Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. “ஜாம்ஷிட் ஷர்மாத்துக்கு( Jamshid Sharmahd)வழங்கப்பட்ட தீர்ப்பானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தயவு செய்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்” என யேர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பொக் ஈரானைக் கேட்டிருந்தார். ஆனால் தான் வழங்கிய தீர்ப்பில் ஈரான் உறுதியாக இருந்தது. யேர்மனி,ஈரான் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஷர்மாத்துக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு இப்போது மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. ஷர்மாத் அவரது ஏழு வயதில் தனது தந்தையுடன் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். ஷர்மாத் சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்திருக்கிறார். 2003 முதல் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்தார். 2007இல் ஒரு சைபர் தாக்குதலை நடத்தினார் என்று ஈரான் ஷர்மாத் மேல் குற்றம் சுமத்தியது. அத்துடன் ஈரானுக்கு எதிரான ரொன்டர் (Tondar) இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும், ரொன்டர் இயக்கத்துக்காக,லொஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி,வானொலி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு உதவினார் என்றும் ஈரான் அவர்மேல் குற்றம் சாட்டியிருந்தது. 2020இல் தொழில் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றி விட்டு யேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷர்மாத், விமானம் இடைத் தங்கலுக்காக துபாயில் நின்ற போது ஈரானிய உளவாளிகளால் ஈரானுக்குக் கடத்தப்பட்டிருந்தார். ஈரானில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்ட ஷர்மாத்துக்கு 2023ம் ஆண்டு ஈரான் புரட்சிகர நீதிமன்றம் மரணதண்டனையை விதித்தது. ஷர்மாத்திற்கு வழங்கப்பட்டஇந்தத் தீர்ப்புக்கு யேர்மனி உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் மனித உரிமை அமைப்புகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. ஈரான் மரண தண்டனைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தினாலும், மேற்கத்திய வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது மிகவும் அரிதானது. ஆனால் ஷர்மாத்தின் விடயத்தில் அவர் ஈரானிய குடியுரிமையையும் வைத்திருந்ததால் அவருக்கான மரணதண்டனையை ஈரானால் நிறைவேற்ற முடிந்திருக்கிறது. சிறையில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 69 வயதான தனது தந்தையை விடுவிக்க ஷர்மாத்தின் மகள் கெஸல் இறுதிவரை போராடினர். அவரது போராட்டமும் பலனில்லாமல் போனது. 28.10.2024 அதிகாலை ஷர்மாத், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காக தூக்கிலிடப்பட்டார் என ஈரான் அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளாக ஈரானுக்கும் யேர்மனிக்கும் இடையே நல்ல உறவுகள் இருக்கவில்லை. இப்பொழுது இன்னும் மோசமான நிலை ஏற்படலாம் என யேர்மனிய வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பொக் தெரிவித்திருக்கிறார். https://www.spiegel.de/ausland/jamshid-sharmahd-iran-weist-deutschlands-kritik-an-hinrichtung-zurueck-a-dd4d9b9d-e8b0-4a5e-bdd0-4c5f8edc748a
  2. இதிலென்ன புரிந்துகொள்ள இருக்கிறது. சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் பிரசுரங்களை விநியோகிக்கவும் அவருக்கு சம்பளம் தரப்படுகிறது. அது அவரது தொழில்.
  3. கேள்வியிலே ஒரு தவறு இருப்பதை கவனித்தீர்களா Paanch? நீங்கள்தான் சிறீலங்காவில் இருந்து யேர்மனிக்கு வந்தீர்கள். உங்கள் பேரன் அல்ல. உங்கள் பேரன் பிறப்பால் யேர்மனியன். ஆக நீங்கள் வந்த காரணத்தைச் சொன்னால் போதும். அவர் புரிந்து கொள்வார்.
