Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நேற்று வரை திமுகவை கடுமையாக விமர்சித்து, விஜைக்கு ஒரு சினிமாவை தாண்டிய மக்கள் ஆதரவு இருக்கிறது என சொல்லி கொண்டிருந்த மணி, இன்று “இவர் இல்லை மாற்று, இவர் மாற்று என்றால் தமிழ்நாடு தாங்காது என்கிறார்”. அது சரியும் கூட. மரணங்களை விட, அதை ஒட்டி நாதக, திமுக செய்யும் பொய் பிரச்சாரங்களை விட, விஜையின் அரசியலை ஆட்டம் காண வைத்தது. அவர் 2 நாட்களாக எஸ் ஆகியது. உங்கள் அறிவுரை/வேண்டுகோளுக்கு அடுத்த பதிவாக, அதற்கு கீழேயே புலவர் குருமூர்த்தியே மறுத்த பொய்செய்தியின் சுட்டியை இணைத்து விட்டு போயுள்ளார் 😂. எங்க வந்து யாருகிட்ட 😂
  2. கரூர் சம்பவம்.. செந்தில் பாலாஜி காரணம்.. கடிதம் எழுதிவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட விஜய் ரசிகர் Velmurugan PUpdated: Monday, September 29, 2025, 20:29 [IST] விழுப்புரம்: கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அதேநேரம் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை யாருமே எடுக்கவே கூடாது என்பதற்காகவே இந்த பதிவு. இது 1970களில் இருந்து இன்று வரை தொடர்கிறது. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி கமல், அடுத்ததாக விஜய், அஜித் வரை இருக்கிறது.இனி வரும் காலத்திலாவது இது மாறினால் சிறப்பாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள சூழலில் நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பின் மிகுதியில் செய்யும் விஷயங்கள் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. Also Read நடிகர் விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பார்த்தால் போதும், அவரது பேச்சை கேட்டால் போதும் என்று கூட்டம் கூட்டமாக தவெக நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்திற்கும் பல ஆயிரம் பேர் வந்தார்கள். காலை முதலே விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் தண்ணீர் கிடைக்காமலும், மூச்சுவிடக்கூட முடியாமலும் பரிதவித்து போனார்கள். Recommended For You விஜய் வந்துவிட்டு கிளம்பி செல்லும் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சிலர் மிதிப்பட்டும் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதேநேரம் அரசும் குறுகிய இடத்தில் தான் தங்களுக்கு இடம் தந்ததாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகிறார்கள் . மேலும் சதி என்றும் பரப்பி வருகிறார்கள். இதனை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை ஒருபோதும் எடுக்காதீர்கள்.. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) https://tamil.oneindia.com/news/villupuram/senthil-balaji-is-the-reason-behind-the-karur-incident-what-vijay-fan-did-after-writing-a-letter-739387.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards 👆என்னத்த சொல்ல🤦‍♂️
  3. “உசிரு போற நேரத்திலும் ஊத்த மாட்டான் பாலை, நீ காலை நீட்டி படுத்துகிட்டா எவ்ளோ பெரிய மாலை”… எஸ்பிபி பாடிய பாடல். அந்த எஸ்பிபிக்கே இருக்கும் போது வழக்கு போட்ட இசைஞானி செத்த பின் அண்ணாமலையில் தீபம் ஏற்றவில்லையா. விஜயகாந்த், உடல் நலம் குன்றிய பின்னும், எப்போதும் போதையில் இருக்கும் தெலுங்கன் அவருக்கெலாம் தமிழகத்தை ஆள ஆசை வருவது காலக்கொடுமை என மேடையில் அவமானப்படுத்திவிட்டு, செத்தவுடன் “வானத்தை போல மனம் படைத்த மன்னவனே” என பாடி கூலிக்கு மாரடித்தாரே இன்னொருவர். இதுதான் இவர்களின் இரெட்டை முகம். இவர்களையும் நல்லவர்கள் என நம்பி அலையும் ஒரு கூட்டம்.
  4. இப்படி நடக்ககூடும் என இதே திரியில், சம்பவம் நடந்து சில மணிகளுக்குள் எழுதியுள்ளேன். அப்படி நடந்தால் சீமானுக்கு வழமையாக கட்டும் டின்னில் ஒண்டை எடுத்து விஜைக்கு கட்டிவிட வேண்டியதுதான்😂. நீங்களும், புலவரும் என்னை மீளவும் 200 உபி என சொல்ல ஆரம்பிக்கலாம்.
