Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1735
  • Joined

  • Last visited

  • Days Won

    42

Everything posted by Kavi arunasalam

  1. யேர்மனியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். அந்தத் தினத்தில் பலரது கைகளில் பூங்கொத்துகள் இருக்கும். அன்னையர் தினம் என்றாலே பூக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். சுப்பர் மார்க்கெற்றில் பூங்கொத்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். யேர்மனியர்களில் பலர் அந்த ஞாயிற்றுக் கிழமையை தங்கள் தாயை சந்திப்பதற்காக ஒதுக்கி வைப்பார்கள். தாய்க்குப் பரிசுகள், பூங்கொத்துகள் கொடுப்பதோடு நின்று விடாமல், அவரை வெளியில் அழைத்துச் செல்வது உணவு விடுதிக்குக் கூட்டிச் செல்வது,தாயுடன் பழைய விடயங்களைக் கதைப்பது என்று தாயை மகிழ்விப்பதில் அவர்கள் கண்ணாக இருப்பார்கள். ஏறக்குறைய மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை யேர்மனியில் ஒரு குடும்பக் கொண்டாட்ட நாளாகப் பார்க்கலாம். அன்னையர் தினத்துக்கு எதிரான நிலையைத்தான் தந்தையர் தினத்தை யேர்மனியில் என்னால் பார்க்க முடிகிறது. ஈஸ்டருக்குப் பின்னர் 40வது நாளில் வரும் வியாழக்கிழமை யேசுநாதர் வானகம் சென்ற நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் யேர்மனியில் ஒரு விடுமுறை நாளாகும். இந்த வியாழக்கிழமையையே தந்தையர் தினமாக யேர்மனியில் கடைப்பிடிக்கிறார்கள். இந்த தந்தையர் தினத்தை யேர்மனியில் வெறும் ஒன்பது சதவீதத்தினரே கொண்டாடுகிறார்கள் என்பதுதான் பரிதாபத்துக்கு உரிய விடயம். அத்தோடு இந்த ஒன்பது சதவீத ஆண்களும் வீட்டில் தந்தையர் தினத்தைக் கொண்டாடுவதும் இல்லை. பெற்றோரை விட்டு விலகி வாழும் பிள்ளைகளும் பெரும்பாலும் தந்தைமாரைப் போய் சந்திப்பதில்லை. பூக்கடைகள், சுப்பர் மார்க்கற்றுகளும் இந்தத் தினத்தை பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. வீட்டிலேயே கண்டு கொள்ளாததால் தந்தையர்கள் வீட்டை விட்டு வீதிக்கு வந்து விடுகிறார்கள். தங்களுக்கான நாளை தாங்களே கொண்டாடுகிறார்கள். குறிப்பாக மனைவிமார்களின் நச்சரிப்புகள் பிள்ளைகளின் தொல்லைகள் இல்லாமல் சுதந்திரமாக அந்த ஒரு நாளைக் களிப்பாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாளில் நண்பர்களுடன் சேர்ந்து நடைப் பயணம், சைக்கிள் பயணம், விளையாட்டுக்கள் என தங்களுக்கு விருப்பமானவற்றைத் தெரிவு செய்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முக்கியமான ஒன்று அன்றைய நாளில் இடம் பெறுகிறது. மதுவுடன் கூடிய உற்சாகமான கொண்டாட்டம் தான் அது. கை வண்டிகளில் பியர்களை வைத்து ஆண்கள் வீதியில் இழுத்துச் செல்வதை தந்தையர் தினத்தில் கண்டிப்பாக காண முடியும். அந்த ஒரு நாள் முடிந்தவுடன் மீண்டும் பெட்டிப் பாம்பாகி அடக்க ஒடுக்கமாக தந்தையர்களின் மிகுதி நாட்கள் வேலையும் வீடும் என்று தொடரும்.
