goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
Everything posted by goshan_che
-
அந்தக் கண்கள்- நிழலி
அருமையாய் எழுதியுள்ளீர்கள் நிழலி, அருமை. முந்தநாள் கிட்டத்தட்ட இதை ஒத்த சம்பவம் எனக்கு. வேலை விசயமாக 70 மைல் வேக தடை உள்ள இரெட்டை லேன் வீதியில், வேக மாக ஓடிக்கொண்டிருக்கிறேன். தூரத்தே ஒரு நடை மேம்பாலம். அதற்கு கீழ் ஏதோ ஒரு பொருள் தெரிகிறது, வேகத்தை மட்டுப்படுத்தி அடுத்த லேனுக்கு மாறி என்ன என்று பார்த்தால்…. குழந்தைகளை காவும் carrycot ! ஒரு கணம் ஈரக்குலை நடுங்கி விட்டது. வீதியோ அருகில் hard shoulder உள்ள மோட்டர் வே அல்ல, உடனடியாக நிறுத்த முடியாத A ரோட். ஒரு வழியாக அடுத்த உள்ளோட்டில் வாகனத்தை போட்டு விட்டு 999 க்கு அடித்தால் - விடயம் தெரியும் பொலிஸ் போகிறது என அவர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே எதிர் திசையில் இரெண்டு பொலீஸ் கார்கள் கூவிக்கொண்டு பறந்தன. கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு வெளிக்கிட்டு வந்து விட்டேன். அது வெறும் கூடையாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் எனது திசையில் அம்பூலன்ஸ் என்னை முந்தி ஓடி இருக்கும். நியூசிலிம் வந்திருக்கும். அவங்கள ஓட விட்டு நீங்கள் பசன்சர் சீட்டில் இருந்து பாருங்கோ…. காரில் டிரைவர் சீட் மட்டும் போதும் என்றாகும்🤣
-
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்..வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் Jeyalakshmi CPublished: Wednesday, March 22, 2023, 13:56 [IST] சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் வீடியோ மூலம் தனது உடல் நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கொரோனா தொற்று மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. மீண்டார் இளங்கோவன் இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. வீடியோவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர் நலமுடன் இருப்பதாக நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/i-am-fine-i-will-be-discharged-soon-video-posted-by-evks-ilangovan/articlecontent-pf884143-504081.html டிஸ்கி: அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரியோ?
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
நல்லதொரு துணுக்கு நாதம். நன்றி. நானும் ஏதோ ஜமீந்தார் தன் ஆசைநாயகி நியாபகமா வைத்த பெயர் என நினைத்தேன்🤣. IR8 = International Rice Research institute இல் உருவாக்கப்பட்ட ஒட்டு அரிசியினம்.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ரதி அக்கா சிறு வயதில் யாழில் இருந்து மட்டு போனவ என்று சொன்ன நியாபகம். மட்டு, திருமலையில், வன்னியில் கூட பெரும்பாலும் அரிசி மாத்தான். நெல்மிகை மாவட்டங்கள் எல்லோ? கோதுமையில் செய்வதென்றால் எல்லா இடமும் அவித்துத்தான்.
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இல்லை வன்னி, திருமலை, மட்டகளப்பில் நாங்கள் கோதுமை மாவுக்குள் தண்ணியை ஊத்தி பசை கிண்டிப்போட்டு, அப்படியே சாப்பிடுவோம்🤣. என்ன மூத்தவரே, உங்களுகே கிழக்கில் இப்படி செய்வதுண்டா என தெரியவில்லை, பிறகு எப்படி உலகிலேயே யாழ்பாணத்தில் மட்டும்? அவைக்கு சொல்லி போடாதேங்கோ…. ஊரில…உத…. அமெரிக்கன் மா எண்டும் சொல்லுறவை🤣 ————— இந்த திரியை பார்த்து @ராசவன்னியன் சார் டென்சன் ஆக போறார் 🤣
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ஐ லைக் திஸ் கு.சா டச் யா …🤣 காதலில் இதுதான் ஏழு நிலை…. காணும் இடம் எல்லாம் அவன், தூணிலும் அவன், துரும்பிலும் அவன், போனிலும் அவன், பிசைந்த புட்டிலும் அவன். மணந்தால் மாஸ்கோ தேவன், இல்லையேல் மரண தேவன் 🤣
- திரும்பும் வரலாறு!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
யாழில் ஒரு உள்ளூர் கபடி போட்டி விடாமல் -போட்டி வைக்கும் போதே நீங்கள் கடும் உழைப்பாளி என்பதை தெரிந்து கொண்டேன் ஜி🤣. நன்றி. வாசிப்பில் கரை கண்ட உங்களையே திருப்திபடுத்திய எழுத்து என்பது பெருமையாக உள்ளது🙏🏾.