  5. விஜைக்கு எதிராக வீரமணி, சுபவீ போராட்டம் என்ற நாதகவின் தம்பிகள் பரப்பிய செய்தி, வழமை போலவே கஞ்சா, கப்ஸா கதை என்பது நிரூபணமாகியுள்ளது. ஆளுனருக்கு எதிரான போராட்டத்தை மாற்றி அடித்துள்ளார்கள். பார்க்கவே பொய் என தெரியும் செய்தியை இணைத்தமைக்கு சிறி அண்ணா எந்த மன்னிப்பும் கேட்க மாட்டார் என்பதை நான் உத்தரவாதப்படுத்துகிறேன்😂. தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கி.வீரமணி தலைமையில் நடந்தது.பிகு இணைப்புக்கு நன்றி
  6. நிச்சயமாக நான் மேலே எழுதியதை வாசிக்கவில்லையா? விஜை ஒரு நெஞ்சுரம் இல்லாத கோழை - முதல்வராக ஆசைப்பட்ச்க்கூடாது என எழுதியுள்ளேன். நீங்கள் அதையே சென்னைபாசையில் எழுதி உள்ளீர்கள். ஆனால் நீங்கள் ஓக்கே, நான் டிபெண்டர் ஓடும் அணில்?😂 சீமான் கூட இதை விபத்து என்றே சொல்லி உள்ளார். விஜை மீது நேரடியாக கொலை பழி போடுவது, கேவலமான பிண அரசியல். கருணா ஆதரவாளர்களுக்கு இது கைவந்த கலைதான். இது போன கிழமை எடுத்த வீடியோ என நினைக்கிறேன்.
  7. நான் என்ன அவரின் பட்லரா ? ஆனால் தமிழர் ஒரு கலியாணத்தை கூட முகூர்த்த டைமுக்கு செய்ய, சொன்ன நேரத்தில் விருந்தினர் வர தவறும் ஆட்கள். இதுதான் தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே நேரம் தவறி முதல் கூட்டமா? சும்மா வெப்பில் எதை வேண்டுமானாலும் எழுத கூடாது. நேரம் பிந்துவதுதான் அங்கே அரசியல் கூட்டங்களில் மட்டும் எல்ல சகல பொது நிகழ்வுகளிலும் யதார்த்தம். இதை வைத்து கூட்டம் கூட்ட நேரம் பிந்தினார்…அடுத்த படி போய் கொலை செய்தார் என எழுதுவதெல்லாம் சீமான் தம்பிகளின் பழைய கறள். நிச்சயமாக யார் பக்கம் தவறு அதிகம் என்பது தீர ஆராயப்பட வேண்டும். அருணா கமிசன் விசாரிக்கிறது, பொலிஸ் எப் ஐ ஆர் போட்டுள்ளது. தவெக மதுரையில் உச்ச நீதிமன்றை அணுகி உள்ளது. இரு பகுதியும் தவறு என்பது வெள்ளிடமலை. யார் மேல் அதிகம் என வரும் தரவுகளை வைத்து நாம் முடிவு செய்யலாம்.
  8. என்ன தம்பி, போன முறை யாழுக்கு வந்த போது நான் திமுக சொம்பு என்று தேவாரம் பாடினீங்க? இப்ப அணில் என்றீங்க?😂 பிரபல வசனம் “என் கேரக்டரயே நீங்க புரிஞ்சுகொள்ளலேயே” தான் இங்கே உங்களுக்கும் இன்னும் சிலருக்கும் பொருந்தும். நான் ஒரு மனிதருக்கு ஆதரவு என்றால் - அது கோஷானுக்கு மட்டும்தான் மீதி எவரும் நிபந்தனை அற்ற ஆதரவுக்கு உரித்துடையவர் அல்ல. ஆனால் திராவிட கொள்கை, ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு, தமிழ் தேசியம் - இதில் ஒன்றையோ அல்லது பலதையோ யாரும் வரித்து கொண்டால் அவர்களுக்கு என் வரவேற்பு இருக்கும். அதே சமயம் இந்த கொள்கைகளை உள்ளிருந்து நீர்த்து போக செய்வோருக்கும் என் எதிர்ப்பு இருக்கும். தவிர நான் எப்போதும் தமிழக அரசியலில் என்னை நடுநிலையாளன் என சொல்லிகொண்டதே இல்லை. அப்போதைக்கு யார் தமிழகத்தில் சனாதனத்தை எதிர்க்க தோதான சக்தி என படுகிறதோ. அவர்களை நான் ஆதரிப்பேன். அது திமுக, அதிமுக, சீமான், விஜை, வேல்முருகன் யாராயினும். இதை புரிந்துகொள்ளமையால்தான் நீங்கள் என்னை உபி என ஒருநாளும், அணில் என மறுநாளும் அந்நியன் போல் மாறி மாறி பட்டம் சூட்டி கொள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது😂. இந்த திரியில் கூட புலவருக்கு பதிலாக எழுதியுள்ளேன். விஜை பாஜக கூட்டணிக்கு போவதாயின், அதற்கு திமுகவே ஆட்சியில் தொடரலாம் என. ஒரு தலைவர், ஒரு இயக்கம் என தனிமனித வணக்கத்துக்கு பழகிவிட்ட சிலருக்கு புரியாமல் இருப்பது கூட ஓக்கே. ஆனால் புலிகள், கருணா, பிள்ளையான், அமல், அனுரா என 80 களின் ஹீரோயின் பாட்டு கட்டத்தில் ஆடை மாற்றுவது போல் அரசியல் நிலைப்பாட்டில் அங்கிறுதட்டும் உங்களுக்குமா இது விளங்கவில்லை😂.
