Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நான் மேலே தந்த கட்டுரையில் நான் காந்தி பற்றி சொன்னதற்கு போதிய ஆதாரம் உள்ளது. மன்னிக்கவும் அந்த காலத்தில் லெனினும் இல்லை, கமராவும் இப்போ போல் எல்லாரிடமும் இல்லை - எனவே உங்களுக்கு ஒரு ஆபாச வீடியோவை பார்க்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது 😂. எம் ஜி ஆர் பாலியல் இலஞ்சம் பெற்றதை, தமிழா, தமிழா பாண்டியன் பார்த்தாராமா? 😂. நாளைக்கு நான் கொஞ்சம் காசை விசிறினால் பயில்வான் ரங்கநாதன் உங்களை நயன்யாராவோடு சேர்த்தும் வீடியோ போடுவார். ஆனால் மீண்டும் சொல்கிறேன் - பொய் என கூறியது அம்பிகா/ராதா விடயத்தை அல்ல. அதை பொய் என கூற என்னிடம் ஆதாரம் இல்லை. உண்மை என கூற உங்களிடமும் இல்லை. ஆனால் ராஜாத்தி யாரோ வேறு ஒரு நடிகரின் மனைவி, ஸ்டாலின் ஒரு செய்தி வாசிப்பவரை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பவை - சம்பந்தபட்ட பெண்களே பொது வெளியில் மறுத்த விடயங்கள் - அதை பற்றியே நான் எழுதினேன்.
  2. விஜை எல்லார் வாக்குகளையும் குறி வைக்கிறார். சீமான் ? போற போக்கில் நாம் தமிழரை, நாடார் மஹாசபை ஆக்கிவிடுவார் போலுள்ளது. விஜை வெல்லலாம், தோற்கலாம். ஆனால் - வெறுப்பரசியல் செய்யும், பிளவுவாத சீமான் தமிழ் நாட்டில் வெல்ல முடியாது. ஈழத்தமிழர் போல் குறுகிய சிந்தனை தமிழகத்தில் இல்லை. உங்களுக்கு உதாரணம் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை என நினைக்கிறேன். உதாரணமும், ஒப்பீடும் ஒன்றல்ல. மேலே சொன்னது ஒப்பீடு. அல்ல. உதாரணம். 😂 இவ்வளவுதானா புலவர் 😂. மீண்டும் ஒப்பீட்டுக்கும், உதாரணத்துக்குமான வேறுபாட்டை கருத்தில் எடுக்கவும்.
  3. இதை நான் எங்கேயும் மறுக்கவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் பொதுவெளியில் உள்ள பெண்கள் பற்றி - அவர்கள் இந்த சம்பவங்களை பொதுவெளியில் வந்து வன்மையாக மறுத்த பின்னும் - அவதூறு பரப்ப விட முடியாது. ஏன் என்றால் நாம் எல்லோரும் ஒரு பெண்ணின் மகன்கள், சகோதரர்கள், கணவர்கள், தந்தையர்,மாமன்மார், நண்பர்கள்.
  4. யாழ் களத்தில் சு. ப முத்துகுமார் என தேடவும். பல திரிகளில் எழுதி உள்ளேன், ஆதாரங்களுடன். https://www.theguardian.com/commentisfree/2018/oct/01/gandhi-celibacy-test-naked-women For several decades after his death, this episode was not widely known. Popular accounts of Gandhi’s life, including Richard Attenborough’s biopic, never mentioned it. The facts are that after his wife, Kasturba, died in 1944, Gandhi began the habit of sharing his bed with naked young women: his personal doctor, Sushila Nayar, and his grandnieces Abha and Manu, who were then in their late teens and about 60 years younger than him. இந்த ஆதாரம் உங்களுக்கும், இத்தனை காலத்துக்கு பின்னும் கோஷான் ஆதாரம் இல்லாமல் எழுதவார் என நினைத்து உங்கள் கருத்தை லைக்கிய அண்ணனுக்கும்😂.
  5. இந்த லிஸ்டில்… சீமான் றோவுடன் சேர்ந்து துரோகத்தால் கொலை செய்த… நா த க வின், முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர், இணை-நிறுவனர் - இனமான வீரன் சு ப முத்துகுமாரையும் சேர்க்க வேண்டும்.
