Everything posted by goshan_che
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
அட போங்க தோழர். ராமஜெயத்தை கொல்ல சொன்னதே ஜெ என்கிறார்கள் சிலர். எம் ஜி ஆர், கருணாநிதி இடையே (இப்போ ஸ்டாலின்+சீமான் போல) மறைமுக உறவு இருந்திருக்க வாய்புள்ளது. ஜெ யிடம் வாய்ப்பே இல்லை. அவர் மனதார கருணாநிதி, குடும்பம், கட்சியை வெறுத்தார்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நீங்கள் உண்மையில் தலைவர் சொன்ன தமிழ் தேசியத்தை பின் பற்றின், ஒரு பெண்ணின் மானத்தை ஈடு வைத்து அரசியல் ஆதாயம் அடைய முயலமாட்டீர்கள் தோழர். நீங்கள் சீமானியத்தின் ஆதரவாளன். அம்புலி மாமா இல்லைத்தானே?
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
எப்படி? உங்களை தாரா விடயத்தை மறுக்க நிர்பந்தித்தது போலவா தோழர்😂. ஏன் தோழர்? கே என் நேருவின் தம்பி இராமஜெயம் கொலை வழக்கு முடிவு என்ன தோழர்?
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நாளைக்கு நீங்கள் என்னதான் இல்லை இல்லை என மறுத்தாலும், நயந்தாரா விடயம் உண்மைதான், தோழரை மிரட்டி பொய் சொல்ல வைத்துள்ளார்கள் என எழுதுவது போல் இருக்கிறது உங்கள் வாதம் 😂. முன்பே சொன்னது போல் கருணாநிதி மனைவி விடயம் ஒரு பைத்தியகாரத்தனமான கற்பனை. செய்திவாசிப்பவர் ஜெ க்கு மிக நெருக்கமானவர். கட்சியில் முன்னிலையில் இருந்தவர். இப்படி ஒரு விடயம் உண்மை எனில், அதை ஜெயிடம் முறையிட்டிருந்தால் - இதை வாய்ப்பாக பயன்படுத்தி ஸ்டாலினை ஆயுசுக்கும் களி தின்ன வைத்திருப்பார். கருணாநிதியையே கதற கதற இழுத்து ஜெயிலில் போட்டவர் இப்படி ஒரு வாய்ப்பை விடுவாரா? ஆகவே மிரட்டல் என்பது உங்கள் உருட்டல். சம்பந்த பட்ட பெண்ணே இல்லை என சொன்னபின், மிரட்டி இருப்பார்கள், உருட்டி இருப்பார்கள் என நீங்கள் சொல்ல ஒரே ஒரு காரணம்தான். உங்கள் அரசியல்…. ஒரு பெண்ணின் மானம் போனாலும் பரவாயில்லை நா த க விற்கு அதனால் அரசியல் ஆதாயம் வந்தால் போதும் என்பதே உங்கள் எண்ணம். அதனால்தான் ஜெ மீது திமுக சொத்து குவிப்பு வழக்கு போட்டு அவரை உள்ளே தள்ளினார்களா? அப்படியே ஆனாலும், அரசியல் காரணங்களுகாக அதையே மீள, மீள கிளறும் உங்களை போன்றோர் எவ்வளவு சாடிஸ்ட்? அப்போ அவர் மன நிம்மதியை குலைத்தாவது நீங்கள் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும்? நீங்கள் நினைப்பது போல் அவர் அப்படி பயந்து ஒதுங்கியதாக தெரியவில்லை. அவர் கணவரும் புரிந்துணர்வு உள்ளவராகவே தெரிகிறார். நீங்கள் அதிகம் 80களின் தமிழ் படங்கள் பார்த்த பாதிப்பில் உள்ளீர்கள் என படுகிறது😂.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நான் மேலே சீமான் விடயத்தில் காட்டியது போல, அவர்கள் மிரட்டப்பட்டனர் என்பதற்கு சந்தர்ப்ப சாட்சியம் தன்னும் இருந்தால் - யோசிக்கலாம். ஆனால் ஜெ ஆட்சியில் - அதிமுக உறுபினராக இருந்தும் அந்த பெண் இதை வன்மையாக மறுத்தார். ஆகவே அதிகாரத்துக்கு பயந்திருக்க முடியாது. கருணாநிதி மனைவி விடயம் - அதில் மிரட்டவோ, கடத்தவோ எதுவும் இல்லை. ஓரளவு உருவ ஒற்றுமையை வைத்து புனையப்பட்ட கற்பனை அது என்பதை