Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஈரோடு தேர்தல்: நோட்டா 326%, சீமான் 123%, திமுக 5% - ஆனாலும் பெரியார் மண்ணில் பலிக்காத சீமானின் கனவு! ஈரோடு தேர்தலில்... 'நாம் தமிழர் கட்சி படுதோல்வி... நூலிழையில் டெபாசிட்டையும் இழந்தது', 'தி.மு.க அபார வெற்றி' என்று பரபரப்பான பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், விழுந்திருக்கும் வாக்குகளைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அலசினால்... சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட, சுமார் ஒன்றரை மடங்கு வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஆனால், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இல்லாத நிலையில், அந்த வாக்குகளை மொத்தமாக 'சீமான் அள்ளுவார்' என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த ஆச்சர்யமும் நிகழ்ந்துவிட வில்லை. ஈரோடு கிழக்கு கடந்த தடவை அ.தி.மு.க அள்ளிய வாக்குகளில் கிட்டத்தட்ட 33 சதவிகித வாக்குகள் இந்தத் தடவை பதிவாகவே இல்லை. மீதமுள்ள 67 சதவிகித வாக்குகளில் கணிசமான வாக்குகள் சீமானின் நாம் தமிழருக்குக் கை மாறியுள்ளன. அதேசமயம், தி.மு.க மற்றும் நோட்டாவுக்கும்கூட பாய்ந்துள்ளன என்பதையும் அடிக்கோடிட்டுக் குறித்துக் கொள்ள வேண்டும். கடந்த 2021 ம் ஆண்டில் இந்தத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது பதிவான மொத்த வாக்குகள் 1,51,292. இதில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள், 11,629 (7.7%). அடுத்து, 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள், 1,70,190. இதில், நாம் தமிழர் கட்சி பெற்றது 10,827 வாக்குகள் (6.4%). இந்த 2024-ல் நடைபெற்றிருக்கும் இடைத்தேர்தலில் மொத்தம் பதிவானது 1,54,657 வாக்குகள். இதில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருப்பது 24,151 வாக்குகள் (15.6%). முந்தைய தேர்தலைவிட 13,314 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்திருக்கும் கூடுதல் வாக்குகளை முந்தைய வாக்குகளுடன் ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 123% வளர்ச்சி. சீமான் - ஸ்டாலின் தி.மு.க-வின் வாக்குகளைக் கணக்கிட்டால்... 2021-ல் 67,300 வாக்குகள் (44.5%), 2023-ல் 1,10,156 (64%), 2024-ல் 1,15,709 (74.7%). முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது, தற்போது 5,553 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இது, சுமார் 5% வளர்ச்சி. நோட்டாவின் வளர்ச்சி, 2021 ல் மொத்தம் பதிவான வாக்குகளைக் கணக்கிடும்போது, 1,546 வாக்குகள் (1.02%). இதுவே, 2023 தேர்தலில் 1,432 வாக்குகள் (0.84%). இந்த 2024 தேர்தலில் 6,109 வாக்குகள் என உயர்ந்துள்ளது (3.94%). அதாவது, முந்தைய தேர்தலைவிட 4,677 வாக்குகள் நோட்டாவுக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இது, 326% எனும் அபார வளர்ச்சி. கடந்த 2023 தேர்தலை ஒப்பிடும்போது, இந்தத் தேர்தலில் 15,533 பேர் வாக்களிக்கவில்லை. 2023 இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வாக்குகள், 43,923. இந்தத் தேர்தலில் குறைந்துபோன இந்த 15,533 வாக்குகளை அ.