Everything posted by goshan_che
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
புலம்பெயர் தேசத்தில் என்ன ஹைகோர்டையா அகற்றுகிறீர்கள்? இதற்கான விடை 2008 மாவீரர் நாள் உரையில் உள்ளது. புலம்பெயர் தேசத்தில் எஞ்சியோர் அந்த உரையில் சொன்னதுக்கு விசுவாசமாக இருந்தாலே, நடந்தாலே - பாதி கிணறு தாண்டிய மாதிரித்தான். எந்த வேலையும் கூடாத வேலை இல்லை? ஆனால் உங்கள் பிள்ளைகள் எவரையும் படிக்காதே, மாடு மேய் என நீங்கள் வழிநடத்தவில்லைத்தானே அண்ணை? அப்படித்தான் இதுவும்… மாடு மேய்தால் (இலங்கை தேசியம்), தினமும் சாணியோடு வாழ்க்கை போகும்🤣. படித்து ஒரு வேலை எடுத்தால் (தமிழ் தேசிய சுயநிர்ணயம்) கொஞ்சம் ரிலாக்ஸ்டா வாழலாம்.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
திமுக நான் இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை. ஆனால் இப்போ தவெக பக்கம் மனசு அலைபாய்வது உண்மை. நான் விரும்பும் சகல கொள்கை நிலைப்பாடும் அங்கே இருப்பதால்… ஒரு சின்ன ப்ரோ-மான்ஸ்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
புலிகளை போலவே அதே வன்முறையை அவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே செய்த அமைப்பு ஜேவிபி. ஆனால் விஜேவீர இறந்த பின் அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படலாம் என அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை, புலிகளின் உறுப்பினர் மீது இன்னும் வைக்க முடியவில்லை. ஏன்? இனவாதம் பார்வை. ஜேவிபி ஜனநாயகம் மூலமும் வென்றாலும் பெளத்த-சிங்கள வாதத்தைதான் தூக்கி பிடிக்கும். ஆகவே அவர்களை ஏற்கலாம். ஆனால் புலிகள் ஜனநாயகத்தில் வென்றால் அது மாநில சுயாட்சி உடைய ஒரு தமிழ் அரசில் போய் முடியும் - அது ஒட்டு மொத்த இலங்கையும் பெளத்த சிங்களத்துக்கு உரிய தீவு என்ற பேரினவாதத்துக்கு உகந்ததத்தல்ல. ஆகவே ஜேவிபிக்கு ரிப்பீட்டு, புலிகளுக்கு அப்பீட்டு. இலங்கையில் ஒவ்வொரு துகளும் நகர்வது பெளத்த-சிங்கள மேலாண்மைவாத அடிப்படையில்தான். 75 வருடம் கழித்து இலங்கை தமிழருக்கு இதை எழுதி விளங்கவைக்க வேண்டி இருப்பதே காலக்கொடுமை. நெருப்பை தொட்டுத்தான் சுடும் என அறிய வேண்டும் என அடம்பிடித்தால் உங்கள் இஸ்டம். ஆனால் @குமாரசாமி அண்ணை இனிமேல் தயவு செய்து பொன்னம்பலம் இராமாநாதன் பிழை விட்டார் என எழுத வேண்டாம் அந்த தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை. இத்தனைக்கும் பின் அனுரவை நீங்கள் நம்பி நாலு, ஒரு வருடம் கொடுக்க தயார் எனில், புதிய சுதந்திர நாடான இலங்கையில் எல்லோரும் சமமாக வாழலாம் என அவர் சிங்களவர்களை நம்பியது தப்பே அல்ல.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஆகவே சிந்திக்க வேண்டியது எப்படி அளுத்தம் கொடுக்கும் அரசியலாக எமது அரசியலை மாற்றுவது என்பதே. நல்லா படிச்சாத்தான் சோதனை பாஸ்பண்ணலாம் எண்டு சொன்னால், அது நம்மாள முடியாதே எண்டு விட்டு மாடு மேய்க்க போகலாம்… அல்லது முயன்று படித்து பாஸ் பண்ணலாம். நீங்கள் நாம் இனி மாடு மேய்க்கத்தான் இலாயக்கு என்கிறீர்கள். நான் இல்லை படிக்க இன்னும் அவகாசம் இருக்கிறது என்கிறேன். நன்மை செய்யமாட்டர் என சொல்லவில்லை. நமக்கு அதிகாரத்தை பரவலாக்க மாட்டார் என்றே சொல்கிறேன்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அவர்கள் எல்லாரையும் துரோகி பைக்குள் போட்டு வெளுத்தது உண்மை. தனிநாடே தீர்வு என நாண்டு கொண்டு நிண்டதும் உண்மை. ஆனால் இவர்கள்தான் இப்போ….