ஆதாரங்கள், வாழும் சாட்சிகளே சொல்லிறார்கள்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சீமானை நீங்கள் மட்டும் அல்ல, சீமானே ராமர் என ஒத்துகொள்ளவில்லை 😂. விஜி அண்ணியை விலைமாது என்றார். நான் அறிய இராமர் விலைமாதுவோடு உறவு வைக்கவில்லை. சரி அது சீமான் அனுமாராகவே இருக்கட்டும். நான் எங்கேயும் ஸ்டாலினோ, உதய்யோ இல்லை இவர்கள் வேறு எவரோ இராமர் என கூறினேனா? இல்லையே. நான் எழுதியதெல்லாம் இரு பெண்களின் கண்ணியம் குறித்தே ஒழிய, எந்த அரசியல்வாதியின் நற்பெயர் குறித்தும் அல்ல. மேலே சொன்ன கருணாநிதி மனைவி, செய்திவாசிப்பாளர் இந்த இரெண்டும் பொய் என்பது மட்டுமே நான் சொன்னது. காரணம் சம்பந்த பட்ட பெண்களே இவை பொய் என கூறியுள்ளதால்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நீங்கள் இங்கேதான் வருவீர்கள் என்பதை முன்பே அனுமானித்தேன். பதிலும் அப்போதே தயார்😂 சீமானிற்கு முத்துகுமார் கொலையில் பங்கு உண்டு என்பது, சந்தர்ப்ப சாட்சிய அடிப்படையில் நான் வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு சந்தேகத்துக்கு அப்பாலான ஆதாரம் தேவையில்லை. தேவைபடுவது ஒரு நியாயமான நீதி விசாரணை. ஆனால் கருணாநிதி மனைவி, ஸ்டாலின்- செய்திவாசிப்பவர் விடயங்கள் அப்படி அல்ல. சம்பந்த பட்ட பெண்களே மறுத்துரைத்த பொய்கள் அவை. இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இதை கிரகிக்க உங்களால் முடியாது போனாலும், வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். நான் ஏன் இந்த இரெண்டை பற்றி மட்டும் எழுதினேன், உங்களின் கிசுகிசு லிஸ்டில் இருந்த ஏனையவற்றை மறுக்கவில்லை என்ற உங்கள் கேள்விக்கும் நான் மேலே சொன்ன வித்தியாசத்தில் பதில் உள்ளது.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நான் அந்த பக்கங்களிலேயே மிக தெளிவாக கூறி உள்ளேன்… நான் முன் வைத்திருப்பவை… சந்தர்ப்ப சாட்சியங்களின் கோர்வை. அவை நான் எழுதியவை அல்ல. பல இடங்களில் இருந்து எடுத்த இணைப்புகளும் அதில் உள்ளன. நான் பத்திரிகையாளரும் இல்லை. சி பி சி ஐ டியும் இல்லை. ரோ செய்த, குற்றவாளிகள் தண்டிக்க படாத, பூசி மூடிய கொலையை - துப்பு துலக்க நான் ஜேம்ஸ் பாண்டு இல்லை. ரோ செய்த கொலைக்கான உண்மையை இந்திய பத்திரிகையில் தேடும் அளவுக்கு அப்பாவியும் இல்லை😂. ஆனால் சீமான் முத்துகுமாரை யார் என தெரியாது என மறுத்தது (வீடியோ ஆதாரம் இணைதேன்) முதல், சாட்டை அவரின் மனைவியை கருக்கலைத்து, மணம் முடித்து, அவர்கள் காணியில் இருந்த சாவுகட்டை அடித்து அழித்தத்து வரை, நாதகவில் முத்துகுமார் நினைவேந்தலும் இல்லை, இவ்வாறு இது சீமானின் துரோகத்தில், ரோ செய்த கொலை என்பதை காட்ட பல முதல் நிலை ஆதாரங்களாவது உள்ளன. மீதி நியாயமாக விசாரிக்கப்பட்டல் வெளிவரும். சரி விடுங்க…கொண்டைய மறைக்க மறந்தா…இப்படி ஏதாவது சப்பை கட்டு கட்டத்தான் வேணும்😂
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
ஆஹா…அண்ணன் சீமானின் “குடி தேசியம்”. குடி என்றால் சாதிதானே? நல்லது (என சொல்லிகொள்ளும்) சாதியில் பிறந்தால்தான் நல்லியல்புகள் பொருந்தும் என்கிறீர்களா?
