Everything posted by goshan_che
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வில் இன்னொரு படிமுறைக்கு போய் விட்டீர்கள்🤣🤣🤣. படு பயங்கர தம்பிகள் கூட இப்படி ஒரு முட்டு கொடுத்ததில்லை🤣. நடுநிலையாளராக காட்டி கொள்ளும் உங்களுக்கு இது புதிசு…கண்ணா….புதிசு. பிகு பொது வெளியில் மூக்கை தோண்டி, திரவியத்தை தூவக்கூடாது என்பது அடிப்படை சுகாதாரம். வேணும் எண்டால் அண்ணனுக்கு ஒரு டிரிம்மர் வாங்கி அனுப்பி விடுங்கள்.
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
சீமானின் இந்த கோரிக்கை மிக நியாயமானது. ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சர்ச்சைகுரிய சர்வதேச எல்லை உள்ள பகுதியில், சர்வதேச எல்லைக்கும், நாட்டின் உள்ளக கோட்டுக்கும் (inner line) இடையே செல்ல, மட்டுமே இதுவரை இந்த பெர்மிட் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவின் அரசியல்சட்டம் இந்தியருக்கு, இந்தியாவுள் பூரண நடமாடும் சுதந்திரத்தை (Freedom of movement) கொடுக்கிறது. இன்னர் லைன் பெர்மிட் என்பது அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச நில எல்லை சம்ப்னதமானது. மஹாராஸ்டிரா, கர்னாநடகா, டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட எந்த வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை. அதேபோல் கஸ்மீரின் இதை ஒத்த காணி வாங்கும் “விசேட அந்தஸ்தை” இந்திய பாராளுமன்று சில வருடங்கள் முன் இல்லாமல் ஆக்கியது. ஆகவே தமிழ்நாட்டில் இந்த இன்னர் லைன் பெர்மிட்டை கொண்டு வருவதில் பின்வரும் சிக்கல்கள் உண்டு. 1. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தமிழ் நாட்டை போன்ற சர்வதேச கடல் எல்லை மட்டும் உடைய நாடுகள் எதுவும் இதை கோராதவிடத்து, தமிழ் நாடு மட்டும் கோருவது, எது இங்கே இன்னர் லைன் என்ற கேள்வியையும், கூடவே இது நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தேவையற்ற கோரிக்கை என்பதையும் காட்டி நிற்கும். 2. அப்போ தமிழ் நாடு அரசு இப்படி கோருவது, தனியே வேற்று மாநிலத்தவரை தடுக்க என்றே கருதப் படும். அப்போது இதஈ எதிர்த்து வழக்கு போட்டால் - உச்ச நீதிமன்றம் இந்த பெர்மிட்டை தள்ளுபடியாக்கலாம். ஆனால் வழக்கு போடும் மட்டும் தமிழ்நாடு அரசு முயலாலாம். 3. உண்மையில் பாரிய பிரச்சனை தமிழ் நாட்டில் இருந்து வெளியே போய் வேலை செய்வோரின் நலன் பற்றியதே. ஏனைய மாநிலங்களும் இதையே செய்தால் டெல்லி, பம்பாய், பெங்களூர், ஹைதரபாத், இன்னும் பல வெளிமாநிலங்களில் நல்ல வேலைகளில் இருக்கும் தமிழ் நாட்டவருக்கு ஆப்பாக முடியும். ஆகவே இந்திய ஒருமைப்பாடு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இதை செய்வது சுலபம் அல்ல. ஆனால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் இது மிக சாத்தியாமாகும். உண்மையில் இந்த வட மாநில குடிவரவு விடயத்தை தமிழ் தேசிய அரசியல் பேசுவோர் இதயசுத்தியுடன் அணுகில், அவர்கள் தனித்தமிழ் நாடு கோரிக்கையைதான் கையில் எடுக்க வேண்டும், இந்திய ஒருமைப்பாடு எனும் மொக்காட்டுகுள் இருந்து கையை காட்டாமல். Edited November 2, 2023 by goshan_che
