Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. நன்றி Suvy. பென்சன் எடுத்தபின்னர் பொழுதைப் போக்குவதற்குப் பலவற்றை செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருந்தேன். ஆனால் பென்சன் எடுத்த பின்னர் பொழுது போதாது என்ற நிலையில் இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். கண்ணதாசன் பாடல்களுக்குள், தன் தனிப்பட்ட விடயங்களை அழகாக புகுத்தி இருப்பார். மறைமுகமாக சில விடயங்களைச் சொல்லியும் இருப்பார். ஒரு சொல்லை பெயர், வினைச் சொற்களாகப் பயன் படுத்தி இருப்பார். அவற்றை எல்லாம் முன்னர் நான் வாசித்திருக்கின்றேன். ஆனாலும் பலர் கண்ணதாசனின் பாடல்களுக்குள் தேடுதல் செய்து, தங்களுக்கு புரிந்ததை பதிந்து விடுவார்கள். அதை கண்ணதாசனே சொல்லியும் இருக்கின்றார். இதற்கு என் வாழ்வில் நடந்த ஒன்றை குறிப்பிடலாம். ஜபிசி வானொலி லண்டனில் தொடங்கிய நேரம். அங்கே எழுத்தாளர், விமர்சகர், கவிஞர் என பல திறமைகள் கொண்ட ஆசிரியர் அ.இரவி அறிவிப்பாளராக இருந்தார். அவர் எனது நண்பரும் கூட. ஒருநாள்,” பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா..” பாடலை ஒலிபரப்பி விளக்கமும் தந்திருந்தார். “பூஜைக்கு வந்த, பூஜைக்கு உவந்த , பூமிக்கு வந்த, பூமிக்கு உவந்த என்ற இரண்டு கருத்துக்கள் வரும் வகையில் கண்ணதாசன் பாடலை எழுதியிருக்கின்றார்” என்று அ.இரவி குறிப்பிட்டார். நான் அதை மறுத்திருந்தேன். “இது கண்ணதாசனின் கற்பனை கிடையாது. உங்கள் கற்பனை” என்று சொல்லியிருந்தேன். அவர் ஏற்கவேயில்லை. இந்தப் பாடலைப் பற்றி கண்ணதாசன் குறிப்பிட்டதைச் சொல்லலாம். “ இந்தப் பாடல் எம்ஜிஆருக்காக எழுதப் பட்ட பாடல் என பலர் நினைத்திருப்பார்கள். உண்மையில் இது எனக்காக எழுதப்பட்ட பாடல்” என கவியரசு கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார். “தவளும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணிமகுடம் குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்”
  2. உண்மைதான் வில்லவன். சமீபத்தில் கூட நடிகரும் ஓவியருமான சிவகுமார், “இந்தியாவில் ஓவியர்களாகப் பிறக்கக் கூடாது. பாவப்பட்ட ஐன்மங்கள்” என்ற கருத்துப்பட பேசியிருந்தார். இந்தியாவிலேயே இந்த நிலை என்றால் இலங்கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஓவியர்களுக்கான சிறப்பு எங்களுக்கு (அதாவது எங்கள் நாட்டில் எப்பொழுதும்) விளங்காமற்தான் இருக்கிறது. பருத்தித்துறையில் தும்பளைக்குப் போகும் பாதையில் சிவபாதம் கடை ஒன்றிருந்தது. படங்களுக்கு பிறேம் போடும் கடை அது. எனது ஓவிய ஆசிரியர் ஏ.மார்க் அவர்கள் படங்களை வரைந்து சிவபாதத்திடம் கொடுப்பார் அவரும் பிறேம் போட்டு கடையில் பார்வைக்கு வைத்திருப்பார். எப்போதாவது யாராவது திருமணம், குடிபுகுதல் போன்றவற்றுக்கு பரிசாகக் கொடுப்பதற்காக ஐந்து ரூபாக்கள் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். அப்பொழுதே ஒரு இலங்கைத் தமிழ் ஓவியனின் படைப்பை ரசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இப்பொழுது மிக மோசம். நான் யேர்மனிக்கு வந்த நாட்களில் ஓவியக் கண்காட்சிகள் அதிகம் நடக்கும். இப்பொழுது அப்படியான கண்காட்சிகள் பற்றிய அறிவித்தல்களைக் காண்பதே அரிதாகிவிட்டது. ஓவியத்துக்கான உப பொருட்கள் வாங்கும் கடைகளே எனது நகரில் இல்லாமல் போயிற்று. எதுவும் வாங்க வேண்டுமானால் இணையத்தில்தான் வாங்க வேண்டியிருக்கிறது. எங்களது கற்பனைகளுக்கு, தேவைகளுக்கு ஏற்ப AIஇல் படங்களை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கிறது. எங்களுக்குத் திருப்தி தரும்வரை ஒன்றல்ல ஒரு நூறு படங்களை உருவாக்கச் சொல்லலாம். யாரிடமும் போய் கேட்காது தங்களுக்குத் தேவையான ஓவியங்களை அவரவர்கள் உருவாக்கிக் கொள்வது ஒரு கொடைதான். நீரோடு செல்லும் ஓடம் போல் நாங்களும் காலத்தோடு பயணிப்போம்.