தி.மு.க-வின் வாக்குகள் என்று ஒரு கணக்குக்காக எடுத்துக் கொள்வோம். மீதமுள்ள 28,390 வாக்குகள் வாக்குகள்தான் தி.மு.க-வுக்கு 4,800, நாம் தமிழருக்கு 13,314, நோட்டாவுக்கு 4,677, மீதமுள்ளவை சுயேச்சைகள் பலருக்குமாக பிரிந்துள்ளன. பெரியார் இதெல்லாம் இடைத்தேர்தல் கணக்குகளே. இதை வைத்தெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆம், சீமானுக்கும் நோட்டாவுக்கும் கூடுதலாகக் கிடைத்த வாக்குகள்... என்பது, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கிக் கொண்டதால் கிடைத்தவையே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேசமயம், அந்தப் பலன் மொத்தமாக சீமானுக்கே போய்ச் சேரும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். சீமான் கட்சியினருக்கும் அது கனவாகவே இருந்தது. இதை எதிர்பார்த்தே தி.மு.க-வும் பலமாகக் களமாடியது. கடைசியில், ஈரோட்டில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. https://www.vikatan.com/amp/story/government-and-politics/erode-by-election-results-an-over-view டிஸ்கி 1. இது விகடன் இலவச கட்டுரை ஆகவே யாழுக்கு எந்த அலுப்பும் வர வாய்ப்பில்லை. 2. ஈரோடு கிழக்கில் நாம் மேற்கு நாட்டு அரசியல் பார்வையில் தமிழ் நாட்டை பார்ப்பதாக அவல் மென்ற தம்பிக்கு விகடன் சுவிற்சலாந்து பத்திரிகை இல்லை என்பது விளங்கும் என நினைக்கிறேன். விளங்கும் வரை கீழே உள்ள இரு மேற்கோள்களையும் மீள, மீள படிக்கலாம். 👇👆 இதுதான் ஈரோட்டில் என்ன நடந்தது என்பதன் ரத்தினச்சுருக்கம்.
  2. தேர்தலே இல்லாத தேர்தலில்தான் இத்தனை வருசமா, இத்தனை தேர்தல்களாக முக்கி முக்கி நாதக போட்டியிட்டு கட்டுகாசை இழக்கிறதா? Doing the same thing again and again and expecting a different result is the definition of insanity. தாம் வெல்லவே முடியாத தேர்தல்…இது தேர்தலே அல்ல என தெரிந்தும்…அத்தனை தொகுதியிலும் அத்தனை தேர்தலிலும் ஏன் போட்டி? சீமானுக்கு insanity யா?
  3. அந்த வீடியோவை நீங்கள் பார்தீர்களா? நான் பார்த்தேன். தமிழ் நாட்டி உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு என்ன நடந்தது, ஏன் இது விசாரணையாகவில்லை என கேட்டறிந்தேன். இதன் அடிப்படையில்தான் இந்த கருத்து அமைந்தது. அந்த வீடியோ இப்போதும் டிவிட்டரில் இருக்கலாம் தேடிப்பாருங்கள். வீடியோ எடுக்கப்படும் கோணம், அந்த சிறுமி அந்த நாதக காமுகனுக்கு எதிராக போராடுவது அது நிச்சயமாக சிறுமிக்கு தெரிந்து எடுக்கப்ப்ட்ட வீடியோ இல்லை என்பதை உணர்த்தும். உங்களிடம் ஒரு கேள்வி…. இதுவரைகாலமும் மெளனவிரதம் இருந்த உங்களுக்கு இந்த செய்தியில் அந்த பகுதியை மேற்கோள் காட்டி முட்டு கொடுக்க மெளனவிரத்தை உடைக்கவேண்டி வந்ததே. அதை கவனித்த நீங்கள் கீழ்கண்ட மேற்கோளை கவனிக்கவில்லையா? அல்லது நா த க உறுப்பினர் என்பதால் ஒரு சிறுமியை விருப்பம் இல்லாமல் பாலியல் தொந்தரவு செய்தாலும் அது உங்களுக்கு ஏற்புடையதா? உங்களுக்கு லைக் போட்ட யாழில் இப்போ அதிகம் எழுதாத மற்றொருவரும் கேள்விக்கு பதில் கூறலாம்.