  4. ஜனாதிபதி பொது வேட்பாளருக்கும் பாதுகாப்பு கிடைத்ததாகக் கேள்வி
  5. கதை நல்லதுதான் முதல்பாதி நன்றாகச் சொல்லப்படிருந்தது. இரண்டாவது பாதி இழுவை. குறும் படத்துக்கான கதையை 2.30 மணித்தியாலத்துக்கு நீட்டி இருக்கிறார்கள். ஆனாலும் மோசமில்லை. பார்க்கக் கூடிய படம். அவரவர்களுக்கு தந்த பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
  6. 1969 க.பொ.த. சாதாரணப் பரீட்சை. அன்று ஆங்கிலப்பாட சோதனை. நடுத்தர வயது மனிதர் ஒருவரும் பரீட்சை எழுத மண்டபத்திற்கு வந்திருந்தார். ஒரு நண்பன் சொன்னான், “ அவர்தான் தமிழரசுக்கட்சி எம்.பி. கே.துரைரத்தினம். சட்டம் படிக்க ஆங்கிலத்திலே கிறெடிற் தேவை. அதுக்குத்தான் சோதனைக்கு வந்திருக்கிறார்” என்றான். கே.துரைரத்தினம் முதலில் வாத்தியார். எம்பி ஆனதன் பின்னால் சட்டம் படித்தார். அரசியல் என்பது சட்டத்தோடு பின்னிப் பிணைந்தது. சட்டத்தரணிகள் எம்பிகளாக வருவது அனுகூலமே. எங்களுடைய பிள்ளையான் மாதிரி எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் மாநில முதல்வர்கள். ரீகன் ஒரு பட்டதாரி மட்டுமல்ல அவருக்கு வேறு தகமைகளும் இருக்கின்றன. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது, “தமிழக அரசு சார்பாக, இலங்கைப் போராளிகளுக்கு ஆயுதம் வாங்க 4 கோடி தரப்படும்” என்று அறிவித்தார். அவரது அறிவித்தலைக் கேட்ட இந்திரா காந்தி மிரண்டு போனார். “யோவ் இதெல்லாம் மத்திய அரசு செய்யும் வேலை. உனது மாநிலத்தை மட்டும் பார் போதும்” என இந்திரா காந்தி அதட்டி வைக்க, கருணாநிதியிடம் மாட்டிக் கொண்டார். உடனடியாக பல்டி அடித்து, தமிழர்களது புனர்வாழ்வுக்காக தனது சொந்தப் பணம் (?) நாலு கோடியை புலிகளுக்குக் கொடுத்து தப்பித்துக் கொண்டார். அரசியல் அறிவு மட்டுமல்ல, சட்டமும் தெரிந்திருக்க வேண்டும்.
  7. theeya, உண்மைதான். இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் திரையிடப்படுவதில்லை என்ற உங்கள் கருத்து சரியானதுதான். உள்குத்தாகவும் இருக்கலாம். உள் நோக்கமாகவும் இருக்கலாம். சிறீமா காலத்தில் (எழுபதுகளில்) இந்தியத் திரைப்படங்கள் மட்டுப் படுத்தப்பட்டன. அப்பொழுது இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஊடாகத்தான் இந்தியத் திரைப்படங்கள் வாங்கப்பட்டன. அவர்கள் தெரிவு செய்து வாங்கும் படங்களை மட்டுமே திரையிட முடியும். திரைப்படங்களின் தரங்கள், விலைகள் எல்லாம் கவனிக்கப்பட்டன. அதேநேரம் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் இலங்கையில், நிர்மலா, குத்துவிளக்கு, கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன்… என்று பல தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவற்றுக்கு ஆதரவும் இருந்தன. ‘இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது’ என்று இந்தியா இலங்கையுடன் சேர்ந்து கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டது. பைலற் பிரேம்நாத், தீ, இரத்தத்தின் இரத்தம், நங்கூரம், மாமியார் வீடு….. என பல படங்கள் தயாராகின. பின்னர் போராட்டச் சூழலிலானாலும் ஜேஆரின் ஆட்சியில் இருந்த தாராளக் கொள்கையினாலும் நிலமை மாறி ‘பழைய குருடி’ கதையானது. இப்பொழுது இலங்கையில் வந்துள்ள ஆட்சி மாற்றத்தினால் ‘உள் நோக்கம்’ கூட இருக்கலாம். புலிகளை, போராட்டத்தை கொச்சைப் படுத்தி படம் இருப்பதால் ‘உள்குத்து’ ஆகவும் இருக்கலாம். அல்லது வடக்குப்பகுதி இந்தியாவுக்குள் வந்து விட்டது என்ற எண்ணமாகவும் கூட இருக்கலாம். ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  8. Paanch, நாலு எலிகளைத்தான் உடனடியாகப் பிடிக்க முடிந்தது
  9. துண்டுப் பிரசுரம் விநியாகிப்பது குற்றம் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தபின் அதை ஒரு சட்டத்தரணியான கஜே செய்திருக்கின்றார் என்றால் இது ஒருவிதமான தேர்தல் பிரச்சார உத்திதான்.
