெரு வியாபாரங்கள் திவாலாவது வழமை. ஆனால் நீங்களே சொன்னது போல அதை சரியான முறையில் செய்தால் வேலையாட்கள் உட்பட vulnerable ஆக உள்ளோரை முடிந்தளவு இதன் தீய விளைவில் இருந்து காக்கலாம். எரிந்த வீட்டில் பிடுங்குவது இலாபம் என நடப்பது பின் கம்பி நீட்டுவது - சுயநலத்தின் உச்சம்.
  8. விகடனுக்கும், நக்கீரனுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும். சும்மா தமாஷ் பண்ணுகிறீர்கள். பிபிசிக்கும், RT க்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. அல்லது யாழுக்கும், அதிரடி/தேனி போன்றவற்றிற்கும் இருந்த வேறுபாடு என்றும் சொல்லலாம். எல்லாமுமே அஜெண்டாவுடன் இயங்கும் ஊடகம்தான். ஆனால் பட்டவர்தனமாக பிரச்சாராம் செய்யும் ஊடகங்கள் ஒரு தனி ரகம். அதில் நக்கீரன் முதல் இடம். கோவாலு ஜெ ஆளை தூக்கி உள்ளே வைத்தது முதல் எப்படி ஊடகம் நடத்துகிறார் என்பதை வாச்கர் அறிவார்கள். விஜை கோவாலு மீது வழக்கு போடவேண்டிய அவசியம் இல்லை. ஏன் எனில் இதை ஒரு குற்றவியல் வழக்ககாக சிபிஐ விசாரிக்கிறது. அப்படி திரைப்படத்துக்காகத்தான் வீடியோ எடுக்கப்பட்டது என தன்னிடம் உள்ள ஆதாரத்தை சிபிஐ அல்லது த நா அரசு அமைத்துள்ள ஆணையத்திடம் கோவாலு கொடுத்தாலே போதும். விடயம் உண்மை எனில் விஜையை களி திங்க வைக்கலாம்.
  9. உங்கள் மனநிலை புரிகிறது. ஜஸ்டின் அண்ணா அடிக்கடி சொல்லும் post truth world இன் கஸ்டங்களில் இதுவும் ஒன்று. சதிக்கோட்பாட்டு மனநிலை+ அரைகுறை புரிதல் இது ஒரு explosive mix. இப்படி இருப்பவர்கள் அமெரிக்காவையே ஒரு குழப்பு குழப்பி, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். யாழ் எம்மாத்திரம். “எதை நம்புவது என்றே தெரியவில்லை” என்ற மனநிலைக்கு வாசகரை கொண்டு வருவதே இவர்களின் வெற்றியின் முதல் படி. இது கிட்டதட்ட தத்துவவியலில் வரும் fallacy களில் ஒன்றான false equivalency போன்றது. தரவுகளையும், இவர்கள் சொல்லும் கற்பனைகளையும் சமன் என வாசகரை குழப்பி விட்டால்…. அடுத்து அதே வாசகரை தமது கற்பனைகளை நம்ப வைப்பது இலகுவாகிவிடும். Anti vaxers எனப்படும் வக்சீன் எதிர்பாளர் தொட்டு, சீமான், டிரம்ப் என இந்த கஞ்சா கப்ஸா கதையாளர்களின் லிஸ்ட் மிக நீண்டது. யாழும் விதிவிலக்கல்ல.
  10. எனக்கென்னமோ…அவர்களை விட நீங்கள் இதில் இமோசனலாக இருப்பது போல் படுகிறது😂. நீங்கள் சொல்லும் ஆள் மனமுடைந்து போயிருக்கலாம். அவர் ஒரு நல்ல சீவன் என நினைக்கிறேன். அநேகமாக அவர் தன் தொழிலாளரை முடிந்தளவு நடுத்தெருவில் விடாது தடுக்க முனைந்திருப்பார் என ஊகிக்கிறேன். திரும்பி வந்து கடனை அடைத்தால் சந்தோசமே. முதலில் நடுத்தெருவில் நிற்கும் தொழிலாளர் சம்பளபாக்கியை அடைக்கட்டும். இருவரும் தலைமறைவு என்பது தரவு. அவர்களை வியாபாரத்தை பொறுப்பேற்று கொண்டோராலே தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் யாழில் டெலிகிராபின் தலையங்கத்தை பார்த்து கருத்து எழுதுபவர்களின் எழுத்தை நம்பினால் யாரும் காப்பாற்ற முடியாது. என்னை பொறுத்தவரை எப்போ இவர்கள் இருக்கும் வரை இருந்து டிவிடெண்டை சுருட்டி கொண்டு, தெரிந்தே வேலையாட்களை நட்டாற்றில் விட்டு சென்றனரோ அன்றே இவர்கள் குற்றவாளிகள்தான். சட்டம் கூட இரெண்டாம் பட்சமே.
