Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by goshan_che

  1. உங்களுக்கு இன்னொருவர் மீது அபாண்டம் சொல்லுவது சிம்பிள் மேட்டராக இருக்கலாம்…. ஆனால் சொல்லப்பட்டது என்னை பற்றி - ஆகவே எனக்கு அது போர்குற்றம் போன்றதுதான். கொஞ்சம் பொறுங்கோ…. யார் பொய்யன் என்பதை காட்டும் ஆகாரத்தை நான் தேடி எடுத்து விட்டேன்.
  2. சரி நியாயமான கோரிக்கைதான். உங்களுக்கு 24 மணி நேர அவகாசம் தருகிறேன். இப்போ யூகே நேரம் 23:40 நாளை இரவு 23:40 வரை நேரம் எடுத்து கொள்ளுங்கள். ஆனால் வரும் போது ஒன்றில் நான் இலங்கையை ஆதரித்த ஆதாரத்தோடு வாருங்கள் அல்லது குற்றசாட்டை விலக்கி கொள்ளும் அறிவிப்போடு வாருங்கள் (மன்னிப்பு தேவையில்லை -misremembering எல்லாருக்கும் நடப்பதுதான்). பிகு அருமையான வாய்ப்பு, ஆதாரத்தை காட்டி விட்டால் கோஷானை யாழை விட்டே அனுப்பி விடலாம் 🤣.
  3. பையன் இது உங்களுக்கான கடைசி அவகாசம். குற்றசாட்டை நிருபிக்கிறீர்களா? அல்லது குற்றசாட்டை விலக்கி கொள்கிறீர்களா?
  4. இல்லை. அந்த பயம் எவருக்கும் வேண்டாம். என் மீது கூறப்பட்டுள்ள பொய் குற்றசாட்டை மறுக்கிறேன். ஆதாரம் கேட்கிறேன். அல்லது குற்றசாட்டை விலக்கி கொள்ள கேட்கிறேன். நான் இலங்கைக்கு சப்போர்ட் பண்ணியது நிருபிக்கபட்டால் - ஒட்டு மொத்தமாக யாழை விட்டே விலகுவேன். குற்றசாட்டை விலக்கி கொண்டால் - பழைய படி தொடரலாம். ஆதாரம் தராமல் - குற்றசாட்டையும் விலக்காவிட்டாலும் என்ன செய்வது என என் அளவில் ஒரு முடிவில் இருக்கிறேன். அதை பின்னர் சொல்வேன். இப்போ பையனுக்கு குற்றசாட்டை நிரூபிக்க, அல்லது விலக்கி கொள்ள அவகாசம் அளிக்கிறேன்.
  5. மழுப்பவேண்டாம்…. அது நான் இலங்கை அணி தோற்ற போது பாடியது. அதை அப்படியே திரித்து நான் இலங்கை அணியை சப்போர்ட் பண்ணியதாயும்….அதற்கே பாடியதாயும் நீங்கள் பச்சை பொய் சொல்லுகிறீர்கள். 2009 இற்கு பின் இலங்கைக்கு சப்போர்ட் பண்ணுவதில்லை என்பது என் ஆன்மா வோடு சம்பந்த பட்ட விடயம். ரதி அக்காவோடு பல இடங்களில் இலங்கையின் தோல்வியை கொண்டாடி சண்டை கூட பிடித்துள்ளேன். ஆகவேதான் சொல்கிறேன். நான் 2019 உலக கோப்பையில் இலங்கையை ஆதரித்தேன் என்பதை நிறுவுங்கள். அல்லது அது தவறான கூற்று என்பதை ஏற்று கொள்ளுங்கள். மன்னிப்பு கேட்ககூட தேவையில்லை.