  2. “குறைந்த விலை, பெரிய தேர்வு, 90 சதவீதம் வரை தள்ளுபடி” என அட்டகாசமாக யேர்மனிய சந்தைக்குள் தற்போது நுளைந்திருக்கும்சீன நாட்டு Temu என்னும் இணையத்தள வியாபாரம் பற்றி இப்போது பெரிதாகப் பேசப்படுகிது. நகைகள், தளபாடங்கள், சிறார்கள், பெண்கள், ஆண்கள் ஆடைகள், சமையலறை உபகரணங்கள், வீட்டுக்குத் தேவையானபொருட்கள் என குறைந்த விலையில் பல பொருட்கள் இந்த இணையத்தள விற்பனைப் பகுதியில் குவிந்திருக்கின்றன. உதாரணமாக180 யூரோ பெறுமதியான Adidas தயாரிப்புகளை ஒத்த காலணிகளை 12யூரோவுக்குக் குறைவாகவே Temu தளத்தில் பார்ககமுடிகிறது. Temu அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் ஒரு மலிவான ஒரு பெரிய சந்தையாக இப்பொழுது இருக்கிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கப்படுவதாலேயே இவ்வளவு மலிவாகபொருட்களை விற்பனை செய்வது Temuவால் சாத்தியமாகிறது. எதுவானாலும் Temu இணைய விற்பனைத் தளத்தில் வாங்கும் பொருட்களின் தரம், பொருட்களின் விநியோகத்திற்கான கட்டணங்கள், வாங்கும் பொருட்களில் திருப்தி இல்லாவிட்டால் அவற்றைத் திருப்பி அனுப்புதற்கான நிபந்தனைகள் போன்றவற்றைக் கவனிக்கவேண்டியது அவற்றை வாங்குபவர்களது கடமை. https://www.temu.com/login.html?from=https%3A%2F%2Fwww.temu.com%2Fde%2F%3F_bg_fs%3D1%26_p_jump_id%3D10%26_p_rfs%3D1%26gclid%3DEAIaIQobChMIi9aMzqGB_wIVTqXVCh3p9AzbEAAYASAAEgICtfD_BwE&login_scene=2&_x_vst_scene=adg&_x_ads_sub_channel=search&_x_ads_channel=google&_x_login_type=Google&_x_ads_account=9198534984&_x_ads_set=20023353264&_x_ads_id=147068090534&_x_ads_creative_id=658254243316&_x_ns_source=g&_x_ns_gclid=EAIaIQobChMIi9aMzqGB_wIVTqXVCh3p9AzbEAAYASAAEgICtfD_BwE&_x_ns_placement=&_x_ns_match_type=p&_x_ns_ad_position=&_x_ns_product_id=&_x_ns_target=&_x_ns_devicemodel=&_x_ns_wbraid=CjgKCAjwmZejBhBwEigAArkQPO0xYIH6tS7UW6SR1QHM6hfq-h88UGIp7j7sDTN3AKEI356sGgKkNQ&_x_ns_gbraid=0AAAAAo4mICG4GARoipzVuJBuy5JIO-J62&_x_ns_keyword=temu&_x_ns_targetid=kwd-336866712715&refer_page_name=home&refer_page_id=10005_1684495202219_d2n6ak0ybu&refer_page_sn=10005&_x_sessn_id=fz86yl78q5
  3. சுமேரியர், வேதநாயகம் தபேந்திரன் புலத்தில் உள்ளவர்களுக்கு ஏதோ சொல்ல வருகிறார் கவனித்தீர்களா? குறிப்பாக 09,10,11 என்று இலக்கங்களில் உள்ள வரிகள்
  4. அன்று நண்பர்கள் வட்டத்தில் ஒருத்தனை நன்றாக ஏற்றிப் பேசி ஏதாவது செய்யச் சொன்னால் அவனிடம் இருந்து வரும் பதில், ‘பப்பா மரத்திலை ஏத்தாமல் சும்மா இருடா” என்றிருக்கும்
  5. நல்லவேளை உங்கள் ஆடைக்குள் மசுக்குட்டி இல்லை. உங்கள் அனுபவம் இனிதானது. அதைச் சொன்ன விதம் அழகு. கண்ணதாசன் கவிதையில் இருந்து, “காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே….”
