Everything posted by goshan_che
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
https://www.tamilguardian.com/content/end-ceasefire-kick-norway-out-jvp-tells-rajapakse Senior Janatha Vimukthi Party (JVP) member K D Lalkantha said only his party and one other led by extremist Sinhala monks are responsible for defeating “separatist terrorism” as he boasted of “ending” the island’s conflict “through war,” a day after Tamil Genocide Remembrance Day. https://www.tamilguardian.com/content/jvp-boasts-ending-separatist-terrorism-tamils-commemorate-genocide
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ரோகண விஜே வீரவின் இலங்கை போல்பொட்டின் கம்போடியா போலவே இருந்திருக்க வாய்புகள் அதிகம். இரெண்டு வருடத்தில் அவர்கள் ஆட்சியில் இல்லாமல் ஆனால் அதிகாரம் படைத்து இருந்த காலத்திலேயே, அவர்களால் மேலே போன, மேற்குக்கு போன சிங்கள புத்திசீவிகள் எண்ணிக்கை மிக அதிகம். ஆட்சிக்கு வந்திருதால்… ஓம் வந்தது துவாரகாவேதான். ரோ நாடகம் ஆடவில்லை🤣 என்னிடம் காலயந்திரம் இல்லை. ஆனால் அவர்கள் ஒரு அரசியலை முன்னெடுக்க சொல்லித்தான் சரணடைய அனுப்பபட்டார்கள்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
வாழ்த்துக்கள். தமிழ் இனத்தின் அரசியலை பாதிக்காமல் எதையாவது செய்யட்டும்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
பார்க்கலாம்….பாலா அண்ணையை தவிர உலக ராஜதந்திரிகளிடம் பெரிய பெயர் எடுத்தவர் எண்டு எவரும் இல்லை. சுமந்திரன் தன் இராஜதந்திர தொடர்பை அப்படி வெளிகாட்டி இருந்தால் - நம் இனம் ஒரு படியாவது முன் நோக்கி போயிருக்கும். ஓட்டாவா பாராளுமன்றத்துக்கு வெளியே நிண்டு போட்டோ போட்டதெல்லாம் நினைவில் இருக்கிறது. அடிக்கடி போனதால் முகம் தெரிந்திருக்கும்தான். ஆனால் தேர்தலில் தோற்றால் அதை இன்னொருவர் பிரதியிடுவார் என்பது இராஜதந்திரிகள் வழமையாக எதிர்பார்ப்பதுதான். நமது நிலைப்பாட்டை ஆங்கிலத்தில் எடுத்து சொல்ல, கஜனும், சாணாக்ஸும் போதும்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நீலன், சுமந்திரன் ஒப்பீடு ஒரு அளவுக்கு மேல் சரிவராது. நீலன் தன்னை தமிழர் பிரதிநிதி என அடையாளம் காட்டவில்லை. அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஆசியோடு, சந்திரிக்கா கேட்டு, அரச எம்பியாகி ஒரு தீர்வை வரைய முயன்றார். நீலன் விடயத்தில் கூட, நீலனைத்தான் புலிகள் விவேகமின்றி சாவடித்தானர், ஆனால் அவரின் தீர்வு திட்டத்தை சாவடித்தது பிக்குகள். ஆனால் சுமந்திரன் அப்படி அல்ல. அவர் தமிழர் பிரதிநிதி என தன்னை முந்தள்ளியவர். இவருக்கான கடமை, பொறுப்பு வேறு. மக்கள் பிரதிநிதிக்கும், தொழில்நுட்ப வல்லுனருக்கும் உள்ள இடைவெளி