Everything posted by goshan_che
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நல்ல கருத்து. —————— இங்கே இரெண்டு விடயத்தை கூற மறந்து விட்டேன். 1. இன்று என் பி பி வென்றது போல அதீத பெரும்பான்மையுடன் இன்னொரு கட்சியும் தென்னிலங்கையில் வெல்லலாம். அது மிக பெரும் இனவாத கட்சியாகவும் இருக்கலாம். பெளத்த சிங்கள பேரினவாதம் உறங்கு நிலையில்தான் உள்ளது என்பதை நாம் பலர் ஏற்கிறோம். அடுத்த தேர்தலில் இது மீண்டு வரலாம். அடுத்த தேர்தலில் இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் என் பி பி ஆட்சியை விட்டு இறங்கத்தான் போகிறது. தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் 10 வருடம் இலங்கையில் சுயாதீனமாக படிக்க, வாழ, வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படின் - அது இனவாத்ததின் கண்ணை கட்டாயம் குத்தும். டிரம்ப் இரு முறை ஜனாதிபதியாக முடியும், பிரெக்சிற் ஒப்பேறும், லெபென் ஜனாதிபதி மாளிகை கதை தட்ட முடியும் எனும் போது…இலங்கையில் இவற்றை விட இனவாதம் மீள, ஆட்சிக்கட்டில் ஏற வாய்ப்பு மிக அதிகம். நாம் இப்போ எமது கோரிக்கைகளை என் பி பி யை நம்பி கைவிட்டு விட்டு, ஒற்றை ஆட்சிக்குள் சந்தோசமாக ஒண்ணுக்கு இருக்கலாம்….ஆனால் நான் மேலே சொன்ன ஒரு நிலை வரும் போது எமக்கு எதுவித பாதுகாப்பும் இருக்காது. இந்த பட்டறிவுதான் தலைவரை “மீள பெற முடியாத அதிகாரங்களுடனான அலகு” என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்க வைத்தது. 2. மேலே நான் எழுதியது விளங்கினால் - நான் என் பி பி க்கு போட்டவர்களை குறை சொல்லவில்லை என்பது புரியும். அவர்கள் என் பி பி மகுடியில் மயங்கி இனவாத பாம்பை மறந்து விட்டார்கள். வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣 இனிய மாலை வணக்கம் தமிழ் சகோதரர்களே, எம்மை இட்டு நீங்கள் பலத்த எதிர்பார்புக்களுடன் உள்ளதை நாம் அறிவோம். இந்த எதிர்பார்புக்களை நிறைவேற்றுவோம் என நாம் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். சிங்கள, தமிழ், முஸ்லீம், பேர்கர் நாம் எல்லோரும் ஒற்றை இலங்கைக்குள், உறவினர் போல் வாழும் புதிய எதிர்காலத்தை கட்டி எழுப்புவோம். நன்றி. ஒற்றை (ஆட்சி) சிறிலங்காவுக்கு வெற்றி!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
புலத்தமிழ் செயற்பாட்டாளருக்கு மட்டும் அல்ல. புலத்தமிழ் “எழுத்தாளர்” நமக்கும் தேவையான அறிவுரை. கடந்த சில வருடங்களாகவே ஊர் அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை. இந்த தேர்தல் இழுத்து வந்து விட்டது. சரி உறவுகளே இன்னொரு திரியில் சந்திப்போம். ————- சுப சந்தாஹவக் அப்பே தெமள சகோதரயனி. ஒபலா அபி வெனுவிங் கொடாக் பலாபுறுத்துவேங் இன்னுவ கியல அப்பிட்ட தன்னுவா. அபித் ஒபட பொரந்துவக் தெனவா, அபி ஒய் பலாபுறுத்து டிக்க இட்டு கொரணவாய் கியலா. சிங்கள, தமில, முஸ்லிம், பர்கர் அபி ஒக்கம, எக்சத் லங்காவ அதுளிங், நாதாயக் வாகே இன்ன அளுத் அநாகதயக் அப்பி கொடநகுமு. பொஹோமஸ் துதி. எக்சத் சிறி லங்கா வட்ட ஜெயவேவா !
