Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. PTSD எப்போ, எப்படி கிளம்பும் என கணிக்க முடியாத ஒரு விடயம். நீறுபூத்த நெருப்பாக இருந்து பல பத்தாண்டுகளின் பின் கூட ஒரு trigger இல் வெடிக்கும். இது 100% எனது ஊகம் மட்டுமே.
  2. இது என்னுடைய வாழ்க்கை அனுபவம் சார்ந்த ஊகம் மட்டுமே. Shell shock பாதிப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஆளை வீடியோவில் பார்க்க trauma வில் இருந்து மீளவில்லை என்பது போலவே உள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி நம்மை நேசித்த மூன்றாம் நபர்கள் நம் கண்முன்னே இறப்பது என்பது ஜீரணிக்க கடினமான விடயம். கூட்டத்திலேயே இந்த திகிலை காண முடிந்தது. நானும் மனிதனே, மனதளவில் நொருங்கியுள்ளேன் என்ற வார்த்தைகள் சொல்லாமல் சொல்லும் செய்தி இது என நினைக்கிறேன். இதை உடைத்து சொல்ல முடியாது. பைத்தியம் என கதையை முடித்து விடுவார்கள். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பதால் இது நடிப்பாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கூகிள் ஜெமினியில் இருந்து Overview நடிகர் விஜய்யின் தங்கை வித்யா, லுகேமியா (leukemia) எனும் நோயால் உயிரிழந்தார். விஜய்க்கு தன் தங்கை மீது மிகுந்த அன்பு இருந்ததாகவும், அவருடைய இழப்புதான் விஜய்யை மிகவும் அமைதியாக்கியது என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். தங்கை இழப்பின் பின்னணி: விஜய்க்கு தனது தங்கை வித்யா மீது மிகுந்த அன்பு இருந்தது. வித்யாவுக்கு மூன்று வயது இருக்கும்போது லுகேமியா நோய் தாக்கியது. இந்த நோயின் காரணமாக, அவர்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் இழந்தனர். தந்தையின் கருத்து: விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். வித்யா தான் விஜய்யின் உலகம் என்றும், அதன் இழப்பு அவனை அமைதியாக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
  3. இல்லை. ஆனால்… நாங்கள் சொன்ன விதிகளின் படி நடந்து கொண்டோம். என சொல்லி உள்ளார். இதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். நீங்கள் இடத்தை கொடுத்தீர்கள், நீங்கள் விதிகள் போட்டீர்கள் அதன்படி நாம் நடந்தோம். இடம் பொருத்தமில்லை என்பதால் தள்ளுமுள்ளு எனில் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எனவே நான் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை. இதுதான் நிலைப்பாடு என நினைக்கிறேன். அத்தோடு உண்மை விரைவில் வெளியே வரும் என்றால்… தப்பு தவெக மீது இல்லை என்பதுதானே அர்த்தம் (விஜை பார்வையில்). இல்லை. கரூரில் கலவரம் வரும் எனில். திருச்சியில் ஒரு ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்றிருக்கலாம்.
  4. அருணா கமிசன் விசாரணை, பொலிஸ் குற்றவியல் விசாரணை நடக்கும் போது அமுதா ஐ ஏ எஸ் சுக்கு இப்படி ஒரு கூட்டம் போடும் அவசியம் என்ன? வழக்கை குழப்பும் முயற்சி என எடப்பாடி ஒரு பிடி பிடித்துள்ளார்.
  5. மேலும் நானும் மனுசந்தானே என்னால் இந்த துயரத்தை தாங்க முடியவில்லை சம்பவ இடத்துக்கு அருகில் தங்க விரும்பினேன், ஆனால் மேலும் அசம்பாவிதம் வரும் என சொல்லி என்னை அகற்றினர். என்றும் கூறினார்.
