Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. எல்லாம் சரிவரும். இஞ்ச 3ம் அலை தொடங்கீட்டு எண்டுறாங்கள். 🤣🤣🤣 இலங்கை காசிலயுமோ🤣🤣
  2. துபாயின் வீட்டு விலையை லண்டன் வீட்டு விலையோடு ஒப்பிட முடியாது பெருமாள். இஞ்ச மேற்கு லண்டனில் semi detached 3 அறை வீடுகளே 600, 650K எண்டு போகுது. இன்னும் பத்து வருடத்துல எல்லாரும் மில்லியனர்🤣. அதே 600K காசுக்கு அங்க நல்ல லக்சறி பிளட் வாங்கலாம். அதான் அங்கே 3 மில்லியன் என்றால் அதன் தரம் இன்னும் எகிறும் என்ற கருத்தில் சொன்னேன். இது லக்சறி penthouse அதனால் இந்த விலை போலும். @குமாரசாமி அண்ணை, டுபாயில் எனக்கு பிடித்த விசயம் பாலைவன 4x4 சவாரியும், இரவு நேர பாலைவன பார்பிகியூ மற்றும் அரேபிய பெண்களின் பெல்லி டான்ஸ் 😎. ஒரு அனுபவத்திற்கு Burj Khalifa ஹோட்டல் போன்றவற்றில் ஒரு நேரச்சாப்பாடும், உலகில் உயரமான கட்டிடத்தில் ஏறுதல் போன்றவற்றை செய்யலாம். சிறுவர்களுக்கு அபுதாபியில் நிறைய விசயங்கள் இருக்கு. Ferrari World, Warner Bros World, Water World இப்படியாக. யாழ்கள ஒன்றுகூடல் ஒன்றை டுபாயில் செய்வதாக முன்னர் ஒருதரம் பேசிகொண்டோம். வருவியள்தானே😎.
  3. 3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣.
  4. உங்கள் கேள்வியை விட உங்கள் க்ளூ அற்புதம்👏🏾👏🏾👏🏾. வேற லெவல்👌. தொடர் முடிஞ்சது கவலைதான் -ஆனால் சலிப்பு தட்ட கூடாது என்பதும் சரியே.
  5. எங்கோ செய்தி வாசித்தேன் ஊன்றுகோலுக்கு பதில் பாரதி கையில் புத்தகம் கொடுத்தது - அது கவனத்தை ஈர்த்தது. யாழ் பொது நூலக வளாகம்?
  6. கீழே விக்கி இப்படி சொல்கிறது. இதை ஆதாரமாக இணைக்கவில்லை. நானும் இப்படித்தான் நினைக்கிறேன். On 26 December 2004, the Indian Ocean tsunami struck Sri Lanka, killing more than 35,000 people and leaving many more homeless. A great deal of aid arrived from around the world, but there was immediate disagreement over how it should be distributed to the Tamil regions under LTTE control. By 24 June the government and LTTE agreed on the Post-Tsunami Operational Management Structure (P-TOMS), but it received sharp criticism from the JVP, who left the government in protest. The legality of P-TOMS was also challenged in the courts. President Kumaratunga eventually had to scrap P-TOMS, which led to widespread criticism that sufficient aid was not reaching the north and east of the country. However, immediately following the tsunami there was a marked decrease in violence in the north.[citation needed]
  7. இல்லையே எனது நினைவின் படி ஜெயந்த தனபாலவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியும், அது செயல்பட முதலே, அதன் முக்கிய சரத்துகளை அரசியல் சட்டத்துக்கு முரணானது என ஒரு இடைக்கால தடை மூலம் உச்ச நீதி மன்றம் முடக்கி விட்டது. இது நடந்து சில மாதங்களின் பின்னே 2005 ஜனாதிபதி தேர்தல் வந்தது. எனக்கும் சரியாக நியாபகம் இல்லை ஆனால் தகவல்கள் சரி என நினைக்கிறேன்.