இது. சிலவேளை இப்படி ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இருப்பதுதான் சுமந்திரனின் calling ஆக இருக்க கூடும், பிழையாக தேர்தல் அரசியலுக்குள், கட்சி தலைமைதுவத்துக்குள் வந்துவிட்டார்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இதில் சங்கடம் எதுவும் இல்லை. அரசியல் என்பதே இவ்வாறான விடயங்கள் நிறைந்து இருக்கும் களம்தான். சுமந்திரன் கூட ஒரு தேர்தல் (அவர் முதற்தடவை வென்ற தேர்தல் என நினைக்கிறேன்) வர இரு நாட்களுக்கு முன் பிரபாகரன் மாவீரன் என ஸ்டண்ட் அடித்தவர்தான். அது மட்டுமா, விதைத்த வயலை உழுதது, நல்லாடட்ட்சி நேரம் அனுர என்னை பிரதமர் ஆக முன்மொழிந்தார் என சொல்லி ஜேவிபியிடம் மூக்குடைந்தது, இப்படி ஒரு வழமையான நாலாம் தர அரசியல்வாதி போலவே சுமந்திரனின் 2019 பின்னான அநேக நடவடிக்கைகள் இருந்தன. ஆகவே சுமந்திரன் எப்போதும் வெள்ளந்தியாக பேசும் மனிதர் அல்ல. ஒரு வக்கீல் அப்படியானவராக இருப்பார் என நினைக்கும் நாம்தான் வெள்ளந்தி மனிதர்களாக இருக்கிறோம். என்னை பொறுத்தவரை சுமந்திரன் - இரு காரணிகளால் தோத்தார். ஒன்று நான் மேலே சொன்ன வாக்களாரிடம் நம்பிக்கை இழந்தது. யாழில் தமிழரசுக்கு விழுந்த வாக்கில் கணிசாமனதை கூட விருப்பு வாக்கில் அவரால் பெறமுடியவில்லை. உதாரணமாக என்னை அல்லது @கிருபன் ஜி யை எடுங்கள். நாம் புலம்பெயர் மொக்கு கூட்டத்தை அடியோடு வெறுப்போர். அவர்களின் கஞ்சா, கப்ஸா கதைகளை ஒரு போதும் நம்பாதோர். நாம்தான் சுமந்திரனின் prime target base, மானசீக வாக்கெடுப்பில் எம்மையே அவரால் தக்க வைக்க முடியவில்லை. இதுதான் ஊரிலும் நடந்தது. இரெண்டாவது - வழமையாக சுமந்திரனை தேர்வு செய்த கணிசமான வாக்காளர் இம்முறை என்பிபி, டாக்டர் சிறிபவாநந்தராஜா என போய்விட, அதை செய்ய முடியாதவர்கள், அருச்சுனாவுக்கு போட்டுள்ளனர்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உண்மைதான்…. என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது. தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது…. இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நிச்சயம் முன்னேறலாம்…. நான் இப்போ இந்த முறையில் முன்னேற முடியாது என்று எங்கும் எழுதவில்லை. 1970, 80களில் ஜேவிபி உருவாக்க முனைந்த நாடு இந்தவகை நாடு இல்லை என்றே சொன்னேன்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சீனாவில் இப்போ இருப்பது கம்யூனிச ஆட்சி அல்ல. மாவோ தொடங்கி- தியன்மென் படுகொலை நடந்த 1988 வரை அங்கே நடந்தது தான் கம்யூனிச ஆட்சி. அதன் பின் அங்கே நடப்பது, ஒரு கட்சி, அதிதீவிர முதளாலிதுவ ஆட்சி. 