பொறுப்பம்…பாப்பம் என்கிறவர்களாக அதிகம் இருக்கிறார்கள். சிலர் அடுத்த படிக்கு போய்…ஜனாதிபதி தேர்தலின் பின் என் பி பிக்கு ஆதரவு வீடியோ செய்திகள் கூட வெளியிடுகிறார்கள். நீங்கள் வேறு ஏதும் யாழ்களத்தை பார்கிறீர்களோ தெரியாது அண்ணா, நான், வாத்தியார் அண்ணா, ஓணாண்டி போல நடைமுறை சாத்தியமான தமிழ் தேசியம் பேசியோரே இன்று அனுரவை எதிர்கிறோம். மற்றைய பக்கம் பார்த்தீர்களானால் அனுர பிரிகேட்டில் நிற்பவர்கள் எல்லாம் 24 கரட் தமிழ் தேசியவாதிகள் என தம்மை சொல்லிகொண்டோர். இதில் விசுகு அண்ணா, புலவர் இருவர் மட்டுமே விதிவிலக்குகள். இதில் ஆக சிறந்த நகைசுவை என்னவென்றால் ….இந்த பார்ப்போம், பொறுப்போம் மறைமுக அனுர ஆதரவாளரும், நேரடியாக அனுரவை ஆதரிப்போரும் - பலர் மானசீக யாழ்கள தேர்தலில் சாத்தியமே இல்லாத ஒரு நாடு, இரு தேசத்தை கோரும் சைக்கிளுக்கு வாக்கு போட்டவர்கள். முடியை பிச்சு கொள்ளாத குறைதான்🤣. இன்னுமொரு விடயம். அவர்கள் எல்லோரையும் துரோகி பைக்குள் போட்டு வெளுத்ததை போலவே, அனுரவை எதிர்க்கும், இது அதே பழைய இனவாதம் தான் என கூறும் அனைவரையும், நீங்களும் “தமது இருப்புக்கு குந்தகம் விளைகிறது என அஞ்சும் தரப்பு” என்ற பைக்குள் போட்டு அடிக்க முனைவதாக எனக்குப்படுகிறது. நிச்சயம் இப்படி பயப்படும் சுயநலமிகள் இருக்கவே செய்வார்கள். ஆனால் பெரும்பாலானோரின் அனுர மீதான சந்தேகம் - கொள்கையின் பால்பட்டதே.
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
அல்வா அல்ல, நல்ல மாத்தறை தொதோல் கிண்டி கொண்டு இருக்கிறார் அனுர… கொஞ்சம் காலம் எடுத்தாலும் சுடச் சுட கிடைக்கும்🤣.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இதுதான் பொயிட்ன். ரோகண விஜவீரவை சுட்டு கொன்றாலும் குடும்பத்தை திரிகோண மலை நேவி காம்பில் பல பத்து வருடங்களாக பேணினார்கள். ஆனால் பாலச்சந்திரனை? ஏன்? இனவாதம். இந்த இனத்துக்கு ஒரு துரும்பும் கிடைக்க கூடாது. ஜேவிபியை 1987 இல் மீள தடை செய்தார்கள். ஆனால் 1990 இல் இருந்து தடை நீக்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய விட்டார்கள். இதையேதான், நடேசன், புலித்தேவன் மூலம் புலிகள் செய்ய முயன்றார்கள். அதாவது ஆயுத மெளனிப்புக்கு பின், சில காலம் முகாமில் இருந்து விட்டு, பின் வெளியே வந்து, புலிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்வது. ஆனால் சோமவன்ச போல, நடேசன் உயிருடன் வாழ அனுமதிக்க படவில்லை. ஏன்? இனவாதம். மறுபடியும் சுயநிர்ணய கோரிக்கை எழும்ப விட கூடாது. 89 க்கு பின் ஜேவிபியை கையாண்டது போல் 2009 க்கு பின்னாக புலிகளை கையாளவில்லை இலங்கை அரசு. ஒரே காரணம் இனவாதம். அப்படி கையாண்டிருந்தால் - புலிகள் இப்போ ஜனநாயக நீரோட்டத்தில் இருப்பார்கள், இலங்கையே தடை செய்யவில்லை எனும் போது உலக நாடுகளும் தடையை விலக்கி இருக்கும். விஜேவீர போல, தலைவர் படத்தை தரவேற்றுவதும் ஒரு குற்றமாக கருதப்பட்டிருக்காது. முழு நாட்டையுமே ஆயுத புரட்சிமூலம் கைபற்ற முயன்று பல அப்பாவி சிங்களாவரை கொலை செய்த ஜேவிபிக்கு 3 வருடத்தில் புனர்வாழ்வு, ஆனால் 15 வருடம் கழிந்தும், நாட்டின் 1/3 பகுதிகை மட்டுமெ கைப்பற்ற முனைந்த புலிகளுக்கு இன்றும் தடை. ஒரு