  6. காந்தியடியே மகள் முறையான சிறுமியை அருகில் வைத்து கொண்டு நித்திரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர் என்கிறார்கள். ஒரு நடிகனுக்கு (ரஜனி) முதல்வர் காணி கொடுத்தால், அதை வெறும் உதவி என்றும், அதையே ஒரு நடிகைக்கு (அம்பிகா ராதா) கொடுத்தால் பாலியல் இலஞ்சம் எனவும் தானியங்கியாக கருதுவது. கருத்தாளரின் ஆணாதிக்க மனப்பான்மை, அன்றி வேறில்லை. எம் ஜி ஆரிடம் பண உதவி பெற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவருக்கு தவறான உதவி செய்தனர் என்கிறீர்களா? பிகு இந்தியன் என சொல்லி கொள்ளும் உங்களுக்கே இந்திய வரலாற்றை பாடம் எடுக்க கூடாது, ஆனாலும் தரவு பிழை என்பதால் சொல்கிறேன் - காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தண்டி யில் நடந்தது. வேதாரணயத்தில் அதன் ஆதரவு போராட்டம் ராஜாஜி நடத்தியது. வாரும்…இரும்…படியும்…😂
  7. வணக்கம் தோழர், சீமானுக்கு தனி திரிகள் எல்லாம் ஓடிய போது வராத யாழ்கள விதிகள் மீதான அக்கறை, இப்போதாவது வந்துள்ளது மகிழ்ச்சி. யாழ் களம் தமிழக அரசியல் கட்சிக்கு ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்றே சொல்கிறது. அப்படி நான் செய்வதில்லை. தமிழக விடயங்களில் ஒதுங்கி இருக்கும் படியும் சொல்லவில்லை. அப்படி எண்டால் தமிழக செய்தி பகுதியை read only ஆக்கி இருப்பார்கள். நான் நாதக என்றால் ஓடி வருவதில்லை தோழர், பறந்து வருவேன். ஈழ, தமிழக தமிழர் இடையே பரவி உள்ள சீமான் என்ற விடத்தை முறிப்பது என் தலையாய கடன்களில் ஒன்று.
  8. இங்கே பல பேர் எனக்கு பல வேடங்கள் தந்துள்ளார்கள்… அதில் திமுக 200 ரூபாய் உ பி என்பதும் எப்போதோ நடந்து விட்ட பட்டாபிஷேகம்தான் தோழர் ஆகவே கவலை வேண்டாம். நீங்கள் சொன்னதில் ஸ்டாலின் பற்றியதையும், கருணாநிதி பற்றியதையும் மட்டும் நான் கேள்வி கேட்க ஒரே காரணம், இதில் சம்பந்தபட்ட இரு பெண்களும் பொதுவெளியில் வந்து, அப்படி எதுவுமே இல்லை என மறுத்துள்ளார்கள். ஏனையவற்றில் இப்படியான ஆதாரத்தை என்னால் தரமுடியவில்லை. சம்பந்தபட்ட பெண்களே இல்லை என மறுத்த போது, அரசியலுக்காக அதை மீள, மீள காவுவது - காவுபவர் மிக மட்டமானவர் என்பதையே காட்டுவதாக நான் கருதுகிறேன் தோழர். தனியொருவன் படத்தில் வரும் வசனம் போலத்தான் இதுவும். உண்மைக்குதான் ஆதாரம் தேவை. பொய்க்கு அல்ல. நான் உண்மையை எழுதுவதால் - ஆதாரம் இல்லாமல் எழுத முடிவதில்லை. நீங்கள் எழுதும் ஒவ்வொரு கிசு கிசு வையும் என்னால் ஆதாரத்துடன் பொய் என நிறுவமுடியவில்லை. அப்படி நிறுவ முடிந்தவற்றை பற்றி மட்டும் எழுதுகிறேன். நீங்கள் கண்டமேனிக்கு உங்கள் மனதில் வரும் வக்கிர எண்ணங்களை எல்லாம் எழுத ஆதாரம் தேவையில்லை என்பதையும் ஏற்கிரேன். ஆகவே நீங்கள் ஆதாரம், தரவு எதை பற்றியும் கவலைபடாமல் எழுதலாம். பிகு அரசியல்வாதிகள் மட்டும், அல்ல அயோக்கியர்கள் எங்கும் நிறைந்துள்ளார்கள். யாழ்களத்திலும். இதில் எம் ஜி ஆர் - அம்பிகா, ராதா, அவர்களின் தாய் சரசுக்கு அரச நிலம் வாங்கி கொடுத்தது, அதே போல் ரஜனிக்கு ராகவேந்திரா மண்டப நிலம் வாங்கி கொடுத்தது என சிலதை அண்மையில் திருநாவுக்கரசர் வெளிப்படையாக பேட்டியில் கூறி உள்ளார். ஆனால் இதன் பின்னால் பாலியல் இலஞ்சம் இருந்தது என்பது உங்கள் ஊகமே. அப்போ ரஜனியிடமும் எம் ஜி ஆர் பாலியல் இலஞ்சம் பெற்றாரா? ஆகவே நாம் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாத எதையும், ஏதோ கண்ணால் கண்ட சாட்சி போல் அடித்து விடக்கூடாது தோழர். அப்படி எழுதுவது அருவருக்கத்தக்கது.