  10. சுமந்திரனுக்கு ஆதரவாக கம்மன் பில பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்டாரா?
  11. உண்மை. அது அவரது படைப்பு. பார்ப்பவர்கள் விமர்சனத்தை வைக்கட்டும்.
  12. தொலைந்துபோன 39 ஆண்டுகள் 1980ம் ஆண்டு. அவரது வயது24. அவர்,அவரது பெற்றோருடன் வசிக்கிறார். ஆனால் அவரது உண்மையான வயது 68. லூசியானோ டி அடாமோ திருமணமானவர், ஒரு மகன் இருக்கிறான். பெற்றோரை விட்டு விலகி நீண்ட காலங்களாகி விட்டன. இப்பொழுது அவரைப் பற்றி இத்தாலியின் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. லூசியானோ டி அடாமோ தனது வாழ்க்கையில் கடந்த 39 ஆண்டுகளை மறந்து விட்டார் என்பதே அந்தச் செய்தி. 2019ம் ஆண்டு, ரோம் நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி லூசியானோ டி அடாமோ, தனது நினைவுகளை இழந்து கோமா நிலைக்குப் போய்விட்டார். சில நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர் மீண்டும் விழித்தபோது அவருக்கு எல்லாமே அந்நியமாக இருந்தன. அவரால் தனது மனைவியையும் மகனையும் கூட அடையாளம் காணமுடியாதிருந்தது. முதன்முறையாக கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது, வெள்ளை முடியுடன் கண்ணாடியில் தோன்றிய உருவத்தைப் பார்த்துப் பயந்துவிட்டார். தனது தாயாரைப் பார்க்க வேண்டும், என்று வைத்தியர்களிடம் அடம் பிடிக்க ஆரம்பித்தார். நரைத்த முடியுடன் ஒரு பெண் அவரது அறைக்குள் வந்து, „லூசியானோ“ என்று அழைத்த போது, அவளுக்கு எப்படி என் பெயர் தெரியும் என்று குழம்பிப் போய்விட்டார். அந்தப் பெண் வேறு யாருமில்லை. அவரது மனைவி. “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே, நிச்சயதார்த்தம் மட்டும்தானே செய்துகொண்டேன். அதுவும் 60 வயது மதிக்கத் தக்க இந்தப் பெண்ணுடன் இல்லையே! அவளுக்கு 19 வயதுதானே!”, எனக் குழம்ப ஆரம்பித்தார். 35 வயதான ஒரு இளைஞன், தன்னை அவரது மகன் என்று சொன்னான். தனக்கே 24 வயதுதான் நடக்கிறது. இந்த 35 வயது ஆண் எப்படி தனக்கு மகனாக இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார். தனது திருமணம், பேர்லின் சுவர் இடிப்பு, செப்ரெம்பர் 11 தாக்குதல், இத்தாலிக்குக் கிடைத்த இரண்டு உலக வெற்றிக் கிண்ணங்கள் எதுவும் லூசியானோ டி அடாமோவுக்கு நினைவில் இல்லை. யூரோ நாணயங்கள், அலைபேசிகள் எல்லாமே அவருக்குப் புதியவையாக இருக்கின்றன. 68 வயதான லூசியானோ டி அடாமோ, தனது குடும்ப உறுப்பினர்களதும் நண்பர்களதும் உதவியுடன் தனது மறந்து விட்ட 39 ஆண்டுகால வாழ்க்கையைக் கண்டறிய இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். இருந்தாலும், அது அவருக்குப் பெரும் சிரமமாக இருக்கிறது. மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்களின் உதவியுடன் மீண்டும் தனது சுற்றுப்புறங்களைச் சுற்றி வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். சில நேரங்களில் நினைவாற்றல் இழப்பு தற்காலிகமானது, சில சமயங்களில் அது நிரந்தரமானது. https://www.thesun.co.uk/news/31236895/dad-hit-car-coma-1980/