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
சைக்….மேடையில் மூக்கையே அந்த தோண்டு தோன்ற மனிசன்🤣
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
தேடுகிறேன். இதே போல் வட மாநிலத்தவர் பற்றிய திரி ஒன்றுதான்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
மன்னிக்க வேண்டும் இப்படி எழுதுவதற்கு. 4 நாளில் எவராலும் எந்த நாட்டை பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாது. குறிப்பாக மத்திய தரை கோட்டை அண்டிய 3ம் உலக நாடுகளுக்கு மேற்கில் இருந்து போனால், அதுவும் நீங்கள் நீண்ட காலத்தின் பின் போயுள்ளீர்கள் - அந்த சூழலுக்கு இசைவாக்கம் அடையவே 3 நாள் எடுக்கும். எனக்கெல்லாம் இந்தியா போனால் முதல் மூன்று நாள் “ஏன் இங்கே வந்தோம்” என இருக்கும். ஆனால் மூன்று கிழமை முடிந்து இலண்டன் திரும்பும் போது, போகத்தான் வேண்டுமா என இருக்கும். நீங்கள் 4 நாள் துயர நிகழ்சி, ஒரு மாசு நிறைந்த நகரத்தில் ஓடி திரிந்து விட்டு - வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை வைத்து ஒரு நாட்டின் நிலையை எடை போட முடியாது. அதே போல் ஒவ்வொரு மனிதருக்கும் டேஸ்ட் வேறுபடுவதும் உண்டு. உதாரணமாக நான் சொன்ன கொழும்பு புதுக்கடை தெருவோர கடைகளில் எனது வீட்டில் என்னை தவிர ஏனையோர் சாப்பிட மாட்டார்கள். அந்த சூழலையே பார்த்து முகம் சுழிப்பார்கள். அதே போல் ஒரு மண் கடையில் ரொட்டியும் பருப்பும் - பலர் இதில் என்ன இருக்கு என யோசிப்பார்கள். ஆனால் அதையே பலர் அசலான இலங்கை அனுபவம் என அனுபவிப்பார்கள். சுற்றுலாக்கள் எல்லாம் ஒன்றல்ல - 3ம் உலக நாடுகளில் உள்ள அனுபவம், வேறு சுவிஸ், நோர்வே அனுபவம் வேறு. சிலருக்கு இரெண்டும் பிடிக்கும். சிலருக்கு சுவிஸ்தான் பிடிக்கும். அவர்களை கொண்டு போய் இந்தியா இலங்கையில் அதுவும் 4 நாள் விட்டால் திணறித்தான் போவார்கள்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
நீங்கள் முன்னர் சொன்னதை நான் சரியாக விளங்கவில்லை. நீங்கள் டிஸெம்பார்கேசன் கார்டை ஏலவே ஒன்லைனில் பதிந்து விட்டு போயுள்ளீர்கள். ஈழப்பிரியன் அண்ணை போல. அப்படியானோருக்கு பிரச்சனை இராது என நினைக்கிறேன். நான் இந்த கார்ட்டையே மறந்து போனேன். அங்கே போனதும் கார்ட்டை பார்த்ததும்தான் நினைவு வந்தது. பேனா - எப்போதும் பயணத்தில் பேனா எடுத்து செல்வது அவசியம். குறிப்பாக 3ம் உலக நாடுகளுக்கு போகும் போது.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
உங்களுக்கு, முன்னர் விமான நிலையத்துள் படையினர் சோதனைகளை மேற்கொள்ளும் சமயம் (சென்னை விமானத்தில், போர்ட்டிங் பாஸ் எடுத்த பின் பொதி, உடல் சோதனை செய்வார்கள்) மொழி தெரியாத தமிழர்கள் இதே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது ஒன்றில் தெரியவில்லை அல்லது மறந்து விட்டீர்கள். அதேபோல் திரும்பி செல்லும் சமயம் அங்கே தமக்கு நிகழ்ந்த அலுப்புகள் பற்றியும் இங்கே பலர் எழுதியுள்ளனர். இராணுவத்தின் அளவை குறைக்க கேட்பதுதான் நாம் செய்ய வேண்டியது. மேலும் மேலும் இராணுவ மயப்படுத்துவதை அல்ல.
