Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள். வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும். இது இரகசிய வாக்கெடுப்பு. 14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.
  2. அருட்தந்தை சொன்னது 99% சரி. ஆனால் எம்மை போலவே அவரும் இல்லாத மேய்ப்பனை தேடுகிறார் போலும், அதனால் எவரையும் கைகாட்டி இவருக்கு போடுங்கள் என சொல்ல முடியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் என்பிபி பற்றிய அபாய சங்கையாவது ஊதுகிறார்🙏. ———————— யாழில் நான் ஒரு மானசீக வாக்கெடுப்பு நடத்த போகிறேன். அன்று, நீங்கள் ஊரில் வாக்காளராக இருந்தால் எந்த கட்சிக்கு போடுவீர்கள் என. @தமிழ் சிறி அண்ணை ஆக்களை சேர்க்கவும்🙏
  3. ஒப்பீட்டளவில் ஒரு யூகே மாணவன் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போவதை விட சற்றும் கடினமானதல்ல இலங்கை மாணவன் ஒருவன் பல்கலை கழகம் போகும் வழி. போனபின், நல்ல பல்கலை கழகம் எதுவென்றால் அது வேற கேள்வி. ஆனால் எனது அனுபவத்தில் யூகேயில் முதல் 10,15 யூனிக்கு போவதும், இலங்கையில் எந்த ஒரு யூனிக்குப் போவதும் ஒரே அளவு கஸ்டமான விடயம்தான். யூகேயில் மத்திய, கீழ தர வரிசை யூனிக்கெல்லாம் படுத்து கொண்டே போகலாம்🤣. ஆனால் நரி LLB (பல்கலை படிப்பு) இல்லை என நினைக்கிறேன் Attorney At Law (சட்ட கல்லூரி படிப்பு) மட்டும்தான்?
  4. மிகவும் தெளிவான அவதானிப்பு. முன்னர் ஒரு முறை நான் ஒரு கருத்தை எழுதி இருந்தேன். உண்மையில் அது எனது கருத்தல்ல, சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சொல்கிறார், சேப்பியன்ஸ் எம்மை விட உடல் வலுவும், மூளை அளவும் கூடிய நியண்டதால் மனிதர் மடிய, நாம் தக்கண பிழைத்தமைக்கு காரணம் - கூர்ப்பில் எமக்கு இருந்த ஒரு அனுகூலம் என. அந்த அனுகூலமாக அவர் குறிப்பிடுவது, எண்ணிக்கை பெரிதாக இருப்பினும், ஒரு குழுவாக செயற்படும் இயலுமையை. அதாவது பத்தாயிரம் சேப்பியனும், பத்தாயிரம் நியந்தாலும் ஒரு பள்ளத்தாக்கில் வசித்தால்….. நியந்ததால் மனிதனால் ஒரு விடயத்துக்கு (போர்) 10 பேரை மட்டும் சேர்க்க முடியும் போது - சேப்பியனின் கூர்ப்பு அனுகூலத்தால் அவனால் 1000 பேரை சேர்க்க முடியுமாக இருந்ததாம். இதனால்தான் சேப்பியன் குடும்பம் என்ற அலகை, ஊர், சாதி, இனம், நாடு, பேராரசு என பெரிதாக்கி கொள்ள, குடும்பத்துக்கு மேலாக சிந்திக்க முடியாத நியந்ததால் சேப்பியனில் கரைந்து போனார்களாம். இப்போ நீங்கள் சொன்ன விடயம்…. நீங்கள் சொன்ன பொதுமகன் இலங்கை தமிழ் பொதுமகன் மட்டுமே? சிங்கள பொதுமகன்…கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னும், பெளத்த-சிங்கள இலங்கை என்பதில் ஒற்றுமையாக, உறுதியாக நிற்கிறான். அவனுக்கு இருக்கு ஓர் பெளத்த மடாலய ஆழ்-அரசு போல் ஏன் நமக்கிடையே இல்லை. புலிகள் ஆழ்-அரசுக்குரிய கூறுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரு வெளித் தெரிந்த அரசியல்-இராணுவம். யூதருக்கு இருப்பதாக சொல்லப்படுவது போல், சனாதனிகளுக்கு ஆர் எஸ் என் போல், தமிழக திராவிட அமைப்புகளுக்கு தி.க. போல், சிங்களவர்க்கு பெளத்த பீடங்கள் போல்…. திம்பு கொள்கையை ஏற்று கொள்ளும் அனைவரும் ஏற்று கொள்ள கூடிய, கொள்கை வழி நடத்த கூடிய ஒரு அமைப்பு ஏன் எம்மிடம் ஒரு போதும் உருவாகவில்லை? கூர்ப்பில் சறுக்கிறோமோ?