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நான் மேலே தந்த கட்டுரையில் நான் காந்தி பற்றி சொன்னதற்கு போதிய ஆதாரம் உள்ளது. மன்னிக்கவும் அந்த காலத்தில் லெனினும் இல்லை, கமராவும் இப்போ போல் எல்லாரிடமும் இல்லை - எனவே உங்களுக்கு ஒரு ஆபாச வீடியோவை பார்க்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது 😂. எம் ஜி ஆர் பாலியல் இலஞ்சம் பெற்றதை, தமிழா, தமிழா பாண்டியன் பார்த்தாராமா? 😂. நாளைக்கு நான் கொஞ்சம் காசை விசிறினால் பயில்வான் ரங்கநாதன் உங்களை நயன்யாராவோடு சேர்த்தும் வீடியோ போடுவார். ஆனால் மீண்டும் சொல்கிறேன் - பொய் என கூறியது அம்பிகா/ராதா விடயத்தை அல்ல. அதை பொய் என கூற என்னிடம் ஆதாரம் இல்லை. உண்மை என கூற உங்களிடமும் இல்லை. ஆனால் ராஜாத்தி யாரோ வேறு ஒரு நடிகரின் மனைவி, ஸ்டாலின் ஒரு செய்தி வாசிப்பவரை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பவை - சம்பந்தபட்ட பெண்களே பொது வெளியில் மறுத்த விடயங்கள் - அதை பற்றியே நான் எழுதினேன்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
விஜை எல்லார் வாக்குகளையும் குறி வைக்கிறார். சீமான் ? போற போக்கில் நாம் தமிழரை, நாடார் மஹாசபை ஆக்கிவிடுவார் போலுள்ளது. விஜை வெல்லலாம், தோற்கலாம். ஆனால் - வெறுப்பரசியல் செய்யும், பிளவுவாத சீமான் தமிழ் நாட்டில் வெல்ல முடியாது. ஈழத்தமிழர் போல் குறுகிய சிந்தனை தமிழகத்தில் இல்லை. உங்களுக்கு உதாரணம் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை என நினைக்கிறேன். உதாரணமும், ஒப்பீடும் ஒன்றல்ல. மேலே சொன்னது ஒப்பீடு. அல்ல. உதாரணம். 😂 இவ்வளவுதானா புலவர் 😂. மீண்டும் ஒப்பீட்டுக்கும், உதாரணத்துக்குமான வேறுபாட்டை கருத்தில் எடுக்கவும்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இதை நான் எங்கேயும் மறுக்கவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் பொதுவெளியில் உள்ள பெண்கள் பற்றி - அவர்கள் இந்த சம்பவங்களை பொதுவெளியில் வந்து வன்மையாக மறுத்த பின்னும் - அவதூறு பரப்ப விட முடியாது. ஏன் என்றால் நாம் எல்லோரும் ஒரு பெண்ணின் மகன்கள், சகோதரர்கள், கணவர்கள், தந்தையர்,மாமன்மார், நண்பர்கள்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
யாழ் களத்தில் சு. ப முத்துகுமார் என தேடவும். பல திரிகளில் எழுதி உள்ளேன், ஆதாரங்களுடன். https://www.theguardian.com/commentisfree/2018/oct/01/gandhi-celibacy-test-naked-women For several decades after his death, this episode was not widely known. Popular accounts of Gandhi’s life, including Richard Attenborough’s biopic, never mentioned it. The facts are that after his wife, Kasturba, died in 1944, Gandhi began the habit of sharing his bed with naked young women: his personal doctor, Sushila Nayar, and his grandnieces Abha and Manu, who were then in their late teens and about 60 years younger than him. இந்த ஆதாரம் உங்களுக்கும், இத்தனை காலத்துக்கு பின்னும் கோஷான் ஆதாரம் இல்லாமல் எழுதவார் என நினைத்து உங்கள் கருத்தை லைக்கிய அண்ணனுக்கும்😂.