  9. ஆனால் வதந்திகளின் அடிப்படையில் வேலையில்லாதவன் திண்ணையில் குந்தி இருந்து வம்பு கதை கதைப்பது போல் ஆதாரமில்லாத கிசு கிசுகளை கதைப்பது, எழுதுவது இயல்பானதொன்றல்ல. நாளைக்கு நான் புரட்சி நயன்யாதாராவினால் இம்சிக்க பட்டார் என ஒரு பொய் செய்தியை எழுதுகிறேன் என வையுங்கள். நீங்கள் என்ன செய்ய முடியும்? மீடியாவை கூப்பிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மறுக்க முடியும். அப்போதும் இன்னும் சில வம்பளப்பவர்கள் “நாங்க பார்க்காத மறுப்பா” என சொல்வார்கள் இல்லையா? சம்பந்த பட்ட, பொதுவெளியில் உள்ள, முன்னாள் முதல்வருக்கு நெருக்கமான பெண்ணே, அவர் அதிகாரத்துக்கு அருகில் இருந்த போதும், எதுவும் செய்யவில்லை அத்துடன், அப்படி எதுவும் நடக்கவில்லை என மீள, மீள மறுக்கும் போது…. அதை பேசாமல் விடுவதுதான் - decency.
  10. ஓம்…மத்திய அரசின் கீழ் இருந்தாலும் தமிழ் நாட்டு நீதிபதிகள் முற்போக்கானவர்கள்… வடக்கே போக, போக கோமிய பாவனை காரணமாக மூளை மாட்டு மூளை போல் மாறிவிடும். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மத்திய பாடத்திட்டத்தில் இப்போ புட்பகவிமானம், அனுமன் சஞ்சீவியை தூக்கியதை எல்லாம் வரலாறு என சேர்க்கப்போகிறார்களாம். வரும் காலத்தில் மாட்டு மூளை, அமிபா மூளையாக வாய்புண்டு.
  11. இனி வேலைக்கு என்ன செய்யலாம்? ஏதாவது கட்சி தொடங்கி, புலம்பெயர் முட்டகோசுகளிடம் திரள்நிதி திரட்டலாம் என யோசிக்கிறேன்😂 பிகு விஜி அண்ணிக்குத்தான் வாய்பூட்டு 😂. சீமானை தொடர்ந்தும் செ.சை என அடையாளப்படுத்த தடை ஏதும் இல்லை.
  12. ஊகங்களுக்கும் கிசு கிசு களுக்கும் உலக சினிமாவும், உலக அரசியலும் கூட விதிவிலக்கல்ல. அண்மையில் பிரெஞ் அதிபர் தன் மனைவி(அவரின் முன்னாள் ஆசிரியை) ஒரு ஆணாக இருந்து மாறிய பெண் அல்ல என அமெரிக்க நீதிமன்றில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார். இதே போல் மிஷேல் ஒரு ஆண், ஒபாமா ஓரினசேர்க்கையாளர், ஹிலரி கிளிண்டன் ஏலியன் என பல பக்கோடாக்கள் இன்றளவும் விற்பனையில் உண்டு. ஆனால் இவற்றை எண்ணத்தில் சிறியோர் பேசி/எழுதி இன்புற்றாலும், எண்ணத்தில் பெரியோர் வெறும் ஊகங்கள் என கடந்து போவதே வழமை. இதுவும் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியை பற்றி, அவரின் தனிமனித ஒழுக்கம் பற்றி அவதூறு எழுதலும் ஒன்றல்ல. பிகு நீங்கள் கூட ஸ்டாலின்- செய்தி வாசிப்பாளர் என்ற கதையை காவி திரிகிறீர்கள். குறிப்பிட்ட செய்தி வாசிப்பாளர், ஜெயிற்கு நெருக்கமானவர், பகிரங்கமாக இப்படி எதுவும் நடக்கவில்லை என மறுத்த போதும்.
