Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. நீங்கள் மானசீக- ஈழத்தவர் என உங்களை நாங்கள் கருதி பல வருடங்கள் ஆகி விட்டதே❤️. ஆகவே உங்கள் வாக்கும் செல்லும். கடைசியாக வாழ்ந்த, வெளிநாடு வந்திராவிட்டால் வாழ்திருக்க கூடிய அடிப்படையில் எனக்கு பதிவு கொழும்பில் இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனாலும் என்னை வட-கிழக்கு வாக்காளராக பாவித்து வாக்களித்தேன்.
  2. சிறிதரன் தமிழ் மக்களுக்கு விசேட உரை! என்னை மனைவி வீட்டுக்குள் எடுக்கிறா இல்லை. இந்த தேர்தலில் நான் மீண்டும் குடும்ப தலைவராக ஆணை தாருங்கள்🤣. இவரெல்லாம் ஒரு தலைவர் - இவர் எமக்கு உரிமை வாங்கி தந்துடுவார்🤣
  3. யாழ்கள உறுப்பினர் பெரும்பான்மை எண்ணவோட்டம் = பும்பெயர் மக்கள் எண்ணவோட்டம் என்ற நிலை முன்னர் இருந்தது ஆனால் இப்போ புலம்பெயர் முதல் சந்ததி கூட பலர் தேர்தல் தேதி கூட தெரியாத அளவுக்கு ஊர் விடயங்களில் தொடர்பிழந்து போய்விட்னர். ஆனா வாக்குப்போடுங்கள் என கேட்டால் சைக்கில் அல்லது வீட்டுக்கு போடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
  4. யாழ் உறுப்பினர்களின் தார்மீக வலு வை நம்புகிறோம்.
  5. கிருபன் ஜி சொல்றார்.. பழம்…பழம்… தமிழர்களின் முக்கனி மாம்பழமாம்🤣
  6. அருச்சுனாவின் கட்சிக்கு - அருச்சுனாவுக்கு அல்ல, வாக்களித்துள்ளேன். இதுவரை எந்த இலங்கை தேர்தலிலும் நான் வாக்களித்தில்லை. இடாப்பில் பெயர் பதியும் வயது வந்துவிட்டிருந்தாலும், பதிய முன்னமே நாட்டை விட்டு கிளம்பியாகிவிட்டது. ஆகவே மானசீக தேர்தல் எனிலும் இலங்கைக்கு இது என் முதல் தேர்தல்😎. அருச்சுனா குழுவை தமிழ் தேசிய வழி நிற்பார்கள், திம்பு அடிப்படையில், இப்போதைக்கு மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களை பகிர கோரும் அரசியலை வினைத்திறனுடன் முன்னெடுப்பார்கள் என நம்பி வாக்களிக்கிறேன். நீண்டகால நோக்கில் ஏனைய சகல தமிழ் தேசிய கட்சிகளிடம்பிருந்தும் இவர்கள் தமிழ் தேசிய அரசியலை மீட்டெடுப்பார்கள் என்பதற்கு வாய்பிருப்பதாக நினைக்கிறேன். இதை செய்ய முடியாவிடினும், புதியவர்கள் மக்களுக்கான உடனடி தேவை அரசியலையாவது வினைதிறனுடன் மேற்கொள்ள வாய்புள்ளது. என் கை என்பிபி க்கு மேலால் ஊசலாடியது உண்மை. ஆனால் - ஏனோ முடியவில்லை.
  7. ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும். உங்கள் வாக்கையும் இறுதி எண்ணிக்கையில் சேர்கிறேன். இப்போதைக்கு மாம்பழம் 1 (கிருபன் ஜி)
  8. ஓம் வைத்திருக்க வேண்டும். அவசர கதியில் அள்ளி தெளித்த கோலம். மறந்து விட்டேன்🤯
  9. முடிந்தளவு அப்படித்தான் முயற்சித்தேன். ஆனால் நீங்கள் சொல்லும் போல் ஒரு தெரிவு இருக்கவில்லை. யாழுக்கு வருவோர் பெரும்பாலும் தேசிய உணர்வுள்ளோர்தானே? ஆகவே இந்த முறை தமிழரசு இல்லை எனும் போது முண்ணணிக்கு போடுகிறார்கள் என நினைக்கிறேன். @ நியானி - நிர்வாகம் சரி எனப்பட்டால் செய்வதில் எனக்கு ஒரு முரணும் இல்லை. ——-/ யாழ்கள தெரிவு - மக்கள் தெரிவு ஒப்பீடு எப்படி இருக்கும் என பார்க்க ஆவலாக உள்ளது.