1988 க்கு பின்புதான் சீனா பொருளாதாரத்தில், வர்த்தகத்தில் பெருமளவில் முன்னேற தொடங்கியது. இலங்கை சனநாயக, சோசலிச குடியரசு என்பது பெயர் ஆனால் அங்கே சனநாயகமும் இல்லை, சோசலிசமும் இல்லை, அது குடியரசு கூட இல்லை அது ஒரு மறைமுக பெளத்த தியோகரசி. இதே போலத்தான் இப்போ சீன கம்யூனிச கட்சியும். பெயரில் மட்டுமே கம்யூனிஸ்ட்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நீங்கள் கல்வியை பற்றி எழுதியதால். அருச்சுனா Medical Admin - masters படித்துள்ளார், அதற்கு முன் அடிப்படை வைத்தியர் படிப்பை படித்துள்ளார் என நினைக்கிறேன். சுமந்திரன் மட்டும் என்னவாம்? இலங்கையில் பல்கலைகழக சட்ட பீடம் செல்லும் வகையில் ஏ எல் சோதனையில் அதி கூடிய வெட்டு புள்ளி எடுத்தவரா? இல்லை. அவர் திருச்சபையின் தயவில் இந்தியாவில் ஒரு சாதாரண பி எஸ் சி யாகத்தான் ஆரம்பித்தார். பின்னர் இலங்கை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பு, பின்னர் மொனாஷில் ஒரு வருடம் மாஸ்டர்ஸ் (நினைவில் உள்ளதை வைத்து எழுதுகிறேன்). ஆக அவரும் ஒன்றும் பிறவி ஜீனியஸ் இல்லை. அது தேவையுமில்லை. உண்மையிலேயே நீங்கள் நினைப்பது போல் அவருக்கு அரசியல் அமைப்பில் அப்படி ஒரு சட்ட தேர்ச்சியும் இல்லை. ஷிராணி பண்டாரநாயக்க, வடக்கு கிழக்கு இணைப்பு இப்படி அவர் பங்குகொண்ட அரசியலமைப்பு வழக்குகளில் எனக்கு தெரிய எல்லாமுமே தோல்விதான். கஜனோடு ஒப்பிடும் போது அவர் ஒரு நல்ல லோயர் என்பது சரியே. ஆனால் இவரை விட்டால் வேறு வழியில்லை என்ற அளவுக்கு அவர் ஒன்றும் ராம் ஜெத்மலானி இல்லை. ராம்ஜெத்மலானியோ, எந்த தனி மனிதனோ அப்படி பெரிய அப்பாடக்கர் இல்லை. தவிரவும் அரசியல் அமைப்பு அறிஞர்கள் கட்டாயம் எம் எம்பிகளாக இருக்க வேண்டுமா? ஜெரி அடம்ஸ், நெல்சன் மண்டேலா, காந்தி, இவர்கள் எவருமே புகழ் பூத்த வக்கீல்கள் இல்லை. அரசியலமைப்பு நிபுணர்களும் இல்லை. ஆனால் எதிர் துருவ அரசியலில் இருந்தாலும், காந்தி/நேரு அம்பேத்கரின் சேவையை பெற்று கொண்டனர். இதுதான் சரியான அணுகுமுறை.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
சீமான் திரியில் எழுதி இருந்தேன். தமிழ் நாட்டில் பெரியாரை, வடகிழக்கில் தலைவரை மறுதலித்து தேர்தல் அரசியல் செய்யம்முடியாது என. இது சம்பந்தமாக சுமந்திரன் - தன் நாவடக்கத்தை கடைபிடித்திருக்க வேண்டும். சீமானை போல - எல்லா கேள்விக்கும் ஒரு பதிலை கூறியே தீர வேண்டும் என அவர் நினைத்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பார். அவரை ஒத்த ரோட்டு என சக குடும்பத்தவர் அழைப்பார்கள். அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையும் குறை கூறுவார். மூதைதகளை மதிக்க மறுப்பார். அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் - அவரின் குணைவியல்பால் சக குடும்பத்தினர் அவரை விலகி நடக்க ஆரம்பிப்பார்கள். இன்னொரு திரியில் ஓணாண்டி சொன்னது போல் - சுமந்திரன் நேராக சொல்வதை சிறிதரன் மறைமுகமாக செய்வார். வெளிப்படையாக இருக்கிறேன் பேர்வழி என மனதில் பட்டதை எல்லாம் சாதாரண மனிதர்கள் நாம் கூறினாலே, வீடு, வேலையிடம் இரெண்டாகி விடும். ஒரு அரசியல்வாதி? யாகாவாயினும் நா காக்க.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
