Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அனுமதிப்பத்திரம் வழங்கியவர் இவருடைய தோஸ்த்துதானே, அவரிடமே கேட்டுத்தெரிந்திருக்க வேண்டியதுதானே? அனுமதி கொடுக்கும் போது தடுத்திருக்கலாம். இவருடைய எதிரிகள் சிறீதரன், விக்கினேஸ்வரன் இப்போ. நாடாளுமன்றத்தேர்தலில் இவர் கவிழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் இவர்களின் பெயரை வெளியிட்டு பழிவாங்க முனைகிறார். மக்கள் மேல் இவருக்கு அவ்வளவு அக்கறை, அயராது உழைப்பதால் இதுவரை காலமும் இதை கண்டுக்க அவருக்கு நேரமில்லை கண்டியளோ...... இப்பதான் வேளை வந்திருக்கு, வாக்கு கேட்ட களைப்போடு ஓடி வந்திட்டார் அனுரவை தேடி. தேர்தல் மேடைகளில் அவர்கள் மேல் சேறடித்து, உரத்து சவால் விடலாம் என்று கணக்கு போட்டிட்டார்.
  2. ம்...... வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் நாட்டை ஆண்டார்கள், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக , கட்டளைத்தளபதியாக இருந்தார்கள், நாட்டின் தலைவிதியை நிர்ணயித்தார்கள், நாட்டை சுரண்டி வெளிநாடுகளில் பதுக்கினார்கள். அவர்களிடம் சிங்கள மக்கள் நாட்டையாளும் பொறுப்பை கொடுத்தனர், உயர் பதவிகளை கொடுத்தனர். இவர்களெல்லாம் சந்தர்ப்பவசத்தால் இடம் பெயர்ந்தவர்கள் கிடையாது. இவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும்போது இந்த நாட்டு மக்களுக்கோ, நாட்டுக்கோ நன்மையேதும் செய்ததில்லை. ஆனால் பதவிகளுக்காக வந்தவர்கள். நம்மவரோ நாட்டின் இயல்பற்ற தன்மையால் விரட்டப்பட்டவர்கள், இன்னும் தாயக கனவோடு தாகத்தோடு வாழ்பவர்கள். சிலர் பதவிகளுக்காக சிங்களத்துக்கு முண்டு கொடுப்பவர்களும் உண்டு. அதற்காக எல்லோரையும் தள்ளி வைப்பது நல்லதல்ல.
  3. எல்லோரும் செய்த தவறையே இவரும் செய்ய வாய்ப்புள்ளது. போறதுதான் போறார், முதல், ஒரு ராசியான நாட்டிற்கு போகக்கூடாதா? கொள்ளிக்கண் நாட்டிற்கா போக வேண்டும்?
  4. தன் தலைவனையும் இனத்தையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவன் துரோகி. என்று, அந்த போராட்டத்தில் இருந்து சலுகைகளுக்காக விலகினானோ அன்றே, அந்த போராட்டத்தில் இருந்து பெற்ற புகழ், பெயர் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான். ஆகவே இயக்கம் அளித்த பெயர் "கருணா அம்மான்." என்கிற பெயருக்கு தகுதியற்றவனாகிறான். ஆகவே இயற்பெயரால் அழைப்பதே பொருந்தும்.
  5. ஓமோம்.... அபிவிருத்திதான் எம் மக்களுக்கு இப்போது அவசியம் அதிகாரப்பகிர்வல்ல என்று முழங்கி அரசியலில் குதித்த அங்கயன்,விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என விளக்கிவிட்டு, இவர்களிடம் விளக்கம் கேட்கலாம். அதிகாரம் முக்கியம் என்று போனவர்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுத்து இப்போ அபிவிருத்தி என்கிற க(கு)திரையில் ஏறி இன்னும் எழுபது வருடம் சவாரி செய்ய நினைத்துவிட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அபிவிருத்தியும் இல்லை, அதிகாரமும் இல்லை இனி சிங்களத்தோடு மக்கள் அடிபணிந்து தமது நாளாந்த வாழ்க்கையை ஓட்டப்பழகி விட்டார்கள். இதற்கு தரகர் எல்லாம் இனிமேல் தேவையில்லை.
  6. அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தாரே! இந்தபெருச்சாளிகளுக்கு இப்போ ஒரு சிக்கல், இவர்கள் அரசியலில் இருந்தாலும் பிரச்சனை, விலகினாலும் பிரச்சினை. இவர்களின் உதவி அனுராவுக்கு தேவையில்லை, தனக்கு வேண்டியதை தானே நேரடியாக செய்து முடிப்பார். அது நல்லதோ கெட்டதோ. தரகர் எல்லாம் தேவையில்லை. அப்படி நினைத்திருந்தால் இவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார். இவர்களும் ஓடிப்போய் காலில் விழுந்திருப்பர். இந்தபெருச்சாளிகளுக்காக நேரம் செலவழிக்கவோ, பணம் விரையம் பண்ணவோ விரும்ப மாட்டார். அழைப்புக்காக காத்திருந்து இப்போ இவரே அழைப்பை ஏற்படுத்த நினைக்கிறார். இருந்த கொஞ்ச நஞ்ச வாக்குகளும் இனி கிடைக்காது இவருக்கு. மண் கொள்ளை, ஆட்களை கடத்தி கப்பமும் பெற முடியாது. என்ன செய்யப்போகிறார்? நல்ல வேளை, சம்பந்தர் தப்பித்தார், வீட்டைப் பறிமுதல் செய்ய முன்.
  7. தேர்தலில் போட்டியிட்டு அனுராவோடு கூட்டுச்சேர்ந்து பதவியை பெற்றுவிட்டால்; தப்பித்து விடலாமென பழைய பாணியில் கனவு காண்கிறார் போலும். அப்படி நடந்தால்; அனுராவும் துரத்தியடிக்கப்படுவார்.
  8. ம்..... உந்த கூத்தாடியின்ர குணம் தெரிந்து. கூட்டுக்கட்சிகள் தாங்கள் தனித்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இனிமேல் இவரின் பருப்பு வேகாது. சுமந்திரனின் பேச்சுக்கு தலையாட்டிய மாவையர், எல்லோரின் வேண்டுகோள், சேர்ந்து போட்டியிடுவதே என கதை விட்டுப்பார்க்கிறார். இவர்களை தள்ளிவைப்பதோடு, கூட்டுக்கட்சிகளும் மக்களுக்காய் தங்களை மா ற்றாவிடில் இவர்களும் தள்ளிவைக்கப்படுவர். மக்களுக்கு ஏமாற்றமும் விரக்தியும் வந்துவிட்டது. இனிமேல் யார் புதுசாய் வருகிறார்களோ அவர்கள் பின்னால் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களை நம்பி தமிழுணர்வும் வலிமையிழந்து, நிலங்களும் பறிபோய், உறவுகளும் இழந்து அநாதரவாக நிற்பதால், இனி தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்களால் தள்ளப்பட்டுள்ளனர். இனி எதை, யாரை வைத்து வியாபாரம் நடத்தப்போகிறார்கள்? சிங்களமும் திரும்பிப்பாராது இவர்களை, மக்கள் இல்லையென்றால் வாக்குகளும் இல்லை. தனித்து விடப்பட்ட இவர்களை எதற்கு? அப்போ புரியும் மக்களின், இனத்தின், தேசியத்தின் வீரியம், ஒற்றுமையின் பலம் என்ன என்பது. எல்லா சிங்கள அரசியல்வாதிகளும், நேற்று அரசியலுக்கு வந்த நாமலும் கூறுகிறார்கள், தமிழ்கட்சிகள் தம் மக்களின் பிரச்சனைகளுக்காக எந்த விதமான அழுத்தத்தையும் கொடுப்பதில்லை, அப்படி அவர்கள் செய்திருந்தால்; எப்பவோ அவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்களென்று. ஆனால் அதற்கு, நம்மவர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி செய்தால் தாம் பெற்ற சலுகைகள் வெளிவந்துவிடும் என்கிற பயமோ தெரியவில்லை. சலுகை அளித்து அவர்களை விலைக்கு வாங்கியவர்கள், தங்களை இந்த கனவான்கள் எதிர்க்க மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்தே காட்டிக்கொடுக்கிறார்கள். காலம் எவ்வளவு வலிமையானது பாருங்கள். தேர்தல் வரபோகுதென்று போன ஆண்டு கதை எழுந்தபோது, கூட்டுக கட்சிகளை விரட்டியடித்த சுமந்திரனை, யாரும் தங்களோடு இணைத்துக்கொள்ள தயாரில்லை. வேண்டுமானால் டக்கிளசுக்கு தூது விட்டுப்பார்க்கலாம், குணங்கள் ஒரே மாதிரி, இனத்தை விற்று, எதிரிக்கு வாலாட்டுவது. அநுர இவர்களை கணக்கிலெடுக்கவும் மாட்டார். ஏதோ முயற்சித்துப் பார்க்கட்டும். வடக்கின் வசந்தம் சொல்லிப்போட்டார், இந்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து விடைபெறப்போவதாக. அவர் என்ன. யாரிடம் இருந்து விடைபெறுவது? எல்லோருமே வீணர்களை வீட்டுக்கு அனுப்புவதாக முடிவெடுத்து விட்டனர்.
  9. அவர், போவென்று விரட்டுவாராம், பிறகு வாவென்று வரவேற்பாராம், எல்லோரும் இவர் வைத்த ஆட்கள், தான் சொல்வதுபோல் ஆட வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பு இவருக்கு. இனிமேல் தனித்து ஆடிப்பாக்கட்டும். தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்காவிட்டால் சந்தர்ப்பத்தை குழிதோண்டி புதைப்பது போலாகுமென்றவர், ஒருவரும் பொதுக்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறைகூவல் விட்டிட்டு, இப்போ இணைந்து போட்டியிட வாருங்கள் என்றால் யார் போவார்? ஒருவேளை சஜித் வென்றிருந்தால்; மற்றைய தமிழ் வேட்பாளரின் நிலை என்னவாக இருந்திருக்குமென கற்பனை பண்ணிபாருங்கள். ஒருமுறை சேனாதிராஜா எடுத்த எடுப்பு யாருக்காவது நினைவிருக்கா?
  10. நான் அனுராவின் ஆள் என்று சொல்லியா கலகம் விளைவிப்பார் அனுராவின் ஆள்?தேர்தலில் அனுராவுக்கு விழப்போகும் வாக்குகளை குறைத்து, தாம் பதவிக்கு வர பல கட்சிகள் பல தரகர்களை இறக்குவினம், இதுகள் சொதப்ப போகுதுகள். கலோ, போலீஸ்! என்று கூப்பிட்டான், பிறகு பதிலை காணோம் சம்பந்தரை போய் கேட்கட்டாம். சம்பந்தர் இறந்ததும் தெரியாது, யாரிடம் நீதிகேட்டு இவர்கள் போராடுகிறார்கள், ஏன் இவர்களிடம் கேட்கிறார்கள் என்பதும் தெரியாது, இத்தனை வருடங்களாக போராடுகிறார்கள் இவன் இப்பதான் நித்திரையால எழும்பினவன் போல வாறான். ஒருவேளை கூலிக்கு மாரடிக்கிறானோ? தேர்தலில் எஜமானருக்காக போட்டியிடப்போகிறானோ தெரியவில்லை. ஒன்றுமட்டும் தெரிகிறது, எல்லோரும் வாயடங்கி இருக்கும்போது, இந்தபுத்தியில்லாதது வாயை கொடுத்து மாட்டப்போகுது!
  11. நேற்றுத்தான் அநுர புகழ் பாடி ஒரு காணொளி வெளிவந்தது, அதற்குள் இன்னொரு நிறுவனம் இந்த தரகரை இறக்கியுள்ளது. பாவம் இவன் தரகு வேலை பாத்து தானும் உள்ள போய் தன்னை பணிக்கமர்த்திய நிறுவனத்தையும் காட்டிக்கொடுக்கப்போறான். உப்பிடி எத்தினை தரகர் வருவினம். முதல் அருண் சித்தாத்தன் என்றொரு கோமாளி ஓடித்திரிஞ்சு அடியும் வாங்கினது. இப்ப வேறை ஒன்று விஷயம் தெரியாமல் இறங்கி நிக்குது.
  12. காலம் தவறிய முடிவென நினைக்கிறன். காற்றுள்ள போதே தூற்றியிருக்க வேண்டும், இனிமேல் கஸ்ரம்.
  13. எந்தபாராளுமன்ற உறுப்பினர் இந்த திட்டத்தை ஏற்பர்? இப்பவே அனுரவை கலைக்க பேதங்களை மறந்து ஒன்று சேருவர்.
  14. இவ்வளவை இழந்தபோது ஒற்றுமையாக செயற்பட விரும்பவில்லை, மக்கள் கோரிக்கை வைத்தபோது கேட்கவில்லை, இந்தியா பாடம் எடுத்தவுடன் கேப்பினமாம். பின் தேர்தல் முடிய பிடுங்குப்படுவினமாம். சுமந்திரன்தானே கூட்டுக்கட்சிகளை விட்டு பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதென்றும் தமிழரசுக்கட்சியின் பெயரை அவர்கள் பாவிக்கக்கூடாது என்றும் சட்டம் போட்டவர். பிறகு எப்பிடி அவர்களோடு இணைந்து போயிருப்பார் இந்தியாவிடம் பாடம் கேட்க? அதோடு அவர் தனியாகத்தானே சந்திப்புக்களை நடத்துகிறவர். நீங்கள் சொல்வது போல் அமெரிக்க தூதுவரை தனியாக சந்திக்க சென்றாரோ தெரியவில்லை.
  15. அனுராவுக்கு இலவசமாய் பிரச்சாரம் நடக்கின்றது. இவைகளை பார்க்கும் நம் தலைவர்களுக்கு வயிறு கலங்கப்போகுது. அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சந்திரிகாவும் களத்தில் குதித்திருக்கிறா. காரணம்; அரசியல் வாதிகளின் சுகபோக வாழ்க்கை கேள்விக்குள்ளாகும், இவரது ஆட்சி நிலைத்தால். எல்லோரும் கூட்டுச்சேருகிறார்கள். நம்மவர்களுக்கும் இப்போதான் ஒற்றுமையின் அவசியம் புரிகிறது. காரணம், மக்களுக்காகவல்ல தாம் சேர்த்ததை கட்டிக்காக்க. பாதையின் ஆரம்பத்தை பார்த்து முழுப்பயணமும் இப்படியேதான் இருக்கும் என மனக்கணக்கு போடக்கூடாது. சந்திரிகா வந்தபோதும் இப்படித்தான் மனக்கணக்கு போட்டோம், பெண்ணென்றால்; பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் இந்தப்பெண் பேயாக எங்கள்மேல் குண்டுகளை பொழிந்ததே! நினையாத நல்லதும் நடக்கலாம், கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து விட்டோமே எனவும் வருந்தலாம்.
  16. விசுகரில கோபமுள்ள ஆக்களாய் இருக்குமோ?
  17. யார் யாரோ கட்சிக்காக வடக்கில் வாக்கு கேட்கிறார்கள், தரகர் வேலை செய்கிறார்கள், அனுர கட்சிக்காக வாக்கு கேட்க ஆயிரம் இளையோர் முன்வருவர், தமிழரசுக்கட்சி விலகாவிட்டால் விலக்கப்படுவர். ஆடியது, அடக்கியது, ஏமாற்றியது போதும். அடங்கும் காலம் வந்துவிட்டது. சம்பந்தர் போனதோடு தமிழருக்கு நல்ல காலம். சுமந்திரன், டக்கிளசு சொல்வார்கள்; தாங்கள் சொல்லித்தான் மயிலிட்டியிலிருந்து ஆமியை அனுர வெளியேற்றினார் என்று. எங்கள் நிலத்தை விட்டதற்கு ஏதோ தர்மம் போடுகிற மாதிரி கதையளப்பர். உண்மையிலேயே ஆமி வெளியேறியிருந்தால்; யாருக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஆரவாரமில்லாமல் நடக்க வேண்டிய மாற்றங்கள் நிறைவேறும், யாருக்கும் எதிர்க்க தோன்றாது எதிர்க்கவும் முடியாது. மெல்லென பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சரத், விமல் வீரவன்ச மௌத்தாய் விட்டார்களா? விமல் வீரவன்ச இரந்த கட்சியில் இருந்திருந்தால் கட்சி வென்றிருக்காது.
  18. விக்கினேஸ்வரன் ஏற்கெனவே அறிவித்து விட்டார், இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என. எனவே தானும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதும், தான் வெற்றி பெறுவது இனிமேல் கடினம் என்பதும், தனது குலுமாசுகள் எடுபடாது, தன்னை தரகராக அனுர ஏற்படுத்த மாட்டார் என்பதும் அவருக்கு தெரியாததல்ல. ஆகவே பெற்றதே லாபம் பாதுகாப்போம் என நினைத்து சொல்கிறார், இன்னும் ஏதோ தனது கட்டுபாட்டில் கட்சி இருப்பது போலவும் தானாகவே விலகுவது போலவும் கதையளக்கிறார், ஆனால் இலகுவில் விலக மாட்டார்.