-
நடுவீதி...
இதிலும் பாத்திரம் அறிந்துதான் பிச்சை இடல் வேண்டும். பொதுவாக கேட்போருக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கி, உடைத்து நான் ஒன்றை எடுத்து விட்டு (கடையில் கொடுத்து காசாக்கி குடு/குடிப்பதை தடுக்க) மிகுதியை கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் வீதி விளக்கில் நின்று யாசகம் எடுப்பவர்கள் பலர் இவ்வாறு உணவை வாங்க மாட்டார்கள். அல்லது வேண்டா வெறுப்பாக வாங்குவார். தொடர்ந்து போகும் வழி என்றால் - அடுத்து உங்கள் காரை தவிர்த்து விட்டு (இந்த லூசன் பிஸ்கெட்தான் தருவான்🤣) அடுத்த காருக்கு போவார்கள். அவர்கள் செய்வது வேலை. மாபியாக்கள் முதலாளிகள். நான் கடவுள் படம் தத்திரூபமாக காட்டி இருக்கும். அதே போல் ஒரு சாண்ட்விச் வாங்கி தா என கேட்பவரும் உண்டு. இங்கே இப்படி பாவம் பார்த்து வீட்டை கொண்டு போய் வச்சு, வேலையும் எடுத்து கொடுத்த ஆட்களை திரும்பி ஒருநாள் திடீரென வந்து குத்து கொண்டதும் உண்டு. தாயும் 13 மகனும் அவுட். தந்தைக்கு பலத்த காயம். https://www.independent.co.uk/news/uk/crime/mother-and-son-killed-stourbridge-west-midlands-took-homeless-man-in-tracey-peter-pirece-wilkinson-tripple-stabbing-a7661501.html?amp
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அக்கா. வருகைக்கும், வாசித்தமைக்கும், பாராட்டுக்கும்🙏🏾. மறக்கத்தகுமோ…முப்பாட்டன் எல்லோ…🙏🏾. உங்கள் எண்ணைப்படி முடிவை அமைக்காமைக்கு மன்னிக்கவும். நன்றி அண்ணா.
-
படம் கூறும் கதைகள்
ஒரு நவம்பர் மாதத்தில் பொப்பியையும், காந்தழையும் ஒப்பிட்டு என் மகனுக்கு நான் எழுதிய கவிதை கீழே 🙏🏾. நினைவு மாதம் மகனே, போர் இடர் மிகுந்து மானிடர் மடிந்து வானது பிழந்து வல்குண்டு வீழ்கையில் தான் - அதை மறந்து தன்னினம் நினைந்து பூத்திடும் புன்னைகை சூடி சா - அதை துணிந்து செருக்களம் புகுந்து சாக்களம் ஏகிய செல்வர்கள் வானுள்ள வரைக்கும் வையகம் வாழ்த்தும் வயதில்லா வாலிபர் அவர்தாம். இதில் கசகசா ஒன்றே காந்தழும் அதுவே வீரமும், தியாகமும் ஒன்றே.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
மீண்டும் மீண்டும் ரயில் கொள்ளையன் ரொனி பிக்ஸ் கதையை எழுத தூண்டுகிறீர்கள் 😀.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நன்றி கொழும்பான். இப்ப சுகங்கள் எப்படி? 🤣 சில சமயம் இவனெல்லாம் இந்த பெயருடன் இந்த பாஸ்போர்ட்டில் இருக்கிறானே என்ற கடுப்பையும் காண முடியும்🤣
-
திரும்பும் வரலாறு!
