Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. எனக்கு ஒண்டுமே வேண்டாம். இந்தத் தலைவர் பதவியும் வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சு போட்டு ஆஸ்பத்திரியிலே போய்ப் படுத்த மனுசன் இப்ப எதுக்கு திரும்பி வந்திருக்கு? புரியுது. சுமந்திரனுக்கு எப்பிடியும் இந்தத் தடவை ஆப்பு அடிச்சே தீருவேன் என்று மனுசன் வந்திருக்குது போலே.
  2. பொதுக்குழுவே அவரின் ஆளுமையின் கீழேதானே. ஆகவே நீங்கள் சொல்வதுபோல் பொதுக்குழு அவரைக் கட்டாயம் கேட்கும். ஆனால் தேசியப்பட்டியல் ஊடாகப் போவது அவரது இமேஜை பாதிக்கும் என்பதால் வேறு வழிகளை அவர் நாடலாம். தான் இந்தமுறை தோற்றுப் போவேன் என்பதை சுமந்திரன் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார். ஏதாவது ஆயத்தங்கள் செய்து வைத்திருப்பார். அதுசரி ‘பார் லைசன்ஸ்’ எடுத்தவர்கள் பட்டியலை மூன்று நாட்களுக்குள் வெளியிடுவேன் என்று அனுரா சொன்னாரே? என்ன ஆச்சு?வாத்தியார் அமுக்கிட்டாரா?
  3. https://youtu.be/SHI_aTAVwGI?si=yhIvdhKUoVXe_XT4 அனுமதி இல்லை என நினைக்கிறேன்
  4. 2009இல் பலமாக நின்று பேசும் தகுதியை இழந்து போனோம். 2024இல் சுயத்தையே இழக்கத் தயாரகி விட்டோம்.
  5. போகிற போக்கில் தமிழ்நாட்டு அரசியலை நாங்கள் மிஞ்சி விடுவோம்.
  6. தேசியப்பட்டியலூடாகப் பாராளுமன்றம் போக அவர் விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன்.
  7. சட்டென்று குனிந்தேன் தலை சுற்றிப் போனேன்
  8. வரவர நீங்களும் கமல்ஹாசன் மாதிரி (பேச) எழுதத் தொடங்கிட்டீங்கள். 75 வருடங்களாக மாறாதது..? ஒருவேளை உங்கள் எழுத்தை மாற்றிப் பாருங்களேன் ரசோதரன்.
  9. இருக்கிறது. முஸ்லீம் நாடுகளில் அடக்குமுறை இருக்கிறது. மேற்குலகம் தங்களால் முடிந்த அளவில் ஏதோ செய்கிறார்கள். சில அமைப்புகள் கூட குரல் கொடுக்கின்றன. மதங்களை வைத்து சட்டங்களை உருவாக்கி பெண்களை அடிமைப் படுத்தும் நாடுகளுக்குள் போய் நின்று கொண்டு குரல் எழுப்ப முடியாது. குரல்வளையை அறுத்துப் போட்டுவிடுவார்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா… போன்ற நாடுகளில் யேர்மனிய பெண் நிருபர்கள் கூட தலையில் துணி கொண்டு மூடிக் கொண்டே செய்திகளை பகிர்ந்து கொள்வதை நான் பார்த்திருக்கின்றேன். சில காலங்களுக்கு முன்னர் துருக்கியில் நடந்த சந்திப்பொன்றில் ஐரோப்பிய பாராளுமன்ற ஜனாதிபதி ஊர்சுலா பொன் டெயார் லேயரை (Ursula von der Leyer) தனக்கு சரிசமமாக இருக்க அனுமதிக்காமல் தூரமாக ஷோபா ஒன்றில் அமர வைத்த துருக்கி அதிபர் ஏர்டோகான்(Erdogan) சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு சில நாட்களுக்கு முன்னர், ‘ஆப்ஹானிஸ்தானில் பெண்களின் திருமண வயது 9” என தமிழ்சிறிகூட செய்தி ஒன்றை இணைத்திருந்தார். ஆக பெண்களுக்கான அடக்குமுறை வீட்டுக்குள் நடந்தாலும், நாடுகளில் நடந்தாலும் அவைகளை அறியும் பட்சத்தில் மேற்குலகம் மட்டுமல்ல நாங்களும் பேசுகின்றோம்.
  10. குமாரசாமி, இணைப்புக்கு நன்றி. குறும்படத்தை வெறும் மூன்று பாத்திரங்களை வைத்து அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராகாவானந்தா. பெண்கள் மேல் வெவ்வேறு வடிவங்களில் அடக்குமுறை இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எடுத்துக் கொண்ட கதை பழையதுதான். 55 வயதில் விவாகரத்து கேட்பதை வேண்டுமானால் இங்கே புதிது என்று சொல்லலாம். 10 சிறார்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அந்த வருமானத்தில் தான் வாழ்ந்துவிடுவேன் என்று சொல்லும் ஆளுமையுள்ள ஒரு பெண் விவாகரத்து இல்லாமலேயே தனியாகப் போய் வாழ்ந்து விடலாமே என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. சென்ற நூற்றாண்டில், ஒரு பெண் தன் குடும்பத்துக்காக எப்படித் தன் தூக்கத்தையே தியாகம் செய்தாள்,எவ்வளவு தொல்லைகள் அவளுக்கு இருந்தன என்பதை கண்ணதாசன் 1966இல் ஒரு பாடலில் இப்படிக் குறிப்பிடுகிறார். “….கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும் காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்…”
  11. நான் ஏன் இறந்தேன்? அம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் கண்ணாடி ஷோகேஸுகள் (showcase) உலகப் பிரசித்தி பெற்றவை. இங்குதான் பாலியல் தொழிலாளிகள் அமர்ந்திருந்து காட்சி தருவார்கள். சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் உலா வரும் இடம் இது. இந்த இடம், “அந்தி மலரும் நந்தவனம். அள்ளிப் பருகும் கம்பரசம்” கடந்த சனிக்கிழமையிலிருந்து ஒரு ஷோகேஸில் இருந்த பெண்ணிடம் வித்தியாசம் தெரிந்தது. ஷோகேஸின் கண்ணாடிக்குப் பின்னால் உள்ளாடை அணிந்த பொன்னிறமான பெண் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பெற்றி(Betty). ஆனால் அவள் இன்று உயிரோடு இல்லை. பெற்றி இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற்றியின் உருவம் அந்த ஷோகேஸில் இப்பொழுது காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. பெற்றி இருப்பது போல், எழுந்து நிற்பதுபோல், வாயால் காற்றை ஊதிக் கண்ணாடியில் புகை மண்டலத்தை உருவாக்கி அதன் மேல் ‘help’ என்று எழுதுவதுபோல் எல்லாம் பெற்றியை அனிமேசனில் வடிவமைத்திருக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? 15 வருடங்களுக்கு முன்னால் யாரோ ஒருவர் பெற்றியை கழுத்தில் பல தடவைகள் குத்திக் கொன்றிருக்கிறார். அந்தக் கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காகத்தான் நெதர்லாந்து பொலிஸார் இப்படியான ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பெற்றி 18 வயதில் நெதர்லாந்துக்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தாள்.ஒரு நாளைக்கு 14 மணித்தியாலங்களை அவள் தனது வேலைத்தளத்தில் செலவழித்தாள். நிறையப் பணம் சேர்த்தாள். 19 வயதில் கர்ப்பமானாள். நிறைமாதக் கர்ப்பிணியாக அவள் இருந்த நேரத்திலும் வேலை செய்தாள். அதனால் அவளுக்கு பென்குயின் என்ற பட்டப் பெயரை சக நண்பிகள் சூட்டியிருந்தார்கள். அவளுக்குப் பிறந்த மகனை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மீண்டும் பெற்றி வேலைக்கு வந்தாள். பெப்ரவரி 2009இல் அவள் தனது வாடிக்கையாளர்களின் அறையிலேயே கொல்லப்பட்டிருந்தாள். அவளைக் கொன்றது யார்? அது பெற்றிக்கு மட்டுமே தெரிந்த விடயம். ஆனால் இன்று அவளது உருவம் கொலையாளியைக் கண்டுபிடிக்க ‘help’ கேட்கிறது. தகவல் தருபவர்களுக்கு முப்பதினாயிரம் யூரோக்கள் தரப்படும் என நெதர்லாந்து பொலீஸ்துறை அறிவித்திருக்கிறது. https://x.com/Sepa_mass/status/1855572965229764868?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1855572965229764868|twgr^42cd1bb98d661a52c58139be3fb5a8d3d4107a1b|twcon^s1_c10&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fworld%2Feurope%2Famsterdam-police-use-hologram-to-solve-murder-mystery-of-young-sex-worker%2Farticleshow%2F115148850.cms
  12. உண்மை. அவர்களிடம் பொருள் இல்லாத போதும் ‘பௌத்த சிங்கள இலங்கை’ என்பதில் ஒற்றுமையாக இருக்க முடிகிறது. பொருள் இருந்தும் எங்களிடம் அந்த ஒற்றுமை இல்லை. எங்களிடம் ‘நான்’ என்பது ஓங்காரமாக வளர்ந்து நிற்கின்றது. முன்பு, சேர சோழ பாண்டியர்களது போராட்டங்களையும், அவர்களது சிறப்புகளையும் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு புலிகளின் போராட்டங்கள், வெற்றிகளைப் பேச ஆரம்பித்தோம். அடுத்து என்ன என்பதை ஏனோ நாங்கள் சிந்திப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்டபடி கூர்ப்பில்தான் கோளாறு போல் இருக்கிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.