  13. வாவ் அருமையான செய்தி. உந்த பிரச்சினை முடிய, டெல் அவிவ், சீ செல்ஸ், இலங்கை என ஒரு self transfer டிக்கெட் போட்டு போக வேணும்.
  14. முன்பே சொன்னேனே… ரன் திரைப்படத்தில் மைனர் குஞ்சை அட்வான்ஸ் புகிங்கில் ரேப் செய்ய விட்ட கதைதான். அங்கே நாட்டாமை சாத்தப்பன். இங்கே, பாபர் மசூதி தீர்ப்பு புகழ், இந்திய உச்ச நீதி மன்றம். ஒரு பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு போடுகிறார், அதை மிரட்டி வாபாஸ் வாங்க வைத்தார்கள் என்கிறார். அதை ஒரு தடவை கூட பொலிசை விசாரிக்க விடாமல் தடுத்து, குற்றம் சாட்டபட்டவரும், குற்றம்சாட்டியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கை ஊதி நூக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வடு சீமானை விட்டு வாழ்வு நெடுக நீங்காது.
  15. நல்லவேளை இந்த தம்பி 2008 இல் ஓபாமா அமெரிக்க அதிபாராக வர கேட்டார் என எழுதவில்லை. விஜை வருகையின் பின் சீமான் பித்து பிடித்தது (ஹிஸ்டீரியா) போல் கத்துகிறார். அவரின் தம்பிகளோ - ஹலூசினேசனில் அவதிபடுகிறார்கள். ஒரே ஆறுதலான விடயம் நாதக தம்பிகளுக்கே உரிய தூசண தொனி அப்படியே உள்ளது.
  16. இல்லை. ஆனால் கூட்டணி என்பது கட்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பதல்ல. 2026 இல் அதிமுக வென்று, 91-96 போல் ஒரு ஆட்சியை தருமாயின் - அப்போ திமுகவிடன் சேர்ந்தாவது த வெ க அந்த ஆட்சியை அகற்றத்தான் வேண்டும். த வெ கவுக்கு ஒரே ஒரு தீண்ட தகாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே. அதனுடன் நேரடி மறைமுக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார். நீ…பத்து, முப்பது வருடம் முன் பாஜகவுடன் கூட்டு வைத்தாய் எனவே உன்னுடன் சேரமாட்டேன் “தீட்டு” என்பதெல்லாம் பரிகாசிக்கதக்க சிறுபிள்ளைத்தனம். மிக தெளிவாக பெரியாரின் இறை மறுப்பில் தனக்கு உடன்பாடில்லை என சொல்லி உள்ளார். பெரியார் என்ன ஹார்லிக்சா “அப்படியே சாப்பிட”. நான் கூட கோவில் போவேன், சர்ச் போவேன், பள்ளிவாசல், விகாரை எங்கும் போவேன், கைகூப்புவேன். பிதிர்காரியம் செய்வேன். ஆனால் பெரியாரை அவரின் தாக்கத்ததை மதிக்கிறேன், அவரின் கொள்கைகள் பலதில் உடன்படுகிறேன். இதில் ஒரு தடுமாற்றமும் இல்லை.
  17. அப்போ அரசியல் எதிரிகள் யார்? இந்த கொள்கைகளை ஏற்று கொண்ட, ஆனால் இப்போ அந்த கட்சிகளின் தற்போதைய தலைமைகள் இந்த கொள்ககளில் இருந்து விலகி போய்விட்ட கட்சிகள். குறிப்பாக திமுக - தமிழ் நாட்டில் அன்றாட ஆட்சியை நாசம் செய்யும் கட்சி. ஆகவே அது அரசியல் எதிரி. திமுக, அதிமுக தோற்றுனர் அண்ணாவின், எம்ஜிஆரின் படத்தையிம் விஜை போடுகிறார். ஆகவே இந்த கட்சிகளோடு அவருக்கு கொள்கை முரண் ஏதும் இல்லை. அவற்றின் தற்போதைய ஊழல் தலைமைகளோடு அரசியல் முரண். பாஜக philosophical enemy. திமுக political enemy. முன்னையது strategical enemy (மூலோபாய எதிரி) பின்னையது tactical enemy (தந்திரோபாய எதிரி) இப்போ விளங்கி இருக்கும். உங்களுக்கு புரியும் படி சொல்வதானால்… புலிகளும், டெலோவும் அரசியல் எதிரிகள் (அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்), ஆனால் புலிகளும், பொதுபல சேனாவும் கொள்கை எதிரிகள். டெலோவின் தலைமை பிழைத்தது என்பாதால், புலிகளும், 1986 க்கு முந்திய டெலோவும் வேறு வேறு கொள்கை நிலைப்பாடு என்றில்லை.