  4. பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை! Yogeshwaran MoorthiUpdated: Saturday, February 8, 2025, 14:47 [IST] ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 63,984 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 13,945 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் திமுக முன்னிலை பெற்றுள்ளது. Also Read இதனால் திமுக தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தவில்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும். நிச்சயம் ஈரோடு பகுதியில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம்தான். இந்த இடைத்தேர்தல் மக்களிடையே எழுச்சி இல்லாத, உற்சாகமில்லாத தேர்தல். என்னை பொறுத்தவரை வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விடவும் மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாக பார்க்கிறோம். ஏற்கனவே திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்று தான். தொடக்கம் முதலே இந்த இடைத்தேர்தலுக்கு திமுகவும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் தான், மக்களை பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் நிகழவில்லை. Recommended For You இந்த தேர்தல் களத்தில் நான் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதேபோல் பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று நிச்சயம் கிடையாது. அந்த காலம் மாறிவிட்டது. பெரியாரை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். பெரியாரை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதற்காக வாக்கினை மாற்றி போடும் அளவிற்கு சக்தி இருக்கா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன் வைத்தார்கள். பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைதான் ஈரோடு உணர்த்தி இருக்கிறது. பெரியாரை கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது. ஒருவேளை பெரியாரால் தான் நாம் தமிழர் தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன். யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால் திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seeman-has-spoken-a-bit-too-much-against-periyars-thoughts-says-bjp-state-president-annamalai-after-678343.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=678465-p8 டிஸ்கி தட் “வாங்கின காசுக்கு மேலாலயே கூவீட்டாண்டா கொய்யால” மொமெண்ட்
  5. Tamil Nadu: Couple caught having sex inside Naam Thamizhar Katchi party office While all the contesting parties are leaving no stones unturned to woo the voters at RK Nagar by-poll with tall promises and colourful booths, Naam Thamizhar Katchi finds itself in thick soup. A video has surfaced, in which a couple, allegedly supporting Naam Thamizhar is seen to have used the party's office to have sex. The couple filmed themselves while getting intimate in front of a poster carrying the party leader and the late LTTE Chief Prabhakaran's picture. In the video, the woman is seen asking the man to stop, who then forces her to comply to his wishes. The issue has caused huge embarrassment to the party but the party supporters have immediately called the video doctored, and a deliberate attempt to defeat the party at RK Nagar election. The party has fielded Kalaikottudhayam, as its candidate under 'twin candles' symbol. https://www.indiatoday.in/amp/india/story/tamil-nadu-couple-sex-naam-thamizhar-katchi-rk-nagar-by-poll-968181-2017-03-28 டிஸ்கி தேவையில்லை. ஆனால் இந்த வீடியோ ஆதாரத்தை கண்டவர்களுக்கு தெரியும் அதில் உள்ளவர் ஒரு சிறுமி என்பதும், அவர் தன்னை விடுவித்து கொள்ள போராடினார் என்பதும். வீடியோ மறைவாக எடுக்கப்படுவதும் தெளிவாக தெரியும். 👆👇 இதெல்லாம் ஒரு பொழப்பு.
  6. இதே போல் விஜி அண்ணிக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என பலர் எப்போதும் குரல் எழுப்பினார்கள். ஆனால் செழுமை ஓவர்டோஸ் ஆகி தம்பிகள் அப்படி சொன்னவர் அனைவரையும் போட்டு பிராண்டி விட்டார்கள். அதே போல் தலைவரின் ஆளுயர நாதக பேனரின் முன் ஒரு பள்ளி சிறுமியை பாலியல் கொடுமை செய்த நா த க தம்பி எந்த கட்சி நடவடிக்கக்கும் ஆளாகாமல் செழுமையாக வாழ்கிறார் என்பதும் உண்மையே.
  7. 15% கூட்டணி இல்லை. ஆனால் இரு குதிரை ரேஸ். இதே தொகுதியில் நான்குமுனை போட்டியில் நாதக எடுத்தது 10,000. மீண்டும், மீண்டும் ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டின் பெரும்பான்மையான மக்களோடு தீராபகையை மூட்டி விட, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். இதுதான் இவர்களின் முதன்மை நோக்கம். இதை அடைய பாவிக்கும் கருவிதான் தேர்தல், கட்சி, அரசியல் எல்லாமுமே.