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
ம்ம்ம்…ஏதோ நான் சொன்னது போலவே சிருஸ்டிக்க பார்கிறீர்கள். இலங்கை முதல் 5 சுற்றுலா நாடுகளில் உள்ளது என்பது ஒரு நம்பகமான இணையதளத்தின் செய்தி. அது மட்டும் அல்ல, இணையத்தில் trip advisor போன்ற இடங்களில் போய் வாசித்தாலும் - அதில் எழுதுபவர்கள் கூட seasoned travelers. இந்த அளவு இல்லாவிடிலும் நானும் கணிசமான அளவு பிரயாணித்துள்ளேன். இத்தனை பேரும் பொய் சொல்கிறார்கள் நீங்கள்தான் உண்மை சொல்கிறீர்கள். Numbers don’t lie. இலங்கைக்கு போகும் வெளிநாட்டவரின் அளவே போதும் உண்மை எது என விளங்க. இங்கே முதலிலேயே சொல்லி உள்ளேன். நான் இலங்கையில் நிலமை எதிர்பார்த்ததை போல மோசம் இல்லை. என்றே எழுதினேன். அதை இலங்கை சொர்கபுரி என நான் சொல்லியதாக பலர் தாமாகவே கற்பனை செய்து கொண்டனர். அதை போலவே நீங்களும் டுபாய், சிங்கப்பூர் போல் இலங்கை மாறிவிட்டது என நினைத்துப்போனால் உங்கள் தப்பான விளக்கத்துக்கு நான் பொறுப்பில்லை. இலங்கை ஒரு 3ம் உலக நாடு - அது சுவிஸ் ஆகி விட்டது என நான் எங்கும் எழுதவில்லை. அப்படி விளங்கி இருந்தால் அது வாசிப்பவரின் பிழை. பிகு. உண்மையில் இலங்கையில் உங்களுக்கு அதிர்ச்சி வைத்திய தந்தவை எவை - என்பது பற்றி போட்டோ ஆதாரத்தோடு நீங்கள் எழுத போவதை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
🤣திரியினை அப்படி உயிர்பித்து…சந்தையில் அதை விற்கவா முடியும்🤣. நான் எனது திரியில் சிறிலங்கனில் பண வரத்து இல்லை என்பதால் - பராமரிப்பை சரிவர செய்வதில்லை எனவே அதில் போக வேண்டாம் என்றே எழுதினேன். இங்கே வியன்னாவில் மெடிக்கல் எமெர்ஜென்சியில் இறங்கிய விமானம், அதன் பின் தொழில்நுட்ப கோளாறுக்கு ஆளாகி, ஹீத்துரு மூடும் நேரத்தை தவற விட்டு, மறுநாள் வந்துள்ளது. இது எதை காட்டுகிறது? கொஞ்சம் விலகி போனாலே தாக்கு பிடிக்க முடியாதளவு “மட்டு மட்டாக” விமானத்தை ஒப்பேத்தி ஓட்டுகிறது சிறிலங்கன். இதைதான் என் கட்டுரை எச்சரித்தது. உங்கள் அதிர்சிக்கான காரணங்களை, நான் எழுதியது போல் படங்கள் சகிதம் ஒரு திரி திறந்து எழுதுங்கள் - ஆராய்வோம். பயப்படாதீர்கள், இன்னொருவரின் திரி நீள்கிறதே என நான் வயித்தில் குத்தி, கிணத்தில் விழ மாட்டேன்🤣. இங்கே பலரின் திரிகளை நீட்டுபவனே நான் தான்🤣.