  9. இந்த பேனரும், இந்த செய்தியும் நாம் தமிழர் தம்பிகள் வீட்டில் தயாரித்த கப்ஸா என நினைக்கிறேன். திக வோ, வீரமணியோ, சுபவீ யோ இப்படி அறிக்கை விட்டதாகவோ, அல்லது பேனருடன் போராட்டம் நடத்தியதாகவோ நான் வாசிக்கவில்லை.
  10. இதெல்லாம் 15 வருடமாக முக்கியும் டிரோனில் காட்டும் அளவுக்கு கூட்டம் வரவில்லை என்ற வெப்பு 😂
  11. கரூரில் அரசியல் பலத்தை காட்ட விஜய் தாமதமாக வந்தார்.. எப்.ஐ.ஆரில் போலீசார் பரபரப்பு தகவல் Mani Singh SUpdated: Monday, September 29, 2025, 13:20 [IST] கரூர்: அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக விஜய் வேலுசாமிபுரம் வந்தார் என்று போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தவெக தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்த‌தால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை என எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Also Read "அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாம‌தம். மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர், மரக்கிளை முறிந்த‌தால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர் - அசாதாரண சூழல் * ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை * கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்த‌த்தால் மக்கள் உடல் நிலை சோர்வு. கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்" என்று எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் அறிக்கை போலீஸ் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பதாவது:- கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 கரூர் அவர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. கரூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளராகிய நான் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ புறக்காவல் நிலைய ருந்து 21.00 மணிக்கு கிடைக்கப்பட்ட மருத்துவமனை தகவலீ, அடிப்படையில் வழதிவு செய்த விபரம் பின்வருமாறு. தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்ட அவர்கள் அவரது கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் செயலாளர் திரு.மதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தின் (456/Pet/1/5DOP/KRR/2025 Dt. 26.09.25) அடிப்படையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 ம் தேதி கரூர் நகர உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் ந.க.எண்.278/கா.து.கா/கா.உ./கரூர்/2025 நாள்.26.09.25 செயல்முறை ஆணையின்படி 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இன்று 27.09.2025 ம் தேதி கனம் காவல் துறைத்தலைவர் மத்திய மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் ஊர்க்காவல்படையை சேர்ந்த சுமார் 500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். Recommended For You எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன் தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் திணறல் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகளிடமும் பொது செயலாளர் புஷி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் CTR நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் நானும் காவல் துணைக்கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன். நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் மடுபட்டதால், போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கியபோதும், தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர கையாளவில்லை. ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி தகர கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே விழுந்தனர். வேண்டும் என்றே லேட் ஆக வந்த விஜய் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. You May Also Like குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் அவர்கள் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியும் அந்த நீண்ட தாமரத்தின் காரணமாக இவை நேர்ந்தன.. என்று கூறபப்ட்டுள்ளது. https://tamil.oneindia.com/news/karur/vijay-came-late-to-show-off-his-political-strength-in-karur-shocking-information-in-police-fir-739261.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
  12. என்னது விஜை என் அபிமான நடிகரா…. ஆனாலும் என் மேல் இப்படி அவதூறு பரப்ப கூடாது. என் அபிமான நடிகன் என்றால் அது எப்போதும் நம்ம பரட்ட சார்தான். “ கு…கு..கூ…கூலி பவர் ஹவுசூ” இங்கே உங்களுக்கும் இன்னும் சிலருக்கும் அனைவருக்கும் எனையோரை பற்றி சில மட்டமான பார்வை இருக்கிறது. இவர் ஒரு நடிகரின் அரசியல் வரவை ஆதரிக்கிறார் ஆகவே இவர் ஒரு விசிலடிச்சான் குஞ்சு ஒரு நடிகர் எனவே அவர் மொக்கனாகதான் இருப்பார் இவை இரெண்டுமே உங்கள் போன்றோரின் மேட்டுகுடிவாதம். அரசியல் என்பது எந்த நிலையில் இருப்பவராலும் செய்ய முடியும் அவருக்கு அந்த தன்மை இருப்பின். முக முத்து அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் என்ன முக்கியும் முடியவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாத துறையில் இருந்து வந்த ஜெ அரசியலில் மிளிர்ந்தார். அதே போல் நல்லாட்சியை கொடுத்த ரீகனும், சுவாஸ்னேகரும் கூட நடிகர்கள்தான். என்னை பொறுத்தவரை நான் எவரையும் அவரின் தொழிலை பார்த்து எதிலும் ஒதுக்குவதில்லை. விஜை கொள்கைகள் என்ன, அவரின் அரசியல் எதை ஆதரிக்கிறது எதை எதிர்கிறது என ஆராய்ந்த போது அது எனக்கு ஏற்புடையதாக தெரிந்ததால் ஆதரித்தேன். இதையேதான் ஆரம்பத்தில் சீமான் களத்துக்கு வந்த போதும் செய்தேன். ஆதரவு அவரை இனம் கண்ட பின் எதிர்ப்பாக மாறியது. நாளைக்கு விஜை தடம்புரண்டாலும் இதுவே. எங்களுக்கு டவுட்.. இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு ஏன்? அத்தனை டாக்டர் எப்படி? தவெக வழக்கறிஞர் கேள்வி Rajkumar RUpdated: Monday, September 29, 2025, 14:16 [IST] மதுரை: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் இந்திய முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் இரவோடு இரவாக கரூர் வந்ததோடு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சம்பவம் உலுக்கியுள்ள நிலையில், மருத்துவமனையில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்குறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக கரூர் மற்றும் அதனைச் சுற்றி இருந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். Also Read இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? Recommended For You குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய்." என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/41-dead-in-karur-crowd-crush-at-vijay-s-campaign-tvk-lawyer-raised-questions-on-medical-procedures-739283.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  13. பவர் கட், ஆம்புலன்ஸ் படையெடுப்பு.. கரூர் சம்பவத்தில் பல சந்தேகங்கள்.. எடப்பாடி பழனிசாமி கேள்வி Pavithra ManiUpdated: Sunday, September 28, 2025, 9:28 [IST] கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், குடியரசுத் தலைவர்கள், பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதுகாப்பு குறைபாடு அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொதுக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. எங்களுக்கு ஊடகங்கள் மூலம் வந்த தகவலின்படி நெரிசல் ஏற்பட்டபோது அங்கு மின் நிறுத்தம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு தவெக 4 மாவட்டங்களில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அங்கு எல்லாம் மக்கள் கூட்டம் இருந்தது என்பதை ஆய்வு செய்து அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைக்காட்சியில் பார்க்கும்போதே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த அரசு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பு கொடுத்தோம். திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தவே நீதிமன்றம்செல்ல வேண்டியிருக்கிறது. விலை மதிக்க முடியாத அதிமுக கூட்டங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதில்லை. என்னுடைய கூட்டங்களுக்கும் இதே நிலை தான். உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை தடுத்திருக்கலாம், மனித உயிர் விலை மதிக்கத்தக்கது. அதனால் அரசியல் கட்சிகளும் மக்களின் உயிரின் மதிப்பை உணர்ந்து, கடந்த கால கூட்டங்களை ஆராய்ந்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்தக் கருத்தை பகிர்கிறேன். மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கூட்டம் வந்தால், எப்படி சமாளிப்பது என்ற அனுபவம் உள்ளது. அதை இவர்களும் கடைபிடிக்க வேண்டும். மெரினா கடற்கரை வான் சாகச நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத காரணத்தால் பலர் உயிரிழந்தனர். அதில் இருந்து அரசு பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது. சந்தேகம் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றிருக்க கூடாது. அரசு கடமையில் இருந்து தழுவியது தான் உயிரிழப்புக்கு காரணம். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் பல ஆம்புலன்ஸ்கள் வந்தன. இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறாமல் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்தது இதற்கு முன்பு நடைபெற்றதாக தெரியவில்லை. ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார். https://tamil.oneindia.com/news/karur/edappadi-palanisamy-raised-doubt-on-dmk-government-over-karur-stampede-738965.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards கரூர் விஜய் பரப்புரை: ஆம்புலன்ஸ் கூட போகாத இடத்தில் அனுமதி! ஆட்சியர், எஸ்பியை சஸ்பெண்ட் பண்ணுங்க.. அண்ணாமலை அட்டாக் Mani Singh SUpdated: Sunday, September 28, 2025, 19:01 [IST] கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டு உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் வருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:- கரூர் சம்பவத்தில் 40 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம். மருத்துவமனையில் இன்னும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது, இனியும் இப்படி நடக்கக் கூடாது - அண்ணாமலை மருத்துவ உதவி தேவைப்பட்டால் பாஜகவினர் செய்வார்கள். எதோ பல தவறுகள், சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை சரியாக கையாள்கின்றோமா என்று பார்த்தால் இல்லை.. எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம். அங்கு ஏன் போலீசார் அனுமதி கொடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அரசு தவறி வருகிறது.. 500 போலீசார் பாதுகாப்புக்கு வந்து இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அங்கு 100 பேர் கூட இல்லை. ஸ்பாட்டில் 100 போலீசார் கூட இல்லை. மாவட்ட ஆட்சியர், எஸ்பியை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பதவியில் இருந்து விலக வேண்டும். விஜய் தான் அக்யூஸ்டு நம்பர் ஒன் என்று நான் சொல்ல மாட்டேன். வீக் எண்ட் அரசியலில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும். கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://tamil.oneindia.com/news/karur/karur-vijay-rally-annamalai-demands-suspension-of-collector-sp-for-allowing-event-where-even-ambul-739095.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி பிரேமலதா, எடப்பாடி, அண்ணாமலை அனைவரும் உடைத்து பேசுகிறார்கள். விஜை மட்டும் சைலண்ட் மோடில்.