  8. நீங்கள் என்பது உங்களை தனிப்பட்டு அல்ல - இந்த “திமுக திறமா” வாதத்தை முன்வைப்போர் பற்றி. நீங்கள் இன்னொரு திரியில் பிஜேபி கூட்டணிக்கு போனால் நாதக ஆதரவை விலக்கி கொள்வேன் என எனக்கு கூறியது தெரியும். நான் எவரும் பி ஜே பி யோடு கூட்டணி வைக்க கூடாது என்பவன். முன்பு வைத்ததும் மகா பிழை என்பவன். ஆதாரம் - நாம் தமிழர் என்பது அரசியல் கட்சி என்பதற்கு அப்பால் - இந்திய ஒருமைபாட்டுக்கு தமிழ் தேசியத்தால் வரும் ஆபத்தை தவிர்க்க, மடைமாற்ற செயல்படும் RAW வின் intelligence asset என்பதே எனது வாதம். இதற்கு சுப முத்துகுமார் கொலை முதல் பல சந்தர்சாட்சியங்களை யாழில் தந்துள்ளேன். என்னை பொறுத்தமட்டில் சீமான் மனதால் சங்கி அல்ல. அவர் ரோவின் ஆளுகைக்கு உட்பட்டவர். வியாபாரி. பிஜேபி, காங்கிரஸ் யார் ரோவின் எஜமானார்களாக இருக்கிறார்களோ அவர்கள் சொல்படி ஆடுவதை தவிர சீமானுக்கு வேறு தெரிவு இல்லை. ஆகவே இதுவரை நாம் தமிழர் பிஜேபி யோடு கூட்டணி வைப்போம் என அறிவிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், பெரியாரை மேடையில் ஏற்றி, அவர் இயக்கத்தின் வழி காட்டி என ஆரம்பித்த சீமான், பிஜேபி ஆட்சிக்கு வந்த பின் கொஞ்சம், கொஞ்சமாக நிலை மாறி, இன்று பெரியாரை ஈ வே ரா எனவும், எச் ராஜாவை பேரறிஞர் எனவும் சொல்ல ஆரம்பித்துள்ளார் என்பதை பார்க்கும் போது -அவர் ஒரு பொம்மை என்பது அவரை ஆட்டும் நூல் டெல்லியில் உள்ளது என்பதும், டெல்லியில் இருப்போரின் வசதிக்கு ஏற்ப அரசியல் செய்வதை தவிர சீமானுக்கு வேறு வழியில்லை என்பதும் புரியும். மறுபடியும் உங்கள் புத்தியை நீங்களே ஏளனம் செய்கிறீர்கள். 15% வாக்கு, வாக்காளர் பெரியாரை அடித்து துவைத்தது என்றால்…. 85% வாக்கு பெரியாரை துதிக்கும் வாக்காளர் என்பதா? அதனால்தான் யாழ்பாணத்தில் டக்லசுக்கு விழும் வாக்குகளை உதாரணம் காட்டினேன். தலைவர் கூட்டமைப்பே வழி நடத்திய தேர்தல்களில் கூட இதை ஒத்த சதவீதம் டக்ளசுக்கு போட்டது. அந்த வாக்குகள் பிரபாகரனை அடித்து துவைத்து பெற்ற வாக்குகளா? இல்லைத்தானே.
  9. ஆனால் நாதக ஒரு உள்ளூராட்சி சபையை கூட கைப்பற்றியதில்லை. ஒரே ஒரு வேட்பாளர் வென்றார் அவரும் சில மாதங்களில் திமுக வுக்கு ஓடி விட்டார். ஆனால் மக்கள் இயக்கமாகவே, விஜை நேரடியாக ஆதரிக்காமல் கணிசமன வெற்றியை உள்ளூராட்ச்சி தேர்தலில் அடைந்தார்கள். சீமானின் வாக்கு வங்கி மறுக்க முடியாதது. ஆனால் அது தனியாக நிற்கும் போதுதான். வாக்கு வங்கி அப்படியே கூட்டணியில் தொடரும் என்பதும் இல்லை. அதை விட முக்கியமான விசயம் - சீமான் கொடுக்கும் அதே பொருளை விஜையும் கொடுப்பதுதான். இருவருமே அரிசி விற்கிறார்கள். சீமானின் அரிசியில் அநாகரீகம், கொள்கை பல்டி என பல கற்கள் உள்ளன, ஆனால் விஜையின் அரிசி ஒப்பீட்டளவில் தூய்மையாக தெரிகிறது. ஒரே விலைதான். நுகர்வோர் எங்கே போவார்கள் என்பதை கணிப்பது கடினம் அல்ல.