  3. இது ஒருவகையில் உரிமை மீறல். வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் செயல்களை கமராவில் கண்காணிப்பது ஏற்புடையதில்லை. யேர்மனியில் வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்தால் , வாடகைக்கு இருப்பவர் அனுமதித்தால் மட்டுமே வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள்ளே போக முடியும். நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடும் இனம் என்பதால் எங்களிடம் கூடுதல் தகுதி இருக்கிறதோ என்னவோ?
  4. செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது தங்கை அல்ல தாயானவள் கோடி பாடல் அண்ணன் பாட பொருளானாள் ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
  5. சுமேரியரும், குமாரசாமியும் பென்சன் எடுத்துவிட்டு, நாட்டுக்குப் போய் காணியைத் துப்பரவாக்கி ரஜினி மிளகாய்த் தோட்டம் வைக்க ஆலோசனைகள் செய்து கொண்டிருப்பதைக் ‘நானும் ஊர்க்காணியும்’இல் வாசித்ததன் பின்னர், எனக்கு இந்தச் செய்தி வாசிக்கக் கிடைத்தது. அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு இப்பொழுது 66 வயது. அவருக்கு மார்ச் 19ந் திகதி பெர்லினின் சாரிடே மருத்துவமனையில் பத்தாவது குழந்தை பிறந்திருக்கின்றது. பத்துப் பிரசவங்களில் ஏழு பிரசவங்கள் சிசேரியன் மூலம் நிகழ்ந்திருக்கின்றன. அவரது முதல் (பெண்) குழந்தைக்கு தற்போது 45 வயது. மருத்துவராக இருக்கிறார். சரி எப்படி இதெல்லாம் உங்களுக்குச் சாத்தியமாயிற்று என்று அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டைக் கேட்டால், நான் மிகவும் “ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுகிறேன், ஒவ்வொரு நாளும், தவறாமல் ஒரு மணி நேரம் நீந்துவேன், இரண்டு மணி நேரம் ஓடுவேன். புகைபிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தியதில்லை” என்கிறார். ஏற்கனவே அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள். அத்துடன் இப்பொழுது பிறந்த குழந்தையையும் சேர்த்துக் கொண்டால் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 66வயது என்பது யேர்மனியில் பென்சனுக்குப் போகும் வயது. இந்த வயதில் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்தால் 6 ஏக்கர்களென்ன 60 ஏக்கர்களிலே கூட ரஜினி மிளகாய்த் தோட்டம் செய்ய குமாரசாமியால் முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனாலும் ஒன்றைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவருக்கு குமாரசாமிக்கு இருப்பது போன்று முழங்கால்ப் பிரச்சனை. அடிக்கடி மருத்துவ விடுமுறைகள் எடுத்துக் கொள்வார். வேலையிடத்தில் முகம் சுழிக்க,எதற்குத் தொல்லை என வேலையை விட்டு விட்டார். பதினெட்டு மாதங்கள் அவருக்கு Kranken Geld (Sick Pay) கிடைத்தது. அதேநேரத்தில் wassergymnastik (water gymnastics)க்குப் போகும்படி மருத்துவரும் மருத்துவக் காப்புறுதி நிறுவனமும் அவருக்கு அறிவுறுத்தினார்கள். முதற் கட்டமாக ஐம்பது தடவைகள் அவர் wassergymnastikக்குப் போக வேண்டியிருந்தது. ஒரு தடவை தவறினாலும் அதற்குக் காரணம் சொல்ல வேண்டும். அத்துடன் தவற விட்ட wassergymnastik பயிற்சிகளையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. பதினெட்டு மாதங்கள் முடிய Kranken Geld (Sick Pay) நிறுத்தப்பட்டு, இரண்டு வருடங்களுக்கு Arbeitslosengeld (Unemployment benefit) வழங்கினார்கள். அந்த இரண்டு வருடங்களும் முடிய Bürgergeld (Citizen's allowance) வழங்கத் தொடங்கினார்கள். ஆனால் இந்த Arbeitslosengeld (Unemployment benefit) வழங்கத் தொடங்கிய காலம் தொடக்கம் அவர்கள் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. முழங்காலில் வலி இருப்பதால், இருந்து செய்யும் வேலைகளைப் பரிந்துரைத்தார்கள். வேலை கிடைக்கும் வரை வேறு தொழில்கள் பயில Berufliche Fortbildungszenten (Vocational training centers)க்கு அனுப்பினார்கள். கணிணியில் கொஞ்சம் தெரியும், கணக்கும் நன்றாக வரும் என்று அங்கே அவர் சொல்ல அது சம்பந்தமான சில தொழில் கல்விகளை அவருக்குப் பரிந்துரைத்து, உங்களுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள். “அவசரப்பட்டு விட்டேனா?” என அவர் என்னிடம் கேட்டார். யேர்மனியில் பென்சன் எடுப்பது ஒன்றும் லேசான காரியமில்லை. குமாரசாமி தனது முழங்கால் நோவைக் காட்டி சீக்கிரமாகப் பென்சன் எடுக்க நினைத்தால் சற்றுச் சிந்திக்க வேண்டுகிறேன்.
  6. சந்தேகம் ஏன்? உங்கள் கற்பனையும் ஓவியமும் நன்றாகத்தான் இருக்கின்றது. தொடருங்கள்.👌
  7. கண்ணதாசன் திரைப்படங்களுக்கானக்கான வசனகர்த்தாவாக இருந்து பாடலாசிரியரானவர். அந்த நேரத்தில் பாபநாசம் சிவம், தஞ்சை ராமதாஸ், குமா. பாலசுப்ரமணியம், காமு ஷெரிப் போன்றவர்களே திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருந்தனர். அம்பிகாவதி படத்தின் தயாரிப்பாளர், பானுமதி பாட இருந்த பாடலுக்கு கண்ணதாசனை பாட்டெழுதக் கேட்டுக் கொண்டார். கண்ணதாசனை பானுமதிக்கு பெரியளவு தெரிந்திருக்கவில்லை. தான் நடிக்கும் படத்துக்கு கண்ணதாசன் பாடல் எழுதுவதை பானுமதி விரும்பவில்லை. அனாலும் மறுக்க இல்லை. கண்ணதசனுக்கு இந்த விடயம் தெரியவர பாடலில் முடிந்தளவு தன் திறமையைக் காட்டினார். அதிலும் அவர்எழுதிய, “பானுமதி மாறி வரும் வானகத்து மீனே பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே..” வரிகளில் பானுமதி அசந்தே போய்விட்டார்.
