ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”
Everything posted by ஏராளன்
-
'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது 44 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது. யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், ஐரோப்பிய நாடுகளின் வாய்ப்புள்ள பங்களிப்பு என்ன? மற்றும் அமெரிக்காவுடன் இந்த நாடுகளின் உறவு என்னவாக இருக்கும் என்பவை விவாதிக்கப்பட வாய்ப்புள்ள அம்சங்களாக கருதப்படுகின்றன. இந்த மாநாட்டை நடத்தும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், ஐரோப்பிய தலைவர்களை வரவேற்றார். கூட்டத்தில் பேசிய அவர் , "ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக தலைமுறையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு" என குறிப்பிட்டார். யுக்ரேனில் அமைதி நிலவச் செய்யும் முடிவுகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் உள்ள நாடுகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஸ்டாமர் கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களில் சிலர் "போரை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை யுக்ரேனுடன் இணைந்து உருவாக்கிய பின், தங்களில் சிலர் அமெரிக்காவுடன் அதை விவாதித்து, முன்னோக்கி எடுத்துச் செல்வதாக ஒப்புக் கொண்டுள்ளோம்." எனவும் கியர் ஸ்டாமர் கூட்டத்தில் பேசினார். ரஷ்யா அமைதியைப் பற்றி பேசினாலும் கூட, அவர்கள் தங்களின் இடைவிடாத ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர் என குற்றம் சாட்டிய ஸ்டாமர், அனைவரின் நலன் என்ற நோக்கத்தால் கிடைக்கும் வலிமையின் மூலம் அமைதியை வழங்க வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் என கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ரஷ்யா அமைதியை பேசினாலும் கூட, அவர்கள் தங்களின் இடைவிடாத ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர் - கியர் ஸ்டாமர் "பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும்" மாநாட்டுக்கு முன்னதாக தமது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நேட்டோ தலைவர் மார்க் ரூட், உச்சி மாநாட்டில் மூன்று விஷயங்களை எதிர் நோக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். யுக்ரேனை ஆதரிப்பதற்காக "ஐரோப்பாவில் உள்ள அனைவரும் அதிகமாகக் கொடுக்க வேண்டும்" "நாம் அனைவரும் ஒரு சமாதான ஒப்பந்தத்தை விரும்புகிறோம், அது நீடித்திருக்க வேண்டும்" நேட்டோவை வலிமையாக வைத்திருக்க, ஐரோப்பா பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கும் எனவும் ரூட் உறுதியளித்துள்ளார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,உச்சி மாநாட்டில் பங்கேற்ற நேட்டோ தலைவர் மார்க் ரூட் அமெரிக்காவில் நடந்தது என்ன? முன்னதாக வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா ஸெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது , ஸெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இடையே நடந்த ஒரு வார்த்தைச் சண்டையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. ரஷ்யாவுடன் ராஜ்ஜீய ரீதியான பேச்சுவார்தை குறித்து ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்ட நிலையில் இது தொடர்பாக கேள்விகளை முன்வைத்தார் ஸெலன்ஸ்கி. "ஜே.டி., நீங்கள் எந்த வகையான ராஜ்ஜீய நடவடிக்கையைப் பற்றி பேசுகிறீர்கள்?" என வினவியதோடு, "நீங்கள் கூறுவதன் பொருள் என்ன?" என கேள்வி எழுப்பினார் ஸெலன்ஸ்கி "உங்கள் நாட்டில் அழிவை முடிவுக்கு கொண்டு வரும் விதமான ராஜ்ஜீய நடவடிக்கையைப் பற்றி நான் பேசுகிறேன் " என வான்ஸ் பதிலளித்தார். ஆனால் அமெரிக்க ஊடகங்கள் முன்பாக ஒரு தேவையற்ற விவாதத்தை ஸெலன்ஸ்கி தொடங்கி வைத்ததாகக் கருதிய வான்ஸ், இதனை தான் அவமரியாதையாகக் கருதுவதாகக் கூறினார். "மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, நீங்கள் ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்னதாக பிரச்னையை எழுப்ப முயலுவதை நான் அவமரியாதையாகக் கருதுகிறேன்" என வான்ஸ் பேசினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஸெலன்ஸ்கி மற்றும் ட்ரூடோ உரையாடல் யுக்ரேன் ராணுவத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறியபோது, ''போர்க் காலத்தில் அனைவருக்கும் பிரச்னை இருக்கும். உங்களுக்கும் கூட. ஆனால் உங்களிடம் பெருங்கடல் உள்ளதால் நீங்கள் அதை தற்போது உணரவில்லை. ஆனால் வருங்காலத்தில் நீங்களும் அதை உணர்வீர்கள்," என்று தெரிவித்தார் ஸெலன்ஸ்கி. அது நேரம் வரை ஸெலன்ஸ்கியும் ஜே.டி.வான்ஸுமே பேசிக் கொண்டிருந்த நிலையில் ஸெலன்ஸ்கியின் இந்த பேச்சு டிரம்பை அதிருப்தி அடையச்செய்தது. அந்த வார்த்தைப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார் டிரம்ப். ஓவல் அலுவலகத்தில் அமர்ந்து டிரம்பை பார்த்து ஸெலன்ஸ்கி, "ரஷ்யாவை நீங்கள் திருப்திப்படுத்துங்கள். பிறகு போர் ஒன்று உங்களை நோக்கிவரும்," என்று கூறினார். இந்த கருத்து டிரம்பை மிகவும் கோபப்படுத்தியது. "நாங்கள் எப்படி உணர வேண்டும் என்று கூறும் இடத்தில் நீங்கள் இல்லை," என்று கூறும் போது டிரம்ப் மிகவும் சத்தமாக பேசினார். "உங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. நீங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்கள்," என்று கூறினார் டிரம்ப். இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் அறிவித்த பிறகு ஸெலன்ஸ்கி உலக ஊடகங்கள் முன்பு குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதைப் போல் உணர்ந்தார். இதனைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இருதரப்பாலும் முன்னெடுக்கப்பட்டிருந்த கனிமவளம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm2nk9zd8yjo
-
அதானி வெளியேற்றம், பெரும் பிழை..!
இந்தியாவை கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது ; அதானி வெளியேற்றம் பெரும் பிழை - மனோ கணேசன் Published By: DIGITAL DESK 2 02 MAR, 2025 | 05:35 PM அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன. இந்த பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது என்பதை மறவாதீர்கள். அதுதான் முழு திட்டம். அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டது. அதானியை நீங்கள் வெளியேற்றவில்லை. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் உங்களை விட்டு வெளியேறி விட்டது. இது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது என பாராளுமன்றத்தில், தேசிய ஒருமைப்பாடு, நீதி அமைச்சு விவாதத்தை எதிர்கட்சிகள் சார்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் மனோ எம்பி தெரிவித்ததாவது; இது தொடர்பில் இலங்கை பராளுமன்றத்தில் நான் உரையாற்றினேன்.இலங்கை-இந்திய மின் சுற்று மூலம், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை மின்சாரம் இலங்கைக்கு கொண்டு வரும் வருமானம் மூலம் இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும். எதிர்காலத்தின் மீது கண் வைத்து தீர்மானம் எடுக்க தவறி விட்டீர்கள். அதானியின், யூனிட் விலை தொடர்பில் பிரச்சினை இருக்கும் போது, அதை பேசி தீர்த்து இருக்கலாம். மறுபுறம், இந்த சம்பவம், இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது. சமீபத்தில், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று வந்தார். அங்கே என்ன நடந்தது? அங்கிருந்து ஏதாவது, முதலீடுகள் வருகின்றனவா? இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்காளர்களுடன்தான் வருவார்கள். மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையை நோக்கி முதலீட்டாளர்கள், இந்தியாவை “பைபாஸ்” செய்து வருவார்கள் என நினைக்கிறீர்களா? என்றார். https://www.virakesari.lk/article/208101
-
தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!
இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான போலீஸ் மாஅதிபர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,தேசபந்து தென்னக்கோன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், அவர் தலைமறைவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேசபந்து தென்னக்கோன் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. கொலை வழக்கொன்று தொடர்பான விசாரணைகளை அடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை, கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரது ஓகந்தர மற்றும் கிரிவுல்ல ஆகிய வீடுகளுக்கு சென்ற போதிலும், அவரது வீட்டின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்வதற்கு போலீஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார். இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாகியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது ''2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வெலிகம பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றின் மீது வெலிகம போலீஸ் அதிகாரிகள் குழுவொன்றினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடொன்றில் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய போலீஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் தீர்ப்பை மாத்தறை நீதவான் நீதிமன்றம் 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியிட்டது. இதன்படி, வெலிகம போலீஸ் அதிகாரிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடானது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்திற் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு எனவும், அதன்பிரகாரம், அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட கூடாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டமையானது, சட்டத்திற்கு புறம்பாக இடம்பெற்றுள்ளதாகவும், அந்த இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் அப்போதைய போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 அதிகாரிகளை கைது செய்து இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார். முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கை பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் குறிப்பிட்டார். தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்? சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல்26 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,POLICE MEDIA படக்குறிப்பு,புத்திக்க மனதுங்க இலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிகம பகுதியில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி இரண்டு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றது. வெலிகம பகுதியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் மீது, வெள்ளை நிற வேன் ஒன்றின் வருகைத் தந்த குழுவொன்று துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது. இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற வெலிகம போலீஸ் நிலைய அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குழு மீது பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் வெள்ளை நிற வேனில் வருகைத் தந்த ஒருவர் உயிரிழந்திருந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில், ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய தரப்பினர், கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் என தெரியவந்தது. சம்பவத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய இருவர் காயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிகம ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை ஈடுபடுத்தியமை சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரியின் உயிரிழப்பானது குற்றச் செயல் என்ற அடிப்படையில் தீர்மானத்தை எட்டிய மாத்தறை நீதவான் நீதிமன்றம், முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவை பிறப்பித்துள்ளது. தேசபந்து தென்னக்கோன் 1998ம் ஆண்டு போலீஸ் சேவையில் இணைந்துக்கொண்ட நிலையில், அவர் இலங்கையின் 36வது போலீஸ் மாஅதிபராக கடமையாற்றியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05jldgy9ro
-
பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
02 MAR, 2025 | 04:46 PM பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லங்களை பார்வையிட்டமை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், சிறுவர் இல்லங்கள் என்பவற்றுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 500 மில்லியன் ரூபாய் இதன் வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும், மனிதவளத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அபிவிருத்திக்காகவும், அவர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மாணவர்களுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு, சப்பாத்து வவுச்சர், பாடநூல், சீருடை, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் அங்கி என்பன வழங்கப்பட்டுள்ளன. இனி பாடசாலையில் இருந்து பொருளாதார சுமை காரணமாக இடை விலக முடியாத வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது. கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமருடனும் இது தொடர்பில் பேசியுள்ளோம். இடைவிலகளுக்கு பின் சிறுவயது திருமணங்கள், சிறு வயது விவாகரத்து தொடர்பிலும் கவனம் செலுத்தி அவர்களுக்கான ஒரு கல்வியை வழங்குவது தொர்பிலும் ஆலோசித்து வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/208096
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
5 ஆண்டுகளுக்கு முந்தைய பகை; ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்க காரணம் இதுதான் 2 ஆண்டுகளை கடந்து நீடித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தொடர்ந்து பேசி வந்தார். இதை தொடர்ந்து டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவும் ரஷ்யாவும் உயர்மட்ட மத்தியஸ்தக் குழுவை நியமித்தன. அதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி துபாயில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸ், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய அதிபர் புடினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மிக முக்கியமாக இந்த கூட்டத்தில் போரின் மற்றொரு தரப்பான உக்ரைன் சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை. உக்ரைன் தரப்பு இல்லாமலேயே நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அறிவித்தார். இந்த நிலையில்தான் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது தொடர்பான கருத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை முகத்திற்கு நேராகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடினார், மேலும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்க காரணம் என்ன? ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்த தற்போதைய சூழல் மட்டுமே காரணம் அல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பு டிரம்பின் தனிப்பட்ட கோரிக்கைக்கு ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்திருந்ததுதான் இப்போதைய நடவடிக்கைக்கு காரணம் என கூறுகிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் முதன்முதலில் பதவியேற்ற போது, அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதற்கிடையே அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை வெளியிட்டதாக கூறப்பட்டது. வெளியே கசிந்த அந்த மின்னஞ்சலில் 2016 தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பெர்னி சாண்டர்ஸ்க்கு பதில் ஹிலாரி கிளிண்டன் வர வேண்டும் என கட்சி தலைமை விரும்பியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தேர்தலில் குடியரசு கட்சியினர் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அந்த தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். ரஷ்யா மீது அவதூறுகளை வீச உக்ரைன் ஹேக்கர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைனில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சம்பந்தபட்ட ஆவணங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இருப்பினும் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெலன்ஸ்கி, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவது உக்ரைனின் தலையீடு தொடர்பான கருத்துருவாக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் எனக்கூறி இறுதி வரை விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டார். நீடிக்கும் பகை.. டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் இந்த உதவி மட்டும் கேட்கவில்லை. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனுக்கு எதிராக முக்கிய குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்தார். அதாவது ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் புரிஸ்மா என்ற உக்ரேனிய தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்தார். இந்த நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை 2016 ஆம் ஆண்டு பைடன் துணை அதிபராக இருந்தபோது தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஹண்டர் பைடன் மீதான விசாரணையை உடனே நடத்தி 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே ஜோ பைடன் மீது புகார்களை முன்வைக்க உதவ வேண்டும் என்றும் டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் கேட்டுள்ளார். இந்த உதவிகளுக்கு மாற்றாக ஜெலன்ஸ்கிக்கு வெள்ளை மாளிகைக்கு அழைப்பு மற்றும் உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் இராணுவ உதவியும் வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் வெளியே கசிந்து தனது அதிகாரத்தை சொந்த நலனுக்காக தவறாக பயன்படுத்தியதாக டிரம்ப் அதிபராக இருந்தபோதே அவர் மீது இம்பீச்மெண்ட் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வளவு நடந்த பின்னரும் கூட ஜெலன்ஸ்கி ஹண்டர் பைடன் மீதான விசாரணையையும் தொடங்கவில்லை டிரம்பும் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இதனால் டிரம்ப் மட்டுமல்ல அவரது ஆதரவாளர்களுமே 2020 முதலே ஜெலன்ஸ்கி மீது கடும் கோபத்தில் உள்ளனர். டிரம்ப் மீதான இம்பீச்மெண்ட் நடவடிக்கை, 2020 தேர்தலில் டிரம்ப் தோல்வி போன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் ஜெலன்ஸ்கியை அவர்கள் காரணமாக பார்த்தனர். அதன் தொடர்ச்சிதான் இப்போது டிரம்ப் மீண்டும் அதிபரானதில் இருந்து ஜெலன்ஸ்கி மீது அமெரிக்கா கடுமையாக நடந்துகொள்ள காரணம் என்றும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/315528
-
பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் விளக்கம்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி 2 மார்ச் 2025, 08:44 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் உணவகங்களுக்குச் செல்லும் போது இட்லி மிகவும் பாதுகாப்பான உணவாக பலராலும் எப்போதும் நம்பப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு, வெறும் இட்லியில் புற்றுநோயை உருவாக்கும் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிந்துள்ளது. 241 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது 52 உணவகங்களில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் மீது இட்லி மாவு ஊற்றி இட்லி சமைக்கப்பட்டதை அம்மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இட்லியை நீராவியில் வேக வைக்க, இட்லி தட்டில் சுத்தமான துணியை பயன்படுத்துவார்கள். ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை நடத்திய திடீர் சோதனையில், சில சாலையோர கடைகள் மற்றும் உணவகங்களில் இட்லி அவிக்க துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த பிளாஸ்டிக் தாள்கள் கார்சினோஜென்ஸ் (carcinogens) எனப்படும் புற்றுநோய் காரணியை உருவாக்கும். ஹலால் முறையில் விலங்குகள் எவ்வாறு கொல்லப்படும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி - பதில்கள் மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி? தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா? புகைப் பிடிப்பதை நிறுத்தினால் சர்க்கரை, கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடத் தோன்றுவது ஏன்? மருத்துவர்கள் கூறுவது என்ன? "தரமற்ற பிளாஸ்டிக் தாள்கள் உயர் வெப்பநிலையில் உருகும் போது, அதில் உள்ள நச்சுகள் இட்லிக்குள் சென்றுவிடுகின்றன. பாரம்பரியமாக இட்லிக்கு பயன்படுத்தும் துணிகளில் இதுபோன்ற நச்சுத்தன்மை உருவாவதில்லை," என்று மருத்துவர் யூ.எஸ். விஷால் ராவ் தெரிவிக்கிறார். எச்.சி.ஜி. புற்றுநோய் மையத்தின் டீனான அவர் பிபிசி ஹிந்தியிடம் இதுகுறித்து பேசினார். "நீரிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் உள்ளன. அதையும் நாம் கவனிக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளால் உருவாகும் கார்சினோஜென்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என்றும் அவர் கூறினார். மாநில அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் குறித்து அவர் பாராட்டுகளையும் தெரிவித்தார். கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பிபிசி ஹிந்தியிடம் பேசும் போது, "நாங்கள் அனைத்து உணவுகளும் பாதுகாப்பற்றது என்று கூறவில்லை. நீங்கள் என்ன உணவை உட்கொள்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உணவகங்களும் உங்களின் வாடிக்கையாளர்களுக்கு என்ன உணவை பரிமாறுகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பல நேரங்களில் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கானது எது என்றும் தெரியாமல் உணவுகள் விற்கப்படுகின்றன," என்றார். யுக்ரேன் போர்: அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா?2 மார்ச் 2025 டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பு: கொந்தளிப்பான 10 நிமிடங்களில் என்ன நடந்தது?2 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல நேரங்களில் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கானது எது என்றும் தெரியாமல் உணவுகள் விற்கப்படுகின்றன இதர பொருட்களிலும் ரசாயனம் இட்லிகளில் மட்டும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. பட்டாணியின் நிறம் பளிச்சென தெரிவதற்காக கலக்கப்படும் நிறமிகள் போன்றே, பஞ்சு மிட்டாய், சிக்கன் கபாப், தேநீர், கேக் மற்றும் இதர உணவுப் பொருட்களில் கலக்கப்படும் நிறமிகளையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது சோதனைகளில் கண்டறிந்துள்ளனர். உதாரணத்திற்கு பட்டாணியில் பயன்படுத்தப்படும் நிறமி தடை செய்யப்பட்ட ரசாயனம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனை நிச்சயமாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள், பச்சைக் குத்த பயன்படுத்தப்படும் மையையும் பரிசோதனைக்குட்படுத்தினார்கள். அதில் செலேனியம், குரோமியம், பிளாட்டினம், ஆர்செனிக் உள்ளிட்ட 22 வகையான கன உலோகங்கள் கண்டறியப்பட்டன. இவை பி.ஐ.எஸ். தரக் குறியீடு பெறவில்லை, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. இவை சரும பிரச்னைகளையும், பாக்டீரியா, வைரல், பூஞ்சை தொற்றுகளையும் ஏற்படுத்தும் என்றும் அந்த துறை தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78ej8ze464o
-
வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள்; நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம்
02 MAR, 2025 | 03:07 PM வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதி மற்றும் ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், இதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக நகரை சூழ பல பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வீதிகளினை பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பல்வேறு தேவைகளிற்காக இவ்வீதியினை பயன்படுத்தும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் இக்கட்டாக்காலி மாடுகளால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், இக்கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்குள்ளாகும் நிலையும் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கால்நடைகளை பராமரிப்பாளர்கள் கவனம் எடுக்க வேண்டும் அல்லது வவுனியா நகரசபையானது கால்நடைகள் பராமரிப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் பாலகிருபனிடம் கேட்கப்பட்ட போது, தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வருட ஆரம்பத்திலும் நகரில் கட்டாக்காலியாக திரிந்த 70 மாடுகள் பிடிக்கப்பட்டதுடன், அம்மாடுகளின் உரிமையாளர்களிற்கு தண்டபப்ணமும் அறவிடப்பட்டிருந்தது என்றார். https://www.virakesari.lk/article/208076
-
அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் !