  19. அப்படியா...... அரவணைத்து விட்டாரா? நான் அறியவில்லை. இவர் சிங்களவரேதான். அதிலென்ன சந்தேகம்? தன்னை வித்தியாசமானவராக காட்ட முனைகிறார். தமிழர் அழிக்கப்படும்போது இவர் இரக்கம் காட்டவில்லை, முண்டு கொடுக்காவிட்டாலும் மௌனமாக இருந்து ரசித்தவர். அதைவிட தமிழர் தாயகத்தை இரண்டு படுத்தியவர். இனிமேல் இவரே நினைத்தாலும் பிரித்ததை இணைக்கமுடியாது. தமிழரின் முயற்சி, முன்னேற்றம் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். அனுரா எங்கேயும் தான் தமிழருக்கு ஆதரவு என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் ஆனால் அவர் அரசியலில் காலூன்றுவதற்கு தமிழரின் ஆதரவை எதிர்பார்ப்பார். "நம்ப நட, நம்பி நடவாதே." என்பதுதான் நமக்கு பொருந்தும். காலூன்றியபின்னே தன் சுய ரூபத்தை காட்டுவார்.
  20. வீட்டை ஒப்படைப்பது மாத்திரமல்ல, மேலதிகமான காலத்திற்கு வாடகை ,மின்சார பாக்கி, ஏனைய பாக்கிகளெல்லாம் செலுத்தப்படவேண்டும். இப்படி அறவிட்டால் நாடு பெற்ற கடன் எல்லாவற்றையும் அடைத்து விடலாம். நாடு பெற்ற கடன் எல்லாம் அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்கைக்காகவே.
  21. இவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறார். இவர் பதவியை விட்டுபோகும்போதும் இப்படியே இருக்குமா? இவரது வீடு, கிராமம், உறவுகள் ஜனாதிபதியென்கிற களையோ, மக்கள் பட்டாளமோ, ஆரவாரமோ இன்றி அமைதியாக இருக்கிறது. உறவுகளும் ரொம்ப எளிமையாக தெரிகிறார்கள். பதவி, இவர்களையும் வாழ்க்கைச்சூழலையும் சுற்றுப்புறத்தையும் மாற்றுமா? பொறுத்திருந்து பாப்போம். அனுர, அதிக அவசரம் காட்டுவதுபோல் தெரிகிறது. ஒன்று இந்த அவசரம் ஊழல்வாதிகளை துரத்தியடிக்கும் அல்லது இவரை அரசியலில் இருந்து துரத்தியடிக்கும்.
  22. ஐயோ..... உலக மகா கொள்ளைக்காரர் எல்லாம் நிறைந்து இருக்கும் இடம் இந்த போலீஸ் இலாகா. இவர்களை கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கோ. முடிந்தால், இவர்கள் திரும்பும் திசையெல்லாம் தெரியாமலே தொடர வேண்டும்.
  23. ம்.... சில சமயம் நம் சரிவர சிந்திக்க மறந்து விடுகிறோம். தமிழராக ஒரு ஆளுநர் வைந்தாலும் சிங்கள ஆளுநர் செய்வதையே அல்லது அதற்கு மேலேயும் செய்வார், ஆட்டுவிப்பது சிங்கள எஜமானர், அதற்கு அவருக்கு பதவி, சம்பளம். வடக்கில் இருந்த தமிழ் ஆளுநர்கள் எப்படி செயற்பட்டார்கள், செந்தில் தொண்டமான் பதவி வகித்த லட்ஷணம் தெரியுது. இவர் நல்லது செய்வார் என எதிர்பார்ப்போம்.
  24. இவர்கள், குத்துவிளக்கை வைத்திருப்பதா சங்கூதி அணைப்பதா என்று முடிவெடுப்பதற்குள் தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலும் வந்துவிடும், அதற்க்காவேனும் பயன்படட்டும் சின்னம். குத்துவிளக்கும் வேண்டாம் சங்கும் ஊதவேண்டாம் என்று மக்கள் ஒதுங்கப்போகிறார்கள். ஒரு விடயத்தில்தானும் ஒத்துப்போகிறார்களா இவர்கள் மக்களுக்காக? இப்பவே இப்படி குத்தி முறிகிறார்கள் என்றால் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மக்களை தயார் படுத்தாமல்? எதிரி தன் ஆட்களை புகுத்த இவர்கள்தான் காரணம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.