Everything posted by goshan_che
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் தீபம் என்ற அமைப்பு ஒன்று யாழில் வரும் செய்திதாள்களில் உள்ள முக்கிய செய்திகளை வெட்டி பெரிய ஆவண காப்பு புதங்களில் ஒட்டும் வேலையை செய்து வந்தது. ஒவ்வொரு நாளின் செய்தியும் பெரிய பெரிய புத்தகங்களில் வெட்டி ஒட்டப்படும். இவை பின் தேதிவாரியாக பேணப்பட்டன. 1986-1990 வரை இயங்கியது தெரியும். அதன் பின் என்னவானதோ அறியேன். பூர்ணலிங்கம் என்பவர் இதை நடத்தினார். புலம் பெயர் முயற்சி என நினைக்கிறேன். இவை கிடைத்தால் உங்களுக்கு பொக்கிசம் போல இருக்கும். பிகு மன்னார் சம்பவம் பற்றி லேசாக நினைவு உள்ளது. அப்போ மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கம்பிகளுக்கு அப்பால் நிண்ட இந்திய படைகளை சீண்டினார்கள். சிப்பாய் ஒருவர் சினமேறி இதை செய்தார் என கேள்விபட்ட, வாசித்த நினைவு.
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
அண்ணை சம்பந்தமில்லாதை எல்லாம் கலர் கலரா எழுதுவதை பார்த்தால்… போதை பொருளுடன் மாட்டுப்பட்டவர் பார் சிறி குருப் எண்ட சந்தேகம் வலுக்கிறது😂
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி தம்பி. குசா அண்ணை, வாத்தியார் அண்ணை, நீங்கள், நான் ஒரு குழுவாக செயல்படுவோம். அனைத்து தகவல்களையும் இதே திரியில் பகிர்வோம். முடியுமானளவு. முதல் இலக்கு - காரைநகரில் 5, மூளாய், பொன்னாலை, சுழிபுரம் பகுதியில் 5 என 10 பயனாளர்களை இனம் காணல்.
-
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
மதமும் அரசியலும் கலக்க கூடாது என்பது அனைவருக்கும் பொருந்தும் (உலாமா சபைக்கும்). ஆனால் சங்கிகள் தனியே மதம் சம்பந்தபட்டோர் மட்டும் அல்ல, அவர்கள் தமிழ் தேசியத்துக்கு ஜென்ம வைரியான இந்திய தேசியத்தின் கூறுகள். ஆகவே சங்கிகளை இனம் கண்டு எதிர்ப்பது அரசியல் தத்துவார்த்த ரீதியானது.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி அண்ணா. இங்கே என் எழுத்தின் தொனி பிழைத்து விட்டது. என்னால் பண பரிவர்தனையில் ஈடுபடமுடியாது. ஆனால் பங்களிப்பேன்.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
https://www.karainagar.org/about-us முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம். இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம். ஊர்கள் காரை நகர் சுழிபுரம் வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில், ஏராளன் தனது அமைப்பின் மூலம் இதையே சுழிபுரத்தில் செய்வாராயின் - நீங்கள் பணத்தை திரட்டி இந்த நம்பகமான அமைபுக்களிடம் கட்டம் கட்டமாக கையளித்து வேலையை முடிக்கலாம். தயவு செய்து வாத்தியார் அண்ணா, ஏராளனுக்கு @ போட்டு விடவும். அவர்கள் செய்ய வேண்டியது முதற்கட்டமாக தலா 5 குடும்பங்களை இனம் கண்டு, மலசல கூடம் கட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்க இந்த அமைப்புகள் சம்ம்யிக்கிறனவா என்பதை கேட்டு சொல்வதே. வேறு யாரும் யாழ்கள உறவுகள் தமது ஊர் பாடசாலை சங்கம் மூலமும் இதை செய்ய முன்வந்தால் அதையும் செய்யலாம். உதாரணம் விசுகு அண்ணா, புலவர், நந்தன் போன்றோர் இப்படியான சங்காங்கலில் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனது உலக மகா சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி இதில் நான் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள சித்தமாய் உள்ளேன். பிகு சங்கங்கள் சம்பதிக்கும் போது, அதன் பொறுப்பானவர்களோடு இமெயில், போன் தொடர்புகளை பேணவும் நான் தயார். நேரடி சந்திப்புகள், பணம் (money handling) இவை மட்டும் என்னால் முடியாது.
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
ஓம் ஆங்காங்கே மீள வந்த மாற்று இயக்கங்களால் புலிகள் சிலர் கொல்லப்பட்டது உண்மை. எனது நினைவு படி இது 10 க்குள் என நினைக்கிறேன். ஆனால் பொது சனங்கள் மீது எந்த தாக்குதலும் இல்லை.