புலம்பெயர் மக்களில் ஒரு பகுதி சுமந்திரனை வச்சு செய்தது உண்மை. ஆனால் கடந்த இரெண்டு தேர்தல்களில் இப்படி வச்சு செய்தும் அவரினை தோற்கடிக்க இவர்களால் முடியவில்லை என்பதும் உண்மை. ஊரில் மக்கள் புலம்பெயர்ந்தவர் கதையை கேட்டு சுமந்திரனை தூக்கி அடிக்கும் நிலையில் இல்லை. அவர் இந்த முறை தோற்க காரணம் அவரே. தமிழரசு கட்சியில் சாணாக்கியனை தவிர மிகுதி எல்லோருடனும் சுமந்திரன் சண்டை. தலைவர் விடயத்தில் தோற்ற பின் அவர் செய்த கோக்குமாக்குகள் மக்களை கோபத்தின் எல்லைக்கே கொண்டு போயின. வேட்பாளர் தேர்வில் அவர் நடந்து கொண்ட விதம் முத்தாய்ப்பாய் இருந்தது. வழமையாக சொல்லும் பெட்டி வாங்கி விட்டார் கதைகளை அல்லது தீர்வை வாங்கி தரவில்லை கதைகளை நம்பி மக்கள் அவரை தோற்கடிக்கவில்லை. 2019-2024 அவர் நடந்து கொண்ட விதம், தமிழரசு கட்சியை, தமிழ் தேசிய அரசியலை அவர் சிறுக சிறுக சிதைக்கிறார் என்பதை மக்களுக்கு உணர்த்தியது. ஆகவே அவரை அப்புறபடுத்த தீர்மானித்தனர். சுமந்திரன் ஏன் இப்படி நடந்து கொண்டார் உண்மையில் இவர் தெற்கின் ஏஜெண்டா என்பதல்லாம் விடை காண முடியா கேள்விகள். அப்படி பட்ட ஏஜெண்ட் இல்லை அவர், ஆனால் அவர் இப்படி நடந்து கொள்வது அவரின் குணவியல்பு சம்பந்தமான விடயம் என்பது என் கருத்து.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
கேள்வி ஜேவிபி செய்யமுனைந்தது கம்யூனிஸ புரட்சி, ஆனால் சிங்கப்பூரில் நடந்தது ஜேவிபி வெறுத்த, ஜே ஆர் விரும்பிய திறந்த பொருளாதார புரட்சி என்பதை பற்றியது. நீங்கள் சீனாவை கொண்டு வந்து மரத்தில் கட்டி இருக்கிறியள். பாப்பம் இதை வல்லவன் எப்படி கையாள்கிறார் என🤣.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
நான் இவை பற்றி எதுவும் இந்த திரியில் எழுதவில்லை. நான் கற்பனை உலகில் வாழ்கிறேன் என்றீர்கள்… ஓம்…அண்ணன் சீமானை போல என்று சொன்னேன். அவ்வளவுதான் 😎
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
ஓம்… ஆனால் முதல்வர் கனவு…கனவுதானே… கூட்டு சேர்ந்தோ, காலில் விழுந்தோ மற்றையோர் இதை நனவாக்கி விட, அண்ணன் இன்னும் மேலே குசா அண்ணை சொன்ன கனவுலகில் சஞ்சரிக்கிறார் இல்லையா? இருந்துட்டு போகட்டும். ஆனால் சீமானின் முதல்வர் கனவு, கனவுதானே?
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
பின்னூட்டத்தின் முதல் பகுதியை வாசித்து இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்🤣.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இதுக்கும் நான் எழுதினதுக்கும் என்ன சம்பந்தம்?