வரலாறு என்றும் கறுப்பு வெள்ளையாக இல்லை. யூதர்களோ எந்த இனமுமோ 100% சுத்தமானவர்கள் இல்லை. அதே போல் ஒரு இனத்தின் மீதான நியாயமான விமர்சனம் அந்த இனத்தை வழித்து துடைக்கவேண்டும் என்ற கொள்கை முடிவுக்கு வரவைத்தது பிழையே. பலஸ்தீனம் என்ற பெயரை விட பழையது இஸ்ரேல் என்ற நாடு. ஆகவே இரெண்டு தேசங்கள் என்பதுதான் அங்கே நியாயமான முடிவு. அதை தீவிர சயனிஸ்டுகளும், ஹிஸ்பொல்லா, ஹமாசும் ஏற்றால் நாளைக்கே தீர்வு வரும்.
-
தமிழன்னை அருட்புகழ்
நன்றி கரு.
-
திரும்பும் வரலாறு!
ஜப்பானியர்களும், ஆங்கிலேயரும் மட்டும் அல்ல, தெனமரிக்காவில் ஸ்பானியரும், கிழக்கிந்தியாவில் பிரான்ஸ், போச்சுகல், டச்சுகாரரும்…ஆபிரிக்காவில் பெல்ஜியம், ஜேர்மனியும், மத்திய ஆசியா, ஐரோபாவில், சொந்த மக்களின் மீதே ஸ்டாலினின் ரஸ்யர்களும் கொடூரத்தையே புரிந்தார்கள். ஆனால் நாஜிகள் மட்டும்தான் அதை யூதர் விடயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முழக்கமாக்கி செய்தார்கள். அத்தோடு அநீதி இழைக்கபட்ட இனமும் அதை மிக தெளிவாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இதனால்தான் நாஜிகள் தனியாக பேசப்படுகிறனர். ஏனைவர்கள் சுரண்டும் இனவாதிகளாக இருந்தார்கள். நாஜிகள் யூத இனத்தை சுவடின்றி அழிப்பதை கொள்கையாக்கி செயல்பட்ட இன தூய்மைவாதிகளாக இருந்தார்கள்.
-
தமிழன்னை அருட்புகழ்
கவிதை அழகு கரு. இந்த நடை மரபிற்கு என்ன பெயர்?
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
அதே. நன்றி நன்னி. 🤣. பார்த்திருக்கவே புரட்டும் நரி. யாரும் பார்க்கவில்லை என்றால் தான் பாவபட்டு காக்கைக்கு வடையை விட்டு கொடுத்தேன், காக்கா வேண்டாம் என்றது என்றும் நரி சொல்லக்கூடும். நன்றி சுவை அண்ணா.
-
தையல்கடை.
அருமை @suvy அண்ணா. எனக்கு கதை தேவையான அளவு இருந்ததாகவே தோன்றுகிறது. இப்படி கோர்வையாக, கனமாக, நீளமாக, ஆனால் விறுவிறுப்பு குறையாமல் எழுதுவதெல்லாம் ஒரு வரம். # தையல்கடை # தொய்வில்லாத தையல்
-
படம் கூறும் கதைகள்
ஓம். இப்படி கனக்க இருக்கு. ஊரில் சைக்கிள் வச்சிருந்தா… போக், ப்ரிவீல், சொக்கச்சோவர் போன்ற பதங்களை கேட்டிருப்போம்….. அவை முறையே…fork, freewheel, shock absorber ஆகும். பிகு படங்களை தொடரவும்🙏🏾.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நன்றி அண்ணா. நானும் தொடர்களை இப்படித்தான் வாசிக்கிறேன். ஏனைய திரிகளில் என் பதில்கள் சுணங்கி வருவதை கண்டிருப்பீர்கள்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
இரெண்டுமே பிரச்சனைதான் மீரா. 1. நீங்கள் சொன்னது போல் காசை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காசை வைத்து வாங்க பொருள், சேவைகள் இருக்க வேண்டும். இந்த நிச்சயமற்றதன்மை இலங்கையில் முன்பு போர்க்காலத்தில் கூட இருந்ததில்லை. இது ஒரு காரணம். அரிசி இறக்குமதி தீர்ந்து விட்டது என்றால் £50 உலையில் வைத்து வடித்து சாப்பிட முடியாது. போனவாரம் ஒருவரை சந்திதேன். பள்ளி நண்பர். மத்திய கிழக்கில் வேலை. நிகர மாத வருமானம் வரி