  18. இதை விஜை தனது வி சாலை மாநாட்டிலுல் அதற்கு முன்பும், தெளிவாக சொல்லி விட்டாரே. விஜையின் கொள்கை, ஒன்றிய இந்தியாவுள், தேசிய இனங்கள் குறிப்பாக, திராவிட தேசிய இனங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய இனம் - உச்ச பட்ச மாநில சுயாட்சியுடன் வாழ்வதை தொடர்ந்தும் உறுதி செய்தல். இதனால்தான் அவரின் கொள்கை தலைவராக வேலுநாச்சியாரும், அஞ்சலை அம்மாளும் அமைகிறனர். பிறப்பால் ஏற்றத்தாழ்வை ஏற்க மறுத்தல் இன்னொரு கொள்கை (வர்ணாசிரமம்) - இதனால்தான் அம்பேத்கரும், பெரியாரும் கொள்கை தலைவர்கள். பொதுவாழ்வில் ஊழல் இன்மை. இதனால் காமராஜர் கொள்கை தலைவர். இந்த மூன்றுந்தான் தவெகவின் அடிப்படை கொள்கைகள். இவை பாஜகவுக்கு அதன் கொள்கைக்கு நேரெதினாவை. எனவே பாஜக கொள்கை எதிரி.
  19. மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்? ஆதாரம் (இதன் அடியில் - sources என மேலதிக ஆதாரங்களும் குறிப்பிட படுகிறன). தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Post Link | Archive Link Post Link Post Link சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்ற செய்தி உண்மையா? Fact Check/Verification ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, ராசாத்தி அம்மாளின் இளவயது படம் குறித்து தேடினோம். இத்தேடலில் ஏசியா நெட் நியூஸ் தமிழ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி (சிறுமியாக) இருக்கும் பழைய படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்படத்தில் இருக்கும் இளவயது ராசாத்தியம்மாளின் முகத்தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வைரலாகும் படத்திலிருக்கும் பெண் ராசாத்தி அம்மாள் அல்ல என உறுதியானது. இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் “‘நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக்கூடாது!– நடிகை கெளசல்யா” என்று தலைப்பிட்டு ஏப்ரல் 21, 2018 அன்று விகடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவுடன் கட்டுரை ஒன்றின் லிங்கும் தரப்பட்டிருந்தது. அக்கட்டுரையை வாசித்தபின் வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும், அவர் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பதும் தெரிய வந்தது. சிறுவயதில் நாடக நடிகராக இருந்த கௌசல்யா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாகவும் அறிய முடிந்தது. தொடர்ந்து ‘கௌசல்யா செந்தாமரை’ என்று குறிப்பிட்டு கூகுளில் தேடும்போது இவர் குறித்த பல நேர்காணல்கள் நமக்கு கிடைத்தது. அதில் ஒன்றாக கௌசல்யாவும் அவரது மகளும் பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் சிறுபகுதி அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் செந்தாமரை மற்றும் கௌசல்யா தம்பதியின் மகள், “என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. என் அப்பாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி, அவர்களுக்கு 3 பசங்க. இரண்டாவது மனைவி சாட்சாத் இவங்கதான் வேறு யாரும் கிடையாது. எங்க அப்பாவுக்கு எக்ஸ்ராலாம் கிடையவே கிடையாது. எங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவங்களுக்கு பிறந்த ஒரே பொண்ணு நான். ஆக, என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. தயவு செஞ்சு போடுங்க. ஏன்னா எடிட்ல நீங்க கட் பண்ணிடுவீங்க. இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரணும்னு நான் நினைக்கிறேன்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது. கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ராசாத்தி அம்மாள் அல்ல; அது நடிகை கௌசல்யா செந்தாமரை என தெளிவாகின்றது. அதேபோல் மறைந்த நடிகர் செந்தாமரைக்கு லட்சுமி, கௌசல்யா என இரண்டு மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவும் அறிய முடிகின்றது. Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா? Conclusion ராசாத்தி அம்மாள் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படத்தில் செந்தாமரையுடன் இருப்பவர் தொலைக்காட்சி நடிகை கௌசல்யா செந்தாமரை ஆவார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Report from Asianet News Tamil, dated October 29, 2019 X post from Vikatan, dated April 21, 2018 Report from Vikatan, dated April 21, 2018 Facebook post from Behindwoods, dated January 15, 2025 Self Analysis https://newschecker.in/ta/fact-check-ta/rasathi-senthamarai-wife-false பிகு எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு.