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இந்த லிஸ்டில்… சீமான் றோவுடன் சேர்ந்து துரோகத்தால் கொலை செய்த… நா த க வின், முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர், இணை-நிறுவனர் - இனமான வீரன் சு ப முத்துகுமாரையும் சேர்க்க வேண்டும்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
காந்தியடியே மகள் முறையான சிறுமியை அருகில் வைத்து கொண்டு நித்திரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர் என்கிறார்கள். ஒரு நடிகனுக்கு (ரஜனி) முதல்வர் காணி கொடுத்தால், அதை வெறும் உதவி என்றும், அதையே ஒரு நடிகைக்கு (அம்பிகா ராதா) கொடுத்தால் பாலியல் இலஞ்சம் எனவும் தானியங்கியாக கருதுவது. கருத்தாளரின் ஆணாதிக்க மனப்பான்மை, அன்றி வேறில்லை. எம் ஜி ஆரிடம் பண உதவி பெற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவருக்கு தவறான உதவி செய்தனர் என்கிறீர்களா? பிகு இந்தியன் என சொல்லி கொள்ளும் உங்களுக்கே இந்திய வரலாற்றை பாடம் எடுக்க கூடாது, ஆனாலும் தரவு பிழை என்பதால் சொல்கிறேன் - காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தண்டி யில் நடந்தது. வேதாரணயத்தில் அதன் ஆதரவு போராட்டம் ராஜாஜி நடத்தியது. வாரும்…இரும்…படியும்…😂
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
வணக்கம் தோழர், சீமானுக்கு தனி திரிகள் எல்லாம் ஓடிய போது வராத யாழ்கள விதிகள் மீதான அக்கறை, இப்போதாவது வந்துள்ளது மகிழ்ச்சி. யாழ் களம் தமிழக அரசியல் கட்சிக்கு ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்றே சொல்கிறது. அப்படி நான் செய்வதில்லை. தமிழக விடயங்களில் ஒதுங்கி இருக்கும் படியும் சொல்லவில்லை. அப்படி எண்டால் தமிழக செய்தி பகுதியை read only ஆக்கி இருப்பார்கள். நான் நாதக என்றால் ஓடி வருவதில்லை தோழர், பறந்து வருவேன். ஈழ, தமிழக தமிழர் இடையே பரவி உள்ள சீமான் என்ற விடத்தை முறிப்பது என் தலையாய கடன்களில் ஒன்று.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இங்கே பல பேர் எனக்கு பல வேடங்கள் தந்துள்ளார்கள்… அதில் திமுக 200 ரூபாய் உ பி என்பதும் எப்போதோ நடந்து விட்ட பட்டாபிஷேகம்தான் தோழர் ஆகவே கவலை வேண்டாம். நீங்கள் சொன்னதில் ஸ்டாலின் பற்றியதையும், கருணாநிதி பற்றியதையும் மட்டும் நான் கேள்வி கேட்க ஒரே காரணம், இதில் சம்பந்தபட்ட இரு பெண்களும் பொதுவெளியில் வந்து, அப்படி எதுவுமே இல்லை