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ம்ம்ம்… ஒரு பிரதேச சபை உறுபினர்க்கு இப்படி மினக்கெடுவார்களா? பார்ப்போம்.
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
வடிவேலு ஜோக் “ஜாமீன் கடல்லையே இல்லையாம்” தான் நினைவுக்கு வந்தது. புலிகள் ஏக பிரதிநிதிகள் என்பதை உடைக்க இந்தியா பல வேலைகளை செய்தது. தியாகதீபத்தின் கோரிக்கைகளை அநியாயமாக உதாசீனம் செய்தது. பன்னிருவேங்கைகள் கொழும்புக்கு மாற்றப்படுவதை வேடிக்கை பார்த்தது. ஆனால்…. இந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது இந்திய படையின் அராஜகம் எண்டால் - கிட்டதட்ட குச் நஹி. ஆனால் இக்காலத்தில் முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி கொஞ்சம் பயத்துடனும்… வெலி ஓயா முதல் பானமை வரை சிங்கள குடியேற்றவாசிகள் அதீத கலக்கத்துடனும் இருந்தனர். #வரலாறு முக்கியம்
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
பொறுத்திருந்து பார்ப்போம். சுமன் ஆதாரவாளர் எண்டால் இருக்கு கச்சேரி😂
-
'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும்
ப்ரோ…. ஜோக் எண்டு நினைச்சு உண்மையை சொல்லி போட்டியள். ஈழ போராட்டத்தின் ஆரம்பத்தில் கம்யூனிசம், பலஸ்தீன ஆதரவு என்ற வெத்து வேலைகளில் நாம் இறங்கியதன் பலனை கடைசிவரை அனுபவித்தோம். இல்லாமல் அப்போதே ஒரு அதி வலதுசாரி போக்கை எடுத்து இருந்தால் - நமக்கு சில நண்பர்களாவது மிஞ்சி இருப்பார்கள்.
-
மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்
வாட் ப்ரோ…. வெரி ராங் ப்ரோ
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
சுமன் குரூப்போ, சிறி குரூப்போ எண்டும் சொன்னால்தானே எந்த வகையில் கருத்து எழுத வேண்டும் என தீர்மானிக்க முடியும்😂. சுமன் குரூப் இல்லை எண்டால் - திரியை கடந்து போகும் எண்ணத்தில் உள்ளோர் எல்லாம் பாவம் எல்லோ😂.
-
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
இவர் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் - 1985 சீனியர் பிரிபெக்ட். ஜொனியன்ஸ் எல்லாரும் ஒருக்கா கொலர தூக்கி விட்டு கொள்ளவும்😂.
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ஆள் எந்த கட்சியாம்?
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
1994 இல் 9. களல வோட்டு. பின் 2010 (யுத்த முடிவில் பல தமிழர் வாக்களிக்காத தேர்தல்) 3 இவை தவிர ஏனையவை 1. 2020 இல் யாழில் 1 வன்னியில் 1. 2025 பூச்சியம். என நினைக்கிறேன்.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நித்தியாநந்தா அல்ல டக்லசின் பெயர். அவர் இயற்பெயர் வேறு. இயக்க பெயராக டக்லஸ் தேவானந்தா என்பதை சூடி கொண்டார். இது நித்யானந்தா மீது உள்ள பற்றால் அல்லது அவரின் புகழ் தன் மீதும் கொஞ்சம் பட வேண்டும் என்பதால். பனை அபிவிருத்தி சபையில் டக்கா அதிகாரம் செய்ய வரும் போது, நித்யானந்தா இல்லை என நினைக்கிறேன். ஈபிடிபி க்கு எப்போதும், இன்றும் 10% வாக்கு உண்டு. மிகுதி எல்லாம், 1994 தேர்தலில் வாக்கு சீட்டை புத்தகத்தோடு தூக்கி பெட்டியில் போட்ட வாக்குகளால் கிடைத்த எம் பி சீட்டுகள்.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
3012 கக்கூஸ் கட்ட வக்கில்லை….. ஆனால் நாங்கள் எல்லாம் மெத்த படித்த, டி என் ஏ யில் புத்தி கூர்மை ஏறிய, உலகளாவிய வியாபார காந்தங்கள் நிறைந்த சமூகம் எண்ட கதைக்கு மட்டும் பஞ்சமில்லை 😂. எத்தனை வளைவுகள், கோபுரங்கள், சுற்று மதில்களை இந்த 16 வருடத்தில் கட்டி இருப்பீர்கள். அந்த பணத்தில் இதையும் செய்து கொஞ்ச மலையக மக்களையும் குடியமர்த்தி இருக்கலாம். பிகு மனமுண்டானால் மார்க்கபந்து.