இலங்கைக்கான 3 ஆவது மீளாய்வு கடன் தவணைக்கு ஐ.எம்.எப். அங்கீகாரம் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கான மற்றுமொரு தவணை கடனுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அங்கீகாரம் அளித்துள்ளது. 334 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மூன்றாவது மீளாய்விற்கான கடன் தவணையை விடுவிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தால் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ள மொத்த கடன் தொகையின் அளவு 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். https://thinakkural.lk/article/315520
-
ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம் : நாட்டில் மத மற்றும் கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம் - ஜனாதிபதி
Published By: VISHNU 02 MAR, 2025 | 07:22 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது. இது தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (02) கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. 16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் தலதா மாளிகையை வழிபட வேண்டும் என்பது இந்த நாட்டின் பௌத்த மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார். நாட்டில் இழந்து வரும் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்கவும் இந்த வாய்ப்பு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்தாண்டின் நீட்சியாக நடைபெறும் தலதா கண்காட்சி நாட்டை புதிய திசையில் இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பத்து நாட்கள் நடைபெறும் தலதா கண்காட்சியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, எந்தவித தடைகளும் அல்லது இடையூறுகளும் இல்லாமல் தலதா ஆண்டகையை வழிபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும், இதற்காக அரசாங்கம் உச்ச பங்களிப்பையும் தலையீட்டையும் வழங்கும் என்றும் தெரிவித்தார். முக்கியமாக மூன்று வரிசைகளின் ஊடாக வரும் பொதுமக்களுக்கு, தலதா மாளிகையை வழிபடும் வாய்ப்பை வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது. தலதா மாளிகை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களின்படி செயல்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். தலதா கண்காட்சி நடைபெறும் காலகட்டத்தில் கண்டி பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், மாணவர்களின் கல்விக்காக வேறு நாட்களில் பாடசாலைகளை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் போது, தலதா மாளிகையை வழிபட வரும் பக்தர்களின் சுகாதார வசதிகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதோடு அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. மக்களின் சுகாதாரம், குடிநீர் தேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தலதா மாளிகையை வணங்க வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக தானசாலைகள் நடத்த விரும்புவோர் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்குவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. மக்களிடையே பௌத்த ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அலங்காரங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் விசேட தலதா நிகழ்வு குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகள், முப்படைகள் மற்றும் பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்டஅதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/208110
-
பதற்றம் வேண்டாம்! எரிபொளுருக்கு தட்டுப்பாடு ஏற்படாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
திங்கட்கிழமை எரிபொருள் தீர்ந்து விடும் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த துணைத் தலைவர் சந்தனநாயக்க, இன்று முதல் புதிய விநியோக கோரல்கள் எதுவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படாததால், திங்கட்கிழமைக்குள் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என கூறியுள்ளார். கடந்த காலங்களில் சங்கம் ஒருபோதும் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றாலும், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை நீக்கிவிட்டு, அதை புதிய சூத்திரத்தால் மாற்றுவதற்கான இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தற்போதைய முடிவால் தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிச்சையான முடிவுகளை எடுத்ததற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளரை குற்றம் சாட்டிய சந்தனநாயக்க, பிரச்சினையைத் தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/315515
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் விஜயம்
02 MAR, 2025 | 09:15 AM (லியோ நிரோஷ தர்ஷன்) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இம் மாதம் 22 ஆம் திகதி அளவில் இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது இருநாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. இதேவேளை, வெளியுறவுத் துறைக்கான ஜப்பான் பாராளுமன்ற துணை அமைச்சர் இகுய்னா அகிகோவை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடி இருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வின் பக்க நிகழ்வாக இடம்பெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் இலக்கை அடைவதில் ஜப்பானுக்கு ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை உள்ளது என்றும், பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைய இலங்கையடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஜப்பான் விரும்புவதாக இதன்போது வெளியுறவுத் துறைக்கான பாராளுமன்ற துணை அமைச்சர் இகுய்னா அகிகோ குறிப்பிட்டிருந்தார். இலங்கை மக்களைக் கருத்தில் கொண்டு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும் என்றும், நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் இலங்கையில் ஆரம்பிக்க உள்ளோம். இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக்கொண்ட சீர்திருத்தங்கள் நிலையான முறையில் செயல்படுத்தப்படுவதையும், முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் நிலையான முன்னேற்றத்தையும் ஜப்பான் ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் துணை அமைச்சர் இகுய்னா அகிகோ கூறினார். இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், ஜப்பான் இலங்கைக்கு நீண்டகாலமாக அளித்து வரும் ஆதரவிற்கும், அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார். எவ்வாறாயினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயத்திற்கான திகதி இவ்வாரம் தீர்மானிக்கப்பட உள்ளதுடன், அதனை தொடர்ந்து ஐரோப்பாவிற்கான விஜயத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208030
-
சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க ; ரவிகரன் எம்.பி வலியுறுத்து
02 MAR, 2025 | 09:53 AM நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரை சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்தசுதாகர் ஆயுள் தண்டனை கைதியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி கடந்த 2018 இல் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிக்கிரியைக்கு கடும்பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார். இறுதிக்கிரியையினை முடித்துக்கொண்டு சிறைச்சாலை பேருந்தில் ஆனந்தசுதாகர் ஏறச்சென்றவேளை அவரது பிள்ளை தந்தையின் கையைப் பிடித்து தானும் சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் கலங்கவைத்தது. நீதிஅமைச்சரே, நீதியைத்தாருங்கள். அவரோடு சேர்ந்து சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளவர்களுக்கும் விடுதலை தாருங்கள் - என்றார். https://www.virakesari.lk/article/208035
-
பொருளாதார படுகொலையாளிகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுங்கள்; பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி
01 MAR, 2025 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுங்கள். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொய்யுரைப்பதும் ஜனநாயக உரிமை என்று குறிப்பிட்ட சட்டத்தரணிகளும் ஆளும் தரப்பில் உள்ளார்கள். வன்முறைகளுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் 2022ஆம் ஆண்டு போராட்டத்தின் போது பாராளுமன்றத்தை கைப்பற்றி, பாராளுமன்றத்துக்கு தீ வைப்பதற்கு வந்தவர்கள் தான் தற்போது அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளார்கள் என்பதை நினைவுப்படுத்த வேண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு புரிந்துணர்வுடன் பொய்யுரைத்தார்கள். இன்றும் பொய்யுரைக்கிறார்கள். சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டே மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள். ஆகவே அரசாங்கத்தின் இருப்பு நீதியமைச்சிலேயே தங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஊழல் மோசடி தொடர்பில் தன்னிடம் 400 கோப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டார். அவற்றின் ஒருசிலவற்றை வெளிப்படுத்தினார். அந்த கோப்புக்களுக்கு என்ன நேர்ந்தது. எதிர்வரும் காலங்களிலாவது அந்த ஊழல்மோசடி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களின் பெயர்களை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஊழல்வாதிகளுடன் ‘டீல்’ வைத்திருந்ததை மக்கள் அறியவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒருமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவை நோக்கி “உங்களின் அனைத்து விடயங்களையும் நான் அறிவேன் அவற்றை சொன்னால் கட்சியும் இல்லாமல் போகும், நாட்டை விட்டு வெளியேற நேரிடும்” என்று குறிப்பிட்டார். அதற்கு இன்றுவரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதிலளிக்கவில்லை. ஆளும் தரப்பிலும் ஊழல் மோசடியாளர்கள் உள்ளார்கள் பேச்சினால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது. சட்டத்தை இயற்றி ஊழல்வாதிகளை சட்டத்தின் முன்னிருத்துங்கள். இன்றுவரை ஒரு ஊழல் மோசடியாளர்களை கூட சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. அரசாங்கத்தின் முன்னிலையில் உள்ளவர்களின் குடும்பத்தாருக்கு மஹிந்த ராஜபக்ஷவே தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தார். ஆனால் இன்று அவரை திருடன், திருடன் என்று விமர்சிக்கின்றீர்கள். பாராளுமன்ற குழுக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும் ஊழல் மோசடிகளை வெறும் செய்தியாக்காமல் உரிய சட்டங்களை இயற்றி உரிய நடவடிக்கை எடுங்கள். இதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் ஆகியோர் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீ திமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்து ஊழல்வாதிகளை பாதுகாக்க போவதில்லை என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/208020
-
புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும்; தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம் - நீதி அமைச்சர்
02 MAR, 2025 | 09:39 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வட, கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த திட்டமிடலுடன் புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும். தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம். வங்குரோத்து அரசியலுக்காக இனவாதம், மதவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாப்புருவாக்க வாக்குறுதியை மக்களுக்கு வழங்கினோமே தவிர எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை. எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்கு அமைய செயற்பட போவதில்லை. முறையான திட்டம் வழிகாட்டலுக்கு அமைவாக புதிய அரசியலமைப்பினை வெகுவிரைவில் உருவாக்குவோம். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த மாற்றத்துக்காகவே தமிழ் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணையை நாங்கள் பாதுகாப்போம். பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுப்போம். இழப்பீட்டு அலுவலகத்துக்காக 2353 மில்லியன் ரூபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கு 139 மில்லியன் ரூபா, காணாமல் போனோர் அலுவலகத்துக்கு 126 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மனித புதைகுழிகள், விகாரைகள் தொடர்பில் பேசப்படுகிறது. ஒருசில அரசியல்வாதிகள் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.யாழ் தையிட்டி விகாரைக்கு சென்று பல விடயங்களை அறிக்கையிட்டுள்ளோம். வங்குரோத்து அரசியலை மீண்டும் உருவாக்குவதற்கு இனவாதம் மற்றும் மதவாதம் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் சிறந்த முறையில் முரண்பாடற்ற வகையில் தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/208034
-
யுக்ரேன் போர்: அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனுக்கு நேட்டோ படையை அனுப்புவதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் பீல் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த அதிகாரிகள் சிலரை விடவும், பிரிட்டனின் ஓய்வுபெற்ற உயர்மட்ட ராணுவ அதிகாரிகளை விடவும், பிரிட்டனின் ஆயுதப் படைகளின் திறன்களில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. யுக்ரேனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்குமா என்று பிரிட்டன் பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது டிரம்பிடம் கேட்கப்பட்டது. "பிரிட்டனிடம் நம்ப முடியாத அளவுக்கு வீரர்கள் மற்றும் ராணுவ பலம் உள்ளது. அவர்களால் தங்களைக் கவனித்துக் கொள்ள முடியும்," என்று டிரம்ப் அக்கேள்விக்குப் பதிலளித்தார். ஆனால், பிரிட்டன் ராணுவத்தால் ரஷ்யாவை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவாகப் பதிலளிக்கவில்லை. டிரம்ப் - ஸெலன்ஸ்கி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது எப்படி? கொந்தளிப்பான 10 நிமிடங்களில் என்ன நடந்தது? அமெரிக்கா - யுக்ரேன் பிரச்னை: ரஷ்யாவில் என்ன பேசப்படுகிறது? புதின் மௌனம் காப்பது ஏன்? டிரம்ப் - ஸெலன்ஸ்கி வார்த்தைப் போர் குறித்து உலக தலைவர்கள் சொல்வது என்ன? பொதுவெளியில், பிரிட்டனின் ஆயுதப் படைகளின் தொழில் முறையையும், திறன்களையும் மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பாராட்டுகிறார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில், வீரர்களைக் குறைத்துள்ளதால், பிரிட்டன் ராணுவம் மிகவும் சிறிதாகி விட்டது என்று விமர்சிக்கின்றனர். தற்போது, பிரிட்டன் ராணுவத்தில் சுமார் 70,000 முழுநேர வீரர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து1 மார்ச் 2025 டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் 'நேட்டோ' ராணுவ கூட்டணிக்கான நெருக்கடியின் அறிகுறியா? ஓர் அலசல்1 மார்ச் 2025 பிரிட்டன் ராணுவத்தின் பலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் ராணுவ வீரர்கள் பிரிட்டன் ராணுவத்தை 'மிகச் சிறியது' என்று ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள பிரிட்டன் சென்ற போது, ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி விவரித்தார். சர்வதேச மூலோபாய ஆய்வுக் கழகத்தின்படி, ரஷ்யாவின் ராணுவச் செலவு இப்போது ஐரோப்பாவின் மொத்த பாதுகாப்புச் செலவினத்தை விட அதிகமாக உள்ளது. ரஷ்யாவின் ராணுவச் செலவு 41 சதவீதம் அதிகரித்து இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதத்துக்குச் சமமாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, 2027க்குள் பிரிட்டன் 2.5 சதவீதம் மட்டுமே செலவழிக்கும். போர் நிறுத்தத்துக்காக யுக்ரேனுக்கு உதவ அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்து அதிபர் டிரம்ப் சிந்திக்கவில்லை என்ற யதார்த்தத்தை அவரது கருத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கனிமங்களை பெறுவது போன்ற பொருளாதார காரணங்களுக்கு மட்டுமே அமெரிக்கா யுக்ரேனுடன் தொடர்புகொள்ள விரும்புகிறது. ரஷ்யா மீண்டும் தாக்குவதற்கு அதுவே ஒரு தடையாக இருக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். ஆனால் அவரது சொந்த அரசாங்கத்தில் கூட, ரஷ்யாவைத் தடுத்து நிறுத்த யுக்ரேனுக்கு மற்ற நாடுகளின் ராணுவ பலமும் தேவை என்ற கருத்து இருக்கவே செய்கிறது. இப்போது கேள்வி என்னவென்றால், ஐரோப்பாவுக்கு விருப்பம் உள்ளதா என்பது மட்டுமல்ல, ரஷ்யாவை எதிர்த்து போரிட ஐரோப்பாவிடம் போதுமான வீரர்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளதா? என்பதும் தான். அதற்கான விரைவான பதில்: இல்லை அதனால் தான், உலகின் மிக சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம் என்று பிரிட்டன் பிரதமர் சர் ஸ்டார்மர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப்28 பிப்ரவரி 2025 கோல்டன் கார்டு விசா: கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா? டிரம்ப் முன்மொழிவது என்ன?28 பிப்ரவரி 2025 'யுக்ரேனுக்காக 30,000 வீரர்களைக் கொண்ட படை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விண்வெளி கண்காணிப்பு அல்லது உளவுத் தகவல்கள் ஆகியவற்றை அமெரிக்காவுக்குச் சமமாக ஐரோப்பாவால் யுக்ரேனுக்கு வழங்க முடியாது பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, ஐரோப்பாவில் தனது ஆயுதப்படைகளை குறைத்த நாடு பிரிட்டன் மட்டுமல்ல. ஆனால், தற்போது நிலைமை மாறி வருகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளும் பாதுகாப்புக்கான செலவை அதிகரித்து வருகின்றன. ஆனால் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கோரும் அளவுக்கு 1-2 லட்சம் சர்வதேசப் படை வீரர்களை ஐரோப்பாவால் மட்டுமே வழங்க முடியாது. ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க கூடுதல் படைகள் தேவை என்று ஸெலன்ஸ்கி கருதுகிறார். அதற்கு பதிலாக, மேற்கத்திய அதிகாரிகள் 30,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையைப் பற்றி யோசிப்பதாகக் கூறியுள்ளனர். ஐரோப்பிய ஜெட் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் யுக்ரேனின் வான்வெளி மற்றும் கடல்வழிகளை கண்காணிக்க உதவும். யுக்ரேனின் நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் 'உறுதியான பாதுகாப்பு' வழங்குவதில் அந்த படைகள் கவனம் செலுத்தும். அவை கிழக்கு யுக்ரேனில் போர் முனைக்கு அருகில் எந்த இடத்திலும் நிறுத்தப்படாது. ஐரோப்பிய போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் யுக்ரேனின் வான்வெளி மற்றும் கப்பல் வழிகளை கண்காணிக்கும். ஆனால் இது போதாது என்பதையும் மேற்கத்திய அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் மட்டுமே யுக்ரேனில் நிறுத்தப்படும் எந்தவொரு படைகளையும் ரஷ்யா தாக்காது என்பதை உறுதி செய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. குறைந்தபட்சம், "கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளால்" யுக்ரேனில் ஐரோப்பிய படைகளின் செயல்பாடுகளை அமெரிக்கா மேற்பார்வையிடலாம். போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் உள்ள விமானப்படைத் தளங்களில் அமெரிக்க போர் விமானங்கள் எந்த சவாலையும் சந்திக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கச் செய்யலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். ஏனென்றால், "விண்வெளி கண்காணிப்பு" அல்லது "உளவுத் தகவல் சேகரிப்பு" ஆகியவற்றை அமெரிக்காவுக்கு நிகராக ஐரோப்பாவால் வழங்க முடியாது. யுக்ரேனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதற்கும் அமெரிக்கா ஒப்புக்கொள்ளலாம். யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட மேற்கத்திய ஆயுதங்களின் விகிதத்தில் ஐரோப்பா சமீபத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளது. மறுபுறம், நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் போன்ற "மிகச் சிறந்த ஆயுதங்களை" அமெரிக்கா வழங்கியுள்ளதாக ஒரு மேற்கத்திய ஆதாரம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான்: 90,000 கேமராக்கள் மூலம் காபூல் மக்களைக் கண்காணிக்கும் தாலிபன்கள்28 பிப்ரவரி 2025 சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் வாய்ப்பு இருக்கலாம் என்று ஸ்டார்மர் நம்புகிறார் ஐரோப்பிய நாடுகளும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இல்லை. யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுத சப்ளை என்பது அமெரிக்க தளவாடங்களைச் சார்ந்தே உள்ளது. 2011ஆம் ஆண்டு லிபியா மீதான நேட்டோவின் விமானப்படைத் தாக்குதல் நடவடிக்கையும் சில குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஐரோப்பிய நாடுகள் முன்னின்று தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டாலும், அவை அமெரிக்காவின் ஆதரவையே நம்பியிருந்தன. குறிப்பாக, அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் அமெரிக்க இலக்குக் கண்காணிப்பு அமைப்புகளின் உதவியை, கூட்டணி நாடுகள் பெரிதும் சார்ந்திருந்தன. ஆனால் சர் ஸ்டார்மர் அமெரிக்காவிடம் எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதங்களையும் பெறாமலேயே வாஷிங்டனில் இருந்து புறப்பட்டதாக தெரிகிறது. நேட்டோவின் பிரிவு 5-ஐ செயல்படுத்துவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியதே போதுமானது என்று பிபிசியிடம் பேசிய பிரிட்டிஷ் சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்தார். நேட்டோ பிரிவு 5-ன் படி, அந்த கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஒட்டுமொத்த கூட்டணியின் மீதான தாக்குதலாக கருதப்படும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் கடன் கொடுத்த குஜராத்தி பணக்காரர் வீர்ஜி வோரா யார்?5 மணி நேரங்களுக்கு முன்னர் கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள்26 பிப்ரவரி 2025 ரஷ்ய ராணுவத்தை பிரிட்டனால் எதிர்கொள்ள முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் புதின் ஆனால், யுக்ரேனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு சர்வதேச படையும் நேட்டோ படையாகவோ அல்லது அதன் உடன்படிக்கைக்கு உட்பட்டதாகவோ இருக்காது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஏற்கனவே கூறியிருந்தார். இதனால், நேட்டோ பாணியில் பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. ஐரோப்பாவின் நம்பிக்கை மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது. இந்த வார இறுதியில் தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள பிரிட்டன் பிரதமர், யுக்ரேனுக்கு படைகளை அனுப்புவதற்கு மற்ற நாடுகளை ஒப்புக் கொள்ளச் செய்ய டொனால்ட் டிரம்பின் இனிமையான வார்த்தைகள் மட்டுமே போதுமா என்பதை தெரிந்துகொள்வார். பிரிட்டன் தவிர, பிரான்ஸ் மட்டுமே தனது படைகளை அனுப்பத் தயாராக உள்ள ஐரோப்பாவின் மற்றொரு வலிமையான சக்தியாக உள்ளது. மற்ற சில வடக்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பால்டிக் நாடுகள் அதை பரிசீலிக்க தயாராக இருந்தாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம் என்று அவை நினைக்கின்றன. ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த யோசனையை எதிர்க்கின்றன. ஐரோப்பிய படைகளுக்கு சக்தி வாய்ந்த பின்புலமாக அமெரிக்கா இருக்கலாம் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடமிருப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் நம்பலாம். ஆனால் ரஷ்ய ராணுவத்தை பிரிட்டனால் எதிர்கொள்ள முடியுமா? என்று டொனால்ட் டிரம்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, யுக்ரேன் போரால் ரஷ்ய படைகள் பலவீனமடைந்திருந்தாலும் கூட, இல்லை என்பதே பதில். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr42nk03qpvo
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்கிறார்
ரணில் - மோடி டெல்லியில் பேச்சு 02 MAR, 2025 | 09:13 AM (லியோ நிரோஷ தர்ஷன்) டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை (01) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 'உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்' குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்றதுடன், இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன் போது தெற்காசிய புவிசார் அரசியல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றினார். இதன் போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடினார். 'எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடனான உரையாடல்களை நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். பல்வேறு பிரச்சினைகள் குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன் என சந்திப்பு குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208029
-
தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழைக் கட்டாயமாக்க இயலவில்லை: அன்புமணி
19 ஆண்டுகளாகியும் அமுல்படுத்தமுடியலையா? விரும்பலையா??
-
அமெரிக்காவில் முட்டை விலை அதிகரிப்பு - எல்லை ஊடாக முட்டை கடத்துபவர்களிற்கு எதிராக நடவடிக்கைகள்
02 MAR, 2025 | 10:35 AM அமெரிக்காவில் முட்டை விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து முட்டை கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது, முட்டை விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மெக்சிக்கோவிலிருந்து எல்லை வழியாக முட்டை கடத்தலில் ஈடுபட முயல்பவர்களிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 2024ம் ஆண்டின் பின்னர்முட்டை விலைகள் 158 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க சுங்க எல்லை பாதுகாப்பு பிரிவு இந்த வருடம் துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 29 வீதமாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் 2022 முதல் அதிகரித்து வரும் பறவைகாய்ச்சல் காரணமாகவே முட்டை விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் 2022 முதல் கோழிகள் பறவை காயச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர். கடந்த மூன்று வருட காலப்பகுதியில் 166 மில்லியன் பறவைகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. எங்கள் பயணம் செய்யும் மக்களிற்கு எங்களின் விவசாய துறையை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தவேண்டியது அவசியம் என சிபிபீ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் 24 முட்டைகளை அமெரிக்காவிற்கு கொண்டுவர முயற்சி செய்தார், அதிகாரிகள் அவற்றை கொள்வனவு செய்வதை பார்த்தேன் என மெக்சிக்கோ எல்லையிலிருந்து சான்டியாகோவை சேர்ந்த ஜொனி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208046
-
யாழ். செம்பியன்பற்று வடக்கில் இரவோடு இரவாக காடழிப்பு!