  11. நீங்கள் 2000 ஆண்டில் ஒரு பெற்றோல் செட்டுடன் ஆரம்பித்து, பின்னர் ஒரு கோலிங்கார்ட்ட நிறுவனத்தை நடத்தி, அதை தகுந்த சமயத்தில் விற்று வெளியேறி, சில நூறு பெற்றோல் நிலையங்களை நாடெங்கும் உள்ள, இப்போதும் இலாபகரமாக இயங்கும் வலையமைப்பை உருவாக்கிய, இரெண்டு Kent University அக்கவுண்டன்சி கிரஜுவேற்சை, ஏதோ கம்பெனி நடத்துவது எப்படி என தெரியாத பச்சைபுள்ளைகள் என்பது போல எழுதுகிறீர்கள். நீங்கள் மேலே சொன்ன விளக்கங்கள் எல்லாம் உங்களை, என்னை இட இந்த தம்பதிக்கு தெரியும். கம்பனி லாவின் தலைசிறந்த வக்கீல்கள் ஆலோசனையும் கிடைத்திருக்கும். ஆனாலும் இப்படி நடந்து கொண்டு, தலைமறைவாகி உள்ளார்கள் எண்டால் …கடைசி சில வருடங்களிலாவது இவர்கள் நோக்கம் வேறாக இருந்துள்ளது என்பதே என் கருத்து.
  12. இங்கு வியாபாரத்தின் feasibility ஐ பொறுத்து 95% வரை கொடுப்பார்கள். அதேபோல் சில தமிழ் “ஏற்பாட்டாளர்கள்” மூலம் வங்கி அதிகாரிகளை அணுகினால், 80 ரூபா பெறுமதியான வியாபாரத்தை 110 ரூபாய் பெறுமதி என மிகை மதிப்பீடு செய்து, உங்களுக்கு 90 ரூபாய் வங்கி கடனாக வாங்கி தருவார்கள். இதில் நீங்கள் ஏற்பாட்டாளருக்கு ஒரு % வெட்ட வேணும். இது சிறு வியாபாரங்களுக்கு. பல தொழில் வாய்புக்களை இழக்கும் அபாயம் உள்ள பெரிய தொழில்களை 1£ க்கு கூட விற்றுள்ளார்கள், அதேபோல் அரசே வங்கி கடன்களை உத்தரவாதம் செய்வதும் உண்டு, அண்மையில் ஜகுவார் லேன்றோவருக்கு இப்படி சலுகை கொடுத்தார்கள். அதேபோல் வியாபாரத்தை 100% ஏனையோரின் முதலீடு+வங்கி கடனில் வாங்குவது இங்கே சாதாரணம். ஆகவே இப்படித்தான் நடந்தது என தெரியாமல் அந்த பெரியதொகையின் 20% ஆரணி, சஞ்சீவ் சொந்த காசில் போட்டார்கள் என்பது வெறும் ஊகம் என்பதே நான் சொல்வது.