  6. அதுக்கு அமரதாச, பொஸ்கோவை எல்லாம் தெரிந்து இருக்க வேணும். எனக்கு தெரிந்தது விசைபலகை வீரம் மட்டுமே🤣
  7. சரி விடுயா.. விடு விடு… முழுக்கா நனைஞ்சிட்டாம் முக்காடு எதுக்கு🤣
  8. பையன், சும்மா சீமான் மாரி இல்லாததை சொல்லி விட்டு - மொக்கு கதை வேண்டாம். மிக முக்கியம் நீங்கள் நான் 2019 உலக போட்டியில் இலங்கையை ஆதரித்தேன் என்ற உங்கள் கூற்றை ஆதாரம் மூலம் நிறுவ வேண்டும். அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த திரியில் அரசியல் கலக்க வேண்டாம் என உங்களையும், புலவரையும் நட்போடு கேட்டவன் நான். ஆனால் இரெண்டு இடத்தில் திரியை விட்டு ஓடி விட்டு, அந்த கடுப்பில் இங்கே வந்து என்னை பற்றி பொய் சொல்ல விட முடியாது. ஆதாரம் பிளீஸ்…. அல்லது மன்னிப்பு.
  9. ஆதாரம் இருந்தா போடவும்…. இல்லை எண்டால் மன்னிப்பு கேட்கவும். நான் பாடிய தாயக பாடல் “ என்னடா தம்பி கதைகிறானுவ சந்தி வெளியில”. அதை மாத்தி பாடினேன். விமர்சனம் வந்தது. ஆனால் - அது இலங்கை வெண்டமைக்கு அல்ல. எனக்கு தெரியும் என்ன சந்தர்பத்தில் பாவித்தேன் என. ஆனால் நீங்கள் ஆதாரம் தாருங்கள்.
  10. 🤣 ப்ரோ, உங்களை நான் எங்க றோ எண்டு சொன்னனான். ஒரு போதும் இல்லை. அதுகெல்லாம் கொஞ்சம் தடித்த தோல் வேணும். நீங்கள் அந்த வேலைக்கு சரி வராயியள்🤣. நீங்கள் அப்படி அல்ல, அமரதாஸ், பொஸ்கோ என பலருடன் பழகி உள்ளீர்கள். யாழில் குறைந்தது இரு ஐடிகளில் முன்னர் உலா வந்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் உள்வீட்டு விசயம் தெரிந்த ஆள். ஆகவே நான் யாழுக்கு புதுசு என நீங்கள் இந்த ஐடியில் வரும் போது எழுதியது பச்சை பொய். ஆக, ஒரு பிஸ்கோத்து கருத்து களத்தில் கூட உங்களை போன்ற ஒருவரை கூட நம்பி நடக்க முடியாத போது … விபரம் தெரியாத பொஸ்கோ, கிருபா, தேசம்நெட் பற்றி நாம் யாரை நம்பி கதைக்க முடியும்? இதுவே நான் சொன்னது. பிகு யாழில் ஒருவரை, சீமானை மொத்தம் இருவரை மட்டுமே இன் 12 வருடம் யாழ் வாசகத்தில் நான் றோ என குற்றம் சாட்டி உள்ளேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.
  11. நாங்களே எண்ணை எண்டால்… ஈரோட்டு கிழக்கில் ஏறிய இரும்பு ராடுக்கு? சவுதி அரேபியாவையே எல்லோ தடவ வேணும்🤣. பிகு Pedoவுக்கு முட்டு கொடுத்தவர் அந்த திரியில் துண்ட காணம் துணிய காணம் என ஓடி விட்டு, இஞ்ச வந்து காளி ஆட்டம் ஆடுகிறார்🤣. இரவீந்திரன் துரைசாமி தான் பாஜக வியூக வகுப்பாளர் என அறிவித்து கொண்டவர். ரஜனியை சந்திக்க ஏற்பாடு செய்த சங்கி. அவர் சொன்னால் சீமான் நம்பர் 2 என்ன, அடுத்த பிரதமர் எண்டே நம்பலாம்🤣.
  12. 2009 பின் எனக்கு இலங்கை, இந்தியா இரெண்டும் தோற்க வேணும். இரு பக்கத்தாலும் அடி 🤣. ஆனால் 2019 வேர்ல்ட் கப் மினெகெட்டு கார்டிவ் போய், இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தானை சப்போர்ட் பண்ணினேன். மயிரிழையில் இலங்கை வென்றாலும், ஆத்ம திருப்தியாக இருந்தது😎.