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எனக்கும் அப்படித்தான் நான் எழுதாதும், எழுதவில்லை என நினைவிருக்கும். சந்திப்போம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யார் பொய் சொல்வது என்பதல்ல கேள்வி. தவிரவும் நான் எழுதிய பலதை நீங்கள் 180 பாகை எதிர் வழமாக விளங்கி கொண்டதும் முன்பு நடந்ததே. எனவே அப்படி சொன்ன கருத்தை மீள பதியுங்கள். தொடர்ந்து உரையாடலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மஹா சங்கத்தின் ஆதரவோடு? அப்ப அதில எதுவும் இருக்காது🤣.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ப்ரோ, அருச்சுனாவை இங்கே defend பண்ணி காலத்தை விரயமாக்காமல், முடிந்தால் ஊருக்குள் உள்ளவர்கள் மூலம் இவர்களை அடுத்த நிலைக்கு உந்த பாருங்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு மாவட்டத்தில் 25% ஏனையவற்றில் அதை விட குறைய - நீங்கள் சொல்லும் களைத்து போன தமிழ் வாக்காளரிம் எண்ணிக்கை. இதை வைத்து எல்லாரையும் ஏன் அதே வர்ணம் தீட்ட முயல்கிறீர்கள். எனக்கு நான் அப்படி எழுதவில்லை என்று நல்லா நியாபகம் இருக்கு. சாணாக்கியன் மீது எனக்கு பெரு விருப்பு இல்லை, விமர்சனம் பலது உண்டு. ஆனால் பிள்ளையானின் செல்வாக்கை, கோட்டா ஆட்சியில் எதிர்த்து, பிள்ளையனை இப்போ தோற்கடித்த அரசியல் செய்வது சின்ன விடயம் இல்லை. தமிழரசுக்கு தேவைப்படும் தலைவர் உள்ளதில் திறம் அவர்தான்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதை எப்பவோ செய்திருக்கலாம். ஜே ஆர் முதல் கோட்டா ரணில் வரை எல்லோருடனும் முரண்பட்டது ஏன்? குறிப்பாக யாழில் 25% மட்டுமே என் பி பி பக்கம் சாய்ந்ததை வைத்து - இந்த முடிவுக்கு வர முடியாது. யாழில் கூட மக்கள் உரிமை அரசியலுக்கே பெருவாரியாக வாக்களித்துள்ள நிலையில் - சிலர் 2 சீட் ஒரு போனஸ் சீட்சை வைத்து - எல்லாரையும் அனுரவின் பஸ்சில் ஏத்திவிட முனைவதாக தெரியவில்லையா?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் மேலே கூறிய 6 இல் எதை வரட்டு தேசிய கொள்கை என்பீர்கள்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் சாணக்ஸை பற்றி இப்படி எழுதவில்லை. உங்களுக்கு சில நாட்களுக்கு முன் தந்த பதிலில் அவரும் 2010 இல் மகிந்தவுடன் இருந்தார், பின் சம்ப்ந்தன் அவரை தமிழரசுக்கு கூட்டி வந்தார். சம்பந்தன் தமிழரசுக்கு செய்த அபூர்வமான நல்ல விடயங்களில் இது ஒன்று. சாணாக்கியன் இல்லை என்றால் மட்டகளப்பிலும் தமிழ் தேசிய வாக்கு 1 எம்பி ஆகி இருக்கும் என எழுதினேன். சாணக்ஸ் மட்டும் அல்ல மட்டுவில் 4 தமிழ் எம்பிகள், அதில் மூவர் தமிழ் தேசிய கட்சி என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
1. ஆகவே ஒன்றாக நின்றிருப்பின் யாழ்பாணத்தில் கூட உரிமை அரசியல்தான் மக்கள் தெரிவு, என்பதை ஏற்கிறீர்கள். 2. இந்த 6 ஐயும் அவர்கள் சும்மா வாக்கு வாங்கும் விடயங்களாக பாவித்தார்கள். இது அவர்களின் பிழை. 6 தூண் கொள்கையின் பிழை அல்ல. இது கருணாநிதியின் பிழைக்கு திராவிட கொள்கையை பிழை சொல்வது போன்றது. குளத்தில் தான் பிழை, ****யில் அல்ல. அதை கழுவலாம். 3. இல்லை ஆளும் தரப்பு இல்லாமல் பெரிதாக செய்ய முடியாது ஆனாலும் மக்கள் மயப்பட்டு பலதை செய்திருக்கலாம். யூடியூப்பர்ஸ் போல வெளிநாட்டு காசை எடுத்து கூட எதுவும் செய்ய எத்தனிக்கவும் இல்லை. ஆனால் இதுவும் இவர்களின் பிழையே. கொள்கையின் பிழை அல்ல.