  6. வாய்ப்பை பயன் படுத்தி மாறி, மாறி பிரச்சார வீடியோவை இணைக்கும் எவரும், விஜை வெளியிட்ட வீடியோவை இணைக்கவில்லை என நினைக்கிறேன்😂. விஜையா முக்கியம் நமக்கு, நம்ம பொழப்புத்தான் முக்கியம் என எண்ணுகிறார்களோ என்னமோ😂. கரூரில் மட்டுமே ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும் மக்கள் பார்த்துகிட்டுதான் இருக்காக விரைவில் உண்மை வெளிவரும் சி எம் சார், பழிவாங்குவாயின் என்ன பழிவாங்குங்கள், நிர்வாகிகளை விட்டு விடுங்கள் அரசியல் பயணம் தொடரும் ஆதரவாக கதைத்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி இவை விஜை சொன்னது
  7. கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அவசரமாக அனுமதி Velmurugan PPublished: Tuesday, September 30, 2025, 21:08 [IST] சென்னை: தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து வதந்தி பரப்பியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள் . அந்த வகையில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு உடல் பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Also Read இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும்,செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சோஷியல் மீடியாவில் தவெகவினர் குற்றம்சாட்டி தகவல்களை பரப்பி வந்தார்கள் இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டு எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளைப் பதிவு செய்த 3 பேரை நேற்று போலீசார் கைது செய்திருந்தனர். அதில் இரண்டு பேர் தவெகச் சேர்ந்தவர்கள் ஆவார். ஒருவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை தனியார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு முன்பு மருத்துவமனைக்கு உடற் பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. Recommended For You இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரைக் காண அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பெலிக்ஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாரடைப்பால் பெலிக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/youtuber-felix-gerald-suffers-sudden-heart-attack-urgently-admitted-to-government-hospital-739681.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards பிகு போன கருத்தில் இவரையும், சவுக்கையும் ஊடகவியளாலர் என எழுதினேன். யூடியூபர்ஸ் என்பதே சரியான பதம்.
  8. போனதடவை இருவரும் கைதான போதும், சவுக்கு கைது நியாயமானது ஆனால் பீலிக்ஸை தேவையில்லாமல் கைது செய்கிறார்களோ என தோன்றியது. இந்த முறை இவர்கள் இருவரின் வீடியோக்களையும் நான் இன்னும் பார்க்கவில்லை. போனமுறை சவுக்கு, பீலிக்ஸ் இருவரையும் கோர்ட் வெளியே விட்டது. இந்த முறையும் வெளிவிடும் என்றே நினைக்கிறேன். அவர்கள் வெளியே வரும் போது அவர்கள் கூறியது வதந்தி அல்ல என்ற தோற்றப்பாடு இயல்பாகவே எழும். இதை திமுக தவறாகவே கையாள்கிறது. அன்பில் ரமேஸ் அழுகையில் ஆரம்பித்து, செய்தியாளர் கைதுவரை, திமுக நாடகம் ஆடுகிறது, எதையோ மறைக்கிறது என்பதே மக்கள் மனதில் பதியல்கூடும். இது உண்மை அல்லாமல் இருக்கலாம், ஆனால் அரசியலில் சிலசமயம் உண்மையை விட, perception நிலைத்து விடுவது உண்டு. உதாரணம் ரஜீவ்காந்தி கொலையும் திமுகவின் 1991 படுதோல்வியும்.
  9. ஓம்… பீலிக்ஸ் கைதாவது இந்த அரசில் இது இரெண்டாம் முறை என நினைக்கிறேன். முதல் முறை சவுக்குடன் கைதானார்.
  10. அரசியல் ஆதாய நோக்கங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, சம்பவ இடத்தில் ஒரு கட்சி சாராத சாதாரண மனிதர் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். எந்த தள்ளுமுள்ளும் வரமுன்பே 4 பெரிய அம்புலன்சை அந்த வழியே அனுப்பி உள்ளனர்.
  11. நிறைய எழுதினேன் அக்னி. ஆனால் அழித்து விட்டேன். எழுதிகொண்டிருக்கும் போதே ஏதோ 2015 வாக்கில் கருத்தை விட்டு, கழுத்தை பிடிக்கும் வகையில் உரையாடல் நகர்வதாக தோன்றியது. ஆகவே அழித்து விட்டேன். யாழ் களமும், நீங்களும் நானும் கூட மாறிவிடோம். Dare I say வளர்ந்து விட்டோம். இணைந்திருங்கள் உருப்படியான கருத்துக்கள் எழும்பட்சத்தில் பரிமாறி கொள்வோம்.