குழு சிங்களவர், மற்றையது தமிழர். இதுதான் இனவாதம்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சிங்களவர் அனுர செய்வதை எல்லாம் எதிர்க்க வேண்டியதில்லை. ஆனால் அவர் முன்னர் என்ன செய்தார், இப்போ என்ன செய்கிறார் என பார்த்தால் - இது பழைய அதே இனவாதக்கள்ளு, புதிய மொந்தையில் என்பது விளங்கும். அதுவே எதிர்ப்பதன் அடிப்படை. லிங்கன் பற்றி சொல்லி இருந்தீர்கள் (ஆண்டு பிழையான தரவு) - தனிப்பட்ட ரீதியாக அவர் அடிமைதனத்தை வெறுத்தாலும், அரசியலில் அவர் கூட ஆரம்பத்தில் அடிமை ஒழிப்பை (emancipation ) தன் கொள்கையாக கொள்ளவில்லை, அடிமைத்தனத்தை தொடராது அழிப்பதே அவர் விரும்பிய நகர்வாக இருந்தது, ஆனால் சிவில் யுத்த கால புறச்சூழல் இதை சாத்தியமாக்கியது. அதன் பின் அடிமை ஒழிப்பு 13 வது சரத்தும் யுத்தத்தின் பின் நிறைவேறியது. அடக்குமுறையாளன் ஒரு போதும் தானாக அடக்கபடுவனுக்கு உரிமையை தரமாட்டான். அழுதால்தால் தாயே பிள்ளைக்கு பால் கொடுப்பாள். அடக்கபடுபவன் போராட வேண்டும், புறச்சூழலை தனக்கு ஏற்ப வளைக்க வேண்டும், அப்போ வேறு வழியின்றி அடக்குமுறையாளன் இறங்கி வருவான். உலக வரலாறு எங்கும் இதுவே நடந்தது, நடக்கும். ஆனால் அப்படி ஒரு புறச்சூழல் இப்போ இலங்கையில் இல்லை. இலங்கையில் நடப்பது அடக்குமுறையாளன் தன் அடக்குமுறையை நிறுவனமயப்படுத்தும் வேலை. அதாவது ஈரச்சாக்கு இலங்கை தேசியம் என்ற பெயரில் எம் உரிமைகளை அடித்து நூப்பது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இது @island ஐலண்ட் எடுக்கும் நிலைக்கு நேர் எதிரான நிலை. ஆனால் நீங்கள் இருவரும் வந்து சேர்ந்துள்ள final destination ஒன்றேதான். அவர் எமது சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தோற்றதன் முழு அல்லது பாரிய பழியை புலிகள்+ஏனைய 75 வருட தலைவர்கள் மீது போட்டு, இனி மடிப்பிச்சைதான் (இலங்கை தேசியம்) ஒரே வழி என்கிறார். நீங்கள் அதே பழியை சர்வதேசம் (மேற்கு ரஸ்யாவை சொன்னால் உங்களுக்கு கோவம் வரும்) + புலிகள் தவிர் தலைமைகள் மேல் போட்டு, இப்போ மடிப்பிச்சைதான் ஒரே வழி என்கிறீர்கள். நீங்களும் ஐலன்டும் ஒரே இடத்தில் இருப்பது அபூர்வம், gentleman please enjoy each other’s company 🤣. ஆனால் இன்னும் முன்நோக்கி பார்க்க அவகாசம் இருக்கிறது. மடிப்பிச்சைக்கு மேலேயும் பெற வாய்புண்டு. இப்போதும் ஜனநாயக வழியில், முஸ்லிம்களுக்கு அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ கொடுத்து, புலம்பெயர் சமூகம், சகல புலத்து சக்திகளும் ஒன்றுபட்டால் - ஒரு காத்திரமான அதிகார பகிர்வு நோக்கி பேரினவாதத்தை தள்ள முடியும். ஆனால் அதற்கு பழசை மறந்து எல்லோரும் ஒரு அணியில் வரவேண்டும்.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
அமித்ஷா பிளான் பத்து நாட்களுக்குள் நமுத்து போய்விட்டதால்…. இப்போதைக்கு சங்கி-மங்கி இணைப்பு தள்ளி வைக்கைப்படுகிறது. -இவ்வண்- அண்ணாமலை
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
அனுர மீட்பர் வந்துள்ளார் எனவே இனி இலங்கையிம் யூகே போல் ஒரு சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்ட தேசம் என நம்பி போனார் போலுள்ளது. எனக்கு ஒரே ஒரு பயம்தான். இப்ப @kandiah அண்ணை வந்து, இவர் பயங்கரவாதிதானே - இவரை உள்ளே போட்டது சரிதானே என எழுதப்போகிறார் என்பதே🤣.