  13. எனக்கு வேலை செய்யவில்லை அண்ணா. முன்பு @ அடித்து, ஒரு space விட்டு முதல் எழுத்தை அடிக்க பெயர்பட்டியல் வரும். இப்போ @ அடித்தாலும் எந்த மாற்றமும் இல்லை. *நான் போனில் இருந்து வருகிறேன். பதிலுக்கு நன்றி. பெரிய பிரச்சனை இல்லை. 🙏
  14. மீண்டும் ஒரு திரியில் வேலி பாய்ந்தோடினார் வீரப் பையன். இனி என்ன பதுங்கி இருந்து -1 துப்பாக்கியால் சுட வேண்டியதுதான்🤣. பொது நல அறிவிப்பு அறிவித்த படியே என் அடிகள் எல்லாமும் சீமான் மீது மட்டுமே. எந்த கள உறவையும் அடிக்கும் எண்ணம் அறவே இல்லை. தாமாக வந்து வாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல.
  15. அப்படியா…. விசுகு அண்ணை, நெடுக்ஸ் இருவருக்கும் போலிக்கா வெளிவந்த சமயம் நீங்கள் கொடுத்த மரியாதை போலவா🤣? யாழில் நான் இக்னோர் லிஸ்டில் போட்ட இருவர் தவிர மிகுதி எல்லாரிடமும் நான் இன்றும் சகஜமாகவே பழகுகிறேன், அவர்களும். நான் எந்த கள உறவையும் ஒருமையில் விளிக்கவில்லை. தவிரவும் நான் சீமானின் கைப்புள்ளை அல்ல யோசிக்காமல் வார்த்தையை விட, வாயை வாடகைக்கு விட🤣.
  16. ஒருமையில் விளிப்பு🤣. ம்ம்ம்….அண்ணன் காலுக்கு கீழே நெருப்பை கொழுத்த, கொழுத்த தம்பி கொதிநிலையை அடைகிறார்🤣. சீமானே தான் உதயநிதியோடு இரவில் போன் பேசுவதை சொல்லி உள்ளார்.
  17. @ போட்டு பெயர் சுட்ட முடியவில்லை நிர்வாகத்தின் மேலான கவனத்துக்கு.
  18. காவல்துறை விரையுது எண்டு செய்தி வந்தது அதை லிங்கோடு பகிர்ந்தேன். நான் என்ன செய்தியாளரா? காவல்துறை விரையும் முன் அண்ணன் உதய் காலில் விழுந்தால் நான் என்ன செய்ய முடியும். மல-ழை பையா, (இது எழுத்து பிழை அல்ல, உங்கள் கருத்தாடும் பாணியை இட்டு காரணப்பெயர்🤣). நான் கிமுகவோடு சேர்ந்து 200 ரூபாய்க்கு எழுதுவது இருக்கட்டும்…..திரள்நிதி கள்ளவர் உங்களுக்கு 2 ரூபாய் கூட தரமாட்டார். நீங்கள் காசும் கொடுத்து ஆதரவும் கொடுக்க வேணும்🤣. அது சரி எப்ப இந்த திரியில் இருந்து துண்ட காணம், துணிய காணம் தூங்கும் போது money ய காணம் என ஓடப்போறியள்?🤣.
  19. விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் RANI KARTHIC2 Min Read இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். Published:Today at 2 PMUpdated:Today at 2 PM சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சீமான் அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார். சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஏற்கனவே 2011 -ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும்’ தெரிவித்தார்.தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார். சென்னை உயர் நீதிமன்றம் மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது என தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். https://www.vikatan.com/government-and-politics/judiciary/vijayalakshmi-case-seeman-case-dismissed?pfrom=home-main-row 12 வாரம் டைம் இருக்கு, தன் காவாலிகளை விட்டு விஜி அண்ணியை தாஜா பண்ண🤣. ஆனால் நீதிபதி விடுவாரா? வழக்கை அமித்ஷா வேறு நீதிபதிக்கு மாற்றி கொடுப்பாரா? அல்லது நள்ளிரவில் உதை நிதிக்கு போன் போட்டு காலில் விழுந்து வழக்கை அணைக்கப் பாப்பாரா? அடுத்த மூன்று மாதம் அண்ணன் சுடுதண்ணி குடிச்ச குதிரை போல ஓடி திரியப்போறார்.