  10. தயவு செய்து small print ஐ வாசிக்கவும்🤣. நா த க, பாஜக தனி தனியா அல்லது இருவரும் சேர்ந்து கேட்டால்தான் இந்த நிலை வரலாம் என நான் நினைக்கிறேன். One week is a long time in politics என்பார்கள். 15 மாதத்தில் எதுவும் நிகழலாம்.
  11. நீங்கள் அதே பழைய “திமுக மட்டும் என்ன திறமா” லாஜிக்கில் இறங்கி விட்டீர்கள். இதை ஒளிந்து நிண்டு -1 போடும் வீர பையனுக்கு ரசோ அண்ணை அண்மையில் தெளிவாக விளக்கி இருந்தார். உண்மையில் நீங்கள் முன்வைக்கும் இந்த “ திமுக திறமா” தர்க்கம் நா த கவை சிறுமை படுத்துவது. உங்கள் நிலைப்பாடு என்ன? திமுகதான் பீஜேபி என்ற நச்சை முதன் முதலில் தமிழ் நாட்டில் கூட்டணி வைத்து உள்ளே கொண்டு வந்தது. இதை நான் முழுமையாக ஒத்து கொள்கிறேன். ஆனால் நீங்கள் எங்கே சறுக்குகிறீர்கள் என்றால்…. சீமானும் திமுக போல் பிஜேபி நஞ்சை உள்வாங்க போகிறார் என நாம் சொன்னால்…. நீங்கள் அதை முற்றாக மறுக்க வேண்டும். ஆனால் - நீங்கள் திமுக செய்ததே நாம் ஏன் செய்ய கூடாது என்கிறீர்கள். இது எதை நிறுவுகிறது…. நான் சொல்வது போல், கருணாநிதி போன்ற சுயலாபத்துக்காக நஞ்சை விதைக்கும் கயவந்தான் சீமானும் என்பதை அல்லவா? #சின்ன கருணாநிதி
  12. போனமுறை அதிமுக கூட்டணியில் பிஜேபி இருந்தது ஆகவே நான் மேலே சொன்ன கணக்கில் இரெண்டும் சேர்த்தி. இரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் நீங்கள் மேலே சொன்னது போல் இரு தேர்தல்களை ஒப்பிட முடியாது. Trends ஐ வைத்து தோராயமாகத்கான் கணக்கு பார்க்கலாம். அதே போல் சில safe assumptions - உதாரணமாக கொள்கைரீதியாக - பிஜேபி/பிராமண/நாதக வாக்கு வங்கி திமுக வுக்கு வாக்களிக்காது. ஆகவே இந்த தேர்தலில் நாதக எடுத்த 14,000 ஐ கணக்கு பார்க்கும் போது இவர்களைத்தான் முதலில் கூட்ட வேண்டும். 30,000, 50,000, 65000 என போகும் போதுதான் அதிமுக வாக்குகளை பெரும் அளவில் நாதக கவர்கிறது என கருதலாம். 70,00, 80,000 என போகும் போது நடு நிலைவாக்காளரையும்…. 80,000 மேல் போகும் போது முன்னைய திமுக வாக்காளரையும் கவர்கிறது என கருதலாம்.