  14. தலைவர் அளவுக்கு எல்லாம் போகதேவையில்லை. முன்பே சொன்னதுதான். என்னை பொறுத்தவரை கருணாவும், சீமானும் ஒன்றே. கருணா சுழியன் என்பதால்தான், கூட இருந்த தளபதிகள் எல்லாம் மாவீரர் ஆகி விட, அவரால் இன்றுவரை சுகபோகமாக உயிர்வாழ முடிகிறது, என சொல்வோரும் உளர். அதேபோலத்தான் சீமானும். சீமான் விஜையை முந்த கூடும், முதல்வராக, ஏன் பிரதமராக கூட வரக்கூடும். ஆனால் தமிழினத்துக்கோ, தமிழ் தேசிய கொள்கைக்கோ அதனால் ஒரு குண்டுமணியளவு கூட நன்மை வராது. மாறாக மலையளவு தீமையும், துரோகமும் விளையும். கருணா, சீமான் தனிபட்டு வெல்லலாம் - அதனால் இனம் வெல்லும் என இவர்களை ஆதரிப்பது மடமை. மொசபிடிக்கும் நாயை மூஞ்சிய பார்த்தா தெரியும். கருத்து
  15. இந்த குழந்தைகளை தூக்கி கொண்டு வந்ததை குறை சொல்லுவதை என்னால் ஏற்க முடியாமல் உள்ளது. சிலவேளை புலம் பெயர்ந்தமையால் நமக்கு தெற்காசியாவின் பழக்க வழக்கம் மறந்து விட்டிருக்க கூடும். அங்கே கணவனும் மனைவியும் தன்னெழுச்சியாக எங்கேயும் போனால் பிள்ளைகளையும் கூட்டிச்செல்வதே வழமை. தனியே ஆண்கள் மட்டும் போக இது திமுக/அதிமுக பிரியாணி+குவாட்டர் கூட்டம் அல்ல. விஜையை பார்க்க போனார்களோ, அரசியல் உரையை கேட்க போனார்களோ, இதில் பலர் இதற்கு ஒரு திருவிழா போலவே போனார்கள். போன வாரம் உச்ச நீதிமன்றும் சொல்லி, விஜை கூட பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம் என சொல்லி இருந்தார். ஆனால் - நீதிபதி, ஸ்டாலின், விஜை அனைவருக்கும் தெரியும் என்ன சொன்னாலும் வருவார்கள். அப்போ தக்க ஏற்பாட்டை அரசும், தவெகவும் செய்திருக்க வேண்டும். அப்போ விஜை வெளியே போகாமல் இருக்கவா முடியும்? அப்படி இருந்தால் வேர்கிங் புரொம் ஹோம் அரசியல்வாதி என்பார்கள். ஆகவே தகுந்த இடத்தை கொடுக்க வேண்டியது காவல்துறையின் பணி. உனக்கு அதிக கூட்டம் வருகிறது நீ அரசியல் பரப்புரை செய்யாதே என்பது பிழையான வாதம். அதேபோல் பெண்களுக்கும் ஒரு வோட்டு, ஆண்களுக்கும் ஒரு வோட்டு எனும் போது பெண்களை மட்டும் எப்படி வர வேண்டாம் என்பது. அது உரிமை மீறல் இல்லையா? நெரிசலில் ஆண்கள் இறக்கவே இல்லையா? அல்லது ஆண்கள் இறந்தால் பரவாயில்லையா? ஒரு ஜனநாயக நாட்டில் - என்ன காரணத்துக்காவேனும் - மக்கள் அரசியலில் ஆர்வம் காட்டினால் - அதை ஊக்குவிக்கவேண்டுமே தவிர, கூட்டம் அதிகமாகிவிடும் நீ வராதே என்பது - சரியான வாதம் இல்லை. ஒரு அரசின் முதலாவது கடமை தன் மக்களின் உயிர் பாதுகாப்பு. விஜைக்கு இரு வாரங்களில் 5 மாவடங்களில் கூடிய கூட்டத்தை பார்த்த பின்னும், ஏன் ஒரு 100 அடி வீதியை கொடுத்து, அதற்குள் விஜையின் 60 அடி வாகனம் போயே தீரவேண்டும் என அடம் பிடித்தார்கள்? ஒரு அடிப்படை risk assessment செய்யிருந்தாலே இந்த இடம் பொருத்தமில்லை என தெரிந்திருக்கும். விஜை கேட்ட விஸ்தாரமான, ஸ்டாலின் அண்மையில் பேசிய இடத்தை மறுத்து இதை கொடுத்த அரசுதான் இதில் முதல் குற்றவாளி. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம், திமுக ஒரு சின்ன அசம்பாவிதத்தை எதிர்பார்த்து செய்ய அது கைமீறி போய்விட்டது என ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால்… அப்படி இல்லை எனிலும், இது ஒரு விபத்தே ஆயினும், இதற்கு பாரிய பொறுப்பு அரசிடமே. விஜை மீது தப்பில்லை என்பதல்ல. ஆனால் எந்த அரசியல்வாதியும் தனக்கு கூடும் கூட்டத்தை வேண்டாம் என்பார்களா? உதயநிதிக்கோ, சீமானுக்கோ இப்படி கூட்டம் கூடினால், இல்லை வேண்டாம் என மறுப்பார்களா? அதேபோல் விஜை லைட்டை போட்டார், ஷட்டரை மூடினார் என்பதெல்லாம் அபத்தமான கதைகளாவே தெரிகிறது. இதையேதான் அவர் முன்னைய கூட்டங்களிலும் செய்தார். அப்போ விஜை என்ன பொம்மை போல வந்து, பொம்மை போல போக வேண்டுமா? ஏனைய அரசியல்வாதிகள் போலத்தான் அவரும் தன்னை காண வந்தோரிடம் interact பண்ணினார். உண்மை இரெண்டு தான் ஏனையோர் கனவு கூட காண முடியாத கூட்டம் விஜைக்கு கூடியது. அதனால், ஸ்டாலின், உதய், எடப்பாடி போன்றோருக்கு கூடும் கூட்டத்தை கட்டுபடுத்த எடுக்கும் நடவடிக்கையை, ஏற்பாட்டை விட பலமடங்கு விஜை கூட்டத்துக்கு தேவை பட்டது. அதை அரசு செய்யவில்லை. இதில் விஜையில் மட்டுமே 100% பிழை என கூறக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அது நடந்த கோரத்தின் பின்னான அவரின் நடத்தை. அவரின் மனநிலை கடுமையாக பாதிக்கபட்டே விட்டது என்றால் - அதில் விமர்சிக்க ஏதும் இல்லை, ஆனால் இப்படியான மனநிலையோடு முதல்வராக ஆசைபடக்கூடாது.