  8. நீங்கள் சொல்வதை நான் தெளிவாக புரிந்து கொண்டால் - நாம் தனிப்பட்டு செயல்பட வேண்டும் ஆனால் ஒரு சொல்லப்படாதா, எழுத்தில் இல்லாத பெரும் திட்டத்துடன் திட்டமிடல் இன்றியே நாம் திட்டமிட்டு ஒருங்கிணைய வேண்டும். இது சாத்தியம் என நானும் நம்புகிறேன். கொஞ்சம் நடைமுறையிலும் நடக்கிறது. ஆனால் அவர்களும் ஒரு அளவுக்கு மேல் வளரவிடாது பார்த்து கொள்கிறார்கள் என்பதும் உண்மையே. இலங்கையில் இன்னும் இருந்திருந்தால் - அநேகமாக இப்போ இருப்பதை காட்டிலும் கூட இருந்திருக்கும்🤣. பகிடிக்கு சொன்னேன் - நீங்கள் சொல்வது புரிகிறது.
  9. நல்ல தகவல் மற்றும் காத்திரமான குறிகாட்டல் (sign-posting) சுமா. இதில் எனது அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன். இந்த நாடுகளில் எம்பிகள் இதர அமைபுக்களோடு தொடர்பில் உள்ளவர்கள் அந்த நாட்டின் இலங்கைக்கான foreign aid எங்கே செலவழிக்கபடுகிறது என்பதை தீர்மானிக்கும், இல்லை, பிரேரிக்கும் நிலையில் கூட இல்லை என்பதும் உண்மையல்லவா? உதாராணமாக யூகேயின் குறித்த ஒரு ஆண்டுக்கான உதவி இலங்கையில் எங்கே எப்படி செலவழிக்க படப்போகிறது என்பதை இலங்கையும், யூகேயுமே தீர்மானிக்க வல்லன. நமக்கு அளுத்தம் கொடுக்கும் வலு இருந்தால் (இருந்தால்) ஒரு குறித்த தொகையை வடகிழக்கிற்கு அனுப்ப வேண்டும் என ஓரளவுக்கு அளுத்தலாம். ஆனாலும் சனத்தொகை பரம்பல் காராணமாக பெருந்தொகை வட கிழக்கிற்கு வெளியேதான் செல்லும். இன்னொரு பிரதிகூலம் - இந்த நாட்டின் பிரஜைகளாக நாம் நேரடியாக இந்த நாட்டு அரசுகள் வழியே முதலிட முடியாது. உதாராணமாக ஒரு தமிழ் அமைப்பிடம் 100 மில்லியன் டாலர் இருந்தால் - அதை இந்த அரசுகளிடம் கொடுத்து - தனியே வட கிழக்கு திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்று சொல்லவும் முடியாது. அவர்கள் செய்யமாட்டார்கள், இலங்கை செய்யவும் விடாது. மேலும் ஒரு பிரதிகூலம் அரசுகள் செய்வது aid என்ற அளவில் மட்டுப்பட்டு விடுகிறது. நாம் செய்ய விழைவது nation building அதை இவர்களும் விரும்பபோவதில்லை, அவர்களும் விடப்போவதில்லை. ஆனால் நீங்கள் சொன்ன வழிமுறையில் முயற்சிக்கலாம் - குறைந்த பட்சம் இந்த நாடுகளின் aid இல் கணிசமான அளவு எமது பகுதியில், வினைத்திறனாக செலவாகிறது என்பதையாவது உறுதிப்படுத்தலாம்.