  12. உங்களுக்கு என்னையா பிரச்சனை. நான் விஜை ரசிகர், அல்லது அவரின் அரசியல் ஆதரவாளர் என நினைத்துகொண்டு யாரும் இல்லாத இருட்டு அறையில் முரட்டு குத்து குத்துகிறீர்கள்😂. நான் இரெண்டுமே இல்லை. தமிழ் நாட்டு அரசியலில் நான் யாருக்கும் ஆதரவு இல்லை. ஒரே எதிரிதான். யார் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
  13. அவரேதான். உங்களுக்கு நான் எழுதாததை வாசிக்கும் ஹலுசினேஷன் பிரச்சனை ஏதும் உள்ளதா? நான் அவர் உத்தமர் என்றோ, அவரின் கருத்துடன் உடன்படுகிறேன் என்றோ எங்கே எழுதினேன்? மேலே நான் பலரின் கருத்துக்களை இணைத்தது போலவே இதையும் இணைத்துள்ளேன்.
  14. கள்ளசாராய மரணத்தில் கண் கலங்கலையா ஸ்டாலின் ? என எடப்பாடியும். அன்பில் மகேஷ் அழுகைக்கு ஆஸ்கார் கொடுக்கலாம் என அன்புமணியும் இறங்கி அடிக்கிறார்கள் திமுகவின் மாய்மாலத்தை. இதில் எனக்கு துளியும் ஏற்பில்லை. ஆனால் இந்த லைனை எடுத்து, அதிமுக+தாவெக+பாஜக+பாமக+தேமுதிக ஒரே அணியில் நின்றால் - திமுகவுக்கு டப்பா டான்ஸ் ஆடிவிடும். சபரி அண்ணனுக்கு கொடுத்த 100 கோடியும் விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடும்.
  15. https://tamil.filmibeat.com/news/actor-mansoor-ali-khan-talks-about-karur-stampede-death-164461.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards மேலே உள்ள செய்திக்கான சுட்டி
  16. விஜய்யை குழிக்குள் தள்ளி மூடி இருப்பார்கள்.. அயோக்கியத்தனமான அரசியல்.. மன்சூர் அலிகான் ஆதங்கம்! Jaya DeviPublished: Monday, September 29, 2025, 16:08 [IST] அதில், கரூரில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்யை பார்க்கும் ஆசையுடன் வந்தவர்களை பாழாய் போன, சீக்கு பிடித்த, கரை படிந்த, மோசமான அரசியல்வாதிகளின் சதித்திட்டதால் மரணிக்க செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 40 இதயங்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் துயர சம்பவத்தை கேட்டதிலிருந்து எனக்கு இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை. கரூர் எனது சொந்த ஊர், இன்னும் என்னுடைய வீடு கள்ளப்பட்டிகள் தான் உள்ளது. அவர்கள் உயிரிழந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டு, மிதிபட்டு, அடிபட்டு, குழிக்குள் விழுந்து இறந்திருப்பார்கள் என்று நினைக்கும் போதே மனம் வேதனையாக இருக்கிறது. நம்ம நாட்டில் இப்படியும் நடக்கிறதா? என நினைக்கும் போது அவமானமாக இருக்கிறது. Also Read Oviya: ஓவியாவை திட்டும் விஜய் ரசிகர்கள்.. அசராமல் போஸ்ட் போட்ட ஓவியா.. இறங்கிதான் அடிக்கல! நடிகர் மன்சூர் அலிகான்:விஜய்யின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால், அவரை கொள்கை ரீதியாக எதிர்க்கலாம் கூட்டம் போட்டு அவருக்கு பேச தெரியவில்லை என சொல்லலாம். இதுவரை நான்கு கூட்டங்கள் நடந்து இருக்கிறது. அதிலும் கேட்ட இடம் கொடுக்கவில்லை என தம்பி விஜய் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் போது, தற்போது நடந்து இருக்கும் இந்த சம்பவம் அயோக்கியத்தனமான அரசியல் தானே, சொந்த மக்களை... சொந்த ஊர் காரன்.. மக்களை காவு கொடுத்து விட்டு இப்படி நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அதில், மக்கள் யார் வரவேண்டும் என்பதை சொல்வார்கள். சில அரசியல்வாதிகள் கோமாளித்தனமாக நடந்து கொண்டார்கள் நம்மையும் கோமாளியாக்கினார்கள். சிலர் முடியாமல் கோமாளியாக இருப்பதே நல்லது என ஒதுங்கி விட்டார்கள். பல ஜாம்பவான்களை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள், பெரிய திமிங்கலமாக, முதலையாக, அடக்க ஆள் இல்லை என்பது போல சென்று கொண்டு இருக்கிறார்கள். ரொம்ப நாளைக்கு இந்த பருப்பு வேகாது. இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் இதற்கான தீர்ப்பை தருவார்கள். விஜய்யை குழிக்குள் தள்ளி இருப்பார்கள்: விஜய் மாநாடு நடத்துவதற்கு 28 கண்டிஷன்களை போட்டார்கள் எந்த கட்சிக்காவது இப்படி கண்டிஷன்களை போட்டார்களா? மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும் என தெரிந்தும் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் கொடுத்து இருக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல், முட்டு சந்தில் பிரச்சாரம் நடத்துவதற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள்? கொஞ்சம் விட்டு இருந்தால் விஜய் தம்பியை குழிக்குள் போட்டு மூடி ஜன கன மன பாடி இருப்பார்கள்? இது அரசியலா.. கேவலமாக இல்லை.. அயோக்கியத்தனமான அரசியலை செய்து கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய முழு ஆதரவு விஜய்க்கு தான் என்று நடிகர் மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் பேசி உள்ளார். https://tamil.oneindia.com