  16. இதை நான் அடியோடு எதிர்கிறேன். பாஜகவுடன் கூட்டணி போவதற்கு விஜை கடையை மூடி விட்டு மீண்டும் நடிக்க அல்லது ஓய்வெடுக்க போகலாம். அப்படி செய்வாராயின், சீமானை போல பண நலனுக்கு இல்லை எனிலும், சுய நலனுக்கு நேரத்துக்கு ஒரு நிறம் மாறும் பச்சோந்திதான் விஜை என்பது ஐயம் திரிபற நிருபணம் ஆகும். தமிழ் நாட்டின் இப்போதைய மிக பெரும் ஆபத்து, திமுகவோ, அதிமுகவோ, ஊழலோ அல்ல - மிக பெரும் ஆபத்து, அதிமுக கூட்டணி மூலம் பாஜக ஆட்சியில் பங்கெடுத்து, அதிமுகவை விழுங்கி (சிவசேனாவுக்கு செய்தது போல்), தமிழ் நாட்டில் திமுகவுக்கு அடுத்த சக்தி என வருவதே. இதற்குத்தான் விஜை துணை போவார் எனில் மூட்டை கொடோனிலேயே இருந்திருக்கலாம். பாஜகவுடன் இதுவரை திமுக, அதிமுக கூட்டணி வைத்தாலும், தமிழ் நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். அதேபோல் வாய்பாயின் பிஜேபி அல்ல அமித் ஷாவின் பிஜேபி. இந்த ஆபத்து உணர்ந்தே, தலைக்கு மேல் சொத்து குவிப்பு கத்தி தொங்கிய போதும், ஜெ கூட்டணியை மறுத்தார். பிஜேபி இருக்கும் கூட்டணி வென்று ஆட்சி அமைப்பதற்கு, எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் திமுக ஆட்சியே தொடரலாம். குறிப்பு இப்படி எழுதியமைக்காக நீங்கள் என்னை திமுக சொம்பு 200 ரூபாய் உபி என இப்போ திட்ட தொடங்க வேண்டும்.
  17. விற்பனைக்கு தயார் என்றால் எங்கேயும் போகலாம். மஹராஸ்டிரத்தில் பிஜேபி வேட்பாளருக்கு சீமான் வாக்கு சேகரிக்கவில்லையா? பின் ஜெ யை ஆதரிக்கவில்லையா? பிஜேபி, அதிமுகவிடம் ஒரு நல்ல விலைக்கு போனவர் திமுகவிடமும் போவார்தானே? பிகு ஆனால் ரோ சீமானை கையில் எடுத்ததும், முத்துகுமார் கொலையும் அரசியலுக்கு அப்பாலான விடயங்கள். இது இந்திய தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு சம்பந்தபட்டது. தமிழரசன், முத்துகுமார் போன்றோர் முன்னெடுத்த, இந்தியாவில் இருந்து பிரிந்து போகும்-தமிழ் தேசிய அரசியலில் இருந்து, நாதகவை பின்வாங்க செய்து, ஒன்றிய இந்தியாவுக்குள் தமிழ் தேசியம் பேசும் சீமானின் பம்மாத்து அரசியலுக்குள் கட்சியை முடக்கியது சம்பந்தமானது. இதில் முத்துகுமார் போல் கொலையாகாமல் தப்பிக்க சீமான் கொடுத்த விலை. ஒன்று முத்து குமாரின் உயிர். மற்றையது பிரிவினைவாத தமிழ் தேசிய கொள்கை.
  18. சுப முத்துகுமார் என்பதை மாறி எழுதிவிட்டேன். இந்த சருவசட்டியையா பெரிசா தூக்கி கொண்டு வாறியள் (கருத்து பஞ்சம்?)