  6. உண்மைதான் Justin. அதனால்தான் என்னவோ எங்கள் வீட்டில் கறி முருங்கை வளர்க்கவில்லை. ஆனாலும் எப்படியோ எங்கள் வீட்டு முள் முருங்கையில் மயிரக்கொட்டிகள் குடியேறிவிட்டன. கறி முருங்கையில் அதிகளவு மயிர்கொட்டிகள் இருந்தன என்பதால், முருங்கை இலை சுண்டலை நான் நீண்ட காலங்கள் தவிர்ததிருந்தேன் nochchi, காகங்கள் வந்திருக்கின்றன
  7. அதேபோல் பரு.மருதடியில் ஒரு சைக்கிள் திருத்தும் கடை இருந்தது. அந்தக் கடைக்குப் பெயர் NNGO சைக்கிள் திருத்தும் கடை. அதன் உரிமையாளர் மற்றவர்களோடு உரையாடும் போது “என்னங்கோ சொன்னனீங்கள்?” என்று கேட்பார். அவர் அடிக்கடி ‘என்னங்கோ’ என்ற வார்த்தையை உச்சரிப்பதால் அவரை அவரது நண்பர்கள் ‘என்னங்கோ’ என்று அழைக்க அவரும் தன் கடைக்கு ‘என்னங்கோ’ என்று பெயரை வைத்து விட்டார். சைக்கிளை வைத்து மிகவும் சுவையாக எழுதிய Dr.T.கோபிசங்கர் எனக்கு பலவற்றை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது உள்ள Dr.T.கோபிசங்கரின் மனநிலையில் முதலாளி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலில் உள்ள சில வரிகளைத் தந்து வைக்கிறேன் பெண்-சைக்கிள் ஓட்டும் ஆசை மச்சான் சாலை நமது இல்லை மச்சான் சரியா போங்க இல்லையின்னா முதுகு வீங்கி போகும் ஆண்- புளி மூட்டை போல நீயும் பின்னாலே ஏறி வந்தா எளிதாக சைக்கிள் ஓட்ட முடியுமா?
  8. “செய்யும் தொழிலே தெய்வம் - அதில் திறமைதான் நமது செல்வம்” தர்சனுக்கு வாழ்த்துக்கள்
  9. முருங்கை மரத்தில் இரண்டுவகை இருந்தன. இப்பொழுது ஊருக்குப் போய்ப் பார்த்தால் அதில் ஒன்றைக் காணோம். அந்த இரண்டில்ஒன்று இயற்கை வயாகராவாக இன்றும் வலம் வருகின்றது. மற்றது காமத்தில் வலம் வந்த இந்திரனை குறித்து நின்ற முள் முருங்கை. முள்முருங்கையின் முட்கள் பார்ப்பதற்கு ஓரளவு மனிதக் கண்கள் போன்ற வடிவமைப்பில் இருக்கும். அன்றைய காலத்தில் கல்யாணம் நடக்கும் பந்தலில் முள் முருங்கையை நட்டு வைப்பார்கள். அப்படி நட்டு வைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது ‘பிறன்மனை நோக்காதே’ என்று மணமகனுக்கு எச்சரித்தது. இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் “உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும்” என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்து விட்டிருக்கிறார்கள். இதை உணர்த்துவதற்காகத்தான் முள் முருங்கையை அன்று மணப் பந்தலில் மணப்பெண்ணின் தந்தைமார்கள் நட்டு