  8. ஶ்ரீதர் வண்ணப்படங்கள் எடுத்து நொந்து போய் இருந்த நேரம், கறுப்பு வெள்ளையில் அலைகள் படத்தை எடுத்து வெளியிட்டார். விஷ்ணுவர்த்தன் (நடிகை பாரதியின் கணவர்), சந்திரகலா நடித்திருந்தார்கள். இருவரும் எங்களுக்குப் புதுமுகங்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனின் குரலும் புதிதுதான். பாடலும் அமைதியாக இருக்கும், பாடல் காட்சியில் ஆர்பபாட்டம் எதுவுமின்றி விஸ்ணுவர்த்தனும் அமைதியாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த படங்களில் அலைகள் படமும் ஒன்று. இன்று ஶ்ரீதர்,விஸ்ணுவர்ததன், சந்திரகலா,ஜெயச்சந்திரன் ஆகியோர் எங்களிடமில்லை. ஆனலும் இப்பொழுதும் எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
  9. இதை முன்னரே நான் வாசித்ததாக நினைவு. இல்லையென்றால் எனக்கென்னவோ நடந்திருக்கிறது
  10. தாய்க்குப் பின் தாரம் படத்துக்குப்பின் எம்ஜிஆரோடு ஏற்பட்ட மோதலால் ரஞ்சனை கதாநாயகனாகப் போட்டு தேவர் எடுத்த படம்தான் நீலமலைத் திருடன். இந்தப் படத்தில் இடம் பெற்ற “சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…” பாட்டு அந்நாளில் மிகப் பிரபலமாக இருந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும் போது, ஜிக்கியின் குரலில் உள்ளம் கொள்ளை போகிறது.
  11. குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட அவர்கள் வசம் இருந்த கோண்டாவில, கொக்குவில, இணுவில, யாப்பன, கொடிகாம, மிருசுவில எல்லாம் இப்பொழுது தமிழர்கள் வாழும் இடங்களாகத்தானே இருக்கின்றன. அது போல் நாங்கள் வாழும் பகுதிகள் அவர்கள் வசம் போயும் இருக்கின்றன. இன்று சிவனொளி பாதம் நான்கு மதங்களாலும் உரிமை கொண்டாடப்படுகின்றது. கதிர்காமக் கந்தனும் ஓரளவு அந்தவகைக்குள் அடங்குகிறார். தமிழர், சிங்களவர், வேடுவர் என பலரும் வழிபடும் தளமாக அது இருக்கிறது. சிங்களவர்கள் எப்படி அழைத்தாலும் தமிழர்களுக்கு அது கதிர்காமம்தான். அத்தோடு கந்தன் தமிழர்களின் முப்பாட்டன் அல்லவா? பல காரணங்களுக்காக குடியேற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவை அவரவர்கள் தேவைகளுக்காக நடக்கின்றன. இதில் சில அரசின் திட்டமிடல்களூடாகவும் நடந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் முன்னைய அரசாங்கங்களைப் போல் இந்த அரசாங்கம் தீவிரம் காட்டவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். நியாயம், அப்போ கைகலப்பில் ஈடுபடலாம் என்கிறீர்களா? பேசிப் பார்த்தோம் பலனில்லை. போராடிப் பார்த்தோம், பரம்பதம் விளையாட்டு மாதிரி இன்னும் கீழே போய் இருக்கின்றோம். சரி,மறக்கவும் வேண்டாம். மன்னிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்யலாம் என்று நியாயமாக நீங்களே சொல்லிவிடுங்களேன்.
  12. ஜிக்கியின் குரலில் எனக்கு ஒரு மயக்கம் இருக்கிறது. தமிழ்ப் படங்களில் பாடுவதை கணவனுக்காக இடையில் நிறுத்திவிட்டார். “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்….” பட்டுக்கோட்டையார் ஆரம்பத்தில் இசையில் மனம் துள்ளும் என்பார், இறுதியில் காதல், இன்பத் தேனையும் அள்ளும் என்பார். நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணவர் ஏ.எம். ராஜா இறந்தபின் ஐரோப்பிய மேடைகளிலும் இவர் பாடியிருந்தார். அப்பொழுது இவர் பாடிய, “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்…” பாடலைப் பாடும் போது அவர் உணர்ச்சி மிகுந்து உச்ச தொனியில் பாடிய இந்த வரிகள் கண்கலங்க வைத்தன “கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ-என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ வாழ்கவென்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம் இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறையச் சம்மதம்”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.