இன்றி பவுண்சில் 10K எடுக்கிறார். இலண்டன் வரும் போது எபோதும் சந்திப்போம். இலங்கையில்தான் இதுவரை வீடு, முதலீடு எல்லாம். இந்த முறை சந்திப்பின் போது கேள்வி எல்லாம் - எப்படி இங்கே குடும்பத்தோடு வருவது என்பதை பற்றியே இருந்தது. இது ஒரு பாஷன் அல்லது trend அல்ல. மிக கவனமாக தமதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை திட்டமிட்டு, இலங்கையில் பல முதலீடுகளை செய்தவர்கள் - இப்போ இப்படி யோசிக்கிரார்கள். நாங்கள் வெள்ளைகாரன் பண்ணை வைக்கிறான் எண்டு பேய் கதை கதைக்கிறம். இது ஒன்றும் புதிதல்ல, வெள்ளைகளில் ஒரு adventure தேடி போக கூடிய பலர் உள்ளார்கள். 1991-96 ஆண்டு கால காபூலில் கூட கடை போட்ட ஆங்கிலேயன் இருக்கிறான். 2. இன்னொரு காரணம் - சுதந்திரம் இன்மை. இலங்கையில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்து இருப்பர். இன்றைக்கும் முகத்தை காட்டி பயமின்றி முக நூலில் நம்மாள் பிரித்தானிய படைகள் ஈராக்கில் போர்க்குற்றம் செய்தன என எழுத முடியும். முடிந்தால் ஓணாண்டி அப்படி இலங்கை படைகள் பற்றி எழுதட்டும் பார்ப்பம்🤣. அவர் மட்டும் அல்ல, நாம் யாழில் கூட முகம் காட்ட மறுப்பது கொலிடே போக வேணும் எண்டுதானே 🤣? நான் முன்பே சொல்லி உள்ளேன் நான் இலங்கை போவது ஒரு வெளிநாட்டினாகத்தான். அங்கே போய் அரசியல் கதைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியும். நான் இலங்கையில் நிண்டால் யாழுக்கு கூட வருவதில்லை 🤣. வெளிநாட்டில் இருந்து திரும்பி போய் அங்கே வாழும் முழுப்பேரும் இப்படி அரசியல் விடயத்தில் வாயையும், சப்பாத்தையிம் பொத்தி கொண்டுதான் வாழ்கிறார்கள். அதில் பிழை இல்லை. சொந்த ஊரில் வாழ அவர்கள் கொடுக்கும் விலை அது. ஆனால் எனக்கு அந்த விலையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. லண்டனில் கஞ்சி குடித்தாலும் சுதந்திரமாக குடிப்பேன். ஊர் விடாய்த்தால் - ஒரு மாசம் போய் “மூடிக்கொண்டு” இருந்து விட்டு வந்து விடுவேன்🤣.
- மனிதா உன்னைத்தான்!
-
திரும்பும் வரலாறு!
நிச்சயம் நடந்தது. ஜப்பானியர்கள் சீனாவை கைப்பற்றி அங்கே சீன இனத்தவரை சொல்லொணா கொடுமைக்கு ஆளாக்கினார்கள். குறிப்பாக comfort women என்று வகை தொகையின்றி சீன பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதே போல் பர்மாவில் இருந்து கிழக்கு நோக்கி death railway என அழைக்கப்படும் ரயில்பாதையை கட்டும் பணியில் பல போர்குற்றவாளிகளை அடிமைகளாக நடத்தி உள்ளார்கள். பலர் இறந்தனர். நான் போய் பார்த்துள்ளேன். தாய்லாந்தின் காஞ்சனாபுரி என்ற ஊரில் இன்றும் இந்த ரயில் பாதை, பாலம் எல்லாம் உள்ளது. இதில் இறந்தவர்கள் பலர் இந்தியா, சிங்கப்பூரில் பிடிக்கப்பட்ட தமிழர்கள். தாமே உயர்ந்த இனம் - சூரிய புத்திரர்கள் என்ற இனதுவேச, இனத்தூய்மைவாதம் இன்றும் ஜப்பானியர்களிடம் உண்டு. ஜப்பானியர் வேற்று இனத்தவரை திருமணம் முடிப்பதும் குறைவு. இன்றளவும் டோக்கியோவில் கூட ஒரு கறுப்பர் நடந்து போனால் ஆச்சரியமாக பார்க்கும் சமூகம்.
- திரும்பும் வரலாறு!