வைத்தார்கள். முள்முருங்கை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என்னவோ மயிர்கொட்டி (மசுக்குட்டி)தான். இளவேனிற் காலத்தில் முள்முருங்கையை மயிர்கொட்டிகள் கூட்டம் கூட்டமாக பெரிதாக ஆக்கிரமித்திருக்கும். வெயில் ஏற ஏற மரத்தின்நிழற்பகுதிகளைத்தேடி அவை ஊர்வலமாக போக ஆரம்பிக்கும். எந்த எந்தக் கிளைகளில் அவை கூடி நிற்கின்றனவோ அவற்றிற்கு கீழேநிலத்தில் காவோலைகளைப் போட்டுக் கொளுத்தி விடுவார்கள். வெப்பம் தாளாமல் மரத்தின் மேலே இருந்து ஒவ்வொன்றாகநெருப்பிலே விழுந்து பொசுங்கி சுருண்டு போய் செத்துப் போயிருக்கும். அந்த நிலையில் அவற்றைப் பார்க்கும் போது சின்னஇறால்களை எண்ணெய்யில் பொரித்த காட்சி எனக்குள் வந்து நிற்கும். இன்றைய காலநிலை மாற்றத்தால் யேர்மனியிலும் இந்த மயிர் கொட்டிகள் மரங்களில் ஊர்வலம் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த மயிர்கொட்டிகள் அவர்களுக்குப் புதிது. 2019 அளவில் மயிர்க் கொட்டிகள் பற்றிய முதல் எச்சரிக்கையை யேர்மனிய சுகாதாரத்துறையும்வனத்துறையும் கூட்டாக விடுத்திருந்தன. பின்னாளில் வந்த கொரோனா அலையில் மயிர்க் கொட்டிகளைப் பற்றி அதிகமாகப்பேசப்படவில்லை. இப்பொழுது கொரோனாக் கெடுபிடிகள் முற்றாகத் தளர்ந்த நிலை. இளவேனிற் காலம் ஆரம்பித்த நேரம். மீண்டும்மயிர்கொட்டிகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். “ஒரு மயிர்க் கொட்டியில் ஏறக்குறைய 600,000 எரிச்சலூட்டுகிற ஒருவகை நச்சுத் தன்மை கொண்ட மயிர்கள் இருக்கின்றன. சிறிதாக வீசும் காற்றே மயிர்க் கொட்டிகளின் மெல்லிய மயிர்களை நூறு மீட்டர் வரை கொண்டு செல்லக் கூடியது. மயிர் கொட்டிகளின் மயிர்கள் முகம், கைகள் மற்றும் கால்கள் போன்ற ஆடைகளால் மறைக்கப்படாத உடல் பகுதிகளையே அதிகம்பாதிக்கிறது, நச்சு முடிகள் உள்ளிழுக்கப்பட்டால், அவை தொண்டை மற்றும் காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் மயிர்க் கொட்டிகளின் பழைய கூடுகளால் வளர்ப்பு நாய்கள் உட்பட காட்டுப்பன்றி, மான், நரி உள்ளிட்ட வன விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன” என்று அறிவுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய யேர்மனியச் செய்திகளைக் கேட்கையில், அன்று இளவேனிற் காலைகளில் பாடசாலைக்கு சைக்கிளில் ஒழுங்கையூடாகப்பயணிக்கும் போது இலைகளில் இருந்து நூல் விட்டு தொங்கிக் கொண்டிருந்த மயிர் க் கொட்டிகள் ஊடாக வளைந்து வளைந்துசைக்கிள் ஓட்டிய சாமர்த்தியங்கள் நினைவில் வந்து மனது இனிக்கிறது.