  20. இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்கள் என ஐயத்துக்கு அப்பலானா தரவுகள் மூலம் நான் நிரூபித்து இனி இப்படி எழுத வேண்டாம் எனவும் கேட்டு கொண்டேன். அங்கே நழுவி ஓடி விட்டு - அதே அழுக்கை இங்கே மீள காவி வருகிறீர்கள். இதில் நீங்கள் கருணாநிதியை நக்கல் அடிப்பதாக எண்ணினாலும், உண்மையில் அநியாயமாக வசவுக்கு உள்ளாக்குவது, கணவன், குடும்பம், வளர்ந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வாழும் ஒரு அப்பாவி பெண்ணை. உங்களுக்கு இப்படி எழுத. வெட்கமாக இல்லையா? நீங்களும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை அல்லவா? உங்களதோ, எனதோ மனைவியை பற்றி இப்படி ஒரு பச்சை அபாண்டத்தை யாரும் எழுதினால் நம் மனநிலை எப்படி இருக்கும்?
  21. உண்மைதான். சீமான் வழக்கு திரிகளில் பலமுறை எழுதியதுதான். மேற்கு நாட்டு சட்டம் போல அல்ல இந்திய சட்டம். அங்கே திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைத்தால் அது ரேப் ஆக முடியகூடும். மேற்கில் அப்படி அல்ல. இன்னொருவரின் கணவன்/மனைவியோடு தொடர்பில் இருந்தால் மேற்கில் அபராதம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவில் இப்படி.
  22. அப்படி வாக்கு வங்கியாக இல்லை. ஒரு 5% வாக்காளருக்கு எமது பிரச்சனை பத்து முக்கிய பிரசனையில், 10 வது பிரச்சனை. அந்த வாக்காளரை கவரவும், நிஜமாகவே சில தலைவர்கள் எம் மீது கொண்ட கரிசனையுமே இப்படி பேச காரணம்.
  23. மூவரும், கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி, அவர் இறந்த பின் இரெண்டாம் தாரம் தயாளு, மூன்றாவது துணைவி இராஜாத்தி. இந்த 3 வரில் ஒருவரும் இன்னொரு மனிதனின் மனைவி அல்ல. ஆகவே நஸ்ட ஈடு என்ர கதைக்கு இடமில்லை.
  24. கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதும், சீமானுக்கு கவர் எடுக்க இனிமேலும் முடியவில்லை, ஆகவே இப்படி ஒரு கருத்து என்பது புரிகிறது. ஆனால் உங்களை போல் கண்மூடித்தனமாக நான் யாரையும் ஆதரிப்பதில்லை. ஒரளவு நியாயமான திராவிட, தமிழ் தேசிய சக்தி, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வரவேண்டும் என்பது 2009 ற்கு முன்பே என் அவா. கனவு. அதை விஜை நிறைவேற்ற கூடும். ஆகவே வரவேற்கிறேன். அவரும் சீமான் போல் பெட்டி… அல்லது கமல் போல் ராஜ்யசபா சீட்டுக்கு விலை போனால்…அவரையும் விமர்சிப்பேன். பிகு திமுக, அதிமுக, காங்கிரஸ் ஓடு விஜை கூட்டு வைக்கலாம். அது அரசியல் ….இவர்கள் அரசியல் எதிரிகள். ஆனால் கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவோடு சேர்ந்தால், அல்லது ஆர் எச் எஸ் சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க பெரியாரை விமர்சனம் செய்வது என இறங்கினால்…வெளுவை நிச்சயம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.