Everything posted by goshan_che
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இதுக்கும் நான் எழுதினதுக்கும் என்ன சம்பந்தம்?
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
ஓம்… சீமானின் முதல்வர் கனவு போல🤣. பூ..ஹா..ஹா..கா🤣
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
முடிந்தால் கஜனிடம் சொல்லி விடுங்கோ… அவருக்கு ஒரு off ramp தேவைப்பட்டால்…இதோ👇 1. கட்சியின் கொள்கை என்றவகையில், ஒரு நாடு இரு தேசம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். 2. பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய வாக்குகள் சிதறியமை, மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற பொய்பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது. 3. ஆகவே உடனடித்தேவை என்ற வகையில் - தமிழ் தேசிய சக்திகளை ஒரு முகப்படுத்தும் வகையில் - தமிழ் கட்சிகள் இடையே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் - நாம் தமிழரசு கட்சி, ஏனைய கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளையும் பரிசீலித்து, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர சித்தமாயுள்ளோம்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
அதே. ஏன் உதவ வேண்டும்…அவர்தான் எம்பி இல்லையே? நீங்கள்தான் தூக்கி வீசி விட்டீர்களே என யாரும் கேட்டால்? இனத்தின் மீது அக்கறை இருந்தால் இதை செய்யலாம். அல்லது விலகி நடக்கலாம்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நாம் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கு அப்பால் - இந்த தேர்தலின் பின் தன் சொந்த தேர்தல் மாவட்டத்தை தக்க வைத்த ஒரே தலைவர் சாணக்ஸ் மட்டுமே. அந்த வாக்குகளுக்குரிய கெளரவம், எப்போதும் தமிழ் தேசிய அரசியலில் முடிவெடுக்கும் இடத்தில் கிழக்கிற்கு இருக்க வேண்டிய இடத்தை பிரதிநிதிதுவம் செய்ய இப்போதைக்கு இவர்தான் சிறந்த தெரிவு. தமிழ் தேசிய அரசியல் என்பது இரு யாழ்பாண எம்பிகள் தமக்குள் பேசி முடிக்கும் விடயம் என்ற தோற்றப்பாடு எழக்கூடாது.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அவர்கள் மனம் புண்படும் என்பதால் மெளனமாக இருக்க சொல்லவில்லை. பரஸ்பரம் குற்றசாட்டுகள் கூறும் கணவனும் மனைவியிம், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்…. இனி பழசை கிளறாமல்…எதிர் நோக்கி ஒற்றுமையாக சிந்திப்போம் என முடிவுக்கு வருவது உண்டல்லவா? அப்படி ஒரு கோரிக்கைதான் இதுவும். எனது, உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் அதிக வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் உங்களை போல், அனுர காட்டும் இலங்கை தேசியத்தில் கரைவதில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக தமிழர் காணி உரிமையை பெறாத எந்த தீர்வையும் என்னால் - என் இறுதிநாள் வரை ஒரு நல்ல தீர்வு என ஏற்க முடியாது. எனது மனநிலையில்தான் வடக்கு கிழக்கு தமிழ் வாக்களர்களில் பெரும்பான்மையானோர் உளர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. அந்த மக்கள் இந்த நிலைப்பாட்டை விட்டு விலகும் வரை - நான் அதை ஆதரித்தபடியே இருப்பேன். அவர்களும் நிலையை மாற்றினால், அதன் பின் அதை பற்றி கதைக்க எனக்கு ஏதும் இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள தொடர்புகள் சகலதையும் முடித்து கொண்டு, காலியிலோ, உனவட்டுனவிலோ ஒரு கடற்கரைப்பக்கமாக ஒதுங்கி விடுவேன்🤣. இதுதான் நமக்கிடையேயான ஒரே வேறுபாடு என நினைக்கிறேன். புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