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
கவலை வேண்டாம் ப்ரோஸ். பக்க விழைவு அரிதானது. Rare. சில வேளை ஊசி போட்டிருக்காவிட்டால், இப்ப நாங்கள் எவராவது ஒருவரை நினைவு திரியில்…நல்லவர்…வல்லவர் என எழுதிகொண்டிருப்பம். அதிகம் நியூரொபின் எடுத்தாலும் பக்க விழைவு வரும். எல்லா மருந்து பக்கெட்டிலும் எழுதி இருக்கும். நாமிருக்கும் நாடுகளில்தான் எத்தனை இறப்புகள் - இருப்பினும் யாழ்களத்தில் அத்தனை உறவுகளும் பத்திரமாக கொவிட்டை தாண்டி வந்துள்ளோம் எண்டால் அதன் மிக பெரிய காரணி, தக்க பாதுகாப்பை எடுத்தது + ஊசி போட்டது. #Just chill
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
இல்லை சார்….அங்கே இதே கொள்கையை முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது சார்….இப்போதைக்கு முயற்சிக்கும் வாய்ப்புகளும் இல்லை சார். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே சார்? முன்னர் இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் விபரமாக, வட கிழக்கு மாநிலங்கள் தவிர இந்தியாவில் வேறு எங்கும் யாரும் போய் வாழலாம். கிட்டதட்ட ஈயுவில் இருக்கும் freedom of movement போல், இந்தியாவில் மாநிலங்கள் இடையே உள்ளது. இந்த freedom of movement பெரும்பான்மை பிரித்தானியருக்கு (எனக்கல்ல) பிடிக்காத படியால் பிரிட்டன் பிரெக்சிற் கேட்டு வெளியே வந்தது. இப்போ இங்கே ஐரோப்பிய எழுந்த மானமாக வந்து குடியேற முடியாது. அதேபோல் இந்திய ஒன்றியத்தில் தமிழ் நாடு இருக்கும் வரை இதை தடுக்க முடியாது. ஆக, TN-exit தான் ஒரே வழி. எந்த தமிழ் நாட்டு அரசியல் கட்சி இதற்கு தயார்?
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
மெய்தான்… விஜயகாந்த்துக்கு இந்த நாட்டை ஆளும் ஆசை வந்தது தமிழராகிய எமக்கு அவமானம் என்று மேடையில் தொண்டை புடைக்க பேசியவர் கூட….அவர் இறந்ததும் அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு, பாட்டெல்லாம் படிச்சு சீன் போட்டார் எண்டால் பாருங்கோவன்😎.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
2009 க்கு பின், முன்னர் ஒரு காலம் இருந்தது - ஓமந்தைக்கு வடக்கே போக வெளிநாட்டுக்காரர் கொழும்பில் போய் ஆமி கிளியரன்ஸ் எடுக்க வேணும். பாவனையாளர் 100% புலம்பெயர் தமிழர்தான். அப்போ ஆங்கிலம்/ சிங்களம் தெரிந்தோருக்கும், தெரியாதோருக்கும் இடையில் கிடைத்த சேவை வேறுபாட்டுக்கும், இப்போதும் மொழி தெரியாதோர், மாபிள் பீச், புறாத்தீவு, காங்கேசந்துறை பீச் போனால் கிடைக்கும் அரச படையினரின் உபசரிப்பையும் மனதில் வைத்து சொல்கிறேன். வீசா டெஸ்கில் ஆமிக்காரனை இருத்தினால்….கோவிந்தா….கோவிந்தா தான். உண்மையில் விமான நிலைய பாதுகாப்பில் கூட விமானப்படையை நீக்கி விட்டு தனியார் துறையை ஈடுபடுத்த போவதாக அண்மையில் வாசித்தேன். யுத்தம் இல்லாத நாட்டில் இராணுவம் முகாமுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இராணுவ பிரசன்னத்தை சிவில் வாழ்க்கையில் குறைக்க கோரும் நாமே - மேலும் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து, அதை “வழமை” என ஆக்குவதை ஊக்குவிக்க கூடாது. காரணம் அட்டையை நிரப்பாமல் போய் வரிசையில் நிண்டால் - கவுண்டருக்கு போய் பாஸ்போர்ட்+ETA ஐ கட்டினால், அட்டை எங்கே என கேட்டு, மீள போய் நிரப்பி வாருங்கள் என கியூவில் பின்னுக்கு அனுப்புவார்கள். எனக்கு முன் நின்ற தம்பதிக்கு இந்த முறை இப்படி நடந்தது.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
ஓம். முன்னர் ஏனைய நாடுகளிலும் இருந்தது ஆனால் இப்போ வழக்கொழிந்து போய்விட்டது. கம்போடியாவில் 2017 இல் நிரப்பிய நியாபகம். அதுதான் ETA அப்ளிகேசனில் எல்லா தகவலும் கேட்கிறார்களே, மீண்டும் ஏன் இந்த கார்ட் என்பது தெரியவில்லை. Red tape தான். அதே போல் விமானம் இறங்க முன்னர் ஸ்பிரே அடிப்பதும் இலங்கையில் மட்டும்தான். ஏதோ ஒரு பழைய சட்டம் இதை கட்டாயம் ஆக்கியுள்ளதாம்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
மிகச் சரியான கூற்று அண்ணை. இப்பவும் அவர்களில் பலர். இந்தியா=இந்து= தமிழ் என்றே பார்க்கிறார்கள். உண்மையில் இப்போதும் விசா கொடுப்பதா இல்லையா என்ற முடிவை எடுப்பது இலங்கை இமிகிரேசன் அதிகாரிகள்தான். கவுண்டரில் இருந்து தரும் விண்ணப்பத்தை வாங்கி processing செய்வது மட்டுமே VFS. ஆனால் இதற்கே இந்த குறி குதிக்கிறார்கள். எனது கட்டுரையில் இனவாதம் எப்படி உள்ளது என கேட்ட கேள்விக்கு, அப்படியே உள்ளது, கொஞ்சம் உறங்கு நிலையில் உள்ளது என பதில் எழுதினேன். அதற்கான சாட்சி இதுதான்.