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் நிகழ்தகவை கேட்கவில்லை. மக்கள் பற்றியும் கேட்கவில்லை. சரி அதை விடுவோம். என்னை பொறுத்தவரை இந்த ஆறும்தான் இன்று தமிழ் தேசிய அடிப்படையின் தூண்கள். இதில் 6 ஐயும் விட்டு கொடுக்கும் அரசியலை மக்கள் விரும்புகிறாகள் என வெறும் யாழ்பாண மாவட்ட முடிவை வைத்து தீர்மானிக்க முடியாது. இதை நோக்கி அவரை, அவர் குழாமில் உள்ள ஏனையோரை இந்த வேணும். ஒரு கட்சியாகி, உள்ளூராட்சி தேர்தலில் இறங்க வேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை என்ற போதும் இன்றியமையாது… தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது. யாழில் 3/6, வன்னியில் 2/3, திருமலையில் 1/1, மட்டகளப்பில் 3/2, அம்பாறையில் 1/1 - எமது மக்களின் பெரும்பான்மை தெரிவு இன்றும் உரிமை அரசியல்தான். அதை ஆதரிக்க வேண்டியது எம் கடன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ப்ரோ, இந்த அருச்சுனா குரூப்பை தேத்தண்ணியோ கோப்பியோ வாங்கி கொடுத்து ஒரு யதார்தமான, ஊழலற்ற, மக்கள் நலன் பேணும் grass roots தமிழ் தேசிய சக்தியாக யாழில் வளர்தெடுக்க முடியாதா? யாழில் இப்போ தமிழ் தேசிய எம்பி எவருமில்லை. சிறி, பொன்னா போன்ற போலிகளும், என் பி பி யும்தான். There is a gap in the market.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எல்லாத்தையும் விடுங்கோ பின்வருவனவற்றில் உங்கள் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கோ. 1. காணாமல் போனோர் விடயம். 2. போர் குற்ற விசாரணை 3. மாகாண சபைக்கு காணி அதிகாரம் 4. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் 5. மாகாண சாபைக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை இணைக்க கூடிய நிதியம் (இலங்கை திறைசேரி கண்காணிப்பில்). 6. தமிழர் நிலத்தில் புத்த கோவில் இந்த 6 இல் எதை நீங்கள் இப்போ கை விட்டு விட்டீர்கள்? இந்த 6 இல் எதை ஐ அனுர தருவார் என நினைக்கிறீர்கள்?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சட்டம் படித்தாலே அறிஞர் தானா? இல்லாட்டில் அந்த துறையில் ஏதும் சாதித்திருக்க வேண்டுமா? ஒரு ஜெனரல் நாலேஜுக்கு கேட்டேன்🤣. பாராளுமன்ற கதிரையை 20 வருடமாக சூடாக்கியது போல் தொடர்ந்தும் நல்ல வேலைகள் செய்வார் 🤣. அரசியலமைப்பு விடயத்தில் என் பி பி தமிழ் எம்பிகள் உட்பட எவரையும் அனுரா பைல் தூக்கவும் விடுவாரா என்பது சந்தேகமே. ஆனால் மாகாணசபையை விட மட்டமான ஒரு கடும் ஒற்றையாட்சி முறையை கொண்டு வந்து அதை தமிழரும் ஏற்கிறார்கள் என யாழின் 50% எம்பிகளை கொண்டு சாதிக்கப்பார்ப்பார். ஓம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இத்தனை வீராப்புக்கும் பிறகு மக்கள் நிராகரித்த பின் சும் வந்தால் அவர் ஈன, மான, ரோசம் இல்லாத ஒரு பிறவி என்பதை உறுதி செய்வது ஆகும். அதே போல் சிறியும் சும் வந்தால் தனக்கு ஏச்சு விழுவது குறையும் என அவரை உள்ளே எடுக்க கூடும். சாணக்ஸ்சும் சும் வருவதை விரும்பகூடும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஐயா, இப்படி ஜனாதிபதி கட்சி வோட்டு போட்டுத்தான் காரியம் சாதிக்க வேணும் என்டா அதை 1977 இல் அதி உத்தமர் ஜேஆர், அல்லது 2010 இல் புனிதர் மகிந்தர், அல்லது 2019 இல் கோமான் கோட்டவுடன் சேர்ந்து செய்யச்சொல்லி ஏன் நீங்கள் மக்களை கேட்கவில்லை? அனுர என்ன வானில் இருந்தது வந்த மீட்பரா? முள்ளிவாய்க்கால் நேரம் காலம் தாழ்த்தாது போரை முடியுங்கள் என மகிந்தவை அழுத்திய கட்சியில் அப்போதே இவர்தான் தலைவர். அனுரவுக்கு நீங்கள் வாக்களிப்பதாயின்…போர்குற்ற விசாரணை, காணாமல் போனோர், காணி, பொலிஸ் அதிகாரம், அதிகர பகிர்வு இவை எதுவும் தமிழருக்கு தேவை இல்லை என நீங்கள் கருதுவதாகவே அர்த்தம். அப்படித்தான் இலங்கை அரசு இதை விளம்பரப்படுத்தும். உலகமும் ஏற்கும். இந்த நிலைப்பாட்டை எடுத்த மக்களை