  13. இதுக்கு அதிக வாய்புள்ளது. சீமான் இப்படி👇 பிளேட்டை மாத்த கூடும் 1. தாமரை மலர்ந்தால் தமிழீழம் மலரும் என மோடி என்னிடம் கூறினார் அதனால்தான் கூட்டணி. 2. திராவிட கட்சிகளை என்னால் தனித்து வெல்ல முடியவில்லை - ஆகவே திராவிடத்தை வீழ்த்த எனக்கு வேறு தெரிவு ஏதும் இல்லை. 3. இது வெறும் தொகுதி உடன்படிக்கை. தேர்தல் கூட்டு அல்ல. 4. நாம் அதிமுகவோடுதான் கூட்டு, அதிமுக பிஜேபியோடு கூட்டு ( வைக்கோ காங்கிரஸ் கூட்டை இப்படி முன்பு நியாயப்படுத்தியவர் என நினைக்கிறேன்) 5. இன்னும் ஏதாவது ஒரு அரிய வகை உருட்டு ——- அதிமுக என்ன செய்யும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. சீமானின் தொடர் பெரியார் தாக்குதல் - அவரை ஒரு toxic asset ஆக்கி விட்டதை இந்த தேர்தல் காட்டுவதாக நான் நினைக்கிறேன். எனவே பிஜேபி கூட ஓக்கே ஆனால் சீமான் வேண்டாம் என எடப்பாடி முடிவு செய்யலாம். அல்லது சிவசேனா, நிதீஸ்குமாரை பீஜேபி எப்படி சாப்பிட்டது என உணர்ந்து பிஜேபி கூட்டை கூட தவிர்க்கலாம்(ஏலவே எடப்பாடி செய்ததுதான்) . அல்லது அதிமுக +தவெக+பாமக+தேமுதிக என ஒரு வலுவான கூட்டணியை அமைக்கலாம். இப்படி ஒரு எதிர்கட்சி கூட்டு அமைந்தால்…. பாஜக, நா த க 2%-6% க்குள் முடக்கப்படலாம்.
  14. நன்றி. 1. ஓம்….இந்த முறையும் தமக்கு தரவில்லை என கதர் சட்டைகள் ஒரே கதறலாம். ஆனால் திமுக காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதும், காங்கிரஸ் தொகுதிகளை கேட்பதும் ஸ்டார் வேட்பாளர்/வாரிசுகளுக்காகவே. சம்பத்துக்காக, பெரியாரின் உயிரியல்-பேரன், பூட்டன் என்ற செல்வாக்கை மனதில் வைத்து இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் சம்பந்தின் அடுத்த மகனை இறக்கினால் சீட்டை தரலாம் என அறிவாலயத்தரப்பு சொன்னதாம். ஆனால் குடும்பம் விரும்பவில்லையாம். 2. அடுத்த முறையும் சந்திரகுமாருக்கே வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு இருக்கும் “நம்மாளு” இமேஜ், கவுண்டர் சாதி வாக்குகளை சமன் செய்ய, நெசவாளர் சாதியை சேர்ந்தவரும், சாதிய கட்டமைப்பை தாண்டி, விஜயகாந்தின் கொங்கு மண்டல தளபதியாக திறம்பட செயல்பட்டவருமான சந்திரகுமார் ஒரு லோக்கல் திமுக சிற்ரரசராக வரக்கூடும். அப்படி வந்தால் மீண்டும் காங்கிரசுக்கு கிடைப்பது மிகவும் கஸ்டம். பெரியார்-சம்பத்-சுலோச்ச்சனா வாரிசுகள் இல்லை என்றால் - காங்கிரஸ் மேலிடமும் கேட்காது. நடந்தால் சந்தோசம்.
  15. அதிமுக+பாஜக வாக்காளர் அநேகர் திமுக வுக்கு போடவில்லை. திமுக வாக்குகள் வெறும் 5,000 மட்டுமே கூடியுள்ளது. இதில் கணிசமானது போனமுறை தேமுதிகவுக்கு போன வாக்குகள். காரணம் இந்த முறை திமுக வேட்பாளர், ஒரு காலத்தில் நன்கு உள்ளூரில் பிரபலமான தேமுதிக எம் எல் ஏ. அதிமுக வாக்காளர் பெருந்தொகையில் திமுக பக்கம் வந்திருந்தால் - திமுக வாக்கு அளவு 15,000 க்கு மேலால் கூடி இருக்கும். இந்த தேர்தலில் அவர்கள் தெரிவுகள் முறையே வீட்டில் இருத்தல், நோட்டாவுக்கு போடல், சீமானுக்கு போடல் என இருந்துள்ளன. கணிசமான பாஜக வாக்காளர், குறைந்தளவு அதிமுக வாக்காளர், முதலியார் சாதி வோட்டுகள், protest votes, வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு வாக்குகள் சேர்ந்து 14,000 மேலதிக வாக்குகள் ஆகியுள்ளது.