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
மீட்பர் அனுரவுக்கு தூரப்பார்வை. அருகே இருப்பவை எதுவும் தெரியாது, சில ஆயிரம் மைலுக்கு அப்பால் எண்டால் கொதித்திடுவார், கொதித்து🤣
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதை நான் தேர்தலுக்கு முன் நடக்கும் என கூறிய போது நீங்கள் சங்தேகப்பட்டீர்கள். ஒரு அனுரசார்பு வீடியோவுக்கு 2.5 இலட்சம் என சொல்லிகிறனர். ஆனால் நான் நம்பவில்லை. இவர்கள் லைக்ஸ் மூலம் உழைக்கவே இப்படி நட்ச்க்கிறனர்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
எல்லாரும் “வடமராட்சி அங்கிள்” கொடுத்த மயக்க மருத்து தடவிய இனிப்பில் மதிமயங்கி விட்டார்கள்🤣. அருமை.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
மேலே உள்ள தீ கக்காத தமிழ் தேசியவாதியில் என்னையும் அடக்கலாம் என நினைக்கிறேன். ஏற்றுகொள்கிறேன் வடமாகாணத்தில் 5 சீட் என் பி பி க்கு போனது முதல் எனக்கு palpable fear தான். இது என் எம்பி சீட் போய்விடும் என்றோ, அல்லது என் வருவாய் பாதிக்கும் என்றோ வரும் பயம் அல்ல. பிரிந்து போன வாக்குகளை கூட்டினால் எமது மக்கள் இன்னும் சுயநிர்ணயம் வேண்டியே நிற்கிறனர். கிழக்கில் சந்தேகமே இல்லை 4 சீட் எடுக்க வேண்டிய இடத்தில் 5 சீட்டை தமிழரசுக்கு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களை அனுர தன் மனங்களை வெல்லும் அதாவது ஈரச்சாக்கு அரசியல் மூலம் ஒற்றை இலங்கைக்குள் அமிழ்த்தி விடுவாரா என்ற பயம் எனக்கு தொற்றியுள்ளது கண்கூடு. ஆனால் வடமராட்சி அங்கிள் போல, அனுரவும் ஒரு temporary relief ஐ மட்டுமே தருவார். அதுவும் ஒரு அளவில்தான். அங்கிள் நாளைக்கு ரிடையர் ஆகி போனபின் வரும் அடுத்த ஆள் நம்மை அடிமை செய்வார் என்கிறது நம் பட்டறிவு. எனது மட்டும் அல்ல பலரின் பயமும் இதுதான். இது எமது சுயநலம் சம்பந்தபட்டது அல்ல. யாழ்பாணம், மட்டகளப்பு, கொழும்பை போல் சிங்களமகமாகினால் எனக்கு அது தனிப்பட்டு வசதியாகவே இருக்கும். ஆனால் நம் சுயநிர்ணய கோரிக்கை அறம் மிக்கது, நியாயமானது, இதற்க்காக நாம் கொடுத்த விலை அதிகம். வெற்று தற்காலிக சலுகைகள், அனுர என்ற ஒருவரின் இமேஜை வைத்து எம்மை காலாகாலத்துக்கும் சுய உரிமை அற்றவர்களா மாற்றப்போகிறார்கள் என்பதே நீங்கள் காணும் palpable fear. ———- தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருக திருவுளமோ. இதுதான் மேலே ஜஸ்டின் அண்ணா சொன்ன மனங்களை வெல்லும் “வடமராட்சி அங்கிள் பொலிடிக்ஸ்” , நான் எழுதிய 75 வருட யுத்தத்தின் 3ம் அத்தியாயம்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
யூகே யில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு பிட்காயின் தருவோம் என யாரும் கூறினால் (அது நம்பும்படியாக இருந்தால்) ஸ்டாமரும் இல்லை, லேபரும் இல்லை, கன்சேவேடிவும் இல்லை. உலகமும் முழுதும் இதுதான் நியதி.