நான் தூற்றவில்லை, ஆனால் இத்தனை கால இழப்பை மறந்து இப்படி செய்தத்து, சுயநலத்தின் அடிப்படையிலே ஒழிய கொள்கைக்காக அல்ல. அதைத்தான் நான் சொல்கிறேன். அத்தோடு எதிர்கால பின் விளைவுகளை சீர்தூக்கி பார்க்காத ஒரு முடிவும் கூட. அருச்சுனா குழு இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்காவிட்டால் நான் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பதை ஏற்றிருப்பேன். ஆனால் இங்கே அவர் ஒரு மாற்றாக இருந்தார். அவரை விட அவர் குழுவில் நம்பிக்கை தரும் புதியோர் இருந்தனர். ஆனால் நேரடியாக அனுரவிடம் சலுகை பெறும் எண்ணமே என் பி பி க்கு போட வைத்தது. நான் எனது பயண கட்டுரையில் எழுதியதையும், அதற்கு நீங்கள் கொடுத்த பதிலையும் மீள வாசியுங்கள். அதே👏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அது அனுரவை பொறுத்த வரை வரலாறு..அதை உங்களை தடையின்றி அனுஸ்டிக்க அனுமதிப்பார். ஆனால் திம்பு, கிம்பு என கிளம்பினால் தும்பு போக வெளுப்பார். அவனுகள நட்டாற்றில விட்டதும் இல்லாம நக்கல் வேற🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆனால் என் பி பி யின் 3 பேரை இப்பவே பாரட்ட தயார்? அனைவரும் புதுமுகங்களே. இதில் அருச்சுனாவுக்கு கொஞ்சம் சமூக அக்கறை இருப்பதாவது முன்பே தெரிந்தது. ஏனையோர் தெற்கின் கட்சி தலைமை சொல்லுவதற்கு தலை ஆட்டும் பூம் பூம் மாடுகள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பார்க்கலாம்.. ராஜபக்சவோடு சாணக்ஸ் மேடை ஏறியதை, வாக்கு கேட்டதை சுட்டும் நீங்கள், கருணாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர். எனவே உங்களை போலவே அவரும் ஒரு ரகசிய தமிழ் தேசிய ஆர்வலராக இருக்கலாம்தானே🤣. பார்ப்போம் என்ன செய்கிறார் என. அப்போ அரசியல் வாதிகள் தென்னிலங்கையில் அடகு வைக்கிறார்கள் என மக்கள் தாமே நேரடியாக அடகு வைத்த்தது சரியா? என் பி பிக்கு யாழில் போட்டவர்கள் சுயநலமிகள்தான். மேலே சொன்னபடி அருச்சுனாவுக்கு போட்டிருக்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
விமர்சனம் எப்போதும் தேவை. ஆனால் - கிழக்குமையவாத அரசியல் என்ற குறுகிய வட்டத்தை - கிழக்கில் மையம் கொள்ளும் தமிழ் தேசிய அரசியல் - என பெருபித்தவர் சாணாக்கியனே. சுமன் பெட்டி கட்ட வேண்டும். சொந்த கட்சியையே கட்டுபடுத்த முடியாத சிறி ஒதுங்க வேண்டும். கிடைக்கும் தேசிய பட்டியலை வன்னிக்கு கொடுக்க வேண்டும். சாணாக்ஸ் தலைமையில் தமிழரசு நிமிரவேண்டும். நான் சகல இடத்தில் சகலதையும் வாங்கி குடித்துள்ளேன். யாழ் மையவாதம், கிழக்கின் பிரதேசவாதம், சாதி வாதம்…. உள்ளே தமிழ் தேசிய, பெரியாரிய வக்சீன் ஓடுவதால் இவை என்னை ஒண்டும் செய்வதில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முந்தி நான் ஒழுங்கா படிக்காவிட்டால்….வகுப்பில் முதல் மார்க் எடுக்கும் மாணவரின் பெயரை சொல்லி….. அவனின் ***** வாங்கி குடி என்பார்கள். இந்த படத்தை பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது🤣. இது புரளி அல்ல. உண்மை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
துரோகிகள் இல்லை ஆனால் சுயநலமிகள். இதே போன்ற அரசியல்வாதிகள்தான் கிழக்கிலும் அவர்கள் மூக்கை பொத்தி கொண்டு வாக்கு போடவில்லையா? 98.5% தமிழர் உள்ள மாவட்டம் 3/6 சீட்டை அப்படியே தூக்கி தீர்வே தரமாட்டம் என சொல்லும் கட்சிக்கு கொடுத்தால் - அது எப்படி சர்வதேச அளவு வரை தெற்கால் பாவிக்கப்படும் என்பதை அறிந்தும் அவர்களுக்கு வாக்கு போட்டதை சுயநலம் என்று மட்டுமே சொல்ல முடியும். தமிழ் தேசிய கோமாளிகளை பிடிக்கவில்லை எனில் அருச்சுனாவுக்கு இன்னும் 1 சீட்டையும் போனசையும் கொடுத்திருக்கலாம்.