  16. யார் இவர்கள்? திமுக எதிர் வாக்காளர். ஆனால் இவர்களை கவர (ஒரு இடைத்தேர்தலில் கூட) நா த க வால் முடியவில்லை. திமுகவுக்கு போட விருப்பம் இல்லை. நா த கவுக்கு போடுவதை விட வீட்டில் இருக்கலாம் என 15,000 பேர் முடிவு செய்துள்ளனர். நோட்டா என்றால் என்ன? இருக்கும் தெரிவுகள் எதிலும் எனக்கு விருப்பம் இல்ல என சொல்லுவது. அதாவது திமுகவுக்கு போட முடியாத இன்னொரு 5,000 வாக்காளருக்கு சீமானும் அதே அளவு மோசமான தெரிவாக இருக்கிறார். 14,000
  17. ஆம்.. ஆனால் இது தொகுதியை வெல்லாமைக்கான விளக்கம். Let’s be honest - சீமான் உட்பட எவரும் நா த க தொகுதியை வெல்லும் என நினைக்கவில்லை (அப்படி இருந்தால் தான் போட்டியிடாமல் விட சீமான் என்ன யேசு நாதரா?). நான் மேலே சொல்லி இருப்பது 65,000 வாக்குகளை கூட நா த க வால் நெருங்க கூட முடியவில்லை என்பதை. 65, 000 அல்ல. 50, 000 அல்ல, 30,000 அல்ல, 25,000 (கட்டுப்பணம் மீட்டல்) கூட இயலவில்லை. உண்மையில் இதை “வெற்றி” என சொல்பவர்கள் you are insulting your own intelligence.
  18. இப்படி யோசித்து பாருங்கள். சரியாக 24 மாதங்கள் முன் இதே தொகுதியில் நடந்த தேர்தலில். தேமுதிக - 1432 அதிமுக - 43923 மொத்தம் 45,355 இவை அத்தனையும் திமுக கூட்டணி எதிர் வாக்குகள். அந்த தேர்தல் திமுக அரசின் தேனிலவு காலத்தில், நடப்பு இளவயது எம்பி இறப்பின் பின் இருந்த திமுக கூட்டணி எதிர் வாக்குகள். இடைபட்ட இரு வருடத்தில் திமுக மீதான அதிருப்தி கூடி உள்ளது. Incumbency factor கட்டாயம் இருக்கும். உண்மையில் இப்போ இந்த தொகுதியில் திமுக கூட்டணி எதிர்வாக்குகள் குறைந்தத்து 55,000 ஆகவாது இருக்கும். இத்தோடு போன தேர்தலில் நா த க எடுத்த வாக்கையும் கூட்டினால் - 65, 000 ஆகிறது. ஆக இந்த தேர்தலில் ஒற்றை திமுக எதிர் தெரிவாக இருந்த நாதக அடைந்திருக்க கூடிய வாக்குகளின் குறைந்த எண்ணிக்கை (lower best case scenario) 63,000. Higher best case scenario - தொகுதியை வெல்வது. நா த கவின் worst case scenario போன தேர்தலில் எடுத்த 10,000 அல்லது அதை விட குறைவது. 1. தொகுதியை வெல்வது 2. 63,000 வாக்குகள் எடுப்பது 3. 24,000 வாக்குகள் எடுப்பது 4. 10,000 வாக்குகள் எடுப்பது இவைதான் வெற்றியின் வேறு பட்ட benchmarks. இதில் 24,000 ஆனது, 10,000 க்கு கிட்ட்டவா அல்லது 63,000 க்கு கிட்டவா என்பதை நீங்களே கணித்து கொள்ளுங்கள். நா த க அள்ளி இருக்க வேண்டிய மினிமம் வாக்குகளில் 38% ஐ மட்டுமே அள்ளி உள்ளது. எந்த சோதனையிலும் 40% கீழ் எண்டால் பெயில்தானே. கருத்தை எழுதுங்கள் புலவர். அடுக்கு வசனங்களையும், அவதூறுகளையும் அரசியல்வாதிகள் செய்யட்டும்🙏.