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இங்கேதான் நீங்களும் சுமந்திரனும் பிழை விட்டீர்கள். நீங்களோ, நானோ, சுமந்திரனோ புலிகளின் பிரதிநிதிகள் அல்ல. நாம் எம்மக்களின் பிரதிநிதிகள். நாம் கோருவது எம் மக்களுக்கு இலங்கை அரசு இழைத்த அநீதிக்கான விசராணையை. அதை நாம் கோருவது அதனை ஒரு துரும்பாக பாவித்து ஒரு நியாயமான தீர்வை எட்ட. புலிகள் செய்தவை பற்றி எமக்கு கவலை இல்லை. அதை பாவித்து இப்போ எம் மக்களுக்கு நாம் ஒரு தீர்வை பெற முடியாது. ஆகவே அதை பற்றி நாம் கதைக்க வேண்டியதில்லை (நமக்குள் வரலாற்றில் இருந்து கற்று கொள்வதற்காக கதைப்பது அல்ல). இலங்கை அதை பேச விரும்பினால் போய், புலிகள் இருந்தால் அவர்களுடன், அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என யாரும் இருந்தால் அவர்களுடன் பேசட்டும், விசாரிக்கட்டும். நாம் புலிகள் அல்ல. தமிழர். புலிகள் செய்தவற்றுக்கு பொதுமக்களாகிய நாம் ஒரு போதும் பொறுப்பு கூற வேண்டியதில்லை. ஆனால் இலங்கை படைகள் செய்தமைக்கு, யார் ஆட்சிக்கு வந்தால் இலங்கை அரசே பொறுப்பு. நாம் கோருவது எமக்கான நியாயமான விசாரணையை. இதில் சுமந்திரன் தன் வகிபாகத்தை மீறி, எமது மக்களின் பிரதிநிதியாக அல்லாமல் - தானே ஐ சி சி நீதிபதிபோல் கதைக்க வெளிகிட்டுத்தான், சகலதையும் கவிழ்த்து கொட்டினார்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதில் ஆச்சரியமான விடயம் ஏதும் இல்லை. ஆனால் இதை நாம் ஏற்று கொள்ளாமல் போராட வேண்டும். அரசியல் என்றால் அதுதானே? அதுவும் விடுதலை அரசியல். விசாரணையால் நமக்கு என்ன நட்ட ஈடா வரப்போகிறது, இல்லை? அதை பயன்படுத்தி - நமக்கு ஒரு தீர்வை அடைய இப்போதும் வழி இருக்கிறது. நாம் ஒற்றுமையாக செயல்பட்டால்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அது கொள்கையை மக்கள் நிராகதித்தமை அல்ல. ஜனாதிபதி தேர்தலில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல என மக்கள் நினைக்கவில்லை. அத்தோடு தமிழரசு கட்சி அதை ஆதரிக்கவில்லை. இப்படியான நிலையில் இந்த மாதிரி ஒரு வேட்பாளரை நிறுத்துவது சரியா, பிழையா என யாழில் நான் கேள்வி எழுப்பி - அப்படி நிறுத்தின் எல்லோரும் உடன்பட்டு நிறுத்த வேண்டும் என்று எழுதினேன். அதன் பின் வரவில்லை, ஆனால் @நிழலி தொடர்ந்து இது எதிர்மறையான விழைவைதரும் என எழுதினார். அதுதான் நடந்தது. சின்ன வயதில் படித்த ஒற்றுமை அற்ற எருதுகளின் கதைதான். நாம் ஒற்றுமையாக ஒரே அணியில் திரளாதவரை, வாக்குப்பலமும், செயல்பலமும், சிதறிக்கொண்டே இருக்கும்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதில் முரண்பட முடியாது. ஆனால்…. இது உண்மையிலேயே தந்திரோபாயம் அல்ல. எழுதுபவகளின் குறைகளை விடுத்து விட்டு, அவர்களின் cherry picking ஐ தவிர்த்து விட்டு, அவர்கள் சொல்லும் விடயத்தினை மட்டும் அணுகுவதே நாம் செய்ய கூடியது என நினைக்கிறேன். அந்த விடயம் யாதெனில்… எல்லோரும் பிழை விட்டுள்ளார்கள், விட்டுள்ளோம். இதில் புலிகள் பிழை விட்டார்கள் என இவர்கள் சாகும் வரை ஏற்கப்போவதில்லை, அதை மீள, மீள சொல்லிக்கொண்டிருந்தால் எல்லோரும் ஒரே இடத்தில் நிண்டு சுத்த வேண்டியதே. ஆகவேதான் அதை அப்படியே விட்டு விட்டு, ஒத்த கருத்துக்கள் மீது கவனம் வைக்கிறேன். நம்மை வேறுபடுத்தும் கருத்துக்களை மீள, மீள உரைக்கும் போது ஒன்றாக முன்பே போவது இயலாத காரியமாகிறது. யாழ் ஒரு சிறுதுளி. எம் இனத்தின் அரசியல் அதன் பெரிய ஸ்கேல்.