  17. வழமையாக அண்ணா என்பதை அண்னா என எழுத்துப்பிழை விட்டு எழுதிவிட்டாலே ஆச்சோ, போச்சோ என குதிக்கும் திமுக…. அண்ணாவை சனியன் என்றதற்கு சிவாஜி கிருஸ்ணமூர்த்தியை விட்டு கூட மறுப்பு தெரிவிக்கவில்லை. கன்னத்தில் என்னடி காயம்… அது சபரீசன் பெட்டி செய்த மாயம் 😂
  18. நேற்று வரை திமுகவை கடுமையாக விமர்சித்து, விஜைக்கு ஒரு சினிமாவை தாண்டிய மக்கள் ஆதரவு இருக்கிறது என சொல்லி கொண்டிருந்த மணி, இன்று “இவர் இல்லை மாற்று, இவர் மாற்று என்றால் தமிழ்நாடு தாங்காது என்கிறார்”. அது சரியும் கூட. மரணங்களை விட, அதை ஒட்டி நாதக, திமுக செய்யும் பொய் பிரச்சாரங்களை விட, விஜையின் அரசியலை ஆட்டம் காண வைத்தது. அவர் 2 நாட்களாக எஸ் ஆகியது. உங்கள் அறிவுரை/வேண்டுகோளுக்கு அடுத்த பதிவாக, அதற்கு கீழேயே புலவர் குருமூர்த்தியே மறுத்த பொய்செய்தியின் சுட்டியை இணைத்து விட்டு போயுள்ளார் 😂. எங்க வந்து யாருகிட்ட 😂
  19. கரூர் சம்பவம்.. செந்தில் பாலாஜி காரணம்.. கடிதம் எழுதிவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட விஜய் ரசிகர் Velmurugan PUpdated: Monday, September 29, 2025, 20:29 [IST] விழுப்புரம்: கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அதேநேரம் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை யாருமே எடுக்கவே கூடாது என்பதற்காகவே இந்த பதிவு. இது 1970களில் இருந்து இன்று வரை தொடர்கிறது. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி கமல், அடுத்ததாக விஜய், அஜித் வரை இருக்கிறது.இனி வரும் காலத்திலாவது இது மாறினால் சிறப்பாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள சூழலில் நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பின் மிகுதியில் செய்யும் விஷயங்கள் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. Also Read நடிகர் விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பார்த்தால் போதும், அவரது பேச்சை கேட்டால் போதும் என்று கூட்டம் கூட்டமாக தவெக நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்திற்கும் பல ஆயிரம் பேர் வந்தார்கள். காலை முதலே விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் தண்ணீர் கிடைக்காமலும், மூச்சுவிடக்கூட முடியாமலும் பரிதவித்து போனார்கள். Recommended For You விஜய் வந்துவிட்டு கிளம்பி செல்லும் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சிலர் மிதிப்பட்டும் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதேநேரம் அரசும் குறுகிய இடத்தில் தான் தங்களுக்கு இடம் தந்ததாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகிறார்கள் . மேலும் சதி என்றும் பரப்பி வருகிறார்கள். இதனை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை ஒருபோதும் எடுக்காதீர்கள்.. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) https://tamil.oneindia.com/news/villupuram/senthil-balaji-is-the-reason-behind-the-karur-incident-what-vijay-fan-did-after-writing-a-letter-739387.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards 👆என்னத்த சொல்ல🤦‍♂️
  20. “உசிரு போற நேரத்திலும் ஊத்த மாட்டான் பாலை, நீ காலை நீட்டி படுத்துகிட்டா எவ்ளோ பெரிய மாலை”… எஸ்பிபி பாடிய பாடல். அந்த எஸ்பிபிக்கே இருக்கும் போது வழக்கு போட்ட இசைஞானி செத்த பின் அண்ணாமலையில் தீபம் ஏற்றவில்லையா. விஜயகாந்த், உடல் நலம் குன்றிய பின்னும், எப்போதும் போதையில் இருக்கும் தெலுங்கன் அவருக்கெலாம் தமிழகத்தை ஆள ஆசை வருவது காலக்கொடுமை என மேடையில் அவமானப்படுத்திவிட்டு, செத்தவுடன் “வானத்தை போல மனம் படைத்த மன்னவனே” என பாடி கூலிக்கு மாரடித்தாரே இன்னொருவர். இதுதான் இவர்களின் இரெட்டை முகம். இவர்களையும் நல்லவர்கள் என நம்பி அலையும் ஒரு கூட்டம்.