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 03:42 PM யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடு அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட நிலப்பகுதியை தனிப்பட்ட தேவைகளுக்காக குத்தகை அடிப்படையில் பெற, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக ஆவன செய்துள்ளார். ஆவண கடிதத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் கையளித்தவுடன் காடுகள் நிறைந்த சம்பந்தப்பட்ட பெருமளவான நிலப்பகுதியை அனுமதியின்றி இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக முற்றாக அழித்துள்ளார். சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையும் குறித்த நபர் தொடர்ந்து அனுமதியின்றி காடுகளை அழித்துள்ளார். இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கருத்து தெரிவிக்கையில், குறித்த நபர் குத்தகைக்கு காணியை பெறுவதற்கு கடிதம் தந்துள்ளதாகவும், காடுகளை அழிப்பதற்கு தாம் அனுமதியளிக்கவில்லை என்றும், குறித்த பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்தினுள் இருப்பதால் தம்மால் அனுமதி கொடுக்க முடியாதென்றும் அவ்வாறு அவர் காடுகளை அழித்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/207986
-
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன! 01 MAR, 2025 | 03:56 PM இரணைமடு குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (01) திறக்கப்பட்டன. தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கத்தில், இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் இன்றைய தினம் திறக்கப்பட்டன. இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/207989
-
புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து
கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் மற்றும் ஹாரியட் வைட்ஹெட் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று, பின்லாந்து நாட்டை எஸ்டோனியாவுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்திருந்ததை ஃபிங்ரிட் (Fingrid) என்ற மின்சார நிறுவனத்தின் தொழிலாளர்கள் கண்டறிந்தனர். இதனால் அதன் அண்டை நாடுகளுக்கு மின்சார விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. "இது எவ்வாறு ஏற்பட்டது என்று அறிய நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். யாரேனும் செய்த நாசவேலையா என்பது முதல் தொழில்நுட்ப கோளாறா என்பது வரை அனைத்து விதமான சாத்தியக்கூறுகள் பற்றியும் விசாரணை நடந்து வருகின்றது. இதுவரை நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை", என்று ஃபிங்ரிட் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் ஆர்டோ பாக்கின் பின்லாந்து அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். "இந்த சம்பவம் நடந்த போது குறைந்தது இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கேபிளுக்கு அருகில் இருந்தன" என்றும் அவர் கூறினார். சில மணி நேரத்திற்குப் பிறகு, பின்லாந்து கடலோர காவல்படையை சேர்ந்த ஒருவர், 'ஈகிள் எஸ்' என்ற ரஷ்ய கப்பலில் ஏறி பின்லாந்து கடற்பகுதிக்கு சென்றார். முக்கியமான மின்சார கேபிள்களில் ஒன்றான 'எஸ்ட்லிங்க் 2'-வுக்கு வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள குக் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பல் உண்மையில் ரஷ்ய நிழற்படையின் ஒரு பகுதி என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இந்த கப்பல், தடை செய்யப்பட்ட ரஷ்யாவின் பெட்ரோலியப் பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. 'ஈகிள் எஸ்' கப்பல் அதன் நங்கூரத்தை கடலுக்கடியில் இழுத்துச் சென்றதால் மின்சார கேபிள் சேதமடைந்திருக்கலாம் என்று பின்லாந்து காவல்துறை கருதுகிறது. உண்மையில், 'ஈகிள் எஸ்' கப்பல் பயணித்த பகுதியில் சுமார் 80 மீட்டர் ஆழத்தில் ஒரு நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் அதன் இரண்டு நங்கூரங்களில் ஒன்றை இழந்ததைக் காட்டும் புகைப்படங்களும் இருக்கின்றன. இதுதொடர்பான குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாக 9 பேரை சந்தேகத்திற்குரியவர்களாக அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்24 பிப்ரவரி 2025 பில் கேட்ஸின் பால்ய காலம் எப்படி இருந்தது? அவர் நன்கொடைகளை அள்ளி வழங்குவது ஏன்?23 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த டிசம்பரில் நடந்ததாகக் கூறப்படும் நாசவேலையைத் தொடர்ந்து, கடலுக்கடியில் உள்ள கேபிள்களைப் பாதுகாக்க எஸ்டோனியா கடற்படை ரோந்துப் பணிகளைத் தொடங்கியுள்ளது. சேதம் ஏற்பட்ட இந்த கேபிளின் நீளம் 170 கிலோமீட்டர் ஆகும். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து பால்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ள கடலடி கேபிள்களுக்கு ஒரு பகுதியாகவோ அல்லது நிரந்தர சேதத்தையோ ஏற்படுத்திய தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இந்த சம்பவம் சமீபமாக நடந்துள்ளது. 'எஸ்ட்லிங்க் 2' கேபிள் சம்பவத்திற்குப் பிறகு, நேட்டோ அமைப்பு பால்டிக் கடலில் அதன் படைகளின் இருப்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்தது. அதே நேரத்தில் எஸ்டோனியா கடலுக்கு அடியில் செல்லும் மற்றொரு முக்கிய கேபிளான 'எஸ்ட்லிங்க் 1' செல்லும் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ள ஒரு கப்பலை அனுப்பியது. கடலுக்கு அடியில் உள்ள கேபிளுக்கு ஏற்பட்ட சேதம் "முக்கியமான உள் கட்டமைப்புகள் மீதான தொடர்ச்சியான சந்தேகத்திற்கிடமான தாக்குதல்களில் சமீபமாக நடந்த ஒன்று", என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உலகின் பெருங்கடல்கள் வழியாக மின்சார சப்ளை மற்றும் தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்காக கடலுக்கு அடியில் சுமார் 600 கேபிள்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் ரகசியமாக வைக்கப்பட்ட கரைப் பகுதியில் மட்டுமே கடலை விட்டு மேலே வருகின்றன. சுமார் 1.4 மில்லியன் கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கேபிள்கள் உலகம் முழுவதையும் இணைக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை தரவு பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. குறிப்பாக உலக அளவில் இணையவழி தகவல் பரிமாற்றத்திற்காக இவை உதவுகின்றன. விபத்துகளும் மனிதத் தவறுகளும் தவிர்க்க முடியாதவை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டாலும், இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் போது, கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் நாச வேலைக்கு ஆளாகக் கூடும் என்ற கேள்வியை எழுப்புகிறது. போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா23 பிப்ரவரி 2025 இந்திய அணிக்கு 242 ரன்கள் இலக்கு - பாகிஸ்தான் பவுலர்களை திணற வைக்கும் சுப்மன் கில்24 பிப்ரவரி 2025 மேற்கத்திய நாடுகள் ஏன் கவலைப்படுகின்றன? ரஷ்யாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகள் சிறந்ததாக இல்லை என்பது தெரிந்த ஒன்றே. கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவின் உதவியுடன் நடந்த கிளர்ச்சி மற்றும் 2014ஆம் ஆண்டு கிரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்குப் பிந்தைய ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. 2022-ஆம் ஆண்டில், 200,000 ரஷ்ய துருப்புகள் யுக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடங்கின. இந்த போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இரு தரப்பிலும் சுமார் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். உலக நாடுகளுக்கு அறிவிக்காமல், ரஷ்யா மற்றொரு போரை நடத்தி வருவதாக நேட்டோ நம்புகிறது. அதை நேட்டோ ஒரு "கலப்புப் போர்" என்று குறிப்பிடுகிறது. யுக்ரேனுக்கு ராணுவ உதவிகளை வழங்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதே இந்த போரின் நோக்கம் ஆகும். எதிரிப்படை ஒரு அநாமதேய தாக்குதலை நடத்தும் போது, மிகவும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் அது புறக்கணிக்கப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். இதுவே 'கலப்பு போர்' அல்லது 'கிரே ஸோன் போர்' என்று அழைக்கப்படுகின்றது. இது போர் நடவடிக்கையாக கருதப்படும் அளவுக்கு தீவிரமானது அல்ல, ஆனால் எதிரிப்படைக்கு குறிப்பாக அவர்களின் உள் கட்டமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு தீவிரமானது. காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 12 வாரம், 15 சாட்சிகள்: சீமான் கைது செய்யப்படுவாரா? நடிகை வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "அதிக திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் ஆழத்திற்கு சென்று இந்த கேபிள்களை சேதப்படுத்த முடியும். அதனை பழுது பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்", என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூடை (ருசி) சேர்ந்த ஆராய்ச்சியாளர் சித்தார்த் கௌஷல் பிபிசியிடம் தெரிவித்தார். நேட்டோவுடனான ஒரு மோதலில், நிலத்தில் உள்ள, கட்டமைப்புடன் சேர்த்து, கடலில் உள்ள உள் கட்டமைப்புக்கும் சேதம் விளைவிப்பது ரஷ்யாவுக்கு உத்தி ரீதியாக பலன் அளிக்கும். இதனால் மேற்குலகில் யுக்ரேனுக்கான மக்கள் ஆதரவு படிப்படியாக குறையும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ரஷ்யா மறுப்பு கடந்த ஆண்டில் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்தில் உள்ள கொரியர் நிறுவனங்களின் பார்சல் பொட்டலங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் கலப்புப் போர் தாக்குதலுக்கான மற்ற எடுத்துக்காட்டாகும். இந்த சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான விமானங்களை நாசப்படுத்துவதற்கான ஒத்திகை என்று போலந்து புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர். இந்த நாச வேலைகளுக்குப் பின்னால் தாங்கள் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்வீடன் மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள சேமிப்புக் கிடங்குகள் மற்றும் ரயில் பாதைகள் மீதான பிற தாக்குதல்களுக்கு ரஷ்யா பொறுப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள் ரஷ்ய ராணுவத்தின் உளவுத்துறை யுக்ரேனை ஆதரிக்கும் நாடுகள் மீது அநாமதேய மற்றும் ரகசிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் முடிவெடுக்க வழிவகுக்கின்றன. இந்த தாக்குதல் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதால், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2017 ஆம் ஆண்டில் பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கியை மையமாக கொண்டு ஐரோப்பிய சிறப்பு மையம் என்ற அமைப்பை உருவாக்கின. சில நாடுகள் இந்த வகையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் காமினோ கவனாக் சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில் அவை "அவை மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன", என்றும் அவர் கூறினார். கடலுக்கடியில் உள்ள உள்கட்டமைப்புகளைப் பொருத்தவரை, எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டையும் அடையாளம் காண, நாடுகளுக்கு அவற்றின் சொந்த பிராந்தியத்தின் கடல் பரப்பில் என்ன நடக்கிறது என்பது பற்றிய உறுதியான புரிதல் தேவைப்படுகின்றது. "இந்த போரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்கு பிறகு, மற்ற நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன", என்று காமினோ கவனாக் கூறினார். கடலுக்கடியில் ரஷ்யாவின் வலிமை என்ன? ரஷ்ய ராணுவத்தின் கட்டமைப்பு பல அடுக்குகளை கொண்டது என்று கௌஷல் விவரிக்கிறார். ஆழமற்ற நீரில், ஸ்பெட்ஸ்நாஸ் (சிறப்புப் படைகள்), ஜி.ஆர்.யு (ராணுவ புலனாய்வுத்துறை) மற்றும் ரஷ்ய கடற்படையிடமே பொறுப்பு இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், ஆழ்கடலில் தகவல் சேகரித்தல் மற்றும் நாச வேலைகளைத் திட்டமிடுதல் ஆகியவை கடலடி ஆராய்ச்சி இயக்குநரகம் (Underwater Research Directorate - GUGI) என்ற அமைப்பிடம் உள்ளது. இது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய அதிபர் புதினின் கீழ் நேரடியாக செயல்படுகிறது. இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் 5 வீரர்கள் - இந்தியாவின் துருப்புச் சீட்டு எது?23 பிப்ரவரி 2025 சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இரு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்22 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கடல் காற்றாலைகள் அல்லது கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களை நிலத்துடன் இணைக்கும் இடங்களைக் கண்டறிதல் போன்ற புலனாய்வு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக கடலின் மேற்பரப்பில் கப்பல்களை GUGI அமைப்பு பயன்படுத்துகிறது என்று கௌஷல் கூறுகிறார். "டைட்டானியம்-ஹல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட பல்வேறு வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவிடம் இருக்கின்றன. அவை அதிக கடல் ஆழத்திற்குச் செல்வதுடன், பல பணிகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்களைக் கொண்டுள்ளன", என்று கௌஷல் கூறுகிறார். இந்த கப்பல்கள் 3 பேர் கொண்ட குழுவினரால் இயக்கப்படுகின்றன. முன்னாள் கடற்படை உறுப்பினர்களாகவும், விண்வெளி வீரர்களைப் போல கடினமான பயிற்சியை மேற்கொண்டவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இந்த ஆழத்தில், கடலின் அடித்தளத்தில் என்ன வைக்கப்பட்டுள்ளது அல்லது அங்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் என்ன செய்கின்றன என்பதை கண்டறிவது அமெரிக்க கடற்படைக்கு கூட மிகவும் கடினம் ஆகும். இந்த கேபிள்களின் நாச வேலையை இறுதியில் "ஒரு தனியான நிகழ்வாக" பார்க்கக் கூடாது. மாறாக "தகவல் தொடர்பு மற்றும் உள் கட்டமைப்பை அச்சுறுத்தும் ரஷ்யாவின் விரிவான திட்டத்தின்" ஒரு அங்கமாகவே பார்க்க வேண்டும் என்று சாத்தம் ஹவுஸ் மையத்தில் ரஷ்ய நிபுணரும் எழுத்தாளருமான கெய்ர் கில்ஸ் கூறுகிறார். கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் தொலைத்தொடர்புகள் மீது ரஷ்யா செலுத்தும் முக்கியத்துவம் "தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான அதன் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது தகவல்கள் மீதான கட்டுப்பாடுகளாகவும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்". என்கிறார் அவர். டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?21 பிப்ரவரி 2025 மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?19 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள சமூகங்களை பிற தகவல்கள் கிடைக்க விடாமல் தனிமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதனால் அவர்கள் ரஷ்யாவிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே பெறுவார்கள். "இது கிரைமியாவை கைப்பற்றுவதில் கருவியாக இருந்ததால் இது ஒரு முக்கியமான நோக்கமாக பார்க்கப்படுகிறது", என்று கெய்ர் கில்ஸ் கூறுகிறார். உள் கட்டமைப்பு ரஷ்யா மற்றும் கடலுக்கடியில் இருக்கும் உள் கட்டமைப்புகளில் அதன் தலையீடு பற்றிய சந்தேகங்கள் பின்லாந்து அதிகாரிகளுக்கு மட்டும் வரவில்லை. 2024 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், ரஷ்ய கண்காணிப்புக் கப்பலான யான்டார் "பிரிட்டனின் முக்கிய கட்டமைப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பதாக" தெரியவந்ததாக பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், யான்டாரின் நகர்வுகளை பிரிட்டன் கடற்படை கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. "புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கவும், பிரிட்டனின் கடலடியில் உள்ள உள் கட்டமைப்பை வரைபடமாக்கவும்" இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வை "வளர்ந்து வரும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு" என்று ஜான் ஹீலி விவரித்தார். பிரிட்டன் கடல்பரப்புக்கு அடியில் மட்டும் சுமார் 60 கேபிள்கள் இருக்கின்றன. அவை அதன் கடற்கரையில் இருந்து வெவ்வேறு பகுதிகளில் நிலத்தை அடைகின்றன. உடல் பருமன்: எடை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் - தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை20 பிப்ரவரி 2025 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?13 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டனுக்கு அருகே கடலுக்கடியில் உள்ள உள் கட்டமைப்புகள் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அது அந்நாட்டில் உள்ள பிரச்னைகளுடன் சேர்ந்து இன்னும் ஒரு பிரச்னையாக மாறும் என்று கெய்ர் கில்ஸ் கூறினார். லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், யான்டார் கப்பல் சம்பந்தப்பட்ட பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை "முற்றிலும் தவறானது" என்று விவரித்துள்ளது. இது "பால்டிக் மற்றும் வட கடல் பிராந்தியங்களில் பதற்றங்களை வேண்டுமென்றே தீவிரப்படுத்த" பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வரும் ரஷ்ய எதிர்ப்பின் விளைவு என்று அது கூறுகிறது. அப்பாவித்தனமான நம்பிக்கை இந்த ஆண்டு, தேசிய பாதுகாப்பு உத்திக்கான பிரிட்டனின் கூட்டுக் குழு, கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மீதான தாக்குதல்கள் அந்நாட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த விசாரணையைத் தொடங்கியது. "ரஷ்யர்கள் ஏற்கனவே கடலுக்கு அடியில் செயல்படும் டிரோன்களை வைத்திருக்கலாம், கேபிள்கள் மற்றும் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த அவை உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் - அவை வரலாம் அல்லது வராமலும் போகலாம்," என்று எழுத்தாளரும் ரஷ்ய நிபுணருமான எட்வர்ட் லூகாஸ் கூறுகிறார். "ரஷ்யாவின் கண்காணிப்பு கப்பலான யான்டர், யாருக்கும் தெரியாத கடலின் அடியில் பல ஆண்டுகளாக என்ன இருக்கிறது என்பது குறித்து நோட்டமிட்டு வருகின்றது" என்றும் அவர் கூறுகிறார். "கடலடி கேபிள்கள் எதிரிப்படையின் இலக்காக மாறும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது பல தசாப்தங்களாக மெத்தனமாக இருந்ததன் பலனை அனுபவித்து வருகிறோம். கடலுக்கடியில் இருக்கும் நமது உள் கட்டமைப்புகளை சேதப்படுத்தினால், அதற்கு ரஷ்யா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று நாம் உணர்த்த வேண்டும்" என்றார் அவர். துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன?13 பிப்ரவரி 2025 பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 பிரிட்டன், அதன் உள் கட்டமைப்பை நன்றாக வைத்துள்ளது, அந்நாடு பழுது பார்ப்பு பணிகளை மிக விரைவாக செய்ய முடியும் என்று கவானாக் கூறுகிறார். கூடுதலாக கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களின் வடிவமைப்பு, எப்போதாவது ஒரு கட்டத்தில் சேதமடையப் போகிறது, என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் ஒரு நாட்டின் தனிப்பட்ட கேபிள்களுக்கு ஏற்படும் சேதம் ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கிய போது இருந்த அதே தாக்கத்தை இப்போது ஏற்படுத்தாது என்று கில்ஸ் விவரிக்கிறார் ஏனென்றால், ஒரே நாடுகளை பல்வேறு வழிகளில் இணைக்கும் பல கேபிள்கள் இருக்கின்றன. பழுதுபார்க்கும் வலையமைப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள் என்று கவானாக் கூறுகிறார். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்?22 பிப்ரவரி 2025 வெடிக்கும் எரிமலைக்கு அருகில் செல்லும் சுற்றுலா பயணிகள் - எங்கே?22 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இது ஒரு அபாய எச்சரிக்கை இந்த விஷயத்தில் அந்நாட்டுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா கூறினாலும், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இந்த சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தன. "எப்போதும் அச்சுறுத்தல்கள் இருக்கும். தற்போதைய சூழலில், அச்சுறுத்தல் விடுக்கும் நாடுகள் உண்மையிலேயே முயற்சி செய்து தற்போதைய சூழலில் என்ன நடவடிக்கைகள் வேலை செய்கிறது என்பதைப் பார்க்க அதிக வாய்ப்புகளை பெற்றதாக உணர்கிறார்கள்", என்று கில்ஸ் விளக்குகிறார். கலப்பு போர்முறை ரஷ்யாவிற்கு ஒரு பாடமாகவும் அமைகின்றது. "இதன் தாக்கம் என்ன என்பதை அவர்கள் பார்க்கிறார்கள், அவர்கள் தாக்குதல் நடத்திய நாடுகளின் பதில் என்ன, புலனாய்வுத் திறன், நீதியுடன் கூடிய செயல்முறை போன்றவற்றை அவர்கள் பார்க்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார். "இது கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களைப் பற்றியது மட்டுமல்ல, ரஷ்யாவில் இருந்து தொலைதூரத்தில் உள்ள மக்களையும் பாதிக்கும் வழிகளை பற்றியது" என்று கில்ஸ் கூறுகிறார். "இது பயணிகள் விமானங்களில் வெடிக்கும் பொருட்களை நிறுவுவது போன்றதாகும். இறுதியில், போர் அல்லது எச்சரிக்கை இல்லாமல் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. ஏனென்றால் ரஷ்யா அதன் விவகாரங்களை அவ்வாறுதான் செய்து வருகிறது", என்று அவர் குறிப்பிட்டார். கடலுக்கடியில் கேபிள்களை சேதப்படுத்தும் அச்சுறுத்தலை ஐரோப்பா எவ்வாறு கையாள்கிறது என்பது விளாதிமிர் புதினின் ரஷ்யாவை மேற்கு நாடுகள் சமாளிக்க முயற்சிக்கும் பல முனைகளில் ஒன்றாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdel71wy132o
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 03:59 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பாக தங்கள் மூவருடனும் கலந்துரையாடியது. இக்கலந்துரையாடல் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தங்களது கட்சிகளும் எமது கட்சியும் இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது பற்றி ஆராய்வதற்கே ஆனது. இது சம்பந்தமாக கலந்துரையாட எதிர்வரும் 3ஆம் திகதியை செல்வம் அடைக்கலநாதன் உடன் நிர்ணயித்திருந்தோம். எனினும் அந்த முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது தாங்கள் எமது கட்சி யைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியை கடந்த 23 ஆம் திகதி உருவாக்கியமை ஏமாற்றம் அளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் அமைந்தது. இது எமக்கு தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியமை இயல்பானதும் தவிர்க்க முடியாதாதமாகும். நாம் இந்த முயற்சியை மேற்கொண்டது தனிய தேர்தலுக்காக அல்ல. எமது முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய இந்த நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே ஆகும் என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த முயற்சியை மேலும் தொடரவே விரும்புகிறேன் இதற்கான தங்களது இணக்கம் இருக்குமானால் நாம் தொடர்ந்து பேசலாம். அதேநேரம் நாம் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு - கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாக தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன் னரே ஏற்பாடு செய்தல். இதற்கும் தங்களது உடன்பாடு இருக்கும் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம். தங்களது துரித பதிலுக்கு நன்றி உடையவராவோம் - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/207990
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
ஆப்கானிஸ்தானுடனான போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறியது Published By: VISHNU 01 MAR, 2025 | 01:20 AM (நெவில் அன்தனி) லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இடையில் கைவிடப்பட்டதால் பி குழுவிலிருந்து அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இதனை அடுத்து அவுஸ்திரேலியா 4 புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது. ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால், தென் ஆபிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி முடிவிலேயே ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறுமா இல்லையா என்பது தெரியவரும். பி குழுவில் இடம்பெறும் தென் ஆபிரிக்காவும் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 109 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. மழையினால் ஆட்டம் தடைப்பட்டால் டக்வேர்க் லூயிஸ் முறைமை அமுலுக்கு வரும் என்பதை அறிந்திருந்த அவுஸ்திரேலியா அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது. மெத்யூ ஷோர்ட் 15 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் விக்கெட்டில் 27 பந்துகளில் 44 ஓட்டங்களை ட்ரவிஸ் ஹெட்டுடன் பகிர்ந்தார். தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. ட்ரவிஸ் ஹெட் 40 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 59 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். மழை விட்ட போதிலும் மைதானம் ஈரலிப்பாக இருந்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாது எனத் தீர்மானித்த மத்தியஸ்தர்கள் இரவு 9.00 மணியளவில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது. சிதிக்குல்லா அத்தல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து ஆப்கானிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டனர். ஆனால் மழை பெய்ததால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. சிதிக்குல்லா அத்தல் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதி 20 ஓட்டங்களையும் பெற்றனர். ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கையில் 17 வைட்கள் உட்பட 37 உதிரிகள் அடங்கியிருந்தன. பந்துவீச்சில் பென் த்வார்ஷுய்ஸ் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/207957
-
அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் !
Published By: DIGITAL DESK 2 01 MAR, 2025 | 09:27 AM நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலரை உள்ளடக்கிய 4 ஆவது தவணைக்கான கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று வெள்ளிக்கிழமை (28) ஆராய்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் கடனுதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கின்றது. https://www.virakesari.lk/article/207966
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் 'நேட்டோ' ராணுவ கூட்டணிக்கான நெருக்கடியின் அறிகுறியா? ஓர் அலசல்
பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,லாட்வியாவில் நேட்டோ பயிற்சியின் போது பயிற்சி பெறும் ஸ்வீடன் நாட்டு வீரர்கள் . கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெர்மி போவன் பதவி,சர்வதேச ஆசிரியர், பிபிசி செய்திகள் 36 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதத்திற்கு முன்பே டொனால்ட் டிரம்புக்கும் விளாதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்தது. முன்னதாக, ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்த அதிபர் டிரம்ப், யுக்ரேன் போரைத் தொடங்கியது அவர் தான் என்றும் தவறான தகவலைக் கூறினார். மேலும் ஜோ பைடனின் ஆட்சியில் வலுப்பெற்ற அமெரிக்க-யுக்ரேன் கூட்டணி தற்போது உடைந்துவிட்டது. இந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள முறிவு, ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு பெரிய நெருக்கடி உருவாகி வருவதையும் குறிக்கிறது. யுக்ரேன் மட்டுமின்றி, பிற ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் உறுதிப்பாடு குறித்து இன்னும் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழும். நேட்டோ கூட்டாளியின் மீதான தாக்குதலை அமெரிக்காவின் மீதான தாக்குதலாகக் கருதுவதாக 1949-இல் ஹாரி ட்ரூமன் அளித்த வாக்குறுதியை அதிபர் டிரம்ப் காப்பாற்றுவாரா என்பது மிகப்பெரிய கேள்வி. இந்த கவலைகள், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் வலுவான உறவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற டிரம்பின் தீர்மானத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. டிரம்ப் யுக்ரேனுக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்து, புதினுக்கு பெரிய சலுகைகளை வழங்கியுள்ளார். ஆனால் அவற்றின் விளைவுகளை யுக்ரேனியர்களே ஏற்க வேண்டும். யுக்ரேனின் பாதுகாப்பு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஐரோப்பியர்களும் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள். யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது? டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப் காஸா குறித்து ஏஐ வீடியோவை வெளியிட்ட டிரம்ப் - சமூக ஊடகங்களில் எழும் விவாதங்கள் என்ன? மறுபுறம், ரஷ்யாவுக்கு சலுகை வழங்கக் கூடாது என்ற ஜெலன்ஸ்கியின் வாதம் டிரம்பை கோபப்படுத்தியுள்ளது. ஜெலன்ஸ்கி கையெழுத்திட மறுத்தது, கனிம ஒப்பந்தத்தில் மட்டுமல்ல. ஏனென்றால், யுக்ரேனியர்கள் தங்களது தேசத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போரில் இருப்பதாக நம்புகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக புதின் எந்தவொரு வாக்குறுதிகளை அளித்தாலும், கட்டுப்பாடுகள் இல்லையெனில் அவர் அவற்றை மீறுவார் என்றும் யுக்ரேனியர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை தொடர்ந்து கேட்டு வருகிறார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலையிட்ட பிறகு, அந்தக் சந்திப்பில் மோதல் ஏற்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு ராஜ தந்திர பார்வையாளர் குறிப்பிட்டபடி, பொதுவெளியில் நடந்துள்ள இந்த மோதல் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளன. அமெரிக்கா எதிர்பார்க்கும் வகையில் ஜெலன்ஸ்கியை செயல்பட வைக்க அல்லது அடுத்து என்ன நடந்தாலும் அவரையே குற்றம்சாட்டும் வகையிலான ஒரு குழப்ப நிலையை உருவாக்க செய்யப்பட்ட சூழ்ச்சியாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்தி வைக்கப்பட்டாலும், யுக்ரேன் தொடர்ந்து போராடும். ஆனால், யுக்ரேன் எத்தனை காலத்திற்கு, எவ்வளவு திறம்படப் போராடும் என்பதே கேள்வி. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் உதவி நிறுத்தப்பட்டால், யுக்ரேனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் யுக்ரேனுக்கு உதவ வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy87qgv7q89o