Everything posted by Kavi arunasalam
-
கருத்துப்படம் 01.11.2024
From the album: கிறுக்கல்கள்
-
சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்; காரணம் தெரியுமா?
குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு ரணில் ஒப்புக் கொண்டிருந்தால் பல நூறு கோடி ரூபாய்க்கள் இலங்கைக்குக் கிடைத்திருக்கலாம். ஒரு பேட்டியில் துக்ளக் சோ இப்படிச் சொல்லியிருந்தார்,”இலங்கை ஒரு தீவு. அது மீன்(ரின்) இறக்குமதி செய்கிறது” என்று. என்ன செய்ய எங்கள் அறிவு அவ்வளவுதான்.
-
ஸ்பெயின்: 'சுனாமி போல வந்தது' - 50 ஆண்டுகளில் மோசமான வெள்ளம், 95 பேர் பலி
இதுவரை 155 பேர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பலரைக் காணவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
நன்றாகப் பார்த்தீர்களா Sasi_varnam? என் பார்வையில் மரத்தில் ஆணி அறைந்தது போல் தெரியவில்லை
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
- 31.10.2024
- ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்
- கருத்துப்படம் 30.10.2024
From the album: கிறுக்கல்கள்
- பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடரும் அநுர அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் கேள்வி
- கருத்துப்படம் 30.10.2024
From the album: கிறுக்கல்கள்
- ஜாம்ஷிட் ஷர்மாத்தின் மரணதண்டனையை ஈரான் நிறைவேற்றியது
“ஜாம்ஷிட் ஷர்மாத்துக்கு( Jamshid Sharmahd)வழங்கப்பட்ட தீர்ப்பானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தயவு செய்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்” என யேர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பொக் ஈரானைக் கேட்டிருந்தார். ஆனால் தான் வழங்கிய தீர்ப்பில் ஈரான் உறுதியாக இருந்தது. யேர்மனி,ஈரான் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஷர்மாத்துக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு இப்போது மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. ஷர்மாத் அவரது ஏழு வயதில் தனது தந்தையுடன் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். ஷர்மாத் சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்திருக்கிறார். 2003 முதல் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்தார். 2007இல் ஒரு சைபர் தாக்குதலை நடத்தினார் என்று ஈரான் ஷர்மாத் மேல் குற்றம் சுமத்தியது. அத்துடன் ஈரானுக்கு எதிரான ரொன்டர் (Tondar) இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும், ரொன்டர் இயக்கத்துக்காக,லொஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி,வானொலி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு உதவினார் என்றும் ஈரான் அவர்மேல் குற்றம் சாட்டியிருந்தது. 2020இல் தொழில் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றி விட்டு யேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷர்மாத், விமானம் இடைத் தங்கலுக்காக துபாயில் நின்ற போது ஈரானிய உளவாளிகளால் ஈரானுக்குக் கடத்தப்பட்டிருந்தார். ஈரானில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்ட ஷர்மாத்துக்கு 2023ம் ஆண்டு ஈரான் புரட்சிகர நீதிமன்றம் மரணதண்டனையை விதித்தது. ஷர்மாத்திற்கு வழங்கப்பட்டஇந்தத் தீர்ப்புக்கு யேர்மனி உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் மனித உரிமை அமைப்புகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. ஈரான் மரண தண்டனைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தினாலும், மேற்கத்திய வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது மிகவும் அரிதானது. ஆனால் ஷர்மாத்தின் விடயத்தில் அவர் ஈரானிய குடியுரிமையையும் வைத்திருந்ததால் அவருக்கான மரணதண்டனையை ஈரானால் நிறைவேற்ற முடிந்திருக்கிறது. சிறையில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 69 வயதான தனது தந்தையை விடுவிக்க ஷர்மாத்தின் மகள் கெஸல் இறுதிவரை போராடினர். அவரது போராட்டமும் பலனில்லாமல் போனது. 28.10.2024 அதிகாலை ஷர்மாத், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காக தூக்கிலிடப்பட்டார் என ஈரான் அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளாக ஈரானுக்கும் யேர்மனிக்கும் இடையே நல்ல உறவுகள் இருக்கவில்லை. இப்பொழுது இன்னும் மோசமான நிலை ஏற்படலாம் என யேர்மனிய வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பொக் தெரிவித்திருக்கிறார். https://www.spiegel.de/ausland/jamshid-sharmahd-iran-weist-deutschlands-kritik-an-hinrichtung-zurueck-a-dd4d9b9d-e8b0-4a5e-bdd0-4c5f8edc748a- தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை
- கருத்துப்படம் 29.10.2024
From the album: கிறுக்கல்கள்
- இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை
இதிலென்ன புரிந்துகொள்ள இருக்கிறது. சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் பிரசுரங்களை விநியோகிக்கவும் அவருக்கு சம்பளம் தரப்படுகிறது. அது அவரது தொழில்.- 5 வயது பேரனின் கேள்வி
கேள்வியிலே ஒரு தவறு இருப்பதை கவனித்தீர்களா Paanch? நீங்கள்தான் சிறீலங்காவில் இருந்து யேர்மனிக்கு வந்தீர்கள். உங்கள் பேரன் அல்ல. உங்கள் பேரன் பிறப்பால் யேர்மனியன். ஆக நீங்கள் வந்த காரணத்தைச் சொன்னால் போதும். அவர் புரிந்து கொள்வார்.- ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
- கருத்துப்படம் 28.10.2024
From the album: கிறுக்கல்கள்
- யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
ஜனாதிபதி பொது வேட்பாளருக்கும் பாதுகாப்பு கிடைத்ததாகக் கேள்வி- மெய்யழகன்: அரவிந்த்சாமி - கார்த்தி கூட்டணியில் இன்னொரு ‘அன்பே சிவம்’?
கதை நல்லதுதான் முதல்பாதி நன்றாகச் சொல்லப்படிருந்தது. இரண்டாவது பாதி இழுவை. குறும் படத்துக்கான கதையை 2.30 மணித்தியாலத்துக்கு நீட்டி இருக்கிறார்கள். ஆனாலும் மோசமில்லை. பார்க்கக் கூடிய படம். அவரவர்களுக்கு தந்த பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.- தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
1969 க.பொ.த. சாதாரணப் பரீட்சை. அன்று ஆங்கிலப்பாட சோதனை. நடுத்தர வயது மனிதர் ஒருவரும் பரீட்சை எழுத மண்டபத்திற்கு வந்திருந்தார். ஒரு நண்பன் சொன்னான், “ அவர்தான் தமிழரசுக்கட்சி எம்.பி. கே.துரைரத்தினம். சட்டம் படிக்க ஆங்கிலத்திலே கிறெடிற் தேவை. அதுக்குத்தான் சோதனைக்கு வந்திருக்கிறார்” என்றான். கே.துரைரத்தினம் முதலில் வாத்தியார். எம்பி ஆனதன் பின்னால் சட்டம் படித்தார். அரசியல் என்பது சட்டத்தோடு பின்னிப் பிணைந்தது. சட்டத்தரணிகள் எம்பிகளாக வருவது அனுகூலமே. எங்களுடைய பிள்ளையான் மாதிரி எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் மாநில முதல்வர்கள். ரீகன் ஒரு பட்டதாரி மட்டுமல்ல அவருக்கு வேறு தகமைகளும் இருக்கின்றன. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது, “தமிழக அரசு சார்பாக, இலங்கைப் போராளிகளுக்கு ஆயுதம் வாங்க 4 கோடி தரப்படும்” என்று அறிவித்தார். அவரது அறிவித்தலைக் கேட்ட இந்திரா காந்தி மிரண்டு போனார். “யோவ் இதெல்லாம் மத்திய அரசு செய்யும் வேலை. உனது மாநிலத்தை மட்டும் பார் போதும்” என இந்திரா காந்தி அதட்டி வைக்க, கருணாநிதியிடம் மாட்டிக் கொண்டார். உடனடியாக பல்டி அடித்து, தமிழர்களது புனர்வாழ்வுக்காக தனது சொந்தப் பணம் (?) நாலு கோடியை புலிகளுக்குக் கொடுத்து தப்பித்துக் கொண்டார். அரசியல் அறிவு மட்டுமல்ல, சட்டமும் தெரிந்திருக்க வேண்டும்.- தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
- கருத்துப்படம் 27.10.2024
From the album: கிறுக்கல்கள்
- ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
theeya, உண்மைதான். இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் திரையிடப்படுவதில்லை என்ற உங்கள் கருத்து சரியானதுதான். உள்குத்தாகவும் இருக்கலாம். உள் நோக்கமாகவும் இருக்கலாம். சிறீமா காலத்தில் (எழுபதுகளில்) இந்தியத் திரைப்படங்கள் மட்டுப் படுத்தப்பட்டன. அப்பொழுது இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஊடாகத்தான் இந்தியத் திரைப்படங்கள் வாங்கப்பட்டன. அவர்கள் தெரிவு செய்து வாங்கும் படங்களை மட்டுமே திரையிட முடியும். திரைப்படங்களின் தரங்கள், விலைகள் எல்லாம் கவனிக்கப்பட்டன. அதேநேரம் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் இலங்கையில், நிர்மலா, குத்துவிளக்கு, கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன்… என்று பல தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவற்றுக்கு ஆதரவும் இருந்தன. ‘இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது’ என்று இந்தியா இலங்கையுடன் சேர்ந்து கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டது. பைலற் பிரேம்நாத், தீ, இரத்தத்தின் இரத்தம், நங்கூரம், மாமியார் வீடு….. என பல படங்கள் தயாராகின. பின்னர் போராட்டச் சூழலிலானாலும் ஜேஆரின் ஆட்சியில் இருந்த தாராளக் கொள்கையினாலும் நிலமை மாறி ‘பழைய குருடி’ கதையானது. இப்பொழுது இலங்கையில் வந்துள்ள ஆட்சி மாற்றத்தினால் ‘உள் நோக்கம்’ கூட இருக்கலாம். புலிகளை, போராட்டத்தை கொச்சைப் படுத்தி படம் இருப்பதால் ‘உள்குத்து’ ஆகவும் இருக்கலாம். அல்லது வடக்குப்பகுதி இந்தியாவுக்குள் வந்து விட்டது என்ற எண்ணமாகவும் கூட இருக்கலாம். ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது.- யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
சுமந்திரன்?😜- யாழில் எலிக்காய்ச்சலால் இளம் குடும்பஸ்தர் பலி!
Paanch, நாலு எலிகளைத்தான் உடனடியாகப் பிடிக்க முடிந்தது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.