  21. இப்படி நடக்ககூடும் என இதே திரியில், சம்பவம் நடந்து சில மணிகளுக்குள் எழுதியுள்ளேன். அப்படி நடந்தால் சீமானுக்கு வழமையாக கட்டும் டின்னில் ஒண்டை எடுத்து விஜைக்கு கட்டிவிட வேண்டியதுதான்😂. நீங்களும், புலவரும் என்னை மீளவும் 200 உபி என சொல்ல ஆரம்பிக்கலாம்.
  22. விஜைக்கு எதிராக வீரமணி, சுபவீ போராட்டம் என்ற நாதகவின் தம்பிகள் பரப்பிய செய்தி, வழமை போலவே கஞ்சா, கப்ஸா கதை என்பது நிரூபணமாகியுள்ளது. ஆளுனருக்கு எதிரான போராட்டத்தை மாற்றி அடித்துள்ளார்கள். பார்க்கவே பொய் என தெரியும் செய்தியை இணைத்தமைக்கு சிறி அண்ணா எந்த மன்னிப்பும் கேட்க மாட்டார் என்பதை நான் உத்தரவாதப்படுத்துகிறேன்😂. தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கி.வீரமணி தலைமையில் நடந்தது.பிகு இணைப்புக்கு நன்றி
  23. நிச்சயமாக நான் மேலே எழுதியதை வாசிக்கவில்லையா? விஜை ஒரு நெஞ்சுரம் இல்லாத கோழை - முதல்வராக ஆசைப்பட்ச்க்கூடாது என எழுதியுள்ளேன். நீங்கள் அதையே சென்னைபாசையில் எழுதி உள்ளீர்கள். ஆனால் நீங்கள் ஓக்கே, நான் டிபெண்டர் ஓடும் அணில்?😂 சீமான் கூட இதை விபத்து என்றே சொல்லி உள்ளார். விஜை மீது நேரடியாக கொலை பழி போடுவது, கேவலமான பிண அரசியல். கருணா ஆதரவாளர்களுக்கு இது கைவந்த கலைதான். இது போன கிழமை எடுத்த வீடியோ என நினைக்கிறேன்.
  24. நான் என்ன அவரின் பட்லரா ? ஆனால் தமிழர் ஒரு கலியாணத்தை கூட முகூர்த்த டைமுக்கு செய்ய, சொன்ன நேரத்தில் விருந்தினர் வர தவறும் ஆட்கள். இதுதான் தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே நேரம் தவறி முதல் கூட்டமா? சும்மா வெப்பில் எதை வேண்டுமானாலும் எழுத கூடாது. நேரம் பிந்துவதுதான் அங்கே அரசியல் கூட்டங்களில் மட்டும் எல்ல சகல பொது நிகழ்வுகளிலும் யதார்த்தம். இதை வைத்து கூட்டம் கூட்ட நேரம் பிந்தினார்…அடுத்த படி போய் கொலை செய்தார் என எழுதுவதெல்லாம் சீமான் தம்பிகளின் பழைய கறள். நிச்சயமாக யார் பக்கம் தவறு அதிகம் என்பது தீர ஆராயப்பட வேண்டும். அருணா கமிசன் விசாரிக்கிறது, பொலிஸ் எப் ஐ ஆர் போட்டுள்ளது. தவெக மதுரையில் உச்ச நீதிமன்றை அணுகி உள்ளது. இரு பகுதியும் தவறு என்பது வெள்ளிடமலை. யார் மேல் அதிகம் என வரும் தரவுகளை வைத்து நாம் முடிவு செய்யலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.