  10. கேட்டதும் உடனே செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️🙏. ———- யாழில் ஒரு விடயத்தை அனைவர் கண்ணிலும் படும்படியாக செய்ய, இன்றே நாடுங்கள் @தமிழ் சிறி! இவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது (என்று சொல்கிறார்🤣). அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பால் உங்கள் ஸ்திரத்தன்மைக்கு ஒரு சபாஷ்👍.
  11. அண்ணன் அடலேறு ஈழப்பிரியன் வாழ்க! இப்படி பலர் சிந்தித்தால் - அனுர கட்சி வரவால் ஏனைய தமிழ் தேசியம் அல்லாதா கட்சிகளுக்கும் பாதிப்பு வரும் போல இருக்கிறது. ஒ…நான் இதுவரை கந்தையா57 என்பதே ஒரு கள்ள ஐடி என்றல்லவா நினைத்தேன் 🤣 (பகிடிக்கு).
  12. வாக்கு சாவடியில் நின்று பிரச்சாரம் செய்தல் ஆகாது🤣.
  13. அப்ப @புலவர் உடன் மினிமம் 2 வாக்கு கரண்டி🤣 கள்ள ஐடி(கள்) வைத்திருப்போர் ஐடிக்கு ஒரு வாக்கு போடலாம். #குத்துங்க எசமான், குத்துங்க🤣
  14. இல்லை. முதலில் கட்சிக்கு வாக்கு. பின்னர் நீங்கள் வாக்களித்த கட்சியில் கேட்க்கும் 3 பேருக்கு விருப்பு வாக்கை அளிக்கலாம். கட்சி எண்டால் கட்சிகள் மட்டும் அல்ல. சுயேற்சை குழுக்களும்தான். சுயேற்சை குழு 17 க்கு போட்டு விட்டு, பின் அதில் அருச்சுனா அல்லாத 3 வருக்கு போடலாம். நான் இதில் கட்சிக்கான வாக்கை மட்டுமே கருதுகிறேன். தனி நபர்களுக்கான விருப்பு வாக்கை அல்ல. எனவே இதுதான் உங்கள் நிலைப்பாடு எனில் சுயேற்சை குழு அருச்சுனா வுக்கே நீங்கள் டிக் அடிக்க வேண்டும். ஓம். அவரவர் விருப்பம். நான் இன்னும் வாக்களிக்கவில்லை. வாக்களிக்கும் போது சொல்லுவேன்.
  15. ரணிலின் பட்டபடிப்பு தகவலுக்கு நன்றி. அவர் வெளிநாட்டில் படிக்கவில்லை என்பது ஓரளவு ஊகிக்க கூடியதே, ஏன் என்றால் 24 வயதிலோ என்னமோ எம்பி ஆகிவிட்டார். நீங்கள் ஒரு வாட்சப் செய்தியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அதில் அவர் பற்றி சொல்லப்பட்டவை டமால், டுமீல் ரகம்தான்🤣. ஆதரவாளர்கள் என்றால் அப்படித்தானே🤣. இப்போ நம்மட சிறிதரனின் கைப்பொடியளை எடுங்கோ, சாராய பிர்மிட் பணத்தை, இலண்டனில் எம்மூலம் முதலிட்டார் என்பதையா சொல்லுவர்கள், இல்லைதானே. அவர் அஞ்சா நெஞ்சன், அரசியல் ஆலமரம், ராஜதந்திர பப்பா மரம் எண்டுதானே எடுத்து விடுவினம்🤣. அது போல் ஒரு அரசியல் தாமாசுதான் இந்த ரணில் சம்பந்தமான பட்டியலும். அதில் ரணிலை அமரிக்கா ஜனாதிபதியாக கேட்டடார்கள் என்பதை தவிர மீதி எல்லாம் இருக்கு🤣.
  16. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள். வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும். இது இரகசிய வாக்கெடுப்பு. 14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.