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடல் - இரண்டு வருட சிறைத்தண்டனை
🤣 இந்த குற்றம் மட்டும் அல்ல. இலங்கை தமிழர், யேசு, புத்தர் இம்மூவரும் எந்த குற்றமும் எப்போதும் செய்யாதவர்கள் என்பது பிரபஞ்ச உண்மை🤣
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
கோசானின் பயண கட்டுரையில் தாமிரா சொன்ன அட்வைஸை கேட்டிருந்தால் இந்த அவலம் வந்திராது🤣.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
எப்போதும் பஞ்சி பிடிச்ச கூட்டம் சிலது ஒன்லைனில் எடுக்காமல், அதே விசாவை on arrival எடுக்கும். ETS ஒன்லைனில் எடுத்தோர் நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போய், உங்கள் பாஸ்போர்ட், நிரப்பிய disembarkation card, ETS email ஐ காட்டினால் - பாஸ்போர்டில் ஸ்டாம் பண்ணி வெளியே விடுவார்கள். இதில் ஒன்லைனில் ETS எடுக்காமல் வருவோர் - இமிகிரேசன் கவுண்டர் போக முன், அதன் அருகில் இருக்கும் on arrival கவுண்டருக்கு போய் ETS ஐ எடுத்து கொண்டு பின் இமிகிரேசன் கவுண்டர் போக வேண்டும். இந்த on arrival counter இல் தான், VFS வந்த பின் தாமதம் ஏற்படுகிறது. நான் நினைக்கிறேன் முன்பு இந்த கவுண்டரில் இருப்பதும் இலங்கை இமிமிரேசன் அதிகாரிகள் என்பதால் அவர்கள் அந்த இடத்தில் வைத்தே ETS ஐ issue பண்ணினார்கள். இப்போ VFS பணியாளர் form ஐ எடுத்து போய் இலங்கை அதிகாரிகளிடம் கொடுத்து, அவர்கள் ETS ஐ issue பண்ணி, திரும்பி VFS இடம் கொடுத்து, அதை மீள பயணிகளிடம் கொடுக்க நேரம் எடுக்கிறது. ஒன்லைனில் எடுத்து போனால் இந்த கால தாமதத்தை தவிர்க்கலாம்.
-
வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
வள்ளலார் போற்றத்தக்கவர். போற்றப்பட வேண்டியவர். ஆனால் சர்வதேசமையத்தை அதே மாவட்டத்தில் வேறு இடத்தில் அரசு அமைக்கலாம். பிகு ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் ஆறுமுக நாவலர் vs வள்ளலார் பாரிய தத்துவார்த்த மோதலாக அமைந்துள்ளது. முற்போக்குவாதிகள் வள்ளலார் வழியிலும், பிற்போக்குவாதிகள் நாவலர் வழியிலும் நின்றுள்ளனர். ஆர்வம் இருப்போர் தேடிப்படிக்கவும்.
-
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .
இதற்கு ஒரே பரிகாரம் - இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து தனித்தமிழ் நாடு ஆக்குவதே… ப் பூ ஹா…ஹா.ஹா…🤣
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
செத்தும் கொடுக்கும் சீதக்காதி கேப்டன் விஜயக்காந்த்❤️. #தெலுங்கண்டா என யார் கூறினாலும் #தமிழண்டா ❤️ என செயலால் நிருபிக்கிறார். இறந்த பின்பும்.
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை