Everything posted by satan
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
முன்னாள் விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
ம்.... விடுதலைப்புலிகள் ஏன் இவரை கொலை செய்ய வேண்டும்? விடுதலைக்கெதிரான வேலைகளை செய்திருப்பாரோ? இருக்கும் இருக்கும். அன்றைய அரசு சொன்னது, தங்களுடன் சேர்ந்து இயங்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் என்பதால் பாதுகாப்பளிக்கபடுகிறதென. சரி, ஒரு பொதுமகன் கொலை செய்ய நினைத்தால் அவருக்கு ஆயுதம் எங்கிருந்து வந்தது? எதற்காக இவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்கு பாதுகாப்பு பெற்றோரும், வழங்கியோருமே விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்கள். அது இருக்க, சுமந்திரனின் ஆதரவாளர்கள், புலம்பெயர்ந்தோரே அவரை கொலைசெய்ய ஆட்களை ஏவியதாக பிரச்சாரம் செய்கின்றனர். செய்தி உண்மையெனில், ஏன் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொலிகண்டி பேரணியில் சுமந்திரனும் சாணக்கியனும் புகுந்து பிரபல்யம் காட்டியபோது, அவருக்கு மரண அச்சுறுத்தல் ஏதுமில்லை அவரது இராணுவ பாதுகாப்பு மீளப்பெறப்படும் என அரசாங்கம் கூறிய போது, தான் பாதுகாப்பு கோரவில்லை என்று சொன்னவர், அதை ஏற்க முன்னரே ஏன் கூறவில்லை? மறுக்கவில்லை? வாக்குகளுக்கு மக்கள், பின் அந்த மக்களாலேயே தனக்கு ஆபத்து என பாதுகாப்பு. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அந்த மக்கள் மேலேயே பழி போட்டு அச்சுறுத்துவது. தான் பாதுகாப்பு கோரவில்லை, எனக்கு அப்படி ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்பவர், ஏன் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க முயற்சிக்கவில்லை? அவர்கள் சிறை வாழ்வுக்கு காரணமே இவர்தானே? இப்போ தாராளமாக நேரமிருக்கிறது, யோசித்து திருந்துவதற்கு. எதற்கெடுத்தாலும், இவர் கிறிஸ்தவர் என ஒரு துண்டை இழுத்துக்கொண்டு ஓடிவந்து மூடுவீர்களே, இதுதான் கிறிஸ்தவ பண்பா? கிறிஸ்தவர் என இவரை காட்டி நீங்கள் மார் தட்டலாமா? அது நிஞாயமா? அன்று பாதுகாப்பினரின் கெடுபிடி மத்தியிலும், இன்று இந்த இயற்கை அனர்த்த நிலையிலும் மாவீரர்களுக்கு முண்டியடித்து வணக்கம் செலுத்தும் மக்கள், சுமந்திரனுக்கு வாக்களிப்பது அந்த மாவீரர்களுக்கு செய்யும் துரோகம். இன்று அதற்குரிய தண்டனையை அளித்து தமது சபதத்தை முடித்துள்ளனர்.
-
87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்
பார்க்க வேண்டும் போலுள்ளதோ? பார்ப்பவர்களும் தண்டிக்கப்படுவார்களாம். இல்லை.... வீட்டைபற்றி சொன்னேன் நான். முழுவதையும் பார்த்து முடிக்க, 750 நாள் எடுக்கும். 😂 கிட்டத்தட்ட…. இரண்டு வருசம் வீடியோ பார்க்கிறதிலேயே போயிடும்.
-
அனுரவால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது | சுமந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ் மக்களுக்கு கிடைக்குதோ இல்லையோ, இவருக்கு ஒன்றும் கிடைக்காது அநுர அரசில். ஏன் மற்றைய அரசுகளில் தமிழருக்கு என்ன வாங்கிக் கொடுத்தீர்கள், இதை மட்டும் குற்றம் சொல்ல? ஓ..... நீங்கள் பாராளுமன்றத்தில் இல்லாத படியினால், உங்களால் ஒன்றும் வாங்கித்தர முடியாது போய்விட்டது என்கிற கவலை. மக்கள் மேல் எவ்வளவு பாசம் இவருக்கு. ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாய் ஒன்று.
-
டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
நன்றி பெருமாள் இணைப்பிற்கு. இதைத்தான் நான் முன்பு கூறியிருந்தேன், அதற்கு ஒரு உறவு, சுமந்திரன் இராணுவ பாதுகாப்போடு வரவில்லை, இராணுவ புலனாய்வு பாதுகாப்புத்தான் கொடுக்கப்பட்டது, இது இன்றும் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவருக்கு இந்தப்படம் சமர்ப்பணம். சவேந்திர சில்வா புடைசூழ வந்த படமும் வெளிவந்தது. முடிந்தால், இணைத்துவிடவும். பார்த்து ரசிக்கலாம் முன்னைய வசந்த கால நினைவுகளை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மக்கள் அறிந்தது இருக்கட்டும். மக்களின் தேவைகளை அவர்கள் இவர்மூலம் எப்படி அணுகுகிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம். முன்பு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அடங்காத்தமிழன் எனும் அடைமொழியுடன் சுந்தரலிங்கம் என்று ஒருவர் இருந்தாராம். அவரை ஒருதடவை பாராளுமன்ற காவலர்கள் கதிரையோடு தூக்கிக்கொண்டுபோய் பாராளுமன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டார்களாம். அப்படியேதும் நிகழாமல் இருந்தால் சரி. எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டுமென்பது அவைப்பழக்கம், நாகரிகம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பயமற்றவர் என்று பேய்த்தனம் காட்டக்கூடாது. இது ஒரு இனத்தின் விடிவு சம்பந்தப்பட்டது. இவரது காணொளிகளை நான் பார்த்ததில்; இவர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர், அதிலும் புகழில் கவிழ்ந்து, தான் செய்ய வெளிக்கிட்டதை விட்டு வேறொன்றுக்கு மாறி விடுவார். அதை எப்படி சாதிக்க வேண்டுமென ஆராய்ந்து செயற்படமாட்டார், பட்டாலும் அதை திருத்த மாட்டார். இவரது தந்தை காவல் துறையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர் என்கின்றனர், அதிக பிரயாசைப்பட்டு படித்தவர், இருந்தும் என்ன, ஒரு பிரயோசனமுமில்லை என ஆகிவிடுமென பயமாக இருக்கிறது. இவருடைய கோமாளித்தனத்தில் மக்களின் பிரச்சனை அடிபட்டுப்போய்விடக்கூடாது. ஒரு காணொளியில் பாத்தேன், தான் முதலில் பாராளுமன்றம் போகும்போது புலிக்கொடியுடன் போவேன் என்று சொல்லியிருந்தார், நல்லவேளை அப்படியொன்றும் நடக்கவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி யோசித்து செயற்பட முடியவில்லை அவரால். நன்றி கந்தப்பு. தேர்தல் முடிவு அறிவிக்கும் வேலை மத்தியிலும் தேடி எடுத்து இணைத்ததற்கு.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வாக்குப்போட்ட மக்களை நகைச்சுவையாளராக்க கூடாது. அவர்களை மெச்சும்வண்ணம் இவரது நடவடிக்கை இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நல்லெண்ணத்தை காப்பாற்றி, அவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு கோமாளிக்கூத்து ஆடி தன்னையும் வாக்குப்போட்ட மக்களையும் அவமானப்படுத்தக்கூடாது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள்தான் தைரியமான, பொருத்தமான ஆள் அதற்கு. பொறுப்பெடுத்து தெரியப்படுத்துங்கள் அவருக்கு, அவமானப்பட்டு வெளியேற்றப்படுவதற்கு முதல் மாற்று வழி காணும்படி. அதுவரை அவர் பாராளுமன்றத்தில் தாக்குப்பிடிக்க வேணுமே, இந்த லட்ஷணதில மாகாண சபை கனவு வேறையா? அந்த பிள்ளையின்ர மானத்தையும் வாங்கப்போறார்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மக்கள் அவரை பாராட்டி ஊக்கப்படுத்தியிருக்கலாம் அவரின் தைரியமான சேவைக்கு, ஆனால் அவரை பாராளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தது ரொம்ப அதிகம். பாவம் மக்கள்! அனுபவம் காணாது. முதல்நாள் பாராளுமன்றம் போயிருந்து காணொளியில் என்ன கதைக்கிறாரென பாருங்களேன்? சிங்களவர் சிரிக்கப்போகிறார்கள், இவர் சிங்களத்தால் தேவையில்லாமல் விளாச.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பாராளுமன்றத்திற்கு சென்ற முதல்நாளே, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் அமர்ந்தாராம். அதை விட்டு வேறு ஆசனத்தில் அமரும்படி கேட்டுக்கொண்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். சிங்கள நாளிதழ்கள் செய்தியை வெளியிட்டுள்ளனவாம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இவரை நம்பி வாக்களித்த மக்களின் மானத்தை வாங்கப்போகிறார். இப்பவே விலகி வேறு யாருக்கும் இடம் விடலாம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள் எப்படித்தான் இழுத்து மூடினாலும், அது அவிழ்ந்து விழுந்து கொண்டுதானிருக்கும். ஆகவே விட்டு விடுங்கள், அது அவிழ்ந்தாலென்ன, கவிழ்ந்தாலென்ன? நடக்கிறதை விடுப்பு பாப்போம் நாங்களும்.
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அப்பவே யாரோ சொன்னார்கள், தமிழரசுக்கட்சிக்கு மக்கள் வாக்குப்போட்டால், தோற்றவர்கள் தேசியப்பட்டியல் வழியாக உள் நுழைந்து விடுவார்கள் என. நிராகரிக்கப்படவேண்டியவர்களை மக்கள் நிராகரித்தார்கள், அவர்கள் ஆணையை ஏற்க மறுத்தால், இனிமேல் தமிழரசுக்கட்சியே காணாமல் ஒதுக்கப்படும் மக்களிடமிருந்து.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அது எனது தனிப்பட்ட விருப்பம். அதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை. இது எனது கருத்து சுதந்திரம். அவரது வெற்றியை என்னால் மாற்ற முடியாது எனவே ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள் என்னை திட்டுவதால் பயனில்லை, அவரது வெற்றியை மாற்றிக்காட்டுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அது நானறியவில்லை. தான்தான் வரைந்தேன் என்று உரிமை கொண்டாடுபவர், தானும் வேறு ஒரு சிங்களவரின் பெயரையே சொன்னார். அனுராவை குறிப்பிடவில்லை, தான் இல்லாவிட்டாலும் கஜேந்திரன் பொன்னம்பலம் கையாள்வார், தன்னோடு கூட இருந்த அந்த நபரும் இருக்கிறார் என்றே குறிப்பிட்டார்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அவர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. தருவோம் என்று சொன்னவர்கள் தரவில்லை. இவர் எல்லாமக்களும் சமமாக வாழும் தீர்வை வரைந்து நடைமுறைப்படுத்துவோம் என்கின்றனர். அவர் ஜனாதிபதியில்லை. மூன்றில் இரண்டிலும் அதிகமான ஆசனத்தைப்பெற்றவர் அனுரா. அத்தனை கை ஓசையில் மயூரனின் ஒரு கை ஓசை தனித்து ஒலிக்க வாய்ப்பேயில்லை. சுமந்திரன் கள்ளன் என்று நான் சொல்லவில்லை, சொன்னவர்களை கேளுங்கள். இப்போ புரியுது உங்கள் கொதி என்னவென்று. நான் யாரையும் அனுரா பஸ்ஸில் ஏற்றவில்லை. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் அனுராவுக்கு யாழ்ப்பாணத்தில் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் அவர் வெல்லவுமில்லை. கடைசி நேரத்தில் தமிழ் கொம்புகள் ஆடிய விசர் ஆட்டத்தாலேயே மக்கள் அனுரா கட்சிக்கு வாக்களித்தனர். அவர் செய்வார் என்று எதிர்பார்த்து போட்டார்களா இல்லையா என்பதும் அவர்களைத்தான் கேட்கவேண்டும். அவர் ஜனாதிபதியாகிவிட்டார், அதை யாராலும் மாற்ற முடியாது, அவர் நல்லது செய்வேன் என்கிறார் நம்புவதை தவிர வேறு வழியில்லை. அப்படி செய்யாவிட்டால் அது அவருக்கு வாக்கு போட்ட மக்களின் பிரச்சனை. அதில் தலையிடவும் திட்டவும் எனக்கு அதிகாரமில்லை. எனக்கு அவர்மேல் நல்ல அபிப்பிராயம், எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் அதை யார்மீதும் நான் திணிக்கவில்லை. எனது கருத்தை எழுத எனக்கு உரிமை உண்டு. ஏதோ நான்தான் அனுராவை வெல்ல வைத்ததுபோல் கற்பனை பண்ணி விளாசுகிறீர்கள். தமிழ்தேசியத்துக்கு மரண சாசனம் எழுதியது நானல்ல, மக்கள் வற்புறுத்தப்பட்டனர். தமிழ்த்தேசியத்தை வைத்து தாம் ஏமாற்றப்படுவதை சகிக்க முடியாமல், அதை வைத்து பிழைப்பவர்களை நிராகரித்தனர்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தருவாரென நான் சொல்லவில்லை, அதைத்தான் அனுரா தரப்போகிறார் அதனால, தான் பாராளுமன்றம் போகவேண்டியது அவசியமென சுமந்திரன்தான் கூறினார். ஹிஹி.... நானா? போட வைத்தேனா? பரவாயில்லையே! எனது சொல்லையும் கொஞ்ச சனம் மதிச்சிருக்கு, சந்தோசமே. சரி, இப்போ சொல்லுங்க! யாரும் தீர்வு தரப்போவதில்லை. அப்போ யாரை தெரிந்தெடுத்திருக்கலாம்? உங்களுக்கு அவரைப்பற்றி ஒரு அபிப்பிராயம் இருப்பது போலவே, எனக்கும் அவரைப்பற்றி ஒரு அபிப்பிராயம், எதிர்பார்ப்பு உண்டு. உங்களது சரியா, என்னது சரியா என அறிவதற்கு, அவரை திட்டுவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் காத்து இருக்கத்தான் வேண்டும். உங்களது இயலாமை எனக்கு புரிகிறது. ஆனால் என்னை திட்டுவதனால் எதையும் மாற்ற முடியாது. அப்படி உங்களால் முடியுமென்றால் மாற்றுங்கள், நான் மறுப்பேதும் சொல்ல மாட்டேன். அவர் தனது கொள்கையில் நிலைத்து நின்றார் என்றுதான் சொல்கிறேன். அதற்குமேல் முயற்சிக்கவில்லை, அந்த நேர அரசியலும் காரணமாக இருந்திருக்கலாம். இது உண்மைதானே! என்னோடு சன்னதமாடுவது என்கிற முடிவோடு வந்திருக்கிறீர்களா? எருதோடு பொருதமாட்டேன், மேழியோடுதான் பொருதுவேன் என்று. நான் இங்கு ஒரு கருத்தாளன் மட்டுமே. உங்களுக்கு பட்டதை நீங்கள் எழுதுவது போலவே நானும்.
-
ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்கமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இது, சுமந்திரன் என்கிற சட்ட நிபுணர் வரைந்த வரைபு. அவரது பிரதமமந்திரி கனவுக்கும் நேர்காணலில் தேவையில்லாமல் சிரித்ததற்கும் காரணம் இதுவே.
-
ஒற்றையாட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்! - சிவாஜிலிங்கம்
ஒரே நேரத்தில் சிங்கள மக்களும், நம்மக்களும் விழித்து, போலிகளுக்கும் ஊழல்களுக்கும் எதிராக வாக்களித்தது நல்ல சகுனம். இதை பார்த்து மற்றையோரும் திருந்தி நல்லனவற்றுக்கு இடம் தரவேண்டும், நல்லது செய்ய முயற்சிக்க வேண்டும். எனக்கு பெரிய சந்தோஷமான விடயமென்னவென்றால், மக்களை பகடைக்காய்களாக ஏமாற்றி, போலிதேசியம், போலி அபிவிருத்தி பற்றி பேசியவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பியதே!
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஒவ்வொரு மேடையிலும் போய் நின்று, தமிழ் இனச்சுத்திகரிப்பு தமிழருக்கு நடக்கவில்லை, அது உங்களுக்கே நடந்தது, அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று சத்தியம் செய்வார். மலையகத்தமிழரிடம் போய் வேறொன்று சொல்லி ஒன்றோடொன்று கொழுவி எதிரிகளாக்கி விட்டு, நான் சிங்களத்தோடேயே இருப்பேன், அது எனது அதிஷ்ட்டம் என்பார் கோமாளி. எல்லாம் சுபமே!
-
தமிழ்த் தேசியக் கட்சிகளை மீண்டும் ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன் அறிவிப்பு
களையப்படவேண்டிய களைகளை களைந்தாலே நன்மையடைய முடியும். இல்லையேல் பழைய குருடி கதவைத் திறவாடி கதைதான். பொது அமைப்புகள் சேர்ந்து ஆரம்பித்த நடைபவனியை தமதாக்கிக்கொண்டதுபோல் நான்தான் இணைத்தேன், நான்தான் செய்தேன் என்பார்கள். பிரிந்து சென்ற தேசியக்கட்சிகளை மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா என்று சுமந்திரனிடம் வினவியபோது, மக்களே தீர்மானித்து எங்களுக்கு வாக்களித்து விட்டார்கள் என்று பதிலளித்துள்ளார். ஆனால் அவரையுந்தான் விலக்கியுள்ளார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஆகவே அவரை விலத்திவிடுவது எல்லோர்க்கும் நல்லது. அவர் இனி கட்சியைப்பற்றி எந்த முடிவும் எடுக்க அனுமதிக்க கூடாது. அவரே சொன்னவற்றை, செய்தவற்றை நினைவு படுத்துங்கள். மற்றவருக்கு குழிபறிக்கும்போது மண்வெட்டி தன்பக்கமும் பாத்திருக்கு என்பதை விளங்க மறுத்து, மறந்து விடுகிறார்கள். ஆம், என்றால் கோட்டுக்கு போவேன் என்று எச்சரிக்கிறது, முக்கிய தனக்கு பாதகமான தீர்மானம் எடுக்கும், கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் விடுவது, நழுவுவது இதெல்லாம் அழகா? அவரது சொல் செயல் வடக்கின் வசந்தம் கட்சிக்கே பொருத்தமானவர்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சசலாம். இது நீங்கள் என்மேல்கொண்டுள்ள தப்பபிப்பிராயம். தனிப்பட்ட முறையில் நாம் ஒருவரை ஒருவர் அறியோம், களத்தில் நான் எழுதிய பதிவுகளை கொண்டு அனுமானிக்கிறீர்கள். ஆனால் வேறொரு கள உறவும் இப்படி என்னை அனுமாய்க்கவில்லை. ஆகையால் இது உங்களின் தனிப்பட்ட கருத்து. இதற்கு நான் பொறுப்பாளியல்ல.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அவர் நாட்டில் இதுவரை காலமும் யாரும் பெறாத பெரும்பான்மையோடு வெற்றியீட்டியிருக்கிறார். அவர்க்கு பாரிய பொறுப்புண்டு இதற்குப்பின்னால். முன்னிருந்த அரசாங்கங்கள் யாரும் சொன்னதை நிறைவேற்றினார்களா? இவர் எதுவும் சொல்லவில்லை, யாரும் அதுபற்றி கேட்கவுமில்லை. அது இருக்க, ஏன் அனுரா வந்தவுடனேயே இவ்வளவு கேள்வி, கோபம்? அவர் இன்னும் பாராளுமன்றமே அமைக்கவில்லை, எதற்காக இத்தனை அவசரம்? ஜனாதிபதி தேர்தலில் கூட, வடக்கு மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை, இறுதி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றியதன் காரணத்தை விளங்க முடியும். மட்டக்களப்பில் கூட சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் மேல் சட்ட நடவடிக்கை கட்டாயம் எனும் செய்தி பரவியதால் மக்கள் அவர்களை தவிர்த்திருக்கலாம். அது தமிழசுகட்சிக்கு சாதகமாய் அமைந்துள்ளது அவ்வளவே. அதோடு கிழக்கின் விடி வெள்ளிகளால் அனுராவிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற முடியாது என்பதும் மக்கள் புரிந்ததே.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நீங்கள் ஏன் பாராளுமன்றம் போக விரும்புகிறீர்கள் என்று பத்திரிகையாளர் சுமந்திரனை கேட்ட கேள்விக்கு, சுமந்திரன் அளித்த பதில், "அனுரா,தங்களால் நல்லாட்சி 2015-2019 காலத்தில் வரையப்பட்ட சட்ட வரைபைஅமுல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்வதாகவும், அது தன்னாலும் இன்னொரு சிங்களவரின் பெயர், (மறந்துவிட்டேன்) வரையப்பட்டதாகவும் அதை முன்னெடுத்து செல்ல தான் பாராளுமன்றம் போய் தனது திறமைகளை உபயோகித்து அதை நடைமுறைப்படுத்த முடியும் என தான் நம்புவதாலுமே தான் பாராளுமன்றம் போக விருப்பப்படுவதாக." ஒரு நேர்காணலில் சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் முன்பு பலதடவை அந்த வரைபில், ஏக்கய ராஜ்ய எனும் சட்ட வரைபு அது என கூறியிருக்கிறார், அதே ஒரு சர்ச்சையான சொல். இவர் சொல்கிறார் ஒருமித்த என்று, வேறொருவர் விளக்குகிறார் ஒற்றை ஆட்சி என்று. இவர் பாராளுமன்றம் போனால் ஏதோ மக்களை ஏமாற்றி சடைஞ்சு நிறைவேற்றி போடுவார். பொன்னம்பலம் அதை ஆராய வெளிகிட்டால் அங்கு சுமந்திரன் என்ன திருகுதாளம் வரைந்தார் என்பது வெளிவரும், கண்டிப்பாக எதிர்ப்பு வரும், ஆகவே தான் வரைந்ததை பொன்னம்பலம் கஜேந்திரன் குழப்பி விட்டார் என பரப்பலாம். அல்லது மாற்றம் செய்தால் நான் போயிருந்தால்; அதை சாதித்திருப்பேன், இதை சாதித்திருப்பேன் மக்கள் ஆணை தரவில்லை என்பார். ஆனால் எல்லாம் வரைந்தவருக்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது? என்பது கேள்விக்குறி. கோத்த ஓடியபின் அரகலயாவை அடக்கிய ரணில் ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை? நாட்டின் கடந்த சரித்திரம் புரியாமல் பேசுகிறீர்கள். சந்திரிகாவும் ஒருகாலத்தில் இராணுவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டுவர எடுத்த எடுப்பில் முயற்சித்தவர், ஆனால் அவர்களுக்கு அடிபணிவதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவரால். இதற்கு பல செயற்திட்டங்கள் தேவைப்படும் மாற்றியமைக்க முன்பு. அதற்கு முன் பொருளாதார உடனடிப்பிரச்சனையிலேயே தான் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்கப்பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் கெட்டுவிடும். இதில் நான் என்ன தவறுதலாக எழுதிவிட்டேன்? அவர் இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார் என்று சொன்னேன், மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், அரசியல் எதிர்ப்பற்ற வெற்றி சூழல், மக்கள் மனங்களில் மாற்றம், சாதகமாக அமைந்துள்ளது என்றேன். இதிலென்ன தவறு? எழுபத்தைந்து வருடங்களாக வேரோடி அடர்ந்து வளர்ந்து வளர்த்து விட்ட விருட்ஷத்தை ஒரு நொடியில் அடியோடு அழிப்பதென்பது எத்தனை பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து பேசுகிறீர்களா? அல்லது என்னோடு விதண்டாவாதம் பண்ண வேண்டுமென்று பேசுகிறீர்களா தெரியவில்லை? முதலில் அதில் உள்ள தழைகளை களைய வேண்டும், கிளைகளை மெதுவாக வெட்ட வேண்டும், பின் மரத்தை சிறு சிறு துண்டுகளாக்க வேண்டும், அதன்பின் வேர்களை கிளற வேண்டும், அதன் பின்னே அடிமரத்தில் கைவைக்க வேண்டும். இலகுவாக தானாகவே மரம் ஆட்டம் காணும், சரியும். அதை தமிழர் மத்தியிலேயே சிங்களம் மிகச்சாதுரியமாக செய்தது. இவர் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் கட்டாயம் இதை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் அரசியலை ஒருதடவைக்கு மேல் கனவு காணக்கூடாது. இது வெறும் உதாரணம். பிறகு இதில கேள்வி கேட்டு விதண்டாவாதம் பண்ணி குடையக்கூடாது.