  13. நக்கீரன் கோவாலு சொன்னா அது உண்மை என்றாகி விடுமா? பார்ப்போம்… அந்த இடத்தில் திரைப்பட டிஜிட்டல் கமராவாவது இருந்ததா? ஜனநாயகன் என்ன ஐபோனிலா சூட் பண்ணுகிறார்கள்? தலைவர் இறந்தார் என்ற செய்தியை தலைவரே படிப்பது போல 1989 லேயே போட்டோஷாப் வரமுன்பே போட்டோஷாப் செய்த பிதாமகன் கோவாலு. அத்தோடு நக்கீரன் ஜெ காலத்தின் பின் என்ன அஜெண்டாவோடு எழுதுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. சிபிஐ விசாரிக்கிறது, தனிநபர் கமிசன் உள்ளது. உண்மை என்றால் வெளி வரும்தானே. உண்மை வரட்டும்னு காத்திருப்போம்😂
  14. பிஸ்கோத்து ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து தலைவர் படத்தை போட்டால் நனைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து மாவீரர் வீரத்தை மெச்சினால் உடைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து அழகான கவிதை எனும் தேநீரில் அமிழ்ந்து போவான் தமிழ்நாட்டில் இப்போ பிஸ்கோத்து யாவாரிகள் பெரும் கோடீஸ்வரர்கள். ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து.
  15. ஒருபக்கம்தானே சொல்லி இருக்கிறியள் அண்ணா? இன்னொரு பக்கத்தால் திமுக ஆரை வைத்து விஜையை ஒரு பிடி பிடிக்கிறது என்று சொல்ல வேண்டாமா😂
  16. நானும் போராட வருகிறேன் எனவந்தவனை… நாய் போல நடுத்தெருவில் கொன்றதை… நல்லது என நயப்போரைக்கூட… நையப்புடைக்க முடியாத கோழை நான்… நான் ஆதாலால் தேர்ந்தெடுத்த ஆயுதம்… நையாண்டி. -என் குரல்-
  17. யாழில் வைரமுத்துக்கு பலத்த ஆதரவு கோஸ்டிகள் உண்டு. அதில் அநேகர் சீமானின் தம்பிகள். சின்மயி சர்ச்சை நேரம் என்னையும் இன்னும் சிலரையும் போட்டு பிறாண்டி விட்டார்கள். இப்ப பழசெல்லாம் மறந்து போச்சோ😂
  18. உண்மைதான் ஆனானப்பட்ட ஜெப்ரி இப்ஸ்டீனையே சிறையில் வைத்து போட்டு தள்ளவில்லையா? ஆகவே இதில் வேறும் பலர் இருக்கலாம், (இல்லாதும் இருக்கலாம்), ஆனால் அப்படியே இருந்தாலும் அது சஞ்சீவ்+ஆரணி குற்றமற்றவர்கள் என்பதை காட்டாது. இவர்களின் கூட்டு களவாணிகள் தப்பி விட்டார்கள் என்பதை மட்டுமே காட்டும்.
  19. இப்படி பிஸ்கோத்து நபர்கள் கருத்தை பகிர்ந்து எனது நேரத்தை வீணாக்கவேண்டாம்😂. சபரீசனிடம் பெட்டி வாங்கவில்லை என்றால் சீமான் விகடன் மீது மானநஸ்ட வழக்கு போடட்டும். போடமாட்டார். விகடன் கோர்ட்டில் ஆதாரத்தை கொடுதால் …திமுக, சீமான் இருவர் பெயரும் நாறிவிடும். சீமான் வழக்கு போடும் மட்டும் விகடன் செய்தி உண்மை என்றே கருதப்படும்.
  20. ஊடகங்களை தாமே தரவாக கொடுத்து விட்டு - அதில் கூட நான் சொல்லியவைதான் மீள உறுதிபடுத்தபடுகிறது என நிறுவியதும் - ஊடகங்கள் தம் பார்வையையும் சேர்த்தே எழுதுகிறன என்பதை என்னவென்பது😂 இந்த விடயத்தில் யாராலும் மறுக்க முடியாத தரவுகள் பின்வருமாறு: சஞ்சீவும் மனைவியும் தலைமறைவு சஞ்சீவ் மீது insolvency service விசாரணை ஆரம்பித்து உள்ளது நிறுவனத்தை பொறுப்பேற்று கொண்ட administrators இவர் மீது deceit, misrepresentation (ஏமாற்றுதல், வேணும் எண்டே தவறான தகவல் வழங்கல்) ஆகியவற்றுக்காக வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் தொடர்சியாக கோர்ட்டு 150 மில்லியன் சொத்தை முடக்கி உள்ளது. கருத்தாளர் தம் மனம் போன போக்கில், இன்னும் பலர் இதற்கு பின்னால் இருக்கலாம், இன்னும் இது போன்ற கதைகளை தம் மனதில் உருவாகும் சிந்தனை அடிப்படையில் பகிரலாம். ஆனால் அவை தரவுகள் அல்ல. மேலே உள்ளவை மட்டுமே தரவுகள். அவை மட்டுமே இந்த திரியில் பகிரப்பட்டன. பிகு சஞ்சீவ் ஏன் வெளியே வந்தார். 50,000 க்கு மேலான எந்த சொத்தையும் விற்க முடியாது என்ற கோர்ட் ஓடர் smoked him out. கட்டாயம் ஏதோ ஒரு நல்ல silk ஐ சட்டத்தரணியாக அமர்த்துவார் சஞ்சீவ். ஆனால் அடிப்பை தரவுகளை குழப்பி அடித்து அநீதியை நிலைநாட்ச இது இந்தியா அல்ல. பார்க்கலாம்.