என மறுத்துள்ளார்கள். ஏனையவற்றில் இப்படியான ஆதாரத்தை என்னால் தரமுடியவில்லை. சம்பந்தபட்ட பெண்களே இல்லை என மறுத்த போது, அரசியலுக்காக அதை மீள, மீள காவுவது - காவுபவர் மிக மட்டமானவர் என்பதையே காட்டுவதாக நான் கருதுகிறேன் தோழர். தனியொருவன் படத்தில் வரும் வசனம் போலத்தான் இதுவும். உண்மைக்குதான் ஆதாரம் தேவை. பொய்க்கு அல்ல. நான் உண்மையை எழுதுவதால் - ஆதாரம் இல்லாமல் எழுத முடிவதில்லை. நீங்கள் எழுதும் ஒவ்வொரு கிசு கிசு வையும் என்னால் ஆதாரத்துடன் பொய் என நிறுவமுடியவில்லை. அப்படி நிறுவ முடிந்தவற்றை பற்றி மட்டும் எழுதுகிறேன். நீங்கள் கண்டமேனிக்கு உங்கள் மனதில் வரும் வக்கிர எண்ணங்களை எல்லாம் எழுத ஆதாரம் தேவையில்லை என்பதையும் ஏற்கிரேன். ஆகவே நீங்கள் ஆதாரம், தரவு எதை பற்றியும் கவலைபடாமல் எழுதலாம். பிகு அரசியல்வாதிகள் மட்டும், அல்ல அயோக்கியர்கள் எங்கும் நிறைந்துள்ளார்கள். யாழ்களத்திலும். இதில் எம் ஜி ஆர் - அம்பிகா, ராதா, அவர்களின் தாய் சரசுக்கு அரச நிலம் வாங்கி கொடுத்தது, அதே போல் ரஜனிக்கு ராகவேந்திரா மண்டப நிலம் வாங்கி கொடுத்தது என சிலதை அண்மையில் திருநாவுக்கரசர் வெளிப்படையாக பேட்டியில் கூறி உள்ளார். ஆனால் இதன் பின்னால் பாலியல் இலஞ்சம் இருந்தது என்பது உங்கள் ஊகமே. அப்போ ரஜனியிடமும் எம் ஜி ஆர் பாலியல் இலஞ்சம் பெற்றாரா? ஆகவே நாம் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாத எதையும், ஏதோ கண்ணால் கண்ட சாட்சி போல் அடித்து விடக்கூடாது தோழர். அப்படி எழுதுவது அருவருக்கத்தக்கது.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல. நாளைக்கு நான் புரட்சி நயன்யாதாராவினால் இம்சிக்க பட்டார் என ஒரு பொய் செய்தியை எழுதுகிறேன் என வையுங்கள். நீங்கள் என்ன செய்ய முடியும்? மீடியாவை கூப்பிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மறுக்க முடியும். அப்போதும் இன்னும் சில வம்பளப்பவர்கள் “நாங்க பார்க்காத மறுப்பா” என சொல்வார்கள் இல்லையா? சம்பந்த பட்ட, பொதுவெளியில் உள்ள, முன்னாள் முதல்வருக்கு நெருக்கமான பெண்ணே, அவர் அதிகாரத்துக்கு அருகில் இருந்த போதும், எதுவும் செய்யவில்லை அத்துடன், அப்படி எதுவும் நடக்கவில்லை என மீள, மீள மறுக்கும் போது…. அதை பேசாமல் விடுவதுதான் - decency.
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
ஓம்…மத்திய அரசின் கீழ் இருந்தாலும் தமிழ் நாட்டு நீதிபதிகள் முற்போக்கானவர்கள்… வடக்கே போக, போக கோமிய பாவனை காரணமாக மூளை மாட்டு மூளை போல் மாறிவிடும். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மத்திய பாடத்திட்டத்தில் இப்போ புட்பகவிமானம், அனுமன் சஞ்சீவியை தூக்கியதை எல்லாம் வரலாறு என சேர்க்கப்போகிறார்களாம். வரும் காலத்தில் மாட்டு மூளை, அமிபா மூளையாக வாய்புண்டு.