உங்கள் பயம் நியாயமானதே. கடந்த 15 வருடங்களில் இந்த வன் தேசியர்கள், மதவாதம், ரவுடித்தனம், பிரதேசவாதம், கூட்டங்களில் போய் குரங்கு சேட்டை விடுவது, வசைபாடல் என பலதையும் கையில் எடுத்து - நீங்கள் கூறியது போல் ஒரு அச்சத்தையும், அருவருப்பையும் உருவாக்கியே உள்ளனர். ஆனால் நான் சொன்ன பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் இவர்கள் அல்ல. நான் சொல்லுபவர்கள்; தம் இருப்பை தக்க வைக்க தாயக அரசியலை நம்பி இராதவர்கள், மாவீரர் நாளை கூட பிரிந்து நடத்துவதை கண்டு மனம் உடைபவர்கள், தமது வலுவுக்கு ஏற்ப எந்தவித பிரதிபலனும் இல்லாமல் இப்போதும் ஊரில் நல்ல விடயங்களை செய்பவர்கள்…. இவர்கள்தான் மேலே ஐலண்ட் சொன்ன சப்போர்டஸில் பெரும்பாலானவர்கள். அடுத்து…தாயக அரசியலில் நீங்கள் பயப்படும் வகையில் இவர்களுக்கு ஒரு சின்ன பங்கு கூட இல்லை. கஜேஸ் கூட கொள்கைநிலை வரட்டுத்தனமாக இருந்தாலும் - இவர்கள் போல் கட்டுக்கோப்பு-அற்றோர் anarchist இல்லை. ஆகவே ஒரு மாகாணசப தன்னும் கிடைத்தால் இந்த anarchists கையில் போய்விடும் என்ற உங்கள் பயம் முகாந்திரமற்றது. ஆனால் புலம்பெயர் சமூகத்தில் இவர்கள் தாக்கம் நிச்சயம் உள்ளது. நான் அவதானித்த வகையில் அனுரவின் வரவின் பின் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலின் பின் இவர்களில் சிலர் தம் வன்மையை குறைத்துள்ளார்கள். இன்னும் சிலர் அப்படியே அனுரவிடம் சரண்டர் ஆகி விட்டார்கள், அல்லது அதை நோக்கி நகர்கிறார்கள். யூகே லேபர் பார்ட்டியை 2010 ற்கு பின் இப்படிதான் அதி இடதுசாரிகள் கைப்பற்றி இருந்தார்கள், ஆனால் கோர்பினின் இரெண்டாவது தோல்வியோடு அவர்களிடம் இருந்து லேபர்பார்ட்டி மீட்கப்பட்டு நடுநிலைக்கு வந்து ஆட்சியையும் பிடித்தது. Lurching to the extremes தீவிர எல்லைகளுக்கு போதல் என்பது அரசியல் அமைப்புக்களுக்கு காலத்துக்கு காலம் நடப்பதுதான். இந்த பாராளுமன்ற தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம், வன் தேசியத்திடம் இருந்து ஈழத்தமிழ் தேசிய அரசியலை மீட்டெடுப்பதன் ஆரம்பமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். கஜனின் நெகிழ்வுபோக்கும் இதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ… அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது. மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள். அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்… ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம். இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ஏன் முடியாது? முரளிதரன் கட்டளை தளபதியாக இருந்து விட்டு….இப்போ நடந்ததுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நழுவ முடியும் எண்டால்…. கொடி பிடித்தவர்கள் அதை ஈசியாக விலத்தி நடக்கலாம். கூடவே என்போன்ற கொடிபிடிக்காதோரும் அந்த இடங்களில் நிண்டோம் அல்லாவா. ஆகவே அதில் ஈடுபட்ட அனைவரும் புலி ஆதரவாளர் அல்ல. புலிகளின் ஆதரவாளர் கூட போர் ஓய்வின் பின் நாம் வேறு பதாகையின் கீழ், சமஸ்டி நோக்கி போராடுகிறோம் என சொல்லி, நிலைப்பாட்டை மாற்றலாம். இது ஒன்றும் பெரிய விடயமல்ல. உலகில் பல இடங்களில் நடப்பதுதான். ஐ ஆர் ஏ செய்த அத்தனைக்கும் தமக்கும் சம்பந்தமே இல்லை என் சின்பெயின் கூறவில்லையா? அதுதான் எடுபடவில்லையா?