  19. அதுவும் அந்த மாலை நேரத்தில் கைலியிலோ, டிரவுசருடனோ வரவில்லை, இருவரும் ரொம்ப நேர்தியாக வேட்டி சட்டையில் வந்தார்களாம். 40 பேர் இறக்க வேண்டும் என் அல்லாமல் ஒரு சின்ன தள்ளுமுள்ளு, சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதி என பிளான் பண்ணி அதுவே கை மீறி போய் இருக்க கூடும். உளவுத்துறை தோல்வி.. கரூர் துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு.. பொன்வில்சன் சரமாரி விமர்சனம் Vignesh SelvarajPublished: Sunday, September 28, 2025, 22:36 [IST] சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிர்பலிகளுக்கு காரணம் அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதது. இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கரூரில் நடந்த இந்த துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு என்றும், காவல்துறை பாதுகாப்பு குறைபாடே இதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். பொன் வில்சன் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கூட்டத்தில் இப்படி ஒரு இழப்பு எந்தக் காலத்திலும் ஏற்பட்டதில்லை. பச்சிளம் குழந்தைகள் 10 பேர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யார் மீது குறை என்பது இப்போதைக்கு தெரியாது. அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு விஷயங்களும் இதில் இருக்கிறது. இதில் எல்லா வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும். ஆளுங்கட்சி தரப்பில் தான் அதிகபட்ச தவறுகள் இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. தவெகவை பொறுத்தவரை புதிய கட்சி, அங்கு கட்டுப்பாடற்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த கட்சி. காவல்துறை அனுபவம் மிக்கது. உளவுத்துறை கையில் இருக்கிறது. இதையெல்லாம் கையில் வைத்திருக்கிறீர்கள். ஏற்கனவே, திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூரில் தவெக நடத்திய கூட்டத்தை பார்த்துவிட்டோம். அந்தக் கூட்டம் எவ்வளவு கட்டுப்பாடின்றி இருக்கிறது, எவ்வளவு கூட்டம் வருகிறது? எந்த வயது வரம்பில் அதிகமானோர் வருகிறார்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு பேர் வருகின்றனர், அடிப்படை தேவைகள் இருந்ததா என்பதகெல்லாம் உளவுத்துறை தகவல் இருக்கும் இல்லையா? அந்த அனுபவத்தை வைத்துத்தானே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எவ்வளவு கூட்டம் வரும் என்று கணிக்க வேண்டும்.. அனுமதி கொடுக்கும் இடத்தில் பாதுகாப்பை சரிவர தர வேண்டும். உங்கள் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/ponwilson-calls-for-probe-into-multiple-angles-behind-karur-stampede-during-vijay-campaign-739131.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
  20. விஜை வாகனம் அந்த வீதியை விட கொஞ்சம் அப்பால் நிற்க முயல - இல்லை வீதிக்குள்தான் போக வேண்டும் என நிர்பந்திக்கபட்டதாம். உள்ளே வந்ததும் கரண் கட் ஆகி விட்டதாம். 8 நிமிடத்தில் செந்தில் பாலாஜியும்… 15 நிமிடத்தில் அன்பில் மகேசும் ஸ்பாட்டுக்கு வந்தார்களாம்…. #மங்காத்தா?
  21. புரிகிறது. விஜையை யானைவிளாம்பழம் கொண்டது போல, கோது இருக்க சுளை தின்ன விளைகிறார். தம்பிகள் இதுதாண்டா அண்ணன் என பயர் விடுவதன் காரணமும் இதுவே. இதை நான் எழுதலாம் என நினைத்தேன். ஆனால் சீமானின் மீது வக்ரத்தை கக்குகிறார் என்பார்கள் என்பதால் தவிர்த்தேன். சீமான் சின்ன கருணாநிதி என முன்பே எழுதியுள்ளேன் - அவர் நரி என்பதில் எனக்கு எள்ளளவும் எப்போதும் சந்தேகமில்லை. ஆனால் தலைவரை போல் தன் புத்தியை இனத்தின் பொது நலனுக்கு பாவிக்கும் நல்ல புலி இல்லை. அதை தன் கல்லாவை நிரப்ப, முடிந்தால் பதவியை அடைய என சுயநலனுக்கு மட்டுமே பாவிக்கும், கருணாநிதி போன்ற குள்ள நரி - சீமான்.