  19. ஒவ்வொரு தேர்தலிலும் யாழ்பாணத்தில் டக்கிளசுக்கு 10-15% விழும். யாழ்பாணம் தலைவரின் சொந்த மாவட்டம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு 15% குறுக்காலபோவார் இருப்பினம்தானே? ——— கடந்த தேர்தலில் 4 முனை போட்டி… இந்த தேர்தலில் 2 முனை போட்டி… இதில் போட்டியிட்ட இரு கடைகளின் வாக்கு வீதம், எண்ணிக்கை கூடும் என்பது அடிப்படை உண்மை. இதை வைத்து சீமானின் ஆதரவு கூடியதாக சொல்வது - உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்வதாகும். சீமான் குறைந்தது 50,000 வாக்கு எடுத்திருந்தால் இப்படி சொல்ல முகாந்திரம் உள்ளது.
  20. 1. அமித் ஷா எனக்கு ஆதாரத்தை இமெயில் பண்ணுவதாக கூறி உள்ளார். வந்ததும் காட்டுகிறேன்🤣. 2. இதெல்லாம் ஒரு உய்துணரல்தான். 3. சீமா எச் ராஜாவை பேரறிஞர் எனும் போதே - தெரிய வில்லையா? (https://m.dinakaran.com/article/background_seeman_actor_vetrikumaran_interview/1529861/amp). 4. சீமானை மட்டும் ரேசில் ஓட விட்டு 40:60 என வந்து, ஒரு காட்டு காட்டுவது, அதன் மூலம் 2026 கூட்டணிக்கு அச்சாரம் போடுவதுதான் அமித்தின் ஸ்கெட்ச். 5. ஆனால் அதிமுக காரன் வாக்கை கூட எடுக்க முடியவில்லை என தம்பிகளே மேலே புலம்பும் அளவுக்கு மக்கள் நோஸ் கட் கொடுத்துள்ளார்கள். 6. அதுவும் அத்தனை திமுக எதிர்வாக்குகளை கூட ஒருங்கிணைக்க முடியாமல் டெபாசிட்டே இழந்து…. நமது ராஜதந்திரங்கள் எல்லாம் வீணாக போய் விட்டதே என அமித்ஷாவை வடிவேலு ரேஞ்சுக்கு புலம்ப விட்டுள்ளனர் ஈரோட்டு மக்கள்.
  21. ஒரு பைசா செலவில்லாமல் நோட்டா 5000 க்கு மேல் எடுத்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தாண்டி வந்து நோட்டா ஆட்சி அமைக்கும் நாள் தொலைவில் இல்லை.
  22. எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாயின் எல்லோருடனும் கலந்து பேசி ஒட்டு மொத்தமாக புறகணித்திருக்க வேண்டும். அமித் ஷா அழுத்தத்துக்கு பயந்து அதிமுக, நாதக வுக்கு விட்டு கொடுத்ததின் பலன் - சில ஆயிரம் அதிமுக/ நடுநிலை வாக்காளர் நாதகவுக்கு போட்டுள்ளனர். ரெய்டுக்கு பயந்து கட்சி நடத்தாமல் ஜெ போல் லேடியா, மோடியா என மோதினால்தான் கட்சியை காப்பாற்றலாம். பிஜேபி கூட்டணியை முறித்தமை போல் இதிலும் எடப்பாடி கடும் நிலைப்பாடு எடுத்திருக்க வேண்டும்.
  23. பிகு இனி தமிழகத்தின் இரெண்டாம் பெரிய கட்சி நா. த. க மூன்றாம் பெரிய கட்சி நோட்டா இதை கேள்வி கேட்பவன் தெலுங்கு வந்தேறி.
  24. திமுக வேட்பாளர் சந்திரகுமார் - 1,14,439 வாக்குகள் நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி - 23,810 வாக்குகள் நோட்டா - 6,040 வாக்குகள். அண்ணன் நோட்டாவுடன் கூட்டணி வைத்தால் மத்திய அரசை கூட அமைக்கலாம்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.