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
ஆனால் கருணாவுக்கு ஒரு போதும் எதையும் கொடுக்கவில்லை என்ற நிம்மதியில் எப்போதும் கண்மூடுவேன் 🤣. சாணாக்ஸ்தான் கிழக்கில் இருப்போரில் முதன்மையானவர். அது அவருக்கான இடம் அல்ல, அந்த மக்களுக்கான இடம்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இந்த மொக்குதனத்தை புலம்பெயர் அமைக்புகள் கைவிடுவதோடு, கஜேசையும் கைவிட வலியுறுத்த வேண்டும். இப்போ கூடாரம் காலியாகி அனுரா பக்கம் போவதை கண்டதும் புலம்பெயர் தமிழர்+கஜே தம் நிலைப்பாட்டில் இருந்து இறங்க தயாராகி விட்டனர் என நினைக்கிறேன்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உருவாகியது போலி துவாரகா -அவர் ரோவின் பொம்மை. ஆனால் புலித்தேவனும் நடேசனும் இப்போ இருந்திருந்தால் - சமஸ்டி நோக்கிய ஒரு அரசியலைதான் முந்தள்ளி இருப்பார்கள் என நினைக்கிறேன். இதுதான் மருந்து குடியுங்கள் என சொல்லத்தான் முடியும். இல்லை நாண்டு கொண்டு நிண்டு சாவோம் என்றால் தேனீரை ஆற முதல் குடிப்பதை தவிர வழியில்லை. இரு தரப்பும் bigger picture ஐ யோசித்து நெகிழ்வு போக்கை கடைபிடிக்க வேண்டும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
🤣 இரெண்டு புரட்சிகளின் போதும் எப்படி பட்ட ஒரு நாட்டை தாம் கட்டமைக்கப்போகிறோம் என அவர்கள் கூறியது இப்போதும் எழுத்தில் இருக்கிறது தேடி படியுங்கள். நிச்சயம் அவர்கள் ஒரு கியூபா, சோவியத் பாணியிலான அரசை அமைக்கவே போராடினார்கள். எமது நாடு கியூபா போல மாறி இருக்கும். அதுவும் கெடுதல் இல்லை - உலக தரமான இலவச மருத்துவம் உள்ள நாடு கியூபா. ஆனால் விஜேவீரவின் ஜேவிபி நாட்டை சிங்கப்பூர் போல ஒரு போதும் ஆக்கியிராது. இல்லை. புலிகளும், ஜேவிபியும் ஆபத்தை விளைவிக்க நினைக்கவில்லை. இலங்கையில் இருந்த நிலையை மாற்ற (வேறுபட்ட நிலைகளில்) முயன்றார்கள். அதாவது இலங்கையில் நிலவிய status quo வை மாற்ற விழைந்தனர்.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
ப்ரோ, தூசண துரைமுருகன் உங்களுக்கு அண்ணனுக்கும் வேண்டப்பட்டவராயிற்றே ஏன் திடீரென்று அவரை ஏசுகிறீர்கள்?
-
மாகாண சபை முறை நீக்கப்படாது: மூன்று வருடங்களின் பின்னரே புதிய அரசியலமைப்பு
எண்டால் 13 முழுமையாக காணி, பொலிஸ் அதிகாரத்துடன் அமல்படுத்த படுமா? ஏன் என்றால் அதுதான் தற்போதைய நிலை. எனக்கு டில்வின் மூலம் தமிழர்கள் என்ன நிலைப்பாடு என் நூல் விட்டு பார்க்கிறார்கள் போலத்தெரிகிறது.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
கூட இருக்கும் எல்லோரையும் மட்டம் தட்டி கொண்டே இருக்கும் குணம்தான் சுமந்திரனை இந்த நிலைக்கு இறக்கி விட்டுள்ளது. உண்மையில் மக்கள் இப்படி நிராகரித்தது அவருக்கு பலத்த பின்னடைவுதான். தோல்வியின் பின் அவர் தனியே இருந்து reflection செய்வாராயின், தன் குணவியல்பு அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை விளங்கி விலகி கொள்வார் என எதிர்பார்க்கிறேன். குறுக்குசால் ஓட்டாமல், ஜனநாயகத்தை மதித்து, மக்கள் தேர்ந்த இருவர் இணைந்து அரசியலை முன்னெடுக்க சுமந்திரன் வழி விட்டு விலக வேண்டும். அரசியல்சட்ட