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
எது பயங்கரவாத தடை சட்டம்தானே? அதைத்தான் எதிர்கட்சியில் இருக்கும் போது மோசமான நீக்கப்படவேண்டிய சட்டம் என்றீர்களே? அதை நீக்கிவிட்டால் பிரச்சனை பலதுதானாக தீருமே?
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
இப்போ இருக்கும் சட்டத்தை வைத்து, இப்போ பேசியதற்க்காக, விமல், சரத், உதயவை இன்றே கைது செய்யலாம். ஐ ஆம் வெயிட்டிங் அனுர.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நீங்கள் என்னை நோக்கி எழுதவில்லை என்பதை ஊகித்தே இருந்தேன். ஆனால் 75 வருடமாக சுயநிர்ண கோரிக்கையை போட்டடித்த படியால் இனி அதை கேட்ட கூடாது என்பது தர்க ரீதியான நிலைப்பாடாக எனக்கு தெரியவில்லை. ஒரு காலம் இருந்தது 2009 இன் பின்னர் கூட பல புலம்பெயர் ஆட்கள் தனி நாட்டு கனவில் இருந்தார்கள். ஆனால் இப்போ அவர்களே எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு, அனுர சரணம் கச்சாமி என்று பாடுகிறார்கள். ஆனால் 2024 தேர்தலிலும், எமது மக்கள் சுயநிர்ணயம் கோரும் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் பெரும்பான்மை வாக்கை அளித்துள்ளனர். வாக்குகள் சிதறின என்பதுதான் உண்மை. மக்கள், நீங்கள் இப்போ உந்திதள்ளும், அனுரவின் ஈரச்சாக்கு இலங்கை தேசியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தே வாக்களித்துள்ளனர். இதைதான் மேலே கட்டுரை சொல்கிறது. நிலமை இப்படி இருக்க, உங்கள் நிலைப்பாடு ஊரில் உள்ள மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவும், ஜனநாயக கேடானாதாகவும் எனக்கு படுகிறது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மிகச்சரியான கூற்று வசி. கீழே இருப்பது 2019 மாவீரர்நாள். கோட்ட அபய பதவிக்கு வந்த 10 நாளில் மக்கள் நினைவேந்தியது. எம் உறவுகளை நினைவுகூற எவரின் அனுமதிக்கும் எம் மக்கள் காத்து நின்றதில்லை. இதை அனுர அனுமதிக்கவும் இல்லை. அனுமதிக்காவிடினும் நடந்திருக்கும். இது ஏதோ புதுவிடயம் போல் சிலர் அனுரவுக்கு காவடி எடுக்கிறனர்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
1. சிங்களவர்கள் இருவரும் பழைய புலிகளின் சின்னம் பொறித்த நிகழ்வுகளை வீடியோவை பகிர்ந்து - இப்போ நடக்கிறது என பொய் வதந்தி பரப்பி உள்ளனர். 2. சுன்னாக ஆள் பற்றி தெரியவில்லை, ஆனால் மற்றையவர் நினைவுகூரும் விதமாக தலைவர் படத்தை ஏற்றியுள்ளார். 3. இரெண்டும் ஒன்றல்ல. ஆனால் அனுர ஆதரவாளர்கள் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கி, அரசு நடுநிலையாக நடப்பது போல் காட்டவிழைகிறார்கள்.