  21. இன்னொரு மிக முக்கியமான விடயம். தற்போது மேலே சொன்ன வழக்குக்கு மேலதிகமாக, இவர்கள் இருவரின் நடத்தையையும் Insolvency Service உம் விசாரிக்கிறது. இதில் குற்றம் காணப்பட்டால் disqualification from directorship போன்ற பல தண்டனைகள் இருவருக்கும் கிடைக்கலாம்.
  22. ஏலவே நட்டத்தில் ஓடும் கம்பெனியை வாங்கி இலாபகரமாக மாற்ற முயன்று இருக்கலாம். அப்போது நல்லெண்ணத்தில்தான் இறங்கி இருக்கலாம். 169 மில்லியனின் 20% ஐ இவர்கள் போட்டார்கள் என்பது சாதாரண வியாபார கடன் போல கருதி சொல்கிறீர்கள், நான் அறிந்தவரை சில பெரும் வியாபார கடன்கள் 110% வங்கி கொடுப்பதும் உண்டு. ஆகவே இதில் இவர்கள் தங்கள் சொந்த பணத்தை முதலிட்டார்கள் என்பது வெறும் ஊகமே. அப்படி எந்த ஆதாரமும் நான் காணவில்லை. அப்படியே ஆகினும் - போட்டகாசில் கொஞ்சத்தையாவது எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் deceit, misrepresentation செய்திருக்கலாம் அல்லவா? 5. நீங்கள் சொல்வதுபடி பார்த்தாலும் கூட பேராசையால் அகல கால் வைத்து, ஆப்பை செருகி கொண்டு, பின் அதில் இருந்து தப்ப, தப்பு மேல் தப்பு செய்துள்ளார்கள் என்றல்லவா ஆகிறது?
  23. என்ன காவடி சுருதி மாறுது 😂. இராமநாதன், செல்வா வுக்கே தீத்தினவனுக சிங்கள இனவாதிகள்… உங்களை இப்படி தனியா புலம்பவிடுவார்கள் என்பது அப்பவே தெரியும். ஆனால் இவ்வளவு கெதியா நடக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை.
  24. ஆனால் இது கட்டாயம் கிரிமினல் குற்றசாட்டில் முடியும் என நான் கூறவில்லை. சிவில் வழக்கை விட கிரிமினல் வழக்கை நிறுவுவது கஸ்டம். இதை அமெரிக்காவின் ஓஜே சிம்சன் விடயத்திலும் பார்த்தோம். ஆனால் சஞ்சீவ் deceit, misrepresentation பண்ணி உள்ளார் என ஏலவே administrators சிவில் வழக்கு போட்டுள்ளார்கள். Deceit = ஏமாற்றுதல் Misrepresentation = பொய்யான தகவல் வழங்கல் (உதாரணம் 15,000 சம்பளம் எடுத்து கொண்டு, மோர்ட்கேஜ் எடுக்கவென, பொய் pay slip 65,000 ena கொடுத்து வங்கிக்கு பிழையான தகவல் வழங்குவது, 2008 வரை இது நடந்தது, இப்போ கஸ்டம்). Deceit, misrepresentation இரெண்டையிம் எங்கள் ஊர் தமிழில் களவு எண்டுதான் சொல்வார்கள். இங்கே எழுதும் சிலரின் ஊரில் இவையிரண்டுக்கும் பெயர் தர்மகாரியம் ஆக்கும் 😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.