விவகாரம் என்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, திம்பு கோரிக்கை நேரம் இயக்கங்கள், அறிஞர் குழுக்களை அமைத்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை கண்டன. அதில் சிவா பசுபதி போன்றோர் உதவினர் என நினைக்கிறேன். சுமந்திரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் சட்டத்தை தனித்துறையாக எடுத்து படித்தவர்கள் எல்லாம் புலம்பெயர்தேசத்தில் இருக்கிறார்கள். தமிழ் நாடு, மலேசியா, சிங்கபூரிலும் உள்ளனர். ஆனால் எமக்கு இப்போ தேவை ஒரு நல்ல diplomat ஒரு நல்ல negotiator. இதை செய்பவர் கட்டாயம் எம்பியாக இருக்க வேண்டியதில்லை.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நான் உங்களையும் செய்யுங்கள் என சொல்லவில்லை அண்ணை. தேத்தண்ணி கடை வாங்கில் எனக்கு பக்கத்தில் இருந்து கதைக்கும் இன்னொரு ஆள்தான் நீங்களும், என்பது எனக்கும் தெரியும். 2009 க்கு முன்பே நான் இப்படித்தான். சொந்த வாழ்விலேயே உலக மகா சோம்பேறியான என்னை நீங்கள் இனத்துக்கு வழி காட்ட சொன்னால் - இது நடக்கிறகாரியமா? என்னால் முடியுமானது - எழுதுவது, ஒற்றுமையாக கூட்டம் போட்டால், போராடினால் அதில் ஒரு தலையாக போய் நிற்பது, தேவை என படின் என்னால் ஆன நிதியை கொடுப்பது. ஆனால் புலம்பெயர் தேசத்தில் பல வினைதிறனான செயல்வீரகள் இருக்கிறார்கள். 2009 உடன் அவர்கள் எல்லாரும் செத்து விடவில்லை. கள்ளர்களினதும், புலனாய்வு ஏஜெண்ட்களினதும், மொக்கர்களினதும் தலைமைதுவ கேடால் - அவர்கள் விலகி போய்விட்டார்கள். இப்படியான செயல்வீரர்களுக்குத்தான் நான் எழுதும் செய்தி. யாழில் எழுதும் என்னை, உங்களை போன்ற விசைப்பலகை வீரருக்கு அல்ல. நாம் அந்த வேலைக்கு சரிவரமாட்டோம் என்பது எனக்கு எப்பவோ தெரியும்🤣.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
🤣 நான் செய்வேன் என எங்கே எழுதினேன். நான் தேத்தண்ணி கடை வாங்கில் இருந்து கதைக்கும் மனிதன். ஆனால் புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்கள், நிற்பதாக காட்டி கொள்பவர்கள் இப்போ செய்வதை விட்டு விட்டு, நான் சொல்வதை செய்யலாம்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இரெண்டுமே காரணங்கள். மேலும் இரு காரணங்கள்: தன் அதி தீவிர அரசியல் இன நலனை பாதிப்பதை கஜன் காலம் தாழ்தியாவது உணர்ந்திருக்கலாம் (மாற்றம் எப்போதும் நல்லதே). தான் இயலுமைக்கு அப்பாலான, சுமக்க முடியாத ஒரு சுமையை வாண்டடாக தலையில் ஏற்றி கொண்டேன் என்பதை சிறி உணர்ந்திருக்கலாம். இதில் சுமந்திரன் இப்போதைக்கு தேவையில்லை என நினைக்கிறேன். அவரது personality அரசியலுக்கு சரிவராது. சாணாக்ஸ் உள்ளே வரவேண்டும்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