  5. ஆங்கிலத்தில் softening the audience என்பார்கள். பார்வையாளரை மெதுமைப்படுத்துவது - அதன் பெறுபேறைரைத்தான் நீங்கள் பார்கிறீர்கள். இப்போ அல்ல, சில காலத்துக்கு முன்பே யாழில் கூட இதை நான் கண்டுள்ளேன். யாழில் சில காலத்துக்கு முன், மேற்கை, தமிழக கட்சிகளை நம்பமுடியாது - நாம் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம் என ஒருவர் தொடர்ச்சியாக எழுதினார்…. சீனா உள்ளே வந்தே விட்டது, தமிழர் சீனாவோடு பேரம் பேச வேண்டும் என்ற இன்னொரு மாயக்கதையின் பிண்ணனியில் இது வெளிவந்தது. அதில் ஒரு பலத்த தேசியவாதி கூட அள்ளுண்டு போய் கருத்துக்களை அதே தொனியில் எழுதினார். நான் கூட, நீங்களா இப்படி எழுதுவது என கேட்டிருந்தேன். அவர் போல தேசிய உணர்வில் அர்ப்பணிப்பான, உண்மையானவர்களையே மெதுமைபடுத்த முடியும் போது, சாதாரணமானவர்கள் எம்மாத்திரம். யாழில் நடந்தது ஒரு சோறு, புலத்தில், புலம்பெயர் நாட்டில் நடந்தது, நடப்பது ஒரு பானை.
  6. பின்கதாவால் ஜனாதிபதியாகிய நரிக்கு பேச்சப்பாரு (வசிவுக்கரசி, காந்திமதி குரலில் வாசிக்கவும்).
  7. வணக்கம் சின்னக்குட்டி. மீள் வரவு நல்வரவாகட்டும். பலநாள் வாசகராக உங்கள் கருத்துக்களை வாசித்துள்ளேன். நான் எழுத தொடங்கிய காலத்தில் நீங்கள் வருவதை விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.
  8. வணக்கம். நல்வரவு🙏. வில்லவன் இந்த பகுதியிலேயே நிண்டிடாமல், களத்துள் வந்து சொல்லவன் ஆகுங்கள்🙏.
  9. வணக்கம் சுண்டல் மீள காண்பதில் மகிழ்ச்சி. பழசை எல்லாம் (மண்டையன் குழு தர்கங்கள்) மறந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்🤣. இணைந்திருங்கள், முக்கியமாக தொடர்ந்து எழுதுங்கள்🙏.
  10. எல்லாத்தையும் விடுங்கோ பாஸ், சுன்னாகத்தில் பொலிஸ்காரார் மீது தமிழ் ஆள் முதலில் கைவைக்கவா? அல்லது தமிழ் ஆளில் பொலிஸ் கைவைக்க வா சாத்தியம் கூட ? இங்கே உள்ளதில் பெரிய பிழை அவரை அடித்தது, குழந்தையை தூக்கி ஏறிந்து பயணிகளா கூட வந்தோரை இம்சித்தது. இதை எல்லாம் விட்டுட்டு, வானுக்கு பெல் இருக்கா, லைட் இருக்கா என பாக்கிறியள்🤣.
  11. 1. விபத்து நடந்த இடத்தில் இருந்து போகக்கூடாது என்பது எப்போதும் இல்லை, விபத்து நடந்த இடத்தில் உடனடியாக நிப்பாட்டினால் அவருக்கு ஆபத்து என பயந்தால், அல்லது வேறு தக்க காரணம் இருந்தால் போகலாம். போய்விட்டு முடிந்தளவு விரைவில் அருகில் உள்ள பொலிஸ்நிலையம் போகலாம். அல்லது அவசர இலக்கத்தை தொடர்பு கொள்லலாம். மோட்டார் சைம்கிளில் வந்தோர் பொலிசார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. 2. இனக்கலவரம் - இதைத்தான் சொன்னேன் . 83 இல் நடந்தது இன கலவரம் அல்ல. கலவரம் எண்டால் (இரு) பகுதியும் அடித்து கொள்வது. 83 இல் நடந்தது ethnic riots அல்ல, pogrom. இனவழிப்பு எனலாம். 👆👍 அதே
  12. நியாயமான கேள்வி. ஆனால் இது பிரான்ஸ் இல்லையே அண்ணை. இலங்கை. அரசு இயந்திரம் சிங்களவரான (?), பொலிஸ் பக்கம் சாராமல் தமிழரான (?) வான் சாரதி பக்கம் சாய்வது கொஞ்சம்…புதிசு கண்ணா புதுசு. ம்ம்ம்.. 83 இல் தமிழரும் சிங்களவரும் அடித்து கொண்டார்கள் என யாரோ எழுதியது போல இருக்கு ஜி. சுன்னாகத்தில், சிவிலில் நிக்கும் ஒரு பொலிஸ் கூட்டத்தின் மேல் - ஒரு சாதாரண வான் காரார் தானாக போய் கைவைத்திருப்பார் என நம்புகிறீர்களா ஜி?