  17. அருட்தந்தை சொன்னது 99% சரி. ஆனால் எம்மை போலவே அவரும் இல்லாத மேய்ப்பனை தேடுகிறார் போலும், அதனால் எவரையும் கைகாட்டி இவருக்கு போடுங்கள் என சொல்ல முடியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் என்பிபி பற்றிய அபாய சங்கையாவது ஊதுகிறார்🙏. ———————— யாழில் நான் ஒரு மானசீக வாக்கெடுப்பு நடத்த போகிறேன். அன்று, நீங்கள் ஊரில் வாக்காளராக இருந்தால் எந்த கட்சிக்கு போடுவீர்கள் என. @தமிழ் சிறி அண்ணை ஆக்களை சேர்க்கவும்🙏
  18. ஒப்பீட்டளவில் ஒரு யூகே மாணவன் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போவதை விட சற்றும் கடினமானதல்ல இலங்கை மாணவன் ஒருவன் பல்கலை கழகம் போகும் வழி. போனபின், நல்ல பல்கலை கழகம் எதுவென்றால் அது வேற கேள்வி. ஆனால் எனது அனுபவத்தில் யூகேயில் முதல் 10,15 யூனிக்கு போவதும், இலங்கையில் எந்த ஒரு யூனிக்குப் போவதும் ஒரே அளவு கஸ்டமான விடயம்தான். யூகேயில் மத்திய, கீழ தர வரிசை யூனிக்கெல்லாம் படுத்து கொண்டே போகலாம்🤣. ஆனால் நரி LLB (பல்கலை படிப்பு) இல்லை என நினைக்கிறேன் Attorney At Law (சட்ட கல்லூரி படிப்பு) மட்டும்தான்?
  19. மிகவும் தெளிவான அவதானிப்பு. முன்னர் ஒரு முறை நான் ஒரு கருத்தை எழுதி இருந்தேன். உண்மையில் அது எனது கருத்தல்ல, சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சொல்கிறார், சேப்பியன்ஸ் எம்மை விட உடல் வலுவும், மூளை அளவும் கூடிய நியண்டதால் மனிதர் மடிய, நாம் தக்கண பிழைத்தமைக்கு காரணம் - கூர்ப்பில் எமக்கு இருந்த ஒரு அனுகூலம் என. அந்த அனுகூலமாக அவர் குறிப்பிடுவது, எண்ணிக்கை பெரிதாக இருப்பினும், ஒரு குழுவாக செயற்படும் இயலுமையை. அதாவது பத்தாயிரம் சேப்பியனும், பத்தாயிரம் நியந்தாலும் ஒரு பள்ளத்தாக்கில் வசித்தால்….. நியந்ததால் மனிதனால் ஒரு விடயத்துக்கு (போர்) 10 பேரை மட்டும் சேர்க்க முடியும் போது - சேப்பியனின் கூர்ப்பு அனுகூலத்தால் அவனால் 1000 பேரை சேர்க்க முடியுமாக இருந்ததாம். இதனால்தான் சேப்பியன் குடும்பம் என்ற அலகை, ஊர், சாதி, இனம், நாடு, பேராரசு என பெரிதாக்கி கொள்ள, குடும்பத்துக்கு மேலாக சிந்திக்க முடியாத நியந்ததால் சேப்பியனில் கரைந்து போனார்களாம். இப்போ நீங்கள் சொன்ன விடயம்…. நீங்கள் சொன்ன பொதுமகன் இலங்கை தமிழ் பொதுமகன் மட்டுமே? சிங்கள பொதுமகன்…கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னும், பெளத்த-சிங்கள இலங்கை என்பதில் ஒற்றுமையாக, உறுதியாக நிற்கிறான். அவனுக்கு இருக்கு ஓர் பெளத்த மடாலய ஆழ்-அரசு போல் ஏன் நமக்கிடையே இல்லை. புலிகள் ஆழ்-அரசுக்குரிய கூறுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரு வெளித் தெரிந்த அரசியல்-இராணுவம். யூதருக்கு இருப்பதாக சொல்லப்படுவது போல், சனாதனிகளுக்கு ஆர் எஸ் என் போல், தமிழக திராவிட அமைப்புகளுக்கு தி.க. போல், சிங்களவர்க்கு பெளத்த பீடங்கள் போல்…. திம்பு கொள்கையை ஏற்று கொள்ளும் அனைவரும் ஏற்று கொள்ள கூடிய, கொள்கை வழி நடத்த கூடிய ஒரு அமைப்பு ஏன் எம்மிடம் ஒரு போதும் உருவாகவில்லை? கூர்ப்பில் சறுக்கிறோமோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.