  20. எப்படி தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ….14 வருடங்கள் வழக்கை இழுத்தடித்துள்ளார். நல்லதொரு நீதிபதி இப்போ வந்தமையால் வழக்கு துரிதப்படுவதாக தெரிகிறது. மத்திய அரசின் மீதான தண் இன்புளுவன்சை பாவித்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற சீமான் முயல கூடும்.
  21. டிஸ்கி மேற்கு நாடுகளில் கூட பாலியல் வல்லுறவு வழக்குகள் தண்டணையில் முடிவது மிக குறைவான சதவீதமே. அப்படி இருக்க - ரோவின் ஏஜெண்டான, மோடிக்கு இஸ்டமான (அவரே சொன்னது) சீமான் அதிமுக, திமுக இரு அரசுகளோடும் டீல் பேசி வழக்கை இரு தடவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முயன்றுள்ளார். விஜயலட்சுமிக்கு மனதளம்பல் இருக்கலாம். அதனால் மட்டுமே அவர் சொல்வது பொய் என்றாகாது. தூசண திருமுருகன், பாக்கியராசன் போன்ற புரோக்கர்களிடம் பேசி, அண்ணன் இனியும் உங்களை திருமணம் செய்வார், மாதாந்த ஜீவனாம்சம் தருவார் என்ற பொய்களை நம்பாமல் - வழக்கை தைரியமாக நடத்தி, சட்டப்படி தகுந்த நட்ட ஈட்டை பெற முயல வேண்டும் விஜி அண்ணி. அண்ணன் நீலாங்கரையில் எட்டு கோடிக்கு வீடு கட்டுகிறார். அதில் பாதி பெறுமதியை விஜி அண்ணி கேட்கலாம். இங்கே நான் பலதடவை இதை எழுதிய போதும் தம்பிகள் இதை கடைசிவரை விளங்கிகொள்ளவே இல்லை. அதுசரி சீமான் மேனியாவில் - சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கூட, இருவர் மனமொத்த உறவு என முட்டு கொடுக்க தயாரான ஜெண்டில்மேன்களும், குஞ்சுமோன்களும், இதையயா ஏற்றுகொள்ளப்போகிறார்கள்.
  22. சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி Vishnupriya RUpdated: Monday, February 17, 2025, 19:30 [IST] நடிகர் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் விஜயலட்சுமி. அவர் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுடைய படத்தில் நடித்திருந்தார். Also Read அப்போது சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் மீது புகாரை அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகியிருந்தார். Red Button-ஐ அழுத்திய Trump....பதறும் White House...அதென்ன Diet Coke? | Oneindia Tamil இந்த நிலையில் தனக்கு எதிராக விஜயலட்சுமி பதிவு செய்த பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. மேலும் சீமானின் மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு விஜயலட்சுமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி நீதிபதி இளங்திரையன் முன்பு வந்தது. அப்போது "இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்" என நீதிபதி, காவல் துறையிடம் கேள்வி எழுப்பினார். Recommended For You அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முகிலன், இது 376 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் சீமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சீமான் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலோ கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். You May Also Like காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார். மேலும் பாலியல் பலாத்கார வழக்கை விஜயலட்சுமி திரும்ப பெற்றாலும் இது பாலியல் வன்கொடுமை என்பதால் இதை விசாரிக்காமல் விட முடியாது என நீதிபதி தெரிவித்தார். https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-asks-seeman-whether-vijayalakshmi-is-the-first-wife-of-him-680875.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.