சந்தோசம். இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன். டில்வின் மா.சபை முறை கலைக்கப்படும் என கூறியதற்கு, சபையில் விளக்கம் கேட்ட சாணாக்ஸ். விளக்கம் ஏதும் கொடாமல், சிறிதரனுடன் சாணக்கியனும் அனுர வை சந்தித்து கேட்கலாம் என பதில் சொன்ன பிமால் ரத்நாயக்க.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதி, கண்டிய சிங்கள பகுதி, எஞ்சிய சிங்கள கரையோர பகுதி என இலங்கை மூன்று சம்ஸ்டிகளாக பிரிக்கப்பட வேண்டும், ஒரு கொன்பெடரேசன் ஆக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த பண்டாரநாயக்க, பின்னர் பெளத்த சிங்கள மேலாண்மைவாதத்தை ஏற்றதால் மன்னித்து ஏற்று கொள்ளப்பட்டு, தலைவரும் ஆகினார்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நீங்கள் மேலோட்டமாக தெரிவதை பிடித்து தொங்கி கொண்டிருந்தால் இதற்கு மேல் கதைக்க ஒண்டும் இல்லத்தான். புலிகள் 1/3 ஐ பிரிக்க போராடினார்கள். ஜேவிபி 3/3 ஐயுமே பிடித்து கம்யூனிச நாடாக்க போராடியது. ஆகவே ஆபத்து ஒன்றேதான். வித்தியாசம் - ஜேவிபி பெளத்த சிங்கள மேலாண்மையை ஏற்றதும் புலிகள் ஏற்காததும்தான். புலிகள் பெளத்த சிங்களவர்களாக இருந்து தனிநாடு கோரி இருந்தாலும் ஜேவிபி போல் மீள ஏற்று கொள்ளப்டிருப்பார்கள். நான் செய்யலாம், செய்யவேண்டியது என சொல்லுவது எதுவுமே நாம் இருக்கும் நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. ஏன் உருவாக்க முடியாது - நாம் இருக்கு நாடுகளில் இருந்து ஆரம்பிக்கலாம். மேற்கில் இலங்கையின் இந்த நட்புவட்டம் ரஜீவ் கொலை, 1994 இல் கதிர்காமர் வருகையோடுதான் கட்டி எழுப்பபட்டது. ஏன் நம்மால் மட்டும் முடியாது.
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
எங்கே, எந்த துறையில் கல்லா நிதி பட்டம் எடுத்தார் என தெரியவில்லை. அருஸ் இவர் புனைபெயர் என நினைக்கிறேன். போர்க் காலத்தில்….வேல்சில் இருந்து அரூஸ் என்ற பீடிகையோடு…. ஏதோ இரணமடு பண்டில் ஏறி நிண்டு பார்த்தவர் போல இக்பால் அத்தாஸ் முதல் கிழமை சண்டே டைம்சில் எழுதியதை + தன் கற்பனை சேர்த்து அள்ளி விட்ட வாய்வாளர் இவர்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அட ஏன் அங்கே எல்லாம் போகிறீர்கள்…பலர் யாழில் மானசீக தேர்தலில் சைக்கிளுக்கு போட்டு விட்டு, இப்போ அனுரவுக்கு அவகாசம் கொடுக்கலாம் என எழுதுகிறனர். ஆனால் இதுவரை அழிவை தரும் தேர்வுகளை (கோட்டா 2019 நியாபகம் இருக்கலாம்) தேடி, தேடி ஆதரித்த இவர்கள், இப்போ அனுரவை தேர்தலின் பின் ஆதரிப்பது, ஒரு வழியாக சைக்கிள் கோஸ்டி டைப், கிடைக்கவே முடியாத வன் தமிழ் தேசியத்தில் இருந்து இவர்கள் விடுபடுவதற்கான அறிகுறி என்றே நான் கருதுகிறேன். ஆனால் என்ன வன்-தமிழ் தேசியத்தில் இருந்து நேராக இண்டர் சிட்டியை பிடித்து பிக்கு காலில் போய் விழப்பார்கிறார்கள். இடையில் ரயில நிப்பாட்டி இவர்களை மென்- தமிழ் தேசிய பஸ்சில் ஏற்றலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது யாழ்களத்தில் மட்டும் அல்ல, வெளியிலும்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
உங்களை போல் சாதாரண கருத்தாளர் இல்லை சுமந்திரன். அவர் தன் மனைவியிடம் கூட ஒரு அரசியல் விடயத்தை பொதுவெளியில் வைத்து கூறினால் - அது எல்லோரு காதுக்கும் போகும். சுமந்திரன் பல பொதுவெளிகளில் இப்படியான பேய்கதைகளை கதைத்துள்ளமைக்கு போதிய ஆதராம் உள்ளது. யாழில் திரிகளே ஓடியுள்ளது. வேறொன்றும் இல்லை - சுமந்திரனுக்கு தான் ஒரு player, commentator அல்ல என்பது கடைசிவரை புரியவில்லை. கொமெண்டேட்டர் போல் வாயைவிட்டு தன் டீமுக்கு ஆப்பை செருகிகொண்டார்.