  10. திரு விக்னேஸ்வரன் இருந்த போது ஒரு நிதியம் அமைத்து புலம்பெயர் நிதியை வடக்கிற்கு கொண்டுவர முயன்றார். ஆனால் சில விடயங்களில் இலங்கை மிக தெளிவாக இருக்கிறது. அவற்றில் ஒன்று எந்த வகையிலும் பொருளாதார/நிதி சுதந்திரத்தை தமிழர்கள் கையில் கொடுப்பதில்லை என்பது. உதாரணமாக ஸ்டாலின் தடுப்பூசிகளை நேரடியாக வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்கிறார். தியாகராஜன் ஜேசி ஜக்சனுடன் டீல் போடுகிறார். ஆனால் இலங்கையில்? 89 இல் இணைந்த வட-கிழக்கு மாகாணசபை ஒரு டெண்டர் பேப்பரில் வெளியிட்ட போது, Provincial Government என போட, மறுநாளே அதை பிரேமதாசா Provincial Council என மாற்றும்படி செய்தார். மாகாண சபைகளுக்கு காணி, பொலீஸ் அதிகாரம் வழங்காமையும் இதனால்தான். ஆகவே எம்மிடம் பெரும் பொருளாதார வளம் புலம்பெயர் நாட்டில் இருந்தாலும் (இருந்தாலும்), அதை நாம் பொது நோக்கில் ஒருங்கிணைத்தாலும் (ஒருங்கிணத்தாலும்- நடக்கிற காரியமா இது?) அதை நாட்டில் எப்படி முதலிடுவது என்பது பெரும் கேள்வி குறி. எதையும் சட்டபடி செய்ய முடியாது எனும் போது இரு வழிகள்தான் உள்ளன. 1. நம்பி ஒரு அமைப்பிடம் இதை சட்டத்துக்கு அப்பாற்பட்டு செய்யுங்கள் என கொடுப்பது. அப்படி ஒரு அமைப்பும் 2009 க்கு பின் இல்லை. 2009 க்கு முன் அவர்களிடம் கொடுத்தால் பணம் சரியாக பயன்படும் என்று நம்பிக்கை இருந்ததது. இப்போ? புலம் பெயர் நாட்டில் ஒரு உண்ணாவிரதத்தில் கூட பல சந்தேகங்கள் - யாரை நம்பி கொடுப்பது? 2. தனி மனிதர்களாக, ஊர் ஒன்றியங்களா செயல்படுவது. @விசுகு அண்ணை @விவசாயி விக். இருவரும் இதற்கு நல்ல உதாரணங்கள். ஆனால் அவர்களே பலமுறை எழுதி உள்ளார்கள் - ஏற்படுத்தபடும் தடங்கல்கள் பற்றி. இதை விட நடைமுறை சாத்தியமாக வேறு எதையும் இப்போது செய்யமுடியும் என என் அறிவிற்கு எட்டவில்லை. சீன வரவால் புவிசார் அரசியலில் இலங்கையை ஒட்டி ஒரு மாற்றம் ஏற்பட்டு எமக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தால் ஒழிய - இதுதான் கள நிலை. ஆகவே அங்கே இருக்கும் மக்கள் இப்படியான வசதிகளை, அது ஏர்போர்ட்டோ, கலாச்சார மண்டபமோ பயன்படுத்தத்தான் முனைவார்கள். நாம் வெளிநாட்டில், மைதானம், ஆடிடோரியம், சகல வசதிகளையும் அனுபவிக்கிறோம். ஆகவே நாம் அவர்களை எமது பெரும் புலம் பெயர் பொருளாதார உதவி வரும் வரை பொறுங்கள் என ஈசியாக கேட்கலாம். ஆனால் அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு 18 மாடி கட்டிடம், இத்தனை வசதிகளோடு கிடைத்தால் அதை எப்படி பாவிக்கலாம் என்றே யோசிப்பார்கள். பிகு: புலிகள் சுனாமி நேரத்தில் PTOMS என்ற ஒரு கட்டமைப்பை கோரினார்களே, நியாபகம் உள்ளதா? அதை இலங்கை நிராகரிக்கவும் இதுதான் காரணம். வெளிநாட்டு பண வரவை கையாளும் சுதந்திரம் தமிழர் கைகளில் இருக்க கூடாது.
  11. இது என்ன பலம்? புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் கூட்டு-பொருளாதார வளமா?