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
ஓம்… சீமானின் முதல்வர் கனவு போல🤣. பூ..ஹா..ஹா..கா🤣
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
முடிந்தால் கஜனிடம் சொல்லி விடுங்கோ… அவருக்கு ஒரு off ramp தேவைப்பட்டால்…இதோ👇 1. கட்சியின் கொள்கை என்றவகையில், ஒரு நாடு இரு தேசம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். 2. பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய வாக்குகள் சிதறியமை, மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற பொய்பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது. 3. ஆகவே உடனடித்தேவை என்ற வகையில் - தமிழ் தேசிய சக்திகளை ஒரு முகப்படுத்தும் வகையில் - தமிழ் கட்சிகள் இடையே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் - நாம் தமிழரசு கட்சி, ஏனைய கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளையும் பரிசீலித்து, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர சித்தமாயுள்ளோம்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
அதே. ஏன் உதவ வேண்டும்…அவர்தான் எம்பி இல்லையே? நீங்கள்தான் தூக்கி வீசி விட்டீர்களே என யாரும் கேட்டால்? இனத்தின் மீது அக்கறை இருந்தால் இதை செய்யலாம். அல்லது விலகி நடக்கலாம்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நாம் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கு அப்பால் - இந்த தேர்தலின் பின் தன் சொந்த தேர்தல் மாவட்டத்தை தக்க வைத்த ஒரே தலைவர் சாணக்ஸ் மட்டுமே. அந்த வாக்குகளுக்குரிய கெளரவம், எப்போதும் தமிழ் தேசிய அரசியலில் முடிவெடுக்கும் இடத்தில் கிழக்கிற்கு இருக்க வேண்டிய இடத்தை பிரதிநிதிதுவம் செய்ய இப்போதைக்கு இவர்தான் சிறந்த தெரிவு. தமிழ் தேசிய அரசியல் என்பது இரு யாழ்பாண எம்பிகள் தமக்குள் பேசி முடிக்கும் விடயம் என்ற தோற்றப்பாடு எழக்கூடாது.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அவர்கள் மனம் புண்படும் என்பதால் மெளனமாக இருக்க சொல்லவில்லை. பரஸ்பரம் குற்றசாட்டுகள் கூறும் கணவனும் மனைவியிம், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்…. இனி பழசை கிளறாமல்…எதிர் நோக்கி ஒற்றுமையாக சிந்திப்போம் என முடிவுக்கு வருவது உண்டல்லவா? அப்படி ஒரு கோரிக்கைதான் இதுவும். எனது, உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் அதிக வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் உங்களை போல், அனுர காட்டும் இலங்கை தேசியத்தில் கரைவதில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக தமிழர் காணி உரிமையை பெறாத எந்த தீர்வையும் என்னால் - என் இறுதிநாள் வரை ஒரு நல்ல தீர்வு என ஏற்க முடியாது. எனது மனநிலையில்தான் வடக்கு கிழக்கு தமிழ் வாக்களர்களில் பெரும்பான்மையானோர் உளர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. அந்த மக்கள் இந்த நிலைப்பாட்டை விட்டு விலகும் வரை - நான் அதை ஆதரித்தபடியே இருப்பேன். அவர்களும் நிலையை மாற்றினால், அதன் பின் அதை பற்றி கதைக்க எனக்கு ஏதும் இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள தொடர்புகள் சகலதையும் முடித்து கொண்டு, காலியிலோ, உனவட்டுனவிலோ ஒரு கடற்கரைப்பக்கமாக ஒதுங்கி விடுவேன்🤣. இதுதான் நமக்கிடையேயான ஒரே வேறுபாடு என நினைக்கிறேன். புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