  13. அக்கினிக் கரங்கள் புத்தகத்தின் முற்பக்கங்களில் உள்ள விடயங்களையும் இணைத்திருக்கின்றேன். 21.10,1987 .அன்று இந்திய அமைதிப் படையினரால் யாழ். போதனா வைத்திய சாலையில் கொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்நூல் காணிக்கை! பதிப்புரை ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவு செய்து வைக்கும் பணியிலேயே, திரு.நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருக்கின்றது. எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை அவர், படைத்த இலக்கியங்கள் அதற்குச் சாட்சி. இந்த வகையில், உண்மை நிகழ்வுகளை இலக்கியப் படைப்புக்களாக உருவாக்கும் பணியில், தமிழீழ இலக்கிய வரலாற்றில் திரு. நாவண்ணனுக்கு தனித்துவமான ஓரிடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அக்கினிக் கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது! 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22ஆம் திகதி களில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் இந்தி யப்படை புரிந்த படுகொலையை மையமாக வைத்தே இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. உலகின் கண்களில் இருந்து கணிசமான அளவுக்கு மறைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலைப் படு கொலையின்போது, அதிற் சிக்கி உயிர் தப்பிய .... சாட்சிகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு நாவண்ணன் இந்தக் குறுநாவலைப் படைத்துள்ளார்! போராட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருக் கொடுத்து வெளியிடுவதில் நாம் மன நிறைவடைகின்றோம். தமிழ்த்தாய் வெளியீட்டகம் அணிந்துரை இது ஒரு 'குறுநாவல்' என்கின்ற பரிமாணத்தையும் மீறி ஒரு காலத்தின் 'வரலாற்றுப் பதிவாகவே" அமைந்திருக்கின்றது. இந்தக் குறுநாவலைப் படிக்கின்ற போது எமது சரித்திரத்தின் அந்தக் கொடூரமான கால கட்டத்தில் வாழ்ந்து - அந்தக் கொடுமையான சம்பவங்களைக் கண்டு உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு, இந் நிகழ்வுகள் திரைப்படமாகவே மனதில் வந்து செல்லும். இந்த நூலில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயரூபம் மிக அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது. உலகில் மிகப் பெரிய 'ஜனநாயக நாடு' இந்தியா என்று தம்மைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்கள் - மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்; "ஒரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும்' என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டொக்ரர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல்' அங்கு அத்துமீறி நடாத்திய அநர்த்தங்கள் யாவினையும் ஆசிரியர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். ஒரு நாள் உலகம் நீதி கேட்கின்ற போது, இது போன்ற உண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுநாவல் கள் நிச்சயமாக உண்மையை விளம்பும் மனச்சாட்சிகளாக - உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களாகத் தீச் சுவாலைகளுடன் எழுந்து நிற்கும். எதிர்கால சந்ததியினர் ஒரு காலத்தில் இங்கு என்ன நடந்தது ...... சுதந்திரம் பெறுவதற்காக இந்த மண் கொடுத்த விலை என்ன...... நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு...... என்பதைச் சொல்வதற்கு இந்தக் குறுநாவல் உதவும். இது எங்களுடைய தேசப்பற்றை இன்னும் வளர்த்து இந்த மண்ணிற்கு மேலும் உரமூட்ட உதவும். எதிர்காலத்தில் திரைப்படமாக்கப்பட்டு மக்களின் மனங்களில் இவை சரித்திர நிகழ்வுகளாகப் பதிவு செய் யப்படல் வேண்டும். இவ் வரலாற்றுப் பணியைச் செய்த நாவண்ணன் அவர்களை, அன்று அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களும் அவர்கள் உறவினர்களும் தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவு கூருவார்கள் என்றே நம்புகின்றேன். இவருடைய இலட்சியப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு இது சம்பந்தமாக குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த கொடூரங்கள் பற்றியும் அன்று அங்கு கொலை செய்யப்பட்டவர்கள், கடமை புரிந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய மேலும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று இந்நிகழ்வை சரித்திரப் பெரும் நாவலாக எழுத வேண்டுமெனப் பணிவன்போடு கேட்டு மீண் டும் வாழ்த்துகின்றேன். வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறன் 23.12.1994 ஏன் எழுதினேன்? 'யாவும் கற்பனை' என்ற, அடிக்குறிப்புடனே இலக்கியம் படைக்கும் காலம் எமக்கு இன்று இல்லை. கற்பனையை விஞ்சிய அவலங்களும், அதிசயங்களும் நிகழும் யதார்த்தத்தில் நாமின்று வாழுகின்றோம்! எனவே, நாம் வாழுகின்ற காலத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கலைத்துவத்துடன் பதிவு செய்து வருங்காலச் சந்ததிக்கு வழங்கிச் செல்வது எம் போன்றோரின் நிகழ்காலக் கடமையாகும். 1989 இல் இந்தியஅமைதிப்படையின் ஆக்கிரமிப்பு மூச்சிழுக்கத் தொடங்கிய காலத்திலேயே, நண்பன் பாலநடராஜனின் ஆதரவுடன் 'காந்திய நாட்டின் காட்டுமிராண்டிகள் 'எனும் தலைப்பில் அமைதிப்படை எமக்கிழைத்த அக்கிரமங்களை பதிவு செய்யத் தொடங்கினேன். பாரிய அந்தப் பணியைத் தொடரப் போதிய பொருள் வளம் இன்மையால் ஆரம்ப முயற்சிகளோடு அது கைவிடப்பட்டது. சென்ற ஆண்டில் 'சுபமங்களா' ஆசிரி யர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள், தமிழீழத்துக்கு வருகை தந்து சென்ற பின்னர் இலங்கை எழுத்தாளர்களுக்கான, ஈழத்தை நிலைக்களனாகக் கொண்ட குறுநாவல் போட்டியை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்துவதாக விளம்பரம் செய்திருந்தார். ஆரம்பத்தில் இதிற் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால். 1994 ஜூலை மாத சுபமங்களாவில் வெளியான திரு. கோமல் சுவாமி நாதனின் ‘அதிர்வலைகளை மீட்டும் யாழ்’ கட்டுரையின் சில வரிகள் என் மனதின் அதிர்வலையைத் தட்டிவிட்டன. அந்த வரிகள்….. "ஒரு காலத்தில் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கும் பொது அடைப்புகளும் பேரணிகளும் கூட நடந்தன. அரசாங்கம் கூட உங்களுக்கு ஆதரவாகப் பல உதவிகள் செய்தது. இதனை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்! ஆனால், ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது. மக்கள் அந்தச் சம்பவத்தின் மூலம் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பரிதாப உணர்வு ... கோபமாக மாறியது. இன்று. புலிகளின் இயக்கத்துக்கு தமிழ் நாட்டில் தடை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை அங்கு பேசப்படவில்லை .....!" மேற் கூறப்பட்ட வசனங்கள் ஓட்டுமொத்தமாக இந்தியர்களின் - இந்தியத் தமிழர்களின் கருத்து என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக இது திரு. கோமல் சுவாமி நாதனின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. தனது கருத்தை. இந்தியர்களின் கருத்து எனக் கூறுவ தன் மூலம் அங்குள்ள தமிழீழ அனுதாபிகளைக் கூடக் கொச்சைப்படுத்த முயலும் செயல் இது என்பதையும் உணர்ந்தேன். அதேவேளையில், ஒரு ராஜீவ் காந்தியின் மரணம் இந்திய மக்களிடையே தமிழீழ மக்களுக்கு எதிரான உணர்வை இந்த அளவுக்கு ஏற்படுத்தியிருக்குமானால் ராஜீவ் காந்தியின் பணிப்பின் பேரில் இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு செய்த கொலைகளும் அட்டூழியங்களும் தமிழீழ மக்களுக்கிடையே எத்தகைய எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் குறுநாவலை எழுதவேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தேன் 1987 இல் "கிறிஸ்துமஸ் நாளிலாவது யாழ்ப் பாணத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளலாமே!" என்று ராஜீவ் காந்தியிடம் கேட்கப் பட்டபோது."கிறிஸ்துமஸ் நாளில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா ஒரு கிறிஸ்தவ நாடு அல்ல." என்று ராஜீவ் காந்தி திமிருடன் கூறிய பதிலை அன்றைய நாளிதழ்களில் படித்தபோது தமிழர்களைத் திட்டமிட்டு அடக்கி அழிப்பதில் ராஜிவ் காந்தி கொண்டிருந்த வெறியைக் கண்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்! எனவே தான், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆக்கிரமங்களில் ஒரு துளியான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகளை, தீபாவளித் தினத்தன்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாடியதைப் பகைப்புலமாகக் கொண்டு இக் குறுநாவலை எழுதி அனுப்பினேன். கூடவே திரு. கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தேன்... "நீங்கள் எனது இந்தக் குறுநாவலுக்குப் பரிசு தரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால். 'சுபமங்களா 'ஆசிரியரும், பரிசுக்குரிய நாவலைத் தெரிவு செய்யும் நடுவர்குழுவும், இதைப் படித்தாலே போதும் ! நான் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்வேன்." என்பதே அது. அந்த நோக்கம்கூட, முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. யாழ். போதனா வைத்தியசாலைப் படு கொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாளில் நூல்வடிவில் இதனை வெளியிடுவது என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், 'தமிழ்த்தாய் வெளியீட்டகம்" குறிப்பிட்ட நாளில் இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்தது ! காலத்தின் தேவை கருதி இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினருக்கு என் இதய நன்றிகள். வைத்தியசாலைப் படுகொலை அவலத்தில் சிக்கி தாம் பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டு இதனை எழுதி முடிக்க உதவியவர்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன். இந்தப் படுகொலை ஏனைய வைத்தியர்கள், நிகழ்வின் போது ஊழியர்களுடன் 'எக்ஸ் - றே 'பிரிவினுள் ஒளிந்து நின்று உயிர் தப்பியவரான வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர் சீர்மாறன் அவர்களிடம், அணிந்துரை பெற்ற தன் நோக்கமே. நான் எழுதியுள்ள உண்மைச் சம்பவங்களுக்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் தான்! மனமிசைந்து இந்நூலுக்கு அணிந்துரை தந்தமைக்கு என் நன்றிகள். போட்டிக்காக எழுதப்பட்ட பிரதியில் தவிர்க்கப்பட்டிருந்த சில விடயங்கள் பின்னர், திருத்தி எழுதப்பட்டு கதையோடு இணைக்கப்பட்டுள்ளன. எனது முன்னைய நூல்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்பதால் வாசகர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன். நன்றி. நாவண்ணன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.