  13. இதை சொல்ல கூட தைரியம் இல்லை எண்டா பிறகு என்ன ஹைகோர்ட்டுக்கு பாராளுமன்றம் போற ஆசை. அவர் சொல்லாட்டில் என்ன? நீங்களே ஏத்துறது தண்டவாளத்தில்? கலையரசனும் கேக்கிறாதாமா? பிறகு நம்மட நேரு ஜூனியர் - இலண்டனில் குளிர் எண்டா அம்பாறை அரசியலில் கூதல் காய்வாரே, அவரும் கேட்கிறாரா?
  14. கேள்வி 2 சரி நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கட்டும், ஆனால் கெளரவமாக வாழ முடியும் எனும் போது அதை ஏற்றால் என்ன பிழை? பதில் இதை பிழை என வெளிநாட்டு பிரசை நான் சொல்ல முடியாது. இன்று ஒருவர் கூறினார் போதை பொருளை யாழில் ஒழிப்பார்கள் எனவே என் வோட்டு என் பி பிக்குத்தான். நாம் உரிமையை (பிச்சை) கேட்ட போது அவர்களாகவே நாயை (போதைபொருள்) அவிழ்த்து விட்டார்கள். இப்போ நாம் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்கிறோம். ஆனால் இதுதான் வாக்காளர் தேர்வு என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது.
  15. 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது. யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே. தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா. அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு, அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது. சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள். இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல். இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன். 50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல். நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும். இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது. பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது. பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து, கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள். இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள். எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர். அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது. ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம். இப்போ…. பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல். மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்). இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது. ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல். இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம். இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம். இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும். இதுதான் என் பார்வை. ———————————————— அடுத்து…… இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன். கேள்வி1 அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்? பதில் இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில்.
  16. இதில் 2 மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் தமிழர் அல்லாதோர் (என ஆக்கப்பட்டுள்ளது). வன்னியிலும் 30%வரை வேட்பாளர் தமிழர் அல்லாதோர் என நினைக்கிறேன். யாழில் அனைவரும் தமிழ் +முஸ்லிம். மட்டில் 1 சிங்களவர் என நினைக்கிறேன். வடிவாகத் தெரியாது.
  17. நான் சொன்னதுக்கு இது பதில் இல்லையே புலவர். நான் சொன்னது புலிகள் காலத்தில் இருந்த திக, புலிகள், திராவிட, தமிழ் தேசிய சித்தாந்த ஒன்றியவாழ்தல் (symbiotic relationship) பற்றி. இந்த வரலாற்றைத்தான் நீங்கள் நா.த.க நிலைப்பாட்டுக்கு ஏற்ப புனைய முனைந்தீர்கள் என்பது என் கூற்று. அதை மறுத்துரைக்காமல்…சி.பா.ஆ…என்று புலிகளுக்கு முந்தியதையும், அம்மா மு.க. என புலிகளுக்கு பிந்தியதையிம் பற்றி ஏன் எழுதுகிறீர்கள். தவற விட்டிருந்தால் மீண்டும் என் கேள்வி கீழே. 👆இது உங்கள் கூற்று. 👇இது அதுக்கான என் கேள்வி. இதற்கான பதிலை அல்லவா நீங்கள் தரவேண்டும்.
  18. இல்லை தமிழர்கள்தான் நிக்கிறார்கள். முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.
  19. உண்மைதான். நீங்களா அல்லது @தமிழ் சிறி அண்ணாவா தெரியவில்லை என் வாக்கு யாருக்கு என கேட்டார். அப்போ அருச்சுனா குழுவில் அவர் தவிர வேறு மூவருக்கு என சொன்னே. இன்று அருச்சுனா, திசைகாட்டி என்மனதில் 50:50. ஆனால் இதன் பின்னால் உள்ள பேரினவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு யாழில் வரையலாம் என எண்ணியுள்ளேன். ஐலண்ட் - நீங்கள் எதிர்பார்க்கும் காலம் இலங்கைக்கு வருமோ என்ற சிறு நம்பிக்கை வரும். தேர்தலுக்கு முன் ஒரு தொகுதி கைதிகளாவது விடுவிக்கப்படின்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.