உங்கள் பயம் நியாயமானதே. கடந்த 15 வருடங்களில் இந்த வன் தேசியர்கள், மதவாதம், ரவுடித்தனம், பிரதேசவாதம், கூட்டங்களில் போய் குரங்கு சேட்டை விடுவது, வசைபாடல் என பலதையும் கையில் எடுத்து - நீங்கள் கூறியது போல் ஒரு அச்சத்தையும், அருவருப்பையும் உருவாக்கியே உள்ளனர். ஆனால் நான் சொன்ன பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் இவர்கள் அல்ல. நான் சொல்லுபவர்கள்; தம் இருப்பை தக்க வைக்க தாயக அரசியலை நம்பி இராதவர்கள், மாவீரர் நாளை கூட பிரிந்து நடத்துவதை கண்டு மனம் உடைபவர்கள், தமது வலுவுக்கு ஏற்ப எந்தவித பிரதிபலனும் இல்லாமல் இப்போதும் ஊரில் நல்ல விடயங்களை செய்பவர்கள்…. இவர்கள்தான் மேலே ஐலண்ட் சொன்ன சப்போர்டஸில் பெரும்பாலானவர்கள். அடுத்து…தாயக அரசியலில் நீங்கள் பயப்படும் வகையில் இவர்களுக்கு ஒரு சின்ன பங்கு கூட இல்லை. கஜேஸ் கூட கொள்கைநிலை வரட்டுத்தனமாக இருந்தாலும் - இவர்கள் போல் கட்டுக்கோப்பு-அற்றோர் anarchist இல்லை. ஆகவே ஒரு மாகாணசப தன்னும் கிடைத்தால் இந்த anarchists கையில் போய்விடும் என்ற உங்கள் பயம் முகாந்திரமற்றது. ஆனால் புலம்பெயர் சமூகத்தில் இவர்கள் தாக்கம் நிச்சயம் உள்ளது. நான் அவதானித்த வகையில் அனுரவின் வரவின் பின் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலின் பின் இவர்களில் சிலர் தம் வன்மையை குறைத்துள்ளார்கள். இன்னும் சிலர் அப்படியே அனுரவிடம் சரண்டர் ஆகி விட்டார்கள், அல்லது அதை நோக்கி நகர்கிறார்கள். யூகே லேபர் பார்ட்டியை 2010 ற்கு பின் இப்படிதான் அதி இடதுசாரிகள் கைப்பற்றி இருந்தார்கள், ஆனால் கோர்பினின் இரெண்டாவது தோல்வியோடு அவர்களிடம் இருந்து லேபர்பார்ட்டி மீட்கப்பட்டு நடுநிலைக்கு வந்து ஆட்சியையும் பிடித்தது. Lurching to the extremes தீவிர எல்லைகளுக்கு போதல் என்பது அரசியல் அமைப்புக்களுக்கு காலத்துக்கு காலம் நடப்பதுதான். இந்த பாராளுமன்ற தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம், வன் தேசியத்திடம் இருந்து ஈழத்தமிழ் தேசிய அரசியலை மீட்டெடுப்பதன் ஆரம்பமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். கஜனின் நெகிழ்வுபோக்கும் இதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ… அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது. மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள். அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்… ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம். இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ஏன் முடியாது? முரளிதரன் கட்டளை தளபதியாக இருந்து விட்டு….இப்போ நடந்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நழுவ முடியும் எண்டால்…. கொடி பிடித்தவர்கள் அதை ஈசியாக விலத்தி நடக்கலாம். கூடவே என்போன்ற கொடிபிடிக்காதோரும் அந்த இடங்களில் நிண்டோம் அல்லாவா. ஆகவே அதில் ஈடுபட்ட அனைவரும் புலி ஆதரவாளர் அல்ல. புலிகளின் ஆதரவாளர் கூட போர் ஓய்வின் பின் நாம் வேறு பதாகையின் கீழ், சமஸ்டி நோக்கி போராடுகிறோம் என சொல்லி, நிலைப்பாட்டை மாற்றலாம். இது ஒன்றும் பெரிய விடயமல்ல. உலகில் பல இடங்களில் நடப்பதுதான். ஐ ஆர் ஏ செய்த அத்தனைக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என் சின்பெயின் கூறவில்லையா? அதுதான் எடுபடவில்லையா?