  12. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு (இலங்கை திறைசேரி மேற்பார்வையின் கீழாவது) fund raising அதிகாரங்களை வழங்குவார்களாயின் - இலங்கையும் தேவையில்லை, இந்தியாவும் தேவையில்லை எமது முதலீடுகளாலே நாம் பொருளாதார வளர்சியை அடைந்து, ஏனைய பகுதிகளுக்கும் உதவலாம். ஆனால் விடமாட்டர்கள். முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பித்து புலம்பெயர் உதவிகளை ஆக்கபூர்வமாக செய்வதாக தேர்தல் நேரம் வாக்குறுதி அளித்தார். ஆனால் செய்யவிடவில்லை.
  13. நல்லெண்ணம்தான் வன்னியன் சார். தனது பிராந்திய ஆளுமை குறையக்கூடாது என்ற நல்லெண்ணம். ஆனால் வந்த வரைக்கும் லாபம் என்ற வகையில் இதை மக்கள் பயன்பாட்டிற்கு விட்டால் - மக்களும் பயனடையக்கூடும். இந்த கட்டிடம் எழும்பிய சமயம் - இங்கே பெயர் சிபாரிசு செய்யுமாறு ஒரு உறவு கேட்டு நாங்களும் அடித்து பிடித்து எழுதினோம்🤣. பின்னர் இதை பரமரிக்க காசு இல்லை என்றும், இலங்கை இராணுவம் ஏற்று நடத்த போவதாயும் செய்திகள் வந்தன. இப்போதைக்கு இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். என் தகவல்கள் தவறு என்றால் சுட்டவும்.
  14. சம்பல் மலேயா, ஜாவாவில் உள்ளது. இலங்கையில் கணிசமான மலாய் ஆதிக்கம் உண்டு. ஏற்கனவே ஜம்புக்காய் (Malay apple) பற்றி கதைத்தோம். அதேபோல் கச்சான், கடை (கெடே) போன்ற சொற்கள் மலாய் மொழியிலும் உண்டு. இங்கே இருந்து அங்கே போனதா அல்லது அங்கே இருந்து இங்கே வந்ததா அல்லது வேறு எங்கேயும் இருந்து இரெண்டு பேரிடமும் வந்ததா தெரியவில்லை. உலக உணவுச் சரித்திரம் விசித்திரமானதும் ஒரு நேர்கோட்டில் அமையாததும். சோழர்கள் ஶ்ரீ விஜயவை தோற்கடித்த பின் மலாய் மொழியை அப்போதைய தமிழ் எழுத்துரு கொண்டு எழுதியுள்ளார்கள் ஆகவே இங்கே இருந்து அங்கே போய் மீண்டும் இங்கே வந்திருகவும் கூடும்.
  15. பூரி மாரி இருந்ததே?🤣. நான் ஊரில் அப்பம் மாரி தமிழ் நாட்டில் காணேல்ல. ஆனால் கேரளத்தில் உண்டாக்கும்🤣
  16. இறந்த பின் விரும்பிய இடங்களை ஆவியாக வந்து ஒரு முறை பார்ப்பார்கள் என்பார்கள் - நான் கட்டாயம் பெசண்ட் நகர் கடற்கரைக்கும், ப்ரோகின் பிரிட்ஜுக்கும் போவேன் என நினைக்கிறேன்🤣 ஜம்புக்காய் நார்த்தன்மையாக மிகவும் நீர்பிடிப்பாக கொஞ்சம் இனிப்பாக இருக்கும். சின்னதில் இந்த மரங்கள் இருக்கும் வீடுகளுக்கு விசிட் போவது என்றால் தனிச் சந்தோசம். கடைகளிலும் மிக குறைந்த விலைக்கு வாங்கலாம். இலங்கைக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. தேடிப்பார்க்க வேண்டும்.
  17. 👏🏾👏🏾👏🏾 பலே பலே. மிகச் சரியான பதில். அதுவும் ஒரு முயற்சியிலே.
  18. @ராசவன்னியன் எந்த ஊர் என்பவரே, இந்த ஊரை சொல்லுங்களேன். இந்த ஊர் உங்களுக்கும் தெரிந்த ஊர் அல்லவா?
  19. தெல்லிபளை எங்க இருக்கு, கவுணாவத்தை வைரவர் எங்க இருக்கு?🤔
  20. தகவல்கள் இங்கே உள்ளது. https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=781

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.