  22. 39 பேர் உயிரிழப்பு எதேச்சையான விபத்து இல்லை.. திட்டமிட்ட சதி - நீதிபதியிடம் தவெக மனு Pavithra ManiUpdated: Sunday, September 28, 2025, 12:56 [IST] சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை என்கிற புகாரை திமுக முன் வைத்து வருகிறது. சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்து முறையிட்டனர். திட்டமிட்ட சதி என்று நீதிபதியிடம் தவெக மனு அளித்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் விசாரணைக்கு வரவுள்ளது. விஜய் மீது புகார் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், பல மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள், விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யவில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. தவெக சார்பில் அனுமதி கேட்ட இடம் ஒன்று, அவர்கள் அனுமதி கொடுத்த இடம் ஒன்று அந்தக் கட்சியினர் கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்துள்ளனர். மறுபக்கம் தவெகவினர் காவல்துறையினர் விதிகளை மீறியது, விஜய் தாமதமாக வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று திமுக குற்றம் சாட்டி வருகிறது. தவெக ஆலோசனை இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த அறிவழகன், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தவெக என்றும் துணை நிற்கும். விஜய் மிகப்பெரிய துன்பத்தில் இருக்கிறார். காவல்துறை விதித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை. விஜய்யின் அடுத்தக்கட்ட பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை முடிவு செய்யப்படும்." என்று கூறியிருந்தார். நீதிமன்றத்தில் விசாரணை இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அவரின் இல்லத்தில் சந்தித்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிசிடிவி கேமராக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைக்க முடிவு செய்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று கூறி நீதிபதியிடம் மனு அளித்துள்ளனர். சற்று முன்பு தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார், வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் நீதிபதி தண்டபாணியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், எங்கள் தரப்பு தகவல்களை சொல்லியுள்ளோம். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் 2.15 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதைப்பற்றி வேறு எதுவும் கூற முடியாது. நீதிமன்றம் உத்தரவைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகிய 2 நபர்கள் கொண்ட அமர்வில் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. https://tamil.oneindia.com/news/madurai/karur-stampede-high-court-to-investigate-case-on-tomorrow-739033.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards டிஸ்கி இந்த லைனை நேற்றே எடுத்திருக்க வேண்டும். தாமதிக்கும் நீதி மட்டும் அல்ல, தாமதிக்கும் தற்காப்பும் பலன் குன்றியதே. ஆளுனர் எடுத்து கொடுத்த அடியில் த வெ க பயணிக்கிறதா? இதைவைத்து அதிமுக+பிஜேபி கூட்டணிக்கு விஜையை நெருக்கி தள்ளுவார்கள் போல உள்ளது. தமிழ் நாட்டில் திமுக, அதிமுக, பிஜேபி மூவரையும் எதிர்த்து அரசியல் என ஆரம்பித்தால்… ஒன்றில் சுப உதயகுமார் போல சாக வேண்டும். அல்லது சீமான் போல விலைபோக வேண்டும் என்பதுதான் விதி போலும்.
  23. ஒரு மருத்துவர் இவ்வளவு தத்தியாக இருப்பது கவலையான விடயம். தன்னெழுச்சியாக மக்கள் கூடுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை கூறு. மிக சுலபமாக இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் என அவமானப்படுத்தி கடந்து போகிறார். விஜை முன்பு தமிழ் நாட்டில் சூட்டிங் போகவில்லையா? போராடங்களில்… விழாக்களில் கலந்து கொள்ளவில்லையா? அப்போ வராத கூட்டம் இப்போ வர என்ன காரணம்? இது ஒரு அரசியல் திருப்புமுனை (இனியும் இப்படி இருக்கும் என சொல்ல முடியாது). அரசியல் கட்சி ஒன்றுக்காக மக்கள் கூடுவது ஜனநாயகத்தின் அடிப்படை கூறு. Freedom of assembly. அதை சரிவர, பாதுகாப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது அரசினதும், ஏற்பாட்டாளரதும் கடமை. இங்கே கடமை தவறியது அரசும், தவெகவுமே தவிர மக்கள் அல்ல.
  24. கிசு கிசு வோ…பிசு…பிசு வோ… ஜூனியர் விகடன் புதுரூட்டில் நாதக - சீமான் சபரீசன் சந்திப்பு என தலைபிட்டு மிஸ்டர் கழுகு கட்டுரை வரைந்துள்ளது. ஆகவே சீமான் பக்கம் உண்மை இருந்தால் அவர் உடனடியாக வழக்கு போட்டிருக்க வேண்டும். யாழ் உட்பட அனைத்து ஊடகமும் ஏதோ ஒரு அஜெண்டாவில் இயங்குவனதான். நான் எங்கும் ஜூவி நடுநிலை ஊடகம் என சொல்லவில்லை. ஆனால் சீமானுக்கு ஆதரவான பலதை, பல ஆண்டுகளாகவே விகடன் வெளியிடுவது உண்மை. ஆகவே அவர்கள் இப்படி பொய்யாக எழுத நியாயமில்லை. இந்த செய்தி பொய் எனில் அது சீமானை போலவே திமுக, சபரீசனுக்கும் அவதூறுதான். ஆகவே நீங்கள் வழமையாக பாடும் விகடன்- திமுக கொத்தடிமை என்ற கோரஸும் இங்கே எடுபடாது. சபரீசன் கூட கமுக்கமாக இருப்பது - இருவருக்கும் ஜூவி செய்தியை சவாலுக்கு உட்படுத்த திராணி இல்லை என்றே காட்டுகிறது. இன்னுமொரு விடயம் - பத்திரிகைகள் சில சமயம் தமது செய்தி மூலத்தை பாதுகாக்க ஆதாரத்தை வெளியிடாது. ஆனால் வழக்கு போட்டால் ஆதாரத்தை தகுந்த பாதுகாப்போடு கோர்ட்டில் சமர்பிப்பார்கள். இது சீமானுக்கும், சபரிக்கும் தெரியும். ஆகவேதான் கள்ள மெளனம். விஜையை விட ஆளுனர் அழகாக அரசியல் செய்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.