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
இனி வேலைக்கு என்ன செய்யலாம்? ஏதாவது கட்சி தொடங்கி, புலம்பெயர் முட்டகோசுகளிடம் திரள்நிதி திரட்டலாம் என யோசிக்கிறேன்😂 பிகு விஜி அண்ணிக்குத்தான் வாய்பூட்டு 😂. சீமானை தொடர்ந்தும் செ.சை என அடையாளப்படுத்த தடை ஏதும் இல்லை.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
ஊகங்களுக்கும் கிசு கிசு களுக்கும் உலக சினிமாவும், உலக அரசியலும் கூட விதிவிலக்கல்ல. அண்மையில் பிரெஞ் அதிபர் தன் மனைவி(அவரின் முன்னாள் ஆசிரியை) ஒரு ஆணாக இருந்து மாறிய பெண் அல்ல என அமெரிக்க நீதிமன்றில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார். இதே போல் மிஷேல் ஒரு ஆண், ஒபாமா ஓரினசேர்க்கையாளர், ஹிலரி கிளிண்டன் ஏலியன் என பல பக்கோடாக்கள் இன்றளவும் விற்பனையில் உண்டு. ஆனால் இவற்றை எண்ணத்தில் சிறியோர் பேசி/எழுதி இன்புற்றாலும், எண்ணத்தில் பெரியோர் வெறும் ஊகங்கள் என கடந்து போவதே வழமை. இதுவும் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியை பற்றி, அவரின் தனிமனித ஒழுக்கம் பற்றி அவதூறு எழுதலும் ஒன்றல்ல. பிகு நீங்கள் கூட ஸ்டாலின்- செய்தி வாசிப்பாளர் என்ற கதையை காவி திரிகிறீர்கள். குறிப்பிட்ட செய்தி வாசிப்பாளர், ஜெயிற்கு நெருக்கமானவர், பகிரங்கமாக இப்படி எதுவும் நடக்கவில்லை என மறுத்த போதும்.
-
இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
வாவ் அருமையான செய்தி. உந்த பிரச்சினை முடிய, டெல் அவிவ், சீ செல்ஸ், இலங்கை என ஒரு self transfer டிக்கெட் போட்டு போக வேணும்.
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
முன்பே சொன்னேனே… ரன் திரைப்படத்தில் மைனர் குஞ்சை அட்வான்ஸ் புகிங்கில் ரேப் செய்ய விட்ட கதைதான். அங்கே நாட்டாமை சாத்தப்பன். இங்கே, பாபர் மசூதி தீர்ப்பு புகழ், இந்திய உச்ச நீதி மன்றம். ஒரு பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு போடுகிறார், அதை மிரட்டி வாபாஸ் வாங்க வைத்தார்கள் என்கிறார். அதை ஒரு தடவை கூட பொலிசை விசாரிக்க விடாமல் தடுத்து, குற்றம் சாட்டபட்டவரும், குற்றம்சாட்டியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கை ஊதி நூக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வடு சீமானை விட்டு வாழ்வு நெடுக நீங்காது.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
நல்லவேளை இந்த தம்பி 2008 இல் ஓபாமா அமெரிக்க அதிபாராக வர கேட்டார் என எழுதவில்லை. விஜை வருகையின் பின் சீமான் பித்து பிடித்தது (ஹிஸ்டீரியா) போல் கத்துகிறார். அவரின் தம்பிகளோ - ஹலூசினேசனில் அவதிபடுகிறார்கள். ஒரே ஆறுதலான விடயம் நாதக தம்பிகளுக்கே உரிய தூசண தொனி அப்படியே உள்ளது.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இல்லை. ஆனால் கூட்டணி என்பது கட்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதல்ல. 2026 இல் அதிமுக வென்று, 91-96 போல் ஒரு ஆட்சியை தருமாயின் - அப்போ திமுகவிடன் சேர்ந்தாவது த வெ க அந்த ஆட்சியை அகற்றத்தான் வேண்டும். த வெ கவுக்கு ஒரே ஒரு தீண்ட தகாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே. அதனுடன் நேரடி மறைமுக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார். நீ…பத்து, முப்பது வருடம் முன் பாஜகவுடன் கூட்டு வைத்தாய் எனவே உன்னுடன் சேரமாட்டேன் “தீட்டு” என்பதெல்லாம் பரிகாசிக்கதக்க சிறுபிள்ளைத்தனம். மிக தெளிவாக பெரியாரின் இறை மறுப்பில் தனக்கு உடன்பாடில்லை என சொல்லி உள்ளார். பெரியார் என்ன ஹார்லிக்சா “அப்படியே சாப்பிட”. நான் கூட கோவில் போவேன், சர்ச் போவேன், பள்ளிவாசல், விகாரை எங்கும் போவேன், கைகூப்புவேன். பிதிர்காரியம் செய்வேன். ஆனால் பெரியாரை அவரின் தாக்கத்ததை மதிக்கிறேன், அவரின் கொள்கைகள் பலதில் உடன்படுகிறேன். இதில் ஒரு தடுமாற்றமும் இல்லை.