Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. தலமை என்றால் ஆளுமை இருக்க வேண்டும். இல்லாதவர்கள் ஏன் அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும்? போன வருடம் ஒரு தலைவர் மறைந்தார். இந்த வருடம் இன்னொரு தலைவர். இப்பொழுது இருக்கும் தலைவருக்கு கண்டிப்பாகப் பயம் பிடித்து ஆட்டும். ஐயா மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி
  2. இந்தியா, துணைத் தூதுவராக சடை வளர்த்த ஒருவரை யாழ்ப்பாணத்தில் குந்த வைத்திருக்கிறதே? அவருக்குத் தெரியாதா காங்கேசன்துறை, நெடுந்தீவு, பருத்தித்துறை, வலவெட்டித்துறை எல்லாம் எங்கே இருக்கிறது என்று. அவர்கள் நினைத்ததைத்தான் செய்து முடிப்பார்கள். சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பலையும் தங்கள் கரைக்கு இழுத்து வருவார்கள். மாற்றான் கடலிலும் இழுவைப் படகை ஓட்டியும் வருவார்கள். கடப்பாரை விழுங்கியவன் மாதிரி முழுசிக் கொண்டிருக்கும் எங்கள் எம்பியும் என்னத்தைக் கிழிக்கப் போகிறார்? எல்லாம் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்
  3. பாலபத்திர ஓணாண்டி, 2009 மேயுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லாது போகிறது. விடுதலைப் புலிகள் இருக்கும்வரை போராளிகளுக்கும், அமைப்பில் பணி புரிந்தோருக்குமான தேவைகளை எல்லாம் விடுதலைப் புலிகளே பார்த்துக் கொண்டார்கள். திடீரென எல்லாம் அழிந்தபின் அவர்கள் வாழ்வதற்கான வழி என்ன? என்ற கேள்வி எழுகிறது. போதாததற்கு அரசாங்கத்தினால் ஏற்படும் அச்சமும் அவர்களிடம் சேர்ந்து கொள்கிறது. விரைந்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல். எங்களில் பலர் வீட்டை, காணியை, நகைகளை விற்று அல்லது கடன் வாங்கியே வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அவர்கள் என்ன செய்வார்கள்? தங்கள் கையில் உள்ளதைத்தானே விற்பார்கள். ஆகவே நீங்கள் அமரதாஸை குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் உங்களை அவர் தங்களில் ஒருவனாகத்தான் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அவர் உங்களுக்குப் photoக்களை அனுப்பியிருந்தால், அது அவர் உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். உங்கள் கைகளில் படங்கள் வரும் போது அது பரவலாக பலரைச் சென்றடைய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் எண்ணியிருக்கலாம். பணம் தந்தால்தான் படங்களைத் தருவேன் என்று அவர் சொல்லியிருந்தாலும் கூட அதை பிழை என்று நான் சொல்ல மாட்டேன். அவருக்கும் வாழ வழி வேண்டும் அல்லவா?
  4. மண்டைதீவு சாத்திரியாருக்கு உங்கள் ஊரில் இருந்த பாடசாலை பற்றித் தெரிந்திருக்கின்றது. அதுசரி செந்ரதூரப் பூவை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?
  5. அரசியல் என்பது சந்தர்ப்பத்துக்கு ஏற்றது. எம்ஜிஆர் தனது அரசியலுக்கு விடுதலைப் புலிகளை ஆதரித்தார். அதை கச்சிதமாக தலைவர் பயன்படுத்திக் கொண்டார். போராட்டத்தைப் பற்றி எம்ஜிஆர் கேட்டபோது, “நீங்கள் திரையில் செய்த புரட்சியை பிரபாகரன் நிஜத்தில் செய்கிறார்” என்று அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஒரு பெரிய ஜஸ் கட்டியையே எம்ஜிஆர் தலையில் வைத்து தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டார்கள்.
  6. என்ன Paanch இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? இந்த வருட ஆரம்பத்தில் இருந்து யேர்மனிய அரச தொலைக்காட்சியில், (meine Damen und Herren) ஆண்கள் பெண்கள் என்று விழிக்காமல் பொதுவாக (Guten Tag) நல்லநாள் என்று எல்லாப் பாலினத்துக்கும் வாழ்த்துச் சொல்லியே செய்திகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
  7. அப்போ உங்கள் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ‘பாம்பின் உழுத்தமா கொட்டாவி’ என்று சொல்வதை நானும் அனுபவித்திருக்கிறேன்.
  8. இது ஒரு தவறான கருத்து. 77இல், “இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப் படுகிறார்களே” என்று ஒரு நிருபர் எம்ஜிஆரைக் கேட்டபோது, “இலங்கையில் எனக்குச் சிங்கள ரசிகர்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னவர்தான் எம்ஜிஆர். கருணாநிதி ரெலோவுக்கு ஆதரவு கொடுத்ததால், எம்ஜிஆர் புலிகளைத் தேர்ந்தெடுத்தார். கோடிகளை அள்ளிக் கொடுத்ததெல்லாம் அவரது வாக்கு அரசிலுக்குத்தான். தன்னை தமிழனாகக் காட்டிக் கொள்ளத்தான்.
  9. “நான் யாருக்கும் பார் லைசன்ஸ் எடுத்துக் கொடுக்கவில்லை. அநியாயமாக என் மேல் பழி போடுகிறார்கள் என்பதையும் இந்தப் பாராளுமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.கோட்டை விட்டுவிட்டார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினை தமிழ் மக்களின் தேவைகளை விட முதன்மை பெறுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.