Everything posted by goshan_che
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இதுக்கேன் மன்னிப்பு அண்ணா.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஒருவரது முந்திய எழுத்தை வைத்து, அவர் போல எழுதுவது ஏ ஐ மூலம் சாத்தியமாகி உள்ளது. That’s what makes writing special, and AI chatbots are learning to do just that. Claude has received a new feature that can mimic your writing style by learning from your written pieces. https://www.croma.com/unboxed/claude-ai-can-now-adapt-to-your-unique-writing-style#:~:text=Claude AI can now adapt to your unique writing style&text=That's what makes writing special,learning from your written pieces. இனிமேல் யாழ் போன்ற கருத்துகளங்களில் எல்லாம் ஏ ஐ பூந்து விளையாடப்போகிறது🤣. இப்போதே ஆரம்பமாகி விட்டது. கருத்தாளரின் நம்பகதன்மையோடு, களங்களின் நம்பகதன்மையும் கேள்விகுறியாகும். ஒரு ஏஜெண்ட் காணும்…பத்து பேர் மாதிரி எழுதலாம். ஏலவே உள்ளவர் போல எழுதி குழப்பத்தையும் உண்டு பண்ணலாம்.
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு Mathivanan MaranUpdated: Tuesday, January 28, 2025, 15:20 [IST] சென்னை: ஈழத்தில் பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்; வகை வகையான அசைவ உணவுகளை பிரபாகரன் மனைவி மதிவதினி சமைத்துக் கொடுத்தார்; தமது பாதுகாப்புக்கு மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருவது அத்தனையும் கட்டுக்கதை; திரிபுவாதம்- பிறருக்கு நடந்தவற்றை தனக்கு நடந்ததாக திரித்து பேசி வருகிறார்; அத்துடன் பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலைஞர் -போட்டோகிராபர் அமரதாஸ் கடுமையாக குற்றம்சாட்டி இருக்கிறார். Also Read துப்பாக்கிகள் மீது பிரியப்பட்ட சீமான் அப்போது, திரைப்பட இயக்குநராக சீமான் ஈழத்துக்கு வந்திருந்தார். 2,3 நாட்கள் எல்லாளன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கும், சீமான் வந்தார். அங்கே இருந்த நவீன ரக துப்பாக்கிகள் மீது சீமானுக்கு அலாதியான பிரியம் இருந்தது. இதனால் அவற்றை வைத்து போட்டோ எடுக்க வேண்டும் என விரும்பினார். நான் தான் அந்தப் படங்களை எடுத்தேன். அந்தப் படத்தின் ஸ்டில்போட்டோகிராபராக நான் பணியாற்றும் போட்டோக்களும் இருக்கின்றன. Coimbatore | IT Company fires 2000 employees overnight | Oneindia Tamil சூட்டிங் போட்டோ எடுத்தது நான்தான்.. பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்த போது எடுத்த படங்கள் என தமிழ்நாட்டில் சீமான் வெளியிட்டிருப்பவை அனைத்தும் என்னால் எல்லாளன் திரைப்பட படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவைதான். அந்தப் படங்களை உற்று நோக்கினால் சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தக் கூடிய தெர்மகோல் சீமானின் பின்னால் இருக்கும். அதேபோல சீமான் துப்பாக்கி ஒன்றை தமது கை இடுக்கில் வைத்திருப்பார். பொதுவாக ஆயுதங்களைக் கையாள்வதற்கு என ஒரு முறை இருக்கிறது. சீமான் பிடித்திருப்பது போல கை இடுக்கில் வைத்துக் கொண்டு எல்லாம் சுட்டுவிடவும் முடியாது. அதேபோல படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஒரு குண்டு கூட சுடவும் முடியாது. சில கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவ முகாம் இருந்ததால் அப்படி பயிற்சி எடுக்கவும் முடியாது. Recommended For You திரித்து பொய் பேசும் சீமான் சீமானுக்கு பிரபாகரன் ஆயுதப் பயிற்சி தரவே இல்லை. அதற்கான சூழலும் அப்போது அங்கு இல்லை. அதேநேரத்தில் எல்லாளன் படத்துக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்து பல மாதங்களாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ்-க்கு இத்தகைய துப்பாக்கி சுடும் வாய்ப்பு தரப்பட்டது. அது பயிற்சி அல்ல. சந்தோஷ்க்கு ஆமைகறியும் ஒரு முறை வழங்கப்பட்டதாக அறிந்தேன். இப்படி ஒளிப்பதிவாளர் சந்தோஷுக்கு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் தமக்கு நடந்ததாக திரித்து பொய் பேசி வருகிறார் சீமான். சீமான் மீது விடுதலைப் புலிகள் அதிருப்தி அத்துடன் பிரபாகரனுடன் சீமான் சந்தித்தது சில நிமிடங்கள்தான். அப்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் உடன் இருந்தார். அப்போது போட்டோ எடுக்கப்பட்டது உண்மை. ஆனால் அதனை சீமானிடம் தரவே கூடாது என விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியாக சொல்லிவிட்டது. ஏனெனில் சீமான், கொழும்பு வழியாக விமானத்தில் வந்திருந்தார்; மற்றொன்று சீமான் புகழ் விரும்பியாகவே இருக்கிறார் என்பதை விடுதலைப் புலிகள் அந்த சில நாட்களிலேயே உணர்ந்திருந்தனர்; இதனால் தமிழ்நாட்டுக்கு சென்ற உடன் இந்த படங்களை எல்லாம் சீமான் வெளியிடலாம்; இதனால் எல்லாளன் படப்பிடிப்புக்காக தமிழ்நாட்டில் வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணங்களால் சீமானுக்கு இந்த படங்களைத் தரவே கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர். You May Also Like பிரபாகரன் உணவு பரிமாறவே இல்லை மேலும் சீமானுக்கு பிரபாகரன் உணவு பரிமாறவும் இல்லை; பிரபாகரன் மனைவி மதிவதினி விதம் விதமாக அசைவ உணவுகளை சமைத்துப் போடவும் இல்லை. 2008-ம் ஆண்டு காலத்தில் ஈழத்தின் களச் சூழல் அப்படியானதாகவும் இல்லை. போர் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த தருணம். பிரபாகரன், சீமானை சில நிமிடங்கள்தான் சந்தித்தார்; அதன் பின்னர் வேறு சில முக்கியமான சந்திப்புகளுக்கு சென்றும்விட்டார். சீமான் சொல்வது போல ஒரு மாதமோ, 2 அல்லது 3 மாதமோ ஈழத்தில் தங்கி இருக்கவில்லை. சில நாட்களிலேயே சீமான் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஈழத்தில் தவறு செய்த சீமான் - திருப்பி அனுப்பிய புலிகள் சீமான் ஈழத்தில் இருந்த போது ஒரு தவறு செய்திருந்தார்; அத்துடன் பிரபாகரனை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என நச்சரித்தும் கொண்டிருந்ததால் அவரை உடனே அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்பதில்தான் புலிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் அப்போது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லாளன் படப்பிடிப்பில் கரும்புலி இளங்கோவாக பாத்திரம் ஏற்று நடித்த புகழ்மாறன் உள்ளிட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர்; இதனால் சீமான் சில நாட்கள் கழித்தே தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாடும் சீமான் அத்துடன் வீரச்சாவடைந்த புகழ்மாறனுடன் இருக்கும் படத்தை காண்பித்து அவர்தான் தமக்கு மெய்ப்பாதுகாப்பாளராக பிரபாகாரனால் நியமிக்கப்பட்டிருந்தவர் என்றெல்லாம் சீமான் கதை பேசி வருகிறார். தமிழ்நாட்டில் சீமான் பேசி வருவது அத்தனையும் கட்டுக்கதைகள்தான். தற்போது பெரியாரா? பிரபாகரனா? என சீமான் பேசுவது பிரபாகரனை முன்வைத்து நடத்தும் அரசியல் சூதாட்டம். தம்மை புலிகள் யாரும் கேட்கப் போவது இல்லை என்ற போக்கினால் திரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது மோசடித்தனமானது. இந்தப் போக்கு தமிழ்த் தேசியத்தில் இருந்து அடிப்படைவாதம் நோக்கியதாக இருக்கிறது. இது ஆபத்தானது. பிரபாகரனுடன் இருப்பது பொய்யான போட்டோ பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படங்கள் அனைத்தும் போலியானவை; சித்தரிக்கப்பட்டவை. அந்தப் படங்கள் உண்மையானவை எனில் எப்போது எங்கே எடுக்கப்பட்ட என்ற பதிவுகள் அந்த படங்களில் இருக்க வேண்டும் அல்லவா? அதை சீமான் தரப்பு வெளியிட்டிருக்கலாமே? ஏன் இத்தகைய சர்ச்சை? சூட்டிங் படங்கள் என நிரூபிக்க தயார் சீமான் துப்பாக்கியுடன் நிற்கும் படங்கள் அனைத்தும் எல்லாளன் சூட்டிங் ஸ்பாட்டில்தான் எடுக்கப்பட்டன என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அந்த படங்கள் அனைத்தும் எங்கே எப்போது எடுக்கப்பட்டன என்பது டிஜிட்டல் காமிராவில் பதிவாகி இருக்கின்றன. இவ்வாறு அமரதாஸ் தெரிவித்துள்ளார். (நன்றி: சன் நியூஸ் செய்தி) https://tamil.oneindia.com/news/chennai/eelam-photographer-amardoss-slams-ntk-seemans-political-gamble-in-the-name-of-prabhakaran-675099.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மிக்க மகிழ்ச்சி. சந்திப்போம். பிகு உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. என்ன AI பயன்படுத்துகிறீர்கள்?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நாதம்…இது கருத்து களம். நாம் எல்லாரும் கருத்தை வைக்கலாம். அதை வாசிக்கலாம், விடலாம். கருத்தை வைத்தால் அதுக்கு எதிர்வினை வரத்தான் செய்யும். அந்த எதிர்வினைக்கு எதிர் வினை செய்யலாம் அல்லது கண்டுகாமல் போகலாம். சும்மா தொட்டா சிணுங்கி மாரி, bullying பின்னால் ஒழிவது கூடாது. அப்படி ஏதும் நடந்தால் ரிப்போர்ட் பட்டனை தட்டலாம். நீங்கள் செய்யாத bullying உம் இல்லை, அடிக்காத ரிப்போர்ட்டும் இல்லை. ஆகவே இந்த மாய்மாலத்தை விட்டு விட்டு கருத்தை எழுதுங்கள். இந்த திரியில் நீங்கள் கருத்து எழுதியதை விட கோஷானை பற்றி எழுதியதே அதிகம். மற்ற ஐடியில் வந்து செவ்வனே செய்வீர்களா? அல்லது அதுக்கும் லீவா?🤣 நான் எப்படி விரட்ட முடியும். வேதனம் கிடைத்தால் வருவார்கள். இல்லை என்றால் வரமாட்டார்கள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நாத்தம் வந்தால் - மூக்கை பிடித்து கொண்டும் நுழைய வேண்டியதே. நான் கருத்து எழுதினால் ஏனையோர் எழுதாமல் விட வேண்டும் என்பது சட்டம் இல்லை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இது செல்வநாயகம். செல்வ-நாயக்கர் என்ற ரீதியில் யாழில் எழுதப்பட்டு, முன்பே கேலிக்கு உள்ளான ஒரு வரலாற்று புனைவு. இந்த புனைவு சல்லி சல்லியாக உடைக்கப்ப்ட்ட திரி பழைய யாழில் உள்ளது. விரும்பியோர் தேடி வாசிக்கவும். 👆 அமைதி போதுமா 🤣 @தூயவன் தெலுங்கு நடிகரை அவதாரில் வைத்திருக்கும் நீங்களா இப்படி கேட்பது. சரி - நாம் 16 வருடமாக ஒன்றும் கிழிக்கவில்லை, நீங்கள்? நாமாவது யாழில் எழுதினோம். 2009 க்கு முன் நீட்டி முழக்கிய நீங்கள்? 2009 இல் யாழை மூடி விட்டு படுத்தவர் இப்பதான் தூக்கம் கலைகிறதா? இதில் என்ன பிரச்சனை என நீங்கள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த போது யாழில் பல திரிகள் ஓடின. அதில் என்ன்கருத்தும் உள்ளது. தேடி வாசிக்கவும்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அருமையான விளக்கம். மேலே இணைக்கப்பட்ட கட்டுரையாசிரியர், நாம் எல்லாம் நியாபகமறதியில் அவதிபடுவதாக நினைத்து கதை விடுகிறார். சந்தோஷ் பேட்டியில் புலிகள்-சீமான் உறவு நிலை பற்றி, அதன் கனம் பற்றி மிக தெளிவாக விளக்கி உள்ளார். மே 2009 வரைக்கும் அதுதான் சீமானுக்கு புலிகள் கொடுத்த இடம். அதன் பின் போராட்டதை காயடிக்க ரோ நியமித்த போலிகளில் ஒருவர்தான் சீமான். புலம்பெயர் கள்ளர் சொத்தை அபகரிப்பதில் பிசியாக, வெற்றிடத்தை சீமான் நிரப்பி கொண்டார்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
🤣 மகிந்தவுக்கு பக்கத்திலேயே இது பெரியார்….சிறியார் ஆகிய தருணம். இதை அண்ணா மட்டும் அல்ல எவருமே கண்டிக்கத்தான் வேண்டும்.