  10. அப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களா? தெரியவில்லை. நான் விடயத்துக்கு வருகிறேன். கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய் ‘ஏலா’ நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு கண்டி நோக்கிப் பயணிக்கும் போது சாரதி லோகேஸ் ஒரு கோயிலுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தினார். “சீதை அம்மன் கோயிலை இந்திய அரசின் உதவியுடன் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் புதுசாக்கி இருக்கினம். கும்பிட்டு விட்டு வாறன்” என்று சொன்னவர் கோயிலுக்குள் சென்று விட்டார். என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் கோயிலுக்குள் சென்றேன். இராமாயணத்தை சுருக்கமாக சுவரில் எழுதி வைத்திருந்தார்கள். குரங்குகள் ஆங்காங்கே காணக் கிடைத்தன. பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் அவைகளுக்கு உணவாக இருந்தன. கோவிலுக்கு வெளியே நதி ஓடிக் கொண்டிருந்து. நதிக்குப் பக்கத்தில் இருந்த கற்களில் ஆங்காங்கே பள்ளங்கள் இருந்தன. அதில் ஒன்றை தங்க நிறத்தில் வட்டமாக ஏறக்குறைய ஒரு பாதம் போல் உரு மாற்றி இருந்தார்கள். மரம் ஒன்றில் பக்தர்களின் வேண்டுதல்கள் முடிச்சுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. “இந்த மரத்தின் கீழ்தான் சீதை(அம்மன்) தங்கினவ. வேண்டுதல்களை எழுதி இந்த சீதை அம்மன் மரத்தில் கட்டினால் அது பலிக்கும்” என்னருகே வந்த லோகேஸ் பக்தியோடு சொன்னார். “நீங்கள் கட்டவில்லையா? “ என்றேன். “பொதுவா பிள்ளை வரம் வேண்டித்தான் முடிச்சுகளைக் கட்டுறவையள். எனக்கு இன்னும் கல்யாணமே நடக்க இல்லையே” லோகேஸ் சொன்னபோது, பிள்ளை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு இன்னும் தெரியவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.’ “அந்த நதியிலேதான் சீதை குளித்தவ. அந்தப் பள்ளங்களைப் பாத்தீங்களே? அது அனுமாரின் காலடிகள்” “அனுமார் காலடி ஒன்றுதானே இருக்கு” “அனுமார் பறந்து வந்து அந்த இடத்தில் குதிச்சதாலை தான் அங்கே பள்ளம் வந்திட்டுது” நான் மேற்கொண்டு லோகேஸிடம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் கண்டி நோக்கிப் பயணம். “இந்தச் சீதை அம்மன் கோவிலை முத்திரையா சிறீலங்கா வெளியிட்டிருக்கு. இங்கை இருந்து கல் எடுத்து இராமர் கோயிலில் பதிக்க அயோத்திக்கு அனுப்பி இருக்கினம்…..” வழி நெடுக லோகேஸ் சீதை அம்மன் கோயிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான். ‘சலசல என அமைதியாக நீர் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழகான இடத்தை அசோக வனமாக்கி அதை பின்னர் கோயிலாக மாற்றி பலருக்கு மூளைச் சலவை செய்து பணம் பார்க்கிறார்கள்’ இப்படி ஒரு நினைப்பு எனக்குள் வந்தது. - கவி அருணாசலம்
  11. ஆத்தியடி, தம்பசெட்டி இரண்டுமே அப்போதில் இருந்தே புலோலி மேற்குதானே. அதுபோல் தும்பளை புலோலி கிழக்குப் பகுதியில் வருகிறது. இதில் ஆத்தியடியாரும் தம்பசெட்டியாரும் தங்கள் முகவரிகளைக் குறிப்பிடும் போது ஏனோ புலோலி என்று குறிப்பிடுவதில்லை. புலோலி என்பது ஒரு பரந்த பரப்பளவைக் கொண்டது. அதற்கு வடக்கு கடல் பகுதியாக இருக்கிறது. கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் ‘புல்எலிய’ என்ற என்ற சிங்களப் பெயர்தான் புலோலி எனபது மருவியதாக சொல்லப்படுகிறது. இத்தோடு விட்டு விடுவோம். சண்டைக்கு வந்து நிற்பார்கள்.
  12. மாப்பிள்ளைக்கு குடுத்தது ஒரு அறைதானே. ஆகவே சின்ன அறை வேண்டுமானால் கிடைக்கலாம். அது மாப்பிள்ளையின் சாமர்த்தியம். Dr.T.கோபிசங்கர் அனுபவித்து நன்றாக எழுதியிருக்கிறார். ஆக மொத்தத்தில் வீடுவரை உறவு.
  13. அப்பிடி எண்டால் கிருபன் நல்ல ஆள் இல்லை எண்டு சொல்லுறீங்களோ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.