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
இந்த திரியில் கூட கதறல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது😂. பிகு கதறலை கேட்க என்றே இந்த செய்தி இணைக்கப்பட்டது என நினைப்பவர்கள் - கெட்ட எண்ணம் உடையோர் 😂
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இப்படிதான் எங்கள் ஊரில் ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி விட்டார். ஆனால் சேர்ச்சுக்கு போவதில்லை. ஒரு தரம் வழியில் கண்ட பாதிரியார் “ என்ன இப்ப சேர்சுக்கே வாறேல்லா யேசுவை மறந்துட்டியளோ” என கேட்க, எங்கட ஆள் சொன்னாராம்.. “சிவ, சிவா…நானாவது யேசுவை மறப்பதாவது” எண்டு 😂. அப்படித்தான் பலரது கிறிஸ்தவ நம்பிக்கையும். சாதி, தீண்டாமை, பெண்ணடிமைதனம், கர்மா, …. இப்படி சர்மாக்கள் சொல்லி கொடுத்த எதையும் கைவிடவில்லை. இங்கே பலர் அனுர காதலில் அனுங்குவதால் அவர்களுக்கு இலங்கை அரசு பற்றிய புரிதல் மங்கி விட்டது. 2009 க்கு முன் டக்கா செய்தவற்றுக்கு ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போக தேவையில்லை. அம்னெஸ்டி, HRW, US State dept அறிக்கைகளே போதும். ஆனால் இவற்றை அனுரா கனவிலும் தொடார். மேலே ஈழப்பிரியன் அண்ணா பதிந்துள்ளார். ஒரு உறுப்பினர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை சீண்டுவார் இல்லை. சும்மா கண்துடைப்புக்கு ஒரு கைது. அதை கண்டவுடன் காவடிக்காரருக்கு ஒரு சோடா குடித்த சிலிர்ப்பு.
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நீங்கள் சொல்வது பிரபல தொழிற்சங்கவாதியான கேசி நித்யானந்தா என நினைக்கிறேன். நான் அறிந்த வகையில் டக்கா சில காலம் இவரின் சீடர்களில் ஒருவர் போல இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் பெரியப்பா, சுவீகார தந்தை என பல கதைகள் உலாவுகிறன. இந்த கதைகளை தனக்கு கீர்த்தி ஏற்படும் வகையில் டக்காவே பரப்பினார் என்பதே நித்யாநப்தாவுடன் அருகில் இருந்து வேலை பார்த்தோர் என்னிடம் நேரடியாக கூறியது. கிறிஸ்மசுக்கு கேக் அடிப்பவர் எல்லாம் கிறீஸ்தவர் அல்ல 😂
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
கோலாலம்பூரில் பல்லாயிரகணக்கான மக்கள் ஆதரவுடன் ஜனநாயகன் இசை வெளியீட்டை நடத்தியபின் சென்னை திரும்பிய விஜையை பார்க்க பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டு, இதில் காரில் ஏறும் போது விஜை தடக்கி வீழ்ந்துள்ளாராம். பிகு நாளைக்கு ரசிகர் குஞ்சுகள் யாரும் தற்கொலை செய்யாதவரை ஓக்கே.
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
வோட்டை மக்கள் தராது விடினும் … ஆமை ஓட்டை வைத்தே ஆட்சியை பிடிப்பேன்…. புஹா…ஹ.ஹா😂
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
நல்லது யாழ் களத்தில் அனுரவின் முகத்தை பலர் கிழிக்க தொடங்கி உள்ளனர். காவடிகள் மூவர் சுழண்டு ஆடியும்…
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
தொகுதியா….. நாதக நிச்சயம் வெல்லும் தொகுதிகளாவன: இலண்டன் கிழக்கு, டொரெண்டோ மேற்கு, மந்துவில், சங்கரத்தை, உடையார்கட்டு, முள்ளியவளை, செட்டிகுளம், நிலாவெளி, வெருகல், வாகரை, பாண்டிருப்பு, மாந்தை மேற்கு, திருக்கோவில். தவெக கணிசமான வாக்குகளை அள்ளும். ஆனால் விஜையின் தொகுதியில் மட்டும் வெல்லலாம். பிகு நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்வி, நாதக ஏதாவது ஒரு தொகுதியில்லாவது டெபாசிட்டை காப்பாத்துமா? என்பதே.