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
நாடுகள் இடையான நாடு கடத்தல், அந்த நாடுகளின் அனுமதி இல்லாவிடின் நடப்பது கஸ்டம். இல்லாவிட்டால் இந்தியன் என சொல்லி, பல பாகிஸ்தானிகளை இந்தியாவில் கொண்டு போய் இறக்கி விடலாம்🤣
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
பதப்படுத்த உப்பை பாவித்தால் இன்னும் திண்டாட வேண்டி வரும்🤣. ஆனாலும் உயிரோட இருக்கேக்கையே அனுதாபவாக்கு கேட்பது ராஜபக்சேக்கள்தான்🤣.
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
தாயை புணருமாரு கூறிய ஒருவரை இப்படி தெரிந்து கொண்டே புகழ்கிறார் எனில்…. சீமானுக்கு இப்படி பேசிய நாட்களில் அந்த கூற்றில் உடன்பாடு இருந்திருக்க வேண்டும்… இல்லை என்றால்… அவர் அப்படி கூறவில்லை.
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
இதே கருத்தை…. வரிக்கு வரி… இதே யாழ்களத்தில்…. எழுதிய நினைவு? நான் நினைக்கிறேன்… நீங்களும் நானும் சரியான ஈயடிச்சான் கொப்பி போல யோசிக்கறம் எண்டு🤣 #cut and paste 🤣
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Love you too Nathams ❤️ நான் பெரிய புள்ளி யும் இல்லை. bully ம் இல்லை…. வெறும்… புல்லீங்கோ….. பிகு இந்த ஞானம் - பொய் ஐடியை என் ஜாடையில் ஆரம்பித்து பித்தலாட்டம் ஆட முன்னர் வந்திருக்க வேண்டும். Better late than never.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நான் எழுதியற்கு இது பதிலில்லையே🤔
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
எல்லாரையும் எப்படி லபக்கிரிகள் என தாக்குவது தர்மம் இல்லையோ. அதே போல் சம்பந்தமில்லாத திரிகளில், சம்பந்தமே இல்லாமல் - புலம்பெயர் செயற்பாட்டாளர் தூய்மையாக போராடினோம், என சொல்லுவதும் தர்மம் ஆகாது. 2009 க்கு முந்திய புலம்பெயர் செயற்பாட்டாளர்களில் லபகிரிகளும், அலபகிரிகளும் உள்ளார்கள். ஒரே சாக்குத்தான்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
காளியம்மாளை பிசிறு என தான் ஏசியதை சீமான் மறுத்தாரா? காளியம்மாள் மட்டும் அல்ல இன்னும் பலர் அதே குற்றசாட்டை வைத்துள்ளனர். இதில எங்கே வருகிறது திமுக முட்டு? திமுக தலைவர்கள் தாம் கேவலமாக பேசாமல் ஏனையவர்களை இறக்கி விடுவார்கள் என திமுக தலைவர்களை உயர்த்தி பேசியவர் @பாலபத்ர ஓணாண்டி. நீங்கள் அவரைத்தான் திமுக முட்டு என சொல்ல வேண்டும். —— நான் சொன்னது எம்ஜிஆர் டபுள் ஆக்டு மாதிரி அண்ணன் டிரிபிள் ஆக்டு கொடுத்து 2ம், 3ம், 4ம் தரபேச்சுகள் அனைத்தையும் ஒரே ஆளாக செய்வார் என்பதையே.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
யோவ் மைன்ட் வாய்ஸ் எண்டு நினைச்சு சத்தமா பேசிட்டிங்கையா🤣. அங்க இரெண்டாம், மூன்றாம், கடைநிலை பேச்சாளர் எல்லாம் இருக்கிறாங்கையா…இங்க தலைவனே கடைநிலை பேச்சாளந்தான்🤣. தீப்பொறி ஆறுமுகத்தை தலைவனாக ஒரு கட்சி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் நாதக. மூன்று அடுக்கு பேச்சையும் அண்ணனே கவர் பண்ணுவார்🤣. 👆👇 கடைசியா காலி அம்மாள் எப்ப சந்திச்சவா? சீமானை விட்டு விலகும் ஒவ்வொருவரும் தவறாமல் சொல்லும் காரணம் பாக்கியராசனை தாண்ட முடியவில்லை என்பதே.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஒரே ஒரு கேள்விதான். இந்த திமுக, அதிமுக பலமிக்க, பலகோடி பிரமிட் அடுக்கை, நலிந்த நிலையில் உள்ள ஈழத்தமிழர், சீமானிற்காக பகைத்தால் அது அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் நன்மை தருமா, தீமை தருமா? பிகு இந்த ஊழல் பிரமிட் அடுக்கு விசிக, நாதக, பாமக, மதிமுக விலும் உள்ளது. பாக்கியராஜனுக்கு படி அளக்காமல் சீமானை ஒரு நிமிடம் கூட சந்திக்க முடியாது. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. கட்சியின் அளவுக்கு ஏற்ப ஊழல்-பிரமிட். வீரபிரதாபத்தை பார்த்ததும் வாலை உருவிகொண்டு களத்தில் குதித்துள்ளீர்போலும் 🤣. சரி சரி விஜி அண்ணி டேட்ஸ் - விசாரிச்சு கொண்டு வாங்கோ. நானும் பையனும் வெயிட்டிங்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பி டீமுக்கு அடிக்கடி அடி போடுவது போல் பாவனை செய்தால்தான் A , B டீம்கள் வேறு வேறு என ஒரு தோற்றப்பாட்டை தொடரலாம்.
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
அப்படியே சேர்த்த காசையும் தாக மிகுதியால் லபக்கியியும் கொண்டார்கள். இதை இப்பவே பதிவில் வைத்தாயிற்று.
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
மரியாதைக்குரிய சீமான் அவர்கள், ஆதாரம் ஏதும் இல்லாமல் - தாயை புணர் என பெரியாரோ வேறு சிரியாரோ எவரோ சொன்னார்களாம் என சொல்கிறார். அதை கண்டிக்க துப்பில்லை. ஆனால் இப்படி சொல்வது தன் மனவக்கிரத்தை ஏனையவர் மீது சுமத்தி இன்பம் காணும் செக்ஸ் சைக்கோதனம் என சொன்னால் - குய்யோ, முறையோ என கத்துகிறார்கள், தரம் தாழ்ந்துவிட்டதாம் என கதறுகிறார்கள். பிகு இலவச படிப்பு கன்னங்கர போட்ட பிச்சை. காசு கட்டி படித்தது பெற்றார் போட்ட பிச்சை. பாட்ஷா பட வில்லன் சொன்ன மாதிரி, இப்பதான் நாங்கள் கல்லூரி கரஸ்பாண்டன்ஸ், ஆனால் அடிப்படையில் நாங்களும் கழுசறையள்தான்🤣. கழுசறைதனமாக கதைப்பவருக்கு அவர் பாணியிலேயே பதில் வரும். பாற்கடலை பாம்பை கொண்டு கடைந்த போது விசம் வந்தது. பாம்பை பிதுக்கினால் விசம்தான். கக்க வைக்கப்படுவார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வந்தது யாரு நம்ம தல @Nathamuni. அவர் பார்க்காத நிர்வாணமா, மன்னிக்கவும் நிர்வாகமா. நிர்வாகம் திண்ணை இல்லை என்றாலும், திரியையே திண்ணையாக்கும் தீரன் எந்தலைவர் நாதம். எதுக்கும் நாதம் விஜி அண்ணியின் டேட்ஸ்சோட வருவார். வெயிட் பண்ணி பாப்பம். ஆயிரம் திரி இருக்க, இந்த திரியை நீங்கள் திரும்பி வந்து எழுத தேர்ந்தெடுத்த போதே நினைத்தேன். நாதம் மானஸ்தன் - 2003 டிசம்பர் கிழிஞ்சது, கிழிஞ்சதுதான் என (கோட்டை சொன்னேன்).
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்கள் என்னை அறிவு ஜீவி என, சீமானை நல்லவர் என… பலதை பிழையாக விளங்கி கொள்கிறீர்கள். 👆 நாதம் இதையும் ஒருக்கா அதோட சேர்த்தே விசாரியுங்கோ. இதற்கான fee note ஐ பையனுக்கு அனுப்பிவிடவும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அப்படி இல்லை பையா… விஜி அண்ணியா, நாதமா என போட்டி வைத்தால் நான் எப்போதும் நாதம் பக்கம்தான். நாதத்தின் நம்பகதன்மை அவரின் சுஜ ஆக்கங்களை வைத்தே எல்லாரும் தெரிந்து கொண்டதுதான். அதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. இந்த கேப்பில் விஜி அண்ணி சொல்லும் சம்பவங்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்தது என்பதுதான் இந்த கயவர்கள் சொல்வது. அதைதான் நாதத்தை தீர விசாரிக்க instructions கொடுத